Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 184
- Thread Author
- #1
உன் விழியோடு நானாகிறேன்
அத்தியாயம் -4
அத்தியாயம் -4
அவள் அமைதியாக இருப்பதைக் கவனித்த தர்ஷன் “நான் இப்படி பேசுனது தப்பா? உங்களை நோகடிச்சிட்டேன்னா?” கொஞ்சம் பதறியபடி கேட்டான்.
அவளோ அவனை ஆழ்ந்து பார்த்தப்படியே இல்லை என்று தலையசைத்தாள்.அதைப் பார்த்து அவன் “அப்புறம் என்ன யோசனை அமைதியாகவே இருக்கீங்க” என்றதும் அவன் பக்கமாக நன்றாக திரும்பியவள் “நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்பேன் நீங்க பொய் சொல்லக் கூடாது” என்றாள்.
காரை ஓரமாக நிறுத்தியவன் இம்முறை அவன் ஆதிரையை ஆழ்ந்து பார்த்தவன் “ம்ம்… சொல்லுங்க முடிந்த வரை உண்மை சொல்ல முயற்சி பண்றேன்” என்றான்.
அவளோ “இந்தக் குரல் நான் கேட்கிற அதே குரல்” என்று கண்களை மூடியபடியே அவனுடைய குரலை இரசித்து உணர்ந்தவளாய் “நீங்க தானே தினமும் ரேடியோவில் இரவு நேரத்தில் பேசுற ருத்ரா தானே” விழிகளில் ஆர்வம் பொங்க கேட்டாள்.
அவனோ “ருத்ரா அது யாரு?” என்று சிரித்தப்படியே கேட்டான்.
அவனது சிரிப்பைப் பார்த்து இவளோ “ப்ச் விளையாடாதீங்க தர்ஷன் ருத்ரன் தானே நீங்க? எனக்குத் தெரியும் நான் தினமும் உங்க வாய்ஸ்ஸை கேட்பேன்” என்றாள்.
அவனோ “அப்படியா! இப்போ நான் தர்ஷனா இல்லை ருத்ரனா? அதை முதல்ல தெளிவுப்படுத்திக்கோங்க” என்றான் கிண்டலாக…
அவளோ அவனைப் பற்றி அறியும் ஆவலில் எதையும் யோசிக்காமல் “ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக” என்று எல்லாவற்றையும் மறந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
தலையை லேசாக சாய்த்து கன்னத்தில் கையை வைத்தப்படி “நேற்று பேசியதற்கும் இப்போ பேசுறதுக்கும் ஆளே சம்பந்தமே இல்லை’ என்று நினைத்தப்படி அவளைப் பார்த்திருந்தான்.
அதைக் கண்டவள் “நீங்க யார்கிட்டயும் தெரியக் கூடாதுன்னு மறைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
நீண்ட பெருமூச்சு விட்டவன் “ம்ம்… நான் தான் மித்ரா” என்றான்.
அவன் அப்படி சொன்னதும் விழிகளில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்தியவள் தன் இரு கன்னங்களில் கைவைத்து “ஹோ… உண்மையாகவா சொல்றீங்க தர்ஷன் என்னால நம்பவே முடியலை” என்றதும் அவனோ “அப்போ நான் ருத்ரன் இல்லை” என்றான்.
உடனே அவளோ “ப்ச் உடனே என்ன இப்படி மாத்தி சொல்றீங்க?”
“நீங்க தானே நம்ப முடியலைன்னு சொன்னீங்க?அதான்”
அவளோ “ப்ச் தர்ஷன் ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க எனக்குத் தெரியும் இந்தக் குரல் நான் தினமும் இரண்டு வருஷமாக கேட்கிறேன் எனக்குத் தெரியாதா?” மகிழ்ச்சியாக புன்னகையோடு கேட்டாள்.
அவனோ “நீங்க என்னோட தீவிர ரசிகையா?” அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
அவளோ “ம்ம்… அப்படியும் சொல்ல முடியாது என்னன்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலை உங்க குரல் அந்த இரவோட அமைதியில் அழகாக இருக்கும் அதோட நீங்க ஒவ்வொரு இடத்துக்கும் போன விஷயங்களைப் பத்தி பேசும் போது ஏதோ அப்படியே அங்கே நானும் போன பீல்” இரசித்துக் கொண்டே சொன்னாள் அவளையும் அறியாமல்.
அவள் சொல்வதை எல்லாம் பார்த்தப்படியே கேட்டுக் கொண்டிருந்தான்.இந்த இரு நாட்களாக இயற்கையை இரசித்து நின்றவளை பார்த்தவனுக்கு யாரென்றே தெரியாத தன் மீதான ரசனையை அவள் விளக்கிக் கொண்டிருப்பதை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆதிரை “நான் பேசிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க” கேள்வியோடு கேட்டாள்.
அவனோ “இத்தனை நாளாக நான் இவ்வளவு பேசி இருக்கிறேன்னு நீங்கச் சொல்லித் தான் எனக்கே தெரியுது அந்த ஆச்சரியத்தில் பார்த்துட்டு இருக்கேன்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவள் “ப்ச் பொய் சொல்லாதீங்க தர்ஷன் நான் உங்கள் ருத்ரா என்ற வார்த்தை நீங்க சொல்லும் போது ரொம்ப கணீர்னு இருக்கும் எனக்காக அதை சொல்லிக் காட்டுங்க” என்று திரும்பவும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அவனோ “ஆதிரை அது எல்லாம் அங்கே எப்.எம்ல வைச்சு வரும் இப்போ திடீர்னு சொன்னால் எப்படி?”
“சும்மா அந்த வார்த்தையை மட்டும் சொல்லுங்க” என்ற போது அவனும் கொஞ்சம் நிமிர்ந்து குரலை செறுமியபடி “நான் ருத்ரா உங்கள் ஹலோ எப்.எம் லிருந்து இன்னைக்கு என்ன ஸ்பேஷல் அதானே” என்று அவன் ஏற்ற இறக்கங்களோடுச் சொல்ல கண்களை சிமிட்டாமல் மெய் மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் தர்ஷன் பேசி முடித்ததும் கைகளை தட்டி “வாவ் சூப்பர் அட்டகாசம்” என்று சொல்லி சிரித்தாள்.அவள் அப்படிச் செய்ததும் ஏனோ அவனையேப் பார்த்தது போல் இருந்தது.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு தன்னையே உணர ஆரம்பித்தான் மித்ரா.அவள் வாழ்த்து சொல்லியதற்கு தலைகுனிந்து ஏற்றுக் கொண்டவன் “ஆதி எனக்காக நீங்க ஒரு விஷயம் செய்யனும்”
“ம்ம்… சொல்லுங்க”
“நான் இந்த மாதிரி ரேடியோவுல ஆர்.ஜேவாக இருக்கிறது யாருக்கும் தெரியாது ஏன் மதனுக்கும் சொல்லலை அதனாலத் தான் நைட் பதினொரு மணிக்கு மேல நான் என்னோட ப்ரோகிராம் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டேன் ஆனால் இப்போ உங்களுக்கு தெரிஞ்சு இருக்கு இது நம்ப ரெண்டுபேருக்கும் தெரிந்ததாகவே இருக்கட்டும்” என்றான்.
அவள் சொன்னதைக் கேட்டு தலையசைத்தவள் “ஏன் யார்கிட்டேயும் சொல்லலை?”
நீண்ட பெருமூச்சு விட்டவன் மனதினுள் ‘'இவ என்னைப் பற்றி தெரிஞ்சு பேசுறாளே இல்லை தெரியாத மாதிரி நடந்துக்கிறாளா’ என்று யோசனையோடு பார்த்தவன் “எனக்கு பிடிச்ச விஷயத்தை நான் இரகசியமா செய்றேன் அது அப்படியே இருந்து விட்டு போகட்டுமே” என்றான்.
உடனே தன் உதட்டு அருகே விரல்களை கொண்டு போய் சிப்பை மூடுவது போல் பாவனை செய்து தன் உதடுகளை பூட்டியது போல் செய்தாள்.
அதை பார்த்து சரியென்பது போல் சைகை செய்தவன் “இப்போ போகலாமா?” என்றதற்கு சரியென்று சொன்னாள்.
அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு போகும் வரை அவன் வானொலி நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள்.அவள் கேட்டதற்கு எல்லாம் பொறுமையாகவே பதில் சொல்லிக் கொண்டு வந்தான்.
திருமண ஏற்பாட்டிற்கான வேலைக்காக மொத்தமாக ஒரு வியாபாரியிடம் சொல்லாமல் மதனின் சொந்தங்களே சுற்றி இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரிடம் வேலையைச் சொல்லி இருக்க அதை பார்த்து சரியான முடிவு செய்யும் பொறுப்பில் தர்ஷன் இருப்பதால் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டி இருந்தது.
தர்ஷன் அங்கே உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருக்க ஆதிரை சுற்றி உள்ள இடங்களுக்குப் போய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
பூக்களின் அலங்காரத்திற்காக தோட்டம் பக்கம் சென்றிருக்க இவளோ உள்ளே போய் சுற்றிக் கொண்டிருந்தாள்.தன்னுடன் வந்தவளை தேடி இவனும் அந்த தோட்டம் பக்கம் சென்றான்.அங்கே ஒரு திசையில் ஆதிரை நிற்க இவனோ அவளை “ஆதிரை ஆதிரை” என்று அழைத்துக் கொண்டுச் செல்ல அவளுக்குத் தான் கேட்கவில்லை.
அருகினில் சென்று ஆதிரையிடம் “எவ்வளவு நேரமா நான் உங்களை அழைக்கிறேன் கேட்கலையா?” என்றதற்கு “சாரி தர்ஷன் எனக்கு கேட்கலை” என்றாள்.
உடனே தர்ஷன் “உங்க நம்பர் கொடுங்க அவசரம்மானா கால் பண்றேன்”
அவளோ சரியென்று தன் கைப்பேசி எண்ணைக் கொடுத்தாள்.அதை வாங்கிக் கொண்டவன் இதழின் ஓரம் தோன்றிய சிரிப்பை மறைத்தான்.
அங்கே இருந்த ஒரு பன்னீர் ரோஜாவை எடுத்து பறித்து அவளிடம் கொடுத்தான்.அதை வாங்க அவள் தயங்கியபடி நின்றாள்.அதைப் பார்த்து “வாங்கிக்கோங்க ஆதி இந்தப் பூ ரொம்ப அழகா இருக்கு” என்றான்.
அவளோ கைகளை மடக்கியபடி நின்றுக் கொண்டிருக்க அவளோ அவளுடைய கையைப் பிடித்து எடுத்து கரங்களின் மேல் வைத்தவன் “பெண்களுக்கு பூக்கொடுத்தால் தப்பா நினைக்காதீங்க ஏன் அது அறிமுகத்துக்கான பரிசாக இருக்கலாம் இல்லையா? அப்படி பார்க்க பிடிக்கலைன்னா என்னை பூ விக்கிறவனா நினைச்சு வாங்கிக்கோங்க” என்று அவனது அசத்தல் குரலில் ஏற்ற இறக்கத்தோடு சொல்ல
அவளால் மறுக்க முடியவில்லை.
கையில் பூவை பிடித்தப்படி நடந்தவள் அது எங்கேயாவது வைத்தால் வாடிப் போய் விடும் என்று எண்ணியவள் தன் தலையில் சூடிக் கொண்டாள்.
அதை அவன் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்துக் கொண்டான்.