Member
- Joined
- May 20, 2025
- Messages
- 54
- Thread Author
- #1
முத்துப்பேச்சுவுடன் வெளியே சென்றிருந்த கார்த்திகேயன் மாலை நான்கு மணியளவில் வீட்டிற்கு வந்த போது, வாசலில் மனைவியின் செருப்பைக் கண்டதும் மனம் துள்ள, "முத்தண்ணா என் வைஃப் வந்துட்டா" பரவசமாய் உரைத்திருந்தான்.
"அதெப்படி சொல்லுத கார்த்தி? அவங்க காதல் காத்து உன்னை அடிச்சிருச்சா?" என்று முத்து கேலிச் செய்யவும், "அட போங்கண்ணா!" என்று சிரித்தவன், "என் பொண்டாட்டியோட செருப்பு இது" என்றான்.
"அட.. அட.. அட.. நீ தான்ப்பா அக்மார்க் புருஷன் மெட்டீரியலு! எனக்குலாம் என் பொண்டாட்டி என்ன செருப்பு வச்சிருக்கானு கூடத் தெரியாது" என்று சிரித்தார் முத்துப்பேச்சு.
"இதை என் பொண்டாட்டி சொல்லனுமே!" என்று கார்த்திகேயன் சிரிக்க,
"ஊரு உலகத்துல எந்தப் பொண்டாட்டி புருஷனைப் பாராட்டியிருக்காங்க" என்றார் முத்துப்பேச்சு.
அவரின் கேலியில் சிரித்தவனாய் ஆர்வமும் ஆவலுமாய் உள்ளே சென்ற கார்த்திகேயன் முகப்பறையில் எவரும் இல்லாது இருப்பதைப் பார்த்து, தான் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே ஒருக்களித்தவாறு கண் மூடி படுத்திருந்த மனைவியைப் பார்த்ததும் அவனின் உள்ளம் மகிழ்வில் துள்ள, ஓடிச் சென்று அவளின் அருகில் ஒட்டிப் படுத்தவனாய் இடையில் கைப்போட்டு நெருக்கியவன், அவளின் காதோடு, "மிஸ்டு யூ சோ மச் வைரக்கட்டி" என்றவன் அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். சட்டென அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகி மூக்கோடு ஊடறுத்து வழிந்தோட தனது உதடு கொண்டே துடைத்தான் அவன். அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டு தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
கணவனின் அண்மையிலும் ஸ்பரிசத்திலும் அவளின் அங்கமெல்லாம் புல்லரித்து அடங்கியது.
அவளின் முதுகோடு ஒண்டியவாறு படுத்தவன், "நீ வராம போய்டுவியோனு பயந்தே போய்ட்டேன் தெரியுமா?" ஒருவித நடுக்கத்துடன் உரைத்தவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கியவனாய்,
"நாளைக்கு நானே உங்க வீட்டுக்கு வந்து உன்னைக் கூட்டிட்டு வந்துடலாம்னு நினைச்சேன்" படபடப்புடன் உரைத்திருந்தான்.
அவன் நெஞ்சத்தின் படபடப்பை முதுகில் உணர்ந்தாள் வள்ளி.
தனக்கான அவனது தவிப்பில் உருகியவளாய் சட்டெனக் கண்களை விழித்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளின் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்ததும் அவளைத் தன்புறம் திருப்பியவனாய், கண்களில் முத்தமிட்டவன், "எதுக்கு இந்த அழுகை?" எனக் கேட்டான்.
"கார்த்தி" என்று அழுகைக்குரலில் கதறியவளாய் அவனை அணைத்தவள் மார்பில் முகம் புதைத்தாள்.
"என்னடா? என்னாச்சு?" அவளின் முதுகை வருடியவாறு கேட்டவனோ அங்கே அவளைத் துன்புறுத்துமாறு ஏதேனும் பேசியிருப்பார்களோ என்று யோசித்தான்.
அவன் நெஞ்சில் முகம் புதைத்து தேம்பியவள், "மனசு உங்களை எவ்ளோ தேடுச்சு தெரியுமா? இனி உங்களை விட்டுட்டு நான் எங்கேயும் தனியா தங்க மாட்டேன்" என்று விம்மலுடன் உரைத்திருந்தாள்.
'ஓ என்னைப் பிரிஞ்சி இருந்ததுக்குத் தான் அழுறாளா?' அவனின் மனம் ஆசுவாசமாக, அவளின் முகத்தைக் கைகளில் தாங்கியவனாய் நெற்றியில் முத்தமிட்டவன், "இனி நானும் உன்னை எங்கேயும் தனியா அனுப்புற ஐடியால இல்லை. செத்தாலும் உன்னைக் கூடக் கூட்டிட்டுப் போய்டுவேன்" அவன் கூறிய நொடி பட்டென அவன் வாயில் அடித்தவளாய், "என்ன பேச்சு பேசுறீங்க? இனி தான் நாம நல்லா வாழ்ந்து காண்பிக்கனும். என்னிக்குனாலும் நாம பிரிஞ்சிடுவோம்னு நினைக்கிறவங்க முன்னாடி, வாழ்ந்தா இவங்களைப் போலத் தான் வாழனும்னு சொல்ற மாதிரி வாழ்ந்து காண்பிக்கனும் கார்த்தி" தீவிரமான முகப்பாவனையுடன் திடமான குரலில் உரைத்தவளை புருவ முடிச்சுடன் பார்த்தான் கார்த்திகேயன்.
"நாம பிரிஞ்சிடுவோம்னு உங்க வீட்டாளுங்க சொன்னாங்களா?" மிகச் சரியாக அவன் கணித்துக் கேட்கவும் அதிர்வுடன் அவனைப் பார்த்தவளாய் வாயடைத்துப் போனாள் வள்ளி.
"சொல்லு வள்ளி! உங்க வீட்டுல அப்படிச் சொன்னாங்களா?" அவன் சற்று அதட்டலாய் கேட்கவும், அவனை விட்டு விலகி எழுந்தவள் இன்று முழுவதும் நடந்ததை உரைத்தாள்.
"அதெப்படி சொல்லுத கார்த்தி? அவங்க காதல் காத்து உன்னை அடிச்சிருச்சா?" என்று முத்து கேலிச் செய்யவும், "அட போங்கண்ணா!" என்று சிரித்தவன், "என் பொண்டாட்டியோட செருப்பு இது" என்றான்.
"அட.. அட.. அட.. நீ தான்ப்பா அக்மார்க் புருஷன் மெட்டீரியலு! எனக்குலாம் என் பொண்டாட்டி என்ன செருப்பு வச்சிருக்கானு கூடத் தெரியாது" என்று சிரித்தார் முத்துப்பேச்சு.
"இதை என் பொண்டாட்டி சொல்லனுமே!" என்று கார்த்திகேயன் சிரிக்க,
"ஊரு உலகத்துல எந்தப் பொண்டாட்டி புருஷனைப் பாராட்டியிருக்காங்க" என்றார் முத்துப்பேச்சு.
அவரின் கேலியில் சிரித்தவனாய் ஆர்வமும் ஆவலுமாய் உள்ளே சென்ற கார்த்திகேயன் முகப்பறையில் எவரும் இல்லாது இருப்பதைப் பார்த்து, தான் தங்கியிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே ஒருக்களித்தவாறு கண் மூடி படுத்திருந்த மனைவியைப் பார்த்ததும் அவனின் உள்ளம் மகிழ்வில் துள்ள, ஓடிச் சென்று அவளின் அருகில் ஒட்டிப் படுத்தவனாய் இடையில் கைப்போட்டு நெருக்கியவன், அவளின் காதோடு, "மிஸ்டு யூ சோ மச் வைரக்கட்டி" என்றவன் அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். சட்டென அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகி மூக்கோடு ஊடறுத்து வழிந்தோட தனது உதடு கொண்டே துடைத்தான் அவன். அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டு தனது பிரிவாற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
கணவனின் அண்மையிலும் ஸ்பரிசத்திலும் அவளின் அங்கமெல்லாம் புல்லரித்து அடங்கியது.
அவளின் முதுகோடு ஒண்டியவாறு படுத்தவன், "நீ வராம போய்டுவியோனு பயந்தே போய்ட்டேன் தெரியுமா?" ஒருவித நடுக்கத்துடன் உரைத்தவன் அவளை மேலும் தன்னோடு இறுக்கியவனாய்,
"நாளைக்கு நானே உங்க வீட்டுக்கு வந்து உன்னைக் கூட்டிட்டு வந்துடலாம்னு நினைச்சேன்" படபடப்புடன் உரைத்திருந்தான்.
அவன் நெஞ்சத்தின் படபடப்பை முதுகில் உணர்ந்தாள் வள்ளி.
தனக்கான அவனது தவிப்பில் உருகியவளாய் சட்டெனக் கண்களை விழித்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளின் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்ததும் அவளைத் தன்புறம் திருப்பியவனாய், கண்களில் முத்தமிட்டவன், "எதுக்கு இந்த அழுகை?" எனக் கேட்டான்.
"கார்த்தி" என்று அழுகைக்குரலில் கதறியவளாய் அவனை அணைத்தவள் மார்பில் முகம் புதைத்தாள்.
"என்னடா? என்னாச்சு?" அவளின் முதுகை வருடியவாறு கேட்டவனோ அங்கே அவளைத் துன்புறுத்துமாறு ஏதேனும் பேசியிருப்பார்களோ என்று யோசித்தான்.
அவன் நெஞ்சில் முகம் புதைத்து தேம்பியவள், "மனசு உங்களை எவ்ளோ தேடுச்சு தெரியுமா? இனி உங்களை விட்டுட்டு நான் எங்கேயும் தனியா தங்க மாட்டேன்" என்று விம்மலுடன் உரைத்திருந்தாள்.
'ஓ என்னைப் பிரிஞ்சி இருந்ததுக்குத் தான் அழுறாளா?' அவனின் மனம் ஆசுவாசமாக, அவளின் முகத்தைக் கைகளில் தாங்கியவனாய் நெற்றியில் முத்தமிட்டவன், "இனி நானும் உன்னை எங்கேயும் தனியா அனுப்புற ஐடியால இல்லை. செத்தாலும் உன்னைக் கூடக் கூட்டிட்டுப் போய்டுவேன்" அவன் கூறிய நொடி பட்டென அவன் வாயில் அடித்தவளாய், "என்ன பேச்சு பேசுறீங்க? இனி தான் நாம நல்லா வாழ்ந்து காண்பிக்கனும். என்னிக்குனாலும் நாம பிரிஞ்சிடுவோம்னு நினைக்கிறவங்க முன்னாடி, வாழ்ந்தா இவங்களைப் போலத் தான் வாழனும்னு சொல்ற மாதிரி வாழ்ந்து காண்பிக்கனும் கார்த்தி" தீவிரமான முகப்பாவனையுடன் திடமான குரலில் உரைத்தவளை புருவ முடிச்சுடன் பார்த்தான் கார்த்திகேயன்.
"நாம பிரிஞ்சிடுவோம்னு உங்க வீட்டாளுங்க சொன்னாங்களா?" மிகச் சரியாக அவன் கணித்துக் கேட்கவும் அதிர்வுடன் அவனைப் பார்த்தவளாய் வாயடைத்துப் போனாள் வள்ளி.
"சொல்லு வள்ளி! உங்க வீட்டுல அப்படிச் சொன்னாங்களா?" அவன் சற்று அதட்டலாய் கேட்கவும், அவனை விட்டு விலகி எழுந்தவள் இன்று முழுவதும் நடந்ததை உரைத்தாள்.