Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 147
- Thread Author
- #1
ஓம் சரவண பவ
வணக்கம் நட்புகளே!
மீண்டும் அடுத்த கதைப் போட்டியுடன், உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
SS25 - "மன்னவன் பேரைச் சொல்லி" குறுநாவல் போட்டிக்கு உங்களை வரவேற்கிறேன்.
தலைப்பே நமக்குப் பல கதைகள் சொல்லும். நீங்களும் பல கதைகள் கொடுக்கலாம்.
போட்டிக்கான விதிமுறைகள்



1. போட்டிக்காலம் ஏப்ரல் 30 முதல் ஜூலை 31 வரை மட்டுமே. போட்டிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.
2. குறுநாவலுக்கான வார்த்தை அளவு 20,000 வார்த்தைகள் முதல் 30,000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.
3. நீங்கள் எழுதும் கதை தலைப்போடு ஒத்துப்போக வேண்டும்.
4. கதையின் முடிவு சுபமானதாக இருக்க வேண்டும். சோகமான முடிவெனில், இதற்கு இது சரியான முடிவென்று, அனைவரையும் கவரும் வண்ணம் இருத்தல் வேண்டும்.
5. காதல் கதைதான் என்றாலும், எல்லை மீறிய வார்த்தைகளையோ, காட்சிப்படுத்தலையோ தவிர்க்க வேண்டும்.
6. எழுத்துப் பிழைகள், சந்திப்பிழைகள் சரியாக இருக்க வேண்டும். அத்துடன் வாக்கிய முடிவின் பின் தொடர் புள்ளிகள் வைப்பதை முடிந்தளவு குறைக்கவும்.
7. எத்தனை கதை எழுதலாம் என்பது உங்களின் விருப்பத்தைப் பொருத்து.
8. இங்கு போடப்படும் கதை, இதற்கு முன் வேறு எங்கும் பதிவிட்டிருக்கக் கூடாது.
9. பெயரை மறைத்து எழுதுவதோ, அல்லது நேரடியாக எழுதுவதோ தங்கள் விருப்பம்.
போட்டி முடிவுகள்:
எழுத்தாளர்களுக்கு:
1. போட்டியின் முடிவில் மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை புத்தகமாக வெளியிடப்படும்.
2. முதல் பரிசு பெரும் வெற்றியாளருக்கு ரூ.3000. இரண்டாம் பரிசு பெரும் வெற்றியாளருக்கு ரூ.2000. மூன்றாம் பரிசு பெரும் வெற்றியாளருக்கு ரூ.1000 பரிசாக வழங்கப்படும்.
வாசகர்களுக்கு:
1. சிறந்த விமர்சனம் கொடுக்கும் வாசகர்கள் மூவருக்கு, வரலாற்று புதினம் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும். இல்லையெனில் எனது முகநூல் இன்பாக்ஸில் தெரிவிக்கவும்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்