Member
- Joined
- May 20, 2025
- Messages
- 44
- Thread Author
- #1
வள்ளியின் ஆச்சரியப் பார்வையில் வாய்விட்டுச் சிரித்தான் கார்த்திகேயன்.
"நீ எந்த உலகத்துல வாழுற வள்ளி?" எனக் கேட்டுச் சிரித்தான்.
"அய்யோ இந்த மல்லிகா செய்றது எவ்ளோ பெரிய துரோகம். இவங்களுக்காகத் தானே இவங்க புருஷன் வெளிநாட்டுல போய்க் கஷ்டப்பட்டு வேலைச் செஞ்சிட்டு இருக்காரு. ஆனா இவங்க அவங்களுக்குத் துரோகம் செஞ்சிட்டு இருக்காங்க. எவ்ளோ பெரிய பாவம் இது" என்றிவள் கூறவும்,
"பாவம் புண்ணியம்லாம் இப்ப யாரு பார்க்கிறா வள்ளி? மல்லிகாவோட புருஷனுக்கு இவ செய்றதுலாம் தெரிஞ்சிருக்கக் கூட வாய்ப்பிருக்குனு தான் எனக்குத் தோணுது. எது எப்படியோ இதுலருந்து உதயா வெளில வந்தா சந்தோஷம் தான். அப்பா அதுக்கான முயற்சிகள் எடுக்கிறேன்னு சொல்லிருக்காங்க" என்றான் கார்த்திகேயன்.
"மாமா கிரேட்ங்க. நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ இப்படி ஒரு நல்ல குடும்பத்துல வாக்கப்பட்டிருக்கேன். முருகனுக்குத் தான் நன்றி சொல்லனும்" என்றவள் கையெடுத்துக் கும்பிட,
"ஆமா முருகர் தான் நம்மளை சேர்த்து வச்சிருக்காரு வள்ளி" என்று ஆமோதித்தான் கார்த்திகேயன்.
அடுத்து வந்த வாரத்தில் இவளுக்கு மீட்டிங் இருக்க, காலையில் கிளம்பும் பொழுதே கார்த்திகேயனிடம் பதட்டத்துடன் உரைத்திருந்தாள் வள்ளி.
"மீட்டிங்ல பேச வேண்டியதுலாம் தயார் செஞ்சிட்ட தானே வள்ளி" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"ஹ்ம்ம் ஓரளவுக்குச் செஞ்சிட்டேன். மீதி இன்னிக்குப் போய்ப் பார்க்கனும்" பயத்துடன் உரைத்தாள் வள்ளி.
"ஓகே இப்ப எதையெல்லாம் நினைச்சு இப்படி நீ பயப்படுற! அதைச் சொல்லு" கையில் பேனாவையும் தாளையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான் கார்த்திகேயன்.
"என்ன செய்றீங்க? டைமாகுது கிளம்புங்க" என்று வள்ளி அவசரப்படுத்த, "இப்படி நீ பிராக்டிஸ் செஞ்சீனா தான் உன் பயத்தைப் போக்க முடியும் வள்ளி" என்றான்.
"புதுசா எதுவும் இல்லைங்க. அன்னிக்கு நான் தியா மேடம்கிட்ட சொன்ன அதே காரணங்கள் தான்" என்றாள்.
"ஓ ஓகே! அப்ப நான் சொல்றதை கூடச் சேர்ந்து சொல்லு" என்றவன்,
"இன்னிக்கு நான் மீட்டிங்ல தைரியமா பேசுவேன்" என்று சொல்லி விட்டு அவளின் முகத்தைப் பார்க்க,
அவள் சங்கோஜத்துடன் அவனைப் பார்க்க, "இதுக்குப் பேரு பாசிட்டிவ் மேனிபெஸ்டேஷன். நம்ம எண்ணங்கள் தான் நம்மளை வழி நடத்தும் வள்ளி. நான் இப்ப சொல்றதைச் சொல்லு " என்றான்.
அவள் சின்னக் குரலில் சொல்ல, "ம்ப்ச்" என்றவன் அவளைத் தள்ளிச் சென்று கண்ணாடியின் முன் நிறுத்தி பின்னே நின்று கொண்டான்.
"இப்ப உன் முகத்தைப் பார்த்துச் சத்தமா சொல்லு"
"நான் இன்னிக்கு மீட்டிங்ல தைரியமா பேசுவேன்" என்றவன் சொன்னதும்,
இவளும் கண்ணாடியைப் பார்த்தவாறு சத்தமாய் உரைத்தாள்.
"என் மேனேஜரும் க்ளையண்ட்டும் சந்தோஷமாகுற மாதிரி கான்பிடன்ட்டா பேசுவேன்" என்றவன் சொன்னதும் அவனின் பின்னேயே இவளும் சொன்னாள்.
"டுடே இஸ் மை டே! வள்ளிக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும்" என்றவன் சொல்ல, இவளும் அப்படியே சொன்னாள்.
கண்ணாடியில் அவள் முகம் பார்த்துச் சிரித்தவனாய் அவளைத் தன்புறம் திருப்பி இறுக அணைத்து அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன், "ஆல் இஸ் வெல்" என்றான்.
அவளும் அவனை இறுக அணைத்தவளாய், "ஆல் இஸ் வெல்" என்றாள்.
ஒரு விதமாக மனத்திற்குள் புதுத் தெம்பு வந்தது போல் மனப்பலம் அதிகரித்தது போல் உணர்ந்தாள் வள்ளி.
உள்ளம் குதூகலித்திட, "லவ் யூ கார்த்தி" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் இதழ் முறுவலித்திட, "இதை அட்வான்ஸ்ஸா வச்சிக்கிறேன். இன்னிக்கு மீட்டிங்கை சக்சஸ்புல்லா முடிச்சிட்டு வந்ததும் நான் சொல்லிக் கொடுத்த மாதிரி முத்தம் கொடுக்கனும் சரியா!" என்று கண் சிமிட்டினான்.
"முத்தம் தானே கொடுத்துட்டாப் போச்சு" என்று அவனது மறுகன்னத்திலும் முத்தமிட்டவள், "சரி சரி வாங்க டைம் ஆகிடுச்சு" என்று பையினை எடுத்தாள்.
அன்று மதியம் உணவு இடைவேளையின் போதும் அங்கேயே உண்டு விட்டு இந்த மீட்டிங்காகத் தன்னைத் தயார்படுத்துதலில் அவள் இருக்க, "ஆல் த பெஸ்ட் வள்ளி! யூ கேன் டூ இட் (All the best Valli! You can do it) என்று அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான் கார்த்திகேயன்.
அவனின் குறுஞ்செய்தியைப் பார்த்ததும் மகிழ்ந்தவளாய், துடிக்கும் இதயத்தை அனுப்பி வைத்தாள் வள்ளி.
அன்று மூன்று மணிக்கு மேல் மீட்டிங் முடிந்த மறுநொடி கார்த்திகேயனுக்கு அழைத்தாள்.
"நான் உங்களை உடனே பார்க்கனும்" அமைதியான குரலில் அவள் கூறவும், "இதோ வரேன். கேண்டீன்க்கு பின்னாடி இருக்க ஜிம்க்கு வா" என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
ஏதும் சொதப்பி விட்டாளா என்று யோசித்தவாறே அங்கு அவன் வந்து நின்றதும், குதூகலத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தவள் சட்டென அவனை அணைத்து விட்டு தள்ளி நின்றாள் வள்ளி.
திடுமென எதிர்பாரா அவளின் இச்செயலில் திகைத்து விழித்து அவளைப் பார்த்தவன் குறும்புச் சிரிப்புடன், "என் பொண்டாட்டிக்கு நான் வேணும் போலயே" என்று அவளை அவன் அணைக்கப் போவது போல் போக,
"அய்யோ பப்ளிக் பப்ளிக்" என்று விலகி நின்றாள் வள்ளி.
"இந்த நேரத்துல இங்கே யாரும் வர மாட்டாங்கனு தான் உன்னை இங்கே வர சொன்னேன். யாரும் இல்லாததுனால தானே தைரியமா அவசர கட்டிப்பிடி வைத்தியம் செஞ்ச" என்று கண் சிமிட்ட,
"மீட்டிங் பத்தி கேட்காம கடலைப் போட்டுட்டு இருக்கீங்க?" என்று அவனை முறைத்தாள் அவள்.
"அதான் என் பொண்டாட்டி முகம் தவுசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி எரியுதே" என்றவனாய் அவளின் கன்னத்தைக் கிள்ளினான்.
"சரி வா அப்படியே டீ குடிச்சிட்டே பேசுவோம்" என்றவன் அவளுக்கும் சேர்த்து தேநீர் ஆர்டர் கொடுத்து, இரண்டு தேநீர் கோப்பையையும் எடுத்து வந்து மேஜையில் வைத்தான்.
"மேனேஜர் கால் முடிஞ்சதும், சூப்பர் பிரசன்டேஷன்னு மெசேஜ் செஞ்சாரு" சந்தோஷமாய் உரைத்தாள் வள்ளி.
"ஹ்ம்ம் குட்! குட்" என்ற கார்த்திகேயன், "இதை எல்லா மீட்டிங்கும் ஃபாலோ செஞ்சி, 'பயமா.. எனக்கா.. நெவர்னு' சொல்ற வள்ளியா நீ மாறனும்" என்று ஊக்கமூட்டினான்.
அன்றிரவு வெற்றியின் கொண்டாட்டமாய் வள்ளியை முத்தப்பாடங்களை எடுக்க வைத்து அவளைக் கொண்டாடி மகிழ்ந்தான்.
"நீ எந்த உலகத்துல வாழுற வள்ளி?" எனக் கேட்டுச் சிரித்தான்.
"அய்யோ இந்த மல்லிகா செய்றது எவ்ளோ பெரிய துரோகம். இவங்களுக்காகத் தானே இவங்க புருஷன் வெளிநாட்டுல போய்க் கஷ்டப்பட்டு வேலைச் செஞ்சிட்டு இருக்காரு. ஆனா இவங்க அவங்களுக்குத் துரோகம் செஞ்சிட்டு இருக்காங்க. எவ்ளோ பெரிய பாவம் இது" என்றிவள் கூறவும்,
"பாவம் புண்ணியம்லாம் இப்ப யாரு பார்க்கிறா வள்ளி? மல்லிகாவோட புருஷனுக்கு இவ செய்றதுலாம் தெரிஞ்சிருக்கக் கூட வாய்ப்பிருக்குனு தான் எனக்குத் தோணுது. எது எப்படியோ இதுலருந்து உதயா வெளில வந்தா சந்தோஷம் தான். அப்பா அதுக்கான முயற்சிகள் எடுக்கிறேன்னு சொல்லிருக்காங்க" என்றான் கார்த்திகேயன்.
"மாமா கிரேட்ங்க. நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ இப்படி ஒரு நல்ல குடும்பத்துல வாக்கப்பட்டிருக்கேன். முருகனுக்குத் தான் நன்றி சொல்லனும்" என்றவள் கையெடுத்துக் கும்பிட,
"ஆமா முருகர் தான் நம்மளை சேர்த்து வச்சிருக்காரு வள்ளி" என்று ஆமோதித்தான் கார்த்திகேயன்.
அடுத்து வந்த வாரத்தில் இவளுக்கு மீட்டிங் இருக்க, காலையில் கிளம்பும் பொழுதே கார்த்திகேயனிடம் பதட்டத்துடன் உரைத்திருந்தாள் வள்ளி.
"மீட்டிங்ல பேச வேண்டியதுலாம் தயார் செஞ்சிட்ட தானே வள்ளி" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"ஹ்ம்ம் ஓரளவுக்குச் செஞ்சிட்டேன். மீதி இன்னிக்குப் போய்ப் பார்க்கனும்" பயத்துடன் உரைத்தாள் வள்ளி.
"ஓகே இப்ப எதையெல்லாம் நினைச்சு இப்படி நீ பயப்படுற! அதைச் சொல்லு" கையில் பேனாவையும் தாளையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான் கார்த்திகேயன்.
"என்ன செய்றீங்க? டைமாகுது கிளம்புங்க" என்று வள்ளி அவசரப்படுத்த, "இப்படி நீ பிராக்டிஸ் செஞ்சீனா தான் உன் பயத்தைப் போக்க முடியும் வள்ளி" என்றான்.
"புதுசா எதுவும் இல்லைங்க. அன்னிக்கு நான் தியா மேடம்கிட்ட சொன்ன அதே காரணங்கள் தான்" என்றாள்.
"ஓ ஓகே! அப்ப நான் சொல்றதை கூடச் சேர்ந்து சொல்லு" என்றவன்,
"இன்னிக்கு நான் மீட்டிங்ல தைரியமா பேசுவேன்" என்று சொல்லி விட்டு அவளின் முகத்தைப் பார்க்க,
அவள் சங்கோஜத்துடன் அவனைப் பார்க்க, "இதுக்குப் பேரு பாசிட்டிவ் மேனிபெஸ்டேஷன். நம்ம எண்ணங்கள் தான் நம்மளை வழி நடத்தும் வள்ளி. நான் இப்ப சொல்றதைச் சொல்லு " என்றான்.
அவள் சின்னக் குரலில் சொல்ல, "ம்ப்ச்" என்றவன் அவளைத் தள்ளிச் சென்று கண்ணாடியின் முன் நிறுத்தி பின்னே நின்று கொண்டான்.
"இப்ப உன் முகத்தைப் பார்த்துச் சத்தமா சொல்லு"
"நான் இன்னிக்கு மீட்டிங்ல தைரியமா பேசுவேன்" என்றவன் சொன்னதும்,
இவளும் கண்ணாடியைப் பார்த்தவாறு சத்தமாய் உரைத்தாள்.
"என் மேனேஜரும் க்ளையண்ட்டும் சந்தோஷமாகுற மாதிரி கான்பிடன்ட்டா பேசுவேன்" என்றவன் சொன்னதும் அவனின் பின்னேயே இவளும் சொன்னாள்.
"டுடே இஸ் மை டே! வள்ளிக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும்" என்றவன் சொல்ல, இவளும் அப்படியே சொன்னாள்.
கண்ணாடியில் அவள் முகம் பார்த்துச் சிரித்தவனாய் அவளைத் தன்புறம் திருப்பி இறுக அணைத்து அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன், "ஆல் இஸ் வெல்" என்றான்.
அவளும் அவனை இறுக அணைத்தவளாய், "ஆல் இஸ் வெல்" என்றாள்.
ஒரு விதமாக மனத்திற்குள் புதுத் தெம்பு வந்தது போல் மனப்பலம் அதிகரித்தது போல் உணர்ந்தாள் வள்ளி.
உள்ளம் குதூகலித்திட, "லவ் யூ கார்த்தி" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் இதழ் முறுவலித்திட, "இதை அட்வான்ஸ்ஸா வச்சிக்கிறேன். இன்னிக்கு மீட்டிங்கை சக்சஸ்புல்லா முடிச்சிட்டு வந்ததும் நான் சொல்லிக் கொடுத்த மாதிரி முத்தம் கொடுக்கனும் சரியா!" என்று கண் சிமிட்டினான்.
"முத்தம் தானே கொடுத்துட்டாப் போச்சு" என்று அவனது மறுகன்னத்திலும் முத்தமிட்டவள், "சரி சரி வாங்க டைம் ஆகிடுச்சு" என்று பையினை எடுத்தாள்.
அன்று மதியம் உணவு இடைவேளையின் போதும் அங்கேயே உண்டு விட்டு இந்த மீட்டிங்காகத் தன்னைத் தயார்படுத்துதலில் அவள் இருக்க, "ஆல் த பெஸ்ட் வள்ளி! யூ கேன் டூ இட் (All the best Valli! You can do it) என்று அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான் கார்த்திகேயன்.
அவனின் குறுஞ்செய்தியைப் பார்த்ததும் மகிழ்ந்தவளாய், துடிக்கும் இதயத்தை அனுப்பி வைத்தாள் வள்ளி.
அன்று மூன்று மணிக்கு மேல் மீட்டிங் முடிந்த மறுநொடி கார்த்திகேயனுக்கு அழைத்தாள்.
"நான் உங்களை உடனே பார்க்கனும்" அமைதியான குரலில் அவள் கூறவும், "இதோ வரேன். கேண்டீன்க்கு பின்னாடி இருக்க ஜிம்க்கு வா" என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
ஏதும் சொதப்பி விட்டாளா என்று யோசித்தவாறே அங்கு அவன் வந்து நின்றதும், குதூகலத்துடன் அவனை நோக்கி ஓடி வந்தவள் சட்டென அவனை அணைத்து விட்டு தள்ளி நின்றாள் வள்ளி.
திடுமென எதிர்பாரா அவளின் இச்செயலில் திகைத்து விழித்து அவளைப் பார்த்தவன் குறும்புச் சிரிப்புடன், "என் பொண்டாட்டிக்கு நான் வேணும் போலயே" என்று அவளை அவன் அணைக்கப் போவது போல் போக,
"அய்யோ பப்ளிக் பப்ளிக்" என்று விலகி நின்றாள் வள்ளி.
"இந்த நேரத்துல இங்கே யாரும் வர மாட்டாங்கனு தான் உன்னை இங்கே வர சொன்னேன். யாரும் இல்லாததுனால தானே தைரியமா அவசர கட்டிப்பிடி வைத்தியம் செஞ்ச" என்று கண் சிமிட்ட,
"மீட்டிங் பத்தி கேட்காம கடலைப் போட்டுட்டு இருக்கீங்க?" என்று அவனை முறைத்தாள் அவள்.
"அதான் என் பொண்டாட்டி முகம் தவுசண்ட் வாட்ஸ் பல்பு மாதிரி எரியுதே" என்றவனாய் அவளின் கன்னத்தைக் கிள்ளினான்.
"சரி வா அப்படியே டீ குடிச்சிட்டே பேசுவோம்" என்றவன் அவளுக்கும் சேர்த்து தேநீர் ஆர்டர் கொடுத்து, இரண்டு தேநீர் கோப்பையையும் எடுத்து வந்து மேஜையில் வைத்தான்.
"மேனேஜர் கால் முடிஞ்சதும், சூப்பர் பிரசன்டேஷன்னு மெசேஜ் செஞ்சாரு" சந்தோஷமாய் உரைத்தாள் வள்ளி.
"ஹ்ம்ம் குட்! குட்" என்ற கார்த்திகேயன், "இதை எல்லா மீட்டிங்கும் ஃபாலோ செஞ்சி, 'பயமா.. எனக்கா.. நெவர்னு' சொல்ற வள்ளியா நீ மாறனும்" என்று ஊக்கமூட்டினான்.
அன்றிரவு வெற்றியின் கொண்டாட்டமாய் வள்ளியை முத்தப்பாடங்களை எடுக்க வைத்து அவளைக் கொண்டாடி மகிழ்ந்தான்.