Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 463
- Thread Author
- #1
வனிச்சூர்:
நள்ளிரவு மூன்று மணிக்கு எல்லாம் மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தான்.
பின்னர் மற்ற பார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு வெளியே வர கண்ணனும் செழியனுக்காக காரில் காத்துக் கொண்டிருக்க அதில் ஏறி உட்கார்ந்தவன், எப்படி இருக்க?
வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
நலம் நலம்..
நீ எப்படி இருக்க?
போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா என்கவும்,ஆச்சி ஆச்சி.அந்த பரதேசி பயலை உள்ள தள்ளிட்டு தானே வரேன்.
காலம் சென்று நீதி கிடைத்திருக்கு இருந்தாலும் அவனுக்கு இந்த தண்டனை தேவை தானா மாப்பி என்று கண்ணன் கேட்க,ஆமாடா.அந்த இடத்தை சுத்தம் பண்றதுக்கு எப்படியும் ஒரு மாசத்துக்கு மேலாகும்.அடுத்தவங்க உழைப்பை சுரண்டி சுரண்டி சாப்பிட்டு வளர்ந்தான்.
இனி வாழ்நாள் முழுவதும் ஜெயில்ல உழைச்சு சாப்பிடனும் என்று செழியனும் சொல்ல,இருந்தாலும் இன்னும் அவனுக்கு கடுமையாக தண்டனை கொடுத்துருக்கலாம்..
கடுமையாக தண்டனைனா எப்படி அரபு கன்ட்ரி போல கை கால வெட்டுறதா? அதெல்லாம் காயம் ஆறிடும்.ஆனால் இந்த தண்டனை இவனுக்கு ரொம்ப மன உளைச்சலை கொடுக்கும் டா.ஒரு செடியை நட்டு உருவாக்குவது என்ன சாதாரண விஷயமா டா?
ஆமா மாப்பி நீ சொல்றதும் சரிதான் .
சரி டீ குடிக்கலாமா என்கவும் ஆமாண்டா என்ற இருவரும் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அவர்கள் வழக்கமா குடிக்கும் கடைக்கு போக அந்த நேரத்திலும் கடையில் கூட்டமாகவும் இருந்தது.
சிலர் அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டு,நடந்த வழக்கை பற்றி தான் பேசிக் கொண்டிருக்க, அவர்களுக்கு செழியனை அடையாளம் தெரியவில்லை.அதுவும் நல்லது என்று நினைத்துக் கொண்டான்.
நீ தள்ளு நான் கார் ஓட்டுறேனென்ற செழியன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்.விடியற்காலை நேரம் என்பதால் அவ்வளவாக டிராபிக் இல்லாமல் போக, ஏழு மணி நேரத்தில் வர வேண்டிய ஊருக்கு 4 மணி நேரத்திற்குள் வேகமாக வந்து சேர்ந்தான்.
ஊருக்குள் போகும் வழியில் காரை திரும்பும் போது வழக்கமாக ஒலிக்கும் எட்டு மணி பாங் சத்தம் கேட்டது.
பின்னர் ஒரு வழியாக வீட்டிற்கு முன்னால் வந்து காரை நிறுத்த, இருவரும் கீழே இறங்கி வீட்டிற்குள் போக, அங்கே ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வானதியும் செல்லதுரையும் மகனை பார்த்து விட்டு இளா என்றவாறு எந்திரிச்சு போய் மகனை அணைத்துக் கொண்டனர்.
அலோ சீரியல் குடும்பமே வீட்டுக்கு வந்தவனுக்கு ஒரு வாய் டீ குடுக்க மனசு வருதா என்கும் சத்தம் கேட்டு சிரித்தனர்
சரி கண்ணு நீ போய் குளிச்சிட்டு வா என மகனிடமிருந்து விலகிய செல்லதுரை சோபாவில் போய் உட்கார வானதியோ டீ போடுவதற்கு சென்றார்.
வேகமாக படியில் ஏறி ரூமிற்கு வர அங்கு மனைவி இல்லை.எங்கே போனாள் என் சண்டி ராணி என்றவனோ பேகை வைத்து விட்டு ரெஸ்ட் ரூம் கதவை திறக்க அங்கும் இல்லை.
சரி முதலில் ஒரு குளியலை போடுவோம் என்றவன் டவலோடு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றான்.
இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் அதிகாலையிலே எழுந்து குளித்து தயாரானவள்,புவனா ரஞ்சனியோடு குல தெய்வ கோயிலுக்கு சென்றவள் அங்கு அம்மனுக்கு பூஜையை முடித்து விட்டு பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவளுக்கு இதய துடிப்பு கொஞ்சம் வேகமாக துடிப்பது போல இருந்தது..
என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு வீட்டிற்குள் வர அங்கே கண்ணன் வானதி செல்லதுரை டீ குடிப்பது தெரிந்தது.
கோயிலில் இருந்து எடுத்து வந்த விபூதி குங்குமத்தை அவர்களிடம் நீட்ட நான் இன்னும் குளிக்கலை டா என்று கண்ணன் சிரிக்க மற்ற இருவரும் அம்மனை வேண்டி எடுத்து பூசிக் கொண்டனர்.
பின்னர் பூஜை கூடையை சாமி ரூமில் வைத்தவள் துவைத்து வைத்த துணியை காய வைக்கலாமென பொறுமையாக படியில் ஏறி மாடிக்கு போகும் போது,அம்மாடி நானும் உன் மாமாவும் கண்ணனோடு வீட்டுக்கு போயிட்டு வந்துடுறோம்..
கதவை சாத்திட்டு ஜன்னல் வழியாக சாவியை உள்ளே போட்டு போறேனென்க,சரிங்கத்தை என்றாள்.
பின்னர் படியிலேறி மேலே வந்தவள் கதவை திறந்து உள்ளே வர,செழியனும் குளித்து விட்டு வெளியே வர கணவனை பார்த்தவள் என்னங்க என்று அதிர...
இரண்டே எட்டில் மனைவியை வந்து இறுக்கி அணைத்தவன் அப்படியே மெத்தையில் சரிந்தான்.
ஒரு வார பிரிவை மொத்தமாக தீர்த்து விட்டு மனமின்றி விலகி படுத்து தன்னவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவன் எப்படி டி இருக்க?
மாமாவை மிஸ் பண்ணியா?
ஷமீராவோ வாயை திறந்து எதுவும் சொல்லாமல் தன்னவன் கரத்தை எடுத்து வெறுமையான வயிற்றில் மேல் வைக்க,ஏதோ புரிந்து பட்டென்று எழுந்து உட்கார்ந்தவன் ஏய்ய்ய்ய்...
நிஜமாவா?
ஆமாம் என்று முகத்தை மூடிக் கொண்டாள்..
யாகூஊஊஊ என்று கத்தியவன் தனது குழந்தை இருக்கும் வயிற்றில் மீசை முடி பதிய எண்ணற்ற முத்தங்களை பரிசளித்தவன் மனைவியை அள்ளி தனது மடியில் உட்கார வைத்து விட்டு அடியேய்...
இதை முன்னாடியே சொல்லிருக்கண்டியது தானே டி. இவ்வளவு நேரம் உன் புருஷன் பண்ணிய வேலையில் குழந்தைக்கு என்று அடுத்தது சொல்ல முடியாமல் சங்கடமாக மனைவியை பார்க்க...
அவளோ கண்களை உருட்டி கணவனை முறைத்தவள் எங்கே என்னை சொல்ல விட்டீங்க?
என்னமோ காஞ்ச மாடு கம்மங்காட்டில் பாய்ந்த போலென்று வேறு பக்கம் திருப்பிக்கொண்டு ஷமீரா சிரிக்க,மனைவியின் முகத்தில் தெரியும் வெட்கம் எதிரிலிருந்த கண்ணாடி வழியாக நன்கு தெரிந்தது.
இறுக்கமாக அணைத்து மனைவியின் முதுகில் முகத்தை புரட்ட அய்யோ கூசுதுங்க விடுங்க என்றாள்
சரி சரி இப்பொழுது கோட்டா இது போதும் இனி நைட் பாத்துக்கலாம் என்கவும் ஐயோ என்று அவள் அலற கண்டிப்பாக சம்பவம் உண்டு டி உண்டு டி என்று சிரித்தான்.
கணவனை முறைத்துக் கொண்டே எழுந்தவள் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் தயாராகி கீழே வந்தவர்கள் மணியை பார்க்க காலை 11 என்று காட்டியது.
உக்காருங்க டிபன் எடுத்துட்டு வரேன் என்றவள் தோசை போட்டு காலையிலயே தயார் பண்ணி வைத்திருந்து சட்னி சாம்பார் எடுத்துட்டு வந்து கணவனுக்கு பரிமாற,அவளை இழுத்து மடியில் உட்கார வைத்தவன் நீ முதல்ல சாப்பிட்டு தெம்பா இரு டி.
அப்பதான் புள்ளையும் ஆரோக்கியமா இருக்கும் என்றவாறு அவளுக்கும் ஊட்டிக் கொண்டு இவனும் சாப்பிட்டு முடித்தான்.
பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போக அங்கே பேரனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தவர்கள் கேசை பற்றி சில விஷயங்கள் பேசிவிட்டு ஜூலிக்கு வளையல் போட வேண்டும் என்பதைப் பற்றி செழியனிடம் சொல்ல தாராளமா பண்ணிடலாம் .
அவங்க அப்பாவுக்கு யார் சொல்றது?
ருத்ரனும் சொன்னான்.சித்தப்பாவும் சொன்னாருப்பா என்று செல்லதுரை சொல்ல,அடுத்த வாரம் புதன் கிழமை தானே அப்ப இங்க இருந்து எல்லாரும் பிளைட்ல போயிடலாம் டிக்கெட் நான் போட்டு விடுறேன் என்ற செழியன் அதேபோல் எத்தனை பேர் என்று கணக்கு பண்ணி அவர்களுக்கு பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணினான்.
அப்பு,புள்ள மாசமா இருக்கு இந்த நேரத்துல அவ்வளவு தூரம் வேணாம் அதனால நீ கூட இருந்து பார்த்துக்க என்று தம்புசாமி தாத்தா சொல்ல சரி என்றான்.
மதிய உணவு அங்கே சாப்பிட்டுவிட்டு நால்வரும் வீட்டிற்கு வந்தவர்கள் சரி கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று மனைவியோடு ரூமிற்கு வந்தவன்,என்ன டி ரெடியா?
கணவன் கேட்பது புரிந்தாலும் கண்டுகாமல் பெட்டில் படுத்தவள் ஹம் தூங்குங்கள் என்றவாறு திரும்பி படுக்க,கொய்யால...
அவ்வளவு அதப்பு என்றவனோ மனைவியோடு நெருங்கி படுத்தவன்,ஒரு வாரமாக பேச வேண்டிய கதை எல்லாம் அவளிடம் பேசிக்கொண்டே அசதியில் இருவரும் தூங்கி விட்டனர் .
அதன் பின்னர் வழக்கம் போல் செழியனும் பகலில் வேலைக்கு போக இரவில் மனைவியிடம் சேட்டைகள் பண்ணி,அவளிடம் செல்லமாக அடி வாங்கவும் மறக்கவில்லை.
அதோ இதோ என்று ஒரு வாரமும் கடந்து செல்ல டெல்லிக்கு செல்ல வேண்டிய நாளும் வரவும் ஷமீராவை அழைத்துப் போய் பத்மாவிடம் விட்டவன்,ஏர்போர்ட் வரைக்கும் போயிட்டு வரேன் சித்தி உன் மருமகள் இங்கு இருக்கட்டும்.
பத்மாவிற்கு பல்லு வலியால் டெல்லிக்கு போக முடியவில்லை.நீ போயிட்டு வா கண்ணு நான் இருக்கிறேன் நீ என்றார்.
அதன் பின்னர் எல்லாரையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்தவன் டெல்லி செல்வதற்கான பிளைட் வந்ததும் தனது வீட்டினரை அனுப்பி வைத்துவிட்டு வனிச்சூருக்கு புறப்பட்டான்
டெல்லி:
காலை டிபனை செய்து முடித்த எஸ்தர் தனக்கு தேவையானதை டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு ரெடியாகி கீழே வந்தவரின் முன்பு கேப் வந்து நிற்கவும் அதில் ஏறியதும் அவரது ஆபிஸை நோக்கி காரும் ஓடலானது.
55 வயதில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவர் குறித்திருக்கிறார் போல.அது இப்பொழுது தான் நடந்திருக்கிறது என்று யோசித்துக் கொண்டே வந்தவர்,தான் வரைந்த டிசைன்களை மறக்காமல் ஹிரோஷி மேடத்திற்கு மெயில் அனுப்ப வேண்டும் என்பதை மனதிற்குள் குறித்துக் கொண்டார்.
அருணும் ஊருக்கு தயாராகிவன் சரி கா நான் கிளம்புறேன்.எதா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டான்.
நாட்களும் வேகமாக கடந்து சென்றது. விடிந்தால் ஜூலிக்கு வளையளணிவிழா நடக்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை தீபனும் ருத்ரனும் பார்த்துக் கொண்டனர்.
வனிச்சூரிலிருந்து வருபவர்களை ரிசீவ் பண்ணுவதற்காக பாயலும்-தன்ராஜும் ஏர்போர்ட்டிற்கு வந்திருக்க, வருபவர்களுக்கு கிப்ட் பொருள் கொடுக்க வேண்டும் என்பதால் அதற்கானதை வாங்குவதற்கு எஸ்தர் ரூபா இருவரும் பஜாருக்கு சென்று விட,வீட்டில் தனியாக இருக்க ஜூலிக்கு தான் போரடித்தது.
மதுரையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானமும் வந்து சேர்ந்தது. சிறிது நிமிடத்தில் வனிச்சூரிலிருந்து தனது சொந்த பந்தங்கள் எல்லாம் வருவதை பார்த்த தன்ராஜ்,நலம் விசாரித்துவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்...
நள்ளிரவு மூன்று மணிக்கு எல்லாம் மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தான்.
பின்னர் மற்ற பார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு வெளியே வர கண்ணனும் செழியனுக்காக காரில் காத்துக் கொண்டிருக்க அதில் ஏறி உட்கார்ந்தவன், எப்படி இருக்க?
வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
நலம் நலம்..
நீ எப்படி இருக்க?
போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா என்கவும்,ஆச்சி ஆச்சி.அந்த பரதேசி பயலை உள்ள தள்ளிட்டு தானே வரேன்.
காலம் சென்று நீதி கிடைத்திருக்கு இருந்தாலும் அவனுக்கு இந்த தண்டனை தேவை தானா மாப்பி என்று கண்ணன் கேட்க,ஆமாடா.அந்த இடத்தை சுத்தம் பண்றதுக்கு எப்படியும் ஒரு மாசத்துக்கு மேலாகும்.அடுத்தவங்க உழைப்பை சுரண்டி சுரண்டி சாப்பிட்டு வளர்ந்தான்.
இனி வாழ்நாள் முழுவதும் ஜெயில்ல உழைச்சு சாப்பிடனும் என்று செழியனும் சொல்ல,இருந்தாலும் இன்னும் அவனுக்கு கடுமையாக தண்டனை கொடுத்துருக்கலாம்..
கடுமையாக தண்டனைனா எப்படி அரபு கன்ட்ரி போல கை கால வெட்டுறதா? அதெல்லாம் காயம் ஆறிடும்.ஆனால் இந்த தண்டனை இவனுக்கு ரொம்ப மன உளைச்சலை கொடுக்கும் டா.ஒரு செடியை நட்டு உருவாக்குவது என்ன சாதாரண விஷயமா டா?
ஆமா மாப்பி நீ சொல்றதும் சரிதான் .
சரி டீ குடிக்கலாமா என்கவும் ஆமாண்டா என்ற இருவரும் ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் அவர்கள் வழக்கமா குடிக்கும் கடைக்கு போக அந்த நேரத்திலும் கடையில் கூட்டமாகவும் இருந்தது.
சிலர் அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டு,நடந்த வழக்கை பற்றி தான் பேசிக் கொண்டிருக்க, அவர்களுக்கு செழியனை அடையாளம் தெரியவில்லை.அதுவும் நல்லது என்று நினைத்துக் கொண்டான்.
நீ தள்ளு நான் கார் ஓட்டுறேனென்ற செழியன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான்.விடியற்காலை நேரம் என்பதால் அவ்வளவாக டிராபிக் இல்லாமல் போக, ஏழு மணி நேரத்தில் வர வேண்டிய ஊருக்கு 4 மணி நேரத்திற்குள் வேகமாக வந்து சேர்ந்தான்.
ஊருக்குள் போகும் வழியில் காரை திரும்பும் போது வழக்கமாக ஒலிக்கும் எட்டு மணி பாங் சத்தம் கேட்டது.
பின்னர் ஒரு வழியாக வீட்டிற்கு முன்னால் வந்து காரை நிறுத்த, இருவரும் கீழே இறங்கி வீட்டிற்குள் போக, அங்கே ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வானதியும் செல்லதுரையும் மகனை பார்த்து விட்டு இளா என்றவாறு எந்திரிச்சு போய் மகனை அணைத்துக் கொண்டனர்.
அலோ சீரியல் குடும்பமே வீட்டுக்கு வந்தவனுக்கு ஒரு வாய் டீ குடுக்க மனசு வருதா என்கும் சத்தம் கேட்டு சிரித்தனர்
சரி கண்ணு நீ போய் குளிச்சிட்டு வா என மகனிடமிருந்து விலகிய செல்லதுரை சோபாவில் போய் உட்கார வானதியோ டீ போடுவதற்கு சென்றார்.
வேகமாக படியில் ஏறி ரூமிற்கு வர அங்கு மனைவி இல்லை.எங்கே போனாள் என் சண்டி ராணி என்றவனோ பேகை வைத்து விட்டு ரெஸ்ட் ரூம் கதவை திறக்க அங்கும் இல்லை.
சரி முதலில் ஒரு குளியலை போடுவோம் என்றவன் டவலோடு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றான்.
இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் அதிகாலையிலே எழுந்து குளித்து தயாரானவள்,புவனா ரஞ்சனியோடு குல தெய்வ கோயிலுக்கு சென்றவள் அங்கு அம்மனுக்கு பூஜையை முடித்து விட்டு பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவளுக்கு இதய துடிப்பு கொஞ்சம் வேகமாக துடிப்பது போல இருந்தது..
என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு வீட்டிற்குள் வர அங்கே கண்ணன் வானதி செல்லதுரை டீ குடிப்பது தெரிந்தது.
கோயிலில் இருந்து எடுத்து வந்த விபூதி குங்குமத்தை அவர்களிடம் நீட்ட நான் இன்னும் குளிக்கலை டா என்று கண்ணன் சிரிக்க மற்ற இருவரும் அம்மனை வேண்டி எடுத்து பூசிக் கொண்டனர்.
பின்னர் பூஜை கூடையை சாமி ரூமில் வைத்தவள் துவைத்து வைத்த துணியை காய வைக்கலாமென பொறுமையாக படியில் ஏறி மாடிக்கு போகும் போது,அம்மாடி நானும் உன் மாமாவும் கண்ணனோடு வீட்டுக்கு போயிட்டு வந்துடுறோம்..
கதவை சாத்திட்டு ஜன்னல் வழியாக சாவியை உள்ளே போட்டு போறேனென்க,சரிங்கத்தை என்றாள்.
பின்னர் படியிலேறி மேலே வந்தவள் கதவை திறந்து உள்ளே வர,செழியனும் குளித்து விட்டு வெளியே வர கணவனை பார்த்தவள் என்னங்க என்று அதிர...
இரண்டே எட்டில் மனைவியை வந்து இறுக்கி அணைத்தவன் அப்படியே மெத்தையில் சரிந்தான்.
ஒரு வார பிரிவை மொத்தமாக தீர்த்து விட்டு மனமின்றி விலகி படுத்து தன்னவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டவன் எப்படி டி இருக்க?
மாமாவை மிஸ் பண்ணியா?
ஷமீராவோ வாயை திறந்து எதுவும் சொல்லாமல் தன்னவன் கரத்தை எடுத்து வெறுமையான வயிற்றில் மேல் வைக்க,ஏதோ புரிந்து பட்டென்று எழுந்து உட்கார்ந்தவன் ஏய்ய்ய்ய்...
நிஜமாவா?
ஆமாம் என்று முகத்தை மூடிக் கொண்டாள்..
யாகூஊஊஊ என்று கத்தியவன் தனது குழந்தை இருக்கும் வயிற்றில் மீசை முடி பதிய எண்ணற்ற முத்தங்களை பரிசளித்தவன் மனைவியை அள்ளி தனது மடியில் உட்கார வைத்து விட்டு அடியேய்...
இதை முன்னாடியே சொல்லிருக்கண்டியது தானே டி. இவ்வளவு நேரம் உன் புருஷன் பண்ணிய வேலையில் குழந்தைக்கு என்று அடுத்தது சொல்ல முடியாமல் சங்கடமாக மனைவியை பார்க்க...
அவளோ கண்களை உருட்டி கணவனை முறைத்தவள் எங்கே என்னை சொல்ல விட்டீங்க?
என்னமோ காஞ்ச மாடு கம்மங்காட்டில் பாய்ந்த போலென்று வேறு பக்கம் திருப்பிக்கொண்டு ஷமீரா சிரிக்க,மனைவியின் முகத்தில் தெரியும் வெட்கம் எதிரிலிருந்த கண்ணாடி வழியாக நன்கு தெரிந்தது.
இறுக்கமாக அணைத்து மனைவியின் முதுகில் முகத்தை புரட்ட அய்யோ கூசுதுங்க விடுங்க என்றாள்
சரி சரி இப்பொழுது கோட்டா இது போதும் இனி நைட் பாத்துக்கலாம் என்கவும் ஐயோ என்று அவள் அலற கண்டிப்பாக சம்பவம் உண்டு டி உண்டு டி என்று சிரித்தான்.
கணவனை முறைத்துக் கொண்டே எழுந்தவள் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் தயாராகி கீழே வந்தவர்கள் மணியை பார்க்க காலை 11 என்று காட்டியது.
உக்காருங்க டிபன் எடுத்துட்டு வரேன் என்றவள் தோசை போட்டு காலையிலயே தயார் பண்ணி வைத்திருந்து சட்னி சாம்பார் எடுத்துட்டு வந்து கணவனுக்கு பரிமாற,அவளை இழுத்து மடியில் உட்கார வைத்தவன் நீ முதல்ல சாப்பிட்டு தெம்பா இரு டி.
அப்பதான் புள்ளையும் ஆரோக்கியமா இருக்கும் என்றவாறு அவளுக்கும் ஊட்டிக் கொண்டு இவனும் சாப்பிட்டு முடித்தான்.
பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போக அங்கே பேரனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தவர்கள் கேசை பற்றி சில விஷயங்கள் பேசிவிட்டு ஜூலிக்கு வளையல் போட வேண்டும் என்பதைப் பற்றி செழியனிடம் சொல்ல தாராளமா பண்ணிடலாம் .
அவங்க அப்பாவுக்கு யார் சொல்றது?
ருத்ரனும் சொன்னான்.சித்தப்பாவும் சொன்னாருப்பா என்று செல்லதுரை சொல்ல,அடுத்த வாரம் புதன் கிழமை தானே அப்ப இங்க இருந்து எல்லாரும் பிளைட்ல போயிடலாம் டிக்கெட் நான் போட்டு விடுறேன் என்ற செழியன் அதேபோல் எத்தனை பேர் என்று கணக்கு பண்ணி அவர்களுக்கு பிளைட்டில் டிக்கெட் புக் பண்ணினான்.
அப்பு,புள்ள மாசமா இருக்கு இந்த நேரத்துல அவ்வளவு தூரம் வேணாம் அதனால நீ கூட இருந்து பார்த்துக்க என்று தம்புசாமி தாத்தா சொல்ல சரி என்றான்.
மதிய உணவு அங்கே சாப்பிட்டுவிட்டு நால்வரும் வீட்டிற்கு வந்தவர்கள் சரி கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று மனைவியோடு ரூமிற்கு வந்தவன்,என்ன டி ரெடியா?
கணவன் கேட்பது புரிந்தாலும் கண்டுகாமல் பெட்டில் படுத்தவள் ஹம் தூங்குங்கள் என்றவாறு திரும்பி படுக்க,கொய்யால...
அவ்வளவு அதப்பு என்றவனோ மனைவியோடு நெருங்கி படுத்தவன்,ஒரு வாரமாக பேச வேண்டிய கதை எல்லாம் அவளிடம் பேசிக்கொண்டே அசதியில் இருவரும் தூங்கி விட்டனர் .
அதன் பின்னர் வழக்கம் போல் செழியனும் பகலில் வேலைக்கு போக இரவில் மனைவியிடம் சேட்டைகள் பண்ணி,அவளிடம் செல்லமாக அடி வாங்கவும் மறக்கவில்லை.
அதோ இதோ என்று ஒரு வாரமும் கடந்து செல்ல டெல்லிக்கு செல்ல வேண்டிய நாளும் வரவும் ஷமீராவை அழைத்துப் போய் பத்மாவிடம் விட்டவன்,ஏர்போர்ட் வரைக்கும் போயிட்டு வரேன் சித்தி உன் மருமகள் இங்கு இருக்கட்டும்.
பத்மாவிற்கு பல்லு வலியால் டெல்லிக்கு போக முடியவில்லை.நீ போயிட்டு வா கண்ணு நான் இருக்கிறேன் நீ என்றார்.
அதன் பின்னர் எல்லாரையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்தவன் டெல்லி செல்வதற்கான பிளைட் வந்ததும் தனது வீட்டினரை அனுப்பி வைத்துவிட்டு வனிச்சூருக்கு புறப்பட்டான்
டெல்லி:
காலை டிபனை செய்து முடித்த எஸ்தர் தனக்கு தேவையானதை டிபன் பாக்ஸில் எடுத்துக் கொண்டு ரெடியாகி கீழே வந்தவரின் முன்பு கேப் வந்து நிற்கவும் அதில் ஏறியதும் அவரது ஆபிஸை நோக்கி காரும் ஓடலானது.
55 வயதில் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவர் குறித்திருக்கிறார் போல.அது இப்பொழுது தான் நடந்திருக்கிறது என்று யோசித்துக் கொண்டே வந்தவர்,தான் வரைந்த டிசைன்களை மறக்காமல் ஹிரோஷி மேடத்திற்கு மெயில் அனுப்ப வேண்டும் என்பதை மனதிற்குள் குறித்துக் கொண்டார்.
அருணும் ஊருக்கு தயாராகிவன் சரி கா நான் கிளம்புறேன்.எதா இருந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டான்.
நாட்களும் வேகமாக கடந்து சென்றது. விடிந்தால் ஜூலிக்கு வளையளணிவிழா நடக்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை தீபனும் ருத்ரனும் பார்த்துக் கொண்டனர்.
வனிச்சூரிலிருந்து வருபவர்களை ரிசீவ் பண்ணுவதற்காக பாயலும்-தன்ராஜும் ஏர்போர்ட்டிற்கு வந்திருக்க, வருபவர்களுக்கு கிப்ட் பொருள் கொடுக்க வேண்டும் என்பதால் அதற்கானதை வாங்குவதற்கு எஸ்தர் ரூபா இருவரும் பஜாருக்கு சென்று விட,வீட்டில் தனியாக இருக்க ஜூலிக்கு தான் போரடித்தது.
மதுரையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானமும் வந்து சேர்ந்தது. சிறிது நிமிடத்தில் வனிச்சூரிலிருந்து தனது சொந்த பந்தங்கள் எல்லாம் வருவதை பார்த்த தன்ராஜ்,நலம் விசாரித்துவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்...