Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 372
- Thread Author
- #1
வி.கே பேலஸ் கனியூர்:
தனது முன்னால் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றார் தி பேமஸ் அட்வகேட் உமாமகேஸ்வரி.
அது வந்துங்க அம்மா என்று சொல்லும்போதே அந்த பெண்மணிக்கு தொண்டை அடைத்தது.அழாதீங்க மா.நீங்க என்ன விஷயம் என்று சொன்னாதான் எனக்கு தெரியும்.
வந்ததுல இருந்து இப்படி அமைதியா இருந்தீங்கன்னா நான் என்ன நினைக்கிறது?சொல்லுங்க மா
என்ன பிரச்சனை என்று உமா கேட்க, அவரிடம் அழுது கொண்டே நடந்தது எல்லாம் சொல்ல,கேட்ட உமாவுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
"கவலைப்படாதீங்க மா"
கண்டிப்பாக உங்க பையனை கண்டுபிடித்துவிடலாம்.நிச்சயமா உங்களுக்கான நியாயத்தை வாங்கி தரேன் என்று சொல்லும்போது தனது கையில் இருந்த பொட்டலத்தை உமாவிடம் அந்த பெண்மணி நீட்ட என்னென்னம்மா என்றார்.
இதுல நான் போட்டிருந்த தாலியும் கொஞ்சம் நஞ்ச நகைகளையும் பையன் கல்யாணம் பண்ணப் போகும் மருமகளுக்காக எங்களால முடிஞ்சதை சேர்த்து வைத்திருக்கோம் .
இதை உங்களுக்கு சம்பளமா எடுத்துக்கோங்கமா என்கவும், உமாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. அய்யோ அம்மா பணத்தை பத்தி நீங்க ஒண்ணுமே கவலைப்படாதீங்க.
கண்டிப்பா இந்த கேஸை எடுத்துக்கிறேன் என்று சொன்னவர் அவர்கள் இருவரின் பாதுகாப்பை கருதி தனது தந்தை ஊரான குன்னுருக்கு அனுப்பி வைத்தவர்,அவரின் அண்ணன் சந்திரனுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல,நான் பாத்துக்கிறேன் டா கண்ணம்மா நீ கவலைப்படாதே என்றார்.
இரவும் பகலும் இந்த கேஸிற்காக அலைந்து திரிந்த உமாவோ ஓரளவுக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை கணிக்க,அந்த நேரத்தில் தான் அமைச்சர் ஆடியபாதம் அரெஸ்ட் ஆன விஷயத்தை நியூசில் பார்த்தவர் நாளைக்கு கோர்ட்டில் ஆஜர் படுத்தும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.
விடியலும் பலவிதமான திருப்பங்களோடு ஆரம்பமானது.அதிகாலையிலே எழுந்து தயாரான மனைவியை பார்த்த சுரேந்தர் போகலாமா உமா என்க,ஹம் மாமா என்றார்.
சென்னை சிபிஐ அலுவலகம்:
ஆடியபாதத்தின் முன்னால் இருக்கும் சேரில் வந்து உட்கார்ந்த செழியனோ எதுவும் கேட்காமல் கையை கட்டிக்கொண்டு அவரை தான் பார்த்தான்.நொடிகள் நிமிடங்களாக கடக்க அந்த ஏசி அறையிலும் மினிஸ்டருக்கு வேர்த்து விருவிறுத்து போனது.
இதையெல்லாம் அங்கிருந்த கேமரா மூலமாக வெளியே இருந்த போலீஸ்காரர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவன் எப்படியும் வாயை தொரக்கமாட்டான் போலயேன்று நினைத்த மினிஸ்டரோ எதுக்கு தேவையில்லாமல் என்னை கைது பண்ணியிருக்கீங்க?
நான் ஒரு மினிஸ்டர்... மக்களுக்கு தொண்டு புரிய பிறவி எடுத்தவன் என்னை போய் இப்படி பொய் கேஸில் கைது பண்ணிருக்கீங்களே என்று அவன் சட்டைய பேட்சில் உள்ள பெயரை படித்து விட்டு,மிஸ்டர் இளஞ்செழியன், இதனால் உங்கள் மேல் மான நஷ்ட வழக்கு போடுவேனென்று பேசிக்கொண்டே போக.அப்பொழுதும் செழியன் வாயை திறக்கவே இல்லை.
இவன் அமைதியாக இருந்து நம்பகிட்ட காரியத்தை சாதிக்கலாம்னு பாக்குறான்.ஆனால் ஆணவக் கொலைனு சொல்லுறானே நம்ம வேற ஏகப்பட்ட கொலை பண்ணிருக்கோமே இவன் எந்த ரகத்தில் நம்மளை புடிச்சு வச்சிருக்கான்னு தெரியலையே என்று உள்ளுக்குள்ள யோசனையானவன், இவ்வளவு நேரம் தனது வக்கீல் தன்னை வெளியில் எடுக்க எல்லா ஏற்பாடும் பண்ணிக் கொண்டிருப்பான் என்று மிதப்பில் இருந்தாலும் செழியனை பார்த்து ஆடியபாதத்தால் பயப்படாமலும் இருக்க முடியவில்லை.
நிமிடங்களும் கடந்து சென்றிருக்க செழியனோ தன் தோரணை கொஞ்சம் கூட மாற்றவில்ல.ஆடியபாதத்திற்கோ உள்ளுக்குள் இருக்கும் பயமும் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது.
ஊப் என்ற பெருமூச்சு விட்டு எழுந்தவன் சரிங்க மிஸ்டர் ஆடியபாதம் உங்களுக்கு சாப்பாடு வர சொல்லிருக்கேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே போக,ஹலோ தம்பி என்ன நீங்க பாட்டுல போறீங்க?
ஒன்னும் விசாரணை பண்ணலையா என்கவும்,விசாரணை முடிந்துவிட்டது என்று சிரித்துக் கொண்டே அவன் வெளியே செல்ல மினிஸ்டரோ விழி பிதுங்கி போனான்.
மறுநாள் காலை மினிஸ்டரை அழைத்துக் கொண்டு கோர்ட்டிற்கு வந்தவனை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொள்ள,எல்லாருக்கும் வணக்கம்.இப்போதைக்கு உங்கள் கேள்விக்கான பதிலை என்னால சொல்ல முடியாது.
"கேஸ் கோர்ட்டுக்கு வந்துருச்சு"
சோ...என்னன்னு தெரிந்து கொள்ள நீங்க உள்ளே வந்தால் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.நான் சொல்றதை விட நீங்க நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
எது உங்களுக்கு பெட்டர்ன்னு நீங்களே சூஸ் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சிரித்துக் கொண்டே செழியன் சொல்ல, அவனின் அணுகுமுறை பத்திரிகையாளர்களுக்கும் பிடித்து விட்டது.
வழக்கமாக போலீஸ்காரர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் எறிந்து எறிந்து விழுவார்கள்.சரியாக பதில் சொல்ல மாட்டார்கள்.அவர்களில் இவன் வித்தியாசமாக இருக்கவும் அவர்களாலும் மறக்க முடியவில்லை ஓகே சார் என்றனர்.
குட் இப்ப வழி விடுறீங்களா நான் உள்ள போகிறேன் என்கவும் அவர்களும் விலகிக் கொள்ள மினிஸ்டரை அழைத்துக்கொண்டு போலீஸ் பாதுகாப்போடு கோர்ட்டின் உள்ளே சென்றான்.
வனிச்சூர்:
எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த தம்புசாமி இப்படி பேயறைந்து போல எதுக்கு இருக்குறீங்க?போங்க போய் ராவுக்கு சோத்தை ஆக்குங்கள்.நடந்ததை இனி மாற்ற முடியாது.நடக்கப் போவது நல்லதாக இருக்கட்டும் என்று சொல்லவும் பெண்கள் சமையல் அறைக்குள் போக ரியாவும் ஜனனியும் ஷமீராவை பார்க்க..
கண்மணியும் கவிதாவும் அவளை பேச வைக்க முயற்சி பண்ணி தோல்வியில் முடிந்து போக,எம்மாடி உன் புருஷன் வந்த பிறகு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பான் டி.எங்களை விட்டுரு தாயே மயக்கமே வருது என்று சொல்லவும் அவள் பேசிய தோரணையில் ஜனனிக்கும் ரியாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அப்பொழுது கபிலனின் போனுக்கு கால் வர அட்டென்ட் பண்ணியவன் சொல்லு ருத்ரா எங்க,டேய் நான் வனிச்சூருக்கு வந்துட்டேன் டா.இங்க இருந்து எப்படி வரணும் டா.
வெற்றி உங்களுக்காக அந்த பஸ் ஸ்டாண்ட்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான் டா,ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு அவனே கால் பண்ணுவான் என்று சொல்லும்போது ருத்ரனின் போனிற்கு வெற்றியிடமிருந்து கால் வர,கபி அவன் தான் போன் பண்றான் நான் வைக்கிறேன் டா என்று அவனை கட் பண்ண சொல்லிவிட்டு வெற்றியின் கால் அட்டென்ட் பண்ணியவன் டேய் எங்கடா இருக்க என்க,பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் நிக்கிறேன் பாருடா.
உன் காரை நான் பார்த்து விட்டேன் என்கவும்,நான் எந்த காரில் வரேன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையேடா என்கவும்,ஆமா இது பெரிய கம்ப சூத்திரம்.நீ வீட்ல இருந்து கிளம்பிய உடனே விசாரிச்சிட்டேனென்று வெற்றி சிரித்துக் கொண்டே சொன்னான்.
பின்னர் பஸ் ஸ்டாண்டில் திரும்பி பார்க்க அங்கே பைக்கில் இருந்து வெற்றி கையசைத்தான்.டேய் வெற்றி அங்க இருக்கான் காரை திருப்பு என்று சொல்லிக்கொண்டு உள்ளே உட்கார தீபனும் வெற்றியின் வண்டியை நோக்கி வந்தான்.
காரில் இருந்து இறங்கிய இருவரும் வெற்றியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு எப்படி இருக்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
சரி எதா இருந்தாலும் அங்கு வீட்டுல போய் பேசிக்கலாம் வாங்க டா என்க,டேய் என்ன விஷயம்?நேர்ல வா பேசிக்கலாம்னு சொல்லிட்டு இப்போது வீட்டிற்கு போகலாம் என்கிறியே என்று ருத்ரன் முறைக்க...
என்னை பாலோவ் பண்ணி வாங்க டா என்று சிரிக்க,போலீஸ்கார புத்தியை காட்டுறியா டா.இனி வாயை திறக்க மாட்டியே என்று தீபன் முறைக்க,என்ன பண்றது பங்காளி,போலிஸ் ரத்தம் அப்படி என்று சிரித்துக் கொண்டு வெற்றி முன்னே போக அவன் வண்டியை பாலோ பண்ணிக் கொண்டே இவனுங்களும் வந்தனர்.
அரை மணி நேர பயணத்தில் அந்த பெரிய வீட்டின் முன்னால் வந்து வண்டியை நிறுத்திய வெற்றி காரை அந்த பக்கம் நிறுத்துடா என்கவும் அதே போல் நிறுத்தி விட்டு இருவரும் கீழே இறங்கியவர்கள் ஊர் ரொம்ப அழகா இருக்குடா.
இந்த நைட்லயும் சூப்பரா இருக்கே, பகல்ல பார்க்க எப்படி இருக்கும் என்கவும்,எல்லாம் நாளைக்கு பார்த்து தெரிஞ்சுக்கலாம்.இப்போது வாங்க டா என்று சொல்ல,இது யாரு வீடு டா என்றான்.
எல்லாம் நமக்கு ரொம்ப வேண்டியவங்க வீடு தான் டா.உன்னோட தோரணையே சரியில்லடா எதோ அக்யூஸ்ட் கூட்டிட்டு போற போலயே இருக்கே என்று முறைக்க,ஆமாண்டா ரெண்டு பேரும் அப்படி தான்டா இருக்கீங்க என்று சிரிக்க...
எட்டி மிதிச்சேன் என்ன நடக்கும்னு தெரியாது என்று ருத்ரன் சொல்ல,டேய் நான் போலீஸ் டா என்கவும்,ஓஓஓ இருந்துட்டு போ டா.ஓரே ஒரு ஊசி குத்தினேன் தவக்களை போல படுத்துடுவடான்னு ருத்ரன் முறைக்க,சரி சரி உன் பாசத்தை ரொம்ப காட்ட வேண்டாம் உள்ள வாங்கடா என்று அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனான்.
காலடி சத்தம் கேட்டு அங்கிருந்த ஆண்களோ வாசல் பக்கம் திரும்பி பார்க்க,வம்சியின் சாயலில் நிற்கும் உருவத்தை பார்த்து அதிர்ந்து போய் எழுந்து நின்றனர்.
தங்களைப் பார்த்து அதிர்ந்து போனவர்களை கண்டு ருத்ரனும் தீபனும் யார்ரா இவங்க?எதுக்குடா எங்களை பார்த்து இப்படி ஷாக் ஆகுறாங்க என்க...உள்ள வாங்கடா விஷயத்தை சொல்றேன் என்று இருவரையும் அழைச்சிட்டு போனவன் சோபாவுல உட்காருங்கள் என்க...
ருத்ரனுக்கு அவர்களை பார்த்தவுடன் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு வந்தது.புதிய மனிதர்கள் போல் தெரியவில்லை.
அவர்களை பார்த்து இருவரும் வணக்கம் சொல்ல,ருத்ரனின் கையை பிடித்த வெற்றி,வீரையன் தாத்தாவிடம் போனவன் அவர் கையைப் பிடித்து அதில் அவன் கையை வைத்தவன் உங்களுடைய வம்சம் தாத்தா என்கவும், அதில் சுய உணர்வுக்கு வந்தவர் ஐயோ அப்பு என்று அவனை கட்டிக்கொண்டு கதறி அழுக,தீபனுக்கும் ருத்ரனுக்கும் இங்கு என்னடா நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை.
ஆனால் தன்னை கட்டிக் கொண்ட பெரியவரின் அழுகையை தாங்க முடியாமல் தாத்தா எதுக்கு அழறீங்கள் என்க,அய்யா வம்சிஇஇஇ என வீரையன் தாத்தாவின் சத்தத்தில் உள்ளே இருந்த பெண்களும் பதறிக்கொண்டு ஹாலுக்கு வந்தனர்..
தனது முன்னால் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றார் தி பேமஸ் அட்வகேட் உமாமகேஸ்வரி.
அது வந்துங்க அம்மா என்று சொல்லும்போதே அந்த பெண்மணிக்கு தொண்டை அடைத்தது.அழாதீங்க மா.நீங்க என்ன விஷயம் என்று சொன்னாதான் எனக்கு தெரியும்.
வந்ததுல இருந்து இப்படி அமைதியா இருந்தீங்கன்னா நான் என்ன நினைக்கிறது?சொல்லுங்க மா
என்ன பிரச்சனை என்று உமா கேட்க, அவரிடம் அழுது கொண்டே நடந்தது எல்லாம் சொல்ல,கேட்ட உமாவுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
"கவலைப்படாதீங்க மா"
கண்டிப்பாக உங்க பையனை கண்டுபிடித்துவிடலாம்.நிச்சயமா உங்களுக்கான நியாயத்தை வாங்கி தரேன் என்று சொல்லும்போது தனது கையில் இருந்த பொட்டலத்தை உமாவிடம் அந்த பெண்மணி நீட்ட என்னென்னம்மா என்றார்.
இதுல நான் போட்டிருந்த தாலியும் கொஞ்சம் நஞ்ச நகைகளையும் பையன் கல்யாணம் பண்ணப் போகும் மருமகளுக்காக எங்களால முடிஞ்சதை சேர்த்து வைத்திருக்கோம் .
இதை உங்களுக்கு சம்பளமா எடுத்துக்கோங்கமா என்கவும், உமாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. அய்யோ அம்மா பணத்தை பத்தி நீங்க ஒண்ணுமே கவலைப்படாதீங்க.
கண்டிப்பா இந்த கேஸை எடுத்துக்கிறேன் என்று சொன்னவர் அவர்கள் இருவரின் பாதுகாப்பை கருதி தனது தந்தை ஊரான குன்னுருக்கு அனுப்பி வைத்தவர்,அவரின் அண்ணன் சந்திரனுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல,நான் பாத்துக்கிறேன் டா கண்ணம்மா நீ கவலைப்படாதே என்றார்.
இரவும் பகலும் இந்த கேஸிற்காக அலைந்து திரிந்த உமாவோ ஓரளவுக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை கணிக்க,அந்த நேரத்தில் தான் அமைச்சர் ஆடியபாதம் அரெஸ்ட் ஆன விஷயத்தை நியூசில் பார்த்தவர் நாளைக்கு கோர்ட்டில் ஆஜர் படுத்தும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.
விடியலும் பலவிதமான திருப்பங்களோடு ஆரம்பமானது.அதிகாலையிலே எழுந்து தயாரான மனைவியை பார்த்த சுரேந்தர் போகலாமா உமா என்க,ஹம் மாமா என்றார்.
சென்னை சிபிஐ அலுவலகம்:
ஆடியபாதத்தின் முன்னால் இருக்கும் சேரில் வந்து உட்கார்ந்த செழியனோ எதுவும் கேட்காமல் கையை கட்டிக்கொண்டு அவரை தான் பார்த்தான்.நொடிகள் நிமிடங்களாக கடக்க அந்த ஏசி அறையிலும் மினிஸ்டருக்கு வேர்த்து விருவிறுத்து போனது.
இதையெல்லாம் அங்கிருந்த கேமரா மூலமாக வெளியே இருந்த போலீஸ்காரர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவன் எப்படியும் வாயை தொரக்கமாட்டான் போலயேன்று நினைத்த மினிஸ்டரோ எதுக்கு தேவையில்லாமல் என்னை கைது பண்ணியிருக்கீங்க?
நான் ஒரு மினிஸ்டர்... மக்களுக்கு தொண்டு புரிய பிறவி எடுத்தவன் என்னை போய் இப்படி பொய் கேஸில் கைது பண்ணிருக்கீங்களே என்று அவன் சட்டைய பேட்சில் உள்ள பெயரை படித்து விட்டு,மிஸ்டர் இளஞ்செழியன், இதனால் உங்கள் மேல் மான நஷ்ட வழக்கு போடுவேனென்று பேசிக்கொண்டே போக.அப்பொழுதும் செழியன் வாயை திறக்கவே இல்லை.
இவன் அமைதியாக இருந்து நம்பகிட்ட காரியத்தை சாதிக்கலாம்னு பாக்குறான்.ஆனால் ஆணவக் கொலைனு சொல்லுறானே நம்ம வேற ஏகப்பட்ட கொலை பண்ணிருக்கோமே இவன் எந்த ரகத்தில் நம்மளை புடிச்சு வச்சிருக்கான்னு தெரியலையே என்று உள்ளுக்குள்ள யோசனையானவன், இவ்வளவு நேரம் தனது வக்கீல் தன்னை வெளியில் எடுக்க எல்லா ஏற்பாடும் பண்ணிக் கொண்டிருப்பான் என்று மிதப்பில் இருந்தாலும் செழியனை பார்த்து ஆடியபாதத்தால் பயப்படாமலும் இருக்க முடியவில்லை.
நிமிடங்களும் கடந்து சென்றிருக்க செழியனோ தன் தோரணை கொஞ்சம் கூட மாற்றவில்ல.ஆடியபாதத்திற்கோ உள்ளுக்குள் இருக்கும் பயமும் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது.
ஊப் என்ற பெருமூச்சு விட்டு எழுந்தவன் சரிங்க மிஸ்டர் ஆடியபாதம் உங்களுக்கு சாப்பாடு வர சொல்லிருக்கேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே போக,ஹலோ தம்பி என்ன நீங்க பாட்டுல போறீங்க?
ஒன்னும் விசாரணை பண்ணலையா என்கவும்,விசாரணை முடிந்துவிட்டது என்று சிரித்துக் கொண்டே அவன் வெளியே செல்ல மினிஸ்டரோ விழி பிதுங்கி போனான்.
மறுநாள் காலை மினிஸ்டரை அழைத்துக் கொண்டு கோர்ட்டிற்கு வந்தவனை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொள்ள,எல்லாருக்கும் வணக்கம்.இப்போதைக்கு உங்கள் கேள்விக்கான பதிலை என்னால சொல்ல முடியாது.
"கேஸ் கோர்ட்டுக்கு வந்துருச்சு"
சோ...என்னன்னு தெரிந்து கொள்ள நீங்க உள்ளே வந்தால் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.நான் சொல்றதை விட நீங்க நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
எது உங்களுக்கு பெட்டர்ன்னு நீங்களே சூஸ் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சிரித்துக் கொண்டே செழியன் சொல்ல, அவனின் அணுகுமுறை பத்திரிகையாளர்களுக்கும் பிடித்து விட்டது.
வழக்கமாக போலீஸ்காரர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் எறிந்து எறிந்து விழுவார்கள்.சரியாக பதில் சொல்ல மாட்டார்கள்.அவர்களில் இவன் வித்தியாசமாக இருக்கவும் அவர்களாலும் மறக்க முடியவில்லை ஓகே சார் என்றனர்.
குட் இப்ப வழி விடுறீங்களா நான் உள்ள போகிறேன் என்கவும் அவர்களும் விலகிக் கொள்ள மினிஸ்டரை அழைத்துக்கொண்டு போலீஸ் பாதுகாப்போடு கோர்ட்டின் உள்ளே சென்றான்.
வனிச்சூர்:
எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த தம்புசாமி இப்படி பேயறைந்து போல எதுக்கு இருக்குறீங்க?போங்க போய் ராவுக்கு சோத்தை ஆக்குங்கள்.நடந்ததை இனி மாற்ற முடியாது.நடக்கப் போவது நல்லதாக இருக்கட்டும் என்று சொல்லவும் பெண்கள் சமையல் அறைக்குள் போக ரியாவும் ஜனனியும் ஷமீராவை பார்க்க..
கண்மணியும் கவிதாவும் அவளை பேச வைக்க முயற்சி பண்ணி தோல்வியில் முடிந்து போக,எம்மாடி உன் புருஷன் வந்த பிறகு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பான் டி.எங்களை விட்டுரு தாயே மயக்கமே வருது என்று சொல்லவும் அவள் பேசிய தோரணையில் ஜனனிக்கும் ரியாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அப்பொழுது கபிலனின் போனுக்கு கால் வர அட்டென்ட் பண்ணியவன் சொல்லு ருத்ரா எங்க,டேய் நான் வனிச்சூருக்கு வந்துட்டேன் டா.இங்க இருந்து எப்படி வரணும் டா.
வெற்றி உங்களுக்காக அந்த பஸ் ஸ்டாண்ட்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான் டா,ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு அவனே கால் பண்ணுவான் என்று சொல்லும்போது ருத்ரனின் போனிற்கு வெற்றியிடமிருந்து கால் வர,கபி அவன் தான் போன் பண்றான் நான் வைக்கிறேன் டா என்று அவனை கட் பண்ண சொல்லிவிட்டு வெற்றியின் கால் அட்டென்ட் பண்ணியவன் டேய் எங்கடா இருக்க என்க,பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் நிக்கிறேன் பாருடா.
உன் காரை நான் பார்த்து விட்டேன் என்கவும்,நான் எந்த காரில் வரேன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையேடா என்கவும்,ஆமா இது பெரிய கம்ப சூத்திரம்.நீ வீட்ல இருந்து கிளம்பிய உடனே விசாரிச்சிட்டேனென்று வெற்றி சிரித்துக் கொண்டே சொன்னான்.
பின்னர் பஸ் ஸ்டாண்டில் திரும்பி பார்க்க அங்கே பைக்கில் இருந்து வெற்றி கையசைத்தான்.டேய் வெற்றி அங்க இருக்கான் காரை திருப்பு என்று சொல்லிக்கொண்டு உள்ளே உட்கார தீபனும் வெற்றியின் வண்டியை நோக்கி வந்தான்.
காரில் இருந்து இறங்கிய இருவரும் வெற்றியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு எப்படி இருக்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
சரி எதா இருந்தாலும் அங்கு வீட்டுல போய் பேசிக்கலாம் வாங்க டா என்க,டேய் என்ன விஷயம்?நேர்ல வா பேசிக்கலாம்னு சொல்லிட்டு இப்போது வீட்டிற்கு போகலாம் என்கிறியே என்று ருத்ரன் முறைக்க...
என்னை பாலோவ் பண்ணி வாங்க டா என்று சிரிக்க,போலீஸ்கார புத்தியை காட்டுறியா டா.இனி வாயை திறக்க மாட்டியே என்று தீபன் முறைக்க,என்ன பண்றது பங்காளி,போலிஸ் ரத்தம் அப்படி என்று சிரித்துக் கொண்டு வெற்றி முன்னே போக அவன் வண்டியை பாலோ பண்ணிக் கொண்டே இவனுங்களும் வந்தனர்.
அரை மணி நேர பயணத்தில் அந்த பெரிய வீட்டின் முன்னால் வந்து வண்டியை நிறுத்திய வெற்றி காரை அந்த பக்கம் நிறுத்துடா என்கவும் அதே போல் நிறுத்தி விட்டு இருவரும் கீழே இறங்கியவர்கள் ஊர் ரொம்ப அழகா இருக்குடா.
இந்த நைட்லயும் சூப்பரா இருக்கே, பகல்ல பார்க்க எப்படி இருக்கும் என்கவும்,எல்லாம் நாளைக்கு பார்த்து தெரிஞ்சுக்கலாம்.இப்போது வாங்க டா என்று சொல்ல,இது யாரு வீடு டா என்றான்.
எல்லாம் நமக்கு ரொம்ப வேண்டியவங்க வீடு தான் டா.உன்னோட தோரணையே சரியில்லடா எதோ அக்யூஸ்ட் கூட்டிட்டு போற போலயே இருக்கே என்று முறைக்க,ஆமாண்டா ரெண்டு பேரும் அப்படி தான்டா இருக்கீங்க என்று சிரிக்க...
எட்டி மிதிச்சேன் என்ன நடக்கும்னு தெரியாது என்று ருத்ரன் சொல்ல,டேய் நான் போலீஸ் டா என்கவும்,ஓஓஓ இருந்துட்டு போ டா.ஓரே ஒரு ஊசி குத்தினேன் தவக்களை போல படுத்துடுவடான்னு ருத்ரன் முறைக்க,சரி சரி உன் பாசத்தை ரொம்ப காட்ட வேண்டாம் உள்ள வாங்கடா என்று அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனான்.
காலடி சத்தம் கேட்டு அங்கிருந்த ஆண்களோ வாசல் பக்கம் திரும்பி பார்க்க,வம்சியின் சாயலில் நிற்கும் உருவத்தை பார்த்து அதிர்ந்து போய் எழுந்து நின்றனர்.
தங்களைப் பார்த்து அதிர்ந்து போனவர்களை கண்டு ருத்ரனும் தீபனும் யார்ரா இவங்க?எதுக்குடா எங்களை பார்த்து இப்படி ஷாக் ஆகுறாங்க என்க...உள்ள வாங்கடா விஷயத்தை சொல்றேன் என்று இருவரையும் அழைச்சிட்டு போனவன் சோபாவுல உட்காருங்கள் என்க...
ருத்ரனுக்கு அவர்களை பார்த்தவுடன் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு வந்தது.புதிய மனிதர்கள் போல் தெரியவில்லை.
அவர்களை பார்த்து இருவரும் வணக்கம் சொல்ல,ருத்ரனின் கையை பிடித்த வெற்றி,வீரையன் தாத்தாவிடம் போனவன் அவர் கையைப் பிடித்து அதில் அவன் கையை வைத்தவன் உங்களுடைய வம்சம் தாத்தா என்கவும், அதில் சுய உணர்வுக்கு வந்தவர் ஐயோ அப்பு என்று அவனை கட்டிக்கொண்டு கதறி அழுக,தீபனுக்கும் ருத்ரனுக்கும் இங்கு என்னடா நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை.
ஆனால் தன்னை கட்டிக் கொண்ட பெரியவரின் அழுகையை தாங்க முடியாமல் தாத்தா எதுக்கு அழறீங்கள் என்க,அய்யா வம்சிஇஇஇ என வீரையன் தாத்தாவின் சத்தத்தில் உள்ளே இருந்த பெண்களும் பதறிக்கொண்டு ஹாலுக்கு வந்தனர்..