Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 694
- Thread Author
- #1
டெல்லி-கமிஷ்னர் அலுவலகம்:
கம்பீர நடையோடு தனது நீண்ட கல்களை எட்டி நடை போட்டு வந்து கொண்டிருப்பவனின் எதிரில் வருபவர்கள்,வயதையும் கணக்கில் கொள்ளாமல் மரியாதை நிமித்தமாக சல்யூட் வைக்க,பதிலுக்கு தலையை அசைத்தபடியே படிகளில் ஏறி மேலே வந்தவன் கமிஷ்னரின் ரூம் கதவை இரண்டு விரல்களால் தட்டிவிட்டு, பின்னர் கதவை திறந்து உள்ளே போய் சல்யூட் அடிக்க,எஸ் என்றவாறு தனது எதிரில் இருக்கும் சேரை காட்டி உட்கார சொன்னார் டெல்லி சிட்டியின் கமிஷ்னர் வேத நந்தன்...
"தேங்க்யூ சார்"
வர சொன்னீங்களே?என்றவனை பார்த்தவர் ஹம்.லிசன் மிஸ்டர் இளமாறன் ஒரு முக்கியமான கேஸை உங்க கிட்ட ஒப்படைக்கதான் வரச்சொன்னேன்.
அப்பொழுது இளமாறனின் செல்ஃபோனிற்கு கால் வர, சாரி சார் என்றவன் மொபைலை சைலண்டில் போட்டு விட்டு அவரை பார்க்க....
ம்ம்....கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் அதாவது எக்ஸாட்டாக சொல்லணும் என்றால் அக்டோபர் 24 ஆம் தேதி 2024ல் ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு வந்த இவங்களென்று போட்டோவை காட்டியவர்,இதுவரை திரும்ப ஜெர்மனிக்கு போகவில்லை.
"என்ன ஆச்சுணும் தெரியலை? "
இவங்களோட பேரன்ட்ஸும் ஜெர்மனியில் இருந்து இங்கு வந்து தேடி பார்த்துட்டு போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காங்க. அவங்களும் மிஸ்ஸிங் கேஸ்னு பைல் பண்ணிருக்காங்கள்.
பட் இதுவரை கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லு போல அப்படியே இருக்கவும்,இவங்களோட பேரண்ட்ஸ் இங்கிருக்கும் ஜெர்மனி எம்பசிக்கு போய் விஷயத்தை சொல்லவும் கேஸ் நம்ப கிட்ட வந்திருக்கிறது.
இண்டர்நேஷனல் இஸ்யூஸ் என்பதால் டெல்லி மேலிடம் இதை சி.பி.ஐ கிட்ட ஒப்படைக்கலாமென்று முடிவு பண்ணும் போது,தமிழக ஆளுநர் வெற்றி நந்தன் உங்க கிட்ட இந்த கேஸை ஒப்படைக்க சொல்லி பர்சனலாக நம்ப பிரதமர்கிட்ட சொல்லியிருக்கின்றார்.
சோ....
நீங்கள் உடனே தமிழ்நாட்டிற்கு கிளம்புங்கள்.வழக்கம் போல இந்த கேஸையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு வரணுமென்க,மாமா என நந்தனை மனதிற்குள் வறுத்தெடுத்தவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஸ்யூர் சார் என்றவனிடம் உங்ககூட மிஸ்டர் நிலவனும் வருவார்.
ரெண்டு பேரும் சேர்ந்தே இந்த கேஸை ஹேண்டில் பண்ணுங்கள் என்று சொல்லியவர் மௌனமாய் சிரிக்க,ஓகே சார் என்று விறைப்பாப் சொல்பவனை பார்த்தவர்,இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணுற எண்ணம் இருக்காயென்க...
இதுவரை இருந்த மனநிலை மாறி மாமா என்று அந்த டேபிளின் மேல் தட்டியபடி கத்திக்கொண்டு எழுந்தவன்,என்னைய்யா அண்ணனும் தம்பியும் சேர்ந்து விளையாடுறீங்களா?.
ஏன்...வேற யாருக்காவது இந்த கேஸை கொடுக்க வேண்டியது தானே?
அதை விட்டு தமிழ்நாட்டுக்கு போ தாமிரபரணிக்கு போனு...
உங்க தங்கச்சி கிட்ட சொல்லுங்க கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு சுத்தமா இல்லை என்கும் போது மீண்டும் அவனுக்கு கால் வர,வைபரேஷனில் இருந்த போனை எடுத்து பெயரை பார்க்க அவனது அப்பா என்று தெரிந்தது.
பல்லை கடித்துக் கொண்டு அட்டென் பண்ணியவன் ஏன்பா கல்யாண சோறு திங்க ஆசை இருந்தால் நீயும் உன் பொண்டாட்டியும் தினமும் கோயில்ல போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு சமைத்து திங்க வேண்டியதுதானே..
அப்படி இல்லலனா உங்கள் மகளுக்கு உங்க நொச்சான் மவனை கட்டி வச்சிங்களே,அவங்களுக்கு பிறந்த புள்ளைகளுக்கு வரன் தேடி அலைய வேண்டியது..
அதுவும் இல்லையா நீங்கள் பெத்த இன்னொரு தடிமாடுக்கு பொண்ணு பாருங்கள்.அதை விட்டு எப்போ பார்த்தாலும் கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்தேன் புண்ணாக்கு பார்த்தேனென்று என் உசுரை ஏன் வாங்குறீங்கள் என்று கத்தினான்.
சில நொடிகள் வரை அந்த பக்கத்திலிருந்து எந்த சத்தமும் வராமல் போக,தகப்பா இருக்கியா இல்லையா?என்க,மகனின் பேச்சை கேட்டு கண்ணை முடி தனது காதில் விரல் விட்டு குடைந்தவர்,மாறா பொண்ணு வீட்டில்தான் இருக்கோம் டா.இந்த புள்ளைய பார்க்க நல்லா லட்சணமாக இருக்கு பா என்றார்...
அப்பா பேசியதை கேட்டவன் ஓஓஓஓ...அப்போணா நீயே ரெண்டாவதாக கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே என்று மாறனும் கடுப்பில் சொல்ல..என்னப்பா செய்ய என் தலையெழுத்து ஒரு மச்சான் போலீஸ் இன்னொரு மச்சான் ஆளுநர்.
ரெண்டு கல்யாணம் பண்ணினால் லா பேசியே என்னை தூக்கி உள்ள தள்ளிடுவானுங்களேயென மாறனின் அப்பா மதிவாணன் சொல்ல,ஓஓஓஓ இதுதான் உனக்கு பெரும் கவலை போல..ஏன்யா நீ ஒரு வாத்தியாரு,நீயே இப்படி பேசினால் உன் கிட்ட படிக்குறவனெல்லாம் என்ன லட்சணத்தில் வளருவானுங்களென்று பல்லை கடித்தான்.
ஹா ஹா ஹா என்று சிரித்தவர் உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்தோம் பா.ஒன்பது பொருத்தம் இருக்குடா.
எங்கம்மாவோட கடைசி ஆசை உனக்கொரு கல்யாணத்தை பண்ணி பார்க்கணுமென்பது என்று கவலையாக சொல்ல,ஆச்சி என பல்லை கடித்தவன் சரி பேசி முடிங்களென்று சொல்லி போனை வைத்துவிட்டு தனது தாய்மாமனாகிய கமிஷ்னரை பார்த்தவன் ஆஹ குடும்பமே சேர்ந்து ஏற்கனவே பேசி முடிவு பண்ணிட்டீங்க அப்படி தானே என்றான் டெல்லியின் அசிஸ்டெண்ட் கமிஷ்னரும் அண்டர் கிரவுண்ட் சிபிஐ ஆபிசரான இளமாறன் ஐபிஎஸ்...
தனது புல்லட்டில் ஏறியவனோ கடுகு போட்டால் பொறிந்து விடும் போல முகத்தை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் சாம் வில்லாவிற்கு வந்தவன் வண்டியை நிறுத்தி விட்டு படியில் ஏறி பர்ஸ்ட் ப்ளோருக்கு போய் நாலாவது வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்...
சிறிது நொடியில் கதவு திறக்க எதிரே இருந்த உருவத்தை பார்த்தவனுக்கு இன்னும் கடுப்பு ஏற,அவனோ இவனை கண்டு கொள்ளாமல் விட்ட ஆட்டத்தை தனது இரண்டு வயது மகனோடு டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் லுங்கி டான்ஸ் பாட்டிற்கு ஆடவும்,மாறனோ அவனின் முதுகில் எட்டி ஒரு உதை விடவும் திரும்பி நின்று ஆடிக் கொண்டிருந்தவனோ அய்யோ என்றவாறு அங்கே சோபாவில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் காலடியில் போய் விழுந்தான்.
இதுவும் புதுவித ஸ்டெப் போலயென்று நினைத்த குழந்தையோ,தனது தந்தையை போலவே தாயின் காலடியில் போய் விழவும்,மாறனோ தனது மருமகனின் செயலை கண்டு சத்தமாக சிரித்து விட்டான்.
தனது காலின் கீழே விழுந்து கிடக்கும் கணவனை பார்த்த இளமதி,மங்களம் உண்டாகட்டும் மகனே என்று தனது வலது கையை நீட்டி ஆசீர்வாதம் செய்ய..
மனைவியை முறைத்துக் கொண்டே அய்யோ என் இடுப்பு போச்சே என்றவாறு எழுந்த நிலவன் அங்கே சிரித்துக் கொண்டிருந்த தனது மச்சானை திரும்பி பார்த்து முறைத்தவன் ஏன் டா ஏன்?
உன் தங்கச்சிகாரி எல்லா வேலையும் செய்ய சொல்லி உசுர வாங்குறது போதாது என்று உன் பங்குக்கு நீயும் படுத்துறியே டா இதெல்லாம் நியாயமாடா என பாவமாக கேட்க...
யோவ் போலீஸ் என்னை தான் கட்டுவேனு ஒத்த காலில் நின்ன இல்லை அப்போ இதையெல்லாம் நீ அனுபவித்து தான் யா ஆகணுமென்ற இளமதி டீ எடுத்துட்டு வரட்டுமா ணா என்க,ஹம் என்றவன் சோட்டு என்று மருமகனை நோக்கி கையை நீட்டினான்.
நிலவன்-இளமதியின் புதல்வன் இளம்பரிதியோ மாமா என்று ஓடி வர மருமகனை தூக்கி சுற்றியவன்,ஏன் சோட்டு இன்றைக்கு உங்கப்பன் என்ன வேலை செஞ்சானென்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
குழந்தையோ அதோட பிஞ்சு விரலால் கன்னத்தில் தட்டி யோசிப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பு வர,ஹம் மாடில சவிதா ஆன்ட்டிகிட்ட உம்மா உம்மானு அப்பா சொன்னாங்களென்று குழந்தை வாயை மூடுவதற்குள் அய்யோ என்னும் நிலவனின் அலறல் சத்தம் கேட்டு மாறன் பார்க்க சில அடி தூரத்தில் சில்வர் சொம்பு ஒன்று தரையில் சுத்திக் கொண்டிருந்தது.
மிகச் சிறப்பு என்றவன் சோட்டு நம்ம போய் பேக்கிங் பண்ணலாம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம பிஷ்ஷ்ஷ் போறோம் என்றவன் பிளைட் போல குழந்தைக்கு ஆக்சன் பண்ணி காட்ட, போகலாமே என்று குழந்தையும் குதுகலிக்க,நிலவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த மாறன்,நடக்க வேண்டியதை இனிமே உன் அம்மா பார்த்துப்பா என்று சொல்லிக் கொண்டு குழந்தையோடு அவனது அறைக்குள் சென்றான்.
மன்னார்குடி:
நள்ளிரவு.....
தேக்குமர கட்டிலில் படுத்துக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு வேண்டும் வேண்டும் என்ற குரல் எதோ பாதாளத்தில் இருந்து கேட்பது போல இருக்கவும்,தூக்கத்திலிருந்தவாறு இடது பக்கம் திரும்பி படுத்தவளை ஜன்னலுக்கு வெளியே நின்ற உருவமோ கண்களில் கொலைவெறி மின்ன,பழிவாங்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது...
அப்பொழுது அனலான காற்று தன் மேல் படுவதை தூக்கத்திலிருந்தவள் உணர என்ன இதுயென்று அரை விழிகள் திறந்தவாறு நெற்றியை தடவியவள்,பேன் சுற்றுதா என்று பாதி திறந்த விழிகள் மூலமாக பார்க்கும்போது,கோர பற்கள் நீண்டிருக்க வாயெல்லாம் ரத்தமாக அவள் கழுத்தை பிடிக்க வருவது போல கைகளை அவளை நோக்கி நீட்ட,அரண்டுபோய் கட்டிலிலிருந்து கீழே விழுந்தாள்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவோ பதறி அடித்து எழுந்து வந்து கவி கவி என்று உள் பக்கமா பூட்டியிருக்கும் ரூம் கதவை தட்ட அதில் நிகழ்விற்கு வந்தவள் மாம் என்று வேகமாக போய் கதவை திறக்க உள்ளே வந்தவரோ என்னடி ஆச்சு?
எதுக்கு இப்படி கத்துன?.
அம்மா அம்மா என அடுத்த வார்த்தை பேச முடியாமல் அரற்றியவள் தாயின் பின்னால் போய் ஒளிந்து கொண்டு, சீலிங் பேனை நோக்கி கையை நீட்டினாள்.
மகளின் உடல் நடுங்குவதை வைத்து, கவி ரொம்ப பயந்திருக்கிறாள் என்பது புரிந்த சரோஜா அவள் கை நீட்டிய திசையில் பார்க்க பேன் தான் சுற்றிக் கொண்டிருந்தது.
ப்ச்..... கண்ட நேரத்துல கண்ட கண்ட படம் பார்க்காத,புக் படிக்காதன்னு சொன்னா என்னைக்குடி கேட்டு தொலைகிற அறிவு கெட்டவளே...
தினமும் உன் கூட இதே தலைவலியா இருக்கு.எத்தனை வாட்டி சொல்றேன் பேய் படம் பார்க்காத பேய் கதை எல்லாம் படிக்காதன்னு என்னைக்காச்சும் கேக்குறியா என்று திரும்பி நின்று மகளை பார்த்து சரோஜா கத்த...
கம்பீர நடையோடு தனது நீண்ட கல்களை எட்டி நடை போட்டு வந்து கொண்டிருப்பவனின் எதிரில் வருபவர்கள்,வயதையும் கணக்கில் கொள்ளாமல் மரியாதை நிமித்தமாக சல்யூட் வைக்க,பதிலுக்கு தலையை அசைத்தபடியே படிகளில் ஏறி மேலே வந்தவன் கமிஷ்னரின் ரூம் கதவை இரண்டு விரல்களால் தட்டிவிட்டு, பின்னர் கதவை திறந்து உள்ளே போய் சல்யூட் அடிக்க,எஸ் என்றவாறு தனது எதிரில் இருக்கும் சேரை காட்டி உட்கார சொன்னார் டெல்லி சிட்டியின் கமிஷ்னர் வேத நந்தன்...
"தேங்க்யூ சார்"
வர சொன்னீங்களே?என்றவனை பார்த்தவர் ஹம்.லிசன் மிஸ்டர் இளமாறன் ஒரு முக்கியமான கேஸை உங்க கிட்ட ஒப்படைக்கதான் வரச்சொன்னேன்.
அப்பொழுது இளமாறனின் செல்ஃபோனிற்கு கால் வர, சாரி சார் என்றவன் மொபைலை சைலண்டில் போட்டு விட்டு அவரை பார்க்க....
ம்ம்....கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் அதாவது எக்ஸாட்டாக சொல்லணும் என்றால் அக்டோபர் 24 ஆம் தேதி 2024ல் ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு வந்த இவங்களென்று போட்டோவை காட்டியவர்,இதுவரை திரும்ப ஜெர்மனிக்கு போகவில்லை.
"என்ன ஆச்சுணும் தெரியலை? "
இவங்களோட பேரன்ட்ஸும் ஜெர்மனியில் இருந்து இங்கு வந்து தேடி பார்த்துட்டு போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காங்க. அவங்களும் மிஸ்ஸிங் கேஸ்னு பைல் பண்ணிருக்காங்கள்.
பட் இதுவரை கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லு போல அப்படியே இருக்கவும்,இவங்களோட பேரண்ட்ஸ் இங்கிருக்கும் ஜெர்மனி எம்பசிக்கு போய் விஷயத்தை சொல்லவும் கேஸ் நம்ப கிட்ட வந்திருக்கிறது.
இண்டர்நேஷனல் இஸ்யூஸ் என்பதால் டெல்லி மேலிடம் இதை சி.பி.ஐ கிட்ட ஒப்படைக்கலாமென்று முடிவு பண்ணும் போது,தமிழக ஆளுநர் வெற்றி நந்தன் உங்க கிட்ட இந்த கேஸை ஒப்படைக்க சொல்லி பர்சனலாக நம்ப பிரதமர்கிட்ட சொல்லியிருக்கின்றார்.
சோ....
நீங்கள் உடனே தமிழ்நாட்டிற்கு கிளம்புங்கள்.வழக்கம் போல இந்த கேஸையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு வரணுமென்க,மாமா என நந்தனை மனதிற்குள் வறுத்தெடுத்தவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஸ்யூர் சார் என்றவனிடம் உங்ககூட மிஸ்டர் நிலவனும் வருவார்.
ரெண்டு பேரும் சேர்ந்தே இந்த கேஸை ஹேண்டில் பண்ணுங்கள் என்று சொல்லியவர் மௌனமாய் சிரிக்க,ஓகே சார் என்று விறைப்பாப் சொல்பவனை பார்த்தவர்,இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணுற எண்ணம் இருக்காயென்க...
இதுவரை இருந்த மனநிலை மாறி மாமா என்று அந்த டேபிளின் மேல் தட்டியபடி கத்திக்கொண்டு எழுந்தவன்,என்னைய்யா அண்ணனும் தம்பியும் சேர்ந்து விளையாடுறீங்களா?.
ஏன்...வேற யாருக்காவது இந்த கேஸை கொடுக்க வேண்டியது தானே?
அதை விட்டு தமிழ்நாட்டுக்கு போ தாமிரபரணிக்கு போனு...
உங்க தங்கச்சி கிட்ட சொல்லுங்க கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு சுத்தமா இல்லை என்கும் போது மீண்டும் அவனுக்கு கால் வர,வைபரேஷனில் இருந்த போனை எடுத்து பெயரை பார்க்க அவனது அப்பா என்று தெரிந்தது.
பல்லை கடித்துக் கொண்டு அட்டென் பண்ணியவன் ஏன்பா கல்யாண சோறு திங்க ஆசை இருந்தால் நீயும் உன் பொண்டாட்டியும் தினமும் கோயில்ல போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு சமைத்து திங்க வேண்டியதுதானே..
அப்படி இல்லலனா உங்கள் மகளுக்கு உங்க நொச்சான் மவனை கட்டி வச்சிங்களே,அவங்களுக்கு பிறந்த புள்ளைகளுக்கு வரன் தேடி அலைய வேண்டியது..
அதுவும் இல்லையா நீங்கள் பெத்த இன்னொரு தடிமாடுக்கு பொண்ணு பாருங்கள்.அதை விட்டு எப்போ பார்த்தாலும் கல்யாணம் பண்ண பொண்ணு பார்த்தேன் புண்ணாக்கு பார்த்தேனென்று என் உசுரை ஏன் வாங்குறீங்கள் என்று கத்தினான்.
சில நொடிகள் வரை அந்த பக்கத்திலிருந்து எந்த சத்தமும் வராமல் போக,தகப்பா இருக்கியா இல்லையா?என்க,மகனின் பேச்சை கேட்டு கண்ணை முடி தனது காதில் விரல் விட்டு குடைந்தவர்,மாறா பொண்ணு வீட்டில்தான் இருக்கோம் டா.இந்த புள்ளைய பார்க்க நல்லா லட்சணமாக இருக்கு பா என்றார்...
அப்பா பேசியதை கேட்டவன் ஓஓஓஓ...அப்போணா நீயே ரெண்டாவதாக கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே என்று மாறனும் கடுப்பில் சொல்ல..என்னப்பா செய்ய என் தலையெழுத்து ஒரு மச்சான் போலீஸ் இன்னொரு மச்சான் ஆளுநர்.
ரெண்டு கல்யாணம் பண்ணினால் லா பேசியே என்னை தூக்கி உள்ள தள்ளிடுவானுங்களேயென மாறனின் அப்பா மதிவாணன் சொல்ல,ஓஓஓஓ இதுதான் உனக்கு பெரும் கவலை போல..ஏன்யா நீ ஒரு வாத்தியாரு,நீயே இப்படி பேசினால் உன் கிட்ட படிக்குறவனெல்லாம் என்ன லட்சணத்தில் வளருவானுங்களென்று பல்லை கடித்தான்.
ஹா ஹா ஹா என்று சிரித்தவர் உங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பார்த்தோம் பா.ஒன்பது பொருத்தம் இருக்குடா.
எங்கம்மாவோட கடைசி ஆசை உனக்கொரு கல்யாணத்தை பண்ணி பார்க்கணுமென்பது என்று கவலையாக சொல்ல,ஆச்சி என பல்லை கடித்தவன் சரி பேசி முடிங்களென்று சொல்லி போனை வைத்துவிட்டு தனது தாய்மாமனாகிய கமிஷ்னரை பார்த்தவன் ஆஹ குடும்பமே சேர்ந்து ஏற்கனவே பேசி முடிவு பண்ணிட்டீங்க அப்படி தானே என்றான் டெல்லியின் அசிஸ்டெண்ட் கமிஷ்னரும் அண்டர் கிரவுண்ட் சிபிஐ ஆபிசரான இளமாறன் ஐபிஎஸ்...
தனது புல்லட்டில் ஏறியவனோ கடுகு போட்டால் பொறிந்து விடும் போல முகத்தை வைத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் சாம் வில்லாவிற்கு வந்தவன் வண்டியை நிறுத்தி விட்டு படியில் ஏறி பர்ஸ்ட் ப்ளோருக்கு போய் நாலாவது வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்...
சிறிது நொடியில் கதவு திறக்க எதிரே இருந்த உருவத்தை பார்த்தவனுக்கு இன்னும் கடுப்பு ஏற,அவனோ இவனை கண்டு கொள்ளாமல் விட்ட ஆட்டத்தை தனது இரண்டு வயது மகனோடு டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் லுங்கி டான்ஸ் பாட்டிற்கு ஆடவும்,மாறனோ அவனின் முதுகில் எட்டி ஒரு உதை விடவும் திரும்பி நின்று ஆடிக் கொண்டிருந்தவனோ அய்யோ என்றவாறு அங்கே சோபாவில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் காலடியில் போய் விழுந்தான்.
இதுவும் புதுவித ஸ்டெப் போலயென்று நினைத்த குழந்தையோ,தனது தந்தையை போலவே தாயின் காலடியில் போய் விழவும்,மாறனோ தனது மருமகனின் செயலை கண்டு சத்தமாக சிரித்து விட்டான்.
தனது காலின் கீழே விழுந்து கிடக்கும் கணவனை பார்த்த இளமதி,மங்களம் உண்டாகட்டும் மகனே என்று தனது வலது கையை நீட்டி ஆசீர்வாதம் செய்ய..
மனைவியை முறைத்துக் கொண்டே அய்யோ என் இடுப்பு போச்சே என்றவாறு எழுந்த நிலவன் அங்கே சிரித்துக் கொண்டிருந்த தனது மச்சானை திரும்பி பார்த்து முறைத்தவன் ஏன் டா ஏன்?
உன் தங்கச்சிகாரி எல்லா வேலையும் செய்ய சொல்லி உசுர வாங்குறது போதாது என்று உன் பங்குக்கு நீயும் படுத்துறியே டா இதெல்லாம் நியாயமாடா என பாவமாக கேட்க...
யோவ் போலீஸ் என்னை தான் கட்டுவேனு ஒத்த காலில் நின்ன இல்லை அப்போ இதையெல்லாம் நீ அனுபவித்து தான் யா ஆகணுமென்ற இளமதி டீ எடுத்துட்டு வரட்டுமா ணா என்க,ஹம் என்றவன் சோட்டு என்று மருமகனை நோக்கி கையை நீட்டினான்.
நிலவன்-இளமதியின் புதல்வன் இளம்பரிதியோ மாமா என்று ஓடி வர மருமகனை தூக்கி சுற்றியவன்,ஏன் சோட்டு இன்றைக்கு உங்கப்பன் என்ன வேலை செஞ்சானென்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
குழந்தையோ அதோட பிஞ்சு விரலால் கன்னத்தில் தட்டி யோசிப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பு வர,ஹம் மாடில சவிதா ஆன்ட்டிகிட்ட உம்மா உம்மானு அப்பா சொன்னாங்களென்று குழந்தை வாயை மூடுவதற்குள் அய்யோ என்னும் நிலவனின் அலறல் சத்தம் கேட்டு மாறன் பார்க்க சில அடி தூரத்தில் சில்வர் சொம்பு ஒன்று தரையில் சுத்திக் கொண்டிருந்தது.
மிகச் சிறப்பு என்றவன் சோட்டு நம்ம போய் பேக்கிங் பண்ணலாம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம பிஷ்ஷ்ஷ் போறோம் என்றவன் பிளைட் போல குழந்தைக்கு ஆக்சன் பண்ணி காட்ட, போகலாமே என்று குழந்தையும் குதுகலிக்க,நிலவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த மாறன்,நடக்க வேண்டியதை இனிமே உன் அம்மா பார்த்துப்பா என்று சொல்லிக் கொண்டு குழந்தையோடு அவனது அறைக்குள் சென்றான்.
மன்னார்குடி:
நள்ளிரவு.....
தேக்குமர கட்டிலில் படுத்துக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு வேண்டும் வேண்டும் என்ற குரல் எதோ பாதாளத்தில் இருந்து கேட்பது போல இருக்கவும்,தூக்கத்திலிருந்தவாறு இடது பக்கம் திரும்பி படுத்தவளை ஜன்னலுக்கு வெளியே நின்ற உருவமோ கண்களில் கொலைவெறி மின்ன,பழிவாங்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தது...
அப்பொழுது அனலான காற்று தன் மேல் படுவதை தூக்கத்திலிருந்தவள் உணர என்ன இதுயென்று அரை விழிகள் திறந்தவாறு நெற்றியை தடவியவள்,பேன் சுற்றுதா என்று பாதி திறந்த விழிகள் மூலமாக பார்க்கும்போது,கோர பற்கள் நீண்டிருக்க வாயெல்லாம் ரத்தமாக அவள் கழுத்தை பிடிக்க வருவது போல கைகளை அவளை நோக்கி நீட்ட,அரண்டுபோய் கட்டிலிலிருந்து கீழே விழுந்தாள்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த சரோஜாவோ பதறி அடித்து எழுந்து வந்து கவி கவி என்று உள் பக்கமா பூட்டியிருக்கும் ரூம் கதவை தட்ட அதில் நிகழ்விற்கு வந்தவள் மாம் என்று வேகமாக போய் கதவை திறக்க உள்ளே வந்தவரோ என்னடி ஆச்சு?
எதுக்கு இப்படி கத்துன?.
அம்மா அம்மா என அடுத்த வார்த்தை பேச முடியாமல் அரற்றியவள் தாயின் பின்னால் போய் ஒளிந்து கொண்டு, சீலிங் பேனை நோக்கி கையை நீட்டினாள்.
மகளின் உடல் நடுங்குவதை வைத்து, கவி ரொம்ப பயந்திருக்கிறாள் என்பது புரிந்த சரோஜா அவள் கை நீட்டிய திசையில் பார்க்க பேன் தான் சுற்றிக் கொண்டிருந்தது.
ப்ச்..... கண்ட நேரத்துல கண்ட கண்ட படம் பார்க்காத,புக் படிக்காதன்னு சொன்னா என்னைக்குடி கேட்டு தொலைகிற அறிவு கெட்டவளே...
தினமும் உன் கூட இதே தலைவலியா இருக்கு.எத்தனை வாட்டி சொல்றேன் பேய் படம் பார்க்காத பேய் கதை எல்லாம் படிக்காதன்னு என்னைக்காச்சும் கேக்குறியா என்று திரும்பி நின்று மகளை பார்த்து சரோஜா கத்த...