Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 711
- Thread Author
- #1
சொல்லுங்க மிஸ்டர் வேதநந்தன் உங்களுக்கும் சந்திரிகாவிற்கும் என்ன தொடர்பு?என்க...அடேய் என்று பல்லை கடித்தவர் பின்னர் தனது நெற்றியை தடவி விட்டு,சந்திரிகா நம்ப எஸ்டேட்ல வேலை பார்த்த பொண்ணுதான்.நான் அவள மனசார விரும்பினேன். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன் அந்த நேரத்துல தான் எனக்கு போலீஸ் ட்ரைனிங் போட்டிருந்தாங்க நான் ஹைதராபாத்துக்கு வந்துட்டேன்.
சரி ட்ரைனிங் முடிச்சிட்டு வேலையோட போய் அம்மாகிட்ட சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பல கனவுகளோடு நானும் இருந்தேன். ட்ரைனிங்கும் முடிஞ்சுது முதல் போஸ்டிங் ஜம்மு காஷ்மீரில் போட்டுருந்தாங்க.
விஷயத்தை அம்மாகிட்ட சொல்ல நானும் ஆசையா ஊருக்கு போனால் நம்ம வீட்ல ஒரு ஒன்றரை வயசு பொண் குழந்தை நிலமாறனோடு ஓடியாடி விளையாடிக்கிட்டு இருந்துச்சு.
யாரோட குழந்தைமா என்று கேட்கும் போது சந்திரிகாவுடைய குழுந்தைனு அம்மா சொல்லவும் எனக்கு பேரிடி தலையில் விழுந்தது போல இருந்துச்சு .
சந்திரிக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க ஆமாப்பா விபத்துல அந்த பையன் இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க..
அதைக் கேட்ட உடனே நான் சந்திரிகாவை காதலிச்ச விஷயத்தையும்,அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவதையும் சொல்ல அம்மாவும் அதை கேட்டு சந்தோஷப்பட்டார்கள்.சரி சந்திரிகா கிட்ட நானே இதை பத்தி பேசுறேன்னு சொன்னாங்க..
நானும் சரி மா என்று சொல்லிட்டு அங்க இருந்து ஜம்முக்கு போயிட்டேன் கொஞ்ச நாள் கழிச்சு அம்மா கிட்ட இருந்து போன் வந்தது.வீடு தீ பிடிச்சதில் சந்திரிகாவும் குழந்தையும் இறந்துட்டாங்கன்னு..
அதைக் கேட்டு நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.அதன் பிறகு அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தினார்கள் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க தோணலை.
இதாலே அம்மாவுக்கும் எனக்கு சண்டை வந்தது. இங்க இருந்தா தானே கல்யாணத்தை பத்தி பேசுவீங்கன்னு சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு வந்துட்டேன்.அதன் பிறகு நான் ஊருக்கு போகவே இல்லையென்றார்.
இந்த டெரர் பேஸ்குள் இப்படி ஒரு காதல் மன்னனா என்று மாறன் கேட்க காதலிச்சு பாருடா அப்பதான் அதோட வலியும் சுகமும் தெரியும் என்றவர் பிறகே சந்திரிகாவின் பக்கத்தில் இருக்கும் போட்டோவை பார்த்தவர் இது இது நமது பக்கத்து எஸ்டேட் சதாசிவம் தானே என்வும் ஆமாம் அந்த அயோக்கியன் தான் என்றனர்..
சந்திரிகாவுக்கும் இவனுக்கும் என்னப்பா சம்பந்தம் இருக்கென்று அவர் கேட்க,நீயே டைரியை படிச்சு பாரு மாமா என்றான்.
வேதநந்தனும் மருமகன் சொன்னதைக் கேட்டு முழுவதுமாக படித்து முடித்து அதிர்ந்து போய் இருவரையும் பார்த்தவர் இவ்வளவு சம்பவம் நடந்திருக்கா?
ஓஓஓ காட்...
அப்ப அந்த பொண்ணு சதாசிவத்தை தேடி கோத்தகிரிக்கு போயிருக்கணும் இல்லையா என்க,அப்படி தான் இருக்கணும் மாமா.அதும் இல்லாம அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசினோம்.அவர் சென்னை பிளைட்ல ஏத்திவிட்டேன் என்று சொன்னாரு.ஆனா அந்த பொண்ணு பெங்களூருக்கு வந்திருக்கு என்க..இது என்னடா புது குழப்பமா இருக்கு என்றார்.
ஆமாம் மாமா...உன் ஊருக்கு போனாதான் என்ன நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.எங்க ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது இல்லையா.அங்கு இருப்பவங்களுக்கு அடையாளம் தெரியாது.
அதனால் நாங்க வேலை கேட்டு போற போல போறோம்.ஆமாம் நாங்க ரெண்டு பேரும் போலீஸா இருக்கிற விஷயம் அந்த வேலன் குடும்பத்துக்கு தெரியுமா என்றான்..
அது எப்படி டா தெரியாம இருக்கும்?
நிலமாறனுக்கு சதாசிவத்தோடு பொண்ணு கவியை தாண்டா அம்மா கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டு இருக்காங்க என்க...
என்னப்பா சொல்ற என்று நிலவன் அதிர,ஆமாண்டா அப்படி தான் நான் கேள்விப்பட்டேன்.கணக்குப்பிள்ளை பரந்தாமன் தான் சொன்னாரு என்கவும்,ஆஹ இங்கு நடக்கிற விஷயத்தையெல்லாம் ஒட்டு கேட்டுகிட்டு தான் இருக்கியா என்றான்.
நாலு மாசத்துக்கு ஒருவாட்டி போன் பண்ணி பொதுவா எல்லாரையும் விசாரிப்பேன்.வேற ஒன்னும் இல்லை என்றவர் நம்ம நிச்சயதார்த்த பங்ஷன் இருக்கு.அதை முடிஞ்ச பிறகு அடுத்தது இத பத்தி என்ன ஸ்டெப் எடுக்கலாம்னு முடிவு பண்ணலாம் இப்ப நீங்க போய் படுங்க என்றவர் சந்திரிகாவை நினைத்து வேதனைப்பட்டார்.
விடியல் தொடங்கியது...காலை சாப்பாடு சாப்பிட்டவர்கள் பாபநாசத்தை நோக்கி சென்றனர் இவர்கள் வருவதாக போன் பண்ணி சொல்லிவிட வேதவள்ளியோ அனைவருக்கும் பிடித்த சாப்பாட்டை வேலையாட்களிடம் சொல்லி தயாராக வைத்திருந்தார்.
வந்தவரிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க மாறன் தனது பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நல்லா இருப்பா என்றார்.உடம்பு எப்படி இருக்கு பாட்டி என்கவும் நல்லா இருக்கு யா உன் கல்யாணத்தை பார்த்துவிட்டால் நிம்மதியா இந்த உசுரு போயிடும் என்கவும் ஏன் இப்படி சொல்ற என்று மாறன் கவலையாக கேட்க உடம்பு அப்படி இருக்குப்பா என்றார்.
வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட அம்மா பேசாமல் இருப்பதை பார்த்தவன் அம்மா என்று போய் அவரை தோளுடன் அணைக்க என்னை தொடாத டா என்று மகனின் கையை தட்டி விட்டார்.
பின்ன நான் தொடாமல் உன் புருஷன் தான் உன்ன தொடணுமா என்கவும் டேய் என்று வேதவல்லி பல்லை கடிக்க பின்ன என்ன?. ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பையன் வந்திருக்கிறானே ஆசையா கொஞ்சுறியா?அதை விட்டு இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துருக்கியே நல்லாவா இருக்கு என்று மாறன் கேட்க எத்தனை முறை உன்னை ஊருக்கு வா வான்னு சொல்றேன் உனக்கு வேலை தான் ரொம்ப முக்கியமா போயிடுச்சா என்று சத்தம் போட்டார்.
சரி சரி விடு அதான் உனக்கு புடிச்ச புள்ளைய கல்யாணம் பண்ணிக்க போறேன் வேற என்ன வேணும் என்க,அதுக்காக தான் போனால் போகட்டும்னு மன்னிச்சு விடுறேன் என்று மகனை அணைத்து முத்தமிட்டவர் வேலை எல்லாம் எப்படி இருக்கு?ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் இழுத்து போட்டுக்காதீங்க என்க,இதை உன் அண்ணன் கிட்ட சொல்லு என்கிட்ட சொல்லி என்ன புண்ணியம் என்றான்.
நிச்சயதார்த்த நாளும் வந்தது.
மாலை ஆறு டூ எட்டு நிச்சயதார்த்த நேரம் என்பதால் சொந்த பந்தங்களோடு இரண்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டு சூடாமணி நோக்கி புறப்பட்டனர்.நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அவரவருக்கான அறையில் இருவரும் தயாராகினர்.
கவர்னர் வருவதால் போலிஸ் பாதுகாப்பும் அங்கு கெடுபிடியாக இருந்தது.மஞ்சுவுக்கு இதையெல்லாம் பார்த்து மாப்பிள்ளை யாரா இருக்கும் என்று யோசனையாக,வெளியே இருந்த போர்டில் போய் பெயரை பார்த்தவள் இளமாறன் ஐபிஎஸ் என்று இருக்கவும் எதேஏஏஏ போலீசாஆஆஆ...
அடிப்பாவி போலீஸ்காரன் பொண்டாட்டியாடி நீ என்று சிரித்துக் கொண்டே தோழியின் அறைக்குள் வர அங்கே பியூட்டிஷனும் அவளுக்கு அலங்காரம் பண்ணி கொண்டிருந்தார்.
மாப்பிள்ளை யாரு தெரியுமா என்கும் போது பொண்ணை மேடைக்கு கூப்பிடுறாங்க என்று அவளின் பெரியப்பா மருமகள் வந்து சொல்லவும் மலர்விழியும் மஞ்சுவோடு மேடைக்கு வர, அவளுக்கானா புடவை மற்ற பொருட்கள் உள்ள தாம்பாளத்தை வேதவள்ளியும் மதிவாணனும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ரூமிற்குள் வந்து தயாரானாள்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க அங்கிருந்த ஐயரே பொண்ணு மாப்பிள்ளையை வர சொல்லுங்க நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது என்றார்.
முதலில் இளமாறன் மேடைக்கு வந்தான்.அதன் பின்னர் மலர்விழி வர டேய் மாப்பு தங்கச்சியை பாருடா என்கவும் இளமாறன் திரும்பிப் பார்க்க அங்கே அழகு பதுமை போல் வருபவளை பார்த்து ஒரு நொடி அசந்து போனான்.
மாப்பு ஜொல்லு வடியுது வாய மூடுடா என்று நிலவன் சொல்லிய பிறகே அவள் பக்கம் இருந்து வலுக்கட்டாயமாக பார்வையை திருப்பியவன் சும்மா பார்த்தேன் டா.நீ ஓவராக பண்ணாத என்றான்.
என்ன சமாளிக்கிறியாக்கும் உன் முகர கட்டையில தான் நல்லா தெரியுதே என்று நிலவனும் சிரித்தான்.
இளமாறனை பார்த்த மஞ்சுவோ இவனா என்று அதிர்ந்து போய் தோழியிடம் சொல்ல போவதற்குள் மலர்விழியோ மேடைக்கு சென்று விட்டாள்.தம்பி மாலை எடுத்து பொண்ணு கழுத்தில் போடுங்கள் என்க..
மாறனும் தாம்பாளத்தில் இருந்த மாலை எடுத்து கீழே குனிந்து கொண்டு நிற்பவளின் கழுதில் போட்டு விட்டான் அம்மாடி நீயும் எடுத்து போடுமா என்க அவளும் எடுத்தவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் எட்டி மாறனின் கழுத்தில் போட,மோதிரத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.
அவளை நோக்கி கையை நீட்ட, நீண்ட விரல்களை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல் அவன் விரலில் பட்டும் படாமலும் மோதிரம் போட,தம்பி நீங்க போட்டு விடுங்கள் என்க,தனது இடக்கரத்தை தயங்கியபடி அவன் முன்பு நீட்டியவளின் இடது கையை பிடித்தவன் பஞ்சு போன்ற விரல்களின் மென்மையில் மாறனின் மனம் ஒரு நொடி ஆடி தான் போனது.
விரலில் மோதிரம் போட போக அவளோ கீழே குனிந்து கொண்டே இருக்கவும் நீ நிமிர்ந்து பார்க்காமல் இந்த மோதிரத்தை நான் போட மாட்டேன் என்று இளமாறனும் அப்படியே நிற்க சிறிது நொடி சென்று நிமிர்ந்து பார்த்தவளோ நீயா என்று அதிர்ந்தாள்.
அதற்குள் இளமாறன் அவள் கையில் மோதிரத்தை போடவும் அதில் சுய நினைவுக்கு வந்தவள் நோஓஓஓஓ என்று கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்தவள் பொறுக்கி ராஸ்கல் உனக்கு நான் கேக்குதாடா என்று எட்டி இளமாறனின் சட்டையை பிடித்து கத்த,அங்கிருந்தவர்களோ என்னடா நடக்குது என்று அதிர்ந்து போனார்கள்...
அய்யோ அப்பா இவன் சரியான பொம்பள பொறுக்கி பா.இவனையா எனக்கு மாப்பிள்ளையா பார்த்திருக்கீங்கள் என்று கத்த,ஸ்டாப் இட் என்ற குரல் கேட்க அந்த இடம் குண்டு ஊசி போட்டால் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியானது.
குரல் வந்த திசையில் அனைவரும் பார்க்க அங்கே சாலாட்சி பாட்டியும் நிலமாறனும் நின்று கொண்டிருந்தனர்.வேகமாக மேடை ஏறி வந்தவன் மாறனின் சட்டையை பிடித்து நிற்கும் மலர்விழியை ஒரு பார்வை பார்த்தவன் ஒழுங்கு மரியாதையா கையை எடுங்க என்றான்.
அவன் குரலில் இருந்த கோவமோ மலர்விழிக்கு பயத்தை கொடுக்க பட்டென்று கையை எடுத்தாள்.எதுவும் சொல்லாமல் அவளை ஒரு தீப் பார்வை பார்த்தவன் தனது அண்ணனின் சட்டையை தட்டி விட்டு என்ன நடக்குது இங்க?.யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க?.இன்னொரு வார்த்தை பேசினீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று கையை நீட்டி எச்சரிக்க,மலர்விழி ஏம்மா இப்படி நடத்துக்குற என்று புகழேந்தி கத்தினார்...
அய்யோ அப்பா இவன் ஒரு பொம்பளை பொறுக்கி பா...இவன் என்று தயங்கியவள் கண்ணை மூடி திறந்து விட்டு 5 வருஷத்துக்கு முன்பு டெல்லியில் ஒரு வீட்டில் பிராஸ்டியூட் கேஸ்ல போலீஸ் அரெஸ்ட் பண்ணும்போது இவனை நாங்கள் பார்த்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்ட இளமாறன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி விசிறி எறிந்தவன் பக்கத்தில் இருந்தவளை பார்க்க அந்த பார்வையே அவளுக்கு நடுக்கத்தை தந்தது.
பின்னர் அங்கிருந்த தனது அப்பா அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக இறங்கி மண்டபத்தில் இருந்து வெளியேறினான்.
என்ன சொன்னீங்க?
திரும்ப சொல்லுங்கள் என்று நிலமாறன் கேட்க ஏன் இத்தனை பேருக்கு காதில் விழுந்தது உங்களுக்கு விழவில்லையா
சரி ட்ரைனிங் முடிச்சிட்டு வேலையோட போய் அம்மாகிட்ட சொல்லி அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு பல கனவுகளோடு நானும் இருந்தேன். ட்ரைனிங்கும் முடிஞ்சுது முதல் போஸ்டிங் ஜம்மு காஷ்மீரில் போட்டுருந்தாங்க.
விஷயத்தை அம்மாகிட்ட சொல்ல நானும் ஆசையா ஊருக்கு போனால் நம்ம வீட்ல ஒரு ஒன்றரை வயசு பொண் குழந்தை நிலமாறனோடு ஓடியாடி விளையாடிக்கிட்டு இருந்துச்சு.
யாரோட குழந்தைமா என்று கேட்கும் போது சந்திரிகாவுடைய குழுந்தைனு அம்மா சொல்லவும் எனக்கு பேரிடி தலையில் விழுந்தது போல இருந்துச்சு .
சந்திரிக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க ஆமாப்பா விபத்துல அந்த பையன் இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க..
அதைக் கேட்ட உடனே நான் சந்திரிகாவை காதலிச்ச விஷயத்தையும்,அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவதையும் சொல்ல அம்மாவும் அதை கேட்டு சந்தோஷப்பட்டார்கள்.சரி சந்திரிகா கிட்ட நானே இதை பத்தி பேசுறேன்னு சொன்னாங்க..
நானும் சரி மா என்று சொல்லிட்டு அங்க இருந்து ஜம்முக்கு போயிட்டேன் கொஞ்ச நாள் கழிச்சு அம்மா கிட்ட இருந்து போன் வந்தது.வீடு தீ பிடிச்சதில் சந்திரிகாவும் குழந்தையும் இறந்துட்டாங்கன்னு..
அதைக் கேட்டு நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.அதன் பிறகு அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தினார்கள் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க தோணலை.
இதாலே அம்மாவுக்கும் எனக்கு சண்டை வந்தது. இங்க இருந்தா தானே கல்யாணத்தை பத்தி பேசுவீங்கன்னு சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு வந்துட்டேன்.அதன் பிறகு நான் ஊருக்கு போகவே இல்லையென்றார்.
இந்த டெரர் பேஸ்குள் இப்படி ஒரு காதல் மன்னனா என்று மாறன் கேட்க காதலிச்சு பாருடா அப்பதான் அதோட வலியும் சுகமும் தெரியும் என்றவர் பிறகே சந்திரிகாவின் பக்கத்தில் இருக்கும் போட்டோவை பார்த்தவர் இது இது நமது பக்கத்து எஸ்டேட் சதாசிவம் தானே என்வும் ஆமாம் அந்த அயோக்கியன் தான் என்றனர்..
சந்திரிகாவுக்கும் இவனுக்கும் என்னப்பா சம்பந்தம் இருக்கென்று அவர் கேட்க,நீயே டைரியை படிச்சு பாரு மாமா என்றான்.
வேதநந்தனும் மருமகன் சொன்னதைக் கேட்டு முழுவதுமாக படித்து முடித்து அதிர்ந்து போய் இருவரையும் பார்த்தவர் இவ்வளவு சம்பவம் நடந்திருக்கா?
ஓஓஓ காட்...
அப்ப அந்த பொண்ணு சதாசிவத்தை தேடி கோத்தகிரிக்கு போயிருக்கணும் இல்லையா என்க,அப்படி தான் இருக்கணும் மாமா.அதும் இல்லாம அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசினோம்.அவர் சென்னை பிளைட்ல ஏத்திவிட்டேன் என்று சொன்னாரு.ஆனா அந்த பொண்ணு பெங்களூருக்கு வந்திருக்கு என்க..இது என்னடா புது குழப்பமா இருக்கு என்றார்.
ஆமாம் மாமா...உன் ஊருக்கு போனாதான் என்ன நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.எங்க ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப வருஷம் ஆகுது இல்லையா.அங்கு இருப்பவங்களுக்கு அடையாளம் தெரியாது.
அதனால் நாங்க வேலை கேட்டு போற போல போறோம்.ஆமாம் நாங்க ரெண்டு பேரும் போலீஸா இருக்கிற விஷயம் அந்த வேலன் குடும்பத்துக்கு தெரியுமா என்றான்..
அது எப்படி டா தெரியாம இருக்கும்?
நிலமாறனுக்கு சதாசிவத்தோடு பொண்ணு கவியை தாண்டா அம்மா கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டு இருக்காங்க என்க...
என்னப்பா சொல்ற என்று நிலவன் அதிர,ஆமாண்டா அப்படி தான் நான் கேள்விப்பட்டேன்.கணக்குப்பிள்ளை பரந்தாமன் தான் சொன்னாரு என்கவும்,ஆஹ இங்கு நடக்கிற விஷயத்தையெல்லாம் ஒட்டு கேட்டுகிட்டு தான் இருக்கியா என்றான்.
நாலு மாசத்துக்கு ஒருவாட்டி போன் பண்ணி பொதுவா எல்லாரையும் விசாரிப்பேன்.வேற ஒன்னும் இல்லை என்றவர் நம்ம நிச்சயதார்த்த பங்ஷன் இருக்கு.அதை முடிஞ்ச பிறகு அடுத்தது இத பத்தி என்ன ஸ்டெப் எடுக்கலாம்னு முடிவு பண்ணலாம் இப்ப நீங்க போய் படுங்க என்றவர் சந்திரிகாவை நினைத்து வேதனைப்பட்டார்.
விடியல் தொடங்கியது...காலை சாப்பாடு சாப்பிட்டவர்கள் பாபநாசத்தை நோக்கி சென்றனர் இவர்கள் வருவதாக போன் பண்ணி சொல்லிவிட வேதவள்ளியோ அனைவருக்கும் பிடித்த சாப்பாட்டை வேலையாட்களிடம் சொல்லி தயாராக வைத்திருந்தார்.
வந்தவரிடம் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க மாறன் தனது பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க நல்லா இருப்பா என்றார்.உடம்பு எப்படி இருக்கு பாட்டி என்கவும் நல்லா இருக்கு யா உன் கல்யாணத்தை பார்த்துவிட்டால் நிம்மதியா இந்த உசுரு போயிடும் என்கவும் ஏன் இப்படி சொல்ற என்று மாறன் கவலையாக கேட்க உடம்பு அப்படி இருக்குப்பா என்றார்.
வந்ததிலிருந்து தன்னிடம் ஒரு வார்த்தை கூட அம்மா பேசாமல் இருப்பதை பார்த்தவன் அம்மா என்று போய் அவரை தோளுடன் அணைக்க என்னை தொடாத டா என்று மகனின் கையை தட்டி விட்டார்.
பின்ன நான் தொடாமல் உன் புருஷன் தான் உன்ன தொடணுமா என்கவும் டேய் என்று வேதவல்லி பல்லை கடிக்க பின்ன என்ன?. ரெண்டு மூணு வருஷம் கழிச்சு பையன் வந்திருக்கிறானே ஆசையா கொஞ்சுறியா?அதை விட்டு இப்படி மூஞ்சியை தூக்கி வைத்துருக்கியே நல்லாவா இருக்கு என்று மாறன் கேட்க எத்தனை முறை உன்னை ஊருக்கு வா வான்னு சொல்றேன் உனக்கு வேலை தான் ரொம்ப முக்கியமா போயிடுச்சா என்று சத்தம் போட்டார்.
சரி சரி விடு அதான் உனக்கு புடிச்ச புள்ளைய கல்யாணம் பண்ணிக்க போறேன் வேற என்ன வேணும் என்க,அதுக்காக தான் போனால் போகட்டும்னு மன்னிச்சு விடுறேன் என்று மகனை அணைத்து முத்தமிட்டவர் வேலை எல்லாம் எப்படி இருக்கு?ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் இழுத்து போட்டுக்காதீங்க என்க,இதை உன் அண்ணன் கிட்ட சொல்லு என்கிட்ட சொல்லி என்ன புண்ணியம் என்றான்.
நிச்சயதார்த்த நாளும் வந்தது.
மாலை ஆறு டூ எட்டு நிச்சயதார்த்த நேரம் என்பதால் சொந்த பந்தங்களோடு இரண்டு பஸ்ஸில் ஏறிக்கொண்டு சூடாமணி நோக்கி புறப்பட்டனர்.நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அவரவருக்கான அறையில் இருவரும் தயாராகினர்.
கவர்னர் வருவதால் போலிஸ் பாதுகாப்பும் அங்கு கெடுபிடியாக இருந்தது.மஞ்சுவுக்கு இதையெல்லாம் பார்த்து மாப்பிள்ளை யாரா இருக்கும் என்று யோசனையாக,வெளியே இருந்த போர்டில் போய் பெயரை பார்த்தவள் இளமாறன் ஐபிஎஸ் என்று இருக்கவும் எதேஏஏஏ போலீசாஆஆஆ...
அடிப்பாவி போலீஸ்காரன் பொண்டாட்டியாடி நீ என்று சிரித்துக் கொண்டே தோழியின் அறைக்குள் வர அங்கே பியூட்டிஷனும் அவளுக்கு அலங்காரம் பண்ணி கொண்டிருந்தார்.
மாப்பிள்ளை யாரு தெரியுமா என்கும் போது பொண்ணை மேடைக்கு கூப்பிடுறாங்க என்று அவளின் பெரியப்பா மருமகள் வந்து சொல்லவும் மலர்விழியும் மஞ்சுவோடு மேடைக்கு வர, அவளுக்கானா புடவை மற்ற பொருட்கள் உள்ள தாம்பாளத்தை வேதவள்ளியும் மதிவாணனும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ரூமிற்குள் வந்து தயாரானாள்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க அங்கிருந்த ஐயரே பொண்ணு மாப்பிள்ளையை வர சொல்லுங்க நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது என்றார்.
முதலில் இளமாறன் மேடைக்கு வந்தான்.அதன் பின்னர் மலர்விழி வர டேய் மாப்பு தங்கச்சியை பாருடா என்கவும் இளமாறன் திரும்பிப் பார்க்க அங்கே அழகு பதுமை போல் வருபவளை பார்த்து ஒரு நொடி அசந்து போனான்.
மாப்பு ஜொல்லு வடியுது வாய மூடுடா என்று நிலவன் சொல்லிய பிறகே அவள் பக்கம் இருந்து வலுக்கட்டாயமாக பார்வையை திருப்பியவன் சும்மா பார்த்தேன் டா.நீ ஓவராக பண்ணாத என்றான்.
என்ன சமாளிக்கிறியாக்கும் உன் முகர கட்டையில தான் நல்லா தெரியுதே என்று நிலவனும் சிரித்தான்.
இளமாறனை பார்த்த மஞ்சுவோ இவனா என்று அதிர்ந்து போய் தோழியிடம் சொல்ல போவதற்குள் மலர்விழியோ மேடைக்கு சென்று விட்டாள்.தம்பி மாலை எடுத்து பொண்ணு கழுத்தில் போடுங்கள் என்க..
மாறனும் தாம்பாளத்தில் இருந்த மாலை எடுத்து கீழே குனிந்து கொண்டு நிற்பவளின் கழுதில் போட்டு விட்டான் அம்மாடி நீயும் எடுத்து போடுமா என்க அவளும் எடுத்தவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் எட்டி மாறனின் கழுத்தில் போட,மோதிரத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்.
அவளை நோக்கி கையை நீட்ட, நீண்ட விரல்களை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல் அவன் விரலில் பட்டும் படாமலும் மோதிரம் போட,தம்பி நீங்க போட்டு விடுங்கள் என்க,தனது இடக்கரத்தை தயங்கியபடி அவன் முன்பு நீட்டியவளின் இடது கையை பிடித்தவன் பஞ்சு போன்ற விரல்களின் மென்மையில் மாறனின் மனம் ஒரு நொடி ஆடி தான் போனது.
விரலில் மோதிரம் போட போக அவளோ கீழே குனிந்து கொண்டே இருக்கவும் நீ நிமிர்ந்து பார்க்காமல் இந்த மோதிரத்தை நான் போட மாட்டேன் என்று இளமாறனும் அப்படியே நிற்க சிறிது நொடி சென்று நிமிர்ந்து பார்த்தவளோ நீயா என்று அதிர்ந்தாள்.
அதற்குள் இளமாறன் அவள் கையில் மோதிரத்தை போடவும் அதில் சுய நினைவுக்கு வந்தவள் நோஓஓஓஓ என்று கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்தவள் பொறுக்கி ராஸ்கல் உனக்கு நான் கேக்குதாடா என்று எட்டி இளமாறனின் சட்டையை பிடித்து கத்த,அங்கிருந்தவர்களோ என்னடா நடக்குது என்று அதிர்ந்து போனார்கள்...
அய்யோ அப்பா இவன் சரியான பொம்பள பொறுக்கி பா.இவனையா எனக்கு மாப்பிள்ளையா பார்த்திருக்கீங்கள் என்று கத்த,ஸ்டாப் இட் என்ற குரல் கேட்க அந்த இடம் குண்டு ஊசி போட்டால் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியானது.
குரல் வந்த திசையில் அனைவரும் பார்க்க அங்கே சாலாட்சி பாட்டியும் நிலமாறனும் நின்று கொண்டிருந்தனர்.வேகமாக மேடை ஏறி வந்தவன் மாறனின் சட்டையை பிடித்து நிற்கும் மலர்விழியை ஒரு பார்வை பார்த்தவன் ஒழுங்கு மரியாதையா கையை எடுங்க என்றான்.
அவன் குரலில் இருந்த கோவமோ மலர்விழிக்கு பயத்தை கொடுக்க பட்டென்று கையை எடுத்தாள்.எதுவும் சொல்லாமல் அவளை ஒரு தீப் பார்வை பார்த்தவன் தனது அண்ணனின் சட்டையை தட்டி விட்டு என்ன நடக்குது இங்க?.யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க?.இன்னொரு வார்த்தை பேசினீங்க என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று கையை நீட்டி எச்சரிக்க,மலர்விழி ஏம்மா இப்படி நடத்துக்குற என்று புகழேந்தி கத்தினார்...
அய்யோ அப்பா இவன் ஒரு பொம்பளை பொறுக்கி பா...இவன் என்று தயங்கியவள் கண்ணை மூடி திறந்து விட்டு 5 வருஷத்துக்கு முன்பு டெல்லியில் ஒரு வீட்டில் பிராஸ்டியூட் கேஸ்ல போலீஸ் அரெஸ்ட் பண்ணும்போது இவனை நாங்கள் பார்த்தோம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
அவள் சொன்னதை கேட்ட இளமாறன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி விசிறி எறிந்தவன் பக்கத்தில் இருந்தவளை பார்க்க அந்த பார்வையே அவளுக்கு நடுக்கத்தை தந்தது.
பின்னர் அங்கிருந்த தனது அப்பா அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக இறங்கி மண்டபத்தில் இருந்து வெளியேறினான்.
என்ன சொன்னீங்க?
திரும்ப சொல்லுங்கள் என்று நிலமாறன் கேட்க ஏன் இத்தனை பேருக்கு காதில் விழுந்தது உங்களுக்கு விழவில்லையா