Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 706
- Thread Author
- #1
டைரியின் தொடர்ச்சி:
அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா என்று சதாசிவம் பேச தயங்க சின்னய்யா சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க பாட்டி வேற என்னை காணும்னு தேடுவாங்க.
நேரம் ஆகுது நான் வீட்டிற்கு போகணும் என்று தைரியத்தை வர வைத்துக் கொண்டு சந்திரிகா சொல்ல,உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று சதாசிவம் விஷயத்தை சொல்ல அதை கேட்டவளோ அதிர்ந்து பின்னர் அவனை நிமிர்த்து பார்த்து முறைத்தாள்.
அவனோ அவளை இமைக்காமல் காதலோடு பார்த்தவன் நிஜமா தான் சொல்றேன் என்க, எனக்கு அதுபோல எண்ணமெல்லாம் கிடையாது.இனி இப்படி என்கிட்ட பேச வந்தீங்கள் மரியாதை கெட்டுவிடும் என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
சதாசிவமும் படித்து முடித்துவிட்டு வந்து எஸ்டேட் பொறுப்பை எடுத்துக் கொள்ள தினமும் பக்கத்து எஸ்டேட்டிற்கு வேலைக்கு போகும் சந்திரிகாவை பின் தொடர்ந்து தனது காதலை சொல்ல மட்டும் மறக்கவில்லை.
அவளும் முடியவே முடியாது என்று திட்டி விட்டு கண்டு கொள்ளாமல் இருக்க அவனும் தனது முயற்சியில் இருந்து தளரவில்லை.
ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சிவம் மயங்கிய கீழே விழ, அதே இடத்தில் அவரின் உயிரும் போய்விட்டது.
தாத்தாவின் இறப்போ சந்திரிகாவை வெகுவாக பாதித்தது.நினைவு தெரிந்த நாளிலிருந்து தாத்தாவாக இருந்தது விட தந்தையாக இருந்தது தான் அதிகம். அந்த ஜீவன் இப்பொழுது இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டு ஒடுங்கிப் போனாள்.
தானும் கண்ணை மூடுவதற்குள் பேத்தியை ஒருவன் கையில் ஒப்படைத்திடனும் என்று வைராக்கியத்தோடு பாப்பத்தியும் உள்ளுக்குள் இருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு நடமாடியவர் தெரிந்தவர்கள் இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுமாறு சொல்லி வைக்க இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சதாசிவமும் மறுநாள் சந்திரிகா வேலைக்கு வராளா என்று பார்க்க அவளோ உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் வீட்டில் இருந்து விட்டாள்.
பின்னர் ஒரு முடிவு எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சந்திரிகாவின் வீட்டின் தோட்டத்து வழியாக வந்தவன் கதவை தட்ட உள்ளே படுத்திருந்தவளோ அம்மாச்சி தான் என்று நினைத்துக் கொண்டு கதவை போய் திறந்தவள் அங்கு இருந்த சதாசிவத்தை கண்டு அதிர்ந்தவள் வேகமாய் கதவை சாத்த முயல...
எட்டி அவளின் கையை பிடித்தவன் ஏன் வேலைக்கு வரல என்ன ஆச்சு உனக்கு என கேட்கும் போதே அவள் கையிலிருந்த சூடு உடல் நிலை சரியில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.
செல்லம் உனக்கு என்னடி ஆச்சு என்று அவள் கன்னத்தை பிடித்து கேட்க இத்தனை நாள் வெறுப்பாக இருந்தவளுக்கு இந்த அன்பான பேச்சைக் கேட்டு முகத்தை திருப்பிக்க முடியவில்லை.
கீழே குனிந்து கொண்டு உடம்பு சரியில்லை என்று சொல்லவும் கையை விட்டவன் வந்த வழியிலே வேகமாக போனவன் அரை மணி நேரத்தில் அவளுக்கு தேவையான ஜுரம் மருந்தையும் சாப்பிடுவதற்காக பிரட்டையும் வாங்கிட்டு வந்து கொடுத்து சிறிது நேரம் இருந்தவன் நான் விளையாட்டுக்கு சொல்லவில்லை மா.
உண்மையிலேயே நான் உன்னை காதலிக்கிறேன்.ஏழை பணக்காரன் அந்த வித்தியாசத்தை நான் பார்ப்பதில்லை தயவுசெய்து என் காதலை ஏற்றுக்கொள் என்று கெஞ்ச
பெண்ணின் மனமும் இளகியது.
பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் அவர்கள் காதலை வளர்த்தனர்.நாட்களும் மாதங்களாக செல்ல அறசல் புறசலாக இந்த விஷயம் சதாசிவத்தின் அப்பா வேலனுக்கு தெரிய மகனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பித்தார்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சதாசிவம் நள்ளிரவில் வீட்டை விட்டு வந்தவர் சந்திரிகாவை கூப்பிட, யாரென்று பாப்பாத்தி எழுந்து வந்தவர் அங்கு இருந்தவனிடம் சொல்லுங்கள் சின்னையா என்ன விஷயம் என்றார்.
அவரிடம் விஷயத்தை சொல்லவும் தலையில் இடி விழுந்தது போல் ஆனார். ஆனால் பேத்தியின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பை பார்த்தவர் கடவுள் விட்ட விதி இதுதான் போல எங்கேயாவது போய் வாழுங்கள் என்று கண்ணீருடன் ஆசிர்வாதம் செய்ய இரவோடு இரவாக அவர்கள் இருவரும் கோத்தகிரி விட்டு வெளியேறினார்கள்.
விடியலும் பலவித போராட்டங்களோடு ஆரம்பமானது.வேலன் இன்று மகனுக்கு பொண்ணு பார்க்க போக வேண்டும் என்று தனது மனைவி சரளாவிடம் சொல்லிக் கொண்டிருக்க சதா இன்னும் எந்திரிச்சு வரலையே என்றார்.
காய்கறிகள் லோடு ஏற்றிவிட்டு நைட்டு 11 மணிக்கு மேல தான் வந்தான்னு மேனேஜர் சொன்னாரு தூங்கிட்டு இருப்பான் போய் பாரு.10 மணிக்கு நல்ல நேரம் இருக்கு அந்த நேரத்தில் கிளம்பலாம் என்றவாறு காபியை குடித்துக் கொண்டிருக்க,சரளாவும் படியில் ஏறி மகன் ரூமிற்கு வந்து கதவை தட்ட அதுவோ வெளியே தாழ்ப்பாள் போட்டிருப்பது தெரிந்தது.
என்ன வெளியே பூட்டியிருக்கு என கதவை திறந்து உள்ளே போக அங்கே டிபாயின் மேல் மடிக்கப்பட்ட வெள்ளை காகிதமும் அதன் மேல் ஃப்ளவர் வாஷ் இருந்தது.
அதை எடுத்து என்னவென்று படிக்க எனக்கு பிடித்தவளோடு நான் போகிறேன் என்னை தேட வேண்டாம் என்று இருந்தது.அய்யோ சதாயென கத்திக் கொண்டு கீழே வந்தவர் கணவரிடம் லட்டரை நீட்டினார்.
படித்து பார்த்து கிழித்து போட்டவர் அவனை பத்தி தெரிஞ்சுதாண்டி கல்யாண ஏற்பாடு பண்ணுனேன். பக்கத்துல வேலை செய்ற அந்த பிச்சைக்கார நாயை உன் மவன் காதலிக்கிறான் டி.
பருவத்தில் பன்னி குட்டி கூட அழகாக தான் தெரியும்.என்னத்த காட்டி மயக்கினான்னு தெரியலையே என்று அசிங்கமாக பேச கணவரின் வார்த்தைகளை கேட்டு சரளாவுக்கு ஆத்திரமாக வந்தது.
கொஞ்சம் கூட உங்களுக்கு வெக்கமா இல்லையா இப்படியெல்லாம் பேசுறீங்களே என்க,உண்மைதானே சொன்னேன்.நான் வயசு பையனா இருக்கும்போது நீயும் இப்படிதாண்டி இருந்து என்னை மயக்குன என்க..
ச்சை என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் போனவர் என் பையன் எங்க இருந்தாலும் நல்லபடியா இருக்கட்டும் கடவுளே நீங்கதான் அவனுக்கு புடிச்ச வாழ்க்கை கிடைக்க வழி செஞ்சுருக்கீங்க.அவன் ஆசைப்பட்ட போலயே குடும்பமா வாழட்டும் என்று வேண்டிக்கொண்டார்.
வேலனோ கையில் இருந்து பீங்கான் கப்பை கீழே போட்டு உடைத்தவர் வேகமாக வெளியே வந்து அங்கிருந்த டிரைவரிடம் காரை எடுக்க சொல்லி கோத்தகிரியில் இருக்கும் சந்திரிகாவின் வீட்டை நோக்கி வண்டியை ஓட்ட சொன்னார்.
அரை மணி நேரத்தில் குடிசை பகுதிக்கு வந்தவர் கார் உள்ளே போகாது என்பதால் தெருமுனையிலே நிறுத்திவிட்டு போய் அந்த வீட்ல இருக்கிற பாப்பாத்தியை கூப்பிட்டு வா என்றான்.
கூட வந்த அடியாள்களில் ஒருவனோ அந்த குடிசை பகுதியில் நடந்து போய் சந்திரிகா வீட்டின் முன்பு நின்று வீட்டில் யாரு வாங்க என்க...பாப்பாத்தியோ யாரு என்று வெளியே வந்தார்.
அவரைப் பார்த்தவன் ஐயா வரச் சொல்றாரு என கத்திட்டு போனான்.
இந்த ஆளுக்கு தெரிஞ்சிருச்சா என்னன்னு தெரியலையே என்று பாப்பாத்தி நடுங்கி கொண்டே வர தூரத்தில் வருபவர் காய்ச்சலில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட வேலன் இந்த கிழவி கிட்ட என்னத்த கேக்குறது என்று யோசித்தான்.
நடுங்கிக்கொண்டே வந்த பாப்பாத்தி வணக்கங்க ஐயா என்று கையெடுத்து வேலனை பார்த்து கும்பிட,உன் பேத்தி எங்க இருக்கா என்று கேட்க என் பேத்தியா??வீட்ல சோறு ஆக்குறாயா என்கவும் அப்படியா போய் கூட்டிட்டு வா என்றான்.
பாப்பாத்தி பாட்டியும் அங்கிருந்து தனது குடிசைக்குள் வந்தவர் பேத்தியை அழைத்துக் கொண்டு வர சந்திரிகாவை பார்த்த வேலன் இவ இங்க இருக்கிறாள்?அப்ப இவன் யாரை கூட்டிட்டு ஓடி போனான்?.
நான் தான் மத்தவங்க பேச்சு கேட்டுட்டு என் மகனை தப்பா நினைச்சிட்டேனா? என் பையன் கோடீஸ்வரன் வீட்டு ராஜா. தராதரம் தெரியாம போயும் போய் இந்த பிச்சைக்கார குடும்பத்தில் உள்ளவளையா காதலிப்பான்?.
ஆளு கொஞ்சம் பார்க்க தளதளவென்று இருக்கிறாள்.அதனால தான் நானும் இவள் தான் அவளென்று நம்பிருக்கேன் என்று அவன் வயதுக்கு மீறியும் சந்திரிகாவை ரசித்துப் பார்த்தான்.
சந்திரிகாவோ வணக்கம் பெரியைய்யா.வர சொன்னிங்களே...ஆமா புள்ள வீட்ல கொஞ்சம் சுத்தம் பண்ற வேலை இருக்கு பெரியம்மா கூட வேலை செய்.
சின்னய்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது என்க..அவளோ முகம் மாறாமல் செய்து கொடுக்கிறேன் என்கவும் இந்தா பணத்தை வைத்துக்கொள் என்று பாக்கெட்டில் இருந்த சிறிது பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு காரை எடுடா என்ற வேலனுக்கு ஒன்றுமே புரியவில்லையே.என்னடா நடக்காது என்று மண்டை காய்ந்தது.
வேகமாக வீட்டிற்குள் வந்த சந்திரிகா பாட்டி என்க...ஏத்தா எங்கேயோ போய் வாழுங்கன்னு சொன்னேனே எப்படி வந்த? சின்னையா எங்கே?என்றார்.
பின்னர் பாட்டியிடம் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.இருவரும் கோத்தகிரி விட்டு வெளியே வந்தவர்கள் சற்று தூரத்தில் போய் நின்று கொண்டு எதாச்சும் லாரி வருதா என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது சந்திரிகாவோ சின்னய்யா நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைக்காதீங்க என்றாள்.
என்னம்மா என்க..இப்போதைக்கு கையில ஒரு வேலையும் இல்ல,எங்க போயி நம்ம வாழுறது?உங்க அப்பாவுக்கு தெரிஞ்சாக்க என் பாட்டியை கொன்னுடுவார்.
எனக்கென்று இருக்கிறது அவங்க ஒரு ஜீவன் தான்.நீங்க வேணும்னா ஒரு வேலையை போய் தேடி வச்சுக்கோங்க பிறகு என்ன வந்து கூப்பிடுங்க பாட்டியுடன் நானும் வரேன் என்கவும் சந்திரிகா சொல்வது சரி என்பது புரிந்தாலும் தனக்காக அப்பா பணக்கார வீட்டில் சம்பந்தம் பேசி முடித்து விடுவார் என்பது புரிந்தவன் சரி அப்ப நீ வீட்டுக்கு போயிடு..
என் கூட படிச்ச நண்பன் இருக்கான் அவன் மூலமாக வேலை ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு இன்னும் ஒரு மாசத்துல உனக்கான லெட்டர் யார் மூலமாவது கொடுத்து அனுப்புகிறேன் என்க..
அழுது கொண்டே சதாசிவத்துக்கு தலையை அசைத்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்த்து விட்டாள்.பேத்தி சொன்னதை கேட்ட பாப்பாத்தி தங்கமே என் உயிருக்காக உன் வாழ்க்கையே இப்படி பண்ணி வச்சிட்டியா..
அது வந்து நான் என்ன சொல்ல வரேன்னா என்று சதாசிவம் பேச தயங்க சின்னய்யா சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க பாட்டி வேற என்னை காணும்னு தேடுவாங்க.
நேரம் ஆகுது நான் வீட்டிற்கு போகணும் என்று தைரியத்தை வர வைத்துக் கொண்டு சந்திரிகா சொல்ல,உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன் என்று சதாசிவம் விஷயத்தை சொல்ல அதை கேட்டவளோ அதிர்ந்து பின்னர் அவனை நிமிர்த்து பார்த்து முறைத்தாள்.
அவனோ அவளை இமைக்காமல் காதலோடு பார்த்தவன் நிஜமா தான் சொல்றேன் என்க, எனக்கு அதுபோல எண்ணமெல்லாம் கிடையாது.இனி இப்படி என்கிட்ட பேச வந்தீங்கள் மரியாதை கெட்டுவிடும் என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
சதாசிவமும் படித்து முடித்துவிட்டு வந்து எஸ்டேட் பொறுப்பை எடுத்துக் கொள்ள தினமும் பக்கத்து எஸ்டேட்டிற்கு வேலைக்கு போகும் சந்திரிகாவை பின் தொடர்ந்து தனது காதலை சொல்ல மட்டும் மறக்கவில்லை.
அவளும் முடியவே முடியாது என்று திட்டி விட்டு கண்டு கொள்ளாமல் இருக்க அவனும் தனது முயற்சியில் இருந்து தளரவில்லை.
ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று சிவம் மயங்கிய கீழே விழ, அதே இடத்தில் அவரின் உயிரும் போய்விட்டது.
தாத்தாவின் இறப்போ சந்திரிகாவை வெகுவாக பாதித்தது.நினைவு தெரிந்த நாளிலிருந்து தாத்தாவாக இருந்தது விட தந்தையாக இருந்தது தான் அதிகம். அந்த ஜீவன் இப்பொழுது இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டு ஒடுங்கிப் போனாள்.
தானும் கண்ணை மூடுவதற்குள் பேத்தியை ஒருவன் கையில் ஒப்படைத்திடனும் என்று வைராக்கியத்தோடு பாப்பத்தியும் உள்ளுக்குள் இருக்கும் வேதனையை மறைத்துக் கொண்டு நடமாடியவர் தெரிந்தவர்கள் இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுமாறு சொல்லி வைக்க இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சதாசிவமும் மறுநாள் சந்திரிகா வேலைக்கு வராளா என்று பார்க்க அவளோ உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் வீட்டில் இருந்து விட்டாள்.
பின்னர் ஒரு முடிவு எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் சந்திரிகாவின் வீட்டின் தோட்டத்து வழியாக வந்தவன் கதவை தட்ட உள்ளே படுத்திருந்தவளோ அம்மாச்சி தான் என்று நினைத்துக் கொண்டு கதவை போய் திறந்தவள் அங்கு இருந்த சதாசிவத்தை கண்டு அதிர்ந்தவள் வேகமாய் கதவை சாத்த முயல...
எட்டி அவளின் கையை பிடித்தவன் ஏன் வேலைக்கு வரல என்ன ஆச்சு உனக்கு என கேட்கும் போதே அவள் கையிலிருந்த சூடு உடல் நிலை சரியில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.
செல்லம் உனக்கு என்னடி ஆச்சு என்று அவள் கன்னத்தை பிடித்து கேட்க இத்தனை நாள் வெறுப்பாக இருந்தவளுக்கு இந்த அன்பான பேச்சைக் கேட்டு முகத்தை திருப்பிக்க முடியவில்லை.
கீழே குனிந்து கொண்டு உடம்பு சரியில்லை என்று சொல்லவும் கையை விட்டவன் வந்த வழியிலே வேகமாக போனவன் அரை மணி நேரத்தில் அவளுக்கு தேவையான ஜுரம் மருந்தையும் சாப்பிடுவதற்காக பிரட்டையும் வாங்கிட்டு வந்து கொடுத்து சிறிது நேரம் இருந்தவன் நான் விளையாட்டுக்கு சொல்லவில்லை மா.
உண்மையிலேயே நான் உன்னை காதலிக்கிறேன்.ஏழை பணக்காரன் அந்த வித்தியாசத்தை நான் பார்ப்பதில்லை தயவுசெய்து என் காதலை ஏற்றுக்கொள் என்று கெஞ்ச
பெண்ணின் மனமும் இளகியது.
பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் அவர்கள் காதலை வளர்த்தனர்.நாட்களும் மாதங்களாக செல்ல அறசல் புறசலாக இந்த விஷயம் சதாசிவத்தின் அப்பா வேலனுக்கு தெரிய மகனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பித்தார்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சதாசிவம் நள்ளிரவில் வீட்டை விட்டு வந்தவர் சந்திரிகாவை கூப்பிட, யாரென்று பாப்பாத்தி எழுந்து வந்தவர் அங்கு இருந்தவனிடம் சொல்லுங்கள் சின்னையா என்ன விஷயம் என்றார்.
அவரிடம் விஷயத்தை சொல்லவும் தலையில் இடி விழுந்தது போல் ஆனார். ஆனால் பேத்தியின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பை பார்த்தவர் கடவுள் விட்ட விதி இதுதான் போல எங்கேயாவது போய் வாழுங்கள் என்று கண்ணீருடன் ஆசிர்வாதம் செய்ய இரவோடு இரவாக அவர்கள் இருவரும் கோத்தகிரி விட்டு வெளியேறினார்கள்.
விடியலும் பலவித போராட்டங்களோடு ஆரம்பமானது.வேலன் இன்று மகனுக்கு பொண்ணு பார்க்க போக வேண்டும் என்று தனது மனைவி சரளாவிடம் சொல்லிக் கொண்டிருக்க சதா இன்னும் எந்திரிச்சு வரலையே என்றார்.
காய்கறிகள் லோடு ஏற்றிவிட்டு நைட்டு 11 மணிக்கு மேல தான் வந்தான்னு மேனேஜர் சொன்னாரு தூங்கிட்டு இருப்பான் போய் பாரு.10 மணிக்கு நல்ல நேரம் இருக்கு அந்த நேரத்தில் கிளம்பலாம் என்றவாறு காபியை குடித்துக் கொண்டிருக்க,சரளாவும் படியில் ஏறி மகன் ரூமிற்கு வந்து கதவை தட்ட அதுவோ வெளியே தாழ்ப்பாள் போட்டிருப்பது தெரிந்தது.
என்ன வெளியே பூட்டியிருக்கு என கதவை திறந்து உள்ளே போக அங்கே டிபாயின் மேல் மடிக்கப்பட்ட வெள்ளை காகிதமும் அதன் மேல் ஃப்ளவர் வாஷ் இருந்தது.
அதை எடுத்து என்னவென்று படிக்க எனக்கு பிடித்தவளோடு நான் போகிறேன் என்னை தேட வேண்டாம் என்று இருந்தது.அய்யோ சதாயென கத்திக் கொண்டு கீழே வந்தவர் கணவரிடம் லட்டரை நீட்டினார்.
படித்து பார்த்து கிழித்து போட்டவர் அவனை பத்தி தெரிஞ்சுதாண்டி கல்யாண ஏற்பாடு பண்ணுனேன். பக்கத்துல வேலை செய்ற அந்த பிச்சைக்கார நாயை உன் மவன் காதலிக்கிறான் டி.
பருவத்தில் பன்னி குட்டி கூட அழகாக தான் தெரியும்.என்னத்த காட்டி மயக்கினான்னு தெரியலையே என்று அசிங்கமாக பேச கணவரின் வார்த்தைகளை கேட்டு சரளாவுக்கு ஆத்திரமாக வந்தது.
கொஞ்சம் கூட உங்களுக்கு வெக்கமா இல்லையா இப்படியெல்லாம் பேசுறீங்களே என்க,உண்மைதானே சொன்னேன்.நான் வயசு பையனா இருக்கும்போது நீயும் இப்படிதாண்டி இருந்து என்னை மயக்குன என்க..
ச்சை என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்குள் போனவர் என் பையன் எங்க இருந்தாலும் நல்லபடியா இருக்கட்டும் கடவுளே நீங்கதான் அவனுக்கு புடிச்ச வாழ்க்கை கிடைக்க வழி செஞ்சுருக்கீங்க.அவன் ஆசைப்பட்ட போலயே குடும்பமா வாழட்டும் என்று வேண்டிக்கொண்டார்.
வேலனோ கையில் இருந்து பீங்கான் கப்பை கீழே போட்டு உடைத்தவர் வேகமாக வெளியே வந்து அங்கிருந்த டிரைவரிடம் காரை எடுக்க சொல்லி கோத்தகிரியில் இருக்கும் சந்திரிகாவின் வீட்டை நோக்கி வண்டியை ஓட்ட சொன்னார்.
அரை மணி நேரத்தில் குடிசை பகுதிக்கு வந்தவர் கார் உள்ளே போகாது என்பதால் தெருமுனையிலே நிறுத்திவிட்டு போய் அந்த வீட்ல இருக்கிற பாப்பாத்தியை கூப்பிட்டு வா என்றான்.
கூட வந்த அடியாள்களில் ஒருவனோ அந்த குடிசை பகுதியில் நடந்து போய் சந்திரிகா வீட்டின் முன்பு நின்று வீட்டில் யாரு வாங்க என்க...பாப்பாத்தியோ யாரு என்று வெளியே வந்தார்.
அவரைப் பார்த்தவன் ஐயா வரச் சொல்றாரு என கத்திட்டு போனான்.
இந்த ஆளுக்கு தெரிஞ்சிருச்சா என்னன்னு தெரியலையே என்று பாப்பாத்தி நடுங்கி கொண்டே வர தூரத்தில் வருபவர் காய்ச்சலில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட வேலன் இந்த கிழவி கிட்ட என்னத்த கேக்குறது என்று யோசித்தான்.
நடுங்கிக்கொண்டே வந்த பாப்பாத்தி வணக்கங்க ஐயா என்று கையெடுத்து வேலனை பார்த்து கும்பிட,உன் பேத்தி எங்க இருக்கா என்று கேட்க என் பேத்தியா??வீட்ல சோறு ஆக்குறாயா என்கவும் அப்படியா போய் கூட்டிட்டு வா என்றான்.
பாப்பாத்தி பாட்டியும் அங்கிருந்து தனது குடிசைக்குள் வந்தவர் பேத்தியை அழைத்துக் கொண்டு வர சந்திரிகாவை பார்த்த வேலன் இவ இங்க இருக்கிறாள்?அப்ப இவன் யாரை கூட்டிட்டு ஓடி போனான்?.
நான் தான் மத்தவங்க பேச்சு கேட்டுட்டு என் மகனை தப்பா நினைச்சிட்டேனா? என் பையன் கோடீஸ்வரன் வீட்டு ராஜா. தராதரம் தெரியாம போயும் போய் இந்த பிச்சைக்கார குடும்பத்தில் உள்ளவளையா காதலிப்பான்?.
ஆளு கொஞ்சம் பார்க்க தளதளவென்று இருக்கிறாள்.அதனால தான் நானும் இவள் தான் அவளென்று நம்பிருக்கேன் என்று அவன் வயதுக்கு மீறியும் சந்திரிகாவை ரசித்துப் பார்த்தான்.
சந்திரிகாவோ வணக்கம் பெரியைய்யா.வர சொன்னிங்களே...ஆமா புள்ள வீட்ல கொஞ்சம் சுத்தம் பண்ற வேலை இருக்கு பெரியம்மா கூட வேலை செய்.
சின்னய்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது என்க..அவளோ முகம் மாறாமல் செய்து கொடுக்கிறேன் என்கவும் இந்தா பணத்தை வைத்துக்கொள் என்று பாக்கெட்டில் இருந்த சிறிது பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு காரை எடுடா என்ற வேலனுக்கு ஒன்றுமே புரியவில்லையே.என்னடா நடக்காது என்று மண்டை காய்ந்தது.
வேகமாக வீட்டிற்குள் வந்த சந்திரிகா பாட்டி என்க...ஏத்தா எங்கேயோ போய் வாழுங்கன்னு சொன்னேனே எப்படி வந்த? சின்னையா எங்கே?என்றார்.
பின்னர் பாட்டியிடம் நடந்ததை சொல்ல தொடங்கினாள்.இருவரும் கோத்தகிரி விட்டு வெளியே வந்தவர்கள் சற்று தூரத்தில் போய் நின்று கொண்டு எதாச்சும் லாரி வருதா என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது சந்திரிகாவோ சின்னய்யா நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைக்காதீங்க என்றாள்.
என்னம்மா என்க..இப்போதைக்கு கையில ஒரு வேலையும் இல்ல,எங்க போயி நம்ம வாழுறது?உங்க அப்பாவுக்கு தெரிஞ்சாக்க என் பாட்டியை கொன்னுடுவார்.
எனக்கென்று இருக்கிறது அவங்க ஒரு ஜீவன் தான்.நீங்க வேணும்னா ஒரு வேலையை போய் தேடி வச்சுக்கோங்க பிறகு என்ன வந்து கூப்பிடுங்க பாட்டியுடன் நானும் வரேன் என்கவும் சந்திரிகா சொல்வது சரி என்பது புரிந்தாலும் தனக்காக அப்பா பணக்கார வீட்டில் சம்பந்தம் பேசி முடித்து விடுவார் என்பது புரிந்தவன் சரி அப்ப நீ வீட்டுக்கு போயிடு..
என் கூட படிச்ச நண்பன் இருக்கான் அவன் மூலமாக வேலை ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு இன்னும் ஒரு மாசத்துல உனக்கான லெட்டர் யார் மூலமாவது கொடுத்து அனுப்புகிறேன் என்க..
அழுது கொண்டே சதாசிவத்துக்கு தலையை அசைத்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்த்து விட்டாள்.பேத்தி சொன்னதை கேட்ட பாப்பாத்தி தங்கமே என் உயிருக்காக உன் வாழ்க்கையே இப்படி பண்ணி வச்சிட்டியா..