Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 706
- Thread Author
- #1
விக்டர் நினைவுகள்:
நான் உங்க பொண்ணு டாடி.கண்டிப்பா உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.சொன்ன போல நேரில் வந்து உங்களை வந்து சந்திக்கிறேன் டாடி என்க,லவ் யூ டா செல்லம் மிஸ் யூ என்று விக்டர் கண்ணீரோடு சொல்ல அழாதீங்கப்பா..
நான் ஒன்னும் உங்களை விட்டு ஒரேடியாக போகலையே,போகவும் மாட்டேன்.என்றைக்கு இருந்தாலும் நான் மட்டும் தான் உங்களோட பொண்ணு என்க,எனக்கு இது போதும் டா என்றார்.
அதன் பின்னர் நாட்களும் ஓட வெரோனிகாவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு தொடர்பும் இல்லை.பியூலாவும் பொறுத்து பொறுத்து பார்த்தவர் மகளை பற்றி கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பித்தார்.
மகளை பார்க்க போகலாம் என்றால் அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் எப்படி பார்ப்பது என்று விக்டர் கத்த...என்ன சொன்னீங்க என்று விக்டரின் சட்டையை பிடித்து கேட்க,அப்பொழுதுதான் அவள் கடைசியாக பேசிய விஷயத்தை எல்லாம் மனைவியிடம் விக்டர் சொல்ல, கோபம் வந்து கணவர் என்றும் பாராமல் பளார் பளாரென்று அறைந்தவர் என் பெண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சிட்டியே என்றவாறு மயங்கி விழுந்தார்.
அவரை தூக்கிக்கொண்டு காரில் ஏறியவர் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்ல ஏற்கனவே மகள் பற்றி எதுவும் தெரியவில்லை இப்பொழுது மனைவிக்கும் இப்படி என்று கேள்விப்பட்ட விக்டரோ இடிந்து போய் உட்கார்ந்தார்.
இருவரையும் தேற்றி வீட்டுக்கு கூப்பிட்டு வந்தது கலா தான்.பொறுத்தது போதும் என்று இருவரும் இந்தியாவிற்கு வந்தவர்கள் திருச்சியில் போய் பாதரிடம் வெரோனிகா வந்தாளா என்க, அவரோ இல்லையே என்றார்.
பின்னர் எங்கு தான் சென்றிருப்பாள் என்று அவர்களும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை சுற்றுலா தளங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணினர்.
அவர்களும் தேடிப் பார்த்துவிட்டு மிஸ்ஸிங் கேஸ் என்று சொல்லிவிட்டனர்.மகளை பற்றிய கவலையில் நாளுக்கு நாள் பியூலாவின் உடம்பு பாதிக்க எங்கே மனைவியையும் இழந்து விடுவோமோ என்று பயந்து போன விக்டர் ஜெர்மனி எம்பஸியில் போய் கம்பளைண்ட் கொடுத்ததாக அனைத்தையும் கண்ணீரோடு சொல்லி முடிக்க,கேட்ட மாறனுக்கும் நிலவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.
அழுது கொண்டிருந்தவரை பேசி ஆறுதல் படுத்தியவர்கள் சார் ஒரு விஷயம் கேட்கிறேன் தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று நிலவன் சொல்ல,சொல்லுங்க சார் என்றார்.
தாராளமா நீங்க எங்களை தம்பினே கூப்பிடலாம்.உங்களைவிட வயதில் சின்னவங்க தான் நாங்க என்கவும்,இருக்கட்டும் சார் உயர்ந்த பதவியில் இருக்கீங்க அதற்கான மரியாதை கொடுக்கணும்.
மனிதநேயத்துக்கு முன்னாடி மரியாதை ஒன்றும் பெருசு இல்லைங்க சார் என்று மாறன் சொல்ல,உண்மையான வார்த்தைங்க தம்பி என்றார்.
அதாவது உங்களோட டாட்டர் அந்த டைரியை எடுத்துட்டு இந்தியாவுக்கு வந்தாங்களானு தெரியுமா என்க,இல்லைங்க தம்பி.அன்று ரூம்கு எடுத்துட்டு போனாள்.
ரெண்டு நாள் கழித்து அந்த டைரியை என்கிட்ட கொடுத்துட்டா.இப்போ என்கிட்ட தான் இருக்கு என்கவும் அப்படிங்களா சார்...அந்த டைரியை நாங்க படிச்சி பாக்கலாமா என்றான்.
கண்டிப்பாக தம்பி.என் பொண்ணோட தேடலுக்காக இதில் ஏதாச்சும் குறிப்பு கிடைச்சா அது நல்ல விஷயம் தானே. என் மனசுக்கு அதை படிக்கணும்னு தோணலை.ஏன்னா மனசால அவளை எங்க பொண்ணா ஏத்துக்கிட்டோம். இன்னொருத்தவங்க பொண்ணுன்னு அதுல இருக்கிறதை தாங்குற சக்தி எனக்கும் என் மனைவிக்கும் சுத்தமா இல்லை.அதனாலதான் இந்த 23 வருஷமா அந்த டைரியை நாங்கள் பிரித்து கூட பார்த்ததில்லை.என்னோட பேங்க் லாக்கர்ல தான் அந்த டைரி இருந்துச்சு.
என் பொண்ணுக்காக தான் அதை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன் என்றவர் ஒரு நிமிஷம் என்று எழுந்து அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனவர் சிறிது நிமிடத்தில் கையில் ஒரு கவரோடு வந்தவர் இந்தாங்க தம்பி என்று நீட்ட அதை வாங்கிய நிலவன் சரிங்க சார்.இதை நாங்க படிச்சு பார்த்துட்டு உங்களுக்கு நாளைக்கு கொடுக்கட்டுமா என்றான்.
பரவாயில்லை தம்பி நீங்களே இதை வச்சுக்குங்க.என் பொண்ணை ஒப்படைக்கும் போது இந்த டைரியை நீங்களே அழிச்சுடுங்கப்பா எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்.இந்த டைரி முக்கியம் கிடையாது என்று கண்ணீரோடு சொன்னார்.
கலங்காதிங்க சார் என்றவன் கடைசியாக உங்க பொண்ணு இந்தியா வந்து சேர்ந்துட்டேன்னு கால் பண்ணினாங்களே அந்த நம்பர் இருக்கா என்கவும் ஹம் இருக்குங்க தம்பி என்றார்.
அப்போ இதை பற்றி நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லலையா என்று மாறன் கேட்க,இல்லைங்க தம்பி.என் பொண்ணோட வாழ்க்கையில இவ்வளவு ரகசியம் இருக்கே.
இதை எப்படி நான் சொல்ல முடியும்.
அவளுடைய பிறப்பு ரகசியம் என்னனு எனக்கு தெரியாது.அதனால நான் இதை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்க சரிங்க சார் என்றான்.
பின்னர் தனது போனில் மகள் பேசிய நம்பரை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்ததை அவர்களிடம் காட்ட நிலவனும் அதை அவனது போனுக்கு அனுப்பி கொண்டான்.
ரொம்ப நேரம் ஆயிடுச்சு மேடம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்க டேப்லெட் போட்டுருக்காங்கப்பா அதனால தானென்று வேதனையோடு சொன்னார்.
கவலைப்படாதீங்க சார் சீக்கிரமா உங்க பொண்ணை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம் என்று சொல்ல அப்படி நீங்க பண்ணிட்டீங்கனாக்க எங்க உசுரு இருக்கிற வரைக்கும் உங்களை நாங்கள் மறக்க மாட்டோம் தம்பி என்று கை கூப்பி கண்ணீரோடு விக்டர் சொல்ல...
அய்யோ சார் கையை இறக்குங்க என்றவனுங்களிடம்,இருங்க தம்பி காபி ஆர்டர் பண்றேன் என்கவும் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார். மேடமை கவனிச்சு பாருங்க நீங்களும் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தானுங்கள்.
மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாறனுக்கு கால் வந்தது.பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தவன் அட்டென்ட் பண்ணி சொல்லு தகப்பா என்க...
தம்பி ஒரு சந்தோஷமான விஷயம் என்று மதி சொல்ல,சந்தோஷமான விஷயம் உனக்குன்னு சொல்லு எனக்கு இல்லை.நேரடியாக விஷயத்தை சொல்லு என்றான்.
நீ எங்கப்பா இருக்கிற அத சொல்லென்று மதி கேட்க,நான் சன்னியானம் வாங்க இமயமலைக்கு போயிட்டு இருக்கேன் .நீயும் வரியா என்றான்.
மகன் சொன்னதை கேட்டவர் அடேய் நான் சம்சாரி டா என்றார்.தெரியுது இல்ல பின்ன எதுக்கு கேக்குற விஷயத்தை சொல்லு என்று கடுப்பில் கத்தினான்.
என்னப்பா வெயில்ல நிக்கிறியா ரொம்ப குளு குளுன்னு பேசுறியே என்கவும்..தகப்பாஆஆ என்று பல்லை கடித்தவன் நக்கல் பண்ண தான் கால் பண்ணுனியா?சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது உசுர வாங்கி தொலையிற, என்ன விஷயம் சொல்லப் போறியா இல்ல வச்சிட்டு போய் வேலையை பாரு என்றான்.
அது வந்து பா பொண்ணு வீட்டுல பேசி முடிச்சாச்சு என்கவும்,வாழ்த்துக்கள் தகப்பா.அதுக்குள்ள இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடியாயிட்டியா? உங்கள் தர்மபத்தினி எப்படி சம்மதித்தாங்கள்?.
அடேய் என்ன பேசவிடுடா என்று மதி கத்த சரி பேசி தொலை என்றான்.ஏப்ரல் 11ஆம் தேதி நிச்சயதார்த்தம் வச்சிருக்கோம் என்றார்.என்னாஆஆஆ 11ஆம் தேதியா?
ஆமா...எந்த கேஸ்லையும் இப்போதைக்கு இன்வால் ஆகாத. நிச்சயதார்த்தத்துக்கு நீ இல்லனாக்க எங்க மானம் காத்துல பறக்கும் புரியுதா என்று கொஞ்சம் கடுமையாக மதி சொல்ல தந்தையின் குரலில் உள்ள உஷ்ணத்தை புரிந்தவன் சரி வந்துடறேன் என்றான்.
அதை சிரித்துக் கொண்டே தான் சொல்லேன்டா என்றவருக்கு,ஏன் வாத்தி நீ என்ன லூசா?நாம என்ன வீடியோ காலிலா பேசிட்டு இருக்கோம்,நார்மல் கால் தானே,இதுல நான் சிரிச்சா உனக்கு தெரியுமா என்றான்.
மகன் சொன்னதை கேட்டவர் நீ போலீஸ்காரன் ஆவதற்கு பதில் லாயர் ஆகியிருக்கலாம் பா. எப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குற என் பிள்ளைக்கு எவ்வளவு அறிவு என்றார்.
உன் புகழ்ச்சியை கேட்க எனக்கு நேரமில்லை.அதான் விஷயத்தை சொல்லிட்டல்ல வை.நான் சோறு திங்கிறேன் என்க,சரிப்பா சரிப்பா என்று போனை வைத்தார்.
இரவு உணவை சாப்பிட்டு முடித்து விட்டு பரிதியிடம் சிறிது நேரம் விளையாட அவனும் களைப்பில் தூங்கி விடவும் குழந்தையை தூக்கிக் கொண்டு போய் பெட்டில் கடத்திய நிலவன் அங்கே இருந்த மனைவியை பார்த்து ஓய் பொண்டாட்டி மாமனுக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வருகிறேன் என்கவும் சரி என்ற இளமதியோ மடித்த துணிகளை கபோர்டில் அடுக்கி வைக்க மனைவியை பின்பக்கமாக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் ஒரு முக்கியமான கேஸ் விஷயமா டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கிடு செல்லம் என்க சரி மாமா என்றாள்.
உன்னை போல புரிந்து கொள்ளும் மனைவி போலீஸ்காரனுக்கு கிடைப்பது ரொம்ப லக்.அந்த விதத்தில் நான் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கேன் டி என்று செல்லமாக தலையில் இடிக்க,யோய் மூடிட்டு போயா ஓவரா பண்ணுவ என்கவும் அடிப்பாவி ஒரே வாரத்தையில் மாமனை இப்படி காலில் போட்டு மிதிச்சிட்டியேடி என்றான்.
இதே டயலாக்கை கேட்டு கேட்டு எனக்கு காது புளிச்சிடுச்சு மாமா புதுசா ஏதாச்சும் சொல்லுங்கள் என்று சிரித்தாள்.சொல்றேண்டி பரிதிக்கு தங்கச்சி வேணுமா அதுக்கு தயாராக என்று சொல்லி சிரித்தவன் சரி செல்லம் என்று மாடியில் இருக்கும் ருத்ரனின் அறைக்குச் சென்றான்.
என்ன மச்சி மிஷன் ஸ்டார்ட் பண்ணலாமா என்கவும், அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு ஒரு நம்பர்ல இருந்து கால் பண்ணுச்சே அதை விசாரிக்க சொன்னேன் என்ன ஆச்சு?.
விசாரிச்சிட்டேன் டா. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் டீட்டைல்ஸ் கிடைச்சது.அந்த நம்பர் பெங்களூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும் பிசிஓ என்க....
வாட்....
என்னடா சொல்ற?
ஆமாடா..
"அங்குள்ள நம்பர் தான் "
"ஆனால் விக்டர் சென்னைக்கு வந்த இண்டிகோ பிளைட்டில் அனுப்பி வைத்ததா சொன்னாரே டா"
"எஸ்"
ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுடா என்ற மாறன் தனது போனை எடுத்து அதிலிருந்த பங்கு என்ற நம்பருக்கு கால் அந்தப்பக்கம் அட்டென்ட் பண்ணியவனோ சொல்லு பங்கு என்க, ரஞ்சன் என்று மாறன் சொல்வதிலே அவன் வேலை விஷயமாக பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டான்.
நான் ஏர்போர்ட்டில் தான் இருக்கேன் என்கவும் ஹம் வெரோனிகா விக்டர், அக்டோபர் 24,2024 ல இந்தியாவுக்கு எந்த பிளைட்ல,எந்த ஸ்டேட்டிற்கு அங்கிருந்து வந்துருக்காங்க செக் பண்ணி சொல்லு.
நான் உங்க பொண்ணு டாடி.கண்டிப்பா உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.சொன்ன போல நேரில் வந்து உங்களை வந்து சந்திக்கிறேன் டாடி என்க,லவ் யூ டா செல்லம் மிஸ் யூ என்று விக்டர் கண்ணீரோடு சொல்ல அழாதீங்கப்பா..
நான் ஒன்னும் உங்களை விட்டு ஒரேடியாக போகலையே,போகவும் மாட்டேன்.என்றைக்கு இருந்தாலும் நான் மட்டும் தான் உங்களோட பொண்ணு என்க,எனக்கு இது போதும் டா என்றார்.
அதன் பின்னர் நாட்களும் ஓட வெரோனிகாவிடம் இருந்து இதுவரை எந்த ஒரு தொடர்பும் இல்லை.பியூலாவும் பொறுத்து பொறுத்து பார்த்தவர் மகளை பற்றி கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பித்தார்.
மகளை பார்க்க போகலாம் என்றால் அவள் எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் எப்படி பார்ப்பது என்று விக்டர் கத்த...என்ன சொன்னீங்க என்று விக்டரின் சட்டையை பிடித்து கேட்க,அப்பொழுதுதான் அவள் கடைசியாக பேசிய விஷயத்தை எல்லாம் மனைவியிடம் விக்டர் சொல்ல, கோபம் வந்து கணவர் என்றும் பாராமல் பளார் பளாரென்று அறைந்தவர் என் பெண்ணை என்கிட்டே இருந்து பிரிச்சிட்டியே என்றவாறு மயங்கி விழுந்தார்.
அவரை தூக்கிக்கொண்டு காரில் ஏறியவர் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ண அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று டாக்டர் சொல்ல ஏற்கனவே மகள் பற்றி எதுவும் தெரியவில்லை இப்பொழுது மனைவிக்கும் இப்படி என்று கேள்விப்பட்ட விக்டரோ இடிந்து போய் உட்கார்ந்தார்.
இருவரையும் தேற்றி வீட்டுக்கு கூப்பிட்டு வந்தது கலா தான்.பொறுத்தது போதும் என்று இருவரும் இந்தியாவிற்கு வந்தவர்கள் திருச்சியில் போய் பாதரிடம் வெரோனிகா வந்தாளா என்க, அவரோ இல்லையே என்றார்.
பின்னர் எங்கு தான் சென்றிருப்பாள் என்று அவர்களும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை சுற்றுலா தளங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணினர்.
அவர்களும் தேடிப் பார்த்துவிட்டு மிஸ்ஸிங் கேஸ் என்று சொல்லிவிட்டனர்.மகளை பற்றிய கவலையில் நாளுக்கு நாள் பியூலாவின் உடம்பு பாதிக்க எங்கே மனைவியையும் இழந்து விடுவோமோ என்று பயந்து போன விக்டர் ஜெர்மனி எம்பஸியில் போய் கம்பளைண்ட் கொடுத்ததாக அனைத்தையும் கண்ணீரோடு சொல்லி முடிக்க,கேட்ட மாறனுக்கும் நிலவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.
அழுது கொண்டிருந்தவரை பேசி ஆறுதல் படுத்தியவர்கள் சார் ஒரு விஷயம் கேட்கிறேன் தப்பா நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று நிலவன் சொல்ல,சொல்லுங்க சார் என்றார்.
தாராளமா நீங்க எங்களை தம்பினே கூப்பிடலாம்.உங்களைவிட வயதில் சின்னவங்க தான் நாங்க என்கவும்,இருக்கட்டும் சார் உயர்ந்த பதவியில் இருக்கீங்க அதற்கான மரியாதை கொடுக்கணும்.
மனிதநேயத்துக்கு முன்னாடி மரியாதை ஒன்றும் பெருசு இல்லைங்க சார் என்று மாறன் சொல்ல,உண்மையான வார்த்தைங்க தம்பி என்றார்.
அதாவது உங்களோட டாட்டர் அந்த டைரியை எடுத்துட்டு இந்தியாவுக்கு வந்தாங்களானு தெரியுமா என்க,இல்லைங்க தம்பி.அன்று ரூம்கு எடுத்துட்டு போனாள்.
ரெண்டு நாள் கழித்து அந்த டைரியை என்கிட்ட கொடுத்துட்டா.இப்போ என்கிட்ட தான் இருக்கு என்கவும் அப்படிங்களா சார்...அந்த டைரியை நாங்க படிச்சி பாக்கலாமா என்றான்.
கண்டிப்பாக தம்பி.என் பொண்ணோட தேடலுக்காக இதில் ஏதாச்சும் குறிப்பு கிடைச்சா அது நல்ல விஷயம் தானே. என் மனசுக்கு அதை படிக்கணும்னு தோணலை.ஏன்னா மனசால அவளை எங்க பொண்ணா ஏத்துக்கிட்டோம். இன்னொருத்தவங்க பொண்ணுன்னு அதுல இருக்கிறதை தாங்குற சக்தி எனக்கும் என் மனைவிக்கும் சுத்தமா இல்லை.அதனாலதான் இந்த 23 வருஷமா அந்த டைரியை நாங்கள் பிரித்து கூட பார்த்ததில்லை.என்னோட பேங்க் லாக்கர்ல தான் அந்த டைரி இருந்துச்சு.
என் பொண்ணுக்காக தான் அதை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன் என்றவர் ஒரு நிமிஷம் என்று எழுந்து அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போனவர் சிறிது நிமிடத்தில் கையில் ஒரு கவரோடு வந்தவர் இந்தாங்க தம்பி என்று நீட்ட அதை வாங்கிய நிலவன் சரிங்க சார்.இதை நாங்க படிச்சு பார்த்துட்டு உங்களுக்கு நாளைக்கு கொடுக்கட்டுமா என்றான்.
பரவாயில்லை தம்பி நீங்களே இதை வச்சுக்குங்க.என் பொண்ணை ஒப்படைக்கும் போது இந்த டைரியை நீங்களே அழிச்சுடுங்கப்பா எனக்கு என் பொண்ணு தான் முக்கியம்.இந்த டைரி முக்கியம் கிடையாது என்று கண்ணீரோடு சொன்னார்.
கலங்காதிங்க சார் என்றவன் கடைசியாக உங்க பொண்ணு இந்தியா வந்து சேர்ந்துட்டேன்னு கால் பண்ணினாங்களே அந்த நம்பர் இருக்கா என்கவும் ஹம் இருக்குங்க தம்பி என்றார்.
அப்போ இதை பற்றி நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லலையா என்று மாறன் கேட்க,இல்லைங்க தம்பி.என் பொண்ணோட வாழ்க்கையில இவ்வளவு ரகசியம் இருக்கே.
இதை எப்படி நான் சொல்ல முடியும்.
அவளுடைய பிறப்பு ரகசியம் என்னனு எனக்கு தெரியாது.அதனால நான் இதை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்க சரிங்க சார் என்றான்.
பின்னர் தனது போனில் மகள் பேசிய நம்பரை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்ததை அவர்களிடம் காட்ட நிலவனும் அதை அவனது போனுக்கு அனுப்பி கொண்டான்.
ரொம்ப நேரம் ஆயிடுச்சு மேடம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்க டேப்லெட் போட்டுருக்காங்கப்பா அதனால தானென்று வேதனையோடு சொன்னார்.
கவலைப்படாதீங்க சார் சீக்கிரமா உங்க பொண்ணை உங்க கிட்ட ஒப்படைக்கிறோம் என்று சொல்ல அப்படி நீங்க பண்ணிட்டீங்கனாக்க எங்க உசுரு இருக்கிற வரைக்கும் உங்களை நாங்கள் மறக்க மாட்டோம் தம்பி என்று கை கூப்பி கண்ணீரோடு விக்டர் சொல்ல...
அய்யோ சார் கையை இறக்குங்க என்றவனுங்களிடம்,இருங்க தம்பி காபி ஆர்டர் பண்றேன் என்கவும் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சார். மேடமை கவனிச்சு பாருங்க நீங்களும் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தானுங்கள்.
மதிய சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாறனுக்கு கால் வந்தது.பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தவன் அட்டென்ட் பண்ணி சொல்லு தகப்பா என்க...
தம்பி ஒரு சந்தோஷமான விஷயம் என்று மதி சொல்ல,சந்தோஷமான விஷயம் உனக்குன்னு சொல்லு எனக்கு இல்லை.நேரடியாக விஷயத்தை சொல்லு என்றான்.
நீ எங்கப்பா இருக்கிற அத சொல்லென்று மதி கேட்க,நான் சன்னியானம் வாங்க இமயமலைக்கு போயிட்டு இருக்கேன் .நீயும் வரியா என்றான்.
மகன் சொன்னதை கேட்டவர் அடேய் நான் சம்சாரி டா என்றார்.தெரியுது இல்ல பின்ன எதுக்கு கேக்குற விஷயத்தை சொல்லு என்று கடுப்பில் கத்தினான்.
என்னப்பா வெயில்ல நிக்கிறியா ரொம்ப குளு குளுன்னு பேசுறியே என்கவும்..தகப்பாஆஆ என்று பல்லை கடித்தவன் நக்கல் பண்ண தான் கால் பண்ணுனியா?சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது உசுர வாங்கி தொலையிற, என்ன விஷயம் சொல்லப் போறியா இல்ல வச்சிட்டு போய் வேலையை பாரு என்றான்.
அது வந்து பா பொண்ணு வீட்டுல பேசி முடிச்சாச்சு என்கவும்,வாழ்த்துக்கள் தகப்பா.அதுக்குள்ள இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடியாயிட்டியா? உங்கள் தர்மபத்தினி எப்படி சம்மதித்தாங்கள்?.
அடேய் என்ன பேசவிடுடா என்று மதி கத்த சரி பேசி தொலை என்றான்.ஏப்ரல் 11ஆம் தேதி நிச்சயதார்த்தம் வச்சிருக்கோம் என்றார்.என்னாஆஆஆ 11ஆம் தேதியா?
ஆமா...எந்த கேஸ்லையும் இப்போதைக்கு இன்வால் ஆகாத. நிச்சயதார்த்தத்துக்கு நீ இல்லனாக்க எங்க மானம் காத்துல பறக்கும் புரியுதா என்று கொஞ்சம் கடுமையாக மதி சொல்ல தந்தையின் குரலில் உள்ள உஷ்ணத்தை புரிந்தவன் சரி வந்துடறேன் என்றான்.
அதை சிரித்துக் கொண்டே தான் சொல்லேன்டா என்றவருக்கு,ஏன் வாத்தி நீ என்ன லூசா?நாம என்ன வீடியோ காலிலா பேசிட்டு இருக்கோம்,நார்மல் கால் தானே,இதுல நான் சிரிச்சா உனக்கு தெரியுமா என்றான்.
மகன் சொன்னதை கேட்டவர் நீ போலீஸ்காரன் ஆவதற்கு பதில் லாயர் ஆகியிருக்கலாம் பா. எப்படி வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குற என் பிள்ளைக்கு எவ்வளவு அறிவு என்றார்.
உன் புகழ்ச்சியை கேட்க எனக்கு நேரமில்லை.அதான் விஷயத்தை சொல்லிட்டல்ல வை.நான் சோறு திங்கிறேன் என்க,சரிப்பா சரிப்பா என்று போனை வைத்தார்.
இரவு உணவை சாப்பிட்டு முடித்து விட்டு பரிதியிடம் சிறிது நேரம் விளையாட அவனும் களைப்பில் தூங்கி விடவும் குழந்தையை தூக்கிக் கொண்டு போய் பெட்டில் கடத்திய நிலவன் அங்கே இருந்த மனைவியை பார்த்து ஓய் பொண்டாட்டி மாமனுக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வருகிறேன் என்கவும் சரி என்ற இளமதியோ மடித்த துணிகளை கபோர்டில் அடுக்கி வைக்க மனைவியை பின்பக்கமாக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் ஒரு முக்கியமான கேஸ் விஷயமா டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கிடு செல்லம் என்க சரி மாமா என்றாள்.
உன்னை போல புரிந்து கொள்ளும் மனைவி போலீஸ்காரனுக்கு கிடைப்பது ரொம்ப லக்.அந்த விதத்தில் நான் ரொம்ப புண்ணியம் பண்ணிருக்கேன் டி என்று செல்லமாக தலையில் இடிக்க,யோய் மூடிட்டு போயா ஓவரா பண்ணுவ என்கவும் அடிப்பாவி ஒரே வாரத்தையில் மாமனை இப்படி காலில் போட்டு மிதிச்சிட்டியேடி என்றான்.
இதே டயலாக்கை கேட்டு கேட்டு எனக்கு காது புளிச்சிடுச்சு மாமா புதுசா ஏதாச்சும் சொல்லுங்கள் என்று சிரித்தாள்.சொல்றேண்டி பரிதிக்கு தங்கச்சி வேணுமா அதுக்கு தயாராக என்று சொல்லி சிரித்தவன் சரி செல்லம் என்று மாடியில் இருக்கும் ருத்ரனின் அறைக்குச் சென்றான்.
என்ன மச்சி மிஷன் ஸ்டார்ட் பண்ணலாமா என்கவும், அதுக்கு முன்னாடி அந்த பொண்ணு ஒரு நம்பர்ல இருந்து கால் பண்ணுச்சே அதை விசாரிக்க சொன்னேன் என்ன ஆச்சு?.
விசாரிச்சிட்டேன் டா. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் டீட்டைல்ஸ் கிடைச்சது.அந்த நம்பர் பெங்களூர் பஸ் ஸ்டாண்டு பக்கத்தில் இருக்கும் பிசிஓ என்க....
வாட்....
என்னடா சொல்ற?
ஆமாடா..
"அங்குள்ள நம்பர் தான் "
"ஆனால் விக்டர் சென்னைக்கு வந்த இண்டிகோ பிளைட்டில் அனுப்பி வைத்ததா சொன்னாரே டா"
"எஸ்"
ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுடா என்ற மாறன் தனது போனை எடுத்து அதிலிருந்த பங்கு என்ற நம்பருக்கு கால் அந்தப்பக்கம் அட்டென்ட் பண்ணியவனோ சொல்லு பங்கு என்க, ரஞ்சன் என்று மாறன் சொல்வதிலே அவன் வேலை விஷயமாக பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டான்.
நான் ஏர்போர்ட்டில் தான் இருக்கேன் என்கவும் ஹம் வெரோனிகா விக்டர், அக்டோபர் 24,2024 ல இந்தியாவுக்கு எந்த பிளைட்ல,எந்த ஸ்டேட்டிற்கு அங்கிருந்து வந்துருக்காங்க செக் பண்ணி சொல்லு.