Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 703
- Thread Author
- #1
சாலா எஸ்டேட் கோத்தகிரி:
காரையை ஒட்டிக் கொண்டிருந்த நிலமாறனுக்கு தன்னவளோடு அங்கு சுற்றி திறிந்த நினைவுகள் எல்லாம் வந்தது.எங்கடி இருக்கிற?ப்ளீஸ் என்னிடம் வந்துடு டி.நடைபிணமாக சுத்திட்டு இருக்கேன் டி என்று மனதிற்குள் பேசும்போது அவன் கண்கள் கலங்கியது...
அவன் அழுவதை காருக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த கருப்பு உருவமோ அவன் கண்ணீரை துடைக்க முயல, அதால் முடியவில்லை. ஐயோ ஆண்டவரே எனக்கு எதுக்கு இப்படி ஒரு நிலைமை கொடுத்தீங்க?
என்னுடைய சோட்டு அழுவுறானே அவன் கண்ணீரை என்னால துடைக்க முடியலையே என்று அந்த கருப்பு உருவம் கதறுவது காருக்குள் இருந்த பாட்டிக்கும் பேரனுக்கும் கேட்கவில்லை.
அப்போது அவனின் பின்னால் வரும் காருடைய ஹாரன் சத்தம் கேட்க கண்ணாடி வழியாக யார் என்று பார்த்தவனுக்கு அது கவியின் கார் என்பது தெரிந்து.
பாட்டி கவிதான் பின்னாடி வராள் என்கவும் அப்படியா?ஊரிலிருந்து அவள் எப்பொழுது வந்தாளென்று தெரியலையே?.ரொம்ப நல்ல பொண்ணு பா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகள்.பணக்கார திமிர்லாம் கொஞ்சம் கூட இல்லையே என்று சொல்லிக் கொண்டிருக்க இதெல்லாம் கேட்ட கருப்பு உருவத்துக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.
இன்னும் அவள் நடிப்பை நீங்க பார்க்கவில்லையே...அப்போது பாலுக்கும் கள்ளிக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.என் சோட்டுவோட வாழ்க்கையில் இவளுக்கு இடமில்லையென்றதோ,ஏய்
நிலமாறா ஒரு முறை என்னை பாரென்றது.
கோத்தகிரி:
கவிக்கு அவர்களது எஸ்டேட்டை சுற்றி வரவே இரண்டு மணி நேரமானது. பின்னர் அங்கு நடக்கும் வேலைகளை பற்றி மேனேஜரிடம் கேட்டு தெரிந்து கொண்டவள்,காரை எடுத்துக் கொண்டு பக்கத்து எஸ்டேட்டான சாலா எஸ்டேட்டை நோக்கி சென்றாள்.
இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் இந்த சாலா ஸ்டேட் முதலாளி இந்த கவி தான் என்று கனவு உலகத்தில் மிதந்து கொண்டே அங்கு வந்தவள் காரை நிறுத்திவிட்டு ஆபீஸ் ரூம் உள்ளே வர அங்கே சாலா பாட்டியும் நிலமாறனும் வேலையாட்களுக்கான சம்பளத்தை மேனேஜரிடம் கணக்கு பண்ணி கொடுத்துக் கொண்டிருக்க நமஸ்காரம் பாட்டி என்றவாறு காலில் விழ நல்லா இருமா என்று ஆசிர்வாதம் பண்ணினார்.
இப்போ அப்பாவுக்கு எப்படி இருக்குமா என்க தந்தையை பற்றி கேட்ட உடனே உண்மையில் வருத்தப்பட்டவள் இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லைங்க பாட்டி என்று கண்கலங்கினாள்.
வருத்தப்படாதே மா.சிவத்தோட நல்ல மனசுக்கு கடவுள் எதுக்கு இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு கெட்ட நேரம் தான்.
கூடிய சீக்கிரம் நல்லபடியா ஆகிடும் என்க,சரிங்க பாட்டி என்றவளின் பார்வையோ நிலமாறன் மேல்தான் இருந்தது.அவனோ அவளைப் பார்த்து சினேகமாக சிரித்து விட்டு வேலையில் மூழ்கினான்.
அவனின் பார்வை வைத்து இவளோ அது காதல் பார்வை என்று கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் அங்கிருந்தே அந்த ஆபீஸ் ரூமையும் எஸ்டேட்டையும் சுற்றி பார்த்து பெருமூச்சு விட்டவள் சீக்கிரம் இதெல்லாம் என் கைக்குள்ளே வந்துடும்.
அதன் பிறகு நான்தான் இந்த சொத்துக்கு எஜமானி.என் இஷ்டம் போல வாழ்வேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் பாட்டி உங்களுக்கு நான் டீ போட்டு தரட்டுமா என்று பவ்யமாக கேட்க இருக்கட்டும் மா.
வா உட்காரு என தனக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தைக் காட்டி சொன்னார்.
அவளும் அமைதியான பெண்ணை போல் வந்து உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு அதன் பிறகு நடிக்க முடியவில்லை.சரிங்க பாட்டி நீங்க வேலையா இருக்கீங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்தாள்.
தனது கார் சாவியை விரலில் சுற்றிக் கொண்டே போக இனி இந்த கை கார் ஓட்டுமா என்று அவள் பின்னாடியே வந்து கருப்பு உருவமோ சூறாவளியை போல் காற்றை சுழல விட்டது.
என்ன இப்படி இருக்கு என்று தனது கண்களில் தூசி படாதவாறு மறைத்துக்கொண்டே காரில் போய் உட்கார இப்பொழுது காற்றும் நின்றது.
பின்னர் காரை ஸ்டார்ட் பண்ணி ஒட்டிக்கொண்டு அந்த மலைப்பாதையில் போனவள் திடீரென்று காரின் முன்னால் ஏதோ ஒரு உருவம் நிற்பது தெரிந்து அதிர்ந்து போய் பிரேக்கில் கால் வைப்பதாக நினைத்து ஆக்சிலேட்டரை முறுக்க வேகமாய் ஓட,அங்கிருந்த வளைவை பார்த்து காரை நிறுத்த முயல பதட்டத்தில் அவளால் எதுவும் செய்ய முடியாமல் போகவும் எதிரே இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள் ஆனது.
இதை பார்த்த கருப்பு உருவம் வெற்றி சிரிப்போடு காற்றில் மாயமானது.
தூரத்தில் வந்த காரில் இருந்தவர்கள் இதை பார்த்துவிட்டு போலீசிடம் சொல்ல அவர்கள் வந்து காப்பாற்றும் போது பலத்த அடிபட்டு கவி மயங்கி போய் கிடந்தாள்.அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
பதறி அடித்து ஹாஸ்பிட்டலுக்கு ஓடிவந்த சரோஜாவோ மகளை பார்த்து கண்ணீர் வடித்தார்.
நான்கு மணி நேரம் சென்ற பிறகு ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த டாக்டர் அங்கே அழுது கொண்டிருந்த சரோஜாவை பார்த்தவர் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிஞ்சிடுச்சு மா ஆனால் என்கவும் சொல்லுங்க டாக்டர் என்ன ஆச்சு என் பொண்ணுக்கு என்று கதறினார்...
பள்ளத்துல உருண்டு விழும் போது கார் கண்ணாடி அவங்க வயிற்றில் ஆழமாக குத்தியிருக்கு.அதனால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதாகிட்டு.
அதுமட்டுமில்லாமல் வலது பக்க கையில் 3 விரல் துண்டாக்கிட்டு.
கண்ணாடி கிளாஸ் துண்டுகள் அவங்க முகத்தில் அங்கங்கே குத்தி சிதைத்ததால் இனிமேல் அவங்களோட பேஸ் கொஞ்சம் விகாரமாக தான் இருக்கும்.
அப்புறம் மா கழுத்து எலும்பு உடைஞ்சிருக்கு மயக்கம் தெளிந்த பிறகு தான் அவங்களால் பேச முடியுமா இல்லையானு தெரியும்.
நல்லவேளை கண்ணுக்கு எதுவும் ஆகலை.காயம் எல்லாம் குணமான பிறகு நீங்க வேணா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக் கொள்ளுங்கள் மத்தபடி அவங்க எழுந்து நடக்க கண்டிப்பாக மூணு மாசத்துக்கு மேலாகும் என்றார்.
கடவுளே நான் யாருக்கு என்னப்பா தீங்கு செஞ்சேன்?ஏன் தான் என் வாழ்க்கையை இப்படி சித்திரவதை பண்ணி கொல்ற ஒரேடியா என் உசுர எடுத்துக்க வேண்டியது தானே...
புருஷனும் அங்க முடமா கிடைக்க, பொண்ணு இங்க படுத்த படுக்கையாக இருக்கிறாளே.இதெல்லாம் பார்த்துட்டு நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கிறேன் என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.
சரளா பாட்டியோ மருமகளை தேற்ற முடியாமல் கண்ணீரோடு நிற்க,செய்த பாவத்தின் பலனை அனுபவித்து தானே ஆகணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்
பாபநாசம்:
காரிலிருந்து இறங்கிய மதிவாணனும் வேதவள்ளியும் சிரித்த முகத்தோடு வீட்டிற்குள் போனவர்கள்,ஹாலில் உட்கார்ந்திருந்த தனது அம்மாவை பார்த்த மதி வேகமாக போய் தனது அன்னையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டவர் அவரது கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு நீ ஆசைப்பட்டு போலவே உன் பெரிய பேரோட கல்யாணம் நடக்க போகுதுமா.
நல்லபடியா பேச்சு முடிஞ்சிருச்சு வர 11-ம் தேதி நிச்சயதாரத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கிறேன் என்க அதைக் கேட்டவரோ நிஜமாவா என்றார்.
ஆமா மா உன் பேரனும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான் என்கவும் கடவுளே உன் சித்தம் என்றவர் கையோடு மாறனோட கல்யாணத்தை முடிச்சிடுப்பா என்கவும்,கண்டிப்பா மா என்றார்.
நேரத்திற்கு சாப்டீங்களா அத்தை என்று வேதவள்ளி கேட்க நான் சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா என்க,வரும் வழியில ஹோட்டல்ல சாப்பிட்டோமா.
அப்புறம் கோத்தகிரியில் சம்பந்தி வீட்டிலிருந்து போன் பண்ணாங்க மா ஏற்கனவே நிலமாறனுக்கும் அவங்க பொண்ணுக்கும் சம்பந்த பேசியிருந்தோம் இல்லையா... அந்த பேச்சு அப்படியே நிற்குது என்று கேட்டார்.
நான் தான் மாறன் கல்யாணம் முடிஞ்ச பிறகு,இவங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்லியிருக்கேன் என்க,நல்லது பா. காலா காலத்தோடு அவங்கவங்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டியது நம்மளோட கடமை என்றார்.
நிச்சயதார்த்த நேரத்தில் அந்த கேஸ் இந்த கேஸ்னு கிளம்பிட போறான்.அது இல்லாம ஒரு நாள் பொண்ணு வீடு பாக்குறதுக்காக எல்லாரும் போயிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டு தனது ஃபோனில் இருந்து மகனுக்கு கால் பண்ண அந்த பக்கமோ மாறன் கட் பண்ணி விட்டு மொபைலை சைலண்டில் வைத்து விட்டான்.
விக்டர் பிளாஸ் பேக்...
குழந்தையின் பெயரை கேட்டு எங்கள் இருவருக்கும் இன்னும் பிடித்து விட்டது பாதர் இந்த குழந்தையை நாங்க தத்து எடுத்துக் கொள்கிறோம் என்க...
பாதர் அகஸ்டினோ அவர்களைப் பார்த்து சிரித்தவர் இந்த குழந்தையை யாரு கொண்டு வந்து கொடுத்தாங்கனு தெரியுமா என்கவும் யாருங்க ஃபாதர் என்று விக்டரும் யோசனையாக கேட்க சந்தர் தான் கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.
என்ன பாதர் சொல்றீங்க?
சந்தர் எங்க இருக்கான்?
எப்படி இருக்கான்?
அவனுக்கும் இந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம் பாதரென்று விக்டர் பதற... இதோ வரேனென்று அவர் ரூமிற்குள் சென்றவர் கையில் ஒரு டைரியோடு வந்து விக்டரின் முன்னால் நீட்டியவர் குழந்தைக்கு சந்தருக்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த டைரியில் எழுதி இருக்கு இதை படித்து பார்த்துட்டு யோசித்து முடிவு பண்ணுங்க என்றார்.
டைரியை வாங்கி பியூலாவிடம் கொடுத்தவன் இந்த டைரியில் என்ன இருக்குன்னு இப்போதைக்கு எனக்கு தெரிய வேணாம்.
பியூலாவுக்கு இந்த குழந்தை ரொம்ப பிடிச்சிருக்கு இந்த நிமிஷத்திலிருந்து வெரோனிகா இந்த விக்டர் பியூலாவோட குழந்தை.சட்டப்படி இவளை நாங்க தத்து எடுத்துக்கிறோம் அதற்காக ஏற்பாடு பண்ணுங்கள் என்க காட் பிளஸ் யூ மை சைல்ட் என்று மூவரின் நெற்றியிலும் சிலுவை போட்டார்.
அதேபோல் இரண்டு நாளில் வெரோனிகாவை அவர்கள் மகளாக தத்து எடுத்தவர்கள் பாதர் அகஸ்டினிடம் சொல்லிக் கொண்டு சென்னைக்கு வந்தனர்.
அப்பொழுது ஜெர்மனியில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் ப்ரபோசர் வேலை வேகன்ஸி இருப்பதை இன்டர்நெட்டில் பார்த்த விக்டர் அதுக்கு அப்ளை பண்ண அவருக்கும் அங்கே ஜாப் கிடைத்துவிட்டது.
குழந்தையையும் மனைவியையும் இங்கு பத்திரமாக இருக்கு சொல்லி விட்டு ஜெர்மனிக்கு வந்தவர் யுனிவர்சிட்டியில் ஜாயின் பண்ணினார். பின்னர் வெரோனிகாவிற்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ணினார்கள்.
ஒரு நாள் பியூலா தனது மகளோடு பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்றிருக்கும் போது பெண்மணி ஒருவர் மயங்கி விழுவதை பார்த்து இருவரும் ஓடிப்போனார்கள்.
தன்னிடமிருந்த தண்ணியை எடுத்து வெரோனிகா கொடுக்க மகளை பார்த்து சிரித்த பியூலாவோ அதை வாங்கி அவர் முகத்தில் தெளித்தார்.மயக்கம் தெளிந்து எழுந்து பெண்மணியோ ரொம்ப நன்றி மா.ரெண்டு நாளா சாப்பிடல அதனாலதான் மயங்கிட்டேன் என்கவும் வாங்கா கா.எங்க வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு சாப்பிடலாம் என்றாள்.
காரையை ஒட்டிக் கொண்டிருந்த நிலமாறனுக்கு தன்னவளோடு அங்கு சுற்றி திறிந்த நினைவுகள் எல்லாம் வந்தது.எங்கடி இருக்கிற?ப்ளீஸ் என்னிடம் வந்துடு டி.நடைபிணமாக சுத்திட்டு இருக்கேன் டி என்று மனதிற்குள் பேசும்போது அவன் கண்கள் கலங்கியது...
அவன் அழுவதை காருக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த கருப்பு உருவமோ அவன் கண்ணீரை துடைக்க முயல, அதால் முடியவில்லை. ஐயோ ஆண்டவரே எனக்கு எதுக்கு இப்படி ஒரு நிலைமை கொடுத்தீங்க?
என்னுடைய சோட்டு அழுவுறானே அவன் கண்ணீரை என்னால துடைக்க முடியலையே என்று அந்த கருப்பு உருவம் கதறுவது காருக்குள் இருந்த பாட்டிக்கும் பேரனுக்கும் கேட்கவில்லை.
அப்போது அவனின் பின்னால் வரும் காருடைய ஹாரன் சத்தம் கேட்க கண்ணாடி வழியாக யார் என்று பார்த்தவனுக்கு அது கவியின் கார் என்பது தெரிந்து.
பாட்டி கவிதான் பின்னாடி வராள் என்கவும் அப்படியா?ஊரிலிருந்து அவள் எப்பொழுது வந்தாளென்று தெரியலையே?.ரொம்ப நல்ல பொண்ணு பா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகள்.பணக்கார திமிர்லாம் கொஞ்சம் கூட இல்லையே என்று சொல்லிக் கொண்டிருக்க இதெல்லாம் கேட்ட கருப்பு உருவத்துக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.
இன்னும் அவள் நடிப்பை நீங்க பார்க்கவில்லையே...அப்போது பாலுக்கும் கள்ளிக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.என் சோட்டுவோட வாழ்க்கையில் இவளுக்கு இடமில்லையென்றதோ,ஏய்
நிலமாறா ஒரு முறை என்னை பாரென்றது.
கோத்தகிரி:
கவிக்கு அவர்களது எஸ்டேட்டை சுற்றி வரவே இரண்டு மணி நேரமானது. பின்னர் அங்கு நடக்கும் வேலைகளை பற்றி மேனேஜரிடம் கேட்டு தெரிந்து கொண்டவள்,காரை எடுத்துக் கொண்டு பக்கத்து எஸ்டேட்டான சாலா எஸ்டேட்டை நோக்கி சென்றாள்.
இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் இந்த சாலா ஸ்டேட் முதலாளி இந்த கவி தான் என்று கனவு உலகத்தில் மிதந்து கொண்டே அங்கு வந்தவள் காரை நிறுத்திவிட்டு ஆபீஸ் ரூம் உள்ளே வர அங்கே சாலா பாட்டியும் நிலமாறனும் வேலையாட்களுக்கான சம்பளத்தை மேனேஜரிடம் கணக்கு பண்ணி கொடுத்துக் கொண்டிருக்க நமஸ்காரம் பாட்டி என்றவாறு காலில் விழ நல்லா இருமா என்று ஆசிர்வாதம் பண்ணினார்.
இப்போ அப்பாவுக்கு எப்படி இருக்குமா என்க தந்தையை பற்றி கேட்ட உடனே உண்மையில் வருத்தப்பட்டவள் இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லைங்க பாட்டி என்று கண்கலங்கினாள்.
வருத்தப்படாதே மா.சிவத்தோட நல்ல மனசுக்கு கடவுள் எதுக்கு இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு கெட்ட நேரம் தான்.
கூடிய சீக்கிரம் நல்லபடியா ஆகிடும் என்க,சரிங்க பாட்டி என்றவளின் பார்வையோ நிலமாறன் மேல்தான் இருந்தது.அவனோ அவளைப் பார்த்து சினேகமாக சிரித்து விட்டு வேலையில் மூழ்கினான்.
அவனின் பார்வை வைத்து இவளோ அது காதல் பார்வை என்று கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் அங்கிருந்தே அந்த ஆபீஸ் ரூமையும் எஸ்டேட்டையும் சுற்றி பார்த்து பெருமூச்சு விட்டவள் சீக்கிரம் இதெல்லாம் என் கைக்குள்ளே வந்துடும்.
அதன் பிறகு நான்தான் இந்த சொத்துக்கு எஜமானி.என் இஷ்டம் போல வாழ்வேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் பாட்டி உங்களுக்கு நான் டீ போட்டு தரட்டுமா என்று பவ்யமாக கேட்க இருக்கட்டும் மா.
வா உட்காரு என தனக்கு பக்கத்தில் இருக்கும் இடத்தைக் காட்டி சொன்னார்.
அவளும் அமைதியான பெண்ணை போல் வந்து உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தவர்களுக்கு அதன் பிறகு நடிக்க முடியவில்லை.சரிங்க பாட்டி நீங்க வேலையா இருக்கீங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்தாள்.
தனது கார் சாவியை விரலில் சுற்றிக் கொண்டே போக இனி இந்த கை கார் ஓட்டுமா என்று அவள் பின்னாடியே வந்து கருப்பு உருவமோ சூறாவளியை போல் காற்றை சுழல விட்டது.
என்ன இப்படி இருக்கு என்று தனது கண்களில் தூசி படாதவாறு மறைத்துக்கொண்டே காரில் போய் உட்கார இப்பொழுது காற்றும் நின்றது.
பின்னர் காரை ஸ்டார்ட் பண்ணி ஒட்டிக்கொண்டு அந்த மலைப்பாதையில் போனவள் திடீரென்று காரின் முன்னால் ஏதோ ஒரு உருவம் நிற்பது தெரிந்து அதிர்ந்து போய் பிரேக்கில் கால் வைப்பதாக நினைத்து ஆக்சிலேட்டரை முறுக்க வேகமாய் ஓட,அங்கிருந்த வளைவை பார்த்து காரை நிறுத்த முயல பதட்டத்தில் அவளால் எதுவும் செய்ய முடியாமல் போகவும் எதிரே இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள் ஆனது.
இதை பார்த்த கருப்பு உருவம் வெற்றி சிரிப்போடு காற்றில் மாயமானது.
தூரத்தில் வந்த காரில் இருந்தவர்கள் இதை பார்த்துவிட்டு போலீசிடம் சொல்ல அவர்கள் வந்து காப்பாற்றும் போது பலத்த அடிபட்டு கவி மயங்கி போய் கிடந்தாள்.அவளை ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
பதறி அடித்து ஹாஸ்பிட்டலுக்கு ஓடிவந்த சரோஜாவோ மகளை பார்த்து கண்ணீர் வடித்தார்.
நான்கு மணி நேரம் சென்ற பிறகு ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த டாக்டர் அங்கே அழுது கொண்டிருந்த சரோஜாவை பார்த்தவர் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிஞ்சிடுச்சு மா ஆனால் என்கவும் சொல்லுங்க டாக்டர் என்ன ஆச்சு என் பொண்ணுக்கு என்று கதறினார்...
பள்ளத்துல உருண்டு விழும் போது கார் கண்ணாடி அவங்க வயிற்றில் ஆழமாக குத்தியிருக்கு.அதனால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதாகிட்டு.
அதுமட்டுமில்லாமல் வலது பக்க கையில் 3 விரல் துண்டாக்கிட்டு.
கண்ணாடி கிளாஸ் துண்டுகள் அவங்க முகத்தில் அங்கங்கே குத்தி சிதைத்ததால் இனிமேல் அவங்களோட பேஸ் கொஞ்சம் விகாரமாக தான் இருக்கும்.
அப்புறம் மா கழுத்து எலும்பு உடைஞ்சிருக்கு மயக்கம் தெளிந்த பிறகு தான் அவங்களால் பேச முடியுமா இல்லையானு தெரியும்.
நல்லவேளை கண்ணுக்கு எதுவும் ஆகலை.காயம் எல்லாம் குணமான பிறகு நீங்க வேணா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக் கொள்ளுங்கள் மத்தபடி அவங்க எழுந்து நடக்க கண்டிப்பாக மூணு மாசத்துக்கு மேலாகும் என்றார்.
கடவுளே நான் யாருக்கு என்னப்பா தீங்கு செஞ்சேன்?ஏன் தான் என் வாழ்க்கையை இப்படி சித்திரவதை பண்ணி கொல்ற ஒரேடியா என் உசுர எடுத்துக்க வேண்டியது தானே...
புருஷனும் அங்க முடமா கிடைக்க, பொண்ணு இங்க படுத்த படுக்கையாக இருக்கிறாளே.இதெல்லாம் பார்த்துட்டு நான் ஏன் இன்னும் உயிரோட இருக்கிறேன் என்று தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.
சரளா பாட்டியோ மருமகளை தேற்ற முடியாமல் கண்ணீரோடு நிற்க,செய்த பாவத்தின் பலனை அனுபவித்து தானே ஆகணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்
பாபநாசம்:
காரிலிருந்து இறங்கிய மதிவாணனும் வேதவள்ளியும் சிரித்த முகத்தோடு வீட்டிற்குள் போனவர்கள்,ஹாலில் உட்கார்ந்திருந்த தனது அம்மாவை பார்த்த மதி வேகமாக போய் தனது அன்னையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டவர் அவரது கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு நீ ஆசைப்பட்டு போலவே உன் பெரிய பேரோட கல்யாணம் நடக்க போகுதுமா.
நல்லபடியா பேச்சு முடிஞ்சிருச்சு வர 11-ம் தேதி நிச்சயதாரத்துக்கு நாள் குறிச்சிட்டு வந்திருக்கிறேன் என்க அதைக் கேட்டவரோ நிஜமாவா என்றார்.
ஆமா மா உன் பேரனும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான் என்கவும் கடவுளே உன் சித்தம் என்றவர் கையோடு மாறனோட கல்யாணத்தை முடிச்சிடுப்பா என்கவும்,கண்டிப்பா மா என்றார்.
நேரத்திற்கு சாப்டீங்களா அத்தை என்று வேதவள்ளி கேட்க நான் சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா என்க,வரும் வழியில ஹோட்டல்ல சாப்பிட்டோமா.
அப்புறம் கோத்தகிரியில் சம்பந்தி வீட்டிலிருந்து போன் பண்ணாங்க மா ஏற்கனவே நிலமாறனுக்கும் அவங்க பொண்ணுக்கும் சம்பந்த பேசியிருந்தோம் இல்லையா... அந்த பேச்சு அப்படியே நிற்குது என்று கேட்டார்.
நான் தான் மாறன் கல்யாணம் முடிஞ்ச பிறகு,இவங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்லியிருக்கேன் என்க,நல்லது பா. காலா காலத்தோடு அவங்கவங்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டியது நம்மளோட கடமை என்றார்.
நிச்சயதார்த்த நேரத்தில் அந்த கேஸ் இந்த கேஸ்னு கிளம்பிட போறான்.அது இல்லாம ஒரு நாள் பொண்ணு வீடு பாக்குறதுக்காக எல்லாரும் போயிட்டு வரலாம் என்று சொல்லிக்கொண்டு தனது ஃபோனில் இருந்து மகனுக்கு கால் பண்ண அந்த பக்கமோ மாறன் கட் பண்ணி விட்டு மொபைலை சைலண்டில் வைத்து விட்டான்.
விக்டர் பிளாஸ் பேக்...
குழந்தையின் பெயரை கேட்டு எங்கள் இருவருக்கும் இன்னும் பிடித்து விட்டது பாதர் இந்த குழந்தையை நாங்க தத்து எடுத்துக் கொள்கிறோம் என்க...
பாதர் அகஸ்டினோ அவர்களைப் பார்த்து சிரித்தவர் இந்த குழந்தையை யாரு கொண்டு வந்து கொடுத்தாங்கனு தெரியுமா என்கவும் யாருங்க ஃபாதர் என்று விக்டரும் யோசனையாக கேட்க சந்தர் தான் கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.
என்ன பாதர் சொல்றீங்க?
சந்தர் எங்க இருக்கான்?
எப்படி இருக்கான்?
அவனுக்கும் இந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம் பாதரென்று விக்டர் பதற... இதோ வரேனென்று அவர் ரூமிற்குள் சென்றவர் கையில் ஒரு டைரியோடு வந்து விக்டரின் முன்னால் நீட்டியவர் குழந்தைக்கு சந்தருக்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த டைரியில் எழுதி இருக்கு இதை படித்து பார்த்துட்டு யோசித்து முடிவு பண்ணுங்க என்றார்.
டைரியை வாங்கி பியூலாவிடம் கொடுத்தவன் இந்த டைரியில் என்ன இருக்குன்னு இப்போதைக்கு எனக்கு தெரிய வேணாம்.
பியூலாவுக்கு இந்த குழந்தை ரொம்ப பிடிச்சிருக்கு இந்த நிமிஷத்திலிருந்து வெரோனிகா இந்த விக்டர் பியூலாவோட குழந்தை.சட்டப்படி இவளை நாங்க தத்து எடுத்துக்கிறோம் அதற்காக ஏற்பாடு பண்ணுங்கள் என்க காட் பிளஸ் யூ மை சைல்ட் என்று மூவரின் நெற்றியிலும் சிலுவை போட்டார்.
அதேபோல் இரண்டு நாளில் வெரோனிகாவை அவர்கள் மகளாக தத்து எடுத்தவர்கள் பாதர் அகஸ்டினிடம் சொல்லிக் கொண்டு சென்னைக்கு வந்தனர்.
அப்பொழுது ஜெர்மனியில் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் ப்ரபோசர் வேலை வேகன்ஸி இருப்பதை இன்டர்நெட்டில் பார்த்த விக்டர் அதுக்கு அப்ளை பண்ண அவருக்கும் அங்கே ஜாப் கிடைத்துவிட்டது.
குழந்தையையும் மனைவியையும் இங்கு பத்திரமாக இருக்கு சொல்லி விட்டு ஜெர்மனிக்கு வந்தவர் யுனிவர்சிட்டியில் ஜாயின் பண்ணினார். பின்னர் வெரோனிகாவிற்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ணினார்கள்.
ஒரு நாள் பியூலா தனது மகளோடு பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு சென்றிருக்கும் போது பெண்மணி ஒருவர் மயங்கி விழுவதை பார்த்து இருவரும் ஓடிப்போனார்கள்.
தன்னிடமிருந்த தண்ணியை எடுத்து வெரோனிகா கொடுக்க மகளை பார்த்து சிரித்த பியூலாவோ அதை வாங்கி அவர் முகத்தில் தெளித்தார்.மயக்கம் தெளிந்து எழுந்து பெண்மணியோ ரொம்ப நன்றி மா.ரெண்டு நாளா சாப்பிடல அதனாலதான் மயங்கிட்டேன் என்கவும் வாங்கா கா.எங்க வீடு இங்க பக்கத்துல தான் இருக்கு சாப்பிடலாம் என்றாள்.