Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 697
- Thread Author
- #1
மன்னார்குடி:
பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பேத்தியை பார்த்தவர் இந்த கல்யாணம் முடியிற வரைக்கும் உன் வால சுருட்டி கிட்டு ஒழுங்கா இருக்கணும் புரியுதா?
ஏதாச்சு சொதப்பி இந்த சம்பந்தம் கைநழுவி போனது நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்று வேலன் கோவமாக சொல்ல,என்னைக்கு தான் நீங்க மனுஷனா இருந்தீர்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட கவி சரிங்க தாத்தா என்றாள்.
ஹம் என்றவர் என்ன உன் முகம் சரியில்லையே?தாத்தாவை மனசுக்குள்ள திட்டுறியா என்று கேட்க கடவுளே இந்த தாத்தா கிட்ட மனசுல கூட பேச முடியலை என்ன கொடுமை இதெல்லாம் என்று நினைத்தவள் ஐயோ தாத்தா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையென்றாள்.
எஸ் ஒன்னும் இருக்கக் கூடாது. உனக்காக தாத்தா எவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கேன் ஞாபகம் இருக்கா?.ஏனெனில் என் பேத்தி ராஜா வாழ்க்கை வாழணும் என்பதற்காக தான்.
நீ நல்லா இருந்தா எனக்கு சந்தோஷம் பெருமை தானே என்று வேலன் கேட்க,அதையெல்லாம் எப்படி தாத்தா என்னால மறக்க முடியும் என்று கேட்கும்போதே கவியின் உள்ளுக்குள் ஒரு திகில் பரவியது.
முகம் வெளிரி காணப்படும் பேத்தியின் முகத்தை பார்த்தவர் பயப்படுறியா?எதுக்கு தேவையில்லாத பயம்? நம்மளோட முதல் எதிரிய பயம் அதை வளரவே விட கூடாதுன்னு உனக்கு பலவாட்டி சொல்லிட்டேன் எங்களுக்கு அடுத்தது இந்த சொத்தை எல்லாம் கட்டி காப்பாற்ற போல ஆளு நீ மட்டும் தான் எவ்வளவு தைரியமாக இருக்கணும் என்கவும் சரிங்க தாத்தா என்றாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அங்கே வாசல் பக்கம் நின்றிருந்த கருப்பு உருவமோ,இப்போது தான ஆரம்பிச்சிருக்கேன்...உங்கள் ஆட்டத்தையும் பார்த்திரலாம் என்று கண்ணில் பழி வெறி மின்ன பார்த்துக் கொண்டிருந்தது....
கோத்தகிரி-சாலா எஸ்டேட்:
கதவை திறந்து உள்ளே வந்த வேலையாள் அங்கே சேரில் கம்பீரமாக உட்கார்ந்திருப்பவரை பார்த்து நிலன் தம்பி இன்னும் சாப்பிட வரலைங்க பெரியம்மா என்கவும்,அதை கேட்ட சாலாட்சி பாட்டி நான் பாக்குறேன்.
நீங்கள் சாப்பாடு எடுத்து வைங்களென்று கையிலிருந்த வரவு செலவு நோட்டை மூடி வைத்து எழுந்தவர் அப்பனே செந்தூர் முருகா ஏன் பா இப்படி ஒரு சோதனை?.
தெரிந்தும் தெரியாமலும் நான் எந்த பாவமும் பண்ணியதில்லையே பிறகு எதுக்கு இடி மேல் இடியாக என் தலையில் இறக்குறப்பா என்று அங்கே ஆளுயரத்தில் சுவற்றில் தொங்கி கொண்டிருக்கும் முருகனின் போட்டோவை பார்த்து பேசியவர், இன்னும் எனக்கு என்னவெல்லாம் வைத்திருக்க என்றவாறு கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தவர் படியில் ஏறி பேரனின் ரூமிற்கு முன்பு வந்து நின்று கதவை தட்டினார்.
சிறிது நொடிகள் சென்று கதவு திறக்கப் பட அங்கிருந்த பேரனை பார்த்தவர் வா கண்ணா சாப்பிடு என்றவாறு பேரனின் தாடி மண்டிய கன்னத்தை தடவிக் கொண்டு சொல்ல,ம்கும் என விரக்தியாக சிரித்தான்.
போனவளை நினைத்து இருக்கிறவர்களை கொல்வது எவ்வகை நியாயம் கண்ணா?
உன் தாத்தா அந்த வயதில் என்னை விட்டு போன போது உன்னை போல நானும் இருந்திருந்தால் இன்று என் வம்சம் இருக்குமா? என் பிள்ளைகள் மூன்று பேரும் என்னவாகிருப்பார்கள்?
ஏன் எனக்கு வேதனை இல்லையா?என்று கோவமாக கேட்க,எதுவும் செல்லாமல் நிற்பவனை பார்த்தவர் வா சாப்பிடலாமென்று அங்கிருந்து செல்ல,அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக பாட்டியின் பின்னால் வந்தான்.
சுமதி,நிலனுக்கு டிபன் எடுத்து வை மா என்று சாலாட்சி பாட்டி குரல் கொடுத்தார்.தட்டில் பரிமாறப்பட்ட உணவு அவனுக்கு பிடித்தமானது தான்
ஆனால் தொண்டையில் இறங்காமல் எட்டிக்காய் போல கசந்தது.
கண்ணா இன்றைக்கு நம்ப எஸ்டேட்டில் சம்பளம் போடும் நாள்.சாப்பிட்டு கிளம்புற வழியை பாரென்றவர் மனதிற்குள் சில கணக்குகளை போடும் போது அவர் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்டு டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்தவர் அட்டென் பண்ணி சொல்லு மதி என்க...
அத்தை நல்லாயிருக்கீங்களாயென அந்த பக்கமிருந்து மதிவாணன் விசாரிக்க நல்லா இருக்கேன் பா.போன காரியம் என்னாச்சு பா?
இதாவது முடியுமா?.
சந்தோஷமான செய்திதான்.மாறனும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டாங்கத்தை.கையோடு நிச்சய தேதியையும் குறிச்சிட்டு வந்துட்டோம்.
"ரொம்ப சந்தோஷம் மதி"
எங்கே பெரியவனை போல இவனும் இருந்திடுவானோனு பயந்துட்டே இருந்தேன்.அந்த செந்தூரன் புண்ணியத்தில் நல்லது நடக்கப்போகிறது என்றவர் தனது மகள் வேதவள்ளியிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவர் கண்ணா மாறனுக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி பொண்ணு வீட்டில் நிச்சயதார்த்தம் பா என்க,அப்படியா என்று சந்தோஷப்பட்டான்.
மூன்று மாதங்களுக்கு பிறகு பேரனின் முகத்தில் சிரிப்பை பார்த்தவருக்கு இந்த சிரிப்பு எப்போதும் உன்னிடம் இருக்கணும் கண்ணா என்க,மீண்டும் தனது கூட்டுக்குள் நத்தை போல சுருண்டவன் வேக வேகமாக சாப்பிட்டு எழுந்தவன் நான் ரெடியாகி வரேனென்று அவனது அறைக்குள் வந்தவன்,எங்க டி போன? உயிரே நானென்று சொன்னியேடி,பிறகு ஏன் விட்டுட்டு போன?.இந்த காதல் மயிறுலாம் வேண்டானு இருந்தேன் டி.என்னைக்கு உன்னை பார்த்தேனோ அன்னைக்கே உன் மேல பைத்தியமாகிட்டேன்.
உனக்கு என்ன பிரச்சனை டி?
எதோ என்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன,அது தானே நீ என் கிட்ட பேசிய கடைசி வார்த்தை என்று கண்ணீரோடு சொல்லிக் கொண்டே தயாராகி கீழே வந்தவன் போகலாம் பாட்டியென்க,ஹம் கண்ணா என்றவாறு எழுந்தவர் பேரனோடு அவர்கள் எஸ்டேட்டை நோக்கி காரில் சென்றனர்.
சூடாமணி:
மலரு 11 ஆம் தேதி உனக்கு நிச்சயதார்த்தம்னு முடிவு பண்ணியிருக்கு.ஆனால் இதுவரை மாப்பிள்ளை பற்றி எதுவுமே நீ தெரிந்து கொள்ளவில்லையே மா என்று புகழேந்தி கேட்க,நீங்கள் எனக்கு கெடுதலா பா பண்ணிடப் போறீங்க நல்லது தானே பண்ணுவீங்க உங்களுக்கு புடிச்சிருக்கு இல்ல அது போதும் என்றாள்.
தனது மகளை நினைத்து கர்வப்பட்டவர் பார்த்தியாடி குமாரி,என் பொண்ணு ஒரே வார்த்தையில் சொல்லிட்டாள்.
நீ தான் என்னமோ புலம்பிட்டு கடந்த, இனி உனக்கு சந்தோஷம் தானே என்று மனைவியிடம் கேட்க,ஏங்க எனக்கு மட்டும் நம்ம புள்ளைக்கு நல்லது நடக்கணும்னு ஆசை இருக்காதா?
கடைசி வரைக்கும் கூட இருந்து வாழ போறது நம்ப ஒன்னும் கிடையாது. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது பெற்றோரா நம்மளோட கடமை.
உனக்கு யார் மேலயாவது விருப்பம் இருந்தா சொல்லு அந்த பையன் கூடயே கல்யாணம் பண்ணி வைக்கிறோமேன்று நாமளும் பலமுறை கேட்டு விட்டோம்.
ஊர் உலகத்துல நடக்கிறது எல்லாம் நம்ம ஒன்னும் பாக்காம கண்ண மூடிகிட்டு இல்லையே.இது வாழ்க்கை பிரச்சனைங்க அவளுக்கு பிடித்த போல இருக்கணும்னு நினைக்கிறது ஒரு தாயா தப்பா என்கவும்,உன்ன நான் குறை சொல்ல குமாரி.
நல்ல குடும்பம் நல்ல பையன் கை நிறைய சம்பாதிக்கிறான் கௌரவமான வேலை ஆனா பையன பத்தி மலரு எதையுமே இதுவரைக்கும் தெரிஞ்சுக்கல என்பது தான் உனக்கு வருத்தம் அப்படித்தானே எங்கவும் ஆமாங்க என்றார்.
நீதான் மாப்பிள்ளை பத்தி தெரிஞ்சுக்கியேமா உன் அம்மா நிம்மதியா இருப்பாளே என்று மகளை பார்க்க,இருக்கட்டும் பா நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா விசாரிச்சிட்டிங்களே அது போதும் என்றவள் சரிப்பா நான் மஞ்சுகூட வெளியே போயிட்டு வரேன் என்கவும், சரி பார்த்து போஙாக என்கவும் மஞ்சுவும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு தோழியை முறைத்தபடி வெளியே போக மலரும் தனது ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
இருவரும் அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் வழக்கமாக செல்லும் அம்மன் கோயிலுக்கு போனாளுங்கள்.
நல்லதோ கெட்டதோ இருவருக்கும் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த அம்மன் கோயில் சன்னதியில் உட்கார்ந்து கொண்டுதான் இருவரும் பேசிப்பாளுங்கள்.
ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே வந்தவர்கள் கர்ப்பகிரகத்தில் இருக்கும் பேச்சியம்மனை கண்ணை மூடி வணங்கினார்கள்.
அம்மா தாயே இந்த திருமணம் நல்லபடியாக முடியணும் என்று மஞ்சு வேண்டிக் கொள்ள,மலரோ உனக்கு என்ன சித்தமோ அப்படியே செய்யு மா என்றாள்.
அய்யரும் தீபாரதனை தட்டோடு வர இருவரும் கண்களை திறந்து ஆரத்தி எடுத்து கண்ணில் வைத்தவளுங்கள் விபூதி குங்குமத்தை வாங்கிக் கொண்டு கோயிலை சுற்றி வந்து அவர்கள் வழக்கமாக உட்காரும் தியான மண்டபத்தில் போய் ஆளுக்கு ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்கள்
சென்னை:
நீண்ட வருடங்களுக்கு பிறகு காமாட்சியின் கைப்பக்குவத்தை ரசித்து சாப்பிட்டவர்களோ பெரிய ஏப்பத்தை விட்டுக்கொண்டு அங்கிருந்த சோபாவில் வந்து உட்கார்ந்தார்கள்.
அவர்களுக்கு எதிரே வந்து உட்கார்ந்த காமாட்சியோ மாறனை பார்க்க,எதுக்கு இப்படி பார்க்கிறாய் என்றான். பொண்ணு ரொம்ப நல்லா இருக்கு என்கவும்,மாமாவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்றதுக்கு என்ன ஒரு தாராள மனசு.உன்னை போல பொண்டாட்டி இருந்தால் ஊர் உலகத்தில் டைவர்ஸ் இருக்காதென்கும் மருமகனை முறைத்து பார்த்தவர் நான் உனக்கு சொன்னேன் என்றார்.
ஓ எனக்கா என்றவன்,அதான் குடும்பமாக ஒன்று கூடி என்னை கும்மி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களே வேற என்ன பண்றது என்று கடுப்பில் சொன்னான்.
கல்யாணம் என்றால் ஏன்டா இவ்வளவு கடுப்பாகுற நீ? பெரிய மாமா கூட இருந்து நீயும் அவரை போல் ஆகலாம்னு இருக்கிறியா என்று கொஞ்சம் கோபமாகவே காமாட்சி கேட்க, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லத்தை என்றான்.
பின்ன வேற ஏதாச்சும் காரணம் சொல்லு?
காதல் தோல்வியா? இல்லை யாரையாச்சும் மனசுல நினைச்சுகிட்டு இருக்கியா சொல்லு டா என்க இதை கேட்ட நிலவனோ இந்த சிடு மூஞ்சிக்கு காதலா என்று சத்தமாக சிரித்தான்.
பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பேத்தியை பார்த்தவர் இந்த கல்யாணம் முடியிற வரைக்கும் உன் வால சுருட்டி கிட்டு ஒழுங்கா இருக்கணும் புரியுதா?
ஏதாச்சு சொதப்பி இந்த சம்பந்தம் கைநழுவி போனது நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் என்று வேலன் கோவமாக சொல்ல,என்னைக்கு தான் நீங்க மனுஷனா இருந்தீர்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட கவி சரிங்க தாத்தா என்றாள்.
ஹம் என்றவர் என்ன உன் முகம் சரியில்லையே?தாத்தாவை மனசுக்குள்ள திட்டுறியா என்று கேட்க கடவுளே இந்த தாத்தா கிட்ட மனசுல கூட பேச முடியலை என்ன கொடுமை இதெல்லாம் என்று நினைத்தவள் ஐயோ தாத்தா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையென்றாள்.
எஸ் ஒன்னும் இருக்கக் கூடாது. உனக்காக தாத்தா எவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்கேன் ஞாபகம் இருக்கா?.ஏனெனில் என் பேத்தி ராஜா வாழ்க்கை வாழணும் என்பதற்காக தான்.
நீ நல்லா இருந்தா எனக்கு சந்தோஷம் பெருமை தானே என்று வேலன் கேட்க,அதையெல்லாம் எப்படி தாத்தா என்னால மறக்க முடியும் என்று கேட்கும்போதே கவியின் உள்ளுக்குள் ஒரு திகில் பரவியது.
முகம் வெளிரி காணப்படும் பேத்தியின் முகத்தை பார்த்தவர் பயப்படுறியா?எதுக்கு தேவையில்லாத பயம்? நம்மளோட முதல் எதிரிய பயம் அதை வளரவே விட கூடாதுன்னு உனக்கு பலவாட்டி சொல்லிட்டேன் எங்களுக்கு அடுத்தது இந்த சொத்தை எல்லாம் கட்டி காப்பாற்ற போல ஆளு நீ மட்டும் தான் எவ்வளவு தைரியமாக இருக்கணும் என்கவும் சரிங்க தாத்தா என்றாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அங்கே வாசல் பக்கம் நின்றிருந்த கருப்பு உருவமோ,இப்போது தான ஆரம்பிச்சிருக்கேன்...உங்கள் ஆட்டத்தையும் பார்த்திரலாம் என்று கண்ணில் பழி வெறி மின்ன பார்த்துக் கொண்டிருந்தது....
கோத்தகிரி-சாலா எஸ்டேட்:
கதவை திறந்து உள்ளே வந்த வேலையாள் அங்கே சேரில் கம்பீரமாக உட்கார்ந்திருப்பவரை பார்த்து நிலன் தம்பி இன்னும் சாப்பிட வரலைங்க பெரியம்மா என்கவும்,அதை கேட்ட சாலாட்சி பாட்டி நான் பாக்குறேன்.
நீங்கள் சாப்பாடு எடுத்து வைங்களென்று கையிலிருந்த வரவு செலவு நோட்டை மூடி வைத்து எழுந்தவர் அப்பனே செந்தூர் முருகா ஏன் பா இப்படி ஒரு சோதனை?.
தெரிந்தும் தெரியாமலும் நான் எந்த பாவமும் பண்ணியதில்லையே பிறகு எதுக்கு இடி மேல் இடியாக என் தலையில் இறக்குறப்பா என்று அங்கே ஆளுயரத்தில் சுவற்றில் தொங்கி கொண்டிருக்கும் முருகனின் போட்டோவை பார்த்து பேசியவர், இன்னும் எனக்கு என்னவெல்லாம் வைத்திருக்க என்றவாறு கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தவர் படியில் ஏறி பேரனின் ரூமிற்கு முன்பு வந்து நின்று கதவை தட்டினார்.
சிறிது நொடிகள் சென்று கதவு திறக்கப் பட அங்கிருந்த பேரனை பார்த்தவர் வா கண்ணா சாப்பிடு என்றவாறு பேரனின் தாடி மண்டிய கன்னத்தை தடவிக் கொண்டு சொல்ல,ம்கும் என விரக்தியாக சிரித்தான்.
போனவளை நினைத்து இருக்கிறவர்களை கொல்வது எவ்வகை நியாயம் கண்ணா?
உன் தாத்தா அந்த வயதில் என்னை விட்டு போன போது உன்னை போல நானும் இருந்திருந்தால் இன்று என் வம்சம் இருக்குமா? என் பிள்ளைகள் மூன்று பேரும் என்னவாகிருப்பார்கள்?
ஏன் எனக்கு வேதனை இல்லையா?என்று கோவமாக கேட்க,எதுவும் செல்லாமல் நிற்பவனை பார்த்தவர் வா சாப்பிடலாமென்று அங்கிருந்து செல்ல,அவனோ எதுவும் சொல்லாமல் அமைதியாக பாட்டியின் பின்னால் வந்தான்.
சுமதி,நிலனுக்கு டிபன் எடுத்து வை மா என்று சாலாட்சி பாட்டி குரல் கொடுத்தார்.தட்டில் பரிமாறப்பட்ட உணவு அவனுக்கு பிடித்தமானது தான்
ஆனால் தொண்டையில் இறங்காமல் எட்டிக்காய் போல கசந்தது.
கண்ணா இன்றைக்கு நம்ப எஸ்டேட்டில் சம்பளம் போடும் நாள்.சாப்பிட்டு கிளம்புற வழியை பாரென்றவர் மனதிற்குள் சில கணக்குகளை போடும் போது அவர் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்டு டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்தவர் அட்டென் பண்ணி சொல்லு மதி என்க...
அத்தை நல்லாயிருக்கீங்களாயென அந்த பக்கமிருந்து மதிவாணன் விசாரிக்க நல்லா இருக்கேன் பா.போன காரியம் என்னாச்சு பா?
இதாவது முடியுமா?.
சந்தோஷமான செய்திதான்.மாறனும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டாங்கத்தை.கையோடு நிச்சய தேதியையும் குறிச்சிட்டு வந்துட்டோம்.
"ரொம்ப சந்தோஷம் மதி"
எங்கே பெரியவனை போல இவனும் இருந்திடுவானோனு பயந்துட்டே இருந்தேன்.அந்த செந்தூரன் புண்ணியத்தில் நல்லது நடக்கப்போகிறது என்றவர் தனது மகள் வேதவள்ளியிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தவர் கண்ணா மாறனுக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி பொண்ணு வீட்டில் நிச்சயதார்த்தம் பா என்க,அப்படியா என்று சந்தோஷப்பட்டான்.
மூன்று மாதங்களுக்கு பிறகு பேரனின் முகத்தில் சிரிப்பை பார்த்தவருக்கு இந்த சிரிப்பு எப்போதும் உன்னிடம் இருக்கணும் கண்ணா என்க,மீண்டும் தனது கூட்டுக்குள் நத்தை போல சுருண்டவன் வேக வேகமாக சாப்பிட்டு எழுந்தவன் நான் ரெடியாகி வரேனென்று அவனது அறைக்குள் வந்தவன்,எங்க டி போன? உயிரே நானென்று சொன்னியேடி,பிறகு ஏன் விட்டுட்டு போன?.இந்த காதல் மயிறுலாம் வேண்டானு இருந்தேன் டி.என்னைக்கு உன்னை பார்த்தேனோ அன்னைக்கே உன் மேல பைத்தியமாகிட்டேன்.
உனக்கு என்ன பிரச்சனை டி?
எதோ என்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்ன,அது தானே நீ என் கிட்ட பேசிய கடைசி வார்த்தை என்று கண்ணீரோடு சொல்லிக் கொண்டே தயாராகி கீழே வந்தவன் போகலாம் பாட்டியென்க,ஹம் கண்ணா என்றவாறு எழுந்தவர் பேரனோடு அவர்கள் எஸ்டேட்டை நோக்கி காரில் சென்றனர்.
சூடாமணி:
மலரு 11 ஆம் தேதி உனக்கு நிச்சயதார்த்தம்னு முடிவு பண்ணியிருக்கு.ஆனால் இதுவரை மாப்பிள்ளை பற்றி எதுவுமே நீ தெரிந்து கொள்ளவில்லையே மா என்று புகழேந்தி கேட்க,நீங்கள் எனக்கு கெடுதலா பா பண்ணிடப் போறீங்க நல்லது தானே பண்ணுவீங்க உங்களுக்கு புடிச்சிருக்கு இல்ல அது போதும் என்றாள்.
தனது மகளை நினைத்து கர்வப்பட்டவர் பார்த்தியாடி குமாரி,என் பொண்ணு ஒரே வார்த்தையில் சொல்லிட்டாள்.
நீ தான் என்னமோ புலம்பிட்டு கடந்த, இனி உனக்கு சந்தோஷம் தானே என்று மனைவியிடம் கேட்க,ஏங்க எனக்கு மட்டும் நம்ம புள்ளைக்கு நல்லது நடக்கணும்னு ஆசை இருக்காதா?
கடைசி வரைக்கும் கூட இருந்து வாழ போறது நம்ப ஒன்னும் கிடையாது. அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறது பெற்றோரா நம்மளோட கடமை.
உனக்கு யார் மேலயாவது விருப்பம் இருந்தா சொல்லு அந்த பையன் கூடயே கல்யாணம் பண்ணி வைக்கிறோமேன்று நாமளும் பலமுறை கேட்டு விட்டோம்.
ஊர் உலகத்துல நடக்கிறது எல்லாம் நம்ம ஒன்னும் பாக்காம கண்ண மூடிகிட்டு இல்லையே.இது வாழ்க்கை பிரச்சனைங்க அவளுக்கு பிடித்த போல இருக்கணும்னு நினைக்கிறது ஒரு தாயா தப்பா என்கவும்,உன்ன நான் குறை சொல்ல குமாரி.
நல்ல குடும்பம் நல்ல பையன் கை நிறைய சம்பாதிக்கிறான் கௌரவமான வேலை ஆனா பையன பத்தி மலரு எதையுமே இதுவரைக்கும் தெரிஞ்சுக்கல என்பது தான் உனக்கு வருத்தம் அப்படித்தானே எங்கவும் ஆமாங்க என்றார்.
நீதான் மாப்பிள்ளை பத்தி தெரிஞ்சுக்கியேமா உன் அம்மா நிம்மதியா இருப்பாளே என்று மகளை பார்க்க,இருக்கட்டும் பா நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா விசாரிச்சிட்டிங்களே அது போதும் என்றவள் சரிப்பா நான் மஞ்சுகூட வெளியே போயிட்டு வரேன் என்கவும், சரி பார்த்து போஙாக என்கவும் மஞ்சுவும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு தோழியை முறைத்தபடி வெளியே போக மலரும் தனது ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
இருவரும் அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் வழக்கமாக செல்லும் அம்மன் கோயிலுக்கு போனாளுங்கள்.
நல்லதோ கெட்டதோ இருவருக்கும் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த அம்மன் கோயில் சன்னதியில் உட்கார்ந்து கொண்டுதான் இருவரும் பேசிப்பாளுங்கள்.
ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே வந்தவர்கள் கர்ப்பகிரகத்தில் இருக்கும் பேச்சியம்மனை கண்ணை மூடி வணங்கினார்கள்.
அம்மா தாயே இந்த திருமணம் நல்லபடியாக முடியணும் என்று மஞ்சு வேண்டிக் கொள்ள,மலரோ உனக்கு என்ன சித்தமோ அப்படியே செய்யு மா என்றாள்.
அய்யரும் தீபாரதனை தட்டோடு வர இருவரும் கண்களை திறந்து ஆரத்தி எடுத்து கண்ணில் வைத்தவளுங்கள் விபூதி குங்குமத்தை வாங்கிக் கொண்டு கோயிலை சுற்றி வந்து அவர்கள் வழக்கமாக உட்காரும் தியான மண்டபத்தில் போய் ஆளுக்கு ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்கள்
சென்னை:
நீண்ட வருடங்களுக்கு பிறகு காமாட்சியின் கைப்பக்குவத்தை ரசித்து சாப்பிட்டவர்களோ பெரிய ஏப்பத்தை விட்டுக்கொண்டு அங்கிருந்த சோபாவில் வந்து உட்கார்ந்தார்கள்.
அவர்களுக்கு எதிரே வந்து உட்கார்ந்த காமாட்சியோ மாறனை பார்க்க,எதுக்கு இப்படி பார்க்கிறாய் என்றான். பொண்ணு ரொம்ப நல்லா இருக்கு என்கவும்,மாமாவுக்கு இரண்டாவது கல்யாணம் பண்றதுக்கு என்ன ஒரு தாராள மனசு.உன்னை போல பொண்டாட்டி இருந்தால் ஊர் உலகத்தில் டைவர்ஸ் இருக்காதென்கும் மருமகனை முறைத்து பார்த்தவர் நான் உனக்கு சொன்னேன் என்றார்.
ஓ எனக்கா என்றவன்,அதான் குடும்பமாக ஒன்று கூடி என்னை கும்மி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களே வேற என்ன பண்றது என்று கடுப்பில் சொன்னான்.
கல்யாணம் என்றால் ஏன்டா இவ்வளவு கடுப்பாகுற நீ? பெரிய மாமா கூட இருந்து நீயும் அவரை போல் ஆகலாம்னு இருக்கிறியா என்று கொஞ்சம் கோபமாகவே காமாட்சி கேட்க, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லத்தை என்றான்.
பின்ன வேற ஏதாச்சும் காரணம் சொல்லு?
காதல் தோல்வியா? இல்லை யாரையாச்சும் மனசுல நினைச்சுகிட்டு இருக்கியா சொல்லு டா என்க இதை கேட்ட நிலவனோ இந்த சிடு மூஞ்சிக்கு காதலா என்று சத்தமாக சிரித்தான்.