Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 721
- Thread Author
- #1
சூடாமணி:
ரூமிற்குள் வந்த மலர்விழியோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்க்கலானாள்.மலர்விழி மஞ்சு இருவரும் சென்னையில் இருக்கும் அண்ணா யுனிவர்சிட்டியில் இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வருடம் கல்லூரியில் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் வெற்றி நந்தன் வந்திருந்தார் அங்கு தான் மாறனை பார்த்தாள்.
ஏனோ தெரியவில்லை பார்த்த உடனே அவனை பிடித்து விட்டது.யார் என்றே தெரியாதவனை மானசீகமாக காதலிக்க தொடங்கினாள்.
நாலைந்து முறை அவனை அந்த கல்லூரியில் பார்த்திருக்க பிறகுதான் அவன் அதே கல்லூரியில் படித்த முன்னால் மாணவன் என்பது அவளுக்கு தெரிந்தது.ஆனால் கவர்னருக்கும் அவனுக்கும் என்ன உறவு என்று அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.
படிப்பு முடிந்தவுடன் எப்படியாவது அவனைப் பற்றி தெரிந்து கொண்டு தன் மனதில் உள்ள விருப்பத்தை சொல்லலாம் என்று காத்திருக்க பைனல் இயர் கடைசி வருடத்தில் கல்லூரியில் இருந்து டூருக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்கலாம் என்று அங்கே போயிருக்க மஞ்சுவும் அவள், மற்ற தோழிகளோடு இரவு நேரத்தில் டெல்லியை சுற்றி பார்ப்பதற்காக செல்லும்போது அவர்கள் இருந்த ஹோட்டலுக்கு பின்னாடி மார்க்கெட் என்பதால் அங்கே போய் எதாவது சாப்பிடலாமென்று போனாளுங்கள்.
அங்கே வந்த போது அங்கங்கே மக்கள் கூட்டமாக நின்றுக்கொண்டு,அங்கு ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகவும் போலீஸ் அங்கு உள்ளவர்களை அரஸ்ட் பண்ண வந்திருப்பதாக பேசிக்கொள்ள,இதை காதில் வாங்கிக் கொண்டு அந்த வீட்டை கடந்த போகும் மலர் திரும்பி பார்க்க கூட்டத்தில் மாறனும் ஒருவனாக அதில் வந்தான்.
இப்படி ஒரு சூழ்நிலையில் அவனை எதிர்பார்க்காதவளோ அதிர்ந்து போய் மஞ்சுவின் கையை இறுக்கமாக பிடிக்க, தோழியின் இறுக்கமான பிடியில் என்னடி என்றாள்.
அவன் அவன் என்க..மஞ்சுவோ யாரடி என்கவும் அங்கே பாருடி என்று மலர் சொல்ல,அங்கே இருந்த ஆண்களில் மாறனும் நின்று கொண்டிருந்தான்.
இவ்வளவு கேவலமானவனையா காதலிச்சிருக்கேன் என்று தோழியிடம் சொல்லி அழுதவள் அதன் பின்னர் டூரை முடித்துக் கொண்டு எப்படி வீட்டிற்கு வந்தாள் என்று தெரியவில்லை.
தன்னுடைய காதல் இப்படி போய்விட்டது என்று நினைத்த வருந்த,வீட்டில் கல்யாணம் ஏற்பாடு பண்ணவும் அவனை காதலித்த மனதால் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க எண்ணம் வரவில்லை.
வீட்டில் இருந்தால் தானே திருமணத்தைப் பற்றி பேசுவார்கள் என்று நினைத்தவள் அப்பா ஒரு மூணு வருஷம் வேலைக்கு போறேன் அதன்பிறகு கல்யாணத்தைப் பற்றி பேசுங்கள் என்று சம்மதம் வாங்கிவிட்டு மஞ்சுவும் அவளும் பக்கத்தில் இருக்கும் கல்லூரியில் வேலைக்கு போனார்கள்.
மூன்று வருடம் கடந்த பிறகு அவளின் கல்யாணம் பற்றி பெற்றோர்கள் பேச இனியும் சமாளிக்க முடியாது என்பதால் தான் இதற்கு சரி என்றாள்.ஆனால் மாறனே மாப்பிள்ளையாக வருவான் என்பதை எதிர்பார்க்கலை.அதைவிட அவன் போலீஸ்காரனாக இருப்பான் என்பது பேரதிர்ச்சி. அவசரப்பட்டு அத்தனை பேருக்கு முன்னாடி அவமானப்படுத்திட்டோமே என்று தன்னைத்தானே அறைந்து கொண்டு அழுதாள்.
கோத்தகிரி:
நேரமும் கடந்து செல்ல அடியாட்களுக்கு சமைத்து முடித்த சந்தரின் மனைவியோ அதில் தூக்க மாத்திரையை கலந்தவர் தம்பி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள் போய் ஒளிச்சுக் கொள்ளுங்கள்.
அவர்கள் சாப்பாடு எடுக்க வரும் நேரம் ஆயிடுச்சு என்கவும் அதே போல் மாறனும் நிலவனும் உள்ளே போய் ஒளிந்து கொண்டார்கள்.சிறிது நிமிடம் கடந்திருக்க என்ன பெருசு சாப்பாடு ரெடியா என்று இரண்டு அடியாட்கள் அங்கு வர ரெடி தான் தம்பி என்று பயந்து கொண்டே அவரும் சொன்னார்.
இன்னைக்கு என்ன சமைச்சிருக்க என்க,வெள்ளிக்கிழமை என்கவும் அதே சாம்பார் தான இன்னைக்கும் என்க ஆமாம் தம்பி என்றார்.
நல்லா சமைக்கிறங்குறதுக்காக தான் போனால் போகட்டும்னு விடுறோம். நாளைக்கு ஏதாவது கவுச்சி சமைச்சு வை என்று கண்டிப்போடு சொல்லவும் சரிங்க தம்பி என்று பயந்து கொண்டே சொன்னார்.பின்னர் அவனுங்கள் இருவரும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போனார்கள்.
ஒரு மணி நேரம் கடந்திருக்க தம்பி வாங்க போகலாம்.எப்படியும் அவங்க மயங்கிருப்பாங்க என்றவாறு வீட்டின் பின்பக்கம் வழியாக போனவர் நான் போய் யாராச்சும் சாப்பிடாம இருக்கிறார்களா இல்லை எல்லாரும் மயங்கிட்டாங்களானு பார்க்கிறேன் என்றவர் தற்செயலாக இருப்பது போல உள்ளே வந்தவர்போல தம்பி சாப்பாடு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டுக் கொண்டே சந்தர் வந்து பார்க்க அவர்கள் 10 பேரும் மயங்கி கிடப்பது தெரிந்தது.
தம்பி சீக்கிரம் வாங்க என்று சொல்ல நிலவனும் மாறனும் துப்பாக்கி இருக்குதா என்று பார்த்துக்கொண்டே உள்ளே வந்தனர்.
சீக்கிரம் வாங்க தம்பி யாருக்காச்சும் மயக்கம் தெளிஞ்சுற போகுது. அதுக்குள்ள அந்த பிள்ளையை காப்பாத்துங்கள் என்று சொல்லிக் கொண்டே வேகமாக போனவர் அங்கே வலது பக்கம் இருந்து ரூமை திறக்க அது ஒரு சாதாரண பூஜை அறை போல் இருந்தது.
இது பூஜை அறை தானே என்க, அப்படித்தான் இருக்கும் என்று அங்கிருந்து சாமி போட்டோக்கள் இருக்கும் சுவற்றில் இடது பக்கம் இருக்கும் ஸ்விட்ச் போர்டு பட்டனை ஆன் பண்ண சாமி போட்டோக்கள் இருக்கும் சுவர் விலகியது.
அதற்குள் படிக்கட்டுகள் இருக்க, சீக்கிரம் வாங்க தம்பி என்று அவர் முன்னே வழியை காட்டி செல்ல இருவரும் அதன் உள்ளே செல்ல அதுவோ கீழே சென்றது.வேகமாக போய் அங்கிருந்த பெட்டியை திறந்து விட அதில் கை கால்கள் கட்டப்பட்டு வெரோனிகா மயங்கி கிடந்தாள்.
சீக்கிரம் என்று அவளைத் தூக்கப் போன மாறனோ தனது தம்பி காதலித்த பெண்ணை தான் தொடுவதாக என்று தயங்க, அவனின் தயக்கத்தை புரிந்து நிலவன் தூக்க அவளின் சுவாசம் சீராக இருப்பது தெரிந்தது.
பசியில் தான் மயங்கியிருக்கா போல என்றவன் அந்தப் பெட்டியை பழையபடி பூட்டிவிட்டு இருவரும் பாதாள கதவை சாத்திவிட்டு ஹாலுக்கு வர அவர்கள் இன்னும் மயக்கத்தில் இருப்பது தெரிந்து வேகமாக வெளியேறி வீட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை.
சீக்கிரம் ஆம்புலன்ஸிற்கு போன் பண்ணு சைரன் சத்தம் இல்லாமல் வர சொல்லுடா என்று மாறன் சொல்ல,அதேபோல் நிலவன் கால் பண்ண சிறிது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.
அக்கம் பக்கத்தில் வீடு எதுவும் இல்லாததால் மற்றவர்களுக்கு அங்கு நடப்பது ஏதும் தெரியாமல் போய்விட்டது.அவளை தூக்கிக்கொண்டு போய் ஆம்புலன்ஸில் படுக்க வைத்தான்.
தம்பி சீக்கிரம் சீக்கிரம் இங்கிருந்து போயிடுங்க,எங்கள் மேல சந்தேகம் வராது நீங்கள் போங்க என்க,ரொம்ப நன்றி சார்.உங்களை அப்புறம் பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களும் வண்டியை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் பின்னாடியே சென்றனர்.
கோத்தகிரியில் இருக்கும் மருத்துவமனையில் அவளை அட்மிட் பண்ண குறைவான பல்சும்,லோ பீபியா இருக்கு அதனால தான் அவங்க மயங்கி இருக்காங்க என்று சொல்லிய டாக்டர் அதற்கான இன்ஜெக்ஷனை போட்டுவிட்டு இவங்க யார் என்று கேட்க இருவரும் போலீஸ் என்றதும் சரி என்று டாக்டர் அங்கிருந்து சென்று விட்டார்.
உடனே தனது ஃபோனை எடுத்த மாறன் விக்டருக்கு கால் பண்ணி உடனடியாக கோத்தகிரிக்கு வர சொல்ல தம்பி என் பொண்ணு கிடைச்சுட்டாளா என்கவும் ஆமா சார் எங்களோட சாலா பேலஸ்க்கு வந்துடுங்க என்றான்.
இரண்டு மணி நேரம் கடந்துருக்க மயக்கம் தெளிந்து கண்களை திறந்தவளோ தான் ஹாஸ்பிடலில் படுத்துருப்பதை பார்த்து பதறி எழுந்தவள் யார் நம்மளை காப்பாத்திருப்பா என்று யோசனையோடு கதவை திறக்க அந்த நேரம் மாறனும் நிலவனும் உள்ளே வந்தனர்.
இருவரையும் பார்த்தவள் அண்ணா நீங்களா என்று அதிர, எங்களை உனக்கு தெரியுமா என்று மாறன் கேட்க தெரியும் ணா.நீலு உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கிறார் போட்டோவையும் எனக்கு காமிச்சிருக்கிறார் என்றாள்.
இதில் புர்கா இருக்கு என்று அவளிடம் ஒரு கவரை நீட்ட,அவளும் அதை வாங்கி போட்டுக் கொள்ளவும் இருவரும் அவளோடு வெளியே வந்தனர்.
நான் வண்டியை எடுத்துட்டு போறேன். நீ கார்ல கூப்பிட்டு வந்துடுடா என்று சொல்லிக்கொண்டு மாறன் புல்லட்டில் செல்ல வாடகை காரில் ஏறி நிலவனும் வெரோனிகாவும் சாலா பேலஸ் நோக்கி சென்றனர்.
பெட்டில் படுத்திருந்த பியூலாவிடம் நம்ம பொண்ணு கிடைச்சுட்டா சீக்கிரம் வா நம்ப கோயம்புத்தூர் கிளம்பணும் என்க,நிஜமாவா என்று அவரும் பதறியடித்து எழுந்து கேட்க ஆமாம் பியூலா என்றார்.
சீக்கிரம் என்று இருவரும் தயாராகி மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு வந்து கோயம்புத்தூர் ஏர்போர்ட்டிலிருந்தே கார் எடுத்துக்கொண்டு கோத்தகரியில் இருக்கும் சாலா எஸ்டேட்டை நோக்கி வந்தார்கள்.
மாறன் அவர்களுக்காக காத்திருக்க காரில் இருந்து நிலவனும் புர்கா போட்ட யாரோ ஒரு பெண்ணும் இறங்கி வருவதை பார்த்த சாலா பாட்டி என்னவென்று யோசனையோடு இருந்தார்.
அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் பாட்டி இப்போதைக்கு இந்த பொண்ணு இங்க இருக்கிற விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்க சரிப்பா.ஆமாம் யார் இந்த பொண்ணு என்கவும் எல்லாம் உனக்கு ரொம்ப வேண்டியவங்க தான் என்று சொல்லிய மாறன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றான்.
ரூமிற்குள் வந்த மலர்விழியோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்க்கலானாள்.மலர்விழி மஞ்சு இருவரும் சென்னையில் இருக்கும் அண்ணா யுனிவர்சிட்டியில் இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்தனர்.
அந்த வருடம் கல்லூரியில் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் வெற்றி நந்தன் வந்திருந்தார் அங்கு தான் மாறனை பார்த்தாள்.
ஏனோ தெரியவில்லை பார்த்த உடனே அவனை பிடித்து விட்டது.யார் என்றே தெரியாதவனை மானசீகமாக காதலிக்க தொடங்கினாள்.
நாலைந்து முறை அவனை அந்த கல்லூரியில் பார்த்திருக்க பிறகுதான் அவன் அதே கல்லூரியில் படித்த முன்னால் மாணவன் என்பது அவளுக்கு தெரிந்தது.ஆனால் கவர்னருக்கும் அவனுக்கும் என்ன உறவு என்று அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.
படிப்பு முடிந்தவுடன் எப்படியாவது அவனைப் பற்றி தெரிந்து கொண்டு தன் மனதில் உள்ள விருப்பத்தை சொல்லலாம் என்று காத்திருக்க பைனல் இயர் கடைசி வருடத்தில் கல்லூரியில் இருந்து டூருக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்கலாம் என்று அங்கே போயிருக்க மஞ்சுவும் அவள், மற்ற தோழிகளோடு இரவு நேரத்தில் டெல்லியை சுற்றி பார்ப்பதற்காக செல்லும்போது அவர்கள் இருந்த ஹோட்டலுக்கு பின்னாடி மார்க்கெட் என்பதால் அங்கே போய் எதாவது சாப்பிடலாமென்று போனாளுங்கள்.
அங்கே வந்த போது அங்கங்கே மக்கள் கூட்டமாக நின்றுக்கொண்டு,அங்கு ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகவும் போலீஸ் அங்கு உள்ளவர்களை அரஸ்ட் பண்ண வந்திருப்பதாக பேசிக்கொள்ள,இதை காதில் வாங்கிக் கொண்டு அந்த வீட்டை கடந்த போகும் மலர் திரும்பி பார்க்க கூட்டத்தில் மாறனும் ஒருவனாக அதில் வந்தான்.
இப்படி ஒரு சூழ்நிலையில் அவனை எதிர்பார்க்காதவளோ அதிர்ந்து போய் மஞ்சுவின் கையை இறுக்கமாக பிடிக்க, தோழியின் இறுக்கமான பிடியில் என்னடி என்றாள்.
அவன் அவன் என்க..மஞ்சுவோ யாரடி என்கவும் அங்கே பாருடி என்று மலர் சொல்ல,அங்கே இருந்த ஆண்களில் மாறனும் நின்று கொண்டிருந்தான்.
இவ்வளவு கேவலமானவனையா காதலிச்சிருக்கேன் என்று தோழியிடம் சொல்லி அழுதவள் அதன் பின்னர் டூரை முடித்துக் கொண்டு எப்படி வீட்டிற்கு வந்தாள் என்று தெரியவில்லை.
தன்னுடைய காதல் இப்படி போய்விட்டது என்று நினைத்த வருந்த,வீட்டில் கல்யாணம் ஏற்பாடு பண்ணவும் அவனை காதலித்த மனதால் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க எண்ணம் வரவில்லை.
வீட்டில் இருந்தால் தானே திருமணத்தைப் பற்றி பேசுவார்கள் என்று நினைத்தவள் அப்பா ஒரு மூணு வருஷம் வேலைக்கு போறேன் அதன்பிறகு கல்யாணத்தைப் பற்றி பேசுங்கள் என்று சம்மதம் வாங்கிவிட்டு மஞ்சுவும் அவளும் பக்கத்தில் இருக்கும் கல்லூரியில் வேலைக்கு போனார்கள்.
மூன்று வருடம் கடந்த பிறகு அவளின் கல்யாணம் பற்றி பெற்றோர்கள் பேச இனியும் சமாளிக்க முடியாது என்பதால் தான் இதற்கு சரி என்றாள்.ஆனால் மாறனே மாப்பிள்ளையாக வருவான் என்பதை எதிர்பார்க்கலை.அதைவிட அவன் போலீஸ்காரனாக இருப்பான் என்பது பேரதிர்ச்சி. அவசரப்பட்டு அத்தனை பேருக்கு முன்னாடி அவமானப்படுத்திட்டோமே என்று தன்னைத்தானே அறைந்து கொண்டு அழுதாள்.
கோத்தகிரி:
நேரமும் கடந்து செல்ல அடியாட்களுக்கு சமைத்து முடித்த சந்தரின் மனைவியோ அதில் தூக்க மாத்திரையை கலந்தவர் தம்பி நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள் போய் ஒளிச்சுக் கொள்ளுங்கள்.
அவர்கள் சாப்பாடு எடுக்க வரும் நேரம் ஆயிடுச்சு என்கவும் அதே போல் மாறனும் நிலவனும் உள்ளே போய் ஒளிந்து கொண்டார்கள்.சிறிது நிமிடம் கடந்திருக்க என்ன பெருசு சாப்பாடு ரெடியா என்று இரண்டு அடியாட்கள் அங்கு வர ரெடி தான் தம்பி என்று பயந்து கொண்டே அவரும் சொன்னார்.
இன்னைக்கு என்ன சமைச்சிருக்க என்க,வெள்ளிக்கிழமை என்கவும் அதே சாம்பார் தான இன்னைக்கும் என்க ஆமாம் தம்பி என்றார்.
நல்லா சமைக்கிறங்குறதுக்காக தான் போனால் போகட்டும்னு விடுறோம். நாளைக்கு ஏதாவது கவுச்சி சமைச்சு வை என்று கண்டிப்போடு சொல்லவும் சரிங்க தம்பி என்று பயந்து கொண்டே சொன்னார்.பின்னர் அவனுங்கள் இருவரும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போனார்கள்.
ஒரு மணி நேரம் கடந்திருக்க தம்பி வாங்க போகலாம்.எப்படியும் அவங்க மயங்கிருப்பாங்க என்றவாறு வீட்டின் பின்பக்கம் வழியாக போனவர் நான் போய் யாராச்சும் சாப்பிடாம இருக்கிறார்களா இல்லை எல்லாரும் மயங்கிட்டாங்களானு பார்க்கிறேன் என்றவர் தற்செயலாக இருப்பது போல உள்ளே வந்தவர்போல தம்பி சாப்பாடு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டுக் கொண்டே சந்தர் வந்து பார்க்க அவர்கள் 10 பேரும் மயங்கி கிடப்பது தெரிந்தது.
தம்பி சீக்கிரம் வாங்க என்று சொல்ல நிலவனும் மாறனும் துப்பாக்கி இருக்குதா என்று பார்த்துக்கொண்டே உள்ளே வந்தனர்.
சீக்கிரம் வாங்க தம்பி யாருக்காச்சும் மயக்கம் தெளிஞ்சுற போகுது. அதுக்குள்ள அந்த பிள்ளையை காப்பாத்துங்கள் என்று சொல்லிக் கொண்டே வேகமாக போனவர் அங்கே வலது பக்கம் இருந்து ரூமை திறக்க அது ஒரு சாதாரண பூஜை அறை போல் இருந்தது.
இது பூஜை அறை தானே என்க, அப்படித்தான் இருக்கும் என்று அங்கிருந்து சாமி போட்டோக்கள் இருக்கும் சுவற்றில் இடது பக்கம் இருக்கும் ஸ்விட்ச் போர்டு பட்டனை ஆன் பண்ண சாமி போட்டோக்கள் இருக்கும் சுவர் விலகியது.
அதற்குள் படிக்கட்டுகள் இருக்க, சீக்கிரம் வாங்க தம்பி என்று அவர் முன்னே வழியை காட்டி செல்ல இருவரும் அதன் உள்ளே செல்ல அதுவோ கீழே சென்றது.வேகமாக போய் அங்கிருந்த பெட்டியை திறந்து விட அதில் கை கால்கள் கட்டப்பட்டு வெரோனிகா மயங்கி கிடந்தாள்.
சீக்கிரம் என்று அவளைத் தூக்கப் போன மாறனோ தனது தம்பி காதலித்த பெண்ணை தான் தொடுவதாக என்று தயங்க, அவனின் தயக்கத்தை புரிந்து நிலவன் தூக்க அவளின் சுவாசம் சீராக இருப்பது தெரிந்தது.
பசியில் தான் மயங்கியிருக்கா போல என்றவன் அந்தப் பெட்டியை பழையபடி பூட்டிவிட்டு இருவரும் பாதாள கதவை சாத்திவிட்டு ஹாலுக்கு வர அவர்கள் இன்னும் மயக்கத்தில் இருப்பது தெரிந்து வேகமாக வெளியேறி வீட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை.
சீக்கிரம் ஆம்புலன்ஸிற்கு போன் பண்ணு சைரன் சத்தம் இல்லாமல் வர சொல்லுடா என்று மாறன் சொல்ல,அதேபோல் நிலவன் கால் பண்ண சிறிது நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது.
அக்கம் பக்கத்தில் வீடு எதுவும் இல்லாததால் மற்றவர்களுக்கு அங்கு நடப்பது ஏதும் தெரியாமல் போய்விட்டது.அவளை தூக்கிக்கொண்டு போய் ஆம்புலன்ஸில் படுக்க வைத்தான்.
தம்பி சீக்கிரம் சீக்கிரம் இங்கிருந்து போயிடுங்க,எங்கள் மேல சந்தேகம் வராது நீங்கள் போங்க என்க,ரொம்ப நன்றி சார்.உங்களை அப்புறம் பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு அவர்களும் வண்டியை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ் பின்னாடியே சென்றனர்.
கோத்தகிரியில் இருக்கும் மருத்துவமனையில் அவளை அட்மிட் பண்ண குறைவான பல்சும்,லோ பீபியா இருக்கு அதனால தான் அவங்க மயங்கி இருக்காங்க என்று சொல்லிய டாக்டர் அதற்கான இன்ஜெக்ஷனை போட்டுவிட்டு இவங்க யார் என்று கேட்க இருவரும் போலீஸ் என்றதும் சரி என்று டாக்டர் அங்கிருந்து சென்று விட்டார்.
உடனே தனது ஃபோனை எடுத்த மாறன் விக்டருக்கு கால் பண்ணி உடனடியாக கோத்தகிரிக்கு வர சொல்ல தம்பி என் பொண்ணு கிடைச்சுட்டாளா என்கவும் ஆமா சார் எங்களோட சாலா பேலஸ்க்கு வந்துடுங்க என்றான்.
இரண்டு மணி நேரம் கடந்துருக்க மயக்கம் தெளிந்து கண்களை திறந்தவளோ தான் ஹாஸ்பிடலில் படுத்துருப்பதை பார்த்து பதறி எழுந்தவள் யார் நம்மளை காப்பாத்திருப்பா என்று யோசனையோடு கதவை திறக்க அந்த நேரம் மாறனும் நிலவனும் உள்ளே வந்தனர்.
இருவரையும் பார்த்தவள் அண்ணா நீங்களா என்று அதிர, எங்களை உனக்கு தெரியுமா என்று மாறன் கேட்க தெரியும் ணா.நீலு உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கிறார் போட்டோவையும் எனக்கு காமிச்சிருக்கிறார் என்றாள்.
இதில் புர்கா இருக்கு என்று அவளிடம் ஒரு கவரை நீட்ட,அவளும் அதை வாங்கி போட்டுக் கொள்ளவும் இருவரும் அவளோடு வெளியே வந்தனர்.
நான் வண்டியை எடுத்துட்டு போறேன். நீ கார்ல கூப்பிட்டு வந்துடுடா என்று சொல்லிக்கொண்டு மாறன் புல்லட்டில் செல்ல வாடகை காரில் ஏறி நிலவனும் வெரோனிகாவும் சாலா பேலஸ் நோக்கி சென்றனர்.
பெட்டில் படுத்திருந்த பியூலாவிடம் நம்ம பொண்ணு கிடைச்சுட்டா சீக்கிரம் வா நம்ப கோயம்புத்தூர் கிளம்பணும் என்க,நிஜமாவா என்று அவரும் பதறியடித்து எழுந்து கேட்க ஆமாம் பியூலா என்றார்.
சீக்கிரம் என்று இருவரும் தயாராகி மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு வந்தவர்கள் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு வந்து கோயம்புத்தூர் ஏர்போர்ட்டிலிருந்தே கார் எடுத்துக்கொண்டு கோத்தகரியில் இருக்கும் சாலா எஸ்டேட்டை நோக்கி வந்தார்கள்.
மாறன் அவர்களுக்காக காத்திருக்க காரில் இருந்து நிலவனும் புர்கா போட்ட யாரோ ஒரு பெண்ணும் இறங்கி வருவதை பார்த்த சாலா பாட்டி என்னவென்று யோசனையோடு இருந்தார்.
அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் பாட்டி இப்போதைக்கு இந்த பொண்ணு இங்க இருக்கிற விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்க சரிப்பா.ஆமாம் யார் இந்த பொண்ணு என்கவும் எல்லாம் உனக்கு ரொம்ப வேண்டியவங்க தான் என்று சொல்லிய மாறன் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றான்.