Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 634
- Thread Author
- #1
விடிந்தால் 16 ஆம் நாள் காரியமென்பதால் அதற்காக ஆளுக்கொரு வேலையை பார்த்தனர்.
நேரமும் கடந்து செல்ல இரவு எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என்று தவசிப்பிள்ளை கேட்க அதற்கு பதில் சொல்லும் போது வாசலில் ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து மருது அவன் மனைவி குழந்தையோடு இறங்கினான்.
தாமரை போய் குழந்தையை தூக்க அவளும் ம்மா என்று தாவினாள்.
வா செல்லா என்று கையை பிடிக்க..
நம்ப வீட்டில் எதுக்கு கா வரவேற்பு மற்றவர்களை கவனி என்றவள் ஆட்டோவிலிருந்த பேகை எடுத்துக் கொண்டு உள்ளே போனவள் இரண்டு மாமியாரையும் நலம் விசாரித்து விட்டு கலா பாட்டியிடம் போய் கையை பிடிக்க..
அவரோ மகன் மருமகளை நினைத்து கலங்கினார்.
ஒரு வழியாக கலா பாட்டியை தேற்றினாள்.பின்னர் உறவினர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
முதல் தூக்கம் முடிந்ததும் பந்தி பரிமாறினர்.
நேரமும் கடந்து செல்ல தாமரையோ முற்றத்தில் இருக்கும் கம்பிகளின் இடைவெளியில் தெரியும் இருண்ட வானத்தை பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களோ அங்கங்கே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்
புரண்டு படுத்த மருதுவோ தற்செயலாக பார்க்க தாமரை மட்டும் மர தூணின் மேல் சாய்ந்து உட்கார்ந்திருப்பது தெரிய இவள் தூங்காம என்ன பண்றாள்?ஒரு வேளை உட்கார்ந்து கொண்டே தூங்குறாளா என்று முணவியவன் எழுந்து அவளிடம் வந்தவன் ஏய் தாமரை தூங்காம என்னடி பண்ற என்க...
திடிரென்று கேட்கும் குரலால் அதிர்ந்து திரும்பியவள் நீ தூங்கலையா என்கவும் ம்ம் வேண்டுதலை என்றவன் அவளின் பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டு என்ன பிரச்சனை?
ஆளே வித்யாசமா இருக்க?
இல்லை அது இது னு மழுப்பாதே என்று கோவமாக மருது சொல்ல...
நண்பனை பார்த்து விரக்தியாக சிரித்தவள் பின்னர் நடந்ததையெல்லாம் சொல்ல.. மருதுவோடு அங்கு படுத்திருந்த சீதா மற்றும் பெருமாளும் அதையெல்லாம் கேட்டு அதிர்ந்தனர்.
சொல்லி முடித்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட, வந்த ஆத்திரத்தை கையை மடிக்கி போக்கியவன்,இதுக்கு தான் சொல்வாங்க விளையாட்டு வினையமாகும் ஜாக்கிரதைனு..
சரி விடு..
ஏதோ ஒரு கோவத்தில் பேசிட்டார் டி.மனசறிந்து சொல்ல வழியில்லை என்க.. நீயும் அதே இனமாச்சே.என்றைக்காவது செல்லா இப்படி உன்னிடம் சொல்லி காட்டிருக்காளா என்க,மருதுவோ இல்லை என்று தலையசைத்தான்
ஏய் தாமரை...
இதையெல்லாம் சீரியஸா எடுக்காதே .
கதிர் உன் மேல உயிரையே வச்சிருக்கார் டி அது உனக்கு தெரியலையா?.யோசிக்காமல் பேசிட்டார் அதை விட்டு தள்ளு.. ஏன் இப்படி பேசுனனு சண்டை போடுறதை விட்டு குடி மூழ்கின போல இருக்க..
ஒழுங்கா வந்து படு டி.. வா என்று மருது எழ தாமரையோ எதுவும் சொல்லாமல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது அத்தையின் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டாள்..
விடியலோ சேவலின் கூவலோடு தொடங்கியது..
ஒரு பக்கம் காலை டிபனுக்காக சமையல் வேலை ஆரம்பமானது.
பண்டாரம் வந்ததும் பூஜைக்கு ஆயத்தம் பண்ண அவர் கேட்பதை செல்லா எடுத்து கொடுத்தாள். பின்னர் அதற்கான சங்குகள் முடிந்தது.
மதிய உணவு பரிமாற வந்திருந்த உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் கையில் கிடைத்த பணத்தை மொய் வைத்து சாப்பிட்டு சென்றனர்.
எல்லாம் முடிய மாலையானது.
சரி நாம கிளம்பளாமா டி என தாமரையிடம் கதிர் கேட்க, அங்கிருந்த வீட்டினரை பார்த்தவள் மாமா..என் தம்பிக்கு ஒருத்தி வரும் வரை நான் இங்கு தான் இருக்க போறேன் என்றாள்.
மருமகள் இதை தான் பண்ணுவாள் என்பது இரவு மருதுவிடம் அவள் பேசியதை வைத்தே பெருமாள் மற்றும் சீதாவிற்கு புரிந்து விட்டது.
தாமரை பேசியதை கேட்ட வேதா, என்ன பேசுற?அதான் நான் இருக்கேனே நீ போய் புருஷன் வீட்டில் வாழும் வழியை பாருயென மருமகளை முறைத்தார்.
ஏன் அத்தம்மா உங்களுக்கு இருக்கிற அதே பொறுப்பு உரிமையும் எனக்கும் இந்த வீட்ல இருக்கு தானே என்கவும் அதற்கு அவரால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.இருந்தாலும் நீ போய் அங்கே இரு நான் இருக்கேன் இல்ல, ஏன் இந்த அத்தையால எதுவும் பண்ண முடியாதா என்க...
எத்தனை காலம் தான் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்க போறீங்க??நீங்க உக்காருங்க பொறுப்பை நான் எடுத்துக்கிறேன் என்றாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கோ மனைவியின் மேல் ஆத்திரம் வந்தது.ஏதோ 16 நாள் வரைக்கும் இவ அப்பா வீட்டுல இருந்துட்டு வரட்டும்னு நினைச்சா இவ என்ன தம்பி கல்யாணம் வரைக்கும் இங்கே இருக்கிறேன் என்று சொல்கிறாள்? யாரை கேட்டுட்டு இந்த முடிவு எடுத்தாள் என்று மனைவியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது, அக்கா நீ போய் உன் குடும்பத்தை பாரு. அத்தை நீங்க நீலகிரிக்கு போங்க தாத்தா பாட்டியை என்னால பாத்துக்க முடியும்.அதற்கான தெம்பு எனக்கு இருக்கிறது என்று சிவா சொல்ல..டேய் நீ சும்மா இருடா உனக்கு என்னடா தெரியும் என்று அவனை தாமரையும் வேதாவும் அதட்டினார்கள்.
மாமா தாத்தா அம்மாச்சி என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்று தாமரை உறுதியாக சொல்லவும் தாமரை என்று பல்லை கடித்த கதிர் ரூமுக்கு வா என்றான்.
அத்தனை பேர்களுக்கு முன்னாடியே என்னால் வர முடியாது என்கவும், உன்னை வாடினு சொன்னேன் என்று பல்லை கடிக்க, என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன் இப்ப என்ன பண்ண போறீங்க என்று எதிர்த்து நின்றாள்.
என்னடி வாய் ரொம்ப நீளுது.அடிச்சேன் பல்லெல்லாம் உடைஞ்சிடும் என்க..
கதிர் என்று கத்திய பெருமாள் ஒழுங்கு மரியாதை வீட்டுக்கு போ நான் வந்து பேசுறேன் என்றார்.தந்தையின் கடுமையான குரலைக் கேட்டவன் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து சென்றான்.
இங்க பாரு தாமரை உனக்கு எந்த அளவுக்கு இந்த குடும்பத்து மேல அக்கறை இருக்கோ அதே அக்கறை எங்களுக்கும் இருக்கு.உனக்கு அம்மா என்றால் கவிதா என் கூட பிறந்தது.
ஒரு விதத்துல நீ சொல்றது வாஸ்தவம் தான் சிவாவுக்கு ஒரு குடும்பம் வேணும் அவளுக்குன்னு ஒருத்தி வந்த பிறகு உன் இடத்துக்கு நீ வந்து இருப்பதே மரியாதை சொல்றது புரியும்னு நினைக்கிறேன் என்க.
ம்ம் மாமா என்று தலையசைத்தாள்.
பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்று விட ஏன் தாமரை உனக்கும் கதிருக்கும் ஏதாவது பிரச்சனையா என்று வேதா கேட்க அய்யோ அத்தம்மா ஏன் இப்படி இருக்கீங்க?நான் ஏன் மாமா கூட சண்டை போட போறேன் என்றாள்.
இத்தனை பேருக்கு முன்னாடி இப்படி பேசுகிறியே அதான் என்கவும்,நம்ம வீட்டில் இப்ப என்ன நடந்திருக்கு அத பத்தி யோசிக்கும். மற்றபடி எங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சிரித்துக் கொண்டே சொல்லவும் மருமகளின் முகத்தை வைத்து அவரால் எதுவும் கண்டுபிடிக்கவில்லை..
எவ்வளவு கொழுப்ப பாரு இவளுக்கு..எல்லாருக்கும் முன்னாடி இப்படி எடுத்தெரிஞ்சு பேசிட்டு இருக்குறாள்? வீட்டுக்கு வாடி உன்ன கவனிச்சிக்கிறேன் என்று புலம்பிய கதிரோ குறுக்கும் நெடுக்குமாக முற்றத்தில் நடந்து கொண்டிருக்கு மற்றவர்களும் வீட்டுக்கு வந்தனர்.
அப்பொழுது வேகமாக வந்த பெருமாள் மகனின் கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தார்.இதை எதிர்பார்த்த சீதாவைத் தவிர மற்றவர்களோ அதிர்ந்து போனார்கள்.
முத்துவோ அண்ணா என்ன பண்ற என்று வேகமாக வந்து பெருமாளின் கையைப் பிடித்து சத்தம் போட..
தோளுக்கு மேல வளந்த புள்ளைனா அப்படியே கண்டுக்காம போய்டுவேன் நினைச்சுட்டு இருக்கியா?
தோலை உறிச்சிடுவேன்...!
எதற்கு உன் பொண்டாட்டி அவங்க அப்பா வீட்ல தங்கி இருக்குன்னு முதல்ல தெரியுமா டா??என்னென்ன வார்த்தை எல்லாம் அந்த புள்ள கிட்ட பேசி இருக்க...
கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது உன் அம்மாளுங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் எங்களை ஒரு வார்த்தை மத்தவங்க கூட சம்பந்தப்படுத்தி பேசி இருப்பாங்களா இல்ல கேட்டு இருப்பாங்களா?.
எத்தனையோ நாள் நடு சாமத்துக்கலாம் வீட்டுக்கு வந்து இருக்கேன் தெரியுமா இதுவரைக்கும் ஒம்மா அப்படி சந்தேகப்பட்டு பேசி இருப்பாளா?ஏன் பல நாளு வேலைக்காக வெளியூர் எல்லாம் போய் தங்கி இருக்கோம் நானும் என் தம்பியும்...எங்க அப்பா அம்மாவும் சரி சீதா-ராதா ஒரு வாரத்தை கூட தவறா நினைச்சது கிடையாது நினைக்க மாட்டாங்க ...
ஆனா நீ என்னென்ன பேசிருக்க என்று மருதுவிடம் தாமரை சொல்லிய விஷயத்தை எல்லாம் பெருமாள் சொல்லவும் அதைக் கேட்டு மற்றவர்களை விட கதிர் தான் பேரதிர்ச்சிக்கு உள்ளானான்.
அப்பா என்னப்பா சொல்றீங்க என்று தடுமாற்றத்தோடு கேட்க இன்னும் என்னடா சொல்லணும் என்று கையை ஓங்கியவர் உண்மையிலேயே அந்த மருது பையன கல்யாணம் பண்ணி இருந்தா தாமரை வாழ்க்கை எனக்கு தெரிஞ்ச ரொம்ப நல்லா இருந்திருக்கும்.தங்கமான பையன் தெரியுமா...
உனக்காக நீ இருக்கும் இடத்திலிருந்து அவ்வளவு நிறுத்தி நிதானமா அந்த பிள்ளைக்கு புத்தி சொன்னான்.அதைக் கேட்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே சொல்ல முடியல
தண்ணி குடிக்க சீதாவை எழுப்பி கேட்டேன் எடுத்துட்டு வந்து தந்ததும் குடிச்சிட்டு அப்பதான் ரெண்டு பேரும் படுத்தோம்.வினிதா கிட்ட தாமரை பேசிட்டு இருந்ததால தான் சரி என்று நாங்கள் அமைதியாக இருந்தோம் ஆனால் அந்த புள்ள மனசு காயப்பட்டு இருக்குன்னு தெரியலை.பாவத்திலேயே பொல்லாத பாவம் எது தெரியுமா பொண் பாவம் தான்.
கொஞ்ச நாளு அமைதியாக இரு அதுக்குன்னு புள்ள பொண்டாட்டி பாக்காதனு நான் சொல்லல உன் கோபத்தை எல்லாம் சுருட்டிக்கிட்டு இரு மகன்னு கூட பாக்க மாட்டேன் தோல உரிச்சிடுவேன் சொல்லிட்டேன் என்றவாறு வளவன் பக்கம் திரும்பியவர் உனக்கும் தான் சொல்றேன்.
நேரமும் கடந்து செல்ல இரவு எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என்று தவசிப்பிள்ளை கேட்க அதற்கு பதில் சொல்லும் போது வாசலில் ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து மருது அவன் மனைவி குழந்தையோடு இறங்கினான்.
தாமரை போய் குழந்தையை தூக்க அவளும் ம்மா என்று தாவினாள்.
வா செல்லா என்று கையை பிடிக்க..
நம்ப வீட்டில் எதுக்கு கா வரவேற்பு மற்றவர்களை கவனி என்றவள் ஆட்டோவிலிருந்த பேகை எடுத்துக் கொண்டு உள்ளே போனவள் இரண்டு மாமியாரையும் நலம் விசாரித்து விட்டு கலா பாட்டியிடம் போய் கையை பிடிக்க..
அவரோ மகன் மருமகளை நினைத்து கலங்கினார்.
ஒரு வழியாக கலா பாட்டியை தேற்றினாள்.பின்னர் உறவினர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
முதல் தூக்கம் முடிந்ததும் பந்தி பரிமாறினர்.
நேரமும் கடந்து செல்ல தாமரையோ முற்றத்தில் இருக்கும் கம்பிகளின் இடைவெளியில் தெரியும் இருண்ட வானத்தை பார்த்துக் கொண்டிருக்க, மற்றவர்களோ அங்கங்கே படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்
புரண்டு படுத்த மருதுவோ தற்செயலாக பார்க்க தாமரை மட்டும் மர தூணின் மேல் சாய்ந்து உட்கார்ந்திருப்பது தெரிய இவள் தூங்காம என்ன பண்றாள்?ஒரு வேளை உட்கார்ந்து கொண்டே தூங்குறாளா என்று முணவியவன் எழுந்து அவளிடம் வந்தவன் ஏய் தாமரை தூங்காம என்னடி பண்ற என்க...
திடிரென்று கேட்கும் குரலால் அதிர்ந்து திரும்பியவள் நீ தூங்கலையா என்கவும் ம்ம் வேண்டுதலை என்றவன் அவளின் பக்கத்தில் சிறிது இடைவெளி விட்டு உட்கார்ந்து கொண்டு என்ன பிரச்சனை?
ஆளே வித்யாசமா இருக்க?
இல்லை அது இது னு மழுப்பாதே என்று கோவமாக மருது சொல்ல...
நண்பனை பார்த்து விரக்தியாக சிரித்தவள் பின்னர் நடந்ததையெல்லாம் சொல்ல.. மருதுவோடு அங்கு படுத்திருந்த சீதா மற்றும் பெருமாளும் அதையெல்லாம் கேட்டு அதிர்ந்தனர்.
சொல்லி முடித்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட, வந்த ஆத்திரத்தை கையை மடிக்கி போக்கியவன்,இதுக்கு தான் சொல்வாங்க விளையாட்டு வினையமாகும் ஜாக்கிரதைனு..
சரி விடு..
ஏதோ ஒரு கோவத்தில் பேசிட்டார் டி.மனசறிந்து சொல்ல வழியில்லை என்க.. நீயும் அதே இனமாச்சே.என்றைக்காவது செல்லா இப்படி உன்னிடம் சொல்லி காட்டிருக்காளா என்க,மருதுவோ இல்லை என்று தலையசைத்தான்
ஏய் தாமரை...
இதையெல்லாம் சீரியஸா எடுக்காதே .
கதிர் உன் மேல உயிரையே வச்சிருக்கார் டி அது உனக்கு தெரியலையா?.யோசிக்காமல் பேசிட்டார் அதை விட்டு தள்ளு.. ஏன் இப்படி பேசுனனு சண்டை போடுறதை விட்டு குடி மூழ்கின போல இருக்க..
ஒழுங்கா வந்து படு டி.. வா என்று மருது எழ தாமரையோ எதுவும் சொல்லாமல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தனது அத்தையின் பக்கத்தில் போய் படுத்துக் கொண்டாள்..
விடியலோ சேவலின் கூவலோடு தொடங்கியது..
ஒரு பக்கம் காலை டிபனுக்காக சமையல் வேலை ஆரம்பமானது.
பண்டாரம் வந்ததும் பூஜைக்கு ஆயத்தம் பண்ண அவர் கேட்பதை செல்லா எடுத்து கொடுத்தாள். பின்னர் அதற்கான சங்குகள் முடிந்தது.
மதிய உணவு பரிமாற வந்திருந்த உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் கையில் கிடைத்த பணத்தை மொய் வைத்து சாப்பிட்டு சென்றனர்.
எல்லாம் முடிய மாலையானது.
சரி நாம கிளம்பளாமா டி என தாமரையிடம் கதிர் கேட்க, அங்கிருந்த வீட்டினரை பார்த்தவள் மாமா..என் தம்பிக்கு ஒருத்தி வரும் வரை நான் இங்கு தான் இருக்க போறேன் என்றாள்.
மருமகள் இதை தான் பண்ணுவாள் என்பது இரவு மருதுவிடம் அவள் பேசியதை வைத்தே பெருமாள் மற்றும் சீதாவிற்கு புரிந்து விட்டது.
தாமரை பேசியதை கேட்ட வேதா, என்ன பேசுற?அதான் நான் இருக்கேனே நீ போய் புருஷன் வீட்டில் வாழும் வழியை பாருயென மருமகளை முறைத்தார்.
ஏன் அத்தம்மா உங்களுக்கு இருக்கிற அதே பொறுப்பு உரிமையும் எனக்கும் இந்த வீட்ல இருக்கு தானே என்கவும் அதற்கு அவரால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.இருந்தாலும் நீ போய் அங்கே இரு நான் இருக்கேன் இல்ல, ஏன் இந்த அத்தையால எதுவும் பண்ண முடியாதா என்க...
எத்தனை காலம் தான் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்க போறீங்க??நீங்க உக்காருங்க பொறுப்பை நான் எடுத்துக்கிறேன் என்றாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கோ மனைவியின் மேல் ஆத்திரம் வந்தது.ஏதோ 16 நாள் வரைக்கும் இவ அப்பா வீட்டுல இருந்துட்டு வரட்டும்னு நினைச்சா இவ என்ன தம்பி கல்யாணம் வரைக்கும் இங்கே இருக்கிறேன் என்று சொல்கிறாள்? யாரை கேட்டுட்டு இந்த முடிவு எடுத்தாள் என்று மனைவியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது, அக்கா நீ போய் உன் குடும்பத்தை பாரு. அத்தை நீங்க நீலகிரிக்கு போங்க தாத்தா பாட்டியை என்னால பாத்துக்க முடியும்.அதற்கான தெம்பு எனக்கு இருக்கிறது என்று சிவா சொல்ல..டேய் நீ சும்மா இருடா உனக்கு என்னடா தெரியும் என்று அவனை தாமரையும் வேதாவும் அதட்டினார்கள்.
மாமா தாத்தா அம்மாச்சி என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்று தாமரை உறுதியாக சொல்லவும் தாமரை என்று பல்லை கடித்த கதிர் ரூமுக்கு வா என்றான்.
அத்தனை பேர்களுக்கு முன்னாடியே என்னால் வர முடியாது என்கவும், உன்னை வாடினு சொன்னேன் என்று பல்லை கடிக்க, என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன் இப்ப என்ன பண்ண போறீங்க என்று எதிர்த்து நின்றாள்.
என்னடி வாய் ரொம்ப நீளுது.அடிச்சேன் பல்லெல்லாம் உடைஞ்சிடும் என்க..
கதிர் என்று கத்திய பெருமாள் ஒழுங்கு மரியாதை வீட்டுக்கு போ நான் வந்து பேசுறேன் என்றார்.தந்தையின் கடுமையான குரலைக் கேட்டவன் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து சென்றான்.
இங்க பாரு தாமரை உனக்கு எந்த அளவுக்கு இந்த குடும்பத்து மேல அக்கறை இருக்கோ அதே அக்கறை எங்களுக்கும் இருக்கு.உனக்கு அம்மா என்றால் கவிதா என் கூட பிறந்தது.
ஒரு விதத்துல நீ சொல்றது வாஸ்தவம் தான் சிவாவுக்கு ஒரு குடும்பம் வேணும் அவளுக்குன்னு ஒருத்தி வந்த பிறகு உன் இடத்துக்கு நீ வந்து இருப்பதே மரியாதை சொல்றது புரியும்னு நினைக்கிறேன் என்க.
ம்ம் மாமா என்று தலையசைத்தாள்.
பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்று விட ஏன் தாமரை உனக்கும் கதிருக்கும் ஏதாவது பிரச்சனையா என்று வேதா கேட்க அய்யோ அத்தம்மா ஏன் இப்படி இருக்கீங்க?நான் ஏன் மாமா கூட சண்டை போட போறேன் என்றாள்.
இத்தனை பேருக்கு முன்னாடி இப்படி பேசுகிறியே அதான் என்கவும்,நம்ம வீட்டில் இப்ப என்ன நடந்திருக்கு அத பத்தி யோசிக்கும். மற்றபடி எங்களுக்குள்ள ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சிரித்துக் கொண்டே சொல்லவும் மருமகளின் முகத்தை வைத்து அவரால் எதுவும் கண்டுபிடிக்கவில்லை..
எவ்வளவு கொழுப்ப பாரு இவளுக்கு..எல்லாருக்கும் முன்னாடி இப்படி எடுத்தெரிஞ்சு பேசிட்டு இருக்குறாள்? வீட்டுக்கு வாடி உன்ன கவனிச்சிக்கிறேன் என்று புலம்பிய கதிரோ குறுக்கும் நெடுக்குமாக முற்றத்தில் நடந்து கொண்டிருக்கு மற்றவர்களும் வீட்டுக்கு வந்தனர்.
அப்பொழுது வேகமாக வந்த பெருமாள் மகனின் கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தார்.இதை எதிர்பார்த்த சீதாவைத் தவிர மற்றவர்களோ அதிர்ந்து போனார்கள்.
முத்துவோ அண்ணா என்ன பண்ற என்று வேகமாக வந்து பெருமாளின் கையைப் பிடித்து சத்தம் போட..
தோளுக்கு மேல வளந்த புள்ளைனா அப்படியே கண்டுக்காம போய்டுவேன் நினைச்சுட்டு இருக்கியா?
தோலை உறிச்சிடுவேன்...!
எதற்கு உன் பொண்டாட்டி அவங்க அப்பா வீட்ல தங்கி இருக்குன்னு முதல்ல தெரியுமா டா??என்னென்ன வார்த்தை எல்லாம் அந்த புள்ள கிட்ட பேசி இருக்க...
கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது உன் அம்மாளுங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் எங்களை ஒரு வார்த்தை மத்தவங்க கூட சம்பந்தப்படுத்தி பேசி இருப்பாங்களா இல்ல கேட்டு இருப்பாங்களா?.
எத்தனையோ நாள் நடு சாமத்துக்கலாம் வீட்டுக்கு வந்து இருக்கேன் தெரியுமா இதுவரைக்கும் ஒம்மா அப்படி சந்தேகப்பட்டு பேசி இருப்பாளா?ஏன் பல நாளு வேலைக்காக வெளியூர் எல்லாம் போய் தங்கி இருக்கோம் நானும் என் தம்பியும்...எங்க அப்பா அம்மாவும் சரி சீதா-ராதா ஒரு வாரத்தை கூட தவறா நினைச்சது கிடையாது நினைக்க மாட்டாங்க ...
ஆனா நீ என்னென்ன பேசிருக்க என்று மருதுவிடம் தாமரை சொல்லிய விஷயத்தை எல்லாம் பெருமாள் சொல்லவும் அதைக் கேட்டு மற்றவர்களை விட கதிர் தான் பேரதிர்ச்சிக்கு உள்ளானான்.
அப்பா என்னப்பா சொல்றீங்க என்று தடுமாற்றத்தோடு கேட்க இன்னும் என்னடா சொல்லணும் என்று கையை ஓங்கியவர் உண்மையிலேயே அந்த மருது பையன கல்யாணம் பண்ணி இருந்தா தாமரை வாழ்க்கை எனக்கு தெரிஞ்ச ரொம்ப நல்லா இருந்திருக்கும்.தங்கமான பையன் தெரியுமா...
உனக்காக நீ இருக்கும் இடத்திலிருந்து அவ்வளவு நிறுத்தி நிதானமா அந்த பிள்ளைக்கு புத்தி சொன்னான்.அதைக் கேட்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே சொல்ல முடியல
தண்ணி குடிக்க சீதாவை எழுப்பி கேட்டேன் எடுத்துட்டு வந்து தந்ததும் குடிச்சிட்டு அப்பதான் ரெண்டு பேரும் படுத்தோம்.வினிதா கிட்ட தாமரை பேசிட்டு இருந்ததால தான் சரி என்று நாங்கள் அமைதியாக இருந்தோம் ஆனால் அந்த புள்ள மனசு காயப்பட்டு இருக்குன்னு தெரியலை.பாவத்திலேயே பொல்லாத பாவம் எது தெரியுமா பொண் பாவம் தான்.
கொஞ்ச நாளு அமைதியாக இரு அதுக்குன்னு புள்ள பொண்டாட்டி பாக்காதனு நான் சொல்லல உன் கோபத்தை எல்லாம் சுருட்டிக்கிட்டு இரு மகன்னு கூட பாக்க மாட்டேன் தோல உரிச்சிடுவேன் சொல்லிட்டேன் என்றவாறு வளவன் பக்கம் திரும்பியவர் உனக்கும் தான் சொல்றேன்.