Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 627
- Thread Author
- #1
நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.லீவ் முடிந்து விட செல்வியும் நிலனும் கல்லூரிக்கு சென்று விட்டனர்.
தாமரையோ அவள் சம்பாதித்த பணத்தை வைத்து சீதாவுக்காக ஓவிய பள்ளி ஒன்றை ஆரம்பிக்க முடிவு பண்ண,அவள் நேரம் அவங்க ஊரிலேயே ஒரு இடம் விலைக்கு வர யாருக்குமே தெரியாமல் தனது தந்தையிடம் மட்டும் சொல்லி அதை வாங்கியவள் அங்கு பில்டிங் கட்ட ஏற்பாடு பண்ணினாள்.
மற்றவர்களுக்கு இது யார் வாங்கியது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.தெரியாத ஆட்களை வைத்து வேலை நடப்பதால் என்ன அங்கு நடக்கப்போவது என்று யோசனையாகவே இருந்தனர்.
ஒரே மாதத்தில் பில்டிங் முழுமையாக அதன் திறப்பு விழா வரவும் சொந்த பந்தங்களை அழைத்துப் போக அந்த கட்டிடத்திற்கு எங்களை ஏன் மா கூப்பிட்டு போற என்று தாமரையிடம் கேட்டனர்.
பொண்டாட்டி எதோ பண்றாள் என்பது மட்டும் கதிருக்கு புரிந்தது. எல்லாம் காரணமாகத்தான் வாங்க என்று சொல்லி அழைத்து போனவள் பெரியோர்களின் கையில் கத்திரிக்கோலை கொடுத்த தாமரை ரிப்பனை கட் பண்ண சொன்னாள்.
அது போல் பிரகாசம் தாத்தவும் சிவசாமி தாத்தாவும் அவர்கள் மனைவியோடு இணைந்து கட் பண்ணி உள்ளே போக சீதா ஓவியப்பள்ளி என்ற போர்டை பார்த்ததும் சீதாவுக்கு அழுகையே வந்து விட்டது.
மருமகள் இப்படி ஒரு வேலை செய்வாள் என்பதை எதிர் பாக்காதவர் நேராகப் போய் தாமரையை அணைத்துக் கொண்டு கதறி அழ...எதுக்கத்தை அழுறீங்க?உங்களுடைய ஆசை இதுதானே...எந்த வயதில் வேணாலும் நமக்கு தெரிந்த வேலையை செய்யலாம் அது தவறே கிடையாது.
பிள்ளைகள் எல்லாம் உங்ககிட்ட ஓவியம் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க.ஸ்கூல் போற பிள்ளைகளுக்காக ஈவினிங் கிளாஸ்சும் சின்ன சின்ன பிள்ளைகள் வருவதற்காக பத்து மணிக்கு மேல தான் ஃபர்ஸ்ட் பேட்ச் ஆரம்பிக்க போறோம்.
நீங்க வீட்ல எல்லா வேலையும் முடிச்சிட்டே தாராளமா இதை பார்க்கலாம் என்கவும் தாமரை என்று ராதா போய் மருமகனின் கையைப் பிடித்தவர் உன்னை போல மருமகள் ஒவ்வொரு வீட்டுக்கு வந்தா போதும் மா என்று கண்கலங்கினார்.
உங்களுக்கு ஒன்னு சொல்றேன் கேப்பீங்களா அத்தை என்கவும் சொல்லுதா..மெடிசன் படிக்கணும்னு ஆசைப்பட்டீங்க..வயது போய் விட்டது வேறு ஏதாவது படிக்கிறீங்களா என்க..
தயக்கமாக அங்கிருந்த வீட்டினரை பார்க்க அவங்களை ஏன் பாக்குறீங்க உங்களுக்கு விருப்பம் இருக்கா இல்லையா அத மட்டும் சொல்லுங்க என்றாள்.
நம்ம போயிட்டோம்னா குடும்பத்தை யாரு பார்ப்பது என்று கேட்க உங்களுக்கு அந்த கவலை ஏன்?.
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்கவும் சரி படிக்கிறேன் என்றார். படிப்பிற்கு வயது தேவை இல்லை அத்தை என்றவள் அவரை ஈவினிங் காலேஜில் படிக்க வைப்பதற்காக அப்ளிகேஷன் போட ராதாவும் அவருக்கு பிடித்த பாடமான பிஎஸ்சி physics எடுத்து படிக்க விரும்பினார்.
தாமரையை நினைத்து கதிருக்கு மட்டுமல்ல சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் ரொம்ப பெருமையாக இருந்தது.வீட்டிற்கு இதே போல் ஒரு மகளோ இல்லை மருமகள் இருக்க வேண்டும் என்று பொறாமைப்படாதவர்களே அக்கம் பக்கத்தில் இல்லை.
சீதாவோ காலையில் வேலையை முடித்துவிட்டு ஓவிய பள்ளிக்கு வந்துவிடுவார்.வரும்போது இரண்டு பேரப் பிள்ளைகளையும் அழைத்து வந்து விட,தாமரையும் வீட்டு வேலைகளோடு டிசைனிங் வேலையும் பார்த்துக் கொண்டாள். ஆண்களும் அவர்களுக்காக அனுசரித்துப் போக பழகிக் கொண்டார்கள்.
வளவன் நிலா திருமணத்திற்கு இன்னும் ஒரு மாத தான் இருக்கு என்பதால் அதற்கான வேலையில் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு வேலையை பிரித்துக் கொண்டனர். நாட்களும் வேகமாக ஓட பந்தல் கால் ஊன்றி நலுங்கும் ஆரம்பமானது.
கதிருக்கு தான் மனைவி மேல் செம கடுப்பாக இருந்தது.கடந்த ஒரு மாதமாகவே கல்யாணத்தை காரணமாக சொல்லிவிட்டு கணவனை கண்டுக்காமல் இருக்க, கல்யாணம் முடியட்டும் அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன் டி என்று கரவம் கட்டிக் கொண்டிருந்தான்.
பொண் அழைக்கும் நாளும் வர தாமரையும் கதிரும் சில சொந்த பந்தங்கள் ஊர் முக்கியஸ்தர்களோடு தேனூரில் இருக்கும் நிலா வீட்டிற்கு பரிசம் போட புறப்பட்டனர்.
முக்கா மணி நேரம் பயணத்தில் தேனூருக்கு வந்தவர்களை நிலாவின் அப்பா அம்மாவும் வாசலில் நின்று வரவேற்து வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள்.
இரண்டு ஊர் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் பரிசம் போட்டுவிட்டு நிலாவை வரவைத்து அவளுக்காக கட்டிக்க எடுத்துட்டு வந்த புடவை மற்ற பொருள்கள் அடங்கிய தாம்பாளத்தை தாமரையும் கதிரும் இணைந்து கொடுக்க அதை நிலாவும் வாங்கிக் கொண்டு உள்ளே போனாள்.
அங்கிருந்த பியூட்டிஷனும் சிறிது நிமிடத்திலேயே புது புடவையை அவளுக்கு கட்டி விட்டு தயார் படுத்த பின்னர் மற்ற சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு நிலாவை மாப்பிள்ளை வீட்டினரோடு அனுப்ப அவளோ சொந்த பந்தங்களை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.பின்னர் ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு சீமகரைக்கு புறப்பட்டார்கள்.
ஏம்மா பொண்ண அழைச்சிட்டு கிளம்பிட்டாங்களாம், இங்கு எல்லாம் ரெடியா இருக்கா என்று பெருமாள் கேட்க எல்லாம் ரெடியா தான் இருக்கு என்றனர்.
மாமா மாமா என்று ரூமில் ரெடியாகி கொண்டிருக்கும்போது செல்வி கூப்பிட, தலை சீவிக் கொண்டிருந்த வேலுவோ என்னடி என்று கேட்க ஒரு மாதிரியா இருக்கு மாமா.வாமிட் வர போல இருக்கு...
கொஞ்சமா தின்னா தானே?.
அப்பன் வீட்டில் விருந்துனு ஆட்டுக்கரிய தொண்டை வரைக்கும் அமுக்கினா வாந்தி வராமல் வேற என்னடி பண்னும் என்று பல்லை கடித்தான்.
கணவன் சொன்னதைக் கேட்டு முறைத்து பார்த்தவள் நீ தானே நல்லா சாப்பிடு சாப்பிடு என்ற...ஏய் ஒல்லிக்குச்சி போல இருக்கேடி கொஞ்சம் தெம்பா இருந்தா தானே புருஷன சமாளிக்கிறதுக்கு சரியா வரும்னு சொன்னேன் என்று மனைவியை பார்த்து கண்ணடித்துக் கொண்டே வேலு சொல்ல...வெட்கமாக இல்லையா என்றாள்.
அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க போய் கதவை திறக்கவும் என்ன ணா உன் பொண்டாட்டி இன்னுமா சிங்காரிக்கிறாளென்று அல்லி கேட்க, இல்லை டா.ஏதோ வாந்தி வர போல இருக்குன்னு சொல்றா என்க..
அப்படியா...இப்ப தான் அப்பத்தாவுக்கு எலுமிச்சை ஜூஸ் போட்டு கொடுத்து கொஞ்சம் பிரிட்ஜில் எடுத்து வச்சிருக்கேன் ணா.நான் போய் எடுத்துட்டு வரேன் ணா என்று கிச்சனுக்குள் போனவள் ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் எடுத்துட்டு வந்து செல்வி கிட்ட கொடுக்க அது குடித்த பிறகு அவளுக்கு கொஞ்சம் நல்லா இருப்பது போல் இருக்கவும் பொண்ண அழைச்சிட்டு வந்துட்டு இருக்காங்க வாடி சீக்கிரம் என்க..
இதோ என்ற சொல்லிக்கொண்டு இருவரும் படியில் இறங்கி கீழே வர தூரத்தில் வேட்டு சத்தம் கேட்டது.
நிலாவை அழைத்துக்கொண்டு சீமகரைக்கும் வந்து சேர்ந்தனர். தெருமுனையில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு நடத்து தான் வரணும் என்பது சம்பிரதாயம் இருப்பதால் வேனில் இருந்து எல்லாரும் இறங்கினார்கள் நிலாவோடு அவளின் சொந்த பந்தங்களும் வந்திருந்தனர்.
பின்னர் வேட்டு சத்தம் மேள தாளத்தோடு வர அங்கே வழக்கம் போல் கல்யாண வீட்டில் மணமகளே மணமகளே வா வா என்று பாடல் ஒலித்தது.
சிறிது நிமிடத்தில் வீட்டின் முன்னால் வந்து நிற்க வழக்கமாக செய்யும் சம்பிரதாயங்களை ராதாவும் சீதாவும் செய்துவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குள் சென்றவர்கள் அங்கிருந்த விளக்கை ஏற்ற சொல்லி சாமி கும்பிட்டனர்.
பின்னர் அவர்கள் தங்குவதற்கான அறையை காட்ட அதில் போய் நிலா வீட்டினர் தங்கி கொண்டனர்.
வளவனோ எப்படியாவது தன்னவளை பார்த்து விடலாம் என்று தவித்துக் கொண்டிருக்க அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை..
நேரமும் கடந்து செல்ல காலையில் முதல் முகூர்த்தத்திற்கு திருமணம் என்பதால் சீக்கிரம் அவளை படுக்க சொன்னார்கள்.
விடியலும் கிழக்கே உதயமாக எல்லாரும் எழுந்து திருமணத்திற்கு தயாரானார்கள்.வழக்கம்போல் அய்யனார் கோயிலின் முன்பு இருக்கும் பெரிய திடலில் கல்யாண பந்தல் மேடை அமைத்திருக்க சொந்த பந்தங்களும் தயாராகி சென்று வீட..
பியூட்டிஷன் வந்ததும் நிலாவை அலங்கரித்து ஒரு காரில் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள்.
மணமேடையில் ஐயர் வழக்கமாக செய்யும் சடங்குகளை வளவனுக்கு செய்ய அவனும் அதே போல் செய்தவன் அவன் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து முடிக்க அடுத்தது நிலாவை வரவைத்து அவளை அவர் பெற்றோருக்கு பாத பூஜை செய்ய வைத்தனர்.
பின்னர் கூரப்புடவையை கொடுத்து கட்டிட்டு வர சொல்ல சிறிது நிமிடத்தில் அவளை அழைத்துக் கொண்டு தாமரையும் மேடைக்கு வந்தாள்.
தாம்பூளத்தில் இருக்கும் தாலியை சொந்த பந்தங்களிடம் காட்டி ஆசீர்வாதம் வாங்கிட்டு வர சொல்ல அதேபோல் தாமரையும் எடுத்துக் கொண்டு போய் எல்லாரிடமும் காட்டிவிட்டு வந்தாள்.
கெட்டி மேளம் முழங்க சொந்த பந்தங்களின் முன்னிலையில் நிலாவை தனது மனைவியாக மூன்று முடிச்சு போட்டு வளவன் ஏற்றுக் கொண்டான்.
பின்னர் மற்ற செய்முறை சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தவர்கள் அங்கேயும் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு நிலா வீட்டுக்கு சென்றனர்.வளவனுக்கோ அங்கு இருப்பது அன்னீசியாக இருந்தது.
தம்பியை பற்றி தெரிந்ததால் அவனின் புல்லட்டை கதிரும் கொடுத்து அனுப்பி இருந்தான் பின்னர் வெளியில போயிட்டு வரேன் என்று நிலாவின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு டவுனுக்கு சென்று விட்டான்..
இரவு உணவும் தயாராக அதன் பின்னரே வளவன் வீட்டிற்குள் வர அவனுக்கு நிலாவே பரிமாறினாள். சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருப்பதால் அவளிடம் எதுவும் அவனால் பேச முடியவில்லை.
பின்னர்...
மாப்பிள்ளை உங்களுக்கு மேல ரூம் இருக்கு அங்க போய் படுத்துக் கொள்ளுங்கள் என்று நிலாவின் அப்பா சொல்ல சரிங்க மாமா என்றவன் தனது ஃபோனை எடுத்துக் கொண்டு விட்டால் போதும்டா சாமி என்று மாடிக்கு சென்று விட்டான்.
குழந்தைகள் இருவரும் தூங்கி விட அவங்க இங்கே இருக்கட்டும் நீ போ தாமரை என்று ராதா சொல்ல,அத்தை நைட்ல எந்திரிச்சு அழுதாங்கன்னா என்ன பண்ணுவீங்க என்றாள்.
ஏம் மா பால் தான் நம்ம கிட்ட எப்பவுமே சூடா இருக்குமே..ராதா போய் பிளாஸ்கில் எடுத்துட்டு வந்து வச்சுக்க நீ போ, உன் அத்தை பார்த்துப்பாளென்று முத்து சொல்ல,சரிங்க மாமா என்று தாமரையும் அங்கிருந்து மேலே வர கட்டில் மேல் உட்கார்ந்திருந்து கதிரோ மனைவியை முறைத்து பார்த்தான்.
தாமரையோ அவள் சம்பாதித்த பணத்தை வைத்து சீதாவுக்காக ஓவிய பள்ளி ஒன்றை ஆரம்பிக்க முடிவு பண்ண,அவள் நேரம் அவங்க ஊரிலேயே ஒரு இடம் விலைக்கு வர யாருக்குமே தெரியாமல் தனது தந்தையிடம் மட்டும் சொல்லி அதை வாங்கியவள் அங்கு பில்டிங் கட்ட ஏற்பாடு பண்ணினாள்.
மற்றவர்களுக்கு இது யார் வாங்கியது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.தெரியாத ஆட்களை வைத்து வேலை நடப்பதால் என்ன அங்கு நடக்கப்போவது என்று யோசனையாகவே இருந்தனர்.
ஒரே மாதத்தில் பில்டிங் முழுமையாக அதன் திறப்பு விழா வரவும் சொந்த பந்தங்களை அழைத்துப் போக அந்த கட்டிடத்திற்கு எங்களை ஏன் மா கூப்பிட்டு போற என்று தாமரையிடம் கேட்டனர்.
பொண்டாட்டி எதோ பண்றாள் என்பது மட்டும் கதிருக்கு புரிந்தது. எல்லாம் காரணமாகத்தான் வாங்க என்று சொல்லி அழைத்து போனவள் பெரியோர்களின் கையில் கத்திரிக்கோலை கொடுத்த தாமரை ரிப்பனை கட் பண்ண சொன்னாள்.
அது போல் பிரகாசம் தாத்தவும் சிவசாமி தாத்தாவும் அவர்கள் மனைவியோடு இணைந்து கட் பண்ணி உள்ளே போக சீதா ஓவியப்பள்ளி என்ற போர்டை பார்த்ததும் சீதாவுக்கு அழுகையே வந்து விட்டது.
மருமகள் இப்படி ஒரு வேலை செய்வாள் என்பதை எதிர் பாக்காதவர் நேராகப் போய் தாமரையை அணைத்துக் கொண்டு கதறி அழ...எதுக்கத்தை அழுறீங்க?உங்களுடைய ஆசை இதுதானே...எந்த வயதில் வேணாலும் நமக்கு தெரிந்த வேலையை செய்யலாம் அது தவறே கிடையாது.
பிள்ளைகள் எல்லாம் உங்ககிட்ட ஓவியம் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க.ஸ்கூல் போற பிள்ளைகளுக்காக ஈவினிங் கிளாஸ்சும் சின்ன சின்ன பிள்ளைகள் வருவதற்காக பத்து மணிக்கு மேல தான் ஃபர்ஸ்ட் பேட்ச் ஆரம்பிக்க போறோம்.
நீங்க வீட்ல எல்லா வேலையும் முடிச்சிட்டே தாராளமா இதை பார்க்கலாம் என்கவும் தாமரை என்று ராதா போய் மருமகனின் கையைப் பிடித்தவர் உன்னை போல மருமகள் ஒவ்வொரு வீட்டுக்கு வந்தா போதும் மா என்று கண்கலங்கினார்.
உங்களுக்கு ஒன்னு சொல்றேன் கேப்பீங்களா அத்தை என்கவும் சொல்லுதா..மெடிசன் படிக்கணும்னு ஆசைப்பட்டீங்க..வயது போய் விட்டது வேறு ஏதாவது படிக்கிறீங்களா என்க..
தயக்கமாக அங்கிருந்த வீட்டினரை பார்க்க அவங்களை ஏன் பாக்குறீங்க உங்களுக்கு விருப்பம் இருக்கா இல்லையா அத மட்டும் சொல்லுங்க என்றாள்.
நம்ம போயிட்டோம்னா குடும்பத்தை யாரு பார்ப்பது என்று கேட்க உங்களுக்கு அந்த கவலை ஏன்?.
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்கவும் சரி படிக்கிறேன் என்றார். படிப்பிற்கு வயது தேவை இல்லை அத்தை என்றவள் அவரை ஈவினிங் காலேஜில் படிக்க வைப்பதற்காக அப்ளிகேஷன் போட ராதாவும் அவருக்கு பிடித்த பாடமான பிஎஸ்சி physics எடுத்து படிக்க விரும்பினார்.
தாமரையை நினைத்து கதிருக்கு மட்டுமல்ல சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் ரொம்ப பெருமையாக இருந்தது.வீட்டிற்கு இதே போல் ஒரு மகளோ இல்லை மருமகள் இருக்க வேண்டும் என்று பொறாமைப்படாதவர்களே அக்கம் பக்கத்தில் இல்லை.
சீதாவோ காலையில் வேலையை முடித்துவிட்டு ஓவிய பள்ளிக்கு வந்துவிடுவார்.வரும்போது இரண்டு பேரப் பிள்ளைகளையும் அழைத்து வந்து விட,தாமரையும் வீட்டு வேலைகளோடு டிசைனிங் வேலையும் பார்த்துக் கொண்டாள். ஆண்களும் அவர்களுக்காக அனுசரித்துப் போக பழகிக் கொண்டார்கள்.
வளவன் நிலா திருமணத்திற்கு இன்னும் ஒரு மாத தான் இருக்கு என்பதால் அதற்கான வேலையில் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு வேலையை பிரித்துக் கொண்டனர். நாட்களும் வேகமாக ஓட பந்தல் கால் ஊன்றி நலுங்கும் ஆரம்பமானது.
கதிருக்கு தான் மனைவி மேல் செம கடுப்பாக இருந்தது.கடந்த ஒரு மாதமாகவே கல்யாணத்தை காரணமாக சொல்லிவிட்டு கணவனை கண்டுக்காமல் இருக்க, கல்யாணம் முடியட்டும் அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன் டி என்று கரவம் கட்டிக் கொண்டிருந்தான்.
பொண் அழைக்கும் நாளும் வர தாமரையும் கதிரும் சில சொந்த பந்தங்கள் ஊர் முக்கியஸ்தர்களோடு தேனூரில் இருக்கும் நிலா வீட்டிற்கு பரிசம் போட புறப்பட்டனர்.
முக்கா மணி நேரம் பயணத்தில் தேனூருக்கு வந்தவர்களை நிலாவின் அப்பா அம்மாவும் வாசலில் நின்று வரவேற்து வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள்.
இரண்டு ஊர் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் பரிசம் போட்டுவிட்டு நிலாவை வரவைத்து அவளுக்காக கட்டிக்க எடுத்துட்டு வந்த புடவை மற்ற பொருள்கள் அடங்கிய தாம்பாளத்தை தாமரையும் கதிரும் இணைந்து கொடுக்க அதை நிலாவும் வாங்கிக் கொண்டு உள்ளே போனாள்.
அங்கிருந்த பியூட்டிஷனும் சிறிது நிமிடத்திலேயே புது புடவையை அவளுக்கு கட்டி விட்டு தயார் படுத்த பின்னர் மற்ற சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு நிலாவை மாப்பிள்ளை வீட்டினரோடு அனுப்ப அவளோ சொந்த பந்தங்களை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.பின்னர் ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்தி அவளை அழைத்துக் கொண்டு சீமகரைக்கு புறப்பட்டார்கள்.
ஏம்மா பொண்ண அழைச்சிட்டு கிளம்பிட்டாங்களாம், இங்கு எல்லாம் ரெடியா இருக்கா என்று பெருமாள் கேட்க எல்லாம் ரெடியா தான் இருக்கு என்றனர்.
மாமா மாமா என்று ரூமில் ரெடியாகி கொண்டிருக்கும்போது செல்வி கூப்பிட, தலை சீவிக் கொண்டிருந்த வேலுவோ என்னடி என்று கேட்க ஒரு மாதிரியா இருக்கு மாமா.வாமிட் வர போல இருக்கு...
கொஞ்சமா தின்னா தானே?.
அப்பன் வீட்டில் விருந்துனு ஆட்டுக்கரிய தொண்டை வரைக்கும் அமுக்கினா வாந்தி வராமல் வேற என்னடி பண்னும் என்று பல்லை கடித்தான்.
கணவன் சொன்னதைக் கேட்டு முறைத்து பார்த்தவள் நீ தானே நல்லா சாப்பிடு சாப்பிடு என்ற...ஏய் ஒல்லிக்குச்சி போல இருக்கேடி கொஞ்சம் தெம்பா இருந்தா தானே புருஷன சமாளிக்கிறதுக்கு சரியா வரும்னு சொன்னேன் என்று மனைவியை பார்த்து கண்ணடித்துக் கொண்டே வேலு சொல்ல...வெட்கமாக இல்லையா என்றாள்.
அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்க போய் கதவை திறக்கவும் என்ன ணா உன் பொண்டாட்டி இன்னுமா சிங்காரிக்கிறாளென்று அல்லி கேட்க, இல்லை டா.ஏதோ வாந்தி வர போல இருக்குன்னு சொல்றா என்க..
அப்படியா...இப்ப தான் அப்பத்தாவுக்கு எலுமிச்சை ஜூஸ் போட்டு கொடுத்து கொஞ்சம் பிரிட்ஜில் எடுத்து வச்சிருக்கேன் ணா.நான் போய் எடுத்துட்டு வரேன் ணா என்று கிச்சனுக்குள் போனவள் ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் எடுத்துட்டு வந்து செல்வி கிட்ட கொடுக்க அது குடித்த பிறகு அவளுக்கு கொஞ்சம் நல்லா இருப்பது போல் இருக்கவும் பொண்ண அழைச்சிட்டு வந்துட்டு இருக்காங்க வாடி சீக்கிரம் என்க..
இதோ என்ற சொல்லிக்கொண்டு இருவரும் படியில் இறங்கி கீழே வர தூரத்தில் வேட்டு சத்தம் கேட்டது.
நிலாவை அழைத்துக்கொண்டு சீமகரைக்கும் வந்து சேர்ந்தனர். தெருமுனையில் இருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு நடத்து தான் வரணும் என்பது சம்பிரதாயம் இருப்பதால் வேனில் இருந்து எல்லாரும் இறங்கினார்கள் நிலாவோடு அவளின் சொந்த பந்தங்களும் வந்திருந்தனர்.
பின்னர் வேட்டு சத்தம் மேள தாளத்தோடு வர அங்கே வழக்கம் போல் கல்யாண வீட்டில் மணமகளே மணமகளே வா வா என்று பாடல் ஒலித்தது.
சிறிது நிமிடத்தில் வீட்டின் முன்னால் வந்து நிற்க வழக்கமாக செய்யும் சம்பிரதாயங்களை ராதாவும் சீதாவும் செய்துவிட்டு நிலாவை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குள் சென்றவர்கள் அங்கிருந்த விளக்கை ஏற்ற சொல்லி சாமி கும்பிட்டனர்.
பின்னர் அவர்கள் தங்குவதற்கான அறையை காட்ட அதில் போய் நிலா வீட்டினர் தங்கி கொண்டனர்.
வளவனோ எப்படியாவது தன்னவளை பார்த்து விடலாம் என்று தவித்துக் கொண்டிருக்க அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை..
நேரமும் கடந்து செல்ல காலையில் முதல் முகூர்த்தத்திற்கு திருமணம் என்பதால் சீக்கிரம் அவளை படுக்க சொன்னார்கள்.
விடியலும் கிழக்கே உதயமாக எல்லாரும் எழுந்து திருமணத்திற்கு தயாரானார்கள்.வழக்கம்போல் அய்யனார் கோயிலின் முன்பு இருக்கும் பெரிய திடலில் கல்யாண பந்தல் மேடை அமைத்திருக்க சொந்த பந்தங்களும் தயாராகி சென்று வீட..
பியூட்டிஷன் வந்ததும் நிலாவை அலங்கரித்து ஒரு காரில் அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள்.
மணமேடையில் ஐயர் வழக்கமாக செய்யும் சடங்குகளை வளவனுக்கு செய்ய அவனும் அதே போல் செய்தவன் அவன் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து முடிக்க அடுத்தது நிலாவை வரவைத்து அவளை அவர் பெற்றோருக்கு பாத பூஜை செய்ய வைத்தனர்.
பின்னர் கூரப்புடவையை கொடுத்து கட்டிட்டு வர சொல்ல சிறிது நிமிடத்தில் அவளை அழைத்துக் கொண்டு தாமரையும் மேடைக்கு வந்தாள்.
தாம்பூளத்தில் இருக்கும் தாலியை சொந்த பந்தங்களிடம் காட்டி ஆசீர்வாதம் வாங்கிட்டு வர சொல்ல அதேபோல் தாமரையும் எடுத்துக் கொண்டு போய் எல்லாரிடமும் காட்டிவிட்டு வந்தாள்.
கெட்டி மேளம் முழங்க சொந்த பந்தங்களின் முன்னிலையில் நிலாவை தனது மனைவியாக மூன்று முடிச்சு போட்டு வளவன் ஏற்றுக் கொண்டான்.
பின்னர் மற்ற செய்முறை சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தவர்கள் அங்கேயும் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு நிலா வீட்டுக்கு சென்றனர்.வளவனுக்கோ அங்கு இருப்பது அன்னீசியாக இருந்தது.
தம்பியை பற்றி தெரிந்ததால் அவனின் புல்லட்டை கதிரும் கொடுத்து அனுப்பி இருந்தான் பின்னர் வெளியில போயிட்டு வரேன் என்று நிலாவின் பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு டவுனுக்கு சென்று விட்டான்..
இரவு உணவும் தயாராக அதன் பின்னரே வளவன் வீட்டிற்குள் வர அவனுக்கு நிலாவே பரிமாறினாள். சொந்த பந்தங்கள் பக்கத்தில் இருப்பதால் அவளிடம் எதுவும் அவனால் பேச முடியவில்லை.
பின்னர்...
மாப்பிள்ளை உங்களுக்கு மேல ரூம் இருக்கு அங்க போய் படுத்துக் கொள்ளுங்கள் என்று நிலாவின் அப்பா சொல்ல சரிங்க மாமா என்றவன் தனது ஃபோனை எடுத்துக் கொண்டு விட்டால் போதும்டா சாமி என்று மாடிக்கு சென்று விட்டான்.
குழந்தைகள் இருவரும் தூங்கி விட அவங்க இங்கே இருக்கட்டும் நீ போ தாமரை என்று ராதா சொல்ல,அத்தை நைட்ல எந்திரிச்சு அழுதாங்கன்னா என்ன பண்ணுவீங்க என்றாள்.
ஏம் மா பால் தான் நம்ம கிட்ட எப்பவுமே சூடா இருக்குமே..ராதா போய் பிளாஸ்கில் எடுத்துட்டு வந்து வச்சுக்க நீ போ, உன் அத்தை பார்த்துப்பாளென்று முத்து சொல்ல,சரிங்க மாமா என்று தாமரையும் அங்கிருந்து மேலே வர கட்டில் மேல் உட்கார்ந்திருந்து கதிரோ மனைவியை முறைத்து பார்த்தான்.