Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 619
- Thread Author
- #1
வழக்கமாய் தூங்கி எழுந்த வேலு பிரஷ் ஆகிவிட்டு வெளியே வர அங்கே செல்வியும் தனது அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் இவளாஆஇஇ...எப்போ வந்தாள் என்ற யோசனையோடு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துந்து கொண்டு அம்மா டீ என்றான்.
மாமா எப்படி இருக்கீங்க என்று கணவனிடம் கேட்க தனது அம்மாவிற்கு முன்பு எதையும் காட்டிக் கொள்ளாமல் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க செல்வி என்றான்.
நான் நல்லா இருக்கேன் எக்ஸாம் முடிஞ்சிடுச்சு ரெண்டு மாசம் லீவு அதான் நானும் அண்ணனும் அம்மா கூட கிளம்பி வந்துட்டோம்.
என்ன செமஸ்டர் லீவா அப்ப ரெண்டு மாசம் இங்க இருந்து நம்பலை சித்ரவதை படுத்த போறாளே என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க பார்வதியும் டீயை எடுத்துட்டு வந்து மகனுக்கு கொடுத்தார்.
அதை வாங்கி குடித்தவன் சரி நான் வயலுக்கு போயிட்டு வரேன் என்று அங்கிருந்து தப்பித்து ஓடினான்.
போகும் கணவனை பார்த்தவள் உன்னை ஒரு வழி பண்ணாமல் திரும்பிப் போக மாட்டேன் யா. பொண்டாட்டி ஒருத்தி இருக்கிறதே உனக்கு ஞாபகம் இல்லை தானே...நீ வாடா உனக்கு வச்சிக்கிறேன் கச்சேரி என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
வண்டியில் ஏறி ஏரிகரைக்கு வந்தவன் அங்கிருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து கொண்டு ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டிருந்தான்.கடவுளே இத்தனை மாசம் கழிச்சு எதுக்கு வந்தாள்? பக்கத்துல பொண்டாட்டிய வச்சிக்கிட்டு அவளை தொடாமல் இருக்கிறது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று அனுபவிக்கிறவனுக்கு தான் தெரியும்.
ரோஷமா வேற சொல்லிட்டோம் இவ்வளவு நாள் கழிச்சு பார்த்தது என்னமோ பண்ணுதே.ஆள் வேற கொஞ்சம் இளைச்சு போயிருக்கிறாள்.
சரியா சாப்பிடறது இல்லையா?
நல்லா படிக்கிறா என்று சொன்னான் ஆனா ஒழுங்கா சாப்பிடலன்னு சொல்லலையே என்னவா இருக்கும்?
வேறு ஏதாவது பிரச்சனையா இருக்குமா அப்படி இருந்தா அத்தையும் நிலவனும் சொல்லி இருப்பார்களே நம்மகிட்ட..ஒருவேளை நம்மள நினைத்து ஏங்கி போறாளோ என்று தானாக பேசிக் கொண்டிருக்கும்போது அவன் முதுகில் வந்து ஏதோ ஒன்று விழ ஐயோ என்ற கத்திட்டு திரும்பி பார்க்க அங்கே வளவன் நின்று கொண்டிருந்தான்.
ஏண்டா இப்படி என்று முதுகை தேய்த்துக்கொண்டு வேலு கேட்க மாமா நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் உனக்கும் செல்விக்கும் என்ன பிரச்சனை என்றான்.
திடீரென்று தனது மச்சான் இப்படி கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவனும் அதிர்ந்து போனான்.யோவ் உன்னை தான் கேட்கிறேன்..இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் போல இருந்தா என்ன அர்த்தம் சொல்லு?
உனக்கும் தங்கச்சிக்கும் என்ன பிரச்சனை என்று மீண்டும் கேட்க அடேய் யாருடா உனக்கு சொன்னது?அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்றான்.
நீ சொல்றது நான் நம்பனுமா ஆறு மாசமா அந்த ஊர்ல இருக்கு ஒரு வாட்டி கூட நீ போய் பாக்கல எதனால?
விரும்பி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ரெண்டு பேரும் அதுக்குள்ள என்ன வந்துச்சு என்றான்.
அட அறிவு கெட்ட முட்டாப் பயலே உனக்கு எவன்டா சொன்னது எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனைன்னு படிக்கிற பிள்ளை மனசுல தப்பான எண்ணத்தை விதைச்சாக்க என்ன ஆகும் அந்த அறிவு எல்லாம் உனக்கு கிடையாதா நாயே...
படிச்சிட்டு வரட்டும் டா சின்ன வயசு தான் ஆகுது அவ கூட போய் குடும்பம் பண்ண சொல்றியா?நான் பார்த்து பொறந்து வளர்ந்தவ 18 வயசு தான் ஆகுது அது கிட்ட போயிட்டு எப்படி பொண்டாட்டியா உரிமை கொண்டாட முடியும் என்று வேலு திட்ட நீ சொல்றது வாஸ்தவம் தான் மாமா..
ஆனா இது மட்டும் உண்மையா இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் செல்வியை பாரு எப்படி இளைத்து போய் இருக்கு அது உனக்கு தெரியுதா இல்லையா என்க...
யாரு உன் தங்கச்சிகாரி இளைத்து போய் இருக்கா நல்ல தின்னுட்டு பூதம் போல வந்திருக்கிறாள் இவன் பேசுறான் பாரு என்றான்.
நீ உடனே பேச்ச மாதா உண்மையிலேயே அதுதானா காரணம் என்க ஆமாண்டா வேற ஒன்னும் இல்ல அப்படி பிரச்சினை இருந்தால் என் பொண்டாட்டியும் நானும் சரி பண்ணிப்போம்.உன் வேலை மயிரை பாருடா என்றான்.
யோவ் அத்தமவன் எல்லாம் அடுத்த விஷயம் தான்.முதல்ல என் தங்கச்சி தான் முக்கியம் ஏதாச்சு கண்ண கசிக்கிட்டு வந்துச்சுன்னு வச்சுக்க கழுத்து எலும்பெல்லாம் திருகி போட்டுருவேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தண்ணீருக்குள் குதித்தான்.
சண்டால பாவி கைகால்களை உடைக்கிறதிலேயே நமக்கு மச்சான வந்து சேர்ந்திருக்கானுங்க பாரு என்று திட்டிகிட்டு வேலும் தண்ணீரில் குதிக்க இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அக்கரையை நோக்கி நீந்தி சென்று திரும்பி வந்தவர்கள் பின்னர் பேசிக்கொண்டே வீட்டிற்கு கிளம்பினார்
ஜான் வீடு:
இங்க பாருடி முடிவா நீ என்னதான் சொல்றே என்று ஜான் கேட்க ஏன்யா உனக்கு மண்டையில் ஏதாவது கூறு இருக்கா இல்லையா?இப்பதான் அத்தை கொஞ்சம் தேரி வராங்க இந்த நேரத்துல போயி நம்ம ரெண்டு பேரும் ஊர் சுத்த போனா என்ன அர்த்தம் என்கவும் அடியே கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதுடி இதுவரைக்கும் நாம ஹனிமூன் போகலை.இதெல்லாம் எவ்வளவு பெரிய தெய்வ குத்தம் தெரியுமா என்க,அதைக் கேட்டு கணவனைப் பார்த்து முறைத்தவள் அதான் தினமும் கொண்டாடுறியே அது போதாதா என்று பல்லை கடித்தாள்..
தினமும் வீட்டில் இருப்பதற்கும் வெளியில போறதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி நான் கல்யாணம் பண்ணிருக்கேன் அப்போ சட்டப்படி பாத்தா ரெண்டு வாட்டி நாம ஹனி மூன் போகணும் டி.
நீ என்னை கல்யாணம் பண்ணியா இல்லை எங்க அப்பா அம்மாவ கல்யாணம் பண்ணிட்டியா என்று ஜான் கேட்க,இந்த கழுத்துல எந்த முட்டாப் பயல் மூணு முடிச்சு போட்டான் உனக்கு தெரியாதா என்று அல்லி கேட்கவும், என்னாடி பொசுக்குன்னு புருஷனை முட்டா பயனு சொல்ற என்றான்.
நீ கேட்கிற கேனத்தனமான கேள்வியே உன்ன முட்டாப் பயல்னு சொல்லாம உலகறிந்த அறிவாளினா சொல்லுவாங்க என்றாள்.
அதுலாம் எனக்கு தெரியாது டி.
உனக்கு செமஸ்டர் ஹாலிடேஸ் விட்டுட்டாங்க இன்னைக்கு நைட்டு நம்ம ரெண்டு பேரும் கூர்க்கு போறோம் நான் டிக்கெட் எல்லாம் போட்டுட்டேன் ஒழுங்கு மரியாதையா போய் உன் அத்தை மாமா கிட்ட சொல்லிட்டு வந்து பேக்கிங் பண்ற நான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பிறகு ரெண்டு பேரும் ரெடியாகுறோம்.
உன் மாமன் மூணாவது புள்ளைக்கு அட்டையை போட்டு பொண்டாட்டி கூட சிங்கப்பூருக்கு ஹனிமூன் போயிருக்கிறான் டி.நான் முதல் புள்ளைக்கு இன்னும் வழி இல்லாம இருக்கிறேன் என்று புலம்பி கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல அல்லிக்கு கணவன் புலம்புவதை கேட்டு சிரிப்பு வந்தது.
படியிலிருந்து இறங்கி வரும் மகனை பார்த்த லாரன்ஸ் டேய் நில்லுடா என்க ஜானோ என்னவாம் என்ற பார்வையோடு தனது தந்தையை பார்க்க இவ்வளவு வேகமா எங்க போற என்றார்...
ம் எருமை மேய்க்க போறேன் என்க... என்னடா சொன்ன என்று அவர் எந்திரிக்க எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்க்கு போறேன்னு வேகமா சொன்னேன் காதும் கேட்டு தொலையில என்று முணுமுணுத்தான்.
ஏண்டா கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது இதுவரைக்கும் அல்லியை எங்கேயாவது வெளியில கூப்பிட்டு போய் இருக்கியா? காலேஜ் விட்டா வீடு.வீடு விட்டா காலேஜ்.
இப்பதான் செமஸ்டர் லீவ் விட்டாச்சே, எங்கேயாச்சும் கூட்டிட்டு போடா என்க, நானா கூப்பிட்டு போக மாட்டேங்குறேன்? அவ வர மாட்டேங்குறாளே என்று மனதிற்குள் சொன்னவன் தெரிஞ்சு தான் பேசுறியா தெரியாம பேசுறியா?
இப்பதான் அம்மாக்கு கொஞ்சம் உடம்பு நல்லா இருக்கு அதுக்குள்ள எங்களை ஊர் சுத்த போக சொல்ற உனக்கு அக்கறை இல்லனாலும் எங்களுக்கு இருக்கே என்றான். ..
அடேய் இந்த சோப்பு போடுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதடா என் பொண்டாட்டியை எனக்கு பாக்க தெரியும் உன் பொண்டாட்டி கூப்பிட்டு நீ முதல்ல வெளில போடா என்கவும் நான் அவளை கூப்பிட்டு போயிட்டா பள்ளிக்கூடத்தை யாரு உங்க அப்பா வந்து பார்த்துப்பாரா என்று முறைத்தான்.
எங்கப்பா பார்க்க மாட்டாரு உன் அப்பன் நான் பாத்துக்குறேன் முதல்ல என் மருமகளை கூப்பிட்டு போய் நாலு இடத்தை சுத்தி காட்டிட்டு வாடா அந்த புள்ளைக்கு ஆசை இருக்கும் இல்லையா?.
பாக்கலாம் பாக்கலாம் என்று சொல்லியவன் இன்னைக்கு 12வது எக்ஸாம் ஆரம்பிக்குது நீ வேற காலையிலேயே உயிரை வாங்காதே என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றவன் ஊர்ல இருக்கிறவன் பொண்டாட்டியெல்லாம் அது வேணும் இது வேணும்னு அடம் புடிப்பாள்.
என் பொண்டாட்டி அத்தை மாமாவை விட்டுட்டு எட்ட நகர மாட்டேங்குறாள்.எனக்குனு வந்து வாச்சிருக்கிறாளே என்று திட்டிக் கொண்டு காரில் ஏறி தனது ஸ்கூலுக்கு சென்றான்.
மாமா எப்படி இருக்கீங்க என்று கணவனிடம் கேட்க தனது அம்மாவிற்கு முன்பு எதையும் காட்டிக் கொள்ளாமல் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க செல்வி என்றான்.
நான் நல்லா இருக்கேன் எக்ஸாம் முடிஞ்சிடுச்சு ரெண்டு மாசம் லீவு அதான் நானும் அண்ணனும் அம்மா கூட கிளம்பி வந்துட்டோம்.
என்ன செமஸ்டர் லீவா அப்ப ரெண்டு மாசம் இங்க இருந்து நம்பலை சித்ரவதை படுத்த போறாளே என்று முணுமுணுத்துக் கொண்டிருக்க பார்வதியும் டீயை எடுத்துட்டு வந்து மகனுக்கு கொடுத்தார்.
அதை வாங்கி குடித்தவன் சரி நான் வயலுக்கு போயிட்டு வரேன் என்று அங்கிருந்து தப்பித்து ஓடினான்.
போகும் கணவனை பார்த்தவள் உன்னை ஒரு வழி பண்ணாமல் திரும்பிப் போக மாட்டேன் யா. பொண்டாட்டி ஒருத்தி இருக்கிறதே உனக்கு ஞாபகம் இல்லை தானே...நீ வாடா உனக்கு வச்சிக்கிறேன் கச்சேரி என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
வண்டியில் ஏறி ஏரிகரைக்கு வந்தவன் அங்கிருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து கொண்டு ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டிருந்தான்.கடவுளே இத்தனை மாசம் கழிச்சு எதுக்கு வந்தாள்? பக்கத்துல பொண்டாட்டிய வச்சிக்கிட்டு அவளை தொடாமல் இருக்கிறது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று அனுபவிக்கிறவனுக்கு தான் தெரியும்.
ரோஷமா வேற சொல்லிட்டோம் இவ்வளவு நாள் கழிச்சு பார்த்தது என்னமோ பண்ணுதே.ஆள் வேற கொஞ்சம் இளைச்சு போயிருக்கிறாள்.
சரியா சாப்பிடறது இல்லையா?
நல்லா படிக்கிறா என்று சொன்னான் ஆனா ஒழுங்கா சாப்பிடலன்னு சொல்லலையே என்னவா இருக்கும்?
வேறு ஏதாவது பிரச்சனையா இருக்குமா அப்படி இருந்தா அத்தையும் நிலவனும் சொல்லி இருப்பார்களே நம்மகிட்ட..ஒருவேளை நம்மள நினைத்து ஏங்கி போறாளோ என்று தானாக பேசிக் கொண்டிருக்கும்போது அவன் முதுகில் வந்து ஏதோ ஒன்று விழ ஐயோ என்ற கத்திட்டு திரும்பி பார்க்க அங்கே வளவன் நின்று கொண்டிருந்தான்.
ஏண்டா இப்படி என்று முதுகை தேய்த்துக்கொண்டு வேலு கேட்க மாமா நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் உனக்கும் செல்விக்கும் என்ன பிரச்சனை என்றான்.
திடீரென்று தனது மச்சான் இப்படி கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவனும் அதிர்ந்து போனான்.யோவ் உன்னை தான் கேட்கிறேன்..இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் போல இருந்தா என்ன அர்த்தம் சொல்லு?
உனக்கும் தங்கச்சிக்கும் என்ன பிரச்சனை என்று மீண்டும் கேட்க அடேய் யாருடா உனக்கு சொன்னது?அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்றான்.
நீ சொல்றது நான் நம்பனுமா ஆறு மாசமா அந்த ஊர்ல இருக்கு ஒரு வாட்டி கூட நீ போய் பாக்கல எதனால?
விரும்பி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ரெண்டு பேரும் அதுக்குள்ள என்ன வந்துச்சு என்றான்.
அட அறிவு கெட்ட முட்டாப் பயலே உனக்கு எவன்டா சொன்னது எங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனைன்னு படிக்கிற பிள்ளை மனசுல தப்பான எண்ணத்தை விதைச்சாக்க என்ன ஆகும் அந்த அறிவு எல்லாம் உனக்கு கிடையாதா நாயே...
படிச்சிட்டு வரட்டும் டா சின்ன வயசு தான் ஆகுது அவ கூட போய் குடும்பம் பண்ண சொல்றியா?நான் பார்த்து பொறந்து வளர்ந்தவ 18 வயசு தான் ஆகுது அது கிட்ட போயிட்டு எப்படி பொண்டாட்டியா உரிமை கொண்டாட முடியும் என்று வேலு திட்ட நீ சொல்றது வாஸ்தவம் தான் மாமா..
ஆனா இது மட்டும் உண்மையா இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம் செல்வியை பாரு எப்படி இளைத்து போய் இருக்கு அது உனக்கு தெரியுதா இல்லையா என்க...
யாரு உன் தங்கச்சிகாரி இளைத்து போய் இருக்கா நல்ல தின்னுட்டு பூதம் போல வந்திருக்கிறாள் இவன் பேசுறான் பாரு என்றான்.
நீ உடனே பேச்ச மாதா உண்மையிலேயே அதுதானா காரணம் என்க ஆமாண்டா வேற ஒன்னும் இல்ல அப்படி பிரச்சினை இருந்தால் என் பொண்டாட்டியும் நானும் சரி பண்ணிப்போம்.உன் வேலை மயிரை பாருடா என்றான்.
யோவ் அத்தமவன் எல்லாம் அடுத்த விஷயம் தான்.முதல்ல என் தங்கச்சி தான் முக்கியம் ஏதாச்சு கண்ண கசிக்கிட்டு வந்துச்சுன்னு வச்சுக்க கழுத்து எலும்பெல்லாம் திருகி போட்டுருவேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தண்ணீருக்குள் குதித்தான்.
சண்டால பாவி கைகால்களை உடைக்கிறதிலேயே நமக்கு மச்சான வந்து சேர்ந்திருக்கானுங்க பாரு என்று திட்டிகிட்டு வேலும் தண்ணீரில் குதிக்க இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அக்கரையை நோக்கி நீந்தி சென்று திரும்பி வந்தவர்கள் பின்னர் பேசிக்கொண்டே வீட்டிற்கு கிளம்பினார்
ஜான் வீடு:
இங்க பாருடி முடிவா நீ என்னதான் சொல்றே என்று ஜான் கேட்க ஏன்யா உனக்கு மண்டையில் ஏதாவது கூறு இருக்கா இல்லையா?இப்பதான் அத்தை கொஞ்சம் தேரி வராங்க இந்த நேரத்துல போயி நம்ம ரெண்டு பேரும் ஊர் சுத்த போனா என்ன அர்த்தம் என்கவும் அடியே கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுதுடி இதுவரைக்கும் நாம ஹனிமூன் போகலை.இதெல்லாம் எவ்வளவு பெரிய தெய்வ குத்தம் தெரியுமா என்க,அதைக் கேட்டு கணவனைப் பார்த்து முறைத்தவள் அதான் தினமும் கொண்டாடுறியே அது போதாதா என்று பல்லை கடித்தாள்..
தினமும் வீட்டில் இருப்பதற்கும் வெளியில போறதுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி நான் கல்யாணம் பண்ணிருக்கேன் அப்போ சட்டப்படி பாத்தா ரெண்டு வாட்டி நாம ஹனி மூன் போகணும் டி.
நீ என்னை கல்யாணம் பண்ணியா இல்லை எங்க அப்பா அம்மாவ கல்யாணம் பண்ணிட்டியா என்று ஜான் கேட்க,இந்த கழுத்துல எந்த முட்டாப் பயல் மூணு முடிச்சு போட்டான் உனக்கு தெரியாதா என்று அல்லி கேட்கவும், என்னாடி பொசுக்குன்னு புருஷனை முட்டா பயனு சொல்ற என்றான்.
நீ கேட்கிற கேனத்தனமான கேள்வியே உன்ன முட்டாப் பயல்னு சொல்லாம உலகறிந்த அறிவாளினா சொல்லுவாங்க என்றாள்.
அதுலாம் எனக்கு தெரியாது டி.
உனக்கு செமஸ்டர் ஹாலிடேஸ் விட்டுட்டாங்க இன்னைக்கு நைட்டு நம்ம ரெண்டு பேரும் கூர்க்கு போறோம் நான் டிக்கெட் எல்லாம் போட்டுட்டேன் ஒழுங்கு மரியாதையா போய் உன் அத்தை மாமா கிட்ட சொல்லிட்டு வந்து பேக்கிங் பண்ற நான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்த பிறகு ரெண்டு பேரும் ரெடியாகுறோம்.
உன் மாமன் மூணாவது புள்ளைக்கு அட்டையை போட்டு பொண்டாட்டி கூட சிங்கப்பூருக்கு ஹனிமூன் போயிருக்கிறான் டி.நான் முதல் புள்ளைக்கு இன்னும் வழி இல்லாம இருக்கிறேன் என்று புலம்பி கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல அல்லிக்கு கணவன் புலம்புவதை கேட்டு சிரிப்பு வந்தது.
படியிலிருந்து இறங்கி வரும் மகனை பார்த்த லாரன்ஸ் டேய் நில்லுடா என்க ஜானோ என்னவாம் என்ற பார்வையோடு தனது தந்தையை பார்க்க இவ்வளவு வேகமா எங்க போற என்றார்...
ம் எருமை மேய்க்க போறேன் என்க... என்னடா சொன்ன என்று அவர் எந்திரிக்க எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்க்கு போறேன்னு வேகமா சொன்னேன் காதும் கேட்டு தொலையில என்று முணுமுணுத்தான்.
ஏண்டா கல்யாணம் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது இதுவரைக்கும் அல்லியை எங்கேயாவது வெளியில கூப்பிட்டு போய் இருக்கியா? காலேஜ் விட்டா வீடு.வீடு விட்டா காலேஜ்.
இப்பதான் செமஸ்டர் லீவ் விட்டாச்சே, எங்கேயாச்சும் கூட்டிட்டு போடா என்க, நானா கூப்பிட்டு போக மாட்டேங்குறேன்? அவ வர மாட்டேங்குறாளே என்று மனதிற்குள் சொன்னவன் தெரிஞ்சு தான் பேசுறியா தெரியாம பேசுறியா?
இப்பதான் அம்மாக்கு கொஞ்சம் உடம்பு நல்லா இருக்கு அதுக்குள்ள எங்களை ஊர் சுத்த போக சொல்ற உனக்கு அக்கறை இல்லனாலும் எங்களுக்கு இருக்கே என்றான். ..
அடேய் இந்த சோப்பு போடுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதடா என் பொண்டாட்டியை எனக்கு பாக்க தெரியும் உன் பொண்டாட்டி கூப்பிட்டு நீ முதல்ல வெளில போடா என்கவும் நான் அவளை கூப்பிட்டு போயிட்டா பள்ளிக்கூடத்தை யாரு உங்க அப்பா வந்து பார்த்துப்பாரா என்று முறைத்தான்.
எங்கப்பா பார்க்க மாட்டாரு உன் அப்பன் நான் பாத்துக்குறேன் முதல்ல என் மருமகளை கூப்பிட்டு போய் நாலு இடத்தை சுத்தி காட்டிட்டு வாடா அந்த புள்ளைக்கு ஆசை இருக்கும் இல்லையா?.
பாக்கலாம் பாக்கலாம் என்று சொல்லியவன் இன்னைக்கு 12வது எக்ஸாம் ஆரம்பிக்குது நீ வேற காலையிலேயே உயிரை வாங்காதே என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றவன் ஊர்ல இருக்கிறவன் பொண்டாட்டியெல்லாம் அது வேணும் இது வேணும்னு அடம் புடிப்பாள்.
என் பொண்டாட்டி அத்தை மாமாவை விட்டுட்டு எட்ட நகர மாட்டேங்குறாள்.எனக்குனு வந்து வாச்சிருக்கிறாளே என்று திட்டிக் கொண்டு காரில் ஏறி தனது ஸ்கூலுக்கு சென்றான்.