Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 609
- Thread Author
- #1
கதிரோ ரூமில் தயாராகிக் கொண்டிருந்த மனைவியை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் தூங்கி எழ காலை 7:00 மணி ஆனதால் நான் இருந்து கூப்பிட்டு வருகிறேன் நீங்களாம் போங்கள் என்று சொல்லிவிட மற்றவர்கள் மண்டபத்திற்கு வந்து விட்டனர்.
ஒரு வழியாக தூங்கி எழுந்தவள் மணியை பார்த்து நேரமாயிடுச்சா என்று பதறி எழ ஏய் எதுக்குடி இப்படி எந்திருக்கிறாய் என்று அங்கிருந்து கதிர் கத்திய பின்னரே நேற்று இரவு நடந்ததெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
எதுவும் சொல்லாமல் கதவை திறந்து வெளியே வந்து படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு போனவள் வேகவேகமாக குளித்துவிட்டு வெளியே வர கதிரோ கட்டில் மேல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தான்.
இந்த மனுஷன் என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறார் நம்ம எப்படி டிரஸ் மாத்துறது என்று யோசனையாக என்னடி என்னமோ புதுசா நான் பாக்குற போல பண்ற சீக்கிரம் ரெடி ஆகுது என்றான்.
தாமரையோ பல்லை கடித்துக் கொண்டு கணவனை பார்க்க அது தான் நேத்து நைட்டு சமாதானமா ஆயாச்சு என்று சிரித்துக் கொண்டே சொல்ல வெட்கம் கெட்ட மனுசனே அந்த நேரத்தில் உங்களுக்கு இது ரொம்ப முக்கியமா என்று கேட்கும் போது அவளுக்கும் வெட்கம் வந்தது.
அந்த நேரம் மட்டும் இல்லை செல்லம் எல்லா நேரமும் எல்லாமும் தேவை தான் என்று எழுந்து வந்தவன் டவலை கட்டிக் கொண்டு வந்து நிற்கும் மனைவியை அணைக்க அய்யோ மாமா நான் குளிச்சிட்டேன் உங்க பனியன் ஈரமாகுதே பாருங்க என்க..
ஆகட்டும் டி..உன்ன விட இது என்ன பெருசா என்று மனைவியின் தோள்பட்டையில் முத்தம் வைக்க இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் இருவரும் பேசிக் கொள்வதால் அந்த நிகழ்வை ரசித்தனர்.
மன்னிச்சிடு செல்லம் தெரியாம பண்ணிட்டேன் கண்டிப்பா உன்னை விட வேற யாரும் எனக்கு பெருசு கிடையாது இத்தனை நாள்ல நான் ஒன்னும் புரிஞ்சுகிட்டேன் இப்ப என் இடத்துல நீயும் அதே போல போட்டோ எடுத்திருந்தால் கண்டிப்பா கொலவெறி ஆயிருப்பேன்டி என்க.
தாமரையோ அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.அமைதியா இருக்காதடி சத்தியமா என்னால தாங்க முடியல. நாலு அரை வேண்டுமானால் அரைஞ்சுக்கடி அதை விட்டுட்டு இப்படி உன் புருஷன் கிட்ட பேசாம இருந்து கொள்ளாத தாமரை சத்தியமா என்னால நிம்மதியாக இருக்க முடியலடி என்று இறுக்கமாக அணைத்துக் கொண்டு செல்ல அதற்கு தாமரை எந்த பதிலும் சொல்லவில்லை.
என்னடி நான் சொல்லிட்டு இருக்கேன் நீ அமைதியா இருக்கிறேன் என்க...என்ன சொல்லணும் நீங்க எதிர்பார்க்கிறீங்க?
ஏன் உங்க நிம்மதிக்கு என்ன கேடு என்றாள்.இனிமே இப்படி பண்ண மாட்டேன் இந்த ஒரு முறை மன்னித்துவிடு என்றான் இப்ப நான் கல்யாணத்துக்கு கிளம்பணுமா இல்லை கிளம்ப வேணாமா என்று கேட்க நீ மன்னித்துட்டேன் என்று சொல்லிட்டு கிளம்பு டி எனக்கு மனசு திருப்தியா இருக்கும் இல்லையா.
ரொம்ப நடிக்காதீங்க உங்களை பற்றி எனக்கு தெரியாது என்று பல்லை கடித்தவள் இப்ப கல்யாணத்துக்கு கிளம்பனும் உன் கிட்ட என்னால போராட நேரம் இல்லை என்க...
ஒரு வார்த்தை சொல்லிட்டு போடி மாமா மனசு தாங்கலடி இது நினைச்சு எனக்கு பைத்தியம் பிடிக்குது என்றான்...யார் உனக்காக பைத்தியம் பிடிக்குது என்கவும் ஆமாம் டி செல்லம் எனக்கு தாண்டி பைத்தியம் பிடிக்குது என்றான்...
போய் நல்ல டாக்டரை பாருங்கள் என்றவள் இப்ப விடுங்க என் அண்ணன் கல்யாணத்துக்கு ரெடி ஆகணும் என்கவும் ரொம்ப ஓவரா தான் டி பண்ற என்று மனைவியின் கன்னத்தை நல்லா வலிக்கும்படி கடித்து விட்டவன் அவனும் ரெடியாக தாமரையோ கணவனை திட்டிக் கொண்டு தயாரானாள்.
ஜானை பார்த்த பிறகு தான் அல்லிக்கு உயிரே வந்தது.மேடையில் இருந்து வேகமாக இறங்கியவள் யாரையும் கவனிக்காமல் வேகமாக வாசலுக்கு போக டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு லக்கேஜோடு அலங்கரிக்கப்பட்ட கல்யாண பந்தலை நோக்கி வந்தவன் எதிரே வருபவளை பார்த்து மை டியர் பொண்டாட்டி வந்துட்டேன்டி எங்கவும் வேகமாய் வந்தவள் இருவருக்கும் ஒரு அடி இடைவெளி விட்டு நிற்க அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்து ஓடியது.
செல்லம் சீக்கிரமா உன் அண்ணன் இருக்கிற ரூமுக்கு வா என்று சொல்லிவிட்டு ஜான் அங்கிருந்து செல்ல சிறிது நொடிகள் சென்ற பிறகு அவன் சொல்லி சென்ற வார்த்தைகள் அல்லிக்கு புரிந்தது.
கண்களை துடைத்துவிட்டு அதேபோல் மேடைக்கு வந்தவள் யாராவது அவளை கவனிக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு வேலுவின் அறைக்கு போக அங்கே ஜான் மற்றும் வேலும் இருந்தனர்.
மச்சான் ஒரு அஞ்சு நிமிஷம் யாரும் வராம பாத்துக்கடா என்று சொல்லி கதவை தாழ்ப்பாள் போட்டவன் அல்லியை இழுத்து இருக்கமாய் அணைக்க...
அடேய் மானங்கெட்ட பயலே என்னடா பண்ற என்று வேலு கத்த கொஞ்ச நேரம் கம்முனு இருடா என்றான்.
அடேய் யாராச்சும் வந்தாக்க என்னடா நினைப்பாங்க அண்ணன்காரன் டா நானு.என்னை என்னடா வேலை பாக்க சொல்ற என்கவும்,அவளுக்கு அண்ணனா இருந்தாலும் எனக்கு நீ மாமா தானே கொஞ்சம் மூடிகிட்டு இரேன்டா...
உன் தங்கச்சி முகத்தை பார்த்தாலே தெரியலையே அவளை சமாதானப்படுத்திட்டு வரேன் என்கவும் அல்லி தேம்பி தேம்பி அழுவது வேலுக்கு புரிந்து சரி சரி என் தங்கச்சிக்காக பார்க்கிறேன் என்ன பண்ணி தொலையறது என்று பல்லை கடித்துக் கொண்டே கண்ணாடியை பார்த்து தனது தலையை சீவ அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
எந்த கரடி என்று தெரியவில்லையே என்று ஜான் சொல்லிக்கொண்டு அல்லியை துரத்தி விட்டு கதவை திறக்க வேலுவை மேடைக்கு வர சொல்லிய கதிர் அங்கிருந்து ஜானை பார்த்து பங்காளிஈஈஈஈ....
எப்போடா வந்த என்றவாறு வந்து ஜானை அணைக்க இப்பதாண்டா வந்தேன். நான் ரெடியாகுறேன் நீங்க ரெண்டு பேரும் மேடைக்குப் போங்க என்று வேலுவை பார்த்து பாத்ரூம் பக்கம் பார்க்க சொல்லி ஜான் கண்ணை காட்டினான்
அவனை முறைத்தபடியே இப்பொழுது ஒன்னும் சொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டு கதிர் பின்னாடியே வேலுவும் செல்ல கதவை தாழ்ப்பாள் போட்டு பாத்ரூம் கதவை வந்து தட்டவும் அல்லியும் வெளியே வந்தாள்.
அவள் முகத்தை பார்த்தவன் செல்லும் வேலை டி என்று சொல்லிக்கொண்டு மீண்டும் அணைத்து அவள் இதழில் புதைந்தவன் அங்கிருந்த மெத்தையில் சரிந்தான்.நொடிகளும் நிமிடங்களாக கடந்து செல்ல பின்னர் போதும் என்று விட்டவன் செல்லம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாக்க என்ன வேணும்னாலும் நடக்கலாம் டி..
ப்ளீஸ் நான் கொஞ்ச நேரத்தில் வெளியில போறேன் பிறகு நீ வெளில வா என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தயாராகவும் அல்லியோ எதுவும் சொல்லாமல் பூனை போல் கதவை திறந்து வெளியே ஓடிவிட்டாள்.
தாமரையோ வேதா மயிலா இருவரின் நடுவில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க ஸ்டேஜில் நின்று கொண்டிருந்த கதிரின் பார்வை அவ்வப்போது மனைவியை தான் தீண்டி சென்றது.
கணவனின் பார்வை தன்மேல் அவ்வப்போது படுவது புரிந்தாலும் தாமரை அதை சிறிதும் கண்டு கொள்ளவே இல்லை.
கொழுப்பெடுத்தவ கொஞ்சமாச்சும் பாக்குறாளா பாரு? இவள் வேற வர வர ரொம்ப அழகாகிட்டே போறாளே என்று கதிர் அங்க முணுமுணுத்தான்.
ரூமில் தயாரான ஜான், செல்லம் நான் போறேன் கொஞ்ச நேரம் கழிச்சு நீ வெளியில வா என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தனது முடியை சரி பண்ண...
எந்த பேச்சும் இல்லாமல் போகவும் உன்னை தாண்டி சொல்றேன் இப்படி உம்மென்று இருந்தால் என்ன அர்த்தம்?
அதான் உன் மாமன் முத்தம் கொடுத்து சமாதானம் ஆகிட்டோமே இன்னும் என்னடி கோபம் என்று சொல்லி திரும்ப வெறும் ரூம் தான் அவனை பார்த்து பல்லை காட்டியது.
அடிப்பாவி எப்படி தப்பிச்சு ஓடினான்னு தெரியலையே என்று சிரித்துக் கொண்டு அங்கிருந்து மேடைக்கு வந்தான்.
ஐயரோ தாம்பாளத்தில் இருக்கும் தாலிக்கு பூக்கள் மஞ்சள் குங்குமம் தூவி மந்திரம் ஓதியவர் போய் எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க என்று சொல்லவும் ராதா அதை வாங்கிட்டு போய் சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் காட்ட அவர்களும் அதிலிருந்த அரிசியை அள்ளிக்கொண்டு தாலியை தொட்டு கும்பிட்டனர்.
பின்னர் மேடையில் இருக்கும் ஐயரிடம் வந்து தாம்பூல தட்டை கொடுக்க தம்பி தாலியை கட்டுங்க என்று சொல்லவும் தேங்காயின் மேல் இருந்த தாலியை எடுத்து தனது வலது பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் மாமன் மகளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட அண்ணா மூன்றாவது முடிச்சு நான் தான் போடணும் என்று அல்லி சொல்ல உன் அண்ணிக்கு மூணு முடிச்சு நானே போடுறேன்டா பாப்பா என்கவும் சரி ணா என்றாள்.
அதன் பின்னர் அக்னியை சுற்றிவர சொல்ல வேலு செல்வி எழுந்து நிற்கவும் அவன் துண்டோடு இவள் முந்தானையை முடித்து போட்டு சுற்றிவர சொல்லிவிட்டு பின்னர் மெட்டியை போட்டு விட சொல்ல, தன்னவளின் கால்களை பிடித்து இடது கையில் வைத்தவன் பாக்கெட்டில் இருந்த மெட்டி எடுத்து அவள் கால்களுக்கு போட்டு விட மாமனின் ஸ்பரிசம் பட்டு செல்வியோ சிலிர்த்து போனாள்.
பின்னர் பெரியவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்ல அதேபோல் செய்யவும் பின்னர் மச்சான் முறை சீர்வரிசையை செய்ய வர ஜான் கதிர் வளவன் நிலவன் நால்வரும் மச்சான் முறைக்காக கைச்செயின் மோதிரம் செயின் என்று போட்டவர்கள் என் தங்கச்சி கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது உடம்பில் எலும்பு இருக்காது என்று கதிர் சொல்ல,
என் பாப்பா கண்ணு கசக்குச்சின்னு தெரிஞ்சது மூஞ்சி மொகரையெல்லாம் இருக்கிற இடம் தெரியாம போயிரும் என்று ஜான் சொல்ல...
வளவனோ உடம்புல உசுரு மட்டும் தான் இருக்கு மாமா எந்த பார்ட்ஸ்ம் வேலை செய்யாது என்கவும் நிலவனோ என் அண்ணனுங்க சொல்லிட்டாங்க நான் ஒரே ஒரு இன்ஜெக்ஷன் தான் போடுவேன் என்றான்.
அட சண்டாள பாவிகளா இன்னைக்கு தான்டா எனக்கு கல்யாணம் ஆயிருக்கு அதுக்குள்ள என்னென்ன வார்த்தை பேசுறீங்க மரியாதையா நாலு பேரும் கீழே போங்கடா அயோக்கி பயலுகளா என்று வேலு முறைக்க மற்றவர்களோ அதை கேட்டு சிரித்து விட்டனர்.
பின்னர் வந்தவர்களை பந்திக்கு அழைத்து போய் உணவு சாப்பிட வைத்து அவர்களுக்கு கல்யாணத்தின் நினைவாக பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்கள்.
எல்லா சம்பிரதாயம் முடிந்து நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்துப் போனவர்கள் பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லிவிட்டு பின்னர் பொண்ணு வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதால் நல்ல நேரத்தை பார்த்து பக்கத்து தெருவில் இருக்கும் செல்வி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரத்தி எடுத்து மருமகனையும் மகளையும் வீட்டிற்குள் அழைத்து போனவர்கள் பால் பழம் கொடுத்தனர். செல்வி வேலுவை ரூமிற்கு அழைத்துப் போக சொல்லவும் வாங்க மாமா என்று சொல்ல நீ முன்னாடி போய் டிரஸ் மாத்திட்டு வா பிறகு நான் வரேன் என்று வேலு சொல்லி விட்டான்.
அதேபோல் செல்வியும் மேலிருக்கும் அறைக்கு போனவள் கட்டிருந்த பட்டுப்புடவை அவிழ்து விட்டு வேறு இலகுவான புடவையை கட்டிக் கொண்டு அல்லியோடு கீழே வர பிறகு மாடிக்கு போனவன் வழக்கம் போல் வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு பட்டு வேஷ்டி சட்டையை அங்கிருந்த கொடியில் போட்டுவிட்டு வந்தான்.
இரண்டு நாள் இங்கு சம்பிரதாயமாக தங்கி விட்டு மூன்றாவது நாள் சீர்வரிசை மற்ற இனிப்பு வகைகளோடு வேலுவின் வீட்டிற்கு வந்தனர்.அன்று அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணிருப்பதால் சமையல் செல்விதான் செய்ய வேண்டும் என்றனர்.
இத்தனை பேருக்கு எப்படி செல்வி மட்டும் தனியா சமைக்கும் என்று கவிதாவும் பார்வதியும் சொல்ல எம்மா ஊருக்கே உன் மருமகள் சமைப்பா என்று வேலு சொல்ல செல்வியோ அங்கிருந்த கணவனை பார்த்து முறைத்தாள்.
பின்னர் அவள் சாமிக்கு படைப்பதற்காக சர்க்கரைப் பொங்கல் பாயசம் எல்லாம் செய்யவும் கவிதாவும் பார்வதியும் அவளோடு இணைந்து கொண்டனர்
ஒரு வழியாக தூங்கி எழுந்தவள் மணியை பார்த்து நேரமாயிடுச்சா என்று பதறி எழ ஏய் எதுக்குடி இப்படி எந்திருக்கிறாய் என்று அங்கிருந்து கதிர் கத்திய பின்னரே நேற்று இரவு நடந்ததெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.
எதுவும் சொல்லாமல் கதவை திறந்து வெளியே வந்து படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு போனவள் வேகவேகமாக குளித்துவிட்டு வெளியே வர கதிரோ கட்டில் மேல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தான்.
இந்த மனுஷன் என்ன இப்படி உட்கார்ந்து இருக்கிறார் நம்ம எப்படி டிரஸ் மாத்துறது என்று யோசனையாக என்னடி என்னமோ புதுசா நான் பாக்குற போல பண்ற சீக்கிரம் ரெடி ஆகுது என்றான்.
தாமரையோ பல்லை கடித்துக் கொண்டு கணவனை பார்க்க அது தான் நேத்து நைட்டு சமாதானமா ஆயாச்சு என்று சிரித்துக் கொண்டே சொல்ல வெட்கம் கெட்ட மனுசனே அந்த நேரத்தில் உங்களுக்கு இது ரொம்ப முக்கியமா என்று கேட்கும் போது அவளுக்கும் வெட்கம் வந்தது.
அந்த நேரம் மட்டும் இல்லை செல்லம் எல்லா நேரமும் எல்லாமும் தேவை தான் என்று எழுந்து வந்தவன் டவலை கட்டிக் கொண்டு வந்து நிற்கும் மனைவியை அணைக்க அய்யோ மாமா நான் குளிச்சிட்டேன் உங்க பனியன் ஈரமாகுதே பாருங்க என்க..
ஆகட்டும் டி..உன்ன விட இது என்ன பெருசா என்று மனைவியின் தோள்பட்டையில் முத்தம் வைக்க இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் இருவரும் பேசிக் கொள்வதால் அந்த நிகழ்வை ரசித்தனர்.
மன்னிச்சிடு செல்லம் தெரியாம பண்ணிட்டேன் கண்டிப்பா உன்னை விட வேற யாரும் எனக்கு பெருசு கிடையாது இத்தனை நாள்ல நான் ஒன்னும் புரிஞ்சுகிட்டேன் இப்ப என் இடத்துல நீயும் அதே போல போட்டோ எடுத்திருந்தால் கண்டிப்பா கொலவெறி ஆயிருப்பேன்டி என்க.
தாமரையோ அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.அமைதியா இருக்காதடி சத்தியமா என்னால தாங்க முடியல. நாலு அரை வேண்டுமானால் அரைஞ்சுக்கடி அதை விட்டுட்டு இப்படி உன் புருஷன் கிட்ட பேசாம இருந்து கொள்ளாத தாமரை சத்தியமா என்னால நிம்மதியாக இருக்க முடியலடி என்று இறுக்கமாக அணைத்துக் கொண்டு செல்ல அதற்கு தாமரை எந்த பதிலும் சொல்லவில்லை.
என்னடி நான் சொல்லிட்டு இருக்கேன் நீ அமைதியா இருக்கிறேன் என்க...என்ன சொல்லணும் நீங்க எதிர்பார்க்கிறீங்க?
ஏன் உங்க நிம்மதிக்கு என்ன கேடு என்றாள்.இனிமே இப்படி பண்ண மாட்டேன் இந்த ஒரு முறை மன்னித்துவிடு என்றான் இப்ப நான் கல்யாணத்துக்கு கிளம்பணுமா இல்லை கிளம்ப வேணாமா என்று கேட்க நீ மன்னித்துட்டேன் என்று சொல்லிட்டு கிளம்பு டி எனக்கு மனசு திருப்தியா இருக்கும் இல்லையா.
ரொம்ப நடிக்காதீங்க உங்களை பற்றி எனக்கு தெரியாது என்று பல்லை கடித்தவள் இப்ப கல்யாணத்துக்கு கிளம்பனும் உன் கிட்ட என்னால போராட நேரம் இல்லை என்க...
ஒரு வார்த்தை சொல்லிட்டு போடி மாமா மனசு தாங்கலடி இது நினைச்சு எனக்கு பைத்தியம் பிடிக்குது என்றான்...யார் உனக்காக பைத்தியம் பிடிக்குது என்கவும் ஆமாம் டி செல்லம் எனக்கு தாண்டி பைத்தியம் பிடிக்குது என்றான்...
போய் நல்ல டாக்டரை பாருங்கள் என்றவள் இப்ப விடுங்க என் அண்ணன் கல்யாணத்துக்கு ரெடி ஆகணும் என்கவும் ரொம்ப ஓவரா தான் டி பண்ற என்று மனைவியின் கன்னத்தை நல்லா வலிக்கும்படி கடித்து விட்டவன் அவனும் ரெடியாக தாமரையோ கணவனை திட்டிக் கொண்டு தயாரானாள்.
ஜானை பார்த்த பிறகு தான் அல்லிக்கு உயிரே வந்தது.மேடையில் இருந்து வேகமாக இறங்கியவள் யாரையும் கவனிக்காமல் வேகமாக வாசலுக்கு போக டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு லக்கேஜோடு அலங்கரிக்கப்பட்ட கல்யாண பந்தலை நோக்கி வந்தவன் எதிரே வருபவளை பார்த்து மை டியர் பொண்டாட்டி வந்துட்டேன்டி எங்கவும் வேகமாய் வந்தவள் இருவருக்கும் ஒரு அடி இடைவெளி விட்டு நிற்க அவள் கண்கள் கலங்கி கண்ணீர் வடிந்து ஓடியது.
செல்லம் சீக்கிரமா உன் அண்ணன் இருக்கிற ரூமுக்கு வா என்று சொல்லிவிட்டு ஜான் அங்கிருந்து செல்ல சிறிது நொடிகள் சென்ற பிறகு அவன் சொல்லி சென்ற வார்த்தைகள் அல்லிக்கு புரிந்தது.
கண்களை துடைத்துவிட்டு அதேபோல் மேடைக்கு வந்தவள் யாராவது அவளை கவனிக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு வேலுவின் அறைக்கு போக அங்கே ஜான் மற்றும் வேலும் இருந்தனர்.
மச்சான் ஒரு அஞ்சு நிமிஷம் யாரும் வராம பாத்துக்கடா என்று சொல்லி கதவை தாழ்ப்பாள் போட்டவன் அல்லியை இழுத்து இருக்கமாய் அணைக்க...
அடேய் மானங்கெட்ட பயலே என்னடா பண்ற என்று வேலு கத்த கொஞ்ச நேரம் கம்முனு இருடா என்றான்.
அடேய் யாராச்சும் வந்தாக்க என்னடா நினைப்பாங்க அண்ணன்காரன் டா நானு.என்னை என்னடா வேலை பாக்க சொல்ற என்கவும்,அவளுக்கு அண்ணனா இருந்தாலும் எனக்கு நீ மாமா தானே கொஞ்சம் மூடிகிட்டு இரேன்டா...
உன் தங்கச்சி முகத்தை பார்த்தாலே தெரியலையே அவளை சமாதானப்படுத்திட்டு வரேன் என்கவும் அல்லி தேம்பி தேம்பி அழுவது வேலுக்கு புரிந்து சரி சரி என் தங்கச்சிக்காக பார்க்கிறேன் என்ன பண்ணி தொலையறது என்று பல்லை கடித்துக் கொண்டே கண்ணாடியை பார்த்து தனது தலையை சீவ அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
எந்த கரடி என்று தெரியவில்லையே என்று ஜான் சொல்லிக்கொண்டு அல்லியை துரத்தி விட்டு கதவை திறக்க வேலுவை மேடைக்கு வர சொல்லிய கதிர் அங்கிருந்து ஜானை பார்த்து பங்காளிஈஈஈஈ....
எப்போடா வந்த என்றவாறு வந்து ஜானை அணைக்க இப்பதாண்டா வந்தேன். நான் ரெடியாகுறேன் நீங்க ரெண்டு பேரும் மேடைக்குப் போங்க என்று வேலுவை பார்த்து பாத்ரூம் பக்கம் பார்க்க சொல்லி ஜான் கண்ணை காட்டினான்
அவனை முறைத்தபடியே இப்பொழுது ஒன்னும் சொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டு கதிர் பின்னாடியே வேலுவும் செல்ல கதவை தாழ்ப்பாள் போட்டு பாத்ரூம் கதவை வந்து தட்டவும் அல்லியும் வெளியே வந்தாள்.
அவள் முகத்தை பார்த்தவன் செல்லும் வேலை டி என்று சொல்லிக்கொண்டு மீண்டும் அணைத்து அவள் இதழில் புதைந்தவன் அங்கிருந்த மெத்தையில் சரிந்தான்.நொடிகளும் நிமிடங்களாக கடந்து செல்ல பின்னர் போதும் என்று விட்டவன் செல்லம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாக்க என்ன வேணும்னாலும் நடக்கலாம் டி..
ப்ளீஸ் நான் கொஞ்ச நேரத்தில் வெளியில போறேன் பிறகு நீ வெளில வா என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தயாராகவும் அல்லியோ எதுவும் சொல்லாமல் பூனை போல் கதவை திறந்து வெளியே ஓடிவிட்டாள்.
தாமரையோ வேதா மயிலா இருவரின் நடுவில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க ஸ்டேஜில் நின்று கொண்டிருந்த கதிரின் பார்வை அவ்வப்போது மனைவியை தான் தீண்டி சென்றது.
கணவனின் பார்வை தன்மேல் அவ்வப்போது படுவது புரிந்தாலும் தாமரை அதை சிறிதும் கண்டு கொள்ளவே இல்லை.
கொழுப்பெடுத்தவ கொஞ்சமாச்சும் பாக்குறாளா பாரு? இவள் வேற வர வர ரொம்ப அழகாகிட்டே போறாளே என்று கதிர் அங்க முணுமுணுத்தான்.
ரூமில் தயாரான ஜான், செல்லம் நான் போறேன் கொஞ்ச நேரம் கழிச்சு நீ வெளியில வா என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் தனது முடியை சரி பண்ண...
எந்த பேச்சும் இல்லாமல் போகவும் உன்னை தாண்டி சொல்றேன் இப்படி உம்மென்று இருந்தால் என்ன அர்த்தம்?
அதான் உன் மாமன் முத்தம் கொடுத்து சமாதானம் ஆகிட்டோமே இன்னும் என்னடி கோபம் என்று சொல்லி திரும்ப வெறும் ரூம் தான் அவனை பார்த்து பல்லை காட்டியது.
அடிப்பாவி எப்படி தப்பிச்சு ஓடினான்னு தெரியலையே என்று சிரித்துக் கொண்டு அங்கிருந்து மேடைக்கு வந்தான்.
ஐயரோ தாம்பாளத்தில் இருக்கும் தாலிக்கு பூக்கள் மஞ்சள் குங்குமம் தூவி மந்திரம் ஓதியவர் போய் எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க என்று சொல்லவும் ராதா அதை வாங்கிட்டு போய் சொந்த பந்தங்கள் எல்லாருக்கும் காட்ட அவர்களும் அதிலிருந்த அரிசியை அள்ளிக்கொண்டு தாலியை தொட்டு கும்பிட்டனர்.
பின்னர் மேடையில் இருக்கும் ஐயரிடம் வந்து தாம்பூல தட்டை கொடுக்க தம்பி தாலியை கட்டுங்க என்று சொல்லவும் தேங்காயின் மேல் இருந்த தாலியை எடுத்து தனது வலது பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் மாமன் மகளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட அண்ணா மூன்றாவது முடிச்சு நான் தான் போடணும் என்று அல்லி சொல்ல உன் அண்ணிக்கு மூணு முடிச்சு நானே போடுறேன்டா பாப்பா என்கவும் சரி ணா என்றாள்.
அதன் பின்னர் அக்னியை சுற்றிவர சொல்ல வேலு செல்வி எழுந்து நிற்கவும் அவன் துண்டோடு இவள் முந்தானையை முடித்து போட்டு சுற்றிவர சொல்லிவிட்டு பின்னர் மெட்டியை போட்டு விட சொல்ல, தன்னவளின் கால்களை பிடித்து இடது கையில் வைத்தவன் பாக்கெட்டில் இருந்த மெட்டி எடுத்து அவள் கால்களுக்கு போட்டு விட மாமனின் ஸ்பரிசம் பட்டு செல்வியோ சிலிர்த்து போனாள்.
பின்னர் பெரியவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்ல அதேபோல் செய்யவும் பின்னர் மச்சான் முறை சீர்வரிசையை செய்ய வர ஜான் கதிர் வளவன் நிலவன் நால்வரும் மச்சான் முறைக்காக கைச்செயின் மோதிரம் செயின் என்று போட்டவர்கள் என் தங்கச்சி கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது உடம்பில் எலும்பு இருக்காது என்று கதிர் சொல்ல,
என் பாப்பா கண்ணு கசக்குச்சின்னு தெரிஞ்சது மூஞ்சி மொகரையெல்லாம் இருக்கிற இடம் தெரியாம போயிரும் என்று ஜான் சொல்ல...
வளவனோ உடம்புல உசுரு மட்டும் தான் இருக்கு மாமா எந்த பார்ட்ஸ்ம் வேலை செய்யாது என்கவும் நிலவனோ என் அண்ணனுங்க சொல்லிட்டாங்க நான் ஒரே ஒரு இன்ஜெக்ஷன் தான் போடுவேன் என்றான்.
அட சண்டாள பாவிகளா இன்னைக்கு தான்டா எனக்கு கல்யாணம் ஆயிருக்கு அதுக்குள்ள என்னென்ன வார்த்தை பேசுறீங்க மரியாதையா நாலு பேரும் கீழே போங்கடா அயோக்கி பயலுகளா என்று வேலு முறைக்க மற்றவர்களோ அதை கேட்டு சிரித்து விட்டனர்.
பின்னர் வந்தவர்களை பந்திக்கு அழைத்து போய் உணவு சாப்பிட வைத்து அவர்களுக்கு கல்யாணத்தின் நினைவாக பரிசுகளையும் கொடுத்து அனுப்பினார்கள்.
எல்லா சம்பிரதாயம் முடிந்து நல்ல நேரத்தில் பொண்ணு மாப்பிள்ளையை வீட்டிற்கு அழைத்துப் போனவர்கள் பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லிவிட்டு பின்னர் பொண்ணு வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதால் நல்ல நேரத்தை பார்த்து பக்கத்து தெருவில் இருக்கும் செல்வி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரத்தி எடுத்து மருமகனையும் மகளையும் வீட்டிற்குள் அழைத்து போனவர்கள் பால் பழம் கொடுத்தனர். செல்வி வேலுவை ரூமிற்கு அழைத்துப் போக சொல்லவும் வாங்க மாமா என்று சொல்ல நீ முன்னாடி போய் டிரஸ் மாத்திட்டு வா பிறகு நான் வரேன் என்று வேலு சொல்லி விட்டான்.
அதேபோல் செல்வியும் மேலிருக்கும் அறைக்கு போனவள் கட்டிருந்த பட்டுப்புடவை அவிழ்து விட்டு வேறு இலகுவான புடவையை கட்டிக் கொண்டு அல்லியோடு கீழே வர பிறகு மாடிக்கு போனவன் வழக்கம் போல் வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு பட்டு வேஷ்டி சட்டையை அங்கிருந்த கொடியில் போட்டுவிட்டு வந்தான்.
இரண்டு நாள் இங்கு சம்பிரதாயமாக தங்கி விட்டு மூன்றாவது நாள் சீர்வரிசை மற்ற இனிப்பு வகைகளோடு வேலுவின் வீட்டிற்கு வந்தனர்.அன்று அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணிருப்பதால் சமையல் செல்விதான் செய்ய வேண்டும் என்றனர்.
இத்தனை பேருக்கு எப்படி செல்வி மட்டும் தனியா சமைக்கும் என்று கவிதாவும் பார்வதியும் சொல்ல எம்மா ஊருக்கே உன் மருமகள் சமைப்பா என்று வேலு சொல்ல செல்வியோ அங்கிருந்த கணவனை பார்த்து முறைத்தாள்.
பின்னர் அவள் சாமிக்கு படைப்பதற்காக சர்க்கரைப் பொங்கல் பாயசம் எல்லாம் செய்யவும் கவிதாவும் பார்வதியும் அவளோடு இணைந்து கொண்டனர்