Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 606
- Thread Author
- #1
சென்னை:
சேகர் ஊருக்குள் போவதற்கு முன்பு வலது பக்கமாக ரோடு போகும் அதில் போ.. கோயில் ஒன்று தெரியும் அங்கு நிறுத்து சேகரென்று டிரைவரிடம் தன்ராஜ் சொல்ல,சரிங்க சாரென்றார்.
அதேபோல போல சிறிது நிமிடங்கள் சென்று ரோடு பிரிய, அந்த பாதையில் பஸ்ஸை வளைத்து ஓட்டிச் சென்று அங்கிருந்த கோயில் திடலில் நிறுத்தினார்.
சுற்றியும் ஓங்கி உயர்ந்த மலைகளாக இருக்க,அதன் நடுவில் கோயிலும் அதற்கு எதிரே திடலும் வீடு ஒன்று இருப்பதை பார்த்து இங்கவா நாம தங்க போகிறோமென்று அதிர்ந்தனர்.
பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய தன்ராஜ் நேராக குளத்திற்கு சென்றவர் அதில் தலை முழ்கி கரையேறி கோயிலை நோக்கி சென்றார்.
மாணவர்களோ அவரை விசித்திரமாக பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் பூட்டியிருந்த கதவு வழியாக உள்ளே இருக்கும் தெய்வத்தை பார்க்க கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
ஒரு நாள் இரண்டு நாளில்லை இதோ 30 வருடங்களுக்கு பின்னர் தங்களது குல தெய்வமான மலையம்மனை கண்ணீரோடு பார்த்தவருக்கு கடந்த கால காயங்கள் நினைவடுக்கில் வந்து சென்றது
சீமக்கரை:
மாப்பி ரொம்ப புகழாதே மாப்பி எனக்கு வெக்க வெக்கமா வருது என்று வேலு சொல்ல,வேணாம்டா மரியாதை கெட்டு போயிடும் ஏற்கனவே செம கடுப்புல இருக்கிறேன்.அது எப்படி டா நாயே எல்லாரும் ஒரே நேரத்தில் தான் வந்தோம் நீ மட்டும் எப்படி நேரத்தோடு எழுந்து வந்து உன் தங்கச்சி கிட்ட நல்ல பேரு வாங்கிட்ட என்கவும், அது ராஜ ரகசியம் மாப்பி..வெளியில சொல்ல முடியாது என்றான்.
இருக்கட்டும் டா இருக்கட்டும் எனக்கு நேரம் வரும் அப்ப தூக்கி போட்டு உன்னை மிதிக்கல உன் தங்கச்சி புருஷன் நான் இல்லடா என்று கதிர் சொல்ல போ மாப்பி ரொம்ப காமெடி பண்ணிட்டு இருக்க எனக்கு சிப்பு சிப்பா வருது என்றான்.
வரும்டா வரும் வாயை உடைப்பேன் ஒரு நாளைக்கு,அன்னைக்கு நீ எப்படி சிரிக்கிறனு நானும் பார்க்கிறேன் என்றவன் சரி வண்டியை எடு அந்த தடிமாடு என்ன நிலைமையில் இருக்குன்னு தெரியல.மிலிட்டரி வேற ஓவரா கத்துக்கிட்டு இருக்கும்.. நம்ம பங்குக்கு கொஞ்சம் எரிய நெருப்பில் பெட்ரோல் ஊத்தலாம் என்று கதிர் சொல்லு டபுள் ஓகே மச்சி..
உன்னையும் உன் பங்காளியையும் லெப்ட் ரைட் வாங்குறது எனக்கு அல்வா சாப்பிடுவது போல..அதை போய் நான் விடுவேனா டா என்று சொல்லிவிட்டு வேலுவும் வண்டியை ஸ்டார்ட் பண்ண,பின்னாடி வந்து உட்கார்ந்த கதிரோ வேலுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான்.
அடேய் ஒலக்க.கையாடா இது கருமம் புடிச்சவனே.இருடா அந்த மேகலா கூட செல்பி எடுத்த இல்ல என் தங்கச்சி கிட்ட சொல்லுறேன் என்று வேலு சொல்ல, ஏற்கனவே மேகலா பேரைக் கேட்டு தாண்டா அவ கொலை வெறியில் இருக்கிறா என்று சொல்லவும், அதைக் கேட்ட வேலுவோ அப்படியா மாப்பி...
சூப்பரூஊஊஊ...கேட்கவே ஆனந்தமா இருக்கேடா...அதோட இதுவும் சேர்ந்துக்கட்டும்...வளைச்சி வளைச்சி செல்பி எடுத்தியே அதையும் நான் சொல்றேன் என்று சொல்லும் போது கை தட்டும் சத்தம் கேட்க,இருவரும் திரும்பி பார்க்க அங்கே தாமரை தான் நின்று கொண்டிருந்தாள்...
யாத்தேஏஏஏஏஏ...
இன்னைக்கு உன் தங்கச்சி கிட்ட சிக்கி செத்தேன்டா என்று கதிர் சொல்ல,உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மச்சி.ஏதோ கொஞ்சம் நஞ்சம் சேதாரம் இல்லாமல் இருந்தின்னாக்க என்ன வந்து பாருடா என்க...
ஏண்டா மானங்கெட்டவனே இவ்வளவு நல்ல எண்ணமாடா உனக்கு நாதாரி பயலே..மரியாதையா நீயும் கூடவா அவ கிட்ட என்னால தனியா வாங்கி கட்டிக்க முடியாது.
அவள் கூட செல்பி எடுக்கும்போது இந்த பயம் இருக்கணும்,நல்லா இளிச்சுக்கிட்டு எடுத்த.அப்ப எங்கடா போச்சு?ஒரு வார்த்தை என்ன கூப்பிட்டியாடா என்கவும் ஏண்டா இப்போ உன்னை கூப்பிடலங்குறது தான் பெருங் கவலையா? என்று கதிர் முறைக்க கண்டிப்பா மச்சி அதில் என்ன உனக்கு சந்தேகம் என்று கேட்டான்.
தாமரையோ எதுவும் சொல்லாமல் கதிரை பார்க்க ஹிஹி என்று சிரித்தவன் சொல்லு செல்லம் மாமா ஏதாச்சும் வாங்கிட்டு வரட்டுமா என்க, எதுவும் சொல்லாமல் அவள் பாட்டுக்கு தறி மெஷின் இருக்கும் ரூமிற்கு சென்று விட்டாள்.
தொலைஞ்சேன் டா...
வாய் திறந்து பேசினாலே முடியாது. இந்த லட்சணத்தில் உன் தங்கச்சி உம்முன்னு வேற போறா, இப்ப என்னடா பண்றது மாப்பி ஏதாச்சும் வழி சொல்லுடா என்கவும்,உன் போனை தூக்கி போட்டு உடை எல்லாம் சரியாயிடும் என்று வேலு சொல்ல ஏண்டா ஏன்?.அதுல எவ்வளவு போட்டோஸ் இருக்கு அத போய் இப்படி உடைக்க சொல்றியேடா என்று வருத்தப்பட, அதானே மேகலாவோட போட்டோ இருக்குன்னு சொல்லுடா அதனால தான் உனக்கு உடைக்க மனசு வரலை.உன்ன பத்தி எனக்கு தெரியாதாடா என்று வேலு முறைக்க, டேய் அவள் இன்னொருத்தன் பொண்டாட்டி டா. இப்படி தப்பா பேசாத டா என்று கதிர் பதற...
ஓஓஓஓ....ஏண்டா பத்து ரூபாய் பண கட்டை அவள் மேல மழை போல தூவும் போது இந்த வெங்காய பேச்சுலாம் எங்கடா போனது.எவளையாவது ஒருத்திய ரசிக்க முடியுதா டா..ரெண்டு கம்மனாட்டி பயலுகளும் உன் தங்கச்சி தான் உன் தங்கச்சி தான் ஊர் உலகத்துல இருக்கிற எல்லாரையும் தங்கச்சியாவே இருந்தா என்னடா அர்த்தம் என்று வேலு கடுப்பாக கேட்க...
என்ன அர்த்தம் நீ பாசமலர் சிவாஜி டா என்கும் போது ஜானிடம் இருந்து அவர்களுக்கு கால் வந்தது. பங்கு தாண்டா போன் பண்றான் சீக்கிரம் கிளம்பு.பிறகு வந்து உன் தங்கச்சி கால்ல விழுந்து கெஞ்சி சமாதானப் படுத்துறேன் என்று சொல்ல,விதி மாப்பி விதி...இன்றைக்கு உனக்கு சனி பகவான் உச்சியில் நின்று தங்கச்சி உருவத்தில் ஊஞ்சலாட போகிறார்.
அதை தடுக்க வழியில்லை...நடப்பது நடக்கட்டும் என்று சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து தேனூரில் இருக்கும் லாரன்ஸ் வீட்டை நோக்கி சென்றனர் நண்பனோடு பேசிக்கொண்டிருந்தாலும் சிந்தனை எல்லாம் தன்னவள் மீதே இருந்தது...
தன்னை சந்தேகப் பட மாட்டாள்.ஆனால் இதையெல்லாம் கேட்டு என்ன நினைக்கப் போகிறாளோ என்ற எண்ணமே அவனை யோசனை செய்ய வைத்தது.
.
மதுரை ஏர்போர்ட்:
அடியே இப்ப எதுக்குடி தேவை இல்லாம ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்க?நான் என்ன திரும்பி வர மாட்டேனா என்று ஜான் பல்லை கடிக்க அல்லியோ அழுகையை மட்டும் நிறுத்தவில்லை.
கடவுளே சுத்தி எல்லாம் இவளோட சொந்தக்காரர்கள் இருக்கிறார்களே இவளை எப்படி சமாதப்படுத்துவது தெரியவில்லை என்று முணுமுணுத்தவன் செல்லம் மூணு மாசம் தான் ப்ராஜெக்ட் உன் அண்ணன் கல்யாணத்துக்கு எல்லாம் நான் வந்துருவேன் தயவுசெய்து என்னை நம்புடி என்றான்.
என்னன்னு தெரியல மாமா எனக்கு மனசு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்ல முதல் முதலாக தன்னவள் மாமா என்று அழைத்ததை கூட அவனால் அந்த நேரத்தில் ரசிக்க முடியவில்லை.
விட்டால் ஊர் வந்து சேர்ந்த வரைக்கும் அழுதுட்டு இருப்பாள் என்று நினைத்தவன் மற்றவர்களை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் சிறிது இடைவெளி விட்டு அழுது கொண்டிருப்பவர்களை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைக்க வேலு அந்த நேரம் பார்த்து திரும்பியவன் அட மானங்கெட்டவனே எங்க அப்பா அம்மா இருக்காங்க டா...
நீ என்னடா வேலை பண்ணிட்டு இருக்க என்று பல்லை கடித்தவன் பின்னர் யாரும் அந்த பக்கம் திரும்பவிடாமல் இவன் முதுகு பக்கமாக மறைத்தபடி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
அல்லி ப்ளீஸ் டிரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ இது என்னோட கனவு ப்ராஜெக்ட் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட இது விளக்கமா சொன்னாலும் இப்போதைக்கு புரியாது. இது முடிச்சுட்டு கண்டிப்பா நான் வந்துடறேன் புரியுதா?.
அப்படியோ போய்விட்டால் நீ என்னை விட்டுடுவியா இல்ல உன் மாமா தான் என்னை விட்ருவாரா சிண்டை பிடிச்சு இழுத்துட்டு வந்துடுவார் டி எங்க அப்பா என்று சொல்ல அதில் மனம் தெளிந்தவள் அடிக்கடி போன் பண்ணுங்க.இங்கு நான் காத்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்ல இந்த வாக்கை மட்டும் என்னால தயவு செய்து கொடுக்க முடியாது.
அங்கு வேலை அப்படி டி..நேரம் கிடைக்கும் போது நிச்சயம் நான் போன் பண்றேன் அதுக்குனு உனக்கு போன் பண்ணாம இருக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது சரியா...
ஒழுங்கா எக்ஸாம் எழுது வந்துடுறேன் என்று சொல்லி அவளின் கண்ணை துடைத்து விட்டவன் தைரியமாய் இருடி என்றவாறு அவளின் கையை பிடித்தவாறு தனது வீட்டினர் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
பின்னர் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க சிறிது நிமிடத்தில் அவன் செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வந்ததும் எல்லாரிடமும் தலையை அசைத்து விட்டு ஜான் செல்ல அவனுக்கு மனதிற்குள் அல்லியை விட்டு பிரிந்து போவது ஒரு வித வலியை தான் கொடுத்தது...
அதன் பின்னும் அவன் நல்லபடியாக பிளைட்டில் ஏறி விட்டான் என்பதை தெரிந்து வீட்டுக்கு கிளம்பினர்.
அதன் பின்னர் நாட்களும் வேகமாய் ஓட தாமரையோ எப்பொழுது மேகாலாவோடு கதிர் செல்பி எடுத்தான் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து அவனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டாள்.
கதிரும் மனைவியிடம் எவ்வளவோ மன்னிப்பு கேட்டுப் பார்த்து விட்டான் அவள் எதையும் காதில் வாங்கவே இல்லை.நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.செல்வியும் அல்லியும் நல்லபடியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்தனர்.
ஜானும் சொன்ன போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் அல்லியிடம் போனில் பேசிக் கொண்டிருக்க கதிரோ மனைவியின் காலில் விழுந்து கெஞ்சியும் அவள் மனம் மட்டும் இறங்கவில்லை.
இன்னொருத்தி கூட போட்டோ எடுக்கும் அளவுக்கு பிடித்தம் என்றாள் இதை எந்த விதத்தில் சேர்ப்பது என்று அவள் மனதிற்குள் ஓர் எண்ணம் வந்தது. ஆனால் இருவரும் வீட்டில் இருப்பவர்களுக்கு தங்களது ஊடலை பற்றி தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.
சேகர் ஊருக்குள் போவதற்கு முன்பு வலது பக்கமாக ரோடு போகும் அதில் போ.. கோயில் ஒன்று தெரியும் அங்கு நிறுத்து சேகரென்று டிரைவரிடம் தன்ராஜ் சொல்ல,சரிங்க சாரென்றார்.
அதேபோல போல சிறிது நிமிடங்கள் சென்று ரோடு பிரிய, அந்த பாதையில் பஸ்ஸை வளைத்து ஓட்டிச் சென்று அங்கிருந்த கோயில் திடலில் நிறுத்தினார்.
சுற்றியும் ஓங்கி உயர்ந்த மலைகளாக இருக்க,அதன் நடுவில் கோயிலும் அதற்கு எதிரே திடலும் வீடு ஒன்று இருப்பதை பார்த்து இங்கவா நாம தங்க போகிறோமென்று அதிர்ந்தனர்.
பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய தன்ராஜ் நேராக குளத்திற்கு சென்றவர் அதில் தலை முழ்கி கரையேறி கோயிலை நோக்கி சென்றார்.
மாணவர்களோ அவரை விசித்திரமாக பார்க்க எதையும் கண்டு கொள்ளாமல் பூட்டியிருந்த கதவு வழியாக உள்ளே இருக்கும் தெய்வத்தை பார்க்க கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
ஒரு நாள் இரண்டு நாளில்லை இதோ 30 வருடங்களுக்கு பின்னர் தங்களது குல தெய்வமான மலையம்மனை கண்ணீரோடு பார்த்தவருக்கு கடந்த கால காயங்கள் நினைவடுக்கில் வந்து சென்றது
சீமக்கரை:
மாப்பி ரொம்ப புகழாதே மாப்பி எனக்கு வெக்க வெக்கமா வருது என்று வேலு சொல்ல,வேணாம்டா மரியாதை கெட்டு போயிடும் ஏற்கனவே செம கடுப்புல இருக்கிறேன்.அது எப்படி டா நாயே எல்லாரும் ஒரே நேரத்தில் தான் வந்தோம் நீ மட்டும் எப்படி நேரத்தோடு எழுந்து வந்து உன் தங்கச்சி கிட்ட நல்ல பேரு வாங்கிட்ட என்கவும், அது ராஜ ரகசியம் மாப்பி..வெளியில சொல்ல முடியாது என்றான்.
இருக்கட்டும் டா இருக்கட்டும் எனக்கு நேரம் வரும் அப்ப தூக்கி போட்டு உன்னை மிதிக்கல உன் தங்கச்சி புருஷன் நான் இல்லடா என்று கதிர் சொல்ல போ மாப்பி ரொம்ப காமெடி பண்ணிட்டு இருக்க எனக்கு சிப்பு சிப்பா வருது என்றான்.
வரும்டா வரும் வாயை உடைப்பேன் ஒரு நாளைக்கு,அன்னைக்கு நீ எப்படி சிரிக்கிறனு நானும் பார்க்கிறேன் என்றவன் சரி வண்டியை எடு அந்த தடிமாடு என்ன நிலைமையில் இருக்குன்னு தெரியல.மிலிட்டரி வேற ஓவரா கத்துக்கிட்டு இருக்கும்.. நம்ம பங்குக்கு கொஞ்சம் எரிய நெருப்பில் பெட்ரோல் ஊத்தலாம் என்று கதிர் சொல்லு டபுள் ஓகே மச்சி..
உன்னையும் உன் பங்காளியையும் லெப்ட் ரைட் வாங்குறது எனக்கு அல்வா சாப்பிடுவது போல..அதை போய் நான் விடுவேனா டா என்று சொல்லிவிட்டு வேலுவும் வண்டியை ஸ்டார்ட் பண்ண,பின்னாடி வந்து உட்கார்ந்த கதிரோ வேலுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான்.
அடேய் ஒலக்க.கையாடா இது கருமம் புடிச்சவனே.இருடா அந்த மேகலா கூட செல்பி எடுத்த இல்ல என் தங்கச்சி கிட்ட சொல்லுறேன் என்று வேலு சொல்ல, ஏற்கனவே மேகலா பேரைக் கேட்டு தாண்டா அவ கொலை வெறியில் இருக்கிறா என்று சொல்லவும், அதைக் கேட்ட வேலுவோ அப்படியா மாப்பி...
சூப்பரூஊஊஊ...கேட்கவே ஆனந்தமா இருக்கேடா...அதோட இதுவும் சேர்ந்துக்கட்டும்...வளைச்சி வளைச்சி செல்பி எடுத்தியே அதையும் நான் சொல்றேன் என்று சொல்லும் போது கை தட்டும் சத்தம் கேட்க,இருவரும் திரும்பி பார்க்க அங்கே தாமரை தான் நின்று கொண்டிருந்தாள்...
யாத்தேஏஏஏஏஏ...
இன்னைக்கு உன் தங்கச்சி கிட்ட சிக்கி செத்தேன்டா என்று கதிர் சொல்ல,உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மச்சி.ஏதோ கொஞ்சம் நஞ்சம் சேதாரம் இல்லாமல் இருந்தின்னாக்க என்ன வந்து பாருடா என்க...
ஏண்டா மானங்கெட்டவனே இவ்வளவு நல்ல எண்ணமாடா உனக்கு நாதாரி பயலே..மரியாதையா நீயும் கூடவா அவ கிட்ட என்னால தனியா வாங்கி கட்டிக்க முடியாது.
அவள் கூட செல்பி எடுக்கும்போது இந்த பயம் இருக்கணும்,நல்லா இளிச்சுக்கிட்டு எடுத்த.அப்ப எங்கடா போச்சு?ஒரு வார்த்தை என்ன கூப்பிட்டியாடா என்கவும் ஏண்டா இப்போ உன்னை கூப்பிடலங்குறது தான் பெருங் கவலையா? என்று கதிர் முறைக்க கண்டிப்பா மச்சி அதில் என்ன உனக்கு சந்தேகம் என்று கேட்டான்.
தாமரையோ எதுவும் சொல்லாமல் கதிரை பார்க்க ஹிஹி என்று சிரித்தவன் சொல்லு செல்லம் மாமா ஏதாச்சும் வாங்கிட்டு வரட்டுமா என்க, எதுவும் சொல்லாமல் அவள் பாட்டுக்கு தறி மெஷின் இருக்கும் ரூமிற்கு சென்று விட்டாள்.
தொலைஞ்சேன் டா...
வாய் திறந்து பேசினாலே முடியாது. இந்த லட்சணத்தில் உன் தங்கச்சி உம்முன்னு வேற போறா, இப்ப என்னடா பண்றது மாப்பி ஏதாச்சும் வழி சொல்லுடா என்கவும்,உன் போனை தூக்கி போட்டு உடை எல்லாம் சரியாயிடும் என்று வேலு சொல்ல ஏண்டா ஏன்?.அதுல எவ்வளவு போட்டோஸ் இருக்கு அத போய் இப்படி உடைக்க சொல்றியேடா என்று வருத்தப்பட, அதானே மேகலாவோட போட்டோ இருக்குன்னு சொல்லுடா அதனால தான் உனக்கு உடைக்க மனசு வரலை.உன்ன பத்தி எனக்கு தெரியாதாடா என்று வேலு முறைக்க, டேய் அவள் இன்னொருத்தன் பொண்டாட்டி டா. இப்படி தப்பா பேசாத டா என்று கதிர் பதற...
ஓஓஓஓ....ஏண்டா பத்து ரூபாய் பண கட்டை அவள் மேல மழை போல தூவும் போது இந்த வெங்காய பேச்சுலாம் எங்கடா போனது.எவளையாவது ஒருத்திய ரசிக்க முடியுதா டா..ரெண்டு கம்மனாட்டி பயலுகளும் உன் தங்கச்சி தான் உன் தங்கச்சி தான் ஊர் உலகத்துல இருக்கிற எல்லாரையும் தங்கச்சியாவே இருந்தா என்னடா அர்த்தம் என்று வேலு கடுப்பாக கேட்க...
என்ன அர்த்தம் நீ பாசமலர் சிவாஜி டா என்கும் போது ஜானிடம் இருந்து அவர்களுக்கு கால் வந்தது. பங்கு தாண்டா போன் பண்றான் சீக்கிரம் கிளம்பு.பிறகு வந்து உன் தங்கச்சி கால்ல விழுந்து கெஞ்சி சமாதானப் படுத்துறேன் என்று சொல்ல,விதி மாப்பி விதி...இன்றைக்கு உனக்கு சனி பகவான் உச்சியில் நின்று தங்கச்சி உருவத்தில் ஊஞ்சலாட போகிறார்.
அதை தடுக்க வழியில்லை...நடப்பது நடக்கட்டும் என்று சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து தேனூரில் இருக்கும் லாரன்ஸ் வீட்டை நோக்கி சென்றனர் நண்பனோடு பேசிக்கொண்டிருந்தாலும் சிந்தனை எல்லாம் தன்னவள் மீதே இருந்தது...
தன்னை சந்தேகப் பட மாட்டாள்.ஆனால் இதையெல்லாம் கேட்டு என்ன நினைக்கப் போகிறாளோ என்ற எண்ணமே அவனை யோசனை செய்ய வைத்தது.
.
மதுரை ஏர்போர்ட்:
அடியே இப்ப எதுக்குடி தேவை இல்லாம ஒப்பாரி வச்சிக்கிட்டு இருக்க?நான் என்ன திரும்பி வர மாட்டேனா என்று ஜான் பல்லை கடிக்க அல்லியோ அழுகையை மட்டும் நிறுத்தவில்லை.
கடவுளே சுத்தி எல்லாம் இவளோட சொந்தக்காரர்கள் இருக்கிறார்களே இவளை எப்படி சமாதப்படுத்துவது தெரியவில்லை என்று முணுமுணுத்தவன் செல்லம் மூணு மாசம் தான் ப்ராஜெக்ட் உன் அண்ணன் கல்யாணத்துக்கு எல்லாம் நான் வந்துருவேன் தயவுசெய்து என்னை நம்புடி என்றான்.
என்னன்னு தெரியல மாமா எனக்கு மனசு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்ல முதல் முதலாக தன்னவள் மாமா என்று அழைத்ததை கூட அவனால் அந்த நேரத்தில் ரசிக்க முடியவில்லை.
விட்டால் ஊர் வந்து சேர்ந்த வரைக்கும் அழுதுட்டு இருப்பாள் என்று நினைத்தவன் மற்றவர்களை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் சிறிது இடைவெளி விட்டு அழுது கொண்டிருப்பவர்களை இழுத்து தன்னுடன் இறுக்கி அணைக்க வேலு அந்த நேரம் பார்த்து திரும்பியவன் அட மானங்கெட்டவனே எங்க அப்பா அம்மா இருக்காங்க டா...
நீ என்னடா வேலை பண்ணிட்டு இருக்க என்று பல்லை கடித்தவன் பின்னர் யாரும் அந்த பக்கம் திரும்பவிடாமல் இவன் முதுகு பக்கமாக மறைத்தபடி நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
அல்லி ப்ளீஸ் டிரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ இது என்னோட கனவு ப்ராஜெக்ட் ஒவ்வொரு முறையும் உன்கிட்ட இது விளக்கமா சொன்னாலும் இப்போதைக்கு புரியாது. இது முடிச்சுட்டு கண்டிப்பா நான் வந்துடறேன் புரியுதா?.
அப்படியோ போய்விட்டால் நீ என்னை விட்டுடுவியா இல்ல உன் மாமா தான் என்னை விட்ருவாரா சிண்டை பிடிச்சு இழுத்துட்டு வந்துடுவார் டி எங்க அப்பா என்று சொல்ல அதில் மனம் தெளிந்தவள் அடிக்கடி போன் பண்ணுங்க.இங்கு நான் காத்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்ல இந்த வாக்கை மட்டும் என்னால தயவு செய்து கொடுக்க முடியாது.
அங்கு வேலை அப்படி டி..நேரம் கிடைக்கும் போது நிச்சயம் நான் போன் பண்றேன் அதுக்குனு உனக்கு போன் பண்ணாம இருக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது சரியா...
ஒழுங்கா எக்ஸாம் எழுது வந்துடுறேன் என்று சொல்லி அவளின் கண்ணை துடைத்து விட்டவன் தைரியமாய் இருடி என்றவாறு அவளின் கையை பிடித்தவாறு தனது வீட்டினர் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
பின்னர் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க சிறிது நிமிடத்தில் அவன் செல்வதற்கான பிளைட்டின் அறிவிப்பு வந்ததும் எல்லாரிடமும் தலையை அசைத்து விட்டு ஜான் செல்ல அவனுக்கு மனதிற்குள் அல்லியை விட்டு பிரிந்து போவது ஒரு வித வலியை தான் கொடுத்தது...
அதன் பின்னும் அவன் நல்லபடியாக பிளைட்டில் ஏறி விட்டான் என்பதை தெரிந்து வீட்டுக்கு கிளம்பினர்.
அதன் பின்னர் நாட்களும் வேகமாய் ஓட தாமரையோ எப்பொழுது மேகாலாவோடு கதிர் செல்பி எடுத்தான் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து அவனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டாள்.
கதிரும் மனைவியிடம் எவ்வளவோ மன்னிப்பு கேட்டுப் பார்த்து விட்டான் அவள் எதையும் காதில் வாங்கவே இல்லை.நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.செல்வியும் அல்லியும் நல்லபடியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்தனர்.
ஜானும் சொன்ன போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் அல்லியிடம் போனில் பேசிக் கொண்டிருக்க கதிரோ மனைவியின் காலில் விழுந்து கெஞ்சியும் அவள் மனம் மட்டும் இறங்கவில்லை.
இன்னொருத்தி கூட போட்டோ எடுக்கும் அளவுக்கு பிடித்தம் என்றாள் இதை எந்த விதத்தில் சேர்ப்பது என்று அவள் மனதிற்குள் ஓர் எண்ணம் வந்தது. ஆனால் இருவரும் வீட்டில் இருப்பவர்களுக்கு தங்களது ஊடலை பற்றி தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.