Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 603
- Thread Author
- #1
சென்னை:
என்னப்பா எல்லாரும் வந்துட்டீங்களா என்று கேட்டுக்கொண்டே தன்ராஜ் அந்த பஸ்ஸில் ஏற எஸ் ஆர் என்றனர்.ம்ம் என்றவாறு கையில் இருந்த லிஸ்ட்டில் உள்ள பெயர்களை படிக்க சொல்லி நிலவனிடம் கொடுத்தார்.
அவனும் படிக்க மாணவர்களும் எஸ் சார் எஸ் சார் என்று சொல்லிக் கொண்டே இருக்க இன்னும் மூவர் மட்டும் வரவில்லை என்பது தெரிந்தது.
எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னாலும் நேரத்துக்கு வரணும்னு அந்த மூணு எருமை மாடுகளுக்கும் சுத்தமா தெரியாது என்று தன்ராஜ் திட்டிக் கொண்டிருக்கும் போது அவனுங்களும் பஸ்ஸில் ஏறியவனுங்கள் ரொம்ப புகழாதீங்க சார் என்க,திரும்பிப் பார்த்து முறைத்தவர் நீங்களாம் டாக்டர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளாதீங்கடா.
இந்த சேவையில் பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் ஒவ்வொரு நிமிஷமும் நீங்க தாமதிக்கிறது ஒரு உயிரை இழப்பதற்கு சமம் என்று செண்டிமெண்டாக பேச,ரொம்ப நெஞ்சை நக்காதீங்க சார் முடியல என்று அதிலிருந்த ஒருவன் சொல்ல வேணாம்டா கொலை வெறியில் இருக்கேன் அப்புறம் கடுப்பாயிடும் மரியாதையா போய் உட்காருங்கள் என்றார்...
இப்படி தூங்கிக்கொண்டு இருந்த பூனைக்குட்டியை சிங்கமா எழுப்பி விட்டுட்டீங்களேடா இதெல்லாம் நல்லாவா இருக்குன்னு நிலவன் அவர்களில் ஒருவனை பார்த்து கேட்க விடுடா நம்ம சார் தானே என்றான்.
பின்னர் கீழே இறங்கிய தன்ராஜ் மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏற மருத்துவ மாணவர்களை ஏற்றிக்கொண்ட பஸ்ஸூம் வனிச்சூரை நோக்கி புறப்பட்டது.சிறிது நிமிடங்கள் வரை அமைதியாக வர எந்திரிச்சி நின்ற தன்ராஜ் என்னடா ஊமை ஆகிவிட்டீர்களா? என்கவும் ஆமா பேசினாலும் உங்களுக்கு குத்தம் பேசவில்லை என்றாலும் உங்களுக்கு குற்றம் என்று அதிலிருந்த மாணவன் ஒருவன் சொல்ல...அவ்வளவு நல்லவன் கிடையாதேடா நீங்கள்....
இவ்வளவு நேரம் நீங்க அடக்கி வாசிக்கிறேனென்றால் ஏதோ பெரிய சம்பவம் இருக்க போகுதுன்னு அர்த்தமென்று சிரித்தார்...
நீங்கதான் சார் எங்களை நல்லா புரிஞ்சிக்கிறிங்க என்று சொல்ல என்ன பண்றது கழுதை கெட்டா குட்டிசுவரு உங்கள போல எத்தனை பேரு பார்த்திருக்கிறேன் என்றார்.
அடேய் தடி பயலுங்களா உங்களுக்கு திரும்பவும் சொல்றேன் உங்க வாலுத்தனத்தை எல்லாம் அங்க வந்து காட்டாதீங்க...மெயினா பாலு கமல் விஷ்வா உங்களுக்காக தான் சொல்றேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்க..
அய்யோ சார் எங்கள பார்த்து என்ன இப்படி சொல்லிட்டீங்க என்று பதறினான்...
நீங்க மூணு பேரும் இருக்கிறதால் தான்டா எனக்கு பயமாக இருக்கு.எத்தனையோ செட் மாணவர்களை அனுபவத்துல பாத்துட்டேன்.ஆனா இந்த நாலு வருஷத்துல உங்களை போல அடங்காத பிடாரிங்களை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததே இல்லடா என்ற முறைத்தவர் சரி சரி போதும் உங்கள் வால் தனத்தை சுருட்டி வச்சதெல்லாம்...என்ஜாய் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவருக்கான சீட்டில் போய் உட்கார்ந்து கண்ணை மூடியவருக்கு அந்த ஊரிலிருந்த ஏதேதோ நினைவுகள் வந்தது.
நிலவனும் வீட்டுக்கு போன் பண்ணி கிளம்பி விட்டேனென்று சொல்லி விட்டு போனை வைத்தவனுக்கு மனம் ஏனோ குதூகலமாக இருந்தது.
மதிய உணவு சாப்பிட்டு விட்டு சென்னையில் இருந்து கிளம்பினர். நேரமும் கடந்து செல்ல இரவு உணவை மதுரைக்கு வந்து சாப்பிடும்போது இரவு பத்து மணி ஆனது.சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.
நள்ளிரவுக்கு மேலே மதுரையிலிருந்து கிளம்பிய மெடிக்கல் காலேஜ் மாணவர்களும் வனிச்சூருக்கு வந்து சேர காலை ஆறு மணி ஆனது. பொதுவாகவே நிலவன் இரவு நேர பயணத்தை ரொம்ப ரசிப்பான் என்பதால் இரவு முழுவதும் தூங்காமலே பாட்டு கேட்டுக் கொண்டே வந்தான்.
வனிச்சூரில் இருக்கும் ஹோட்டலின் முன்பு பஸ்சை நிறுத்த மாணவர்கள் எல்லாம் கீழே இறங்கி அந்த சூழலை சுற்றி பார்த்து வியந்தவர்கள் அங்கிருந்த கடைக்குள் சென்று அவரவர்களுக்கு தேவையான டீ காபி என்று ஆர்டர் பண்ணி குடித்தனர்..
அரை மணி நேரம் சென்று இருக்க அந்த மலைப்பாதையை காட்டிய தன்ராஜ் அதில் உள்ளே போகணும் என்று டிரைவரிடம் சொல்ல, சரிங்க சார் என்று கேட்டுக் கொண்டு அவரும் அந்த பாதையில் பஸ்சை ஓட்டினார்...
எப்ப பாத்தாலும் வாகனங்கள் நிறைந்த ரோடுகளையும் ஓங்கி உயர்ந்த அப்பார்ட்மெண்ட்டையும் பார்த்த மாணவர்களுக்கு இங்கே சுற்றிலும் இயற்கை சூழ்ந்திருக்கும் இடத்தை ரசனையோடு பார்த்தனர்.
சீமக்கரை:
யோவ் உன்ன தான் கேட்கிறேன் மதியம் போன மனுஷன் நைட் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வர.எங்க போய் சுத்திட்டு வர ஒழுங்கு மரியாதையா சொல்லு?.
அடியேய் செல்லம் உன் அண்ணன் கூடையும் கொழுந்தன் கூட தான் டி போனேன்.வேற எங்க போக போறேன் சொல்லு என்று கதிர் மனைவியை பார்க்க,சும்மா இந்த சமாளிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட காட்டாத. மரியாதையா சொல்லு எங்க போய் சுத்திட்டு வர நீனு என்று தாமரை கோபமாக கேட்க எங்கேயும் சுத்த போல டி செல்லம்..மேலூரில் திருவிழா அதை பார்க்க போயிருந்தேன் டி என்றான்.
எதேஏஏ மேலூர்லயா அது மதுரை கிட்ட இருக்கு தானே என்கவும் ஆமாடி அதுக்கு தான் சீக்கிரமா போய் விட்டோம் என்று பெருமையாக சொல்ல அப்படி என்ன திருவிழாவுக்காக ஊருக்கு முன்னாடி ஓடி போயிருக்க பாக்குறதுக்கு என்றாள்...
அதாவது செல்லம் நம்ம மேலூர் மேகலா இருக்கிறாளே அவ டான்ஸ் இருக்கே அட அட ரொம்ப வருஷம் ஆகுதுடி பார்த்து.சரி பங்கு வேற நாளைக்கு ஊருக்கு போறேனா, இந்த விஷயம் கேள்விப்பட்டோம் எங்களுக்கு தெரிஞ்ச பிரண்டு எல்லாம் அங்க மேலூர்ல இருக்குறானுகளா அவனுங்களும் வாங்கடா என்று கூப்பிட்டானுங்க அதனால தான் போனோம் டி.பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போல இப்பவும் அப்படியே இருக்கிறாள் எப்படித்தான் மெயின்டன் பண்றானு தெரியலைடி..
கடைசியா ஜானு லண்டன் போறதுக்கு முன்னாடி நான் உன் நொண்ணன் ஜானு மூணு பேரும் போனோம் டி அப்போ 18 வயசு பருவம் இல்லையா ரொம்ப அழகா இருப்பா டி அவளுக்கு மேக்கப் துளி கூட தேவை கிடையாது...
இருந்தாலும் அந்த அழகுக்கு இன்ன ரெண்டு இஞ்சி ஏத்தி ஒரு சிலுப்பு சிலுப்புவா பாரு அட அட என்ன டான்ஸ் தெரியுமா விடிய விடிய ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு மனைவியை பார்க்க அங்க தாமரையோ கொலை வெறியில் நின்றாள்..
ஆஹா.....
ரொம்ப ஓவரா பேசிட்டோம் போலயே சும்மாவே இவள் லெப்ட் ரைட் வாங்குவாள்.நம்ம வேற மேகலாவ பத்தி ஓவரா பேசிட்டோமே வச்சு செய்யப் போறாளே...சரி சமாளிப்போம்.அழகை ரசிப்பதுக்கு தானே செல்லம் ஆண்டவன் கண்ணை கொடுத்திருக்கிறான்...
எதையும் கலைநயத்தோடு பார்த்துட்டு கடந்து வந்தரனும் மற்றபடி மேகலா என்ன உன் மாமா வாழ்க்கையில வந்து வாழ போறாளா சொல்லு தாமரைக்கு மட்டும் தான் இந்த கதிரின் மனசுல இடம்,வாழ்க்கைலயும் இடம்..இந்த வருஷம் ஆடி முடிச்சவள் இதோட அடுத்த வருஷம் அவங்க ஊர் திருவிழாவுக்கு மட்டும்தான் ஆடுவாள். வேற எந்த ஊருக்கும் போக மாட்டாள்.
போனாக்க நல்ல பேரும் புகழும் கிடைக்கும் ஆனா அந்த பொண்ணு அவ புருஷன் கூட மட்டும் தான் ஆடுவா தெரியுமா? புருஷன் பொண்டாட்டி தான் அங்க ஜோடியாக ஆடுவார்கள்...
நம்ம கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்ற போல சிவாஜி பத்மினி ஜோடி போல தான் அவங்க ஜோடி இருக்கும் என்று பேசிக்கொண்டே போக தாமரையோ பொருத்து பொருத்து பார்த்தவள் படாரென்று கதிரின் நெஞ்சிலே ஒரு அடியை வைத்தாள். ..
சுள்ளென்று அடி விழ முகத்தை சுருக்கியவன் ஏண்டி செல்லம் எதுக்கு இப்ப மாமாவ அடிக்கிறடி...
ஏண்டா உனக்கு எவ்வளவு திமிரு இருந்தாக ஆட்டம் பார்க்க போனதில்லாமல் அடுத்தவன் பொண்டாட்டியை இவ்வளவு ரசிச்சிட்டு இருக்க,அப்போ உன் மனசுல எப்படிப்பட்ட எண்ணம் இருக்கும் சொல்லுடா என்றாள்..
அய்யய்யோ செல்லம் தப்பா நினைக்காதடி மாமா கலையை மட்டும் தான் ரசிப்பேனே தவிர அந்த கலைக்கு சொந்தமானவளை ரசிப்பது கிடையாது...
ஆயிரம் தான் இருந்தாலும் மேகலா இன்னொருத்தன் பொண்டாட்டி டி அவள வந்து உன் மாமா கூட சேர்த்து வைத்து பேசாதே எனக்கு ஒரு மாதிரியா இருக்குடி என்கும் போது வாய மூடுடா மானங்கெட்டவனே...
நான் எங்கடா உன் கூட சேர்த்து வச்சு பேசினேன்? .நீ தாண்டா உன் கூட அவளை சேர்த்து வச்சு பேசுற மனசுல இவ்வளவு ஆசை இருக்கா உனக்கு என்க...
நமக்கு இந்த வாயால தான் வாஸ்து சரியில்லை என்று சொல்கிறோம் இருந்தாலும் மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறோமே என்று முழித்தான்...
தங்கமே உன் புருஷனை இப்படி ஒரு வார்த்தை சொல்லாதடி ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியால எனக்கு நெஞ்சுல பாயுற போல இருக்குடி என்க...உன் நடிப்பு எல்லாம் தயவு செய்து நிறுத்து என்னால முடியல மாமா என்றாள்..
நிஜமாவே திருவிழாவை பார்க்க தாண்டி போனேன் மேகலாவை ரசிக்கிறதுக்காக எல்லாம் மாமா சத்தியமா போகல என்கவும்,இதே கதையை சொல்லிட்டு இருக்கியே என்று கதிரின் முடிரை பிடித்து ஆட்ட எப்படி பேசினாலும் பாயிண்ட புடிக்கிறியேடி நான் என்ன தாண்டி சொல்றது...
ஐயோ தங்கம் அவசரப்பட்டு இதுக்காக உன் மாமா கிட்ட பேசாம எல்லாம் இருந்துடாதடி.நாலு அறை வேணாலும் அறைஞ்சிக்க..உன்கிட்ட பேசாம சத்தியமா என்னால இருக்க முடியாது என்றான்..
இதுவரை அமைதியாக இருந்த தாமரையோ கணவன் சொன்னதைக் கேட்டு அவனைப் பார்த்தவள் இப்ப எதுக்கு ஓவரா சோப்பு போட்டு இருக்கிற..பேசமாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே நீயாவே பில்டப் பண்ணிக்கிட்டு இருக்குறியே அப்போ உன்னோட ஆசை நான் உன்கிட்ட பேசாம இருக்கணும் அதுதானே?.
இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்க்காத கதிரோ எதேஏஏ என்று திருதிருவென முடித்தான்.
ஏன் போன எதுக்காக நீ அவளை ரசிச்சேன் எல்லாம் நான் உன்னை கேட்கல எங்க போறோன்னு சொல்லிட்டு போகலை என்று தான் நான் கேட்கிறேன்.கலையை ரசிப்பது தான் மனுஷனோட குணம் அதனாலதான் நமக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் தெரியுது.
நான் கூட தான் ரசிப்பேன்...தாமஸ் இருக்கானே அட அட அந்த போலீஸ் கெட்டப்ல பிச்சு திங்கலாம் போல இருப்பான்..நம்ப ஆஷிப் இருக்கானே வாவ் அந்த வேஷ்டி சட்டைல வருவான் பாரு அல்டிமேட்.நம்ம டொவினோ...எல்லா கெட்டப்லையும் சூப்பரா இருப்பான் தெரியுமா என்க....தாமரை ஒவ்வொரு பெயராக சொல்ல சொல்ல கதிருக்கோ பத்தி கொண்டு போனது.
என்னப்பா எல்லாரும் வந்துட்டீங்களா என்று கேட்டுக்கொண்டே தன்ராஜ் அந்த பஸ்ஸில் ஏற எஸ் ஆர் என்றனர்.ம்ம் என்றவாறு கையில் இருந்த லிஸ்ட்டில் உள்ள பெயர்களை படிக்க சொல்லி நிலவனிடம் கொடுத்தார்.
அவனும் படிக்க மாணவர்களும் எஸ் சார் எஸ் சார் என்று சொல்லிக் கொண்டே இருக்க இன்னும் மூவர் மட்டும் வரவில்லை என்பது தெரிந்தது.
எத்தனை முறை படிச்சு படிச்சு சொன்னாலும் நேரத்துக்கு வரணும்னு அந்த மூணு எருமை மாடுகளுக்கும் சுத்தமா தெரியாது என்று தன்ராஜ் திட்டிக் கொண்டிருக்கும் போது அவனுங்களும் பஸ்ஸில் ஏறியவனுங்கள் ரொம்ப புகழாதீங்க சார் என்க,திரும்பிப் பார்த்து முறைத்தவர் நீங்களாம் டாக்டர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளாதீங்கடா.
இந்த சேவையில் பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் ஒவ்வொரு நிமிஷமும் நீங்க தாமதிக்கிறது ஒரு உயிரை இழப்பதற்கு சமம் என்று செண்டிமெண்டாக பேச,ரொம்ப நெஞ்சை நக்காதீங்க சார் முடியல என்று அதிலிருந்த ஒருவன் சொல்ல வேணாம்டா கொலை வெறியில் இருக்கேன் அப்புறம் கடுப்பாயிடும் மரியாதையா போய் உட்காருங்கள் என்றார்...
இப்படி தூங்கிக்கொண்டு இருந்த பூனைக்குட்டியை சிங்கமா எழுப்பி விட்டுட்டீங்களேடா இதெல்லாம் நல்லாவா இருக்குன்னு நிலவன் அவர்களில் ஒருவனை பார்த்து கேட்க விடுடா நம்ம சார் தானே என்றான்.
பின்னர் கீழே இறங்கிய தன்ராஜ் மேனேஜ்மெண்ட் கிட்ட சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏற மருத்துவ மாணவர்களை ஏற்றிக்கொண்ட பஸ்ஸூம் வனிச்சூரை நோக்கி புறப்பட்டது.சிறிது நிமிடங்கள் வரை அமைதியாக வர எந்திரிச்சி நின்ற தன்ராஜ் என்னடா ஊமை ஆகிவிட்டீர்களா? என்கவும் ஆமா பேசினாலும் உங்களுக்கு குத்தம் பேசவில்லை என்றாலும் உங்களுக்கு குற்றம் என்று அதிலிருந்த மாணவன் ஒருவன் சொல்ல...அவ்வளவு நல்லவன் கிடையாதேடா நீங்கள்....
இவ்வளவு நேரம் நீங்க அடக்கி வாசிக்கிறேனென்றால் ஏதோ பெரிய சம்பவம் இருக்க போகுதுன்னு அர்த்தமென்று சிரித்தார்...
நீங்கதான் சார் எங்களை நல்லா புரிஞ்சிக்கிறிங்க என்று சொல்ல என்ன பண்றது கழுதை கெட்டா குட்டிசுவரு உங்கள போல எத்தனை பேரு பார்த்திருக்கிறேன் என்றார்.
அடேய் தடி பயலுங்களா உங்களுக்கு திரும்பவும் சொல்றேன் உங்க வாலுத்தனத்தை எல்லாம் அங்க வந்து காட்டாதீங்க...மெயினா பாலு கமல் விஷ்வா உங்களுக்காக தான் சொல்றேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்க..
அய்யோ சார் எங்கள பார்த்து என்ன இப்படி சொல்லிட்டீங்க என்று பதறினான்...
நீங்க மூணு பேரும் இருக்கிறதால் தான்டா எனக்கு பயமாக இருக்கு.எத்தனையோ செட் மாணவர்களை அனுபவத்துல பாத்துட்டேன்.ஆனா இந்த நாலு வருஷத்துல உங்களை போல அடங்காத பிடாரிங்களை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததே இல்லடா என்ற முறைத்தவர் சரி சரி போதும் உங்கள் வால் தனத்தை சுருட்டி வச்சதெல்லாம்...என்ஜாய் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு அவருக்கான சீட்டில் போய் உட்கார்ந்து கண்ணை மூடியவருக்கு அந்த ஊரிலிருந்த ஏதேதோ நினைவுகள் வந்தது.
நிலவனும் வீட்டுக்கு போன் பண்ணி கிளம்பி விட்டேனென்று சொல்லி விட்டு போனை வைத்தவனுக்கு மனம் ஏனோ குதூகலமாக இருந்தது.
மதிய உணவு சாப்பிட்டு விட்டு சென்னையில் இருந்து கிளம்பினர். நேரமும் கடந்து செல்ல இரவு உணவை மதுரைக்கு வந்து சாப்பிடும்போது இரவு பத்து மணி ஆனது.சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.
நள்ளிரவுக்கு மேலே மதுரையிலிருந்து கிளம்பிய மெடிக்கல் காலேஜ் மாணவர்களும் வனிச்சூருக்கு வந்து சேர காலை ஆறு மணி ஆனது. பொதுவாகவே நிலவன் இரவு நேர பயணத்தை ரொம்ப ரசிப்பான் என்பதால் இரவு முழுவதும் தூங்காமலே பாட்டு கேட்டுக் கொண்டே வந்தான்.
வனிச்சூரில் இருக்கும் ஹோட்டலின் முன்பு பஸ்சை நிறுத்த மாணவர்கள் எல்லாம் கீழே இறங்கி அந்த சூழலை சுற்றி பார்த்து வியந்தவர்கள் அங்கிருந்த கடைக்குள் சென்று அவரவர்களுக்கு தேவையான டீ காபி என்று ஆர்டர் பண்ணி குடித்தனர்..
அரை மணி நேரம் சென்று இருக்க அந்த மலைப்பாதையை காட்டிய தன்ராஜ் அதில் உள்ளே போகணும் என்று டிரைவரிடம் சொல்ல, சரிங்க சார் என்று கேட்டுக் கொண்டு அவரும் அந்த பாதையில் பஸ்சை ஓட்டினார்...
எப்ப பாத்தாலும் வாகனங்கள் நிறைந்த ரோடுகளையும் ஓங்கி உயர்ந்த அப்பார்ட்மெண்ட்டையும் பார்த்த மாணவர்களுக்கு இங்கே சுற்றிலும் இயற்கை சூழ்ந்திருக்கும் இடத்தை ரசனையோடு பார்த்தனர்.
சீமக்கரை:
யோவ் உன்ன தான் கேட்கிறேன் மதியம் போன மனுஷன் நைட் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வர.எங்க போய் சுத்திட்டு வர ஒழுங்கு மரியாதையா சொல்லு?.
அடியேய் செல்லம் உன் அண்ணன் கூடையும் கொழுந்தன் கூட தான் டி போனேன்.வேற எங்க போக போறேன் சொல்லு என்று கதிர் மனைவியை பார்க்க,சும்மா இந்த சமாளிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட காட்டாத. மரியாதையா சொல்லு எங்க போய் சுத்திட்டு வர நீனு என்று தாமரை கோபமாக கேட்க எங்கேயும் சுத்த போல டி செல்லம்..மேலூரில் திருவிழா அதை பார்க்க போயிருந்தேன் டி என்றான்.
எதேஏஏ மேலூர்லயா அது மதுரை கிட்ட இருக்கு தானே என்கவும் ஆமாடி அதுக்கு தான் சீக்கிரமா போய் விட்டோம் என்று பெருமையாக சொல்ல அப்படி என்ன திருவிழாவுக்காக ஊருக்கு முன்னாடி ஓடி போயிருக்க பாக்குறதுக்கு என்றாள்...
அதாவது செல்லம் நம்ம மேலூர் மேகலா இருக்கிறாளே அவ டான்ஸ் இருக்கே அட அட ரொம்ப வருஷம் ஆகுதுடி பார்த்து.சரி பங்கு வேற நாளைக்கு ஊருக்கு போறேனா, இந்த விஷயம் கேள்விப்பட்டோம் எங்களுக்கு தெரிஞ்ச பிரண்டு எல்லாம் அங்க மேலூர்ல இருக்குறானுகளா அவனுங்களும் வாங்கடா என்று கூப்பிட்டானுங்க அதனால தான் போனோம் டி.பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போல இப்பவும் அப்படியே இருக்கிறாள் எப்படித்தான் மெயின்டன் பண்றானு தெரியலைடி..
கடைசியா ஜானு லண்டன் போறதுக்கு முன்னாடி நான் உன் நொண்ணன் ஜானு மூணு பேரும் போனோம் டி அப்போ 18 வயசு பருவம் இல்லையா ரொம்ப அழகா இருப்பா டி அவளுக்கு மேக்கப் துளி கூட தேவை கிடையாது...
இருந்தாலும் அந்த அழகுக்கு இன்ன ரெண்டு இஞ்சி ஏத்தி ஒரு சிலுப்பு சிலுப்புவா பாரு அட அட என்ன டான்ஸ் தெரியுமா விடிய விடிய ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு மனைவியை பார்க்க அங்க தாமரையோ கொலை வெறியில் நின்றாள்..
ஆஹா.....
ரொம்ப ஓவரா பேசிட்டோம் போலயே சும்மாவே இவள் லெப்ட் ரைட் வாங்குவாள்.நம்ம வேற மேகலாவ பத்தி ஓவரா பேசிட்டோமே வச்சு செய்யப் போறாளே...சரி சமாளிப்போம்.அழகை ரசிப்பதுக்கு தானே செல்லம் ஆண்டவன் கண்ணை கொடுத்திருக்கிறான்...
எதையும் கலைநயத்தோடு பார்த்துட்டு கடந்து வந்தரனும் மற்றபடி மேகலா என்ன உன் மாமா வாழ்க்கையில வந்து வாழ போறாளா சொல்லு தாமரைக்கு மட்டும் தான் இந்த கதிரின் மனசுல இடம்,வாழ்க்கைலயும் இடம்..இந்த வருஷம் ஆடி முடிச்சவள் இதோட அடுத்த வருஷம் அவங்க ஊர் திருவிழாவுக்கு மட்டும்தான் ஆடுவாள். வேற எந்த ஊருக்கும் போக மாட்டாள்.
போனாக்க நல்ல பேரும் புகழும் கிடைக்கும் ஆனா அந்த பொண்ணு அவ புருஷன் கூட மட்டும் தான் ஆடுவா தெரியுமா? புருஷன் பொண்டாட்டி தான் அங்க ஜோடியாக ஆடுவார்கள்...
நம்ம கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் சொல்ற போல சிவாஜி பத்மினி ஜோடி போல தான் அவங்க ஜோடி இருக்கும் என்று பேசிக்கொண்டே போக தாமரையோ பொருத்து பொருத்து பார்த்தவள் படாரென்று கதிரின் நெஞ்சிலே ஒரு அடியை வைத்தாள். ..
சுள்ளென்று அடி விழ முகத்தை சுருக்கியவன் ஏண்டி செல்லம் எதுக்கு இப்ப மாமாவ அடிக்கிறடி...
ஏண்டா உனக்கு எவ்வளவு திமிரு இருந்தாக ஆட்டம் பார்க்க போனதில்லாமல் அடுத்தவன் பொண்டாட்டியை இவ்வளவு ரசிச்சிட்டு இருக்க,அப்போ உன் மனசுல எப்படிப்பட்ட எண்ணம் இருக்கும் சொல்லுடா என்றாள்..
அய்யய்யோ செல்லம் தப்பா நினைக்காதடி மாமா கலையை மட்டும் தான் ரசிப்பேனே தவிர அந்த கலைக்கு சொந்தமானவளை ரசிப்பது கிடையாது...
ஆயிரம் தான் இருந்தாலும் மேகலா இன்னொருத்தன் பொண்டாட்டி டி அவள வந்து உன் மாமா கூட சேர்த்து வைத்து பேசாதே எனக்கு ஒரு மாதிரியா இருக்குடி என்கும் போது வாய மூடுடா மானங்கெட்டவனே...
நான் எங்கடா உன் கூட சேர்த்து வச்சு பேசினேன்? .நீ தாண்டா உன் கூட அவளை சேர்த்து வச்சு பேசுற மனசுல இவ்வளவு ஆசை இருக்கா உனக்கு என்க...
நமக்கு இந்த வாயால தான் வாஸ்து சரியில்லை என்று சொல்கிறோம் இருந்தாலும் மூடிக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறோமே என்று முழித்தான்...
தங்கமே உன் புருஷனை இப்படி ஒரு வார்த்தை சொல்லாதடி ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியால எனக்கு நெஞ்சுல பாயுற போல இருக்குடி என்க...உன் நடிப்பு எல்லாம் தயவு செய்து நிறுத்து என்னால முடியல மாமா என்றாள்..
நிஜமாவே திருவிழாவை பார்க்க தாண்டி போனேன் மேகலாவை ரசிக்கிறதுக்காக எல்லாம் மாமா சத்தியமா போகல என்கவும்,இதே கதையை சொல்லிட்டு இருக்கியே என்று கதிரின் முடிரை பிடித்து ஆட்ட எப்படி பேசினாலும் பாயிண்ட புடிக்கிறியேடி நான் என்ன தாண்டி சொல்றது...
ஐயோ தங்கம் அவசரப்பட்டு இதுக்காக உன் மாமா கிட்ட பேசாம எல்லாம் இருந்துடாதடி.நாலு அறை வேணாலும் அறைஞ்சிக்க..உன்கிட்ட பேசாம சத்தியமா என்னால இருக்க முடியாது என்றான்..
இதுவரை அமைதியாக இருந்த தாமரையோ கணவன் சொன்னதைக் கேட்டு அவனைப் பார்த்தவள் இப்ப எதுக்கு ஓவரா சோப்பு போட்டு இருக்கிற..பேசமாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே நீயாவே பில்டப் பண்ணிக்கிட்டு இருக்குறியே அப்போ உன்னோட ஆசை நான் உன்கிட்ட பேசாம இருக்கணும் அதுதானே?.
இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்க்காத கதிரோ எதேஏஏ என்று திருதிருவென முடித்தான்.
ஏன் போன எதுக்காக நீ அவளை ரசிச்சேன் எல்லாம் நான் உன்னை கேட்கல எங்க போறோன்னு சொல்லிட்டு போகலை என்று தான் நான் கேட்கிறேன்.கலையை ரசிப்பது தான் மனுஷனோட குணம் அதனாலதான் நமக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் தெரியுது.
நான் கூட தான் ரசிப்பேன்...தாமஸ் இருக்கானே அட அட அந்த போலீஸ் கெட்டப்ல பிச்சு திங்கலாம் போல இருப்பான்..நம்ப ஆஷிப் இருக்கானே வாவ் அந்த வேஷ்டி சட்டைல வருவான் பாரு அல்டிமேட்.நம்ம டொவினோ...எல்லா கெட்டப்லையும் சூப்பரா இருப்பான் தெரியுமா என்க....தாமரை ஒவ்வொரு பெயராக சொல்ல சொல்ல கதிருக்கோ பத்தி கொண்டு போனது.