Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 640
- Thread Author
- #1
அல்லி அல்லி என்று கூப்பிடும் செல்வியின் குரலை கேட்டு தன்னவனிடம் இருந்து விலகியவள் அங்கிருந்து வேகமாக ஓடிப் போனவள் மூச்சு வாங்கு செல்வியின் அருகில் போயிட்டு வந்துட்டேன் டி என்க...
வாடி..அடுத்தது நம்ம கிளாஸ்கு தான் ஹால் டிக்கெட் தராங்கள் என்று திட்டிக்கொண்டே செல்வி முன்னாடியே போக அல்லியோ திரும்பி பார்த்துக் கொண்டே அவள் பின்னாடியே சென்றாள்...
தலையை கோதி சிரித்துக் கொண்ட ஜானும் அங்கிருந்த பைக்கில் ஏறி வீட்டிற்கு போனான்.
ஹாலில் உட்கார்ந்திருந்த லாரன்ஸ் உள்ளே வரும் மகனை தான் முறைத்துப் பார்த்தார்.தந்தையின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்து என்னவாம் என்றவாறு அவருக்கு எதிரில் இருந்தே சோபாவில் போய் உட்கார்ந்தான்...
அவசியம் இப்ப நீ லண்டன் போய் தான் ஆகணுமாடா என்றார்.அய்யோ அப்பாஆஆ...மூணு மாசம் ப்ராஜெக்ட் பல கோடி ரூபாய் வரும் என்க...ஏண்டா நமகிட்ட இல்லாத பணமா என்று லாரன்ஸ் கத்தினார்..
அந்த நேரம் அடேய் பனைமரம் இன்னும் என்னடா பண்ற என்றவாறு உள்ளே வந்த வேலுவோ அங்கிருந்த லாரன்ஸ் பார்த்துவிட்டு ஆத்தாடி மிலிட்டரி என்று வெளியில் ஓடப் போக டேய் வாடா இங்கு என்றார்.
என்ன மாமா என்கவும் ஏன் எருமை மாடுகளே,ரெண்டு எருமை மாடும் இந்த எருமை மாடு கூடத்தான் சுத்திட்டு இருக்கீங்க அவனை எதுக்குடா இப்போ வெளிநாடு அனுப்புறீங்க என்க...
வாய மூடுங்க மாமா எனக்கு கடுப்பு வந்துரும் சொல்லிட்டேன் என்க...என்னடா சொல்ற என்று லாரன்ஸ் முறைக்க, அய்யோ மாமா வெயில வந்தது கடுப்பா இருக்குன்னு சொன்னேன்..இருங்க அத்தை கிட்ட ஒரு டம்ளர் மோர் குடிச்சிட்டு வரேன் என்று கிச்சனிற்குள் போனவன் அங்க உன் புருஸ் கரகாட்டம் ஆடுறாரு...நீ சோறு ஆக்குறியேத்தை..
எப்படி தான் இந்த மனுஷன் கூட இத்தனை வருஷகாலமாய் குடும்பம் பண்ணுன என்று வேலு கேட்க,இதுக்கப்புறம் வேதனைப்பட்டு என்ன வேலு பண்றது என்று சிரித்தவர் மருமகனுக்கு ஜில்லென்று மோரை கொடுக்க வாங்கி குடித்துக்கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்தவன் மாமா நீங்க கொஞ்சம் குடிக்கிறீங்களா?.
சூட்டுக்கு ரொம்ப நல்லது என்க...அடேய் துப்பாக்கி எடுத்தேன் எங்க சுடுவனு எனக்கே தெரியாது என்றார்..
யோசிச்சு நீங்க ஒரு முடிவு பண்ணுங்க. சரி வா எரும மாடு எவ்வளவு நேரம் தான் உனக்காக உட்கார்ந்து இருக்கிறது என ஜானை திட்ட...
ஏன்டா இங்க நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க ஊர் சுத்த போறீங்களே என்றார்.
என்ன மாமா விளையாடுறீங்களா? எங்கள பாத்தா என்ன ஊரு சுத்துறவன் போலயா தெரியுது என்கவும்,இத என் வாயில நான் வேற சொல்லனுமாடா?.
அப்படி இரண்டு துரையும் எந்த நாட்டு அதிபராக பார்க்க போறீங்கள்?.
போகும்போதே எங்க போறீங்கன்னு கேட்பது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா மாமா என்கவும் இதெல்லாம் நல்லா பேசுடா விளக்கெண்ண பயலே என்று பல்லை கடித்தார்.
அப்பொழுது ஹாரன் சத்தம் கேட்கவும் மச்சான் வந்துட்டான் சரி கொஞ்சம் வேலை இருக்கு நாங்க வெளில போயிட்டு வரோம் என்றவர்கள் அவர் பதிலை எதிர்பார்க்காமல் ஜானும் வேலுவும் வேகமாக வெளியே போய் கதிரின் காரில் ஏறிக்கொள்ள அப்பா இப்பதாண்டா மூச்சு விடுற போல இருக்கு...மிலிட்டரி கிட்ட மாட்டிகிட்டு படாத பாடு என்று சொல்லிய வேலு கொஞ்சம் ஏசிய ஆன் பண்ணு மச்சி முடியல என்றான். ..
ஏண்டி நான் ஒரு மனுஷன் பேசிட்டு இருக்கேன் கொஞ்சமாச்சும் தடிமாடுங்க என்னை மதிக்கிறீர்களா? அவனுங்க பாட்டுல கிளம்பி போறாங்களே என்று கிச்சன்ல இருக்கும் மனைவியிடம் சொல்ல,அதற்கு ஜூலியோ எல்லாரும் இருக்கும்போது கத்தாதீங்க என்றார்.
ஏண்டி எனக்கு என்ன பயமா? என்று லாரன்ஸ் முறைக்க யாருக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டு சமையல் வேலை பார்க்க அதானே அவனுங்களுக்கு தானடி சப்போர்ட் பண்ணுவ என்று பல்லை கடித்துக் கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டார்..
டிசைனிங் பண்ணிக் கொண்டிருந்த தாமரையின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்க டேபிள் மேல் இருந்த போனை எடுத்து பார்க்கவும் அதில் அத்தை என்று வந்தது.
அட்டென்ட் பண்ணியவள் சொல்லுங்கத்தை..எப்படி இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா மெடிசன் எல்லாம் ரெகுலரா எடுத்துகிறீர்களா என்று கேட்டாள்...
ஏஞ்சல் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க என்னோட குட்டீஸ் எப்படி இருக்காங்க? என்க...
நல்லா இருக்காங்க அத்தை என்று சிரித்தாள்.அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்?.
ஓஓஓ சொல்லுங்கத்தை..ஏதோ பெரிய விஷயம் அதும் நல்ல விஷயம் போல இருக்கு என்கவும் ஆமாம் என்றவர் உங்க மாமா பூனால இருந்து வந்திருக்காரு என்றார்.
வாவ் நிஜமாவா என்றாள்....ஏய் போக்கிரி பொய் சொல்லாதே..என்கிட்ட நடிக்கிறியா அவர் வந்தது உனக்கு தெரியாதா என்கவும், சிரித்துக்கொண்ட தாமரையோ தெரியுமே என்றாள்.
அதைவிட இன்னொரு விஷயம் தெரியுமா மாறனுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சு என்க...என்னங்கத்தை சொல்றீங்க அந்த சுடுதண்ணி வேற இஷ்டத்திற்கு இன்னும் கத்துமே?...
கொழுப்பு தான்..என் பையன பத்தி என்கிட்டே சொல்ற என்க,பாருடா என்ன விட இப்ப உங்களுக்கு பையன் தான் முக்கியமா போயிடுச்சு என்று செல்லமாக கோபப்பட்டாள்...
டேய் ஏஞ்சல் ஆயிரம் பேர் இருந்தாலும் என் ஏஞ்சல் போல யாருமே வராதுடா என்றவர் நடந்ததெல்லாம் சொல்லுவதை கேட்டவள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்கத்தை என்றாள்.
நானும் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை...லீலாவை நினைத்தா தான் கவலையாக இருக்கென்று வினிதா சொல்ல...
அக்கா ரொம்ப நல்லவங்க அத்தை.நீங்க ஒன்னும் இதை நினைத்து கவலைப்படாதீங்க.அங்கிள் சொன்ன போல மதன் அண்ணா பேசி அக்காவுக்கு புரிய வைப்பாங்க...
அப்படி நடந்தால் நல்லது ஏஞ்சல்..உங்க மாமாவுக்கும் மனசுல ஒரு பெரிய குற்ற உணர்ச்சி இருந்துச்சி.
ஆமாத்தை உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு நான் அங்கு இருக்கிற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருந்தாரு போன்ல பேசும்போது எல்லாம் இந்த வார்த்தை தான் சொல்லுவாரு...ஆனா சூழ்நிலை அப்படி இருக்கே ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தன்னோட மனசுல இருக்கிறது சொல்ல முடியாமல் போயிடுச்சு..
இதுல யாரை குற்றம் சொல்லுவது சொல்லுங்க என்கவும் அதை நான் புரிஞ்சுகிட்டேன் டி. உங்க மாமா தான் ரொம்ப வருத்தப்பட்டு உடம்பு கெடுத்து விட்டார் என்றார்.
பார்ரா என்று சிரித்தவள்... வீட்டுக்காரர் மேலயும் ரொம்ப அக்கறையோ என்கவும் பின்னே இருக்காதா...
ஆயிரம் இருந்தாலும் என் புருஷன் ஆச்சே என்று வினிதா சொல்ல,அடேங்கப்பா இங்க என்னென்னமோ நடக்குதுடி தாமரை உனக்கு தான் ஒண்ணும் தெரியல என்று சிரித்தாள்...
மேலும் சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு வினிதா போனை வைக்க தாமரைக்கு அவர் சொன்ன விஷயத்தை கேட்டு சந்தோஷம் தாங்கவில்லை.
மறுநாள் ஜான் லண்டனுக்கு போவதால் இன்று மதிய உணவு நம்ம வீட்டில் தான் என்று எல்லாரையும் பெருமாள் வர வைத்திருந்தார்.
ஆண்கள் ஒரு பக்கம் அவர்கள் போன கதை வந்த கதை பேசிக் கொண்டிருக்க, பெண்களோ கிச்சனில் ஆளுக்கு ஒரு வேலையாக சமையல் வேலையில் பிஸியாக இருந்தனர்.
இதோட பத்து நாள் ஆகுது...தன்னவள் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று வருத்தமாக இருந்த வேலு எப்படியாவது இன்னைக்கு கெஞ்சி கூத்தாடியாவது அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் செல்வியை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்...
அல்லியும் செல்வியும் குரூப் ஸ்டடி பண்ணிக் கொண்டிருப்பது தெரியாமல் தன்னவளை இங்கே தேடிக் கொண்டிருந்தான்.எங்க தான் போனாள் நம்ப பொண்டாட்டி என்று புலம்பி கொண்டு வீட்டுக்குள் வர, அவனைப் பார்த்த வளவனோ ஏற்கனவே கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு இப்ப கன்ஃபார்ம் பண்ணிட்டேன் மாமா என்றான்..
என்னடா என்க...இல்லை நீ பைத்தியமானு நினைச்சுட்டு இருந்தேன் கன்ஃபார்ம் நீ பைத்தியம் தான் என்கவும் மானங்கெட்டு போயிடும் மரியாதை போடா..
இருக்கிற கடுப்பில் நீ வேற எரிச்ச மூட்டாத என்று சொல்லிக் கொண்டு கிச்சனுக்கு போகும்போது இன்னும் அந்த ரசத்தையும் அப்பளத்தையும் பொறித்து விட்டால் சாப்பாடு கொடுத்துடலாம்...தாமரை அல்லிக்கு போன் பண்ணி ரெண்டு பேரையும் சாப்பிட வர சொல்லு என்கவும் அது வேலுவின் காதில் விழுந்தது...
ஓ அங்க இருக்கிறாளா என்றவன் ரைட்டு அங்க போயிட வேண்டியதுதான் என்று அப்படியே பேசிக்கொண்டே வெளியில் வந்தவன் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்க்க அவர்களோ பேச்சில் தீவிரமாக இருக்கவும் வண்டியை எடுத்துக்கொண்டு தனது சித்தி வீட்டை நோக்கி சென்றான்...
சிறிது நிமிடத்திலேயே வீட்டின் முன்னால் வந்து வண்டியை நிறுத்திவிட்டு அல்லி அல்லி என கூப்பிட்டுக் கொண்டு வீட்டிற்குள் வர...படித்துக் கொண்டிருந்தவர்கள் காதில் வேலுவின் குரல் விழவும், அண்ணா இங்க ரூம்ல தான் இருக்கிறேன் வா ணா என்றாள்.
செல்வியோ கையில் இருக்கும் புத்தகத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்க வாசல் படியில் வந்து நின்றவன் சாப்பிட வரலையா டா என்க..
அம்மா சொல்லுச்சு ணா..
ரெடி ஆன பிறகு போன் பண்றேன் என்கும் போது வீட்டில் இருக்கும் போனுக்கு கால் வர இதோ அக்காவே பண்ணிடுச்சு ணா என்று அட்டென்ட் பண்ணியவள் சொல்லுக்கா என்க சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
செல்வி இரு நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன். இப்படியே வந்தேனா உன் அண்ணன் ஓவரா ஓட்டி உசுர வாங்கிட்டு வாரு என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றாள்.
இப்பொழுது செல்வியும் வேலுவும் தான் அங்கு இருந்தனர்.நேராக அவளை நோக்கி வந்தான். செல்வியோ உக்காந்த வாக்கில் இருந்தாளே தவிர நிமிரவில்லை.
நெருக்கமாய் வந்து நின்றவன் எட்டி அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன் அங்கிருந்து சுவற்றில் சாய்த்து இன்னும் உனக்கு கோபம் போகலையா என்று தன் வருங்கால மனைவியின் உதட்டை பிடித்து திருக அவளோ வலியில் முகத்தை சுளித்தவள் தனது கைகளால் மாமனை தள்ள ஒரு இஞ்ச் கூட வேலுவை நகர்த்த முடியவில்லை...ஓஓஓ விஜயசாந்தினு நெனப்பாக்கும் என்று சொல்லி சிரித்தான்...
செல்லம் மாமா ஏதோ தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுடி உன்கிட்ட பேசாம எனக்கு பைத்தியம் பிடிச்ச போல இருக்குடி...எத்தனை அடி வேணும்னாலும் அடிச்சிக்கோடி.ஆனா இப்படி அமைதியாக இருந்து என்னை கொல்லாதே.. சத்தியமா என்னால முடியல என்று வருத்தமாக செல்வியிடம் வேலு கெஞ்சி கொண்டிருக்க அவளோ முறைத்து பார்த்தாள்..
என்னடி உனக்கு அடிக்கணுமா சரி இந்தா அடிச்சிக்கோ என்கவும் அவனிடம் இருந்து சற்று ஒரு அடி தள்ளிப் போய் நின்றவள் அல்லி வராளா என்று எட்டி பார்த்துவிட்டு தனது மாமனை ஓங்கி நாலு அறை அறைந்தாள்.
இப்படி செல்வி அறைவாள் என்பதை எதிர்பார்க்காத வேலு ஒரு பேச்சுக்கு சொன்னா செஞ்சுட்டாளே சண்டால சிறுக்கி என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்
வேலுவை அடித்தவளோ வேகமாக தனது மாமனையே கட்டிக்கொண்டு எப்படி மாமா என்கிட்ட போய் இப்படி ஒரு கேள்வியை உன்னால் கேட்க முடிந்தது நீ என் உசுருன்னு இன்னமுமா அது உனக்கு புரியலையா என்று கதறி அழுதாள்.
தன்னவள் அழுவதை தாங்காதவன் அவள் கன்னத்தை துடைத்து விட்டு எண்ணற்ற முத்தங்களை பரிசாக கொடுத்தவன் தங்கச்சி வர்றதுக்குள்ள இங்க இருந்து நான் போய்டுறேண்டி இல்லன்னா தப்பா நினைச்சுக்கும்டி...
சரி சீக்கிரம் ரெண்டு பேர் சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்....
நள்ளிரவு கடந்தும் கணவன் வீட்டிற்கு வராததை பார்த்த தாமரையோ செம வெறியில் இருந்தாள்.
மதியம் கிளம்பி போனவன் தான் இன்னும் வீட்டுக்கு வந்து சேரவில்லை எங்க தான் இந்த மனுஷன் போனான் வரட்டும் என்று திட்டிக் கொண்டிருக்க அவள் போனிற்கு கால் வந்தது.
எடுத்துப் பார்க்க அவள் புருஷனாக இருக்கவும் அட்டென்ட் பண்ணியவள் சொல்லுங்க என்க பால்கனி கதவைத் திறடி இங்கதான் நின்னுட்டு இருக்கேன் என்றான்.
எழுந்து போய் கதவைத் திறக்க உள்ளே வந்து தாழ்ப்பாள் போட்டவன் செல்லம் சாப்டியா டா இவ்ளோ நேரம் தூங்காம இருக்க லைட் எரிஞ்சிட்டே இருக்கே என்க..
ஆமா நீ எங்க போன திடீர்னு கிளம்பி போன??திருட்டு பய போல இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வரியே இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று முறைத்தாள்...
வாடி..அடுத்தது நம்ம கிளாஸ்கு தான் ஹால் டிக்கெட் தராங்கள் என்று திட்டிக்கொண்டே செல்வி முன்னாடியே போக அல்லியோ திரும்பி பார்த்துக் கொண்டே அவள் பின்னாடியே சென்றாள்...
தலையை கோதி சிரித்துக் கொண்ட ஜானும் அங்கிருந்த பைக்கில் ஏறி வீட்டிற்கு போனான்.
ஹாலில் உட்கார்ந்திருந்த லாரன்ஸ் உள்ளே வரும் மகனை தான் முறைத்துப் பார்த்தார்.தந்தையின் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்து என்னவாம் என்றவாறு அவருக்கு எதிரில் இருந்தே சோபாவில் போய் உட்கார்ந்தான்...
அவசியம் இப்ப நீ லண்டன் போய் தான் ஆகணுமாடா என்றார்.அய்யோ அப்பாஆஆ...மூணு மாசம் ப்ராஜெக்ட் பல கோடி ரூபாய் வரும் என்க...ஏண்டா நமகிட்ட இல்லாத பணமா என்று லாரன்ஸ் கத்தினார்..
அந்த நேரம் அடேய் பனைமரம் இன்னும் என்னடா பண்ற என்றவாறு உள்ளே வந்த வேலுவோ அங்கிருந்த லாரன்ஸ் பார்த்துவிட்டு ஆத்தாடி மிலிட்டரி என்று வெளியில் ஓடப் போக டேய் வாடா இங்கு என்றார்.
என்ன மாமா என்கவும் ஏன் எருமை மாடுகளே,ரெண்டு எருமை மாடும் இந்த எருமை மாடு கூடத்தான் சுத்திட்டு இருக்கீங்க அவனை எதுக்குடா இப்போ வெளிநாடு அனுப்புறீங்க என்க...
வாய மூடுங்க மாமா எனக்கு கடுப்பு வந்துரும் சொல்லிட்டேன் என்க...என்னடா சொல்ற என்று லாரன்ஸ் முறைக்க, அய்யோ மாமா வெயில வந்தது கடுப்பா இருக்குன்னு சொன்னேன்..இருங்க அத்தை கிட்ட ஒரு டம்ளர் மோர் குடிச்சிட்டு வரேன் என்று கிச்சனிற்குள் போனவன் அங்க உன் புருஸ் கரகாட்டம் ஆடுறாரு...நீ சோறு ஆக்குறியேத்தை..
எப்படி தான் இந்த மனுஷன் கூட இத்தனை வருஷகாலமாய் குடும்பம் பண்ணுன என்று வேலு கேட்க,இதுக்கப்புறம் வேதனைப்பட்டு என்ன வேலு பண்றது என்று சிரித்தவர் மருமகனுக்கு ஜில்லென்று மோரை கொடுக்க வாங்கி குடித்துக்கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்தவன் மாமா நீங்க கொஞ்சம் குடிக்கிறீங்களா?.
சூட்டுக்கு ரொம்ப நல்லது என்க...அடேய் துப்பாக்கி எடுத்தேன் எங்க சுடுவனு எனக்கே தெரியாது என்றார்..
யோசிச்சு நீங்க ஒரு முடிவு பண்ணுங்க. சரி வா எரும மாடு எவ்வளவு நேரம் தான் உனக்காக உட்கார்ந்து இருக்கிறது என ஜானை திட்ட...
ஏன்டா இங்க நான் என்ன பேசிட்டு இருக்கேன் நீங்க ஊர் சுத்த போறீங்களே என்றார்.
என்ன மாமா விளையாடுறீங்களா? எங்கள பாத்தா என்ன ஊரு சுத்துறவன் போலயா தெரியுது என்கவும்,இத என் வாயில நான் வேற சொல்லனுமாடா?.
அப்படி இரண்டு துரையும் எந்த நாட்டு அதிபராக பார்க்க போறீங்கள்?.
போகும்போதே எங்க போறீங்கன்னு கேட்பது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா மாமா என்கவும் இதெல்லாம் நல்லா பேசுடா விளக்கெண்ண பயலே என்று பல்லை கடித்தார்.
அப்பொழுது ஹாரன் சத்தம் கேட்கவும் மச்சான் வந்துட்டான் சரி கொஞ்சம் வேலை இருக்கு நாங்க வெளில போயிட்டு வரோம் என்றவர்கள் அவர் பதிலை எதிர்பார்க்காமல் ஜானும் வேலுவும் வேகமாக வெளியே போய் கதிரின் காரில் ஏறிக்கொள்ள அப்பா இப்பதாண்டா மூச்சு விடுற போல இருக்கு...மிலிட்டரி கிட்ட மாட்டிகிட்டு படாத பாடு என்று சொல்லிய வேலு கொஞ்சம் ஏசிய ஆன் பண்ணு மச்சி முடியல என்றான். ..
ஏண்டி நான் ஒரு மனுஷன் பேசிட்டு இருக்கேன் கொஞ்சமாச்சும் தடிமாடுங்க என்னை மதிக்கிறீர்களா? அவனுங்க பாட்டுல கிளம்பி போறாங்களே என்று கிச்சன்ல இருக்கும் மனைவியிடம் சொல்ல,அதற்கு ஜூலியோ எல்லாரும் இருக்கும்போது கத்தாதீங்க என்றார்.
ஏண்டி எனக்கு என்ன பயமா? என்று லாரன்ஸ் முறைக்க யாருக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டு சமையல் வேலை பார்க்க அதானே அவனுங்களுக்கு தானடி சப்போர்ட் பண்ணுவ என்று பல்லை கடித்துக் கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்து கொண்டார்..
டிசைனிங் பண்ணிக் கொண்டிருந்த தாமரையின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்க டேபிள் மேல் இருந்த போனை எடுத்து பார்க்கவும் அதில் அத்தை என்று வந்தது.
அட்டென்ட் பண்ணியவள் சொல்லுங்கத்தை..எப்படி இருக்கீங்க உடம்பு நல்லா இருக்கா மெடிசன் எல்லாம் ரெகுலரா எடுத்துகிறீர்களா என்று கேட்டாள்...
ஏஞ்சல் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க என்னோட குட்டீஸ் எப்படி இருக்காங்க? என்க...
நல்லா இருக்காங்க அத்தை என்று சிரித்தாள்.அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்?.
ஓஓஓ சொல்லுங்கத்தை..ஏதோ பெரிய விஷயம் அதும் நல்ல விஷயம் போல இருக்கு என்கவும் ஆமாம் என்றவர் உங்க மாமா பூனால இருந்து வந்திருக்காரு என்றார்.
வாவ் நிஜமாவா என்றாள்....ஏய் போக்கிரி பொய் சொல்லாதே..என்கிட்ட நடிக்கிறியா அவர் வந்தது உனக்கு தெரியாதா என்கவும், சிரித்துக்கொண்ட தாமரையோ தெரியுமே என்றாள்.
அதைவிட இன்னொரு விஷயம் தெரியுமா மாறனுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருச்சு என்க...என்னங்கத்தை சொல்றீங்க அந்த சுடுதண்ணி வேற இஷ்டத்திற்கு இன்னும் கத்துமே?...
கொழுப்பு தான்..என் பையன பத்தி என்கிட்டே சொல்ற என்க,பாருடா என்ன விட இப்ப உங்களுக்கு பையன் தான் முக்கியமா போயிடுச்சு என்று செல்லமாக கோபப்பட்டாள்...
டேய் ஏஞ்சல் ஆயிரம் பேர் இருந்தாலும் என் ஏஞ்சல் போல யாருமே வராதுடா என்றவர் நடந்ததெல்லாம் சொல்லுவதை கேட்டவள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்கத்தை என்றாள்.
நானும் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை...லீலாவை நினைத்தா தான் கவலையாக இருக்கென்று வினிதா சொல்ல...
அக்கா ரொம்ப நல்லவங்க அத்தை.நீங்க ஒன்னும் இதை நினைத்து கவலைப்படாதீங்க.அங்கிள் சொன்ன போல மதன் அண்ணா பேசி அக்காவுக்கு புரிய வைப்பாங்க...
அப்படி நடந்தால் நல்லது ஏஞ்சல்..உங்க மாமாவுக்கும் மனசுல ஒரு பெரிய குற்ற உணர்ச்சி இருந்துச்சி.
ஆமாத்தை உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு நான் அங்கு இருக்கிற வரைக்கும் சொல்லிக்கிட்டே இருந்தாரு போன்ல பேசும்போது எல்லாம் இந்த வார்த்தை தான் சொல்லுவாரு...ஆனா சூழ்நிலை அப்படி இருக்கே ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தன்னோட மனசுல இருக்கிறது சொல்ல முடியாமல் போயிடுச்சு..
இதுல யாரை குற்றம் சொல்லுவது சொல்லுங்க என்கவும் அதை நான் புரிஞ்சுகிட்டேன் டி. உங்க மாமா தான் ரொம்ப வருத்தப்பட்டு உடம்பு கெடுத்து விட்டார் என்றார்.
பார்ரா என்று சிரித்தவள்... வீட்டுக்காரர் மேலயும் ரொம்ப அக்கறையோ என்கவும் பின்னே இருக்காதா...
ஆயிரம் இருந்தாலும் என் புருஷன் ஆச்சே என்று வினிதா சொல்ல,அடேங்கப்பா இங்க என்னென்னமோ நடக்குதுடி தாமரை உனக்கு தான் ஒண்ணும் தெரியல என்று சிரித்தாள்...
மேலும் சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு வினிதா போனை வைக்க தாமரைக்கு அவர் சொன்ன விஷயத்தை கேட்டு சந்தோஷம் தாங்கவில்லை.
மறுநாள் ஜான் லண்டனுக்கு போவதால் இன்று மதிய உணவு நம்ம வீட்டில் தான் என்று எல்லாரையும் பெருமாள் வர வைத்திருந்தார்.
ஆண்கள் ஒரு பக்கம் அவர்கள் போன கதை வந்த கதை பேசிக் கொண்டிருக்க, பெண்களோ கிச்சனில் ஆளுக்கு ஒரு வேலையாக சமையல் வேலையில் பிஸியாக இருந்தனர்.
இதோட பத்து நாள் ஆகுது...தன்னவள் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று வருத்தமாக இருந்த வேலு எப்படியாவது இன்னைக்கு கெஞ்சி கூத்தாடியாவது அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் செல்வியை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்...
அல்லியும் செல்வியும் குரூப் ஸ்டடி பண்ணிக் கொண்டிருப்பது தெரியாமல் தன்னவளை இங்கே தேடிக் கொண்டிருந்தான்.எங்க தான் போனாள் நம்ப பொண்டாட்டி என்று புலம்பி கொண்டு வீட்டுக்குள் வர, அவனைப் பார்த்த வளவனோ ஏற்கனவே கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு இப்ப கன்ஃபார்ம் பண்ணிட்டேன் மாமா என்றான்..
என்னடா என்க...இல்லை நீ பைத்தியமானு நினைச்சுட்டு இருந்தேன் கன்ஃபார்ம் நீ பைத்தியம் தான் என்கவும் மானங்கெட்டு போயிடும் மரியாதை போடா..
இருக்கிற கடுப்பில் நீ வேற எரிச்ச மூட்டாத என்று சொல்லிக் கொண்டு கிச்சனுக்கு போகும்போது இன்னும் அந்த ரசத்தையும் அப்பளத்தையும் பொறித்து விட்டால் சாப்பாடு கொடுத்துடலாம்...தாமரை அல்லிக்கு போன் பண்ணி ரெண்டு பேரையும் சாப்பிட வர சொல்லு என்கவும் அது வேலுவின் காதில் விழுந்தது...
ஓ அங்க இருக்கிறாளா என்றவன் ரைட்டு அங்க போயிட வேண்டியதுதான் என்று அப்படியே பேசிக்கொண்டே வெளியில் வந்தவன் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்க்க அவர்களோ பேச்சில் தீவிரமாக இருக்கவும் வண்டியை எடுத்துக்கொண்டு தனது சித்தி வீட்டை நோக்கி சென்றான்...
சிறிது நிமிடத்திலேயே வீட்டின் முன்னால் வந்து வண்டியை நிறுத்திவிட்டு அல்லி அல்லி என கூப்பிட்டுக் கொண்டு வீட்டிற்குள் வர...படித்துக் கொண்டிருந்தவர்கள் காதில் வேலுவின் குரல் விழவும், அண்ணா இங்க ரூம்ல தான் இருக்கிறேன் வா ணா என்றாள்.
செல்வியோ கையில் இருக்கும் புத்தகத்தில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்க வாசல் படியில் வந்து நின்றவன் சாப்பிட வரலையா டா என்க..
அம்மா சொல்லுச்சு ணா..
ரெடி ஆன பிறகு போன் பண்றேன் என்கும் போது வீட்டில் இருக்கும் போனுக்கு கால் வர இதோ அக்காவே பண்ணிடுச்சு ணா என்று அட்டென்ட் பண்ணியவள் சொல்லுக்கா என்க சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
செல்வி இரு நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுறேன். இப்படியே வந்தேனா உன் அண்ணன் ஓவரா ஓட்டி உசுர வாங்கிட்டு வாரு என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றாள்.
இப்பொழுது செல்வியும் வேலுவும் தான் அங்கு இருந்தனர்.நேராக அவளை நோக்கி வந்தான். செல்வியோ உக்காந்த வாக்கில் இருந்தாளே தவிர நிமிரவில்லை.
நெருக்கமாய் வந்து நின்றவன் எட்டி அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன் அங்கிருந்து சுவற்றில் சாய்த்து இன்னும் உனக்கு கோபம் போகலையா என்று தன் வருங்கால மனைவியின் உதட்டை பிடித்து திருக அவளோ வலியில் முகத்தை சுளித்தவள் தனது கைகளால் மாமனை தள்ள ஒரு இஞ்ச் கூட வேலுவை நகர்த்த முடியவில்லை...ஓஓஓ விஜயசாந்தினு நெனப்பாக்கும் என்று சொல்லி சிரித்தான்...
செல்லம் மாமா ஏதோ தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுடி உன்கிட்ட பேசாம எனக்கு பைத்தியம் பிடிச்ச போல இருக்குடி...எத்தனை அடி வேணும்னாலும் அடிச்சிக்கோடி.ஆனா இப்படி அமைதியாக இருந்து என்னை கொல்லாதே.. சத்தியமா என்னால முடியல என்று வருத்தமாக செல்வியிடம் வேலு கெஞ்சி கொண்டிருக்க அவளோ முறைத்து பார்த்தாள்..
என்னடி உனக்கு அடிக்கணுமா சரி இந்தா அடிச்சிக்கோ என்கவும் அவனிடம் இருந்து சற்று ஒரு அடி தள்ளிப் போய் நின்றவள் அல்லி வராளா என்று எட்டி பார்த்துவிட்டு தனது மாமனை ஓங்கி நாலு அறை அறைந்தாள்.
இப்படி செல்வி அறைவாள் என்பதை எதிர்பார்க்காத வேலு ஒரு பேச்சுக்கு சொன்னா செஞ்சுட்டாளே சண்டால சிறுக்கி என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்
வேலுவை அடித்தவளோ வேகமாக தனது மாமனையே கட்டிக்கொண்டு எப்படி மாமா என்கிட்ட போய் இப்படி ஒரு கேள்வியை உன்னால் கேட்க முடிந்தது நீ என் உசுருன்னு இன்னமுமா அது உனக்கு புரியலையா என்று கதறி அழுதாள்.
தன்னவள் அழுவதை தாங்காதவன் அவள் கன்னத்தை துடைத்து விட்டு எண்ணற்ற முத்தங்களை பரிசாக கொடுத்தவன் தங்கச்சி வர்றதுக்குள்ள இங்க இருந்து நான் போய்டுறேண்டி இல்லன்னா தப்பா நினைச்சுக்கும்டி...
சரி சீக்கிரம் ரெண்டு பேர் சாப்பிட வாங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்....
நள்ளிரவு கடந்தும் கணவன் வீட்டிற்கு வராததை பார்த்த தாமரையோ செம வெறியில் இருந்தாள்.
மதியம் கிளம்பி போனவன் தான் இன்னும் வீட்டுக்கு வந்து சேரவில்லை எங்க தான் இந்த மனுஷன் போனான் வரட்டும் என்று திட்டிக் கொண்டிருக்க அவள் போனிற்கு கால் வந்தது.
எடுத்துப் பார்க்க அவள் புருஷனாக இருக்கவும் அட்டென்ட் பண்ணியவள் சொல்லுங்க என்க பால்கனி கதவைத் திறடி இங்கதான் நின்னுட்டு இருக்கேன் என்றான்.
எழுந்து போய் கதவைத் திறக்க உள்ளே வந்து தாழ்ப்பாள் போட்டவன் செல்லம் சாப்டியா டா இவ்ளோ நேரம் தூங்காம இருக்க லைட் எரிஞ்சிட்டே இருக்கே என்க..
ஆமா நீ எங்க போன திடீர்னு கிளம்பி போன??திருட்டு பய போல இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வரியே இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று முறைத்தாள்...