Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 640
- Thread Author
- #1
வழக்கம்போல் தூங்கி எழுந்து குளித்து தயாராகி கீழே வந்த தாமரை வீட்டினர் பரபரப்பாக இருப்பதை பார்த்தவள் எதுக்கு எல்லாரும் இவ்வளவு பரபரப்பாக இருக்கிறார்கள்?
அப்படி என்ன விசேஷம்?
ஒரு வேலை கெஸ்ட் யாராவது வராங்களா என்று யோசனையோடு கிச்சனிற்கு போக அங்கே ராதா சீதாவோடு அவர்கள் பங்காளி வீட்டில் இருந்த இரண்டு மருமகள்களும் வேலை செய்து கொண்டிருந்தனர்..
வாங்கத்தை நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்க நாங்க நல்லா இருக்கோம் மா நீயும் எங்க பேர பிள்ளை நலமா என்றனர்..
எப்ப வந்தீங்கத்தை என்றவளுக்கு நாங்க வந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது மா...ராதா தாமரைக்கு குடிக்க அந்த பால குடு என்று சொல்லியபடியே தேங்காய் திருவி கொண்டிருந்தார்.
சரிங்க அக்கா என்றவர் தனது ஓப்படியார் முறையுள்ளவர் தாமரைக்காக கேழ்வரகு பாலை காய்ச்சி வைத்திருப்பதை எடுத்து சூடு சரியா இருக்கா என்று பார்த்து விட்டு மருமகளிடம் கொடுக்க அதை வாங்கியவள் ராகி மால்ட் என்க...
ஆமா...அக்கா தான் செஞ்சாங்க என்றார்.. அப்பொழுது பாப்பா என்று மயிலாவின் குரலை கேட்டு அதிர்ந்து போய் திரும்பிய தாமரை அம்மா நீங்க எப்போது வந்தீர்கள் என்கவும் நாங்கள் காலையிலேயே வந்துட்டோம் என்றார்..
எதேஏஏ வந்துட்டீங்களா அத்தையும் வந்துருக்காங்களா என்கவும் ஆமா.அக்கா கோயிலுக்கு போய் இருக்காங்க என்றவர் நல்லா இருக்கிறியாடா என்று கேட்க நான் நல்லா இருக்கேன் என்று இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டு இருந்தனர்.
என்ன விசேஷம் ஒன்னும் புரியலையே என்று யோசனையோடு இருந்த தாமரை, கணவன் கூப்பிடும் சத்தம் கேட்டு இதோ வரேன் என்று சொல்லிக் கொண்டு மாடிப்படி ஏறி ரூமிற்கு வந்தவளிடம் ஒரு கவரை நீட்டினான்..
என்ன மாமா என்று கேட்க இதை கட்டிக்கிட்டு ரெடியாகி கீழே வா என்கவும்,வெளியில போறோமா மாமா என்றாள்..
ஆமாம் ஒரு முக்கியமான விசேஷம் அதுக்காக நம்ம ரெண்டும் பேரும் கலந்து கொள்கிறோம் என்று சொல்ல இதை நேற்றே சொல்லி இருக்கலாமே என்க... ஏன்டி எப்ப சொன்னாலும் நீயும் நானும் தான் அதுல கலந்துக்கணும்.
அதான் இப்ப சொல்லிட்டேனே போ போ ரெடி ஆகி வா என்று சொல்லிவிட்டு ஈர தலையை துவட்டிக்கி கொண்டு கபோர்ட்டில் இருந்து அவனுக்கு தேவையான டிரஸ் எடுத்து போடலானான்...
தாமரையும் கணவன் சொன்னது போல புது புடவை கட்டி பீரோவில் இருந்த நகைகளும் எடுத்து போட்டுக் கொண்டு கீழே வந்தவள் அங்கு தனது அம்மா வீட்டினரும் சொந்த பந்தங்கள் இருப்பதை பார்த்து வாங்க வாங்க எப்ப வந்தீங்க எல்லாரும் என்று கேட்க இப்பதான் வந்தோம் என்றனர்...
ஒரு பக்கம் 5 மாதத்துக்கு ஆன வளையல் போடுவதற்காக வள்ளி அப்பாயியும் அவருக்கு அக்கா முறையில் உள்ளவரும் முற்றத்தில் மணை போட்டு இரண்டு பக்கங்களிலும் குத்து விளக்கில் திரி போட்டுக் கொண்டிருக்க நம்ம வீட்டுல தான் விசேஷமா?. என்ன விசேஷமா இருக்கும்?ஒன்னும் புரியலையே என்று திரு திருவென்று முழித்தவள்,மற்றவர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.
அரை மணி நேரம் கடந்து இருக்க தாமரை கதிர் என்று வள்ளி அப்பாயின் அக்கா கூப்பிட இதோ வரேன் அப்பாயி என்றவன் மனைவியை பார்த்து வா என்று சொல்ல நம்மை ஏன் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தவள் கணவனிடம் என்ன என்று கேட்க வா என்று சொன்னான்..
என்னடா நடக்குது இங்க? .நம்மளும் இந்த வீட்ல தான் இருக்கோம் ஒண்ணுமே புரியலையே என்றவாறு அங்கே அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்திற்கு போக,அங்கே தட்டில் வளையலும் மற்ற பொருட்களை எல்லாம் இருப்பதை பார்த்தவள் நமக்கு சீர் செய்ய வந்திருக்காங்களா என்று தனது அப்பா வீட்டினரை திரும்பிப் பார்க்க அவர்களும் அவளைப் பார்த்து சிரித்தனர்...
கதிரு தாமரைக்கு பக்கத்துல உக்காந்து அந்த மாலை எடுத்து தாமரை கழுத்துல போடு, அம்மாடி தாமரை கதிருக்கு போட்டு விடு என்று சொல்லவும் அதேபோல் இருவரும் செய்தனர்.
முதல் ஆளாக குடும்பத்தில் மூத்தவர்களான வள்ளியும் அவரது அக்காவான காந்திமதி பாட்டி இருவரும் அங்கிருந்த சந்தனத்தை தொட்டு இருவர் கையிலும் தடவி விட்டு கன்னத்திலும் தடவி நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் அதே போல் குங்குமத்தையும் எடுத்து போட்டு வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு கையில் வளையளை போட்டவர்கள் அங்கிருந்த சாதத்தில் கொஞ்சம் அள்ளி தாமரைக்கும் கதிருக்கும் ஊட்டி விட்டு பூவும் மஞ்சளும் கலந்த அரிசியை அள்ளி இருவர் தலையிலும் தூவி ஆசிர்வாதம் செய்து கொண்டு சென்றனர்...
அதன் பின்னர் மற்ற சுமங்கலி பெண்களும் வரிசையாக வந்து அதேபோல் சடங்கை செய்தார்கள்...இதை எதிர்பாக்காத தாமரையோ சந்தோஷத்தில் கண்கலங்கி விட்டாள்.
வந்தவர்களுக்கெல்லாம் வீட்டிற்குள்ளேயே பந்தி பரிமாறினர்.அனைவரும் வயிறார சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுத்த கிஃப்ட் பொருள்களோடு அங்கிருந்து சென்றனர்..
இப்பொழுது வீட்டினர் மட்டும் இருந்தனர். சொல்லவே இல்லையேம்மா என்று தாமரை கேட்க, நாங்கதான் அன்னைக்கே வந்தோமே மா...வீட்ல சொல்லியிருப்பாங்கன்னு இருந்தோம் என்று பார்வதி சொல்ல இதுவரைக்கும் யாருமே ஒரு வார்த்தை சொல்லவே இல்லை ம்மா என்றாள்.
சரி உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் நான் சொல்ல வேணாம் என்று சொன்னேன் என்று கதிர் சொல்ல அவளோ கணவனை முறைத்து பார்த்தாள்...
அதுக்குன்னு இப்படியா என்று கேட்க சர்ப்ரைஸ் என்றாலா என்ன?.இது தானடி என்க..ம்ம் நல்லா இருந்தது மாமா என்று சிரித்துக் கொண்டே சொல்லியவள் மேலும் சிறிது நேரம் அவர்களும் இருந்து பேசி விட்டு அங்கிருந்து சென்று விட அத்தை நான் போய் வேற புடவை கட்டிக்கவா?.
இவர் வேற ஏதோ பங்க்ஷனுக்கு போறேன்னு சொல்லி இந்த புடவை கொடுத்துட்டாரு கசகசன்னு இருக்கு என்கவும் அவளின் நிலைமையை புரிந்து கொண்டு ராதாவும் பார்த்து போ தாமரை...
புடவையை தூக்கிட்டு நட என்று சொல்ல சரிங்கத்தை என்றபடியே முன்பக்கம் கொசுவத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டே மாடியில் இருக்கும் தனது அறைக்குள் வந்து கதவை தாழ்ப்பாள் போட கதவு தட்டும் சத்தம் கேட்டது...
அதானே தாழ்ப்பாள் போட்டதும் அந்த கரடி மனுஷன் வந்துருவாரு என்று சிரித்துக் கொண்டே கதவைத் திறக்க அங்கிருந்த கதிரோ என்னடி மனசுக்குள்ளே திட்டு இருப்பியே வந்துட்டான்னு சரிதானே என்றான்..
இல்லையே நான் ஒன்னும் அப்படி எல்லாம் திட்டவே இல்லையே உங்களுக்கு அப்படி தோனி இருக்கும் போல என்கவும் ஏய் உன் மானங்கெட்ட மைண்டு எப்படி எல்லாம் யோசிக்கணும் எனக்கு தெரியும்டி என்றவன் மனைவியின் இரண்டு கைகளை பிடித்து பார்க்க....
விதவிதமான வண்ணங்களில் இருக்கும் வளையல்களைப் பார்த்து அதற்கு முத்தமிட்டவன் அழகா இருக்கடி என்று சொல்லி மனைவியோடு சேர்ந்து விதவிதமான போட்டோக்கள் எடுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து கண்ணாடியின் முன்பு போய் நிறுத்தியவன் பாரு இந்த கோலத்தில் என் பொண்டாட்டி எம்புட்டு டக்கரா என்க....
தாய்மையின் பூரிப்பில் தான் அழகாய் இருப்பது தெரிந்தது. ..
சீமக்கரை...
இந்த சர்ப்ரைஸ் உனக்கு புடிச்சிருக்கா டி செல்லம் என்று கேட்க உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவே இல்லை மாமா..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லி கணவனை அணைத்துக் கொள்ள இப்படி ஏதாச்சும் நடந்தா தான் புருஷனை கட்டி பிடிக்கணும்னு உன்னோட ரூல்ஸ் புக்ல இருக்காடி என்றான்...
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என்றாள்...பின்ன தினமும் கட்டிப்புடிச்சு நாலஞ்சு முத்தத்தை கொடுத்தா நீ என்ன தேஞ்ஜா போயிடுவடி என்க...
நான் கொடுத்தா என்னா நீங்க குடுத்தா என்ன மாமா...அது தான் ஐயா மறக்காம தினமும் கொடுக்குறீங்களே அது போதாதா எங்கவும்,ஏண்டி கொடுப்பதை விட வாங்குவதில் எவ்வளவு சுகம் இருக்கு சொல்லு...
ஆமா சுகமாக தான் இருக்கு என்று தாமரை சொல்ல அப்போ எனக்கும் வாங்கனுமென்று இருக்காதாடி என்று முறைத்துக் கொண்டே கேட்டவன் மனைவியின் கன்னத்தில் இருக்கும் சந்தனத்தை துடைத்து விட்டவன் சரி போய் டிரஸ் மாத்து...
புடவை ரொம்ப வெயிட்டா வேண்டாம் என்று சொன்னேன் ஆனா இதை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு அதனால் தான் மதுரைக்கு போய் உனக்காக வாங்கிட்டு வந்தேன் என்கவும் அடப்பாவி புருஷா நானே புடவை தயாரிக்கிறவள்.எனக்காக கடையில போய் வாங்கிட்டு வந்திருக்க இதெல்லாம் அநியாயமா இல்லையா என்க...அதுக்காக உனக்கு கொடுக்க வேண்டிய சர்ப்ரைஸை உன்கிட்டயாவது சொல்லி ரெடி பண்ண சொல்லுவாங்க கூறுகெட்ட குப்பாயி என்றான்..
ஆமா நா குப்பாயி நீ குப்புசாமி என்று தாமரை சிரிக்க நோ டி நோ உன் மாமா கதிர் என்று முறைத்தவன் நீ என் செல்ல குப்பாயிடி என்றவன் சரி சரி போ போ என்க...
அதுக்கு முதல்ல நீங்க என்ன விடனும் அப்பதானே போக முடியும் என்றாள். நான் என்ன உன்னை புடிச்சி வச்சிருக்கேன் என்று சொல்ல, ஆமாய்யா நீ என்ன புடிச்சி தான் வச்சிருக்க உன் கண்ணுல கொஞ்சம் விளக்கெண்ணெய் ஊத்திட்டு நல்லா பாரு என்கவும்...
அப்படியா என்றபடி அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க அதில் அவனோ தாமரையை அணைத்தபடி நின்று கொண்டிருந்தான்..
ஏண்டி இப்படி கண்ண கசிக்கிட்டு இருந்தாக்க ரோட்ல போற வரவன் என்னமோ நான் உன்னை கெடுத்துட்ட போல நினைக்க மாட்டாங்களா என்று ஜான் சொல்ல,அழுது கொண்டிருந்த அல்லியோ நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் அதுக்கெல்லாம் நீ சரிவர மாட்ட...நீயே ஒரு துப்பு கெட்டவன் என்க...என்னடி இப்படி சொல்ற என்று ஜான் அதிர, உண்மையை சொன்னேன் உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தைரியம் கிடையாது யா.அப்படி ஏதாச்சும் நினைத்த என் அண்ணனுங்க ரெண்டு பேரும் உன் தோலை உரிச்சிடுவாங்கைய்யா என்றாள்.
மணக்கண்ணில் வேலுவும் சிவாவும் அருவாளோடு ஓடி வருவதை நினைத்து பார்த்த ஜானுவோ ஐயய்யோ என்று தலையை உதரி அந்த நினைவை விரட்டியவன் செல்லம் மூன்று மாசம் தாண்டி...ப்ராஜெக்ட் முடித்து கொடுத்துட்டு நான் வந்துருவேன்.உன் அண்ணன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தோழனாக நான் சரியா வந்துருவேண்டி.
நீ நல்லா எக்ஸாம் எழுது.என்னால் தினமும் போன் பண்ண முடியாது கொஞ்சம் புரிஞ்சிக்க சீக்கிரம் வந்துடுறேன்,இப்படி அழுது கொண்டே இருக்காதடி..
அப்போ ஒன்னும் பண்ணட்டுமா என்க, அவளோ என்னவென்றாள்.நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன் டி..
நான் திரும்ப இந்தியா வரவரைக்கும் நீ அதை நினைச்சுட்டு இருக்கலாம் என்கவும் அதற்கு அல்லியோ என்ன ஐடியா சொல்லு யா என்றாள்.
கொஞ்சம் கிட்ட வாடி காதில் சொல்றேன் என்றான்..அப்படி என்ன ரகசியத்தை இந்த மனுஷன் சொல்ல போறான் என்று அல்லியும் தனது காதை நீட்ட,நான் உனக்கு ஜூனியர் ஜான் கொடுத்துட்டு போறேன் டி. நான் வர வரைக்கும் நீ அவனை வளர்த்து வை என்கவும் என்னயா சொன்ன என்று தனது ஹீல்ஸ் காலால் ஓங்கி ஜானின் காலில் மிதிக்க ஐயோ என்று கத்தினான்..
யோ மானங்கெட்டவனே எதுக்கு இப்படி கத்துற என்று எட்டி ஜானின் வாயை பொத்தியவள் அக்கம் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்க்க,தன்னவளின் நெருக்கமோ ஜானுக்கு குதூகலத்தை கொடுக்க எட்டி அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன் அவள் இதழில் தனது இதழை புதைத்தான்.
சிங்கப்பூர்
அப்படி என்ன விசேஷம்?
ஒரு வேலை கெஸ்ட் யாராவது வராங்களா என்று யோசனையோடு கிச்சனிற்கு போக அங்கே ராதா சீதாவோடு அவர்கள் பங்காளி வீட்டில் இருந்த இரண்டு மருமகள்களும் வேலை செய்து கொண்டிருந்தனர்..
வாங்கத்தை நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரிக்க நாங்க நல்லா இருக்கோம் மா நீயும் எங்க பேர பிள்ளை நலமா என்றனர்..
எப்ப வந்தீங்கத்தை என்றவளுக்கு நாங்க வந்து கொஞ்ச நேரம் தான் ஆகுது மா...ராதா தாமரைக்கு குடிக்க அந்த பால குடு என்று சொல்லியபடியே தேங்காய் திருவி கொண்டிருந்தார்.
சரிங்க அக்கா என்றவர் தனது ஓப்படியார் முறையுள்ளவர் தாமரைக்காக கேழ்வரகு பாலை காய்ச்சி வைத்திருப்பதை எடுத்து சூடு சரியா இருக்கா என்று பார்த்து விட்டு மருமகளிடம் கொடுக்க அதை வாங்கியவள் ராகி மால்ட் என்க...
ஆமா...அக்கா தான் செஞ்சாங்க என்றார்.. அப்பொழுது பாப்பா என்று மயிலாவின் குரலை கேட்டு அதிர்ந்து போய் திரும்பிய தாமரை அம்மா நீங்க எப்போது வந்தீர்கள் என்கவும் நாங்கள் காலையிலேயே வந்துட்டோம் என்றார்..
எதேஏஏ வந்துட்டீங்களா அத்தையும் வந்துருக்காங்களா என்கவும் ஆமா.அக்கா கோயிலுக்கு போய் இருக்காங்க என்றவர் நல்லா இருக்கிறியாடா என்று கேட்க நான் நல்லா இருக்கேன் என்று இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக்கொண்டு இருந்தனர்.
என்ன விசேஷம் ஒன்னும் புரியலையே என்று யோசனையோடு இருந்த தாமரை, கணவன் கூப்பிடும் சத்தம் கேட்டு இதோ வரேன் என்று சொல்லிக் கொண்டு மாடிப்படி ஏறி ரூமிற்கு வந்தவளிடம் ஒரு கவரை நீட்டினான்..
என்ன மாமா என்று கேட்க இதை கட்டிக்கிட்டு ரெடியாகி கீழே வா என்கவும்,வெளியில போறோமா மாமா என்றாள்..
ஆமாம் ஒரு முக்கியமான விசேஷம் அதுக்காக நம்ம ரெண்டும் பேரும் கலந்து கொள்கிறோம் என்று சொல்ல இதை நேற்றே சொல்லி இருக்கலாமே என்க... ஏன்டி எப்ப சொன்னாலும் நீயும் நானும் தான் அதுல கலந்துக்கணும்.
அதான் இப்ப சொல்லிட்டேனே போ போ ரெடி ஆகி வா என்று சொல்லிவிட்டு ஈர தலையை துவட்டிக்கி கொண்டு கபோர்ட்டில் இருந்து அவனுக்கு தேவையான டிரஸ் எடுத்து போடலானான்...
தாமரையும் கணவன் சொன்னது போல புது புடவை கட்டி பீரோவில் இருந்த நகைகளும் எடுத்து போட்டுக் கொண்டு கீழே வந்தவள் அங்கு தனது அம்மா வீட்டினரும் சொந்த பந்தங்கள் இருப்பதை பார்த்து வாங்க வாங்க எப்ப வந்தீங்க எல்லாரும் என்று கேட்க இப்பதான் வந்தோம் என்றனர்...
ஒரு பக்கம் 5 மாதத்துக்கு ஆன வளையல் போடுவதற்காக வள்ளி அப்பாயியும் அவருக்கு அக்கா முறையில் உள்ளவரும் முற்றத்தில் மணை போட்டு இரண்டு பக்கங்களிலும் குத்து விளக்கில் திரி போட்டுக் கொண்டிருக்க நம்ம வீட்டுல தான் விசேஷமா?. என்ன விசேஷமா இருக்கும்?ஒன்னும் புரியலையே என்று திரு திருவென்று முழித்தவள்,மற்றவர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லி பேசிக் கொண்டிருந்தாள்.
அரை மணி நேரம் கடந்து இருக்க தாமரை கதிர் என்று வள்ளி அப்பாயின் அக்கா கூப்பிட இதோ வரேன் அப்பாயி என்றவன் மனைவியை பார்த்து வா என்று சொல்ல நம்மை ஏன் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்தவள் கணவனிடம் என்ன என்று கேட்க வா என்று சொன்னான்..
என்னடா நடக்குது இங்க? .நம்மளும் இந்த வீட்ல தான் இருக்கோம் ஒண்ணுமே புரியலையே என்றவாறு அங்கே அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்திற்கு போக,அங்கே தட்டில் வளையலும் மற்ற பொருட்களை எல்லாம் இருப்பதை பார்த்தவள் நமக்கு சீர் செய்ய வந்திருக்காங்களா என்று தனது அப்பா வீட்டினரை திரும்பிப் பார்க்க அவர்களும் அவளைப் பார்த்து சிரித்தனர்...
கதிரு தாமரைக்கு பக்கத்துல உக்காந்து அந்த மாலை எடுத்து தாமரை கழுத்துல போடு, அம்மாடி தாமரை கதிருக்கு போட்டு விடு என்று சொல்லவும் அதேபோல் இருவரும் செய்தனர்.
முதல் ஆளாக குடும்பத்தில் மூத்தவர்களான வள்ளியும் அவரது அக்காவான காந்திமதி பாட்டி இருவரும் அங்கிருந்த சந்தனத்தை தொட்டு இருவர் கையிலும் தடவி விட்டு கன்னத்திலும் தடவி நெற்றியில் பொட்டு வைத்தவர்கள் அதே போல் குங்குமத்தையும் எடுத்து போட்டு வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு கையில் வளையளை போட்டவர்கள் அங்கிருந்த சாதத்தில் கொஞ்சம் அள்ளி தாமரைக்கும் கதிருக்கும் ஊட்டி விட்டு பூவும் மஞ்சளும் கலந்த அரிசியை அள்ளி இருவர் தலையிலும் தூவி ஆசிர்வாதம் செய்து கொண்டு சென்றனர்...
அதன் பின்னர் மற்ற சுமங்கலி பெண்களும் வரிசையாக வந்து அதேபோல் சடங்கை செய்தார்கள்...இதை எதிர்பாக்காத தாமரையோ சந்தோஷத்தில் கண்கலங்கி விட்டாள்.
வந்தவர்களுக்கெல்லாம் வீட்டிற்குள்ளேயே பந்தி பரிமாறினர்.அனைவரும் வயிறார சாப்பிட்டு விட்டு அவர்கள் கொடுத்த கிஃப்ட் பொருள்களோடு அங்கிருந்து சென்றனர்..
இப்பொழுது வீட்டினர் மட்டும் இருந்தனர். சொல்லவே இல்லையேம்மா என்று தாமரை கேட்க, நாங்கதான் அன்னைக்கே வந்தோமே மா...வீட்ல சொல்லியிருப்பாங்கன்னு இருந்தோம் என்று பார்வதி சொல்ல இதுவரைக்கும் யாருமே ஒரு வார்த்தை சொல்லவே இல்லை ம்மா என்றாள்.
சரி உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் நான் சொல்ல வேணாம் என்று சொன்னேன் என்று கதிர் சொல்ல அவளோ கணவனை முறைத்து பார்த்தாள்...
அதுக்குன்னு இப்படியா என்று கேட்க சர்ப்ரைஸ் என்றாலா என்ன?.இது தானடி என்க..ம்ம் நல்லா இருந்தது மாமா என்று சிரித்துக் கொண்டே சொல்லியவள் மேலும் சிறிது நேரம் அவர்களும் இருந்து பேசி விட்டு அங்கிருந்து சென்று விட அத்தை நான் போய் வேற புடவை கட்டிக்கவா?.
இவர் வேற ஏதோ பங்க்ஷனுக்கு போறேன்னு சொல்லி இந்த புடவை கொடுத்துட்டாரு கசகசன்னு இருக்கு என்கவும் அவளின் நிலைமையை புரிந்து கொண்டு ராதாவும் பார்த்து போ தாமரை...
புடவையை தூக்கிட்டு நட என்று சொல்ல சரிங்கத்தை என்றபடியே முன்பக்கம் கொசுவத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டே மாடியில் இருக்கும் தனது அறைக்குள் வந்து கதவை தாழ்ப்பாள் போட கதவு தட்டும் சத்தம் கேட்டது...
அதானே தாழ்ப்பாள் போட்டதும் அந்த கரடி மனுஷன் வந்துருவாரு என்று சிரித்துக் கொண்டே கதவைத் திறக்க அங்கிருந்த கதிரோ என்னடி மனசுக்குள்ளே திட்டு இருப்பியே வந்துட்டான்னு சரிதானே என்றான்..
இல்லையே நான் ஒன்னும் அப்படி எல்லாம் திட்டவே இல்லையே உங்களுக்கு அப்படி தோனி இருக்கும் போல என்கவும் ஏய் உன் மானங்கெட்ட மைண்டு எப்படி எல்லாம் யோசிக்கணும் எனக்கு தெரியும்டி என்றவன் மனைவியின் இரண்டு கைகளை பிடித்து பார்க்க....
விதவிதமான வண்ணங்களில் இருக்கும் வளையல்களைப் பார்த்து அதற்கு முத்தமிட்டவன் அழகா இருக்கடி என்று சொல்லி மனைவியோடு சேர்ந்து விதவிதமான போட்டோக்கள் எடுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து கண்ணாடியின் முன்பு போய் நிறுத்தியவன் பாரு இந்த கோலத்தில் என் பொண்டாட்டி எம்புட்டு டக்கரா என்க....
தாய்மையின் பூரிப்பில் தான் அழகாய் இருப்பது தெரிந்தது. ..
சீமக்கரை...
இந்த சர்ப்ரைஸ் உனக்கு புடிச்சிருக்கா டி செல்லம் என்று கேட்க உண்மையிலேயே நான் இதை எதிர்பார்க்கவே இல்லை மாமா..
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்லி கணவனை அணைத்துக் கொள்ள இப்படி ஏதாச்சும் நடந்தா தான் புருஷனை கட்டி பிடிக்கணும்னு உன்னோட ரூல்ஸ் புக்ல இருக்காடி என்றான்...
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே என்றாள்...பின்ன தினமும் கட்டிப்புடிச்சு நாலஞ்சு முத்தத்தை கொடுத்தா நீ என்ன தேஞ்ஜா போயிடுவடி என்க...
நான் கொடுத்தா என்னா நீங்க குடுத்தா என்ன மாமா...அது தான் ஐயா மறக்காம தினமும் கொடுக்குறீங்களே அது போதாதா எங்கவும்,ஏண்டி கொடுப்பதை விட வாங்குவதில் எவ்வளவு சுகம் இருக்கு சொல்லு...
ஆமா சுகமாக தான் இருக்கு என்று தாமரை சொல்ல அப்போ எனக்கும் வாங்கனுமென்று இருக்காதாடி என்று முறைத்துக் கொண்டே கேட்டவன் மனைவியின் கன்னத்தில் இருக்கும் சந்தனத்தை துடைத்து விட்டவன் சரி போய் டிரஸ் மாத்து...
புடவை ரொம்ப வெயிட்டா வேண்டாம் என்று சொன்னேன் ஆனா இதை பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு அதனால் தான் மதுரைக்கு போய் உனக்காக வாங்கிட்டு வந்தேன் என்கவும் அடப்பாவி புருஷா நானே புடவை தயாரிக்கிறவள்.எனக்காக கடையில போய் வாங்கிட்டு வந்திருக்க இதெல்லாம் அநியாயமா இல்லையா என்க...அதுக்காக உனக்கு கொடுக்க வேண்டிய சர்ப்ரைஸை உன்கிட்டயாவது சொல்லி ரெடி பண்ண சொல்லுவாங்க கூறுகெட்ட குப்பாயி என்றான்..
ஆமா நா குப்பாயி நீ குப்புசாமி என்று தாமரை சிரிக்க நோ டி நோ உன் மாமா கதிர் என்று முறைத்தவன் நீ என் செல்ல குப்பாயிடி என்றவன் சரி சரி போ போ என்க...
அதுக்கு முதல்ல நீங்க என்ன விடனும் அப்பதானே போக முடியும் என்றாள். நான் என்ன உன்னை புடிச்சி வச்சிருக்கேன் என்று சொல்ல, ஆமாய்யா நீ என்ன புடிச்சி தான் வச்சிருக்க உன் கண்ணுல கொஞ்சம் விளக்கெண்ணெய் ஊத்திட்டு நல்லா பாரு என்கவும்...
அப்படியா என்றபடி அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க அதில் அவனோ தாமரையை அணைத்தபடி நின்று கொண்டிருந்தான்..
ஏண்டி இப்படி கண்ண கசிக்கிட்டு இருந்தாக்க ரோட்ல போற வரவன் என்னமோ நான் உன்னை கெடுத்துட்ட போல நினைக்க மாட்டாங்களா என்று ஜான் சொல்ல,அழுது கொண்டிருந்த அல்லியோ நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் அதுக்கெல்லாம் நீ சரிவர மாட்ட...நீயே ஒரு துப்பு கெட்டவன் என்க...என்னடி இப்படி சொல்ற என்று ஜான் அதிர, உண்மையை சொன்னேன் உனக்கு அந்த அளவுக்கு எல்லாம் தைரியம் கிடையாது யா.அப்படி ஏதாச்சும் நினைத்த என் அண்ணனுங்க ரெண்டு பேரும் உன் தோலை உரிச்சிடுவாங்கைய்யா என்றாள்.
மணக்கண்ணில் வேலுவும் சிவாவும் அருவாளோடு ஓடி வருவதை நினைத்து பார்த்த ஜானுவோ ஐயய்யோ என்று தலையை உதரி அந்த நினைவை விரட்டியவன் செல்லம் மூன்று மாசம் தாண்டி...ப்ராஜெக்ட் முடித்து கொடுத்துட்டு நான் வந்துருவேன்.உன் அண்ணன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தோழனாக நான் சரியா வந்துருவேண்டி.
நீ நல்லா எக்ஸாம் எழுது.என்னால் தினமும் போன் பண்ண முடியாது கொஞ்சம் புரிஞ்சிக்க சீக்கிரம் வந்துடுறேன்,இப்படி அழுது கொண்டே இருக்காதடி..
அப்போ ஒன்னும் பண்ணட்டுமா என்க, அவளோ என்னவென்றாள்.நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன் டி..
நான் திரும்ப இந்தியா வரவரைக்கும் நீ அதை நினைச்சுட்டு இருக்கலாம் என்கவும் அதற்கு அல்லியோ என்ன ஐடியா சொல்லு யா என்றாள்.
கொஞ்சம் கிட்ட வாடி காதில் சொல்றேன் என்றான்..அப்படி என்ன ரகசியத்தை இந்த மனுஷன் சொல்ல போறான் என்று அல்லியும் தனது காதை நீட்ட,நான் உனக்கு ஜூனியர் ஜான் கொடுத்துட்டு போறேன் டி. நான் வர வரைக்கும் நீ அவனை வளர்த்து வை என்கவும் என்னயா சொன்ன என்று தனது ஹீல்ஸ் காலால் ஓங்கி ஜானின் காலில் மிதிக்க ஐயோ என்று கத்தினான்..
யோ மானங்கெட்டவனே எதுக்கு இப்படி கத்துற என்று எட்டி ஜானின் வாயை பொத்தியவள் அக்கம் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்க்க,தன்னவளின் நெருக்கமோ ஜானுக்கு குதூகலத்தை கொடுக்க எட்டி அவளை இழுத்து தன்னோடு அணைத்தவன் அவள் இதழில் தனது இதழை புதைத்தான்.
சிங்கப்பூர்