Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 634
- Thread Author
- #1
கனியூர்:
என்னது பொண்டாட்டியாஆஆஆ...அப்ப உண்மையிலேயே இவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?அய்யோ...அண்ணன் பொய் சொல்லவில்லையா என்று அதிர்ச்சியோடு பார்வதி தனது ரூமிற்குள் உட்கார்ந்து கொண்டிருக்க அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கண்ணிலிருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு போய் கதவை திறக்க அங்கே வர்ஷன் நின்று கொண்டிருந்தான்.
அண்ணா என்க, அவளை பார்த்தபடியே உள்ளே வந்தவன் என்னதான் பார்வதி உனக்கு பிரச்சனை சொல்லு?.
அண்ணா அது வந்து நான் என்று பம்மினாள்.
உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா சொல்லு? இன்னொரு பொண்ணோட புருஷன் வேணும்னு இப்படி நினைக்கிற? .நம்ம குடும்பத்தில் யாராச்சும் இப்படி இருக்காங்களா...இல்ல எந்த பொண்ணாவது தன் புருஷனை இன்னொருத்தவங்களுக்கு விட்டுக்கொடுப்பாங்களா சொல்லு ஏன் உனக்கு அது புரிய மாட்டேங்குது படிச்சிருக்க தானே உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா..
அண்ணா அவங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று நீங்க பொய் சொல்றீங்கன்னு இருந்தேன்ணா என்றாள்.
அட அறிவுகெட்ட முட்டாள். ..இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு சொல்லு.கதிருக்கு உண்மையிலே கல்யாணம் ஆகலனா நானே அவனுக்கு உன்ன பேசி கல்யாணம் பண்ணி வைப்பேன் இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.
பொண்டாட்டி கன்சீவா இருக்கானு அன்னைக்கு தானே உங்ககிட்ட சொல்லிட்டு போட்டோ கூட உன்கிட்ட காட்டுனேன்.அப்ப கூட உனக்கு நம்பிக்கை இல்லையா அண்ணனை பார்த்தா பொய் சொல்றவன் போல உனக்கு தெரியுதா என்கவும் அப்படி இல்லன்ணா...
அவரை நான் மனசார விரும்பிட்டேன்னா அதனாலதான் வேற கல்யாணம் என்னால பண்ணிக்க முடியாது....உலகத்தில் இருக்கிற எல்லோரோட காதலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதா என்று பார்த்தால் அப்படி கிடையாது.
ஒரு சில காதல் சூழ்நிலையால் முறிஞ்சி போறது உண்டு தான்.அதுவும் நீ காதலிச்சது ஒரு சாதாரண பையனா இருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு பொண்ணோட புருஷனை காதலிச்சிட்டு இருக்கியே உன்னை எந்த செருப்பால அடிக்கிறது என்று கேட்கவும் வர்ஷனின ஒவ்வொரு கேள்வியும் பார்வதிக்கு கன்னத்தில் அறை வாங்கியது போல் விழுந்தது.
உன் பிரண்டு முதல்ல உன்கிட்ட சரியா பேசுறாளா?சொல்லு என்க... மலரோ கடந்த ஒரு வாரமாக தன்னிடம் பேசாதது யோசித்து பார்த்தவள் ஆமா ணா பேசுறதில்லை ..
ம்ம் ஏன் பேசறது இல்லை யோசித்து பார்த்தியா உன்னுடைய யோக்கியதை அப்படி...அப்பவே மலர் சொன்னாளே அந்த பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு யோசிக்காதன்னு ...
நீ என்ன பண்ணி இருக்கிற?
உன் பிரண்டுக்கே முதல்ல உன் செயல் பிடிக்கவில்லை.எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்ன நினைப்பார்கள் சொல்லு...இன்னும் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அம்மாக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் யோசிச்சு பாரு என்கவும் அவளோ எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து அழுது கொண்டிருந்தாள்.
இந்த டாக்டர் பேமிலி உண்மையிலேயே ரொம்ப நல்ல குடும்பம் நல்ல விசாரிச்சிட்டேன் புரியுதா..உன் அண்ணியோட அண்ணனுக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் டாக்டர் ஃபீல்டுல...
நம்ம கண்ணு முன்னாடி பார்த்து வளர்ந்த பையன் எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது இன்னும் வேற என்ன எதிர்பார்க்கிற சொல்லு என்கவும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவாங்க சும்மா எல்லாத்தையும் மூட்டை கட்டி போட்டுட்டு நல்ல பொண்ணா ரெடியா இரு என்று சொல்லி வெளியே சென்றான்...
சீமக்கரை:
சரிங்கத்தா அஞ்சாவது மாசம் வெறும் சோறு கொடுக்கிற போலயா இல்ல வளையலும் போடுறீங்களா என்று வள்ளி அப்பாயி கேட்க வளையல் போடுவது என்றனர்.
அப்போ மூன்று வாட்டி வளையல் போடணும் இல்லனா ஒரு முறை தான் பண்ணனும் அது நல்லா தெரியும் தானே உங்களுக்கு...
ம்ம் தெரியும்மா மூணுத்துக்கும் செய்யலாம் தான் இருக்கிறோம் என்று பார்வதி சொல்ல சரிம்மா உங்க இஷ்டப்படி உங்க மகளுக்கு சோறு கொடுங்க என்றார்.
இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடமும் பார்வதியும் கவிதாவும் சொல்ல அவர்களும் உங்கள் விருப்பமே என்று சிரித்துக் கொண்டு சொன்னர்.
எங்கே செல்விய காணும் என்று கவிதா கேட்டக உன் மருமவள் உள்ள ஓடி ஒளிஞ்சுக்கிட்டா என்று சொல்லிக் கொண்டே வேலு அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
பின்ன இப்படி முரட்டு பய போல இருந்தா ஒளியாமல் என்ன பண்ணும் கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்கணும் என்று கதிர் சொல்ல ஏண்டா என் மூஞ்ச பாத்தாடா முரட்டு பையன் போல இருக்கு...கரடி மேய்ஞ்ச போல இருக்கும் உன்னையே என் தங்கச்சி சகிச்சிக் கிட்ட குடும்பம் பண்ணும் போது உன் தங்கச்சி என் முகத்தை பார்த்து இருக்க மாட்டாளா என்கவும் ஏன்டா என் மொகரையா கரடி போல இருக்கு என்று அங்கிருந்த சொம்பு எடுத்து வேலுவின் மீது எறிந்தான்...
மேலும் சிறிது நேரம் இருவரும் அவர்களோடு பேசியிருந்து விட்டு நாங்க தாமரையை பார்த்துட்டு அப்படி வீட்டுக்கு கிளம்புறோம் என்று சொல்ல வாங்கத்தை நானும் வரேன் என்று கதிர் சொல்ல எப்பா பக்கத்துல தான் பொண்ணு இருக்கு நாங்க பாத்துட்டு போறோம்...
அப்படி என்ன அம்மாவும் பொண்ணும் ரகசியம் பேச போகிறீர்கள் என்று கேட்டான்.உனக்கு போய் என் தங்கச்சிய பாக்கணும்னு ஆசை இருந்தா பாருடா அதுக்கு எதுக்குடா என் அம்மாங்களை இப்படி எல்லாம் பேசுற என்று வேலு கேட்க நாதாரி பயலே எனக்கு இடைஞ்சல் பண்றதுக்கு வேற யாரும் வேணாம் நீ மட்டுமே போதும் என்று கதிர் பல்லை கடித்தான்.
பார்வதியும் கவிதாவும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியே வந்தவர்கள் பக்கத்தில் இருக்கும் ஷெட்டின் கதவை திறந்து உள்ளே போக அங்கே தாமரையோ தறியில் வேலையாக இருப்பது பார்த்து தாமரை என்று கூப்பிட மிசின் சத்தத்தில் அவளுக்கு எதுவும் கேட்கவில்லை.
பின்னர் பொறுமையாக போய் மகளின் தோளை தொட அவளோ யாரென திரும்பி பார்த்தவள் தனது அம்மாக்கள் இருவரும் நிற்பதை பார்த்து வாங்கமா எப்ப வந்தீர்கள் என்று கேட்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம்.
நீ எப்படி இருக்கிறாய் என்க..நல்லா இருக்கிறேன்மா...
ம்ம் என்ன வேலை போயிட்டு இருக்கு என்று பார்வதி கேட்க புதிதாக வந்த ஆர்டரை பற்றி சொல்ல எதுக்கு போட்டு ரொம்ப உடம்பை வருத்திக்கிற என்று இருவரும் மகளின் உடல் நிலையை பார்த்து கவலையோடு சொல்லு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லம்மா சின்ன விஷயம் தான் என்று சிரித்தாள்...
வேலை செய் வேண்டாம் என்று சொல்லவில்லை உன் உடம்பையும் கவனித்துக் கொள் மா..எப்ப பாத்தாலும் மிஷின் சத்தத்தில் இருக்கிறியேடா...
அதெல்லாம் ஒன்னும் இல்ல மா. இது எனக்கு கஷ்டமான வேலை இல்லையே என்று சிரித்தாள்.சொன்னால் நீ என்ன கேட்கவா போற என்று பார்வதியும் கவிதாவும் செல்லமாய் முறைத்துக் கொண்டே சொன்னார்கள்...
மேலும் சிறிது நேரம் மகளோடு பேசி இருந்து விட்டு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினர்.அம்மாங்க இரண்டு பேரும் எதுக்கு வந்தோம்னு சொல்லவே இல்லையே என்னவாக இருக்கும் என்று யோசனையோடு தாமரை அங்கிருந்த கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தவள் சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய டிசைனை வரைய ஆரம்பித்தாள்...
வரலந்து கொண்டிருக்கும்போது அவளுக்கு டிசம்பரில் நடக்க போகும் பேஷன் ஷோவின் ஞாபகம் வந்தது...
அப்போது டெலிவரி ஆகி எத்தனை மாசம் ஆகும் என்று கணக்கு பண்ணி பார்த்தாள்.இப்போ 5 மாதம் என்றால் மே ல டெலிவரி ஆய்டும் பரவாயில்ல குழந்தையும் ஆறு மாசம் ஆயிடும் நம்மளும் கொஞ்சம் உடம்பு தேறிடுவோம் என்று தனக்குள்ளே பேசிக்கொண்டே வேலையை பார்த்தாள்...
அப்பொழுது பின்னால் இருந்து இரண்டு கரம் அவளின் கழுத்தை பிடித்தது.திருட்டுப் பூனை இங்கு என்ன பண்ணுது என்று கேட்கவும். .
பால் இருக்கும் இடத்தை தேடி தானே பூனை வரும் என்றவன் ஆனால் நான் பூனை இல்லடி சிங்கம் டி என்றான்.
நீ சிங்கமா இரு கரடியா இரு எனக்கு என்னய்யா பட் நான் புலி என்று தாமரை சொல்ல ஓஓஓஓ கொட்டை எடுத்த புளியா? கொட்டை எடுக்காத புளியா என்று கேட்டு சிரிக்க என்ன சோக்கா எனக்கு சிரிப்பு வரும் போது சிரித்துக் கொள்கிறேன் என்று முறைத்து பார்த்தவள்..என்ன தொரை வயலுக்கு போகலையா அங்க உங்க காதலி வேற காத்திட்டு இருப்பாளே என்க...
ஆமா டி...
சொன்னாலும் கேட்க மாட்டுறாள் ..கட்டுனா இந்த இந்த கதிர் மாமாவ தான் கட்டுவேன்னு ஆறு வருஷமா ஒத்த கால்ல நிக்கிறா...
என்னதான் பண்றது சொல்லு அதான் நானும் யோசிச்சு ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று மனைவியை பார்த்துக் கொண்டு சொல்ல..அப்படி என்ன சார் யோசித்து இருக்கீங்க சொல்லுங்க பார்க்கலாம் என்றாள்.
பேசாமல் அந்த வெள்ளை பன்னியையும் ரெண்டாவதா கட்டி கிட்டா என்ன சொல்ற டி...தாராளமா கட்டிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்க...என்னடி ஒரு பொண்டாட்டியா அப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு சண்டை போடறது இல்லையா டி.
தமிழ் ல ஒரு நல்ல டயலாக் இருக்கு மாமா என்றாள்..ம்ம் என்னடி டயலாக் சொல்லு கேட்போம்...ஒருத்தனுக்கு எழுந்து நடக்க வக்கு இல்லையாம் அவனுக்கு எட்டு பொண்டாட்டியாக்கும்...
அடிப்பாவி என்னடி உன் புருஷனை பார்த்து இப்படி சொல்ற என்று அதிர்ச்சியோடு கேட்க உன் மொகரைக்கு நானே பெரிசு இதுல தேவி வேற போயா என்றாள்...
அம்புட்டு நம்பிக்கையாடி உன் புருஷன் மேல என்கவும் உன் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சிரித்தாள்...
உன் மேல நம்பிக்கை இருக்கறதுக்கு நான் தேவியை இரண்டாவது கல்யாணம் பண்ணாததுக்கு என்னடி சம்பந்தம் இருக்கு...
ஏன்னா இங்க இருக்கிறது நான் தானே அப்ப நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாதா என்று சொல்லவும் கவுத்துட்டாளே என் பொண்டாட்டி கவுத்துட்டாளே என்று மனைவியின் கன்னத்தை பிடித்தவன் லவ் யூ டி செல்லம்...
லவ் யூ டூ மாமா...
இந்த நம்பிக்கை தான் ஒரு கணவன் மனைவிக்கு தேவையானது அது மட்டும் இருந்தா போதும் உலகத்தில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம்டி...
ஹம் கண்டிப்பாக மாமா அதில் என்ன சந்தேகம்.
என்னது பொண்டாட்டியாஆஆஆ...அப்ப உண்மையிலேயே இவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?அய்யோ...அண்ணன் பொய் சொல்லவில்லையா என்று அதிர்ச்சியோடு பார்வதி தனது ரூமிற்குள் உட்கார்ந்து கொண்டிருக்க அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கண்ணிலிருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு போய் கதவை திறக்க அங்கே வர்ஷன் நின்று கொண்டிருந்தான்.
அண்ணா என்க, அவளை பார்த்தபடியே உள்ளே வந்தவன் என்னதான் பார்வதி உனக்கு பிரச்சனை சொல்லு?.
அண்ணா அது வந்து நான் என்று பம்மினாள்.
உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா சொல்லு? இன்னொரு பொண்ணோட புருஷன் வேணும்னு இப்படி நினைக்கிற? .நம்ம குடும்பத்தில் யாராச்சும் இப்படி இருக்காங்களா...இல்ல எந்த பொண்ணாவது தன் புருஷனை இன்னொருத்தவங்களுக்கு விட்டுக்கொடுப்பாங்களா சொல்லு ஏன் உனக்கு அது புரிய மாட்டேங்குது படிச்சிருக்க தானே உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா..
அண்ணா அவங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று நீங்க பொய் சொல்றீங்கன்னு இருந்தேன்ணா என்றாள்.
அட அறிவுகெட்ட முட்டாள். ..இதுல பொய் சொல்றதுக்கு என்ன இருக்கு சொல்லு.கதிருக்கு உண்மையிலே கல்யாணம் ஆகலனா நானே அவனுக்கு உன்ன பேசி கல்யாணம் பண்ணி வைப்பேன் இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.
பொண்டாட்டி கன்சீவா இருக்கானு அன்னைக்கு தானே உங்ககிட்ட சொல்லிட்டு போட்டோ கூட உன்கிட்ட காட்டுனேன்.அப்ப கூட உனக்கு நம்பிக்கை இல்லையா அண்ணனை பார்த்தா பொய் சொல்றவன் போல உனக்கு தெரியுதா என்கவும் அப்படி இல்லன்ணா...
அவரை நான் மனசார விரும்பிட்டேன்னா அதனாலதான் வேற கல்யாணம் என்னால பண்ணிக்க முடியாது....உலகத்தில் இருக்கிற எல்லோரோட காதலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதா என்று பார்த்தால் அப்படி கிடையாது.
ஒரு சில காதல் சூழ்நிலையால் முறிஞ்சி போறது உண்டு தான்.அதுவும் நீ காதலிச்சது ஒரு சாதாரண பையனா இருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு பொண்ணோட புருஷனை காதலிச்சிட்டு இருக்கியே உன்னை எந்த செருப்பால அடிக்கிறது என்று கேட்கவும் வர்ஷனின ஒவ்வொரு கேள்வியும் பார்வதிக்கு கன்னத்தில் அறை வாங்கியது போல் விழுந்தது.
உன் பிரண்டு முதல்ல உன்கிட்ட சரியா பேசுறாளா?சொல்லு என்க... மலரோ கடந்த ஒரு வாரமாக தன்னிடம் பேசாதது யோசித்து பார்த்தவள் ஆமா ணா பேசுறதில்லை ..
ம்ம் ஏன் பேசறது இல்லை யோசித்து பார்த்தியா உன்னுடைய யோக்கியதை அப்படி...அப்பவே மலர் சொன்னாளே அந்த பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு யோசிக்காதன்னு ...
நீ என்ன பண்ணி இருக்கிற?
உன் பிரண்டுக்கே முதல்ல உன் செயல் பிடிக்கவில்லை.எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்ன நினைப்பார்கள் சொல்லு...இன்னும் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அம்மாக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் யோசிச்சு பாரு என்கவும் அவளோ எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து அழுது கொண்டிருந்தாள்.
இந்த டாக்டர் பேமிலி உண்மையிலேயே ரொம்ப நல்ல குடும்பம் நல்ல விசாரிச்சிட்டேன் புரியுதா..உன் அண்ணியோட அண்ணனுக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் டாக்டர் ஃபீல்டுல...
நம்ம கண்ணு முன்னாடி பார்த்து வளர்ந்த பையன் எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது இன்னும் வேற என்ன எதிர்பார்க்கிற சொல்லு என்கவும் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவாங்க சும்மா எல்லாத்தையும் மூட்டை கட்டி போட்டுட்டு நல்ல பொண்ணா ரெடியா இரு என்று சொல்லி வெளியே சென்றான்...
சீமக்கரை:
சரிங்கத்தா அஞ்சாவது மாசம் வெறும் சோறு கொடுக்கிற போலயா இல்ல வளையலும் போடுறீங்களா என்று வள்ளி அப்பாயி கேட்க வளையல் போடுவது என்றனர்.
அப்போ மூன்று வாட்டி வளையல் போடணும் இல்லனா ஒரு முறை தான் பண்ணனும் அது நல்லா தெரியும் தானே உங்களுக்கு...
ம்ம் தெரியும்மா மூணுத்துக்கும் செய்யலாம் தான் இருக்கிறோம் என்று பார்வதி சொல்ல சரிம்மா உங்க இஷ்டப்படி உங்க மகளுக்கு சோறு கொடுங்க என்றார்.
இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடமும் பார்வதியும் கவிதாவும் சொல்ல அவர்களும் உங்கள் விருப்பமே என்று சிரித்துக் கொண்டு சொன்னர்.
எங்கே செல்விய காணும் என்று கவிதா கேட்டக உன் மருமவள் உள்ள ஓடி ஒளிஞ்சுக்கிட்டா என்று சொல்லிக் கொண்டே வேலு அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
பின்ன இப்படி முரட்டு பய போல இருந்தா ஒளியாமல் என்ன பண்ணும் கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்கணும் என்று கதிர் சொல்ல ஏண்டா என் மூஞ்ச பாத்தாடா முரட்டு பையன் போல இருக்கு...கரடி மேய்ஞ்ச போல இருக்கும் உன்னையே என் தங்கச்சி சகிச்சிக் கிட்ட குடும்பம் பண்ணும் போது உன் தங்கச்சி என் முகத்தை பார்த்து இருக்க மாட்டாளா என்கவும் ஏன்டா என் மொகரையா கரடி போல இருக்கு என்று அங்கிருந்த சொம்பு எடுத்து வேலுவின் மீது எறிந்தான்...
மேலும் சிறிது நேரம் இருவரும் அவர்களோடு பேசியிருந்து விட்டு நாங்க தாமரையை பார்த்துட்டு அப்படி வீட்டுக்கு கிளம்புறோம் என்று சொல்ல வாங்கத்தை நானும் வரேன் என்று கதிர் சொல்ல எப்பா பக்கத்துல தான் பொண்ணு இருக்கு நாங்க பாத்துட்டு போறோம்...
அப்படி என்ன அம்மாவும் பொண்ணும் ரகசியம் பேச போகிறீர்கள் என்று கேட்டான்.உனக்கு போய் என் தங்கச்சிய பாக்கணும்னு ஆசை இருந்தா பாருடா அதுக்கு எதுக்குடா என் அம்மாங்களை இப்படி எல்லாம் பேசுற என்று வேலு கேட்க நாதாரி பயலே எனக்கு இடைஞ்சல் பண்றதுக்கு வேற யாரும் வேணாம் நீ மட்டுமே போதும் என்று கதிர் பல்லை கடித்தான்.
பார்வதியும் கவிதாவும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து வெளியே வந்தவர்கள் பக்கத்தில் இருக்கும் ஷெட்டின் கதவை திறந்து உள்ளே போக அங்கே தாமரையோ தறியில் வேலையாக இருப்பது பார்த்து தாமரை என்று கூப்பிட மிசின் சத்தத்தில் அவளுக்கு எதுவும் கேட்கவில்லை.
பின்னர் பொறுமையாக போய் மகளின் தோளை தொட அவளோ யாரென திரும்பி பார்த்தவள் தனது அம்மாக்கள் இருவரும் நிற்பதை பார்த்து வாங்கமா எப்ப வந்தீர்கள் என்று கேட்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம்.
நீ எப்படி இருக்கிறாய் என்க..நல்லா இருக்கிறேன்மா...
ம்ம் என்ன வேலை போயிட்டு இருக்கு என்று பார்வதி கேட்க புதிதாக வந்த ஆர்டரை பற்றி சொல்ல எதுக்கு போட்டு ரொம்ப உடம்பை வருத்திக்கிற என்று இருவரும் மகளின் உடல் நிலையை பார்த்து கவலையோடு சொல்லு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லம்மா சின்ன விஷயம் தான் என்று சிரித்தாள்...
வேலை செய் வேண்டாம் என்று சொல்லவில்லை உன் உடம்பையும் கவனித்துக் கொள் மா..எப்ப பாத்தாலும் மிஷின் சத்தத்தில் இருக்கிறியேடா...
அதெல்லாம் ஒன்னும் இல்ல மா. இது எனக்கு கஷ்டமான வேலை இல்லையே என்று சிரித்தாள்.சொன்னால் நீ என்ன கேட்கவா போற என்று பார்வதியும் கவிதாவும் செல்லமாய் முறைத்துக் கொண்டே சொன்னார்கள்...
மேலும் சிறிது நேரம் மகளோடு பேசி இருந்து விட்டு இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினர்.அம்மாங்க இரண்டு பேரும் எதுக்கு வந்தோம்னு சொல்லவே இல்லையே என்னவாக இருக்கும் என்று யோசனையோடு தாமரை அங்கிருந்த கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தவள் சிங்கப்பூருக்கு அனுப்ப வேண்டிய டிசைனை வரைய ஆரம்பித்தாள்...
வரலந்து கொண்டிருக்கும்போது அவளுக்கு டிசம்பரில் நடக்க போகும் பேஷன் ஷோவின் ஞாபகம் வந்தது...
அப்போது டெலிவரி ஆகி எத்தனை மாசம் ஆகும் என்று கணக்கு பண்ணி பார்த்தாள்.இப்போ 5 மாதம் என்றால் மே ல டெலிவரி ஆய்டும் பரவாயில்ல குழந்தையும் ஆறு மாசம் ஆயிடும் நம்மளும் கொஞ்சம் உடம்பு தேறிடுவோம் என்று தனக்குள்ளே பேசிக்கொண்டே வேலையை பார்த்தாள்...
அப்பொழுது பின்னால் இருந்து இரண்டு கரம் அவளின் கழுத்தை பிடித்தது.திருட்டுப் பூனை இங்கு என்ன பண்ணுது என்று கேட்கவும். .
பால் இருக்கும் இடத்தை தேடி தானே பூனை வரும் என்றவன் ஆனால் நான் பூனை இல்லடி சிங்கம் டி என்றான்.
நீ சிங்கமா இரு கரடியா இரு எனக்கு என்னய்யா பட் நான் புலி என்று தாமரை சொல்ல ஓஓஓஓ கொட்டை எடுத்த புளியா? கொட்டை எடுக்காத புளியா என்று கேட்டு சிரிக்க என்ன சோக்கா எனக்கு சிரிப்பு வரும் போது சிரித்துக் கொள்கிறேன் என்று முறைத்து பார்த்தவள்..என்ன தொரை வயலுக்கு போகலையா அங்க உங்க காதலி வேற காத்திட்டு இருப்பாளே என்க...
ஆமா டி...
சொன்னாலும் கேட்க மாட்டுறாள் ..கட்டுனா இந்த இந்த கதிர் மாமாவ தான் கட்டுவேன்னு ஆறு வருஷமா ஒத்த கால்ல நிக்கிறா...
என்னதான் பண்றது சொல்லு அதான் நானும் யோசிச்சு ஒரு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று மனைவியை பார்த்துக் கொண்டு சொல்ல..அப்படி என்ன சார் யோசித்து இருக்கீங்க சொல்லுங்க பார்க்கலாம் என்றாள்.
பேசாமல் அந்த வெள்ளை பன்னியையும் ரெண்டாவதா கட்டி கிட்டா என்ன சொல்ற டி...தாராளமா கட்டிக்க எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்க...என்னடி ஒரு பொண்டாட்டியா அப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு சண்டை போடறது இல்லையா டி.
தமிழ் ல ஒரு நல்ல டயலாக் இருக்கு மாமா என்றாள்..ம்ம் என்னடி டயலாக் சொல்லு கேட்போம்...ஒருத்தனுக்கு எழுந்து நடக்க வக்கு இல்லையாம் அவனுக்கு எட்டு பொண்டாட்டியாக்கும்...
அடிப்பாவி என்னடி உன் புருஷனை பார்த்து இப்படி சொல்ற என்று அதிர்ச்சியோடு கேட்க உன் மொகரைக்கு நானே பெரிசு இதுல தேவி வேற போயா என்றாள்...
அம்புட்டு நம்பிக்கையாடி உன் புருஷன் மேல என்கவும் உன் மேல எனக்கு நம்பிக்கை கிடையாது என்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சிரித்தாள்...
உன் மேல நம்பிக்கை இருக்கறதுக்கு நான் தேவியை இரண்டாவது கல்யாணம் பண்ணாததுக்கு என்னடி சம்பந்தம் இருக்கு...
ஏன்னா இங்க இருக்கிறது நான் தானே அப்ப நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாதா என்று சொல்லவும் கவுத்துட்டாளே என் பொண்டாட்டி கவுத்துட்டாளே என்று மனைவியின் கன்னத்தை பிடித்தவன் லவ் யூ டி செல்லம்...
லவ் யூ டூ மாமா...
இந்த நம்பிக்கை தான் ஒரு கணவன் மனைவிக்கு தேவையானது அது மட்டும் இருந்தா போதும் உலகத்தில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம்டி...
ஹம் கண்டிப்பாக மாமா அதில் என்ன சந்தேகம்.