Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 586
- Thread Author
- #1
ஆதவனும் தன் பொற்க்கரங்களோடு உதயமானான்.... வழக்கம் போல் எழுந்த கதிர் இரவு பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கியதால் போனில் ஒரு பாயிண்ட் தான் சார்ஜர் இருப்பதை பார்த்து ரூமிற்குள் வந்தவன் மனைவியை பார்க்க அவளோ ரெஸ்ட் ரூமில் இருப்பது தெரிந்தது...
தனது போனை சார்ஜிங் போட்டு விட்டு கீழே வந்தவன் அங்கிருந்த வாஷ்பேஷனில் முகத்தை கழுவி வாய் கொப்பளிக்கவும் மகனிடம் சீதாவும் டீயை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை குடித்தவன் நான் வயலுக்கு போறோமா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். .
குளித்துவிட்டு வெளியே வந்தவள் உடைமாற்றிக் கொண்டிருக்கும் போது கதிரின் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது...
என்ன இவர் போன வச்சுட்டு போயிட்டாரா என்றவாறு அங்கிருந்து பார்க்க சார்ஜிங் ஏறுவது தெரிந்தது.
முதல் அழைப்பு கட்டாகவும் இரண்டாம் அழைப்பு வரவும் டிரஸ் மாற்றி முடித்தவள் வந்து போனை பார்க்க அதில் ட்ரூகாலரில் பார்வதி என்ற பெயர் வரவும் யோசனையோடு போன் எடுக்கலாமா வேண்டாமா என்று நினைத்தாள்.
இரண்டாம் முறையும் கட்டானது மூன்றாம் முறை அழைப்பு வரவும் அட்டென்ட் பண்ணி அவள் ஹலோ என்று சொல்வதற்கு முன்பே அந்தப் பக்கம் இருந்தவளோ ஏங்க நான் பார்வதி பேசுறேன்.
என்ன பொண்ணு பார்க்க இன்னைக்கு வராங்க ப்ளீஸ் தயவு செய்து வந்து என்ன கூட்டிட்டு போங்க என்று சொல்லி அவள் அழுவதை கேட்டு தாமரைக்கு கொலவெறி வந்தது.
10 மணிக்கு மாப்பிள்ளை வீட்டுல வராங்க ப்ளீஸ் நீங்க இல்லாமே என்னால வாழ முடியாது வந்து என்னை கூப்பிட்டு போங்க என்று மீண்டும் அவள் சொல்லி அழ தனது தொண்டையை சரி பண்ணிக் கொண்டவள் ஹலோ என்று சொல்லவும் போனில் பெண் குரல் கேட்க அந்த பக்கம் இருந்த பார்வதியோ யார் நீங்க இது அவர் நம்பர் தானே என்று கேட்டாள்.
தாமரையோ ஆமா உன்னுடைய பெயர் என்ன என்று கேட்க முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க எதுக்கு அவரு போன் நீங்க எடுத்தீங்க என்க...
ஆமா முதல்ல என்ன கேள்வி கேட்க உரிமையை உனக்கு யார் கொடுத்தது யார் நீ என்று தாமரை கேட்க நான் கதிரோடு காதலி என்று அவள் சொல்லவும் அப்படியா நான் கதிரோட பொண்டாட்டி என்று சொன்ன உடனே போன் கட் ஆனது.
அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க பெருமூச்சு விட்டு தன்னை சரி பண்ணிக் கொண்டவள் போய் கதவை திறக்கவும் அங்கே கதிர் நிற்க செத்தடா இன்னைக்கு நீ என்று நினைத்தவள் உள்ளே வந்து கண்ணாடி முன் நின்று தலையை சீவிக் கொண்டிருந்தாள்...
என்னடி நைட் நல்லா நிம்மதியா தூங்கி இருப்பியே என்று கேட்டுக் கொண்டு வந்தவன் மனைவியை பின்னால் இருந்து அணைக்க அவன் கையை விலக்கி விட்டு திரும்பியவள் உங்களுடைய காதலியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம் உங்களை வந்து காப்பாற்ற சொல்லி போன்ல அழுகிறாள் என்றாள்...
எதே காதலிய பொண்ணு பார்க்க வராங்களா என்னடி உளறிட்டு இருக்கு நல்லா தானே இருக்க?உன் மண்டையில் எதாவது அடிபட்டு இருக்கா என்று கேட்டான்...
ஆமா நான் பைத்தியம் தான்..உங்களுக்கு நான் அப்படிதான் தெரியுவேன் மாமா என்றவள் உங்கள் ஆருயிர் காதலி பார்வதி தான் போன் பண்ணி அழுகிறாள் என்க...
பார்வதி போன் பண்ணி அழுகிறாளா அவளுக்கு எப்படி என் நம்பர் தெரிந்தது என்று அதிர்ச்சியா கேட்டான்...
ஏன்டா இது நான் கேட்க வேண்டிய கேள்வி நீ என்னையே கேட்கிறாயா என்று கோபமாக கேட்டாள்.
அடியே என்னடி விஷயம்???எதோ புரியாம நீ சொல்லிக்கிட்டு இருக்குற என்ன நடந்துச்சு சொல்லு என்கவும் பின்னர் அவனுக்கு வந்த கால் பற்றி சொல்ல அய்யோஓஓஓஓ என்று தலையில் கையை வைத்தவன் இவளை என பல்லை கடித்தவனுக்கு போன் கண்ணில் பட்டது.....
சார்ஜிங் ல இருந்த தனது ஃபோனை எடுத்தவன் வர்ஷனுக்கு உடனே கால் பண்ணி மாமா அந்த புள்ள என்னதான் மாமா நினைச்சுட்டு இருக்கு சும்மா உயிரை வாங்கிட்டு இருக்கு என்க...என்னடா சொல்ற என்று கேட்க பின்னர் பார்வதி போன் பண்ணி தாமரையிடம் பேசியது சொல்ல நீ விடு நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு அவன் ஃபோனை வைத்தான். ..
அடியே செல்லம் எந்த நாதாரி பையன் எனக்கு சூனியம் வச்சானே தெரியலடி இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குது...சத்தியமா என் பொண்டாட்டி நீதாண்டி அவளுக்கு நான் நம்பர் தரவே இல்லடி என்று சொல்ல,நான் அதை பற்றி கேட்கவே இல்லையே? என்றாள்...
சுத்தம் நானா தான் உளறி உளறி மாட்டிக்கிறேனா என்றவன் உன் மாமன பாத்தாக்க மயங்கி போறாளுங்களே அம்புட்டு அழகா இருக்கிறேனா சொல்லுடி????
கணவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் தொடப்பத்துக்கு பட்டு குஞ்சம் கேட்குதாம் என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்...
அதை கேட்டவனோ என்னடி இப்படி சொல்லிட்டு போற என்று போய் மனைவியின் தோளை பிடிக்க பின்ன என்ன...
இந்த காட்டானுக்கு போய் இவர்களெல்லாம் சுத்தி சுத்தி வராங்களே அதை நினைத்து சிரிப்பா வருது...
நான் ஏன் கவலைப்பட போறேன் சொல்லு இது முரட்டு முட்டாபீசு எனக்கு மட்டுமே சொந்தம் என்பது எனக்கு தெரியாதா என்று சொல்ல..ஏண்டி இத்தனை நாளா கோவமா இருந்தியேடி என்றான்...
நான் கோவமா தான் இருந்தேன் தவிர அது தேவி கிட்ட பேசினதை ஏன் சொல்லவில்லை என்கிறதால தான்..மத்தபடி சந்தேகம் எல்லாம் எனக்கு கிடையாது புரியுதா போயா என்று கணவனின் கையை தள்ளிவிட்டு அங்கிருந்து கதவை திறந்து கீழே போனாள்.
அடக்கடவுளே என் பொண்டாட்டி சந்தேகப்பட்டு எல்லாம் என் மேல கோபப்படலையா இது தெரியாம நான் வேற தேவதாஸ் ரேஞ்சிக்கு கவலைப்பட்டுக் கொண்டிருந்தனே....
அடியே வெள்ள பன்னி தேவி உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு கண்டிப்பா கச்சேரி என்று சொல்லும்போது திரும்பவும் கதவை திறந்து கொண்டு தாமரை வர இது அவள் காதில் விழ ஏன் ஐயா நீ என்னதான் நினைச்சு கிட்டு இருக்கிற அவளுக்கு கச்சேரி இருக்குன்னு எந்த அர்த்தத்தில் நீ பேசுற எனக்கு தெரிஞ்சு ஆகணும் என்று சொல்ல...
ஆண்டவா ஏன்பா என்ன இப்படி சோதிக்கிற ஒரே ஒரு பொண்டாட்டி கட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே சத்தியமா முடியல அய்யனாரே என்றான்....
ஓஓஓஓ என்னை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொண்டது துரைக்கு ரொம்ப குடைச்சலா இருக்கோ...வேணும்னாக்க அந்த தேவி-பார்வதி இன்னும் வேற எவளாவது வாய்க்கால்,காட்டு மேட்டில திரிவாளே அவளையும் கட்டிக்கிட்டு தசரதன் போல நூறு பொண்டாட்டியோட குடும்பம் பண்ண வேண்டியதுதானே?..
யாரு வேண்டான்னு சொன்னா என்று தாமரை கேட்க எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாளே. ...என் பொண்டாட்டி ஃபுல் ஃபார்முலா இருக்கா...
கதிர் நீ வாங்கி தாண்டா ஆகணும் உன் வாய் தான் விணைனு எத்தனை வாட்டி சொன்னாலும் நீ திருந்த மாட்ட என்றான்..
என்ன அங்க முணுமுணுப்பு?நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லவில்லையே அப்படி என்ன அவளுக்கு கச்சேரி பண்ண போறீங்க?
மனைவியை பார்த்தவன் அவ கல்யாணத்துக்கு ஆர்கெஸ்ட்ரா பண்ணலாம்னு இருக்கேன் டி.உன் அண்ணா பாட்டு பாட நான் டான்ஸ் ஆட நீங்க எல்லாம் வேடிக்கை பார்க்க நல்லா இருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாரு என்று சொன்னவுடனே இருக்கும் மனநிலையை மறந்து தாமரை சத்தமாக சிரித்து விட்டாள்...
மனைவி சிரித்த பிறகுதான் கதிருக்கும் மனதும் கொஞ்சம் இயல்பானது.இந்த நேரத்தில் இப்படி தேவையில்லாத டென்ஷனெல்லாம் மனசுல ஏத்திக்காதடி...அது உனக்கும் நல்லது இல்ல வயிற்றில் இருக்கும் நமது குழந்தைக்கும் நல்லதில்லை என்றவாறு மனைவியின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சொல்ல,நான் ஏன்யா டென்ஷன் எடுத்துக்க போறேன்?. உன்னை டென்ஷனாக்குறதுக்கு தான் நான் பிறந்து வந்திருக்கிறேன் என்க..அடிப்பாவி நான் தாண்டி தேவையில்லாம டென்ஷன் ஆயிட்டு இருக்கேன்...
அடச்சை இது தெரியாம போச்சே என்க..யோவ் நீ உடனே பேச்சை மாத்தாத அந்த தேவிக்கு என்ன கச்சேரி அதை சொல்லு...
அடியேய்...இல்லடி அவள் நல்லதுக்கு தாண்டி சொன்னேன் அதை இப்படி ரெக்கார்ட் பண்ணி உனக்கு அனுப்புனிருக்கா பாரேன்...அன்னிக்கு நான் அவகிட்ட பேசும் போது போன் கையில் இருந்தபோல பார்க்கவே இல்லையே டி..நல்ல வெள்ளை பணியார போல கும்முன்னு நின்னுகிட்டு புடவை முந்தாணி தான் ஒரு கையால திருவி கிட்ட நின்னா போல என்க...
எதேஏஏஏஏ என்றவள் கணவனின் சட்டையை கொத்தோடு பிடித்தவள் அந்த அளவுக்கு ஆழமா உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்க அப்படித்தானே என்று கேட்க...என்னடி எப்படி சொன்னாலும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கிற..இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உன் புருஷன் ரொம்ப பாவம்டி...
இவன் அப்பாவி பையன் வாயில்லா பூச்சிடி..நீ கிழிச்சு போட்ட கோட்ட உன் புருஷன் தாண்டுவானா சொல்லு?.
யாரு நீயா?.
நான் கிழிச்ச கோட நீ தாண்ட மாட்ட?இத வந்து ஓடுற தண்ணில தான் எழுதி வைக்கணும் நீ ஊருக்கு குதிச்சிட்டு போன கதை இப்பதானே வெளியில வருது எங்கவும் ஸ்சூஊஊ விடமாட்டேங்குறாளே இந்த கதையை...
அடியே நான் பர்த்டேக்கு தாண்டி போனேன் அங்கே எனக்கு பின்னாடி பார்வதினு ஒருத்தி சுத்திட்டு இருப்பாள்னு நான் என்னடி கனவா கண்டேன்?.தெரியாத்தனமா அந்த ரெண்டு பொண்ணையும் மாடுகிட்ட இருந்து காப்பாத்துனேன்...ஆனா பாரேன் ஒரு பொண்ணுக்கு இந்த ஃபீலிங் வரல இவளுக்கு மட்டும் எப்படி வந்துச்சுடி?.
கணவன் சொன்னதை கேட்ட தாமரையோ தனது இடுப்பில் கையை வைத்து முறைத்து பார்த்தவள் ஓ இன்னொருத்திக்கு பீலிங் வரலைனு தான் இப்ப இவ்வளவு கவலை உனக்கு அப்படித்தானே....
ஆஹாஆஆஆஆ கதிரி நீ செத்தடா. ..
செல்லம் இனி உன் மாமா ஒரு வார்த்தை வாயை திறந்து பேசினால் நீ வாயிலேயே அடி டி என்கவும்,அப்படியா என்றாள்...ஆமாம் அப்படி தாண்டி என்று தனது வாயை மூடிக்கொண்டான்.
அப்பொழுது தாமரைக்கு கால் வரவும் போனை எடுத்துப் பார்க்க அதில் பூனாவிலிருந்து விஸ்வநாதன் பண்ணுகிறார் என்பது தெரிந்து அங்கிள் தான் என்று சொல்லிக் கொண்டு அட்டென்ட் பண்ணியவள் பேசிக்கொண்டு பால்கனிக்க போக இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்...
தனது போனை சார்ஜிங் போட்டு விட்டு கீழே வந்தவன் அங்கிருந்த வாஷ்பேஷனில் முகத்தை கழுவி வாய் கொப்பளிக்கவும் மகனிடம் சீதாவும் டீயை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை குடித்தவன் நான் வயலுக்கு போறோமா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். .
குளித்துவிட்டு வெளியே வந்தவள் உடைமாற்றிக் கொண்டிருக்கும் போது கதிரின் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது...
என்ன இவர் போன வச்சுட்டு போயிட்டாரா என்றவாறு அங்கிருந்து பார்க்க சார்ஜிங் ஏறுவது தெரிந்தது.
முதல் அழைப்பு கட்டாகவும் இரண்டாம் அழைப்பு வரவும் டிரஸ் மாற்றி முடித்தவள் வந்து போனை பார்க்க அதில் ட்ரூகாலரில் பார்வதி என்ற பெயர் வரவும் யோசனையோடு போன் எடுக்கலாமா வேண்டாமா என்று நினைத்தாள்.
இரண்டாம் முறையும் கட்டானது மூன்றாம் முறை அழைப்பு வரவும் அட்டென்ட் பண்ணி அவள் ஹலோ என்று சொல்வதற்கு முன்பே அந்தப் பக்கம் இருந்தவளோ ஏங்க நான் பார்வதி பேசுறேன்.
என்ன பொண்ணு பார்க்க இன்னைக்கு வராங்க ப்ளீஸ் தயவு செய்து வந்து என்ன கூட்டிட்டு போங்க என்று சொல்லி அவள் அழுவதை கேட்டு தாமரைக்கு கொலவெறி வந்தது.
10 மணிக்கு மாப்பிள்ளை வீட்டுல வராங்க ப்ளீஸ் நீங்க இல்லாமே என்னால வாழ முடியாது வந்து என்னை கூப்பிட்டு போங்க என்று மீண்டும் அவள் சொல்லி அழ தனது தொண்டையை சரி பண்ணிக் கொண்டவள் ஹலோ என்று சொல்லவும் போனில் பெண் குரல் கேட்க அந்த பக்கம் இருந்த பார்வதியோ யார் நீங்க இது அவர் நம்பர் தானே என்று கேட்டாள்.
தாமரையோ ஆமா உன்னுடைய பெயர் என்ன என்று கேட்க முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க எதுக்கு அவரு போன் நீங்க எடுத்தீங்க என்க...
ஆமா முதல்ல என்ன கேள்வி கேட்க உரிமையை உனக்கு யார் கொடுத்தது யார் நீ என்று தாமரை கேட்க நான் கதிரோடு காதலி என்று அவள் சொல்லவும் அப்படியா நான் கதிரோட பொண்டாட்டி என்று சொன்ன உடனே போன் கட் ஆனது.
அந்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்க பெருமூச்சு விட்டு தன்னை சரி பண்ணிக் கொண்டவள் போய் கதவை திறக்கவும் அங்கே கதிர் நிற்க செத்தடா இன்னைக்கு நீ என்று நினைத்தவள் உள்ளே வந்து கண்ணாடி முன் நின்று தலையை சீவிக் கொண்டிருந்தாள்...
என்னடி நைட் நல்லா நிம்மதியா தூங்கி இருப்பியே என்று கேட்டுக் கொண்டு வந்தவன் மனைவியை பின்னால் இருந்து அணைக்க அவன் கையை விலக்கி விட்டு திரும்பியவள் உங்களுடைய காதலியை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராங்களாம் உங்களை வந்து காப்பாற்ற சொல்லி போன்ல அழுகிறாள் என்றாள்...
எதே காதலிய பொண்ணு பார்க்க வராங்களா என்னடி உளறிட்டு இருக்கு நல்லா தானே இருக்க?உன் மண்டையில் எதாவது அடிபட்டு இருக்கா என்று கேட்டான்...
ஆமா நான் பைத்தியம் தான்..உங்களுக்கு நான் அப்படிதான் தெரியுவேன் மாமா என்றவள் உங்கள் ஆருயிர் காதலி பார்வதி தான் போன் பண்ணி அழுகிறாள் என்க...
பார்வதி போன் பண்ணி அழுகிறாளா அவளுக்கு எப்படி என் நம்பர் தெரிந்தது என்று அதிர்ச்சியா கேட்டான்...
ஏன்டா இது நான் கேட்க வேண்டிய கேள்வி நீ என்னையே கேட்கிறாயா என்று கோபமாக கேட்டாள்.
அடியே என்னடி விஷயம்???எதோ புரியாம நீ சொல்லிக்கிட்டு இருக்குற என்ன நடந்துச்சு சொல்லு என்கவும் பின்னர் அவனுக்கு வந்த கால் பற்றி சொல்ல அய்யோஓஓஓஓ என்று தலையில் கையை வைத்தவன் இவளை என பல்லை கடித்தவனுக்கு போன் கண்ணில் பட்டது.....
சார்ஜிங் ல இருந்த தனது ஃபோனை எடுத்தவன் வர்ஷனுக்கு உடனே கால் பண்ணி மாமா அந்த புள்ள என்னதான் மாமா நினைச்சுட்டு இருக்கு சும்மா உயிரை வாங்கிட்டு இருக்கு என்க...என்னடா சொல்ற என்று கேட்க பின்னர் பார்வதி போன் பண்ணி தாமரையிடம் பேசியது சொல்ல நீ விடு நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு அவன் ஃபோனை வைத்தான். ..
அடியே செல்லம் எந்த நாதாரி பையன் எனக்கு சூனியம் வச்சானே தெரியலடி இப்படியெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குது...சத்தியமா என் பொண்டாட்டி நீதாண்டி அவளுக்கு நான் நம்பர் தரவே இல்லடி என்று சொல்ல,நான் அதை பற்றி கேட்கவே இல்லையே? என்றாள்...
சுத்தம் நானா தான் உளறி உளறி மாட்டிக்கிறேனா என்றவன் உன் மாமன பாத்தாக்க மயங்கி போறாளுங்களே அம்புட்டு அழகா இருக்கிறேனா சொல்லுடி????
கணவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் தொடப்பத்துக்கு பட்டு குஞ்சம் கேட்குதாம் என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றாள்...
அதை கேட்டவனோ என்னடி இப்படி சொல்லிட்டு போற என்று போய் மனைவியின் தோளை பிடிக்க பின்ன என்ன...
இந்த காட்டானுக்கு போய் இவர்களெல்லாம் சுத்தி சுத்தி வராங்களே அதை நினைத்து சிரிப்பா வருது...
நான் ஏன் கவலைப்பட போறேன் சொல்லு இது முரட்டு முட்டாபீசு எனக்கு மட்டுமே சொந்தம் என்பது எனக்கு தெரியாதா என்று சொல்ல..ஏண்டி இத்தனை நாளா கோவமா இருந்தியேடி என்றான்...
நான் கோவமா தான் இருந்தேன் தவிர அது தேவி கிட்ட பேசினதை ஏன் சொல்லவில்லை என்கிறதால தான்..மத்தபடி சந்தேகம் எல்லாம் எனக்கு கிடையாது புரியுதா போயா என்று கணவனின் கையை தள்ளிவிட்டு அங்கிருந்து கதவை திறந்து கீழே போனாள்.
அடக்கடவுளே என் பொண்டாட்டி சந்தேகப்பட்டு எல்லாம் என் மேல கோபப்படலையா இது தெரியாம நான் வேற தேவதாஸ் ரேஞ்சிக்கு கவலைப்பட்டுக் கொண்டிருந்தனே....
அடியே வெள்ள பன்னி தேவி உனக்கு இருக்குடி ஒரு நாளைக்கு கண்டிப்பா கச்சேரி என்று சொல்லும்போது திரும்பவும் கதவை திறந்து கொண்டு தாமரை வர இது அவள் காதில் விழ ஏன் ஐயா நீ என்னதான் நினைச்சு கிட்டு இருக்கிற அவளுக்கு கச்சேரி இருக்குன்னு எந்த அர்த்தத்தில் நீ பேசுற எனக்கு தெரிஞ்சு ஆகணும் என்று சொல்ல...
ஆண்டவா ஏன்பா என்ன இப்படி சோதிக்கிற ஒரே ஒரு பொண்டாட்டி கட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே சத்தியமா முடியல அய்யனாரே என்றான்....
ஓஓஓஓ என்னை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொண்டது துரைக்கு ரொம்ப குடைச்சலா இருக்கோ...வேணும்னாக்க அந்த தேவி-பார்வதி இன்னும் வேற எவளாவது வாய்க்கால்,காட்டு மேட்டில திரிவாளே அவளையும் கட்டிக்கிட்டு தசரதன் போல நூறு பொண்டாட்டியோட குடும்பம் பண்ண வேண்டியதுதானே?..
யாரு வேண்டான்னு சொன்னா என்று தாமரை கேட்க எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாளே. ...என் பொண்டாட்டி ஃபுல் ஃபார்முலா இருக்கா...
கதிர் நீ வாங்கி தாண்டா ஆகணும் உன் வாய் தான் விணைனு எத்தனை வாட்டி சொன்னாலும் நீ திருந்த மாட்ட என்றான்..
என்ன அங்க முணுமுணுப்பு?நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதிலே சொல்லவில்லையே அப்படி என்ன அவளுக்கு கச்சேரி பண்ண போறீங்க?
மனைவியை பார்த்தவன் அவ கல்யாணத்துக்கு ஆர்கெஸ்ட்ரா பண்ணலாம்னு இருக்கேன் டி.உன் அண்ணா பாட்டு பாட நான் டான்ஸ் ஆட நீங்க எல்லாம் வேடிக்கை பார்க்க நல்லா இருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாரு என்று சொன்னவுடனே இருக்கும் மனநிலையை மறந்து தாமரை சத்தமாக சிரித்து விட்டாள்...
மனைவி சிரித்த பிறகுதான் கதிருக்கும் மனதும் கொஞ்சம் இயல்பானது.இந்த நேரத்தில் இப்படி தேவையில்லாத டென்ஷனெல்லாம் மனசுல ஏத்திக்காதடி...அது உனக்கும் நல்லது இல்ல வயிற்றில் இருக்கும் நமது குழந்தைக்கும் நல்லதில்லை என்றவாறு மனைவியின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சொல்ல,நான் ஏன்யா டென்ஷன் எடுத்துக்க போறேன்?. உன்னை டென்ஷனாக்குறதுக்கு தான் நான் பிறந்து வந்திருக்கிறேன் என்க..அடிப்பாவி நான் தாண்டி தேவையில்லாம டென்ஷன் ஆயிட்டு இருக்கேன்...
அடச்சை இது தெரியாம போச்சே என்க..யோவ் நீ உடனே பேச்சை மாத்தாத அந்த தேவிக்கு என்ன கச்சேரி அதை சொல்லு...
அடியேய்...இல்லடி அவள் நல்லதுக்கு தாண்டி சொன்னேன் அதை இப்படி ரெக்கார்ட் பண்ணி உனக்கு அனுப்புனிருக்கா பாரேன்...அன்னிக்கு நான் அவகிட்ட பேசும் போது போன் கையில் இருந்தபோல பார்க்கவே இல்லையே டி..நல்ல வெள்ளை பணியார போல கும்முன்னு நின்னுகிட்டு புடவை முந்தாணி தான் ஒரு கையால திருவி கிட்ட நின்னா போல என்க...
எதேஏஏஏஏ என்றவள் கணவனின் சட்டையை கொத்தோடு பிடித்தவள் அந்த அளவுக்கு ஆழமா உன்னிப்பா கவனிச்சு இருக்கீங்க அப்படித்தானே என்று கேட்க...என்னடி எப்படி சொன்னாலும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கிற..இப்படி எல்லாம் கேள்வி கேட்டா உன் புருஷன் ரொம்ப பாவம்டி...
இவன் அப்பாவி பையன் வாயில்லா பூச்சிடி..நீ கிழிச்சு போட்ட கோட்ட உன் புருஷன் தாண்டுவானா சொல்லு?.
யாரு நீயா?.
நான் கிழிச்ச கோட நீ தாண்ட மாட்ட?இத வந்து ஓடுற தண்ணில தான் எழுதி வைக்கணும் நீ ஊருக்கு குதிச்சிட்டு போன கதை இப்பதானே வெளியில வருது எங்கவும் ஸ்சூஊஊ விடமாட்டேங்குறாளே இந்த கதையை...
அடியே நான் பர்த்டேக்கு தாண்டி போனேன் அங்கே எனக்கு பின்னாடி பார்வதினு ஒருத்தி சுத்திட்டு இருப்பாள்னு நான் என்னடி கனவா கண்டேன்?.தெரியாத்தனமா அந்த ரெண்டு பொண்ணையும் மாடுகிட்ட இருந்து காப்பாத்துனேன்...ஆனா பாரேன் ஒரு பொண்ணுக்கு இந்த ஃபீலிங் வரல இவளுக்கு மட்டும் எப்படி வந்துச்சுடி?.
கணவன் சொன்னதை கேட்ட தாமரையோ தனது இடுப்பில் கையை வைத்து முறைத்து பார்த்தவள் ஓ இன்னொருத்திக்கு பீலிங் வரலைனு தான் இப்ப இவ்வளவு கவலை உனக்கு அப்படித்தானே....
ஆஹாஆஆஆஆ கதிரி நீ செத்தடா. ..
செல்லம் இனி உன் மாமா ஒரு வார்த்தை வாயை திறந்து பேசினால் நீ வாயிலேயே அடி டி என்கவும்,அப்படியா என்றாள்...ஆமாம் அப்படி தாண்டி என்று தனது வாயை மூடிக்கொண்டான்.
அப்பொழுது தாமரைக்கு கால் வரவும் போனை எடுத்துப் பார்க்க அதில் பூனாவிலிருந்து விஸ்வநாதன் பண்ணுகிறார் என்பது தெரிந்து அங்கிள் தான் என்று சொல்லிக் கொண்டு அட்டென்ட் பண்ணியவள் பேசிக்கொண்டு பால்கனிக்க போக இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்...