Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 579
- Thread Author
- #1
சீமக்கரை
ஒரு மனுஷன் ஊருக்கு போனானே நல்லபடியா போய் சேர்ந்துட்டேன்னு ஒரு போன் பண்ணி விசாரிக்கிறானா பாரு?
இங்க இருந்தா மட்டும் தான் இல்லாத அக்கறை சக்கரை எல்லாம் பொழிஞ்சு தள்ளுவான் என்று தாமரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு புடவைக்கு டிசைன் பண்ணிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது.
ட்ரு காலர்ல செக் பண்ண சுதா என்று வரவும் ஏற்கனவே கணேசன் தனது மருமகள் பெயரைச் சொல்லி அவள் கால் பண்ணுவாள் என்று சொல்லிச் சென்றதால் அந்த பொண்ணு தான் என்று எண்ணத்தில் கணேசன் மாமா சொல்லிட்டு போனார்களே அவங்க மருமகள் தான் போன் பண்ணுது என்று பக்கத்தில் ஆரி ஒர்க் செய்து கொண்டிருக்கும் தனது மாமியார்களிடம் சொல்ல அட்டென்ட் பண்ணுமா என்க...
ஸ்பீக்கரில் போட்டு ஹலோ என்க ஹலோ வணக்கம் நான் சுதா பேசுறன் என்றாள்.ஹம் சொல்லுங்கம்மா என்று தாமரை கேட்க இதுபோல எங்க மாமா மிஸ்டர் கணேசன் உங்க நம்பரை கொடுத்தாரு...
அவள் மிஸ்டர் கணேசன் என்று சொல்வதைப் கேட்ட தாமரையோ மௌனமாய் சிரித்துக்கொண்டாள்.
ஹம் சொல்லுங்க...ஆமாம் என்கவும் இதே போல புடவையில் என்னோட போட்டோ அவரோட போட்டோவும் முந்தாணையில் வர போல கேட்டேன் என்றவள் தாமரைக்கு ஏதோ டிசைனிங் தெரியாது என்பது போல அவள் இஷ்டத்துக்கு நெட்டில் படித்ததை வைத்து அப்படி வேணும் இப்படி வேணும் இது எப்படி செய்யணும் என்று சொல்ல, கேட்ட ராதாவுக்கும் சீதாவுக்கும் பயங்கர கோபம் வந்தது.
தாமரையோ அவர்களை அமைதியா இருங்கள் என்று மௌனமாய் சிரித்துக்கொண்டு சரி சரி என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவளின் பேச்சை பொறுக்க முடியாத சீதாவும் எழுந்து போய் போனை கட் பண்ணி விட்டு இவளுக்கு அவசியம் புடவை செஞ்சுதான் கொடுக்கணுமா என்றார்.
அத்தை நம்மளோட திறமையை நாமளே வெளியில சொல்ல கூடாது.பார்த்து தெரிஞ்சுக்கட்டும்...ஏதோ ஆன்லைன்ல படிச்சிருக்கா போல என்கவும் படிச்ச பொண்ணுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியலன்னு நிரூபிச்சிட்டா...
ராதா சீதா இருவராலும் மாமாவுக்கு இப்படி ஒரு மருமகளா என்று கவலைப்படாமல் இருக்க முடியவில்லை ....
கனியூர்:
தோழிக்காக வாசலில் படபடப்போடு நின்ற சீதாவோ தூரத்தில் புல்லட்டின் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே வர்ஷன் வந்து கொண்டிருந்தான்.
அய்யோ போச்சு...சின்ன மாமா வராங்களே..செத்தோம்டி என பதற்றமாய் நிற்கவும்,அத்தை வீட்டின் கேட் அருகே தன் மாமன் மகள் நிற்பதை பார்த்துக் கொண்டே வந்தவன் அவளின் எதிரே வந்து வண்டியை நிறுத்திவிட்டு எப்ப இருந்துடி உனக்கு புது டூட்டி போட்டுருக்காங்க?
சம்பளம் எவ்வளவு என்று அவளையும் பக்கத்தில் இருந்த இரும்பு கேட்டையும் பார்த்து சொல்ல...மாமா அது வந்து மாமா என்று சீதா தடுமாறினாள்.
மாமன்தான் வந்துட்டேனே விஷயத்தை சொல்லுடி...எதுக்கு இங்க வாசலில் நின்னுட்டு இருக்க? வீட்டுக்குள்ள போக வேண்டியது தானே என்கவும் இவ்வளவு நேரம் அங்க அம்மா கிட்ட பேசிட்டு தான் வரேன் மாமா...
என்ன அம்மாட்ட பேசிட்டு வரியா பிறகு எதுக்குடி வாசல் நிக்கிற?.அது வந்து மாமா என்று உள்ளே பார்த்தாள்...ஏய் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ அங்குட்டு முழிக்கிற என்றான்.
அது பாரு உள்ள இருக்கா மாமா என்க...பாருவா அதுக்கு ஏன் நீ இங்கு நிக்கிற என்றவாறு வண்டியில் உள்ளே வந்தவன் சற்று தள்ளி கதிரோடு பார்வதி நிற்பது பார்த்து யோசனையோடு வந்தான்.
கதிரின் முகம் கோவமா இருப்பதை பார்த்து அங்கு வந்து வண்டியை நிறுத்த அந்த நேரத்தில் வர்ஷனை எதிர்பார்க்காத பாருவோ அண்ணா என்று அதிர...டேய் கதிர் என்னடா என்றான்.
மாமா மரியாதை இந்த புள்ளையை போக சொல்லுங்க??
என்ன டா ஆச்சு?
இந்த புள்ளை யார்னே தெரியல..எவ்வளவு தைரியம் பாருங்களேன் காதலிக்கிறேன். உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன் கதை சொல்லிட்டு இருக்கு...
அதை கேட்ட வர்ஷனோ பார்வதியின் மேல் கோபம் வர நீ போடா நான் பார்த்திருக்கிறேன் என்றான்.மாமா சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது என்று கதிர் கொஞ்சம் பதட்டமா சொல்ல..அட அறிவு கெட்டவனே உன்ன பத்தி எனக்கு தெரியும் பாருவை பத்தியும் எனக்கு தெரியும் நீ போடா என்றான்.
தனது சித்தப்பா மகளை முறைத்துக் கொண்டே இருக்க அண்ணா அது வந்துணா என்று அவள் பயந்து கொண்டு வர்ஷனின் முகத்தை பார்க்க முடியாமல் சொல்ல நீ வீட்டுக்கு போ வந்து பேசுறேன் என்றான்.
விட்டால் போதும் என்று வேகமா அங்கிருந்து சென்று விட்டாள்.கதிருக்கோ அந்த பெண்ணின் வார்த்தை கேட்டு கோவம் வர என்ன இந்த காலத்து பொண்ணுங்க இப்படி இருக்கிறாங்க...யாருன்னே தெரியாதவன் மேலே எப்படி இவங்களுக்கெல்லாம் காதல் வருதுன்னு தெரியலையே என்று தலையில் அடித்துக் கொண்டு அங்கே பந்தல் அலங்காரம் செய்யும் இடத்தில் போய் நண்பர்களோடு இவனும் கலந்து கொண்டான்.
வீட்டிற்கு வந்த பார்வதியோ தனது ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு சத்தம் இன்றி அழுதாள்.
சிறிது நேரம் சென்று வர்ஷனின் புல்லட் சத்தம் தங்களது வீட்டு வாசலில் கேட்டது. கதவை திறந்தவன் சித்தப்பா சித்தப்பா என்று கூப்பிட்டபடியே உள்ளே வர பார்வதியின் அப்பா சிவராமனும் வாப்பு என்று சொல்ல...உள்ளே வந்து உட்கார்ந்தவன் நம்ம டவுன்ல இருக்குற அந்த டாக்டர் பையன் இருக்காரே அந்த பையனுக்கு பார்வதியை பொண்ணு கேக்குறாங்க...ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே என்னப்பா பண்ணலாம் முடிச்சிடலாமா என்க...சரி அப்பு ஜாதகம் ஒத்து வந்தா என்கும்போது கதவை திறந்து விட்டு வெளியே வந்தவள் அண்ணா என்று தயக்கமா கூப்பிட...
சொல்லு பாரு என்றான்.
மகளை பார்த்த சிவராமனும் ஏற்கனவே உனக்கு நாலஞ்சு வரனை உன் அண்ணன் கூட்டிட்டு வர நீயும் இல்லாத காரணத்தலாம் சொல்லி தட்டி கழிச்ச...இப்ப நம்ம கண் முன்னாடியே இருக்கிற பையன்..நல்ல குடும்பம் என்கவும் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றாள்.
ஒவ்வொரு மாப்பிள்ளையும் நீ தட்டி கழிச்சிட்டு இருந்தா என்ன தான் அர்த்தம்?சொல்லு என்று சிவராமன் கேட்கவும் அவளோ கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக் கொண்டு நான் ஒருத்தங்களை காதலிக்கிறேன்பா என்று சொல்ல...
வேகமாக எழுந்தவர் மகளை ஓங்கி அறைய போக சித்தப்பா என்று வந்து அவரை தடுத்தான்.
என்னடா பேசிட்டியா என வேலு கேட்க யாருகிட்ட என்று திருப்பி கதிர் கேட்கவும் தனது மச்சானை முறைத்து பார்த்தான்.
பங்காளி யார் இந்த பொண்ணு அது உன்கிட்ட அப்படி தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு என்ன விஷயம் இருக்கு என்று ஜானும் இப்பொழுது கேட்க யாருக்கு தெரியும் என்றான்.
கதிரின் பதிலைக் கேட்ட இருவருக்கும் செம கடுப்பு வந்தது.அறிவு கெட்ட பயலே யாருனு தெரியாத பிள்ளை கிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தியா என்க..
அந்த பிள்ளை கிட்ட தான் இவ்வளவு நேரம் நான் பேசிட்டு இருந்ததை நீ பார்த்தியா டா?.
டேய் மாப்பி வர ஆத்திரத்துக்கு செவுட்டில் மிதிப்பேன் சொல்லிட்டேன் ஒரு ஆணியும் புடுங்க வேணாம் எவகிட்ட நீ பேசினா என்ன பேசலைனா என்ன என்று தனது வேலையை வேலு பார்க்க அப்படி எல்லாம் விட முடியாது என்ற ஜான் டேய் எங்களுக்கு தெரியாமல் யார் இது என்க..உண்மையிலேயே அந்த புள்ள யாருன்னு தெரியலையே..
தெரிஞ்சா தானே பங்காளி சொல்ல முடியுமென்றவனை முறைத்து விட்டு அவனும் வேலுவை போல திரும்பி கொண்டான்.
சிறிது நிமிடங்கள் சென்று அந்த பொண்ணு லவ் பண்ணுறேனு சொல்லுதுடா என்க...இவனுங்களோ நண்பன் சொல்வதை கண்டுக் கொள்ளாமல் அங்க அலங்காரம் செய்து கொண்டிருந்த ஆட்களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்தனர்.
நண்பர்கள் இருவரும் கண்டு கொள்ளாமல் அவர்கள் வேலையை பார்ப்பதை பார்த்த கதிரோ பழிக்கு பழி வாங்குறீங்களாடா...உங்ககிட்ட தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்டா..
உனக்கு வேலை இல்லனாக்க போய் மத்த வேலையை பாரு எங்களை வேலை செய்ய விடு என்று கடுப்பாக வேலு சொல்ல அந்த அளவுக்கு போயிட்டியா டா.
நீ என்ன வேணா நெனச்சுக்கோ தங்கச்சி புருஷன்னு பாக்குறேன் இல்லனாக்க வாயிலேயே மிதிப்பேன் என்று கதிர் சொல்ல அதேதாண்டா நானும் சொல்றேன். என் தங்கச்சி புருஷன் என்பதால் தான் பார்க்கிறேன் இல்லனா எட்டி உன் சங்குலையே மிதிப்பேன் என்றான்.
நேரமும் கடந்து சென்றது மதிய உணவை சாப்பிட ரஞ்சிதம் கூப்பிட உள்ளே போனவனுங்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
பின்னர் ஹாலியில் உட்கார்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருக்க நேரமும் கடந்து செல்ல தூரத்தில் இருக்கும் உறவினர்களாம் வர ஆரம்பிக்கவும் சரிப்பா ஃபங்ஷனுக்கு ரெடியா ஆகலாம் என்று ரஞ்சித் சொல்லவும் அவரவர் அறைக்கு சென்றனர்.
நண்பர்கள் மூவரும் மேலே வந்தவர்கள் குளித்து தயாராகி கீழே வர நேரமும் கடந்து சென்றது.வண்ண விளக்கு அலங்காரத்தில் அந்த பேலஸே பளபளப்பாக ஜொலித்தது. ..
அழைத்தவர்கள் எல்லாம் வந்ததும் மித்ரன் மீராவின் புதல்வனான மிதிலேஷ் முதல் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட வந்தவர்களோ பரிசு பொருட்களை கொடுத்து சென்றனர்.
வந்தவர்களை வர்ஷனும் மற்றவர்களும் சாப்பிட அழைத்து போய் கவனித்து அனுப்ப பங்க்ஷனும் நல்லபடியாக முடிந்தது.இவனுங்கள் சாப்பிட்டு முடிக்கவே இரவு பதினொன்று ஆனது.
நாங்கள் கிளம்புறோம் என்று சொல்ல ஏன்பா நைட்ல...இருந்துட்டு நாளைக்கு போகலாமென்று மற்றவர்கள் சொல்ல நைட்ல டிராவல் பண்ணா விடிய காலமாக போய் சேர்ந்துடுவோம் என்று சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள் .
காரை நான் ஓட்டுகிறேன் என்று கதிர் சொல்ல எதையாவது பண்ணி தொலை என்று முணு முணுத்த வேலுவோ பின்னாடி சீட்டில போய் படுத்து விட ஜான் முன்னாடி சீட்டை சாய்த்து படுத்து விட்டான்.
கதிரோ இருவரையும் முறைத்து கொண்டு காரை ஓட்ட...இரண்டு தடிமாடும் மதியத்தில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசலையே என பல்லை கடித்துக் கொண்டு ஓட்டியவனுக்கு மதியம் வர்ஷன் பேசியது ஞாபகம் வந்தது.
மதியம் சாப்பிட்டு ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க வர்ஷனிடம் இருந்து கதிருக்கு கால் வர சொல்லு மாமா என்க கதிர் கொஞ்சம் வெளியில வாடா என்கவும் இதோ மாமா என்று சொல்லிக்கொண்டு போக வர்ஷனோ தனது புல்லட்டில் உட்கார்ந்து இருந்தான்.
பின்னர் அவனை ஏற்றிக் கொண்டு அவர்களது பார்ம்ஹவுஸிற்கு போனான். பார்வதி வீட்டில் நடந்ததை சொல்ல தொடங்கினான்
சிவராமன் சத்தம் போட சித்தப்பா கொஞ்சம் அமைதியா இரு.எதுக்கு இப்படி கத்துற அக்கம்பக்கெல்லாம் கேட்டா என்ன நினைப்பாங்க என்க...
அண்ணா எனக்கு தெரியாது...நான் அவரைதான் மனசார காதலிக்கிறேன். அவர் கூட தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் இல்லை என்றால் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்றாள்.
சொல்லுறதை கேளு பாரு கோவத்தை மூட்டாத...ஒழுங்கா வீட்ல பார்க்கிற மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்க..
முடியாதுணா..
ஒரு மனுஷன் ஊருக்கு போனானே நல்லபடியா போய் சேர்ந்துட்டேன்னு ஒரு போன் பண்ணி விசாரிக்கிறானா பாரு?
இங்க இருந்தா மட்டும் தான் இல்லாத அக்கறை சக்கரை எல்லாம் பொழிஞ்சு தள்ளுவான் என்று தாமரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு புடவைக்கு டிசைன் பண்ணிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது.
ட்ரு காலர்ல செக் பண்ண சுதா என்று வரவும் ஏற்கனவே கணேசன் தனது மருமகள் பெயரைச் சொல்லி அவள் கால் பண்ணுவாள் என்று சொல்லிச் சென்றதால் அந்த பொண்ணு தான் என்று எண்ணத்தில் கணேசன் மாமா சொல்லிட்டு போனார்களே அவங்க மருமகள் தான் போன் பண்ணுது என்று பக்கத்தில் ஆரி ஒர்க் செய்து கொண்டிருக்கும் தனது மாமியார்களிடம் சொல்ல அட்டென்ட் பண்ணுமா என்க...
ஸ்பீக்கரில் போட்டு ஹலோ என்க ஹலோ வணக்கம் நான் சுதா பேசுறன் என்றாள்.ஹம் சொல்லுங்கம்மா என்று தாமரை கேட்க இதுபோல எங்க மாமா மிஸ்டர் கணேசன் உங்க நம்பரை கொடுத்தாரு...
அவள் மிஸ்டர் கணேசன் என்று சொல்வதைப் கேட்ட தாமரையோ மௌனமாய் சிரித்துக்கொண்டாள்.
ஹம் சொல்லுங்க...ஆமாம் என்கவும் இதே போல புடவையில் என்னோட போட்டோ அவரோட போட்டோவும் முந்தாணையில் வர போல கேட்டேன் என்றவள் தாமரைக்கு ஏதோ டிசைனிங் தெரியாது என்பது போல அவள் இஷ்டத்துக்கு நெட்டில் படித்ததை வைத்து அப்படி வேணும் இப்படி வேணும் இது எப்படி செய்யணும் என்று சொல்ல, கேட்ட ராதாவுக்கும் சீதாவுக்கும் பயங்கர கோபம் வந்தது.
தாமரையோ அவர்களை அமைதியா இருங்கள் என்று மௌனமாய் சிரித்துக்கொண்டு சரி சரி என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அவளின் பேச்சை பொறுக்க முடியாத சீதாவும் எழுந்து போய் போனை கட் பண்ணி விட்டு இவளுக்கு அவசியம் புடவை செஞ்சுதான் கொடுக்கணுமா என்றார்.
அத்தை நம்மளோட திறமையை நாமளே வெளியில சொல்ல கூடாது.பார்த்து தெரிஞ்சுக்கட்டும்...ஏதோ ஆன்லைன்ல படிச்சிருக்கா போல என்கவும் படிச்ச பொண்ணுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியலன்னு நிரூபிச்சிட்டா...
ராதா சீதா இருவராலும் மாமாவுக்கு இப்படி ஒரு மருமகளா என்று கவலைப்படாமல் இருக்க முடியவில்லை ....
கனியூர்:
தோழிக்காக வாசலில் படபடப்போடு நின்ற சீதாவோ தூரத்தில் புல்லட்டின் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கே வர்ஷன் வந்து கொண்டிருந்தான்.
அய்யோ போச்சு...சின்ன மாமா வராங்களே..செத்தோம்டி என பதற்றமாய் நிற்கவும்,அத்தை வீட்டின் கேட் அருகே தன் மாமன் மகள் நிற்பதை பார்த்துக் கொண்டே வந்தவன் அவளின் எதிரே வந்து வண்டியை நிறுத்திவிட்டு எப்ப இருந்துடி உனக்கு புது டூட்டி போட்டுருக்காங்க?
சம்பளம் எவ்வளவு என்று அவளையும் பக்கத்தில் இருந்த இரும்பு கேட்டையும் பார்த்து சொல்ல...மாமா அது வந்து மாமா என்று சீதா தடுமாறினாள்.
மாமன்தான் வந்துட்டேனே விஷயத்தை சொல்லுடி...எதுக்கு இங்க வாசலில் நின்னுட்டு இருக்க? வீட்டுக்குள்ள போக வேண்டியது தானே என்கவும் இவ்வளவு நேரம் அங்க அம்மா கிட்ட பேசிட்டு தான் வரேன் மாமா...
என்ன அம்மாட்ட பேசிட்டு வரியா பிறகு எதுக்குடி வாசல் நிக்கிற?.அது வந்து மாமா என்று உள்ளே பார்த்தாள்...ஏய் நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ அங்குட்டு முழிக்கிற என்றான்.
அது பாரு உள்ள இருக்கா மாமா என்க...பாருவா அதுக்கு ஏன் நீ இங்கு நிக்கிற என்றவாறு வண்டியில் உள்ளே வந்தவன் சற்று தள்ளி கதிரோடு பார்வதி நிற்பது பார்த்து யோசனையோடு வந்தான்.
கதிரின் முகம் கோவமா இருப்பதை பார்த்து அங்கு வந்து வண்டியை நிறுத்த அந்த நேரத்தில் வர்ஷனை எதிர்பார்க்காத பாருவோ அண்ணா என்று அதிர...டேய் கதிர் என்னடா என்றான்.
மாமா மரியாதை இந்த புள்ளையை போக சொல்லுங்க??
என்ன டா ஆச்சு?
இந்த புள்ளை யார்னே தெரியல..எவ்வளவு தைரியம் பாருங்களேன் காதலிக்கிறேன். உன்ன தான் நினைச்சுட்டு இருக்கேன் கதை சொல்லிட்டு இருக்கு...
அதை கேட்ட வர்ஷனோ பார்வதியின் மேல் கோபம் வர நீ போடா நான் பார்த்திருக்கிறேன் என்றான்.மாமா சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது என்று கதிர் கொஞ்சம் பதட்டமா சொல்ல..அட அறிவு கெட்டவனே உன்ன பத்தி எனக்கு தெரியும் பாருவை பத்தியும் எனக்கு தெரியும் நீ போடா என்றான்.
தனது சித்தப்பா மகளை முறைத்துக் கொண்டே இருக்க அண்ணா அது வந்துணா என்று அவள் பயந்து கொண்டு வர்ஷனின் முகத்தை பார்க்க முடியாமல் சொல்ல நீ வீட்டுக்கு போ வந்து பேசுறேன் என்றான்.
விட்டால் போதும் என்று வேகமா அங்கிருந்து சென்று விட்டாள்.கதிருக்கோ அந்த பெண்ணின் வார்த்தை கேட்டு கோவம் வர என்ன இந்த காலத்து பொண்ணுங்க இப்படி இருக்கிறாங்க...யாருன்னே தெரியாதவன் மேலே எப்படி இவங்களுக்கெல்லாம் காதல் வருதுன்னு தெரியலையே என்று தலையில் அடித்துக் கொண்டு அங்கே பந்தல் அலங்காரம் செய்யும் இடத்தில் போய் நண்பர்களோடு இவனும் கலந்து கொண்டான்.
வீட்டிற்கு வந்த பார்வதியோ தனது ரூமுக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு சத்தம் இன்றி அழுதாள்.
சிறிது நேரம் சென்று வர்ஷனின் புல்லட் சத்தம் தங்களது வீட்டு வாசலில் கேட்டது. கதவை திறந்தவன் சித்தப்பா சித்தப்பா என்று கூப்பிட்டபடியே உள்ளே வர பார்வதியின் அப்பா சிவராமனும் வாப்பு என்று சொல்ல...உள்ளே வந்து உட்கார்ந்தவன் நம்ம டவுன்ல இருக்குற அந்த டாக்டர் பையன் இருக்காரே அந்த பையனுக்கு பார்வதியை பொண்ணு கேக்குறாங்க...ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே என்னப்பா பண்ணலாம் முடிச்சிடலாமா என்க...சரி அப்பு ஜாதகம் ஒத்து வந்தா என்கும்போது கதவை திறந்து விட்டு வெளியே வந்தவள் அண்ணா என்று தயக்கமா கூப்பிட...
சொல்லு பாரு என்றான்.
மகளை பார்த்த சிவராமனும் ஏற்கனவே உனக்கு நாலஞ்சு வரனை உன் அண்ணன் கூட்டிட்டு வர நீயும் இல்லாத காரணத்தலாம் சொல்லி தட்டி கழிச்ச...இப்ப நம்ம கண் முன்னாடியே இருக்கிற பையன்..நல்ல குடும்பம் என்கவும் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்றாள்.
ஒவ்வொரு மாப்பிள்ளையும் நீ தட்டி கழிச்சிட்டு இருந்தா என்ன தான் அர்த்தம்?சொல்லு என்று சிவராமன் கேட்கவும் அவளோ கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக் கொண்டு நான் ஒருத்தங்களை காதலிக்கிறேன்பா என்று சொல்ல...
வேகமாக எழுந்தவர் மகளை ஓங்கி அறைய போக சித்தப்பா என்று வந்து அவரை தடுத்தான்.
என்னடா பேசிட்டியா என வேலு கேட்க யாருகிட்ட என்று திருப்பி கதிர் கேட்கவும் தனது மச்சானை முறைத்து பார்த்தான்.
பங்காளி யார் இந்த பொண்ணு அது உன்கிட்ட அப்படி தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு என்ன விஷயம் இருக்கு என்று ஜானும் இப்பொழுது கேட்க யாருக்கு தெரியும் என்றான்.
கதிரின் பதிலைக் கேட்ட இருவருக்கும் செம கடுப்பு வந்தது.அறிவு கெட்ட பயலே யாருனு தெரியாத பிள்ளை கிட்ட தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தியா என்க..
அந்த பிள்ளை கிட்ட தான் இவ்வளவு நேரம் நான் பேசிட்டு இருந்ததை நீ பார்த்தியா டா?.
டேய் மாப்பி வர ஆத்திரத்துக்கு செவுட்டில் மிதிப்பேன் சொல்லிட்டேன் ஒரு ஆணியும் புடுங்க வேணாம் எவகிட்ட நீ பேசினா என்ன பேசலைனா என்ன என்று தனது வேலையை வேலு பார்க்க அப்படி எல்லாம் விட முடியாது என்ற ஜான் டேய் எங்களுக்கு தெரியாமல் யார் இது என்க..உண்மையிலேயே அந்த புள்ள யாருன்னு தெரியலையே..
தெரிஞ்சா தானே பங்காளி சொல்ல முடியுமென்றவனை முறைத்து விட்டு அவனும் வேலுவை போல திரும்பி கொண்டான்.
சிறிது நிமிடங்கள் சென்று அந்த பொண்ணு லவ் பண்ணுறேனு சொல்லுதுடா என்க...இவனுங்களோ நண்பன் சொல்வதை கண்டுக் கொள்ளாமல் அங்க அலங்காரம் செய்து கொண்டிருந்த ஆட்களுக்கு தேவையானதை எடுத்து கொடுத்தனர்.
நண்பர்கள் இருவரும் கண்டு கொள்ளாமல் அவர்கள் வேலையை பார்ப்பதை பார்த்த கதிரோ பழிக்கு பழி வாங்குறீங்களாடா...உங்ககிட்ட தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்டா..
உனக்கு வேலை இல்லனாக்க போய் மத்த வேலையை பாரு எங்களை வேலை செய்ய விடு என்று கடுப்பாக வேலு சொல்ல அந்த அளவுக்கு போயிட்டியா டா.
நீ என்ன வேணா நெனச்சுக்கோ தங்கச்சி புருஷன்னு பாக்குறேன் இல்லனாக்க வாயிலேயே மிதிப்பேன் என்று கதிர் சொல்ல அதேதாண்டா நானும் சொல்றேன். என் தங்கச்சி புருஷன் என்பதால் தான் பார்க்கிறேன் இல்லனா எட்டி உன் சங்குலையே மிதிப்பேன் என்றான்.
நேரமும் கடந்து சென்றது மதிய உணவை சாப்பிட ரஞ்சிதம் கூப்பிட உள்ளே போனவனுங்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
பின்னர் ஹாலியில் உட்கார்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருக்க நேரமும் கடந்து செல்ல தூரத்தில் இருக்கும் உறவினர்களாம் வர ஆரம்பிக்கவும் சரிப்பா ஃபங்ஷனுக்கு ரெடியா ஆகலாம் என்று ரஞ்சித் சொல்லவும் அவரவர் அறைக்கு சென்றனர்.
நண்பர்கள் மூவரும் மேலே வந்தவர்கள் குளித்து தயாராகி கீழே வர நேரமும் கடந்து சென்றது.வண்ண விளக்கு அலங்காரத்தில் அந்த பேலஸே பளபளப்பாக ஜொலித்தது. ..
அழைத்தவர்கள் எல்லாம் வந்ததும் மித்ரன் மீராவின் புதல்வனான மிதிலேஷ் முதல் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட வந்தவர்களோ பரிசு பொருட்களை கொடுத்து சென்றனர்.
வந்தவர்களை வர்ஷனும் மற்றவர்களும் சாப்பிட அழைத்து போய் கவனித்து அனுப்ப பங்க்ஷனும் நல்லபடியாக முடிந்தது.இவனுங்கள் சாப்பிட்டு முடிக்கவே இரவு பதினொன்று ஆனது.
நாங்கள் கிளம்புறோம் என்று சொல்ல ஏன்பா நைட்ல...இருந்துட்டு நாளைக்கு போகலாமென்று மற்றவர்கள் சொல்ல நைட்ல டிராவல் பண்ணா விடிய காலமாக போய் சேர்ந்துடுவோம் என்று சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள் .
காரை நான் ஓட்டுகிறேன் என்று கதிர் சொல்ல எதையாவது பண்ணி தொலை என்று முணு முணுத்த வேலுவோ பின்னாடி சீட்டில போய் படுத்து விட ஜான் முன்னாடி சீட்டை சாய்த்து படுத்து விட்டான்.
கதிரோ இருவரையும் முறைத்து கொண்டு காரை ஓட்ட...இரண்டு தடிமாடும் மதியத்தில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசலையே என பல்லை கடித்துக் கொண்டு ஓட்டியவனுக்கு மதியம் வர்ஷன் பேசியது ஞாபகம் வந்தது.
மதியம் சாப்பிட்டு ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க வர்ஷனிடம் இருந்து கதிருக்கு கால் வர சொல்லு மாமா என்க கதிர் கொஞ்சம் வெளியில வாடா என்கவும் இதோ மாமா என்று சொல்லிக்கொண்டு போக வர்ஷனோ தனது புல்லட்டில் உட்கார்ந்து இருந்தான்.
பின்னர் அவனை ஏற்றிக் கொண்டு அவர்களது பார்ம்ஹவுஸிற்கு போனான். பார்வதி வீட்டில் நடந்ததை சொல்ல தொடங்கினான்
சிவராமன் சத்தம் போட சித்தப்பா கொஞ்சம் அமைதியா இரு.எதுக்கு இப்படி கத்துற அக்கம்பக்கெல்லாம் கேட்டா என்ன நினைப்பாங்க என்க...
அண்ணா எனக்கு தெரியாது...நான் அவரைதான் மனசார காதலிக்கிறேன். அவர் கூட தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் இல்லை என்றால் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்றாள்.
சொல்லுறதை கேளு பாரு கோவத்தை மூட்டாத...ஒழுங்கா வீட்ல பார்க்கிற மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்க..
முடியாதுணா..