Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 574
- Thread Author
- #1
என் அண்ணனை ஏதும் சொல்லவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதே என்று பல்லை கடித்தாள்.
"ஆமாடி ஆமா "
எனக்கு வேண்டுதலை அதான் என்றவன் சரிடி செல்லம் உடம்ப பாத்துக்க சரியா சாப்பிடு உனக்கு தேவையான ஐட்டமெல்லாம் அங்க வாங்கி வச்சிருக்கேன் பாரு என்று அங்கிருந்த கபோர்டு காட்டி சொல்ல,சிரித்துக் கொண்டே செல்லமாக கணவனை பார்த்து முறைத்தாள்.
இல்லடி இது உனக்காக இல்லை நீ சொல்ற போல என் பிள்ளைக்கு பசி எடுக்கும்ல அதனால தான் என்றவன் வரட்டுமாடி என்று கேட்க சரி மாமா பார்த்து போயிட்டு வாங்க.போய் ரீச் ஆனதும் சொல்லுங்கள் என்க, எப்படியும் விடிய காலை தான் போய் சேருவோம்.முடிஞ்சா நாளைக்கு நைட்டு கிளம்பிடுவோம் இல்லனா மறுநாள் காலையில தான் வருவோம்.
ஒன்னும் அவசரம் இல்லை பகல்லையே வாங்க என்றாள்.சரிடி என்று மீண்டும் மனைவிக்கு பத்திரம் சொல்லிக்கொண்டு பேக்கோடு கீழே வந்தவன் வீட்டினரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே போய் காரில் ஏற இருவரும் அங்கிருந்து தேனுரை நோக்கி சென்றனர்.
தெருவைத்தாண்டி அந்த காட்டுப்பாதைக்குள் வர அப்பா அய்யனாரே எந்த காத்து கருப்பும் எங்க பின்னாடி வரக்கூடாது என்று சொல்லியபடியே தனது பையில் இருந்த அய்யனார் விபூதி பொட்டலத்தை எடுத்தவன் தனக்கும் பூசிக்கொண்டு வேலுக்கும் பூசினான்.
ஏண்டா மாப்ள நம்மளே பெரிய பேய் நமக்கு எந்த பேய் ஆட்டம் காட்டப் போகுது என்று வேலு சிரித்துக் கொண்டே சிறிது தூரம் செல்ல அங்கு தூரத்தில் எதுவோ நடந்து போவது போல் அவனுக்கு தோன்றியது.
கண்ணை சிமிட்டு விட்டு மீண்டும் பார்க்க மீண்டும் ஏதோ ஒரு உருவம் போவது போல் சில மீட்டர் தொலைவில் தெரிய மச்சான் என்று பதட்டமாய் கூப்பிட என்னடா என்றான்.
கொஞ்சம் முன்னாடி பாருடா என்று சொல்ல முன்னாடி என்னவாம் காட்டில் போய் என்னடா இருக்கும்?.அடேய் நல்லா பாருடா என்னமோ நடந்து போகுதுடா...
என்னடா சொல்ற என்று சொல்லுற?
கார கொஞ்சம் பொறுமையா ஓட்டுறேன் பாரு என்க கதிரும் அதேபோல் தூரத்தில் பார்க்க ஏதோ ஒரு உருவம் மட்டும் நடந்து போவது தெரிந்தது.
டேய் இன்னைக்கு அமாவாசை கூட இல்லையடா இதுங்க எதுக்குடா வந்திருக்கு?அறிவு கெட்ட நாயே அதான் அய்யனாரு விபூதி எடுத்து தடவி இருக்கோமே பிறகு என்ன பயம்..
ஏன்டா சொல்ல மாட்ட என்று முணவியவன்,காரை வேகமாக ஓட்ட முடிவெடுத்து அங்கே இங்கே பார்க்காமல் ஆக்ஸிலேட்டர் முழுவதுமாக ரைஸ் பண்ண புயல் போல அந்த இடத்தை தாண்டி வந்த பிறகுதான் அவர்களுக்கு இயல்பான மூச்சு வந்தது.
உண்மையிலேயே பேய் பிசாசு எல்லாம் இருக்க மாப்பு என்கும் வேலுவின் காது அருகில் பே என கத்த பதறிப்போய் காரை நிறுத்தியவன் பிசாசு பிசாசு அறிவு கெட்ட பயலே என்னடா விளையாட்டு என்று கேட்க ஹம் சும்மா டா...எல்லாம் நம்ம பிரம்மை தான் என்றான். அப்படியா அப்ப பேய் பிசாசு எல்லாம் ஒன்னும் கிடையாதா என்கவும் இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி நமக்கு?என்கின்ற போது ஜானிடம் இருந்து கதிருக்கு போன் வந்தது .
பங்காளியே போன் பண்ணிட்டான் அட்டென்ட் பண்ணியவன் இதோ வந்துட்டு இருக்கோம்டா.இன்னொரு கால் மணி நேரத்துல வந்துடுவோம் என்று சொல்ல வாங்கடா எவ்வளவு நேரம் தான் நின்னுட்டு இருக்குது?
மிலிட்ரி என்னடா பண்றாரு என்கும் வேலுவிற்கு சாப்பிட்டு படுத்துட்டார்டா என்றான்.சரிடா என்று போனை வைத்தவன்,வண்டி நிறுத்துடா நான் ஓட்டுறேன் என்று சொல்ல ஏண்டா இவ்வளவு தூரம் ஓட்டிட்டு வந்த எனக்கு அங்க போக தெரியாதா என்கவும் கதிர் சிரிக்க..
சிரிக்காதேடா முண்டம் பத்திகிட்டு வருது என்று காரில் பிளேயரை ஆன் பண்ணிவிட்டு பயணத்தை தொடர ஜான் வீட்டிற்கு முன்பு போய் நிறுத்தவும் அவனும் காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தவன் சாப்டீங்களாடா என்க..
இல்லடா நீ சாப்பாடு எடுத்துட்டு வருவனு ரெண்டு பேரும் பட்டினியாக வரோம் என்று வேலு சொல்ல ,அட பாவத்தே...இப்பதாண்டா நான் பிரியாணி பரோட்டாவும் சிக்கன் கடாய் தந்தூரி சாப்பிட்டேன் டா.
நாசமா போனவனே...வாயை மூடு. தின்னதை சொல்லி வெறுப்பேத்தனுமா என்று பல்லை கடித்தான். பின்னர் மூவரும் அரட்டை அடித்துக் கொண்டு அங்கிருந்து கனியூரை நோக்கி பயணமானார்கள்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு எல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தவர்கள் அங்கே மூவரும் ஆளுக்கு ஒரு டீ குடிக்க பக்கத்தில் சூடாக இட்லி சுடுவதை பார்த்தவன் மச்சி சாப்பிடலாமா என்று ஜான் கேட்க எனக்கு வேண்டாம் என்க, வாடா நம்ம சாப்பிடலாம் என்று இவனை விட்டுட்டு இருவரும் அங்கே போய் இட்லி சாம்பார் சாப்பிட்டார்கள்.
தடிமாட்டு பயலுங்க எந்த நேரத்தில என்ன சாப்பிடணும்னு அறிவே கிடையாது ரெண்டு பயலுக்கும் என்று கதிர் திட்டிக் கொண்டான்.
ஜான் காரை ஓட்ட டிரைவர் சீட்டில் உட்காரவும் மதுரையில் இருந்து கனியூருக்கு ஏழு மணி நேரம்.. மூவரும் இல்லாத கதைகளை பேசிக்கொண்டு காலை 6 மணிக்கு எல்லாம் கனியூருக்கு வந்து சேர்ந்தனர்.
கனியூர்:
நேராக மித்ரன் வீட்டிற்கு செல்ல அங்கு ரஞ்சித் வயலுக்கு செல்வதற்காக வந்தவர் கார் உள்ளே வருவதை பார்த்து வாங்கப்பானு மூவரிடமும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது மித்ரனும் வெளியே வர அண்ணா என்று போய் அவனை அணைத்துக் கொண்டார்கள்.
வாங்கடா எல்லாரும் எப்படி இருக்காங்க என்று அவனும் நலம் விசாரித்துக் கொண்டே மூவரையும் வீட்டிற்குள் அழைத்துப் போக அங்கே மித்ரனின் அம்மா காஞ்சனாவும் இவர்களை பார்த்து வாங்கப்பு ...
கதிரு மருமவ எப்படி இருக்காளென்க நல்லா இருக்காம்மா என்றவன் தாமரை கொடுத்து அனுப்பிய புடவையை தனது பையில் இருந்து எடுத்து இதோ உங்களுக்கு கொடுத்தாள் மா என்று சொன்னான்.
சரிய்யா...டீ எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு போய் கொஞ்ச நேரம் மேல படுங்க என்று சொல்ல,முதல்ல படுக்குறோம் அத்தை பிறகு ஏதாவது இருந்தால் குடிக்கிறோம் என்று வேலு சொல்லவும் ஐயா காலைல வெறும் வயிற்றில் படுக்காதீங்க..
ஒரு வாய் குடிச்சிட்டு போங்க என்றவர் உள்ளே போய் மூவருக்கும் சூடாக காபியை கொண்டு வந்து கொடுக்க குடுத்துவிட்டு மித்ரனோடு மாடிக்கு சென்றவர்கள் அவர்களுக்காக ஒதுக்கி இருந்த ரூமில் போய் படுத்து விட்டனர்.
ஏய் பார்வதி நான் சொல்றதை கேளுடி ஏற்கனவே அந்த அண்ணன் திட்டி அனுப்பிட்டாங்க .திரும்பவும் எதுக்கு உனக்கு இந்த வேலை என்று சீதா கேட்க..தெரியலடி இரண்டு வருஷமா எனக்கு அவர் ஞாபகமா தான் இருக்கு என்றாள்.
இந்த ரெண்டு வருஷத்துல அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் இருக்கலாம் டி எதுக்கு தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு என்று சீதா திட்ட அதெல்லாம் எனக்கு தெரியாதுடி...
அவங்களைத் தவிர வேறு யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுடி இந்த ரெண்டு வருஷத்துக்கு பிறகு அவங்களை நான் பார்க்க போறேன் நீ எதுமே சொல்லாத என்று சொல்லிக்கொண்டு பார்வதியும் மித்ரனின் வீட்டை நோக்கி சென்றாள்.
தூங்கி எழுந்து மூவரும் குளித்துவிட்டு கீழே வர அங்க மீராவோ தனது மகன் மிதிலேசுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவள் அவர்களைப் பார்த்து வாங்க அண்ணா என்று பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
மூவரும் காலை டிபனை அங்கு சாப்பிட்டவர்கள் சரி நாங்க வர்ஷன் மாமா வீட்டுக்கு போய் வருகிறோம் என்று சொல்லிக்கொண்டனர்.
கதிரோ மாடிக்கு போய் தாமரை ரஞ்சிதத்திற்காக கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு வர பின்னர் மூவரும் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வர்ஷன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே ரத்தினமோ யாரோ இருவரோடு பேசிக் கொண்டிருப்பது தெரிந்து டேய் மீசாடா என்று வேலு சொல்ல சும்மா இருடா மாமா காதில் விழுந்திட போகுது என்று ஜான் சொல்ல, உன் மாமாக்கு பாம்பு காதுடா...
இப்போது பேசுனது நல்லா விழும் பாரு என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் சென்றனர்.அவரும் கேட் திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி மூவரையும் பார்த்தவர் எலேய் வாங்கப்பு என்று தனது பெரிய மீசை தடவிக் கொண்டே சொன்னவர் ரஞ்சிதம் யார்னு வெளியே வந்து பாரு என மனைவிக்கு குரல் கொடுத்தார்...
பின்னர் மூவரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க வெளியே வந்த ரஞ்சிதமோ மூவரையும் முறைக்க.....ஹி ஹி ஹி என சிரித்தானுங்கள்.
அத்தை எப்படி இருக்கீங்க என்று கதிரும் ஜானும் விசாரிக்க எனக்கென்னப்பு நல்லா குத்துக்கல்லு போல தான் இருக்கேன் என்றார்.
அத பாத்தா நல்லாவே தெரியுதும்மா அப்பா உங்களை நல்லா காப்பாத்திட்டு வராரு என்று வேலு சொல்ல...வேலு என்று ரஞ்சிதம் பல்லை கடிக்க ரத்தினமோ ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்து விட்டார்.
அங்க என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு என்று கணவனை பார்த்து ரஞ்சிதம் முறைக்க ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லம்மா...கூப்பிட்டு உள்ள போ என்றவர் மற்றவர்களிடம் பேச ஆரம்பிக்க வாங்கப்பு என்று வீட்டுக்கு கூப்பிட்டு போனவர் 3 பேர் தலையிலும் மாறி மாறி கொட்டு வைக்க அய்யோ வலிக்குது வலிக்குது என்ற கத்தினானுங்கள்..
முதல்ல இவனை முடிச்சுட்டு வரேன் ஏன்டா நிச்சயதார்த்தம் பண்ணியே ஒரு அப்பா அம்மா இங்க கல்லு போல இருக்கிறோமே ஒரு வார்த்தை கூப்பிடனும்னு தோணுச்சா என்க...
அய்யா அம்மா திடீர்னு தான் முடிவு ஆயிடுச்சு அண்ணே கிட்ட சொன்னேன் மா என்கவும் ரிது சொன்னான் தான் கண்ணு என்றார்.
அப்புறம் கதிரு ...தாமரை எப்படி இருக்கு மாசாமாசம் ஒழுங்கா செக்கப்புக்கு போகுதா என்று கேட்க நல்லா இருக்காத்தை. இப்ப அஞ்சாவது மாசம் தானே நடக்குது எங்கவும் ஆமாங்கத்தை என்றான்.
ம்ம்....ஜானு அப்பாவுக்கு இப்ப உடம்பு எப்படிப்பா இருக்குன்னு விசாரிக்க நல்லா இருக்காங்க என்றான். பின்னர் அவனுங்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது கோயிலுக்கு போயிருந்த வர்ஷன் அவன் மனைவி ஷாலினி இரட்டை குழந்தைகளான இஷான் இஷிதாவோடு உள்ளே வந்தனர்..
குழந்தைகளோ இவர்களை பார்த்துவிட்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டார்கள் பின்னர் அவர்களிடமும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
சரி அப்பு வாங்க காலை சாப்பாடு சாப்பிடலாம் என்க...இல்லைம்மா அங்கே அம்மா கொடுத்தாங்க சாப்பிட்டு தான் வந்தோம் என்றானுங்கள்.
"ஆமாடி ஆமா "
எனக்கு வேண்டுதலை அதான் என்றவன் சரிடி செல்லம் உடம்ப பாத்துக்க சரியா சாப்பிடு உனக்கு தேவையான ஐட்டமெல்லாம் அங்க வாங்கி வச்சிருக்கேன் பாரு என்று அங்கிருந்த கபோர்டு காட்டி சொல்ல,சிரித்துக் கொண்டே செல்லமாக கணவனை பார்த்து முறைத்தாள்.
இல்லடி இது உனக்காக இல்லை நீ சொல்ற போல என் பிள்ளைக்கு பசி எடுக்கும்ல அதனால தான் என்றவன் வரட்டுமாடி என்று கேட்க சரி மாமா பார்த்து போயிட்டு வாங்க.போய் ரீச் ஆனதும் சொல்லுங்கள் என்க, எப்படியும் விடிய காலை தான் போய் சேருவோம்.முடிஞ்சா நாளைக்கு நைட்டு கிளம்பிடுவோம் இல்லனா மறுநாள் காலையில தான் வருவோம்.
ஒன்னும் அவசரம் இல்லை பகல்லையே வாங்க என்றாள்.சரிடி என்று மீண்டும் மனைவிக்கு பத்திரம் சொல்லிக்கொண்டு பேக்கோடு கீழே வந்தவன் வீட்டினரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே போய் காரில் ஏற இருவரும் அங்கிருந்து தேனுரை நோக்கி சென்றனர்.
தெருவைத்தாண்டி அந்த காட்டுப்பாதைக்குள் வர அப்பா அய்யனாரே எந்த காத்து கருப்பும் எங்க பின்னாடி வரக்கூடாது என்று சொல்லியபடியே தனது பையில் இருந்த அய்யனார் விபூதி பொட்டலத்தை எடுத்தவன் தனக்கும் பூசிக்கொண்டு வேலுக்கும் பூசினான்.
ஏண்டா மாப்ள நம்மளே பெரிய பேய் நமக்கு எந்த பேய் ஆட்டம் காட்டப் போகுது என்று வேலு சிரித்துக் கொண்டே சிறிது தூரம் செல்ல அங்கு தூரத்தில் எதுவோ நடந்து போவது போல் அவனுக்கு தோன்றியது.
கண்ணை சிமிட்டு விட்டு மீண்டும் பார்க்க மீண்டும் ஏதோ ஒரு உருவம் போவது போல் சில மீட்டர் தொலைவில் தெரிய மச்சான் என்று பதட்டமாய் கூப்பிட என்னடா என்றான்.
கொஞ்சம் முன்னாடி பாருடா என்று சொல்ல முன்னாடி என்னவாம் காட்டில் போய் என்னடா இருக்கும்?.அடேய் நல்லா பாருடா என்னமோ நடந்து போகுதுடா...
என்னடா சொல்ற என்று சொல்லுற?
கார கொஞ்சம் பொறுமையா ஓட்டுறேன் பாரு என்க கதிரும் அதேபோல் தூரத்தில் பார்க்க ஏதோ ஒரு உருவம் மட்டும் நடந்து போவது தெரிந்தது.
டேய் இன்னைக்கு அமாவாசை கூட இல்லையடா இதுங்க எதுக்குடா வந்திருக்கு?அறிவு கெட்ட நாயே அதான் அய்யனாரு விபூதி எடுத்து தடவி இருக்கோமே பிறகு என்ன பயம்..
ஏன்டா சொல்ல மாட்ட என்று முணவியவன்,காரை வேகமாக ஓட்ட முடிவெடுத்து அங்கே இங்கே பார்க்காமல் ஆக்ஸிலேட்டர் முழுவதுமாக ரைஸ் பண்ண புயல் போல அந்த இடத்தை தாண்டி வந்த பிறகுதான் அவர்களுக்கு இயல்பான மூச்சு வந்தது.
உண்மையிலேயே பேய் பிசாசு எல்லாம் இருக்க மாப்பு என்கும் வேலுவின் காது அருகில் பே என கத்த பதறிப்போய் காரை நிறுத்தியவன் பிசாசு பிசாசு அறிவு கெட்ட பயலே என்னடா விளையாட்டு என்று கேட்க ஹம் சும்மா டா...எல்லாம் நம்ம பிரம்மை தான் என்றான். அப்படியா அப்ப பேய் பிசாசு எல்லாம் ஒன்னும் கிடையாதா என்கவும் இப்ப எதுக்கு இந்த ஆராய்ச்சி நமக்கு?என்கின்ற போது ஜானிடம் இருந்து கதிருக்கு போன் வந்தது .
பங்காளியே போன் பண்ணிட்டான் அட்டென்ட் பண்ணியவன் இதோ வந்துட்டு இருக்கோம்டா.இன்னொரு கால் மணி நேரத்துல வந்துடுவோம் என்று சொல்ல வாங்கடா எவ்வளவு நேரம் தான் நின்னுட்டு இருக்குது?
மிலிட்ரி என்னடா பண்றாரு என்கும் வேலுவிற்கு சாப்பிட்டு படுத்துட்டார்டா என்றான்.சரிடா என்று போனை வைத்தவன்,வண்டி நிறுத்துடா நான் ஓட்டுறேன் என்று சொல்ல ஏண்டா இவ்வளவு தூரம் ஓட்டிட்டு வந்த எனக்கு அங்க போக தெரியாதா என்கவும் கதிர் சிரிக்க..
சிரிக்காதேடா முண்டம் பத்திகிட்டு வருது என்று காரில் பிளேயரை ஆன் பண்ணிவிட்டு பயணத்தை தொடர ஜான் வீட்டிற்கு முன்பு போய் நிறுத்தவும் அவனும் காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தவன் சாப்டீங்களாடா என்க..
இல்லடா நீ சாப்பாடு எடுத்துட்டு வருவனு ரெண்டு பேரும் பட்டினியாக வரோம் என்று வேலு சொல்ல ,அட பாவத்தே...இப்பதாண்டா நான் பிரியாணி பரோட்டாவும் சிக்கன் கடாய் தந்தூரி சாப்பிட்டேன் டா.
நாசமா போனவனே...வாயை மூடு. தின்னதை சொல்லி வெறுப்பேத்தனுமா என்று பல்லை கடித்தான். பின்னர் மூவரும் அரட்டை அடித்துக் கொண்டு அங்கிருந்து கனியூரை நோக்கி பயணமானார்கள்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு எல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தவர்கள் அங்கே மூவரும் ஆளுக்கு ஒரு டீ குடிக்க பக்கத்தில் சூடாக இட்லி சுடுவதை பார்த்தவன் மச்சி சாப்பிடலாமா என்று ஜான் கேட்க எனக்கு வேண்டாம் என்க, வாடா நம்ம சாப்பிடலாம் என்று இவனை விட்டுட்டு இருவரும் அங்கே போய் இட்லி சாம்பார் சாப்பிட்டார்கள்.
தடிமாட்டு பயலுங்க எந்த நேரத்தில என்ன சாப்பிடணும்னு அறிவே கிடையாது ரெண்டு பயலுக்கும் என்று கதிர் திட்டிக் கொண்டான்.
ஜான் காரை ஓட்ட டிரைவர் சீட்டில் உட்காரவும் மதுரையில் இருந்து கனியூருக்கு ஏழு மணி நேரம்.. மூவரும் இல்லாத கதைகளை பேசிக்கொண்டு காலை 6 மணிக்கு எல்லாம் கனியூருக்கு வந்து சேர்ந்தனர்.
கனியூர்:
நேராக மித்ரன் வீட்டிற்கு செல்ல அங்கு ரஞ்சித் வயலுக்கு செல்வதற்காக வந்தவர் கார் உள்ளே வருவதை பார்த்து வாங்கப்பானு மூவரிடமும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது மித்ரனும் வெளியே வர அண்ணா என்று போய் அவனை அணைத்துக் கொண்டார்கள்.
வாங்கடா எல்லாரும் எப்படி இருக்காங்க என்று அவனும் நலம் விசாரித்துக் கொண்டே மூவரையும் வீட்டிற்குள் அழைத்துப் போக அங்கே மித்ரனின் அம்மா காஞ்சனாவும் இவர்களை பார்த்து வாங்கப்பு ...
கதிரு மருமவ எப்படி இருக்காளென்க நல்லா இருக்காம்மா என்றவன் தாமரை கொடுத்து அனுப்பிய புடவையை தனது பையில் இருந்து எடுத்து இதோ உங்களுக்கு கொடுத்தாள் மா என்று சொன்னான்.
சரிய்யா...டீ எடுத்துட்டு வரேன் குடிச்சிட்டு போய் கொஞ்ச நேரம் மேல படுங்க என்று சொல்ல,முதல்ல படுக்குறோம் அத்தை பிறகு ஏதாவது இருந்தால் குடிக்கிறோம் என்று வேலு சொல்லவும் ஐயா காலைல வெறும் வயிற்றில் படுக்காதீங்க..
ஒரு வாய் குடிச்சிட்டு போங்க என்றவர் உள்ளே போய் மூவருக்கும் சூடாக காபியை கொண்டு வந்து கொடுக்க குடுத்துவிட்டு மித்ரனோடு மாடிக்கு சென்றவர்கள் அவர்களுக்காக ஒதுக்கி இருந்த ரூமில் போய் படுத்து விட்டனர்.
ஏய் பார்வதி நான் சொல்றதை கேளுடி ஏற்கனவே அந்த அண்ணன் திட்டி அனுப்பிட்டாங்க .திரும்பவும் எதுக்கு உனக்கு இந்த வேலை என்று சீதா கேட்க..தெரியலடி இரண்டு வருஷமா எனக்கு அவர் ஞாபகமா தான் இருக்கு என்றாள்.
இந்த ரெண்டு வருஷத்துல அந்த அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் இருக்கலாம் டி எதுக்கு தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கு என்று சீதா திட்ட அதெல்லாம் எனக்கு தெரியாதுடி...
அவங்களைத் தவிர வேறு யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுடி இந்த ரெண்டு வருஷத்துக்கு பிறகு அவங்களை நான் பார்க்க போறேன் நீ எதுமே சொல்லாத என்று சொல்லிக்கொண்டு பார்வதியும் மித்ரனின் வீட்டை நோக்கி சென்றாள்.
தூங்கி எழுந்து மூவரும் குளித்துவிட்டு கீழே வர அங்க மீராவோ தனது மகன் மிதிலேசுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தவள் அவர்களைப் பார்த்து வாங்க அண்ணா என்று பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தாள்.
மூவரும் காலை டிபனை அங்கு சாப்பிட்டவர்கள் சரி நாங்க வர்ஷன் மாமா வீட்டுக்கு போய் வருகிறோம் என்று சொல்லிக்கொண்டனர்.
கதிரோ மாடிக்கு போய் தாமரை ரஞ்சிதத்திற்காக கொடுத்த புடவையை எடுத்துக் கொண்டு வர பின்னர் மூவரும் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருக்கும் வர்ஷன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே ரத்தினமோ யாரோ இருவரோடு பேசிக் கொண்டிருப்பது தெரிந்து டேய் மீசாடா என்று வேலு சொல்ல சும்மா இருடா மாமா காதில் விழுந்திட போகுது என்று ஜான் சொல்ல, உன் மாமாக்கு பாம்பு காதுடா...
இப்போது பேசுனது நல்லா விழும் பாரு என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் சென்றனர்.அவரும் கேட் திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி மூவரையும் பார்த்தவர் எலேய் வாங்கப்பு என்று தனது பெரிய மீசை தடவிக் கொண்டே சொன்னவர் ரஞ்சிதம் யார்னு வெளியே வந்து பாரு என மனைவிக்கு குரல் கொடுத்தார்...
பின்னர் மூவரிடமும் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க வெளியே வந்த ரஞ்சிதமோ மூவரையும் முறைக்க.....ஹி ஹி ஹி என சிரித்தானுங்கள்.
அத்தை எப்படி இருக்கீங்க என்று கதிரும் ஜானும் விசாரிக்க எனக்கென்னப்பு நல்லா குத்துக்கல்லு போல தான் இருக்கேன் என்றார்.
அத பாத்தா நல்லாவே தெரியுதும்மா அப்பா உங்களை நல்லா காப்பாத்திட்டு வராரு என்று வேலு சொல்ல...வேலு என்று ரஞ்சிதம் பல்லை கடிக்க ரத்தினமோ ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்து விட்டார்.
அங்க என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு என்று கணவனை பார்த்து ரஞ்சிதம் முறைக்க ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லம்மா...கூப்பிட்டு உள்ள போ என்றவர் மற்றவர்களிடம் பேச ஆரம்பிக்க வாங்கப்பு என்று வீட்டுக்கு கூப்பிட்டு போனவர் 3 பேர் தலையிலும் மாறி மாறி கொட்டு வைக்க அய்யோ வலிக்குது வலிக்குது என்ற கத்தினானுங்கள்..
முதல்ல இவனை முடிச்சுட்டு வரேன் ஏன்டா நிச்சயதார்த்தம் பண்ணியே ஒரு அப்பா அம்மா இங்க கல்லு போல இருக்கிறோமே ஒரு வார்த்தை கூப்பிடனும்னு தோணுச்சா என்க...
அய்யா அம்மா திடீர்னு தான் முடிவு ஆயிடுச்சு அண்ணே கிட்ட சொன்னேன் மா என்கவும் ரிது சொன்னான் தான் கண்ணு என்றார்.
அப்புறம் கதிரு ...தாமரை எப்படி இருக்கு மாசாமாசம் ஒழுங்கா செக்கப்புக்கு போகுதா என்று கேட்க நல்லா இருக்காத்தை. இப்ப அஞ்சாவது மாசம் தானே நடக்குது எங்கவும் ஆமாங்கத்தை என்றான்.
ம்ம்....ஜானு அப்பாவுக்கு இப்ப உடம்பு எப்படிப்பா இருக்குன்னு விசாரிக்க நல்லா இருக்காங்க என்றான். பின்னர் அவனுங்களும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது கோயிலுக்கு போயிருந்த வர்ஷன் அவன் மனைவி ஷாலினி இரட்டை குழந்தைகளான இஷான் இஷிதாவோடு உள்ளே வந்தனர்..
குழந்தைகளோ இவர்களை பார்த்துவிட்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டார்கள் பின்னர் அவர்களிடமும் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
சரி அப்பு வாங்க காலை சாப்பாடு சாப்பிடலாம் என்க...இல்லைம்மா அங்கே அம்மா கொடுத்தாங்க சாப்பிட்டு தான் வந்தோம் என்றானுங்கள்.