Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 574
- Thread Author
- #1
சீமக்கரை:
அண்ணா என்றவாறு கூப்பிட்டுக்கொண்டே பெருமாளின் பங்காளி உறவினரான கணேசன் வீட்டிற்குள் வர அவரை பார்த்து வள்ளி அப்பாயி வாயா கணேசா என்றார்..
சித்தி இதுல சீம்பாலு திரட்டல் இருக்கு. நம்ப மாடு கன்னு போட்டுருக்கு.மருமக மாசமா இருக்குன்னு ரேவதி கொடுத்தாள் என்று தூக்குவாளியை வள்ளி அப்பாயிடம் நீட்ட உன் தம்பி பொண்டாட்டிங்க இங்க தான் இருக்கிறார்களே கூப்பிட்டு குடுயா என்றார்..
சீதா என்று கணேசன் கூப்பிட இதோ வரேன் என்று ரூமியிலிருந்து வந்தவர் வாங்க மாமா அக்கா நல்லா இருக்கா கல்யாணத்துக்கு வேலை எப்படி போகுதென்றார்.
பொண்ணு படிப்பு ஏப்ரலில் முடியுதாமா.மே ல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்றாங்க.அறிவும் ஏப்ரல் கடைசில டிக்கெட் போட்டு வரேன்னு சொல்லி இருக்கிறேன்..
ரெண்டு பேர் கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கிறேன் ஆனா எனக்கு தான் ஒரே வீட்டில் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க மனசு வரலை மா. சொன்னாலும் உங்கக்கா கேட்க மாட்டேங்கிற என்று கணேசன் சொல்ல, அக்கா என்ன நினைக்கிறதுனா பின்னாடி ஒன்னுக்கொன்னு துணையாக இருக்கணும்னு நினைக்கிறாங்க போல மாமா என்கவாம்...
அது வாஸ்தவம் தான் மா. எல்லாரும் ஒரே போல இருப்பாங்க சொல்ல முடியாது வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் புதுசா நமக்கு ஒரு உறவு கிடைக்கும் அதை யோசிக்கணும்.
நாளைக்கு ஒன்னு ஒன்னு மன கஷ்டம் வந்தா நல்லா இருக்குமா? அதான் நான் யோசிக்கிறேன் என்றவருக்கு,அதுலாம் இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் புரிந்து நடத்துகிறாங்கதான்.
ஒன்னுக்கு பத்து வாட்டி எல்லாரும் போய் விசாரிச்சு தானே முடிவு பண்ணி இருக்கு அதெல்லாம் வருத்தப்படாதேய்யா.நம்ப அய்யனாரு துணை இருக்கும் போது எல்லாம் நல்லபடியாக நடக்கணுமென்று வள்ளி அப்பாயி சொல்லும் போது கோயிலுக்கு போயிருந்த ராதா, செல்வி தாமரை மூவரும் வீட்டிற்குள் வந்தவர்கள் அவரை பார்த்து வாங்க மாமா என்றனர்.
என்னப்பா வாலி என்று செல்வி அவரிடம் வர உம் பெரியா சீம்பால் பண்ணுனா கண்ணு அதான் டா என்று மகளிடம் கொடுக்க ஐஐஐ என்று வாங்கியவள் வாலியை திறந்து வாசம் பிடித்தாள்.
எம்மா தாமரை இது நம்ப ஊட்ல நடக்க போரிய பெரிய காரியம்.உன் கிட்ட ஒரு விசயத்தௌ சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் என்கவும்,சொல்லுங்க மாமா என்றாள்.
ஏதோ புடவையில பொண்ணு மாப்பிள்ளை படத்தை நெய்யுறாங்களாமே அதை போல உன் கொழுந்தன் பொண்டாட்டிக்கு வேண்டுமாம்.நான் சொன்னேன் எங்க குடும்பத்து மூத்த மருமகளுக்கு எல்லாம் தெரியும் எப்படி வேண்டும் சொல்லுங்கனு...
நான் போன்ல பேசணும் மாமானு அந்த என்று சொல்லிச்சு உன் நம்பர கொடுத்துட்டு வந்து இருக்கிறேன் சுதா எப்படியும் இன்னைக்கோ நாளைக்கே உனக்கு போன் பண்ணும் அது கிட்ட என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்க...
அப்படிங்களா மாமா செய்துட்டா போகுநு.முதல் முதல்ல நம்ம குடும்பத்து நல்ல காரியத்துக்கு பண்றேன் நல்லபடியா செஞ்சி தரேன் மாமா என்றவளை பார்த்தவர் கதிர் பொண்டாட்டி என்பதை விட அன்பழகன் மவள் கொக்கா என்று சிரித்தார்.இந்தாத்தா என்ன செலவானாலும் பரவாயில்லை என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட ஏய்யா கணேசா என்னய்யா இதுலாமென்று பாட்டி கேட்க
.
மாமா அதுலாம் வேண்டாம் என்றே தாமரை சொல்ல,சொந்தம் வேற தொழில் வேறு.அதை கடைபுடிச்சதால் தான் நம்மால் இந்த ஊர்ல மரியாதையா வாழ முடியுது.எவனுக்கோ குடுக்க வேண்டியதை என் மருமவளுக்கு குடுத்துட்டு போறேன் என்றவர் சித்தி நீ வாங்கு உன் கைராசி உன் பேரன் பொண்டாட்டியால் நம்ப குடும்பம் தழைக்கணும்னு வேண்டி வாங்கென்று அவரிடம் நீட்ட அய்யனாரப்பன் தயவுல எல்லாம் நல்லதா நடக்கும்யா என்றார்.மேலும் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு அங்கிருந்து சென்றார்
ஏம்மா தாமரை மாமா சொல்லிட்டு போன போல நம்ப போட்டோவும் வச்சு புடவை தயாரிக்கலாமா என்று ராதாவும் சீதாவும் ஆச்சரியமாக கேட்க ஆமாங்க அத்தை முடியும்.
இப்ப அதுதான் ட்ரெண்ட்டு என்று சொல்ல அப்போ எங்களுக்கு உங்க மாமாவும் நாங்களும் இருக்கறது போல படம் வரைந்து புடவை செய்து தரியா முதல் முறையாக இருவரும் கேட்க இவ்வளவு தானே என்றவள் படியில் ஏறி மேலே சென்றவள் 3 பாக்ஸ் எடுத்துட்டு வந்து அப்பாயிக்கு ஒனும் இரண்டு அத்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்றை கொடுத்தவள் திறந்து பாருங்கள் என்றாள்.
என்னத்தா இது என்று ஆர்வத்தோடு முதலில் வள்ளி அப்பாயி புடவை திறந்து பார்க்க அவர் வயதுக்கு கட்டுவது போல் இருந்த புடவையின் முந்தாணையில் அப்பாயியும் பிரகாசம் தாத்தாவும் இருப்பது போல இருந்தது...
எப்பத்தா இது செஞ்ச என்க..இப்பொழுது சீதாவும் ராதாவும் அவர்கள் புடவையை ஆர்வமாக பிரித்துப் பார்க்க அவர் அவரை கணவர்களோடு இருப்பது போல முந்தானையில் செய்திருந்தாள்.
அவர்களும் அந்த முந்தானை மேல் தடவி பார்த்து கண்கலங்கி போனார்கள் சந்தோஷத்தில். ..
ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவில்லையே என்று ஆச்சரியமாக கேட்க இதை நெய்து மூணு நாள் ஆகுதுங்கத்தை. சரி தமிழ் புத்தாண்டு வருது அன்னைக்கு சர்ப்ரைஸா உங்க மூணு பேருக்கு கொடுக்கலாம் என்று நினைத்தேன் அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்களே என்று சிரித்தாளா.
வார்த்தையே இல்லை..இவ்வளவு திறமையான புள்ளைய வீட்டிலேயே வைத்திருக்கிறோமே என்று கஷ்டமா தான் இருக்கு என்று சொல்ல..அதுதான் மாமா எனக்காக தறி ரெடி பண்ணி கொடுத்து இருக்காங்களேத்தை.
சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்ல மாமா இது செய்து தருவார்கள் என்கவும் நீ வேற தாமரை எனக்கே என் மவனானு இன்னும் புரியவில்லை என்று வள்ளி அப்பாயி சொல்லவும் நல்லா கேட்டுக்கோ தாமரை...
பெத்த அம்மாவுக்கே மகனோட குணம் புரியல எங்களுக்கு எங்க இருந்து புரியுமென்று சீதா சொல்ல இதுதான் சாக்கு என்று அக்கா தங்கச்சி இருவரும் வேல் கம்பு தூக்கிட்டு வந்துருங்க ...
ஏன் தாமரை உம்மாளுங்களுக்கும் இதை போல என்று புடவை காட்ட, எல்லாருக்கும் தான் ரெடி பண்ணிருக்கேன் அப்பாயி என்று சிரித்தாள்..
அவன் அவன் ஒரே நேரத்துல நாலு பேருக்கு ரூட்டு விடுறான் அவனெல்லாம் நிம்மதியா இருக்கிறான் ஒருத்திய வெச்சுகிட்டு நான் படுற பாடு இருக்கே என்று புலம்பிக் கொண்டே நின்றிருந்த ஜான் என்னதான் பண்றாள்?
எப்போ இவளை கிளம்பி வர சொன்னேன் இன்னும் வராமல் இருக்கிறாளே என்று திட்டிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் அல்லி வருவது தெரிந்தது.
எப்பா ஒரு வழியா வந்தாளே என்று காரை ஸ்டார்ட் பண்ணி பண்ண வேகமாக வந்த அல்லி காரின் கதவை திறந்து உட்கார்ந்தவள் ஏங்க என்னை இப்படி இம்சை படுத்துறீங்க???
ஸ்கூலும் முடிஞ்சிடுச்சு இப்ப வந்தா யாராச்சும் எதுவும் கேட்க மாட்டாங்களா என்கவும் ஏண்டி கட்டிக்க போற என் கூட வெளியில் ஒரு நாளைக்கு வருது உனக்கு என்ன அவ்ளோ அக்கப்போரா இருக்ககு...
24 மணி நேரம் வீட்டில் தின்னுகிட்டு வயலில் தாண்டி சுத்திட்டு கிடக்குற என்க,அல்லியோ தன்னவனை முறைத்து பார்த்தாள்.
கோபப்படாத செல்லம் என்றவன் ஏதாவது சாப்டியா என்று கேட்க ம்ம் என்று சொன்னாள். என்ன சாப்ட என்கவும் இட்லி சாம்பார்...ஆமாம் நீங்க சாப்பிட்டீங்களா என்று அல்லிக் கேட்க பரவால்ல இப்பயாவது கேட்க மனசு வந்துச்சு நல்ல விஷயம் தான் என்றவன் காரை அங்கிருந்து மதுரை நோக்கி ஓட்டி சென்றான்.
வீட்ல என்னடி சொல்லிட்டு வந்தயென்று கேட்க நல்லவேளை இன்னைக்கு அந்த டான்ஸ் டீச்சர் வர சொல்லி இருந்தாங்களா அது தான் சொன்னேன். எனக்கு கொஞ்சம் பயமிவே இருக்கு இப்படி பொய் சொல்லிட்டு வரோமேயென அல்லி வருத்தமாக சொல்ல...
லவ் பண்ணாக்க இப்படியெல்லாம் புதுசு புதுசா பொய் எல்லாம் கண்டுபிடிக்கணும் டி என்று தன்னவளின் கன்னத்தை கிள்ளி சொல்ல முதல்ல ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க என்று அவன் கையை தட்டி விட்டாள்.
தாமரை என்று கதிர் கூப்பிட இங்க தான் இருக்கேன் என்று சொன்னாள்.ம்ம் என்றவன் பால்கனிக்கு வர தாமரையோ தலை குளித்துவிட்டு முடியை வெயிலில் உலர்த்தி காய வைப்பது தெரிந்து.
என்னடி அதுக்குள்ள குளிச்சிட்டியா என்று கேட்கவும் ஏன் நேரம் காலம் பார்த்துதான் குளிக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்க..இல்லடி தனியாக கஷ்டப்படுவியே உனக்கு நான் ஹெல்ப் பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் மாமா கேட்டேன். அது பொறுக்கலையா நல்லதுக்கு இந்த உலகத்தில் காலமில்லை என்று சொல்லும் கணவனை முறைத்து பார்த்தவள்,நீங்க என்ன குளிக்க வைப்பீங்க அப்படித்தானே எங்கவும். ஆமாண்டி இதுல என்ன சந்தேகம் மாமா உன்னை எத்தனை வாட்டி குளிக்க வைச்சிருக்கேன் என்று சொல்லு வாயை மூடுங்க என்று சிரித்தாள்.
ஏண்டி இப்படி...நான் என்ன தப்பா சொல்லிட்டேன் இப்படி என்னை அமைதியாக சொல்கிறாயே..
எத்தனை முறை உனக்கு சோப்பு என்று சொல்ல வர ஐயோ சாமி நீங்க கிளாஸ் எனக்கு எடுக்க வேணாம் இப்ப எதுக்கு என்னை தேடிட்டு வந்தீங்க அதை மட்டும் சொல்லுங்க என்றாள்.
நாளைக்கு மித்ரன் அண்ணன் பையனுக்கு பேர் வைக்கிறாங்க இல்லையா என்கவும் ஏற்கனவே அவர்களைப் பற்றி தாமரையிடம் சொல்லி இருந்ததால் அப்படியா எனபவளுக்கு ம்ம், உன் நொண்ணன்,ஜான், நான் மூணு பேரு தான் போறோம் என்றான்...
காத்திருந்தேன்...காரில் போய்க் கொண்டிருக்கும் போது ஜானின் போனிற்கு கால் வர ப்ளூடூத்தை ஆன் பண்ணியவன் சொல்லுடா என்க...எங்கடா போயிட்டு இருக்க என்று கதிர் கேட்க விண்வெளிக்கு போயிட்டு இருக்கேன் என்றான்.
சரி எங்க வேணாலும் போய் தொலை. நைட் நம்ப கனியூருக்கு கிளம்பனும் ஞாபகம் இல்லையா என்கவும் அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்குடா.
விசா ரெனிவல் பண்ணனும் அதுக்காக மதுரை வரைக்கும் போயிட்டு இருக்கேன் என்றான்.
நீ பாஸ்போர்ட் ரெனிவல் பண்ண போற சரி,கூட உன் பொண்டாட்டி எதுக்கு வராள் என்கவும் அதிர்ந்து போய் காரை நிறுத்தினான்.
அவ எங்கடா இங்கே என்க,ரீல் அந்து போயிடுச்சுடா நாயே என்று சொல்லவும் அவளுக்கும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணா தான்டா போறேன.
அதுதான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே என்கவும் ஆமாம் பங்காளி.அதை மறந்துட்டேன் சரி சரி சீக்கிரம் வந்து சேருங்கள் என்று சொல்லி கதிர் போனை வைத்தான்.
இப்பொழுது தாமரையோ தனது கணவனை முறைத்து பார்த்தவள் அல்லி ஜான் மாமா கூட போயிருக்கிறாளா என்க,பாஸ்போர்ட் விஷயமா நான் தாண்டி கூப்பிட்டு போக சொன்னேன்.
இப்போ உங்க வீட்ல சொன்னா உடனே அனுப்பிடுவீங்களா என்கவும் அதுவும் சரிதான் என்றாள்.
அப்புறம் டி பொண்டாட்டி வேற என்ன விசேஷம் என்க...துரை இப்பதான் பாரினிலிருந்து வந்திருக்கிறார் நலம் விசாரிக்கிறார்.
ஏண்டி வீட்ல இருந்தா விசாரிக்க கூடாதுன்னு சட்டமா இருக்கா?என் பொண்டாட்டியை தான் விசாரிக்கணும் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியவா நான் கேட்கிறேன்???
ஓஓஓஓ அய்யாவுக்கு இந்த எண்ணம் வேற இருக்கா என்றவளை பார்த்தவன் ஒருத்தியை கரெக்ட் பண்றதுக்கு எனக்கு தொண்டை தண்ணி வத்தி போச்சு. இதுல இன்னொருத்தன் பொண்டாட்டியை நான் எங்க இருந்து பார்க்கிறது போடி ....
மாமா இருக்கும் போது நீ ஏன் கஷ்டப்படுற என்றபடி அவள் கையில் இருந்த துண்டை வாங்கி மனைவியின் நீல கூந்தலை துவட்டி விட்டவன் வாசனை கும்முனு இருக்குடி...
ஏண்டி அந்த ஷாம்பு எல்லாம் போட்டு குளிக்க மாட்டியா என்று கேட்கவும் இல்லை என்றாள். இயற்கையாகவே பெண்களின் கூந்தலுக்கு மணம் இருக்கு என்பது உன்னுடைய முடி வாசனை வச்சு தான் நானும் உண்மையிலேயே தெரிந்துகொண்டு என்கவும் என்ன சார் ஒரே லவ் மூடுல இருக்காரு போல...
கண்டிப்பாக அதில் என்ன சந்தோஷம் என்று மனைவியை கையில் ஏந்த ஐயோ மாமா காலைல என்ன விளையாட்டு இது???
அண்ணா என்றவாறு கூப்பிட்டுக்கொண்டே பெருமாளின் பங்காளி உறவினரான கணேசன் வீட்டிற்குள் வர அவரை பார்த்து வள்ளி அப்பாயி வாயா கணேசா என்றார்..
சித்தி இதுல சீம்பாலு திரட்டல் இருக்கு. நம்ப மாடு கன்னு போட்டுருக்கு.மருமக மாசமா இருக்குன்னு ரேவதி கொடுத்தாள் என்று தூக்குவாளியை வள்ளி அப்பாயிடம் நீட்ட உன் தம்பி பொண்டாட்டிங்க இங்க தான் இருக்கிறார்களே கூப்பிட்டு குடுயா என்றார்..
சீதா என்று கணேசன் கூப்பிட இதோ வரேன் என்று ரூமியிலிருந்து வந்தவர் வாங்க மாமா அக்கா நல்லா இருக்கா கல்யாணத்துக்கு வேலை எப்படி போகுதென்றார்.
பொண்ணு படிப்பு ஏப்ரலில் முடியுதாமா.மே ல கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்றாங்க.அறிவும் ஏப்ரல் கடைசில டிக்கெட் போட்டு வரேன்னு சொல்லி இருக்கிறேன்..
ரெண்டு பேர் கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கிறேன் ஆனா எனக்கு தான் ஒரே வீட்டில் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க மனசு வரலை மா. சொன்னாலும் உங்கக்கா கேட்க மாட்டேங்கிற என்று கணேசன் சொல்ல, அக்கா என்ன நினைக்கிறதுனா பின்னாடி ஒன்னுக்கொன்னு துணையாக இருக்கணும்னு நினைக்கிறாங்க போல மாமா என்கவாம்...
அது வாஸ்தவம் தான் மா. எல்லாரும் ஒரே போல இருப்பாங்க சொல்ல முடியாது வெவ்வேறு வீட்டில் இருந்தாலும் புதுசா நமக்கு ஒரு உறவு கிடைக்கும் அதை யோசிக்கணும்.
நாளைக்கு ஒன்னு ஒன்னு மன கஷ்டம் வந்தா நல்லா இருக்குமா? அதான் நான் யோசிக்கிறேன் என்றவருக்கு,அதுலாம் இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் புரிந்து நடத்துகிறாங்கதான்.
ஒன்னுக்கு பத்து வாட்டி எல்லாரும் போய் விசாரிச்சு தானே முடிவு பண்ணி இருக்கு அதெல்லாம் வருத்தப்படாதேய்யா.நம்ப அய்யனாரு துணை இருக்கும் போது எல்லாம் நல்லபடியாக நடக்கணுமென்று வள்ளி அப்பாயி சொல்லும் போது கோயிலுக்கு போயிருந்த ராதா, செல்வி தாமரை மூவரும் வீட்டிற்குள் வந்தவர்கள் அவரை பார்த்து வாங்க மாமா என்றனர்.
என்னப்பா வாலி என்று செல்வி அவரிடம் வர உம் பெரியா சீம்பால் பண்ணுனா கண்ணு அதான் டா என்று மகளிடம் கொடுக்க ஐஐஐ என்று வாங்கியவள் வாலியை திறந்து வாசம் பிடித்தாள்.
எம்மா தாமரை இது நம்ப ஊட்ல நடக்க போரிய பெரிய காரியம்.உன் கிட்ட ஒரு விசயத்தௌ சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் என்கவும்,சொல்லுங்க மாமா என்றாள்.
ஏதோ புடவையில பொண்ணு மாப்பிள்ளை படத்தை நெய்யுறாங்களாமே அதை போல உன் கொழுந்தன் பொண்டாட்டிக்கு வேண்டுமாம்.நான் சொன்னேன் எங்க குடும்பத்து மூத்த மருமகளுக்கு எல்லாம் தெரியும் எப்படி வேண்டும் சொல்லுங்கனு...
நான் போன்ல பேசணும் மாமானு அந்த என்று சொல்லிச்சு உன் நம்பர கொடுத்துட்டு வந்து இருக்கிறேன் சுதா எப்படியும் இன்னைக்கோ நாளைக்கே உனக்கு போன் பண்ணும் அது கிட்ட என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்க...
அப்படிங்களா மாமா செய்துட்டா போகுநு.முதல் முதல்ல நம்ம குடும்பத்து நல்ல காரியத்துக்கு பண்றேன் நல்லபடியா செஞ்சி தரேன் மாமா என்றவளை பார்த்தவர் கதிர் பொண்டாட்டி என்பதை விட அன்பழகன் மவள் கொக்கா என்று சிரித்தார்.இந்தாத்தா என்ன செலவானாலும் பரவாயில்லை என்று பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட ஏய்யா கணேசா என்னய்யா இதுலாமென்று பாட்டி கேட்க
.
மாமா அதுலாம் வேண்டாம் என்றே தாமரை சொல்ல,சொந்தம் வேற தொழில் வேறு.அதை கடைபுடிச்சதால் தான் நம்மால் இந்த ஊர்ல மரியாதையா வாழ முடியுது.எவனுக்கோ குடுக்க வேண்டியதை என் மருமவளுக்கு குடுத்துட்டு போறேன் என்றவர் சித்தி நீ வாங்கு உன் கைராசி உன் பேரன் பொண்டாட்டியால் நம்ப குடும்பம் தழைக்கணும்னு வேண்டி வாங்கென்று அவரிடம் நீட்ட அய்யனாரப்பன் தயவுல எல்லாம் நல்லதா நடக்கும்யா என்றார்.மேலும் சிறிது நேரம் பேசி இருந்து விட்டு அங்கிருந்து சென்றார்
ஏம்மா தாமரை மாமா சொல்லிட்டு போன போல நம்ப போட்டோவும் வச்சு புடவை தயாரிக்கலாமா என்று ராதாவும் சீதாவும் ஆச்சரியமாக கேட்க ஆமாங்க அத்தை முடியும்.
இப்ப அதுதான் ட்ரெண்ட்டு என்று சொல்ல அப்போ எங்களுக்கு உங்க மாமாவும் நாங்களும் இருக்கறது போல படம் வரைந்து புடவை செய்து தரியா முதல் முறையாக இருவரும் கேட்க இவ்வளவு தானே என்றவள் படியில் ஏறி மேலே சென்றவள் 3 பாக்ஸ் எடுத்துட்டு வந்து அப்பாயிக்கு ஒனும் இரண்டு அத்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்றை கொடுத்தவள் திறந்து பாருங்கள் என்றாள்.
என்னத்தா இது என்று ஆர்வத்தோடு முதலில் வள்ளி அப்பாயி புடவை திறந்து பார்க்க அவர் வயதுக்கு கட்டுவது போல் இருந்த புடவையின் முந்தாணையில் அப்பாயியும் பிரகாசம் தாத்தாவும் இருப்பது போல இருந்தது...
எப்பத்தா இது செஞ்ச என்க..இப்பொழுது சீதாவும் ராதாவும் அவர்கள் புடவையை ஆர்வமாக பிரித்துப் பார்க்க அவர் அவரை கணவர்களோடு இருப்பது போல முந்தானையில் செய்திருந்தாள்.
அவர்களும் அந்த முந்தானை மேல் தடவி பார்த்து கண்கலங்கி போனார்கள் சந்தோஷத்தில். ..
ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவில்லையே என்று ஆச்சரியமாக கேட்க இதை நெய்து மூணு நாள் ஆகுதுங்கத்தை. சரி தமிழ் புத்தாண்டு வருது அன்னைக்கு சர்ப்ரைஸா உங்க மூணு பேருக்கு கொடுக்கலாம் என்று நினைத்தேன் அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்களே என்று சிரித்தாளா.
வார்த்தையே இல்லை..இவ்வளவு திறமையான புள்ளைய வீட்டிலேயே வைத்திருக்கிறோமே என்று கஷ்டமா தான் இருக்கு என்று சொல்ல..அதுதான் மாமா எனக்காக தறி ரெடி பண்ணி கொடுத்து இருக்காங்களேத்தை.
சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்ல மாமா இது செய்து தருவார்கள் என்கவும் நீ வேற தாமரை எனக்கே என் மவனானு இன்னும் புரியவில்லை என்று வள்ளி அப்பாயி சொல்லவும் நல்லா கேட்டுக்கோ தாமரை...
பெத்த அம்மாவுக்கே மகனோட குணம் புரியல எங்களுக்கு எங்க இருந்து புரியுமென்று சீதா சொல்ல இதுதான் சாக்கு என்று அக்கா தங்கச்சி இருவரும் வேல் கம்பு தூக்கிட்டு வந்துருங்க ...
ஏன் தாமரை உம்மாளுங்களுக்கும் இதை போல என்று புடவை காட்ட, எல்லாருக்கும் தான் ரெடி பண்ணிருக்கேன் அப்பாயி என்று சிரித்தாள்..
அவன் அவன் ஒரே நேரத்துல நாலு பேருக்கு ரூட்டு விடுறான் அவனெல்லாம் நிம்மதியா இருக்கிறான் ஒருத்திய வெச்சுகிட்டு நான் படுற பாடு இருக்கே என்று புலம்பிக் கொண்டே நின்றிருந்த ஜான் என்னதான் பண்றாள்?
எப்போ இவளை கிளம்பி வர சொன்னேன் இன்னும் வராமல் இருக்கிறாளே என்று திட்டிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் அல்லி வருவது தெரிந்தது.
எப்பா ஒரு வழியா வந்தாளே என்று காரை ஸ்டார்ட் பண்ணி பண்ண வேகமாக வந்த அல்லி காரின் கதவை திறந்து உட்கார்ந்தவள் ஏங்க என்னை இப்படி இம்சை படுத்துறீங்க???
ஸ்கூலும் முடிஞ்சிடுச்சு இப்ப வந்தா யாராச்சும் எதுவும் கேட்க மாட்டாங்களா என்கவும் ஏண்டி கட்டிக்க போற என் கூட வெளியில் ஒரு நாளைக்கு வருது உனக்கு என்ன அவ்ளோ அக்கப்போரா இருக்ககு...
24 மணி நேரம் வீட்டில் தின்னுகிட்டு வயலில் தாண்டி சுத்திட்டு கிடக்குற என்க,அல்லியோ தன்னவனை முறைத்து பார்த்தாள்.
கோபப்படாத செல்லம் என்றவன் ஏதாவது சாப்டியா என்று கேட்க ம்ம் என்று சொன்னாள். என்ன சாப்ட என்கவும் இட்லி சாம்பார்...ஆமாம் நீங்க சாப்பிட்டீங்களா என்று அல்லிக் கேட்க பரவால்ல இப்பயாவது கேட்க மனசு வந்துச்சு நல்ல விஷயம் தான் என்றவன் காரை அங்கிருந்து மதுரை நோக்கி ஓட்டி சென்றான்.
வீட்ல என்னடி சொல்லிட்டு வந்தயென்று கேட்க நல்லவேளை இன்னைக்கு அந்த டான்ஸ் டீச்சர் வர சொல்லி இருந்தாங்களா அது தான் சொன்னேன். எனக்கு கொஞ்சம் பயமிவே இருக்கு இப்படி பொய் சொல்லிட்டு வரோமேயென அல்லி வருத்தமாக சொல்ல...
லவ் பண்ணாக்க இப்படியெல்லாம் புதுசு புதுசா பொய் எல்லாம் கண்டுபிடிக்கணும் டி என்று தன்னவளின் கன்னத்தை கிள்ளி சொல்ல முதல்ல ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க என்று அவன் கையை தட்டி விட்டாள்.
தாமரை என்று கதிர் கூப்பிட இங்க தான் இருக்கேன் என்று சொன்னாள்.ம்ம் என்றவன் பால்கனிக்கு வர தாமரையோ தலை குளித்துவிட்டு முடியை வெயிலில் உலர்த்தி காய வைப்பது தெரிந்து.
என்னடி அதுக்குள்ள குளிச்சிட்டியா என்று கேட்கவும் ஏன் நேரம் காலம் பார்த்துதான் குளிக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்க..இல்லடி தனியாக கஷ்டப்படுவியே உனக்கு நான் ஹெல்ப் பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்தில் மாமா கேட்டேன். அது பொறுக்கலையா நல்லதுக்கு இந்த உலகத்தில் காலமில்லை என்று சொல்லும் கணவனை முறைத்து பார்த்தவள்,நீங்க என்ன குளிக்க வைப்பீங்க அப்படித்தானே எங்கவும். ஆமாண்டி இதுல என்ன சந்தேகம் மாமா உன்னை எத்தனை வாட்டி குளிக்க வைச்சிருக்கேன் என்று சொல்லு வாயை மூடுங்க என்று சிரித்தாள்.
ஏண்டி இப்படி...நான் என்ன தப்பா சொல்லிட்டேன் இப்படி என்னை அமைதியாக சொல்கிறாயே..
எத்தனை முறை உனக்கு சோப்பு என்று சொல்ல வர ஐயோ சாமி நீங்க கிளாஸ் எனக்கு எடுக்க வேணாம் இப்ப எதுக்கு என்னை தேடிட்டு வந்தீங்க அதை மட்டும் சொல்லுங்க என்றாள்.
நாளைக்கு மித்ரன் அண்ணன் பையனுக்கு பேர் வைக்கிறாங்க இல்லையா என்கவும் ஏற்கனவே அவர்களைப் பற்றி தாமரையிடம் சொல்லி இருந்ததால் அப்படியா எனபவளுக்கு ம்ம், உன் நொண்ணன்,ஜான், நான் மூணு பேரு தான் போறோம் என்றான்...
காத்திருந்தேன்...காரில் போய்க் கொண்டிருக்கும் போது ஜானின் போனிற்கு கால் வர ப்ளூடூத்தை ஆன் பண்ணியவன் சொல்லுடா என்க...எங்கடா போயிட்டு இருக்க என்று கதிர் கேட்க விண்வெளிக்கு போயிட்டு இருக்கேன் என்றான்.
சரி எங்க வேணாலும் போய் தொலை. நைட் நம்ப கனியூருக்கு கிளம்பனும் ஞாபகம் இல்லையா என்கவும் அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்குடா.
விசா ரெனிவல் பண்ணனும் அதுக்காக மதுரை வரைக்கும் போயிட்டு இருக்கேன் என்றான்.
நீ பாஸ்போர்ட் ரெனிவல் பண்ண போற சரி,கூட உன் பொண்டாட்டி எதுக்கு வராள் என்கவும் அதிர்ந்து போய் காரை நிறுத்தினான்.
அவ எங்கடா இங்கே என்க,ரீல் அந்து போயிடுச்சுடா நாயே என்று சொல்லவும் அவளுக்கும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணா தான்டா போறேன.
அதுதான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே என்கவும் ஆமாம் பங்காளி.அதை மறந்துட்டேன் சரி சரி சீக்கிரம் வந்து சேருங்கள் என்று சொல்லி கதிர் போனை வைத்தான்.
இப்பொழுது தாமரையோ தனது கணவனை முறைத்து பார்த்தவள் அல்லி ஜான் மாமா கூட போயிருக்கிறாளா என்க,பாஸ்போர்ட் விஷயமா நான் தாண்டி கூப்பிட்டு போக சொன்னேன்.
இப்போ உங்க வீட்ல சொன்னா உடனே அனுப்பிடுவீங்களா என்கவும் அதுவும் சரிதான் என்றாள்.
அப்புறம் டி பொண்டாட்டி வேற என்ன விசேஷம் என்க...துரை இப்பதான் பாரினிலிருந்து வந்திருக்கிறார் நலம் விசாரிக்கிறார்.
ஏண்டி வீட்ல இருந்தா விசாரிக்க கூடாதுன்னு சட்டமா இருக்கா?என் பொண்டாட்டியை தான் விசாரிக்கணும் பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டியவா நான் கேட்கிறேன்???
ஓஓஓஓ அய்யாவுக்கு இந்த எண்ணம் வேற இருக்கா என்றவளை பார்த்தவன் ஒருத்தியை கரெக்ட் பண்றதுக்கு எனக்கு தொண்டை தண்ணி வத்தி போச்சு. இதுல இன்னொருத்தன் பொண்டாட்டியை நான் எங்க இருந்து பார்க்கிறது போடி ....
மாமா இருக்கும் போது நீ ஏன் கஷ்டப்படுற என்றபடி அவள் கையில் இருந்த துண்டை வாங்கி மனைவியின் நீல கூந்தலை துவட்டி விட்டவன் வாசனை கும்முனு இருக்குடி...
ஏண்டி அந்த ஷாம்பு எல்லாம் போட்டு குளிக்க மாட்டியா என்று கேட்கவும் இல்லை என்றாள். இயற்கையாகவே பெண்களின் கூந்தலுக்கு மணம் இருக்கு என்பது உன்னுடைய முடி வாசனை வச்சு தான் நானும் உண்மையிலேயே தெரிந்துகொண்டு என்கவும் என்ன சார் ஒரே லவ் மூடுல இருக்காரு போல...
கண்டிப்பாக அதில் என்ன சந்தோஷம் என்று மனைவியை கையில் ஏந்த ஐயோ மாமா காலைல என்ன விளையாட்டு இது???