Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 565
- Thread Author
- #1
நீலகிரி:
இரவு 8:00 மணிக்கு எல்லாம் கோயம்புத்தூருக்கு வந்தவன் மனைவியை நேராக அங்கிருந்த பிரபலமான கடைக்கு அழைத்துப் போனவன் அவளுக்காக விதவிதமான துணிகளை வாங்க,செல்லாவோ எவ்வளவோ மறுத்து பார்த்தாள்.
அதை எல்லாம் அவன் சட்டை பண்ணவே இல்லை.இரண்டு பைகள் நிறையாக புடவைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன்,அடுத்ததாக நேரம் ஆகிவிட்டதை பார்த்து அங்கிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றான்...
காலேஜ் படிக்கும் போது தோழிகளோடு ஹோட்டலுக்கு சென்றிருக்கிறாள் அதன் பிறகு இப்பொழுது தனது கணவனோடு போவதை நினைக்க இது நிஜம் தானா என்று எண்ணம் வராமல் இல்லை.
பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்தவர்கள் மீண்டும் நீலகிரிக்கு கிளம்பினர்.சிறிது தூரம் சென்ற பிறகு வண்டியை ஓரமாக நிறுத்தியவன் இன்னொரு பேகில் இருந்த இரண்டு ஜர்க்கினை எடுத்து ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு அவனும் போட்டுக் கொண்டு பின்னர் பயணத்தை தொடர்ந்தனர்.
வீட்டிற்கு வரவே இரவு 11 மணிக்கு மேலானது. வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ரூமில் வைத்து விட்டு பிரஷ் ஆகி படுத்து விட்டனர்.
வழமைப்போல் விடியல் ஆரம்பமாக குளித்துவிட்டு தயாராகி கீழே வந்தவள் பூஜை ரூமுக்கு சென்று விளக்கேற்றி விட்டு கணவனுக்காக சமைக்கும் வேலையை தொடங்கினாள்.
அப்பொழுது மயிலா போன் பண்ணி இருவரையும் நல விசாரித்து விட்டு இன்னும் இரண்டு நாட்கள் சென்று வருகிறோம் என்று சொல்ல சரிங்கத்தை என்று சொல்லி வைத்தவள் சமையல் வேலையை பார்க்கலானாள். . .
மேலும் இரண்டு நாட்களும் மனைவியை விட்டு பிரியாமல் அவளோடவே ஈருடல் ஓர் உயிராய் மருது ஒட்டி இருக்க அவ்வப்போது செல்லாதான் இது நிஜமா இல்லை கனவாய் என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இரவு உணவை சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்து படுத்திருக்கும் போது நாளையிலிருந்து வேலைக்கு போறேன் மாமா என்று சொல்ல,சரி டி என்றவன் நானும் கோயம்புத்தூர்ல பழைய மில்லில் நாளைக்கு ஜாயின் பண்ண வேண்டும் என்று சொன்னான்.
ம்ம் என்றவள் லஞ்ச் எடுத்துட்டு போறீங்களா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம். அங்கே கேண்டில் இருக்குடி சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கும் பிரச்சனை இல்லை.
ஏற்கனவே அங்க வேலை பார்த்துருக்கேன் இல்லையா என்றவன், ரெண்டு வாரம் டே ஷிப்ட் இரண்டு வாரம் நைட் ஷிப்ட் இப்படி மாறி மாறி தான் வரும், ஓஓஓ இவ்ளோ தூரம் டெய்லி போயிட்டு வருவதா மாமா என்றாள்...
அதற்காக என்ன பண்ண முடியும்?
நான் வேண்டுமானால் கோயம்புத்தூர்லயே பழைய போல ரூம் எடுத்து தங்கிக்கவா என்று கேட்க, அதுவும் நல்லது தான் மாமா...
அடி போடி..என் செல்ல பொண்டாட்டி விட்டுட்டு என்னாலெல்லாம் இனிமே தனியா இருக்க முடியாது புரியுதா எவ்ளோ நேரம் இருந்தாலும் நான் வீட்டுக்கு வந்துருவேன் என்க ஐ லவ் யூ மாமா என்று கணவனை அணைத்துக் கொண்டாள்.
சீமக்கரைக்கு போனவர்களும் வந்துவிட அதேபோல் இருவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். மருது காலையில் எட்டு மணிக்கு எல்லாம் வீட்டில் இருந்து கிளம்பி விடுவான் என்பதால் செல்லாவே அதிகாலையில் எழுந்து வந்து கணவனுக்காக தினமும் விதவிதமாக சமைத்து வைப்பாள்...
ஒரு மாதம் கடந்திருக்க இருவரும் அவர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். அத்தை சம்பளம் என்று வேதா மயிலா இருவரிடமும் சொல்ல, அதிலிருந்து பாதியை முருகாயிக்கு அனுப்பு செல்லா என்று வேதா சொல்லவும் அவளோ ஆச்சரியமாக பார்தாள்.
மருமகளின் முகத்தைப் பார்த்த மயிலாகவும் வேதாமா சரியாக சொல்கிறாங்க.ஒரு பிள்ளையை பெற்று வளர்த்து அதுக்கு செலவு பண்ணி படிக்க வைக்கிறது சாதாரண விஷயம் அல்ல முருகாயியும் அண்ணனும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கனு எங்களுக்கு தெரியும்மா என்றார்.
இனி இரண்டு வாரம் முழுவதும் நைட் ஷிப்ட் என்பதால் காலையில் செல்லாவை பள்ளிக்குக் கொண்டு போய் விடுவதாகும் மாலையில் அழைத்து வருவதாகவும் முதல் நாள் இரவே செல்லாவிடம் சொல்ல எதுக்கு மாமா...
நடந்து போற தூரம் தானே நான் போய்க்கிறேன் என்று சொல்ல இருக்கட்டும்டி.ஏண்டி நான் என்ன உன்னை கையிலே தூக்கிட்டு போறேன்னு சொல்றேன் என்றபடி மனைவியை கைகளில் எழுதியவன் 45 50 கிலோ தான் இருக்கிற.
இதெல்லாம் வெய்டா என்று மனைவியை தலைக்கு மேல் தூக்கி தண்டால் எடுப்பது போல் சொல்ல அது சரி என்று சிரித்தாள்....
சமையல் வேலையை முடித்துவிட்டு செல்லாவும் ஸ்கூலிற்கு கிளம்பி கீழே வர மருதுவும் பைக்கில் காத்திருக்க ஒருவித கூச்சத்தோடு பின்னாடி போய் செல்லா உட்கார வண்டியை அங்கிருந்து ஸ்கூலை நோக்கி ஓட்டி போக பிள்ளைளோடு நடந்து போய்க் கொண்டிருந்த பவிக்கு செல்லா வண்டியில் போவதை பார்த்து எரிச்சலாக வந்தது....
சீமக்கரை:
தாமரை என்றவாறு வேலு வீட்டிற்கு வர அண்ணே உள்ளதான் இருக்கிறேன் என்றாள். பாப்பா சாப்பாடு ஆயிடுச்சா டா??
ம்ம் ணா...ரெடியாக தான் இருக்கு எடுத்துட்டு போக வேண்டியதுதான் என்க,இரண்டு பைகளில் அங்கு தயாராக இருந்த சாப்பாடுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் வயலுக்கு சென்றான்.
காலையிலிருந்து தறி ரூமிற்கு போகாததால் இப்பொழுது போகலாமா என்று நினைக்கும் போது ஏதோ அவளுக்கு சோடையாக இருப்பது போல் தோண,அங்கிருந்த திண்ணையிலே தலகாணி எடுத்துப் போட்டவள் டிவி ஆன் பண்ணிவிட்டு தரையிலே படுத்து விட்டாள்.
வழக்கமாய் அவள் எப்போதும் பாடல் தான் விரும்பி கேட்பாள் என்பதால் அந்த சேனலை தேடி வைத்தவள் பார்த்து கொண்டே அப்படியே தூங்கிவிட்டாள்.
நேரமும் கடந்து செல்ல தோட்டத்தில் இருக்கும் பசுக்கள் கத்தும் சத்தத்தில் எழுந்தவள் மணியை பார்க்க மாலை 4.30 என்று காட்டியது.
எழுந்து போய் தோட்டத்தில் பார்க்க அங்கே பசு தண்ணீர் குடிக்கும் குண்டானோ கீழே சாய்ந்து கிடப்பது தெரிந்தது. அதற்கு தண்ணீர் தாகம் என்பதை புரிந்தவள் வாலியில் தண்ணீரை மொண்டு போய் அந்த குண்டானை நிமிர்த்தி அதில் ஊற்ற பசுவும் தனது தாகத்தை தணித்துக் கொண்டது.
பின்னர் வீட்டிற்கு வந்தவள் பிரஷ் ஆகிவிட்டு வயலுக்கு போனவர்களுக்காக காத்திருக்க அவர்களும் வந்து சேர்ந்தனர்.
கதிரோ தனது மனைவி முகத்தைப் பார்த்தவன் ஏன் சோகமா இருக்கிறாள் வழக்கம்போல் இல்லையே என்று யோசனையோடு குளித்து வெளியே வர தாமரையும் டீயோடு ரூமிற்குள் வந்தாள்.
தலையை துவட்டிக் கொண்டே போய் கதவை தாழிட்டவன் என்ன ஆச்சுடி ஒரு மாதிரியா இருக்க என்று கேட்க இல்லையே நல்லா தானே இருக்கிறேன் என்றாள்.
அப்படியா...பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே உடம்பு ஏதாவது சரியில்லையா என்று அவள் கன்னம் நெற்றி கழுத்து என தொட்டு பார்த்தவன் அப்படியே இடுப்பில் கைய வைக்க கணவனை முறைத்து பார்த்தாள்.
எல்லா இடத்திலும் சூடா இருக்கான்னு செக் பண்ணனும் இல்லையாடி என்றபடி மனைவியை தன்னோடு இறுக்கி அணைத்தவன் மதியம் சாப்பிட்டியா என்று கேட்க அப்பொழுது தான் அவள் சாப்பிடாத விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.
அச்சச்சோ நான் தூங்கிட்டேன் என்க,அடியே அறிவு கெட்டவளே சாப்பிட்டு தூங்க வேண்டியது தானடி என்ன அப்படி உனக்கு ஞாபக மறதி என்று இடுப்பிலே கிள்ளி வைக்க அய்யோஓஓ மாமா கையா இது கத்திரிக்கோலா என்று கத்தினாள்.
நேரத்துக்கு ஏற்ற போல என்றவன் மனைவியை இரண்டு கைகளிலும் தூக்கி சுத்த ஐயோ தலை சுத்துற போல இருக்கு மாமா இறக்கி விடு என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சொல்ல மனைவி பரிசமோ கணவனுக்கு கிளர்ச்சியூட்ட... கண்ட்ரோல்டா கதிர் கண்ட்ரோல் இரவு பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்...
ஐயோ விடுங்க டீ எடுத்துட்டு வந்தா நீங்க என்ன என்ன வேலை பண்றீங்க என்று தாமரை சினுங்க ஏண்டி இப்போ என்னடி பண்ணிட்டேன்??
இப்படி கடிச்சு வச்சேனா என்று அவள் கன்னத்தை கடித்தான் இப்படி கிள்ளினேனா என்று அவள் இடுப்பில் கிள்ளினான் இல்லை இப்படி முத்தம் கொடுத்தேனா என்று அவள் உதட்டில் முத்தம் கொடுக்க தாமரையோ கால்களை உதறி இறங்க முயன்றாள்.
சூழ்நிலை உணர்ந்தவன் பின்னர் கையில் இருந்து மனைவியை கீழே இறக்கி விட்டு அவள் புடவையை சரி பண்ணி விட இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றாள்...
ஏன்டி வேற எதுக்கு குறைச்சல் சொல்லு பாக்கலாம்??
அடிக்கடி இந்த வார்த்தையை சொல்றியே உன் புருஷன் ஆண்மகன் இல்லையா என்று கேட்க யோவ் நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற என்று தாமரை முறைக்க...
எதேஏஏ யோவாஆஆ???என்னடி இப்படி பேசுற வாங்க போங்க ஆரம்பித்து அப்புறம் வா போ வந்துச்சு அடுத்தது மாமான்னு இருந்துச்சு இப்ப யோவ்ள வந்து நிக்குது அடுத்தது டா தான் போல என்க...
இரவு 8:00 மணிக்கு எல்லாம் கோயம்புத்தூருக்கு வந்தவன் மனைவியை நேராக அங்கிருந்த பிரபலமான கடைக்கு அழைத்துப் போனவன் அவளுக்காக விதவிதமான துணிகளை வாங்க,செல்லாவோ எவ்வளவோ மறுத்து பார்த்தாள்.
அதை எல்லாம் அவன் சட்டை பண்ணவே இல்லை.இரண்டு பைகள் நிறையாக புடவைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன்,அடுத்ததாக நேரம் ஆகிவிட்டதை பார்த்து அங்கிருந்த ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றான்...
காலேஜ் படிக்கும் போது தோழிகளோடு ஹோட்டலுக்கு சென்றிருக்கிறாள் அதன் பிறகு இப்பொழுது தனது கணவனோடு போவதை நினைக்க இது நிஜம் தானா என்று எண்ணம் வராமல் இல்லை.
பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்தவர்கள் மீண்டும் நீலகிரிக்கு கிளம்பினர்.சிறிது தூரம் சென்ற பிறகு வண்டியை ஓரமாக நிறுத்தியவன் இன்னொரு பேகில் இருந்த இரண்டு ஜர்க்கினை எடுத்து ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு அவனும் போட்டுக் கொண்டு பின்னர் பயணத்தை தொடர்ந்தனர்.
வீட்டிற்கு வரவே இரவு 11 மணிக்கு மேலானது. வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ரூமில் வைத்து விட்டு பிரஷ் ஆகி படுத்து விட்டனர்.
வழமைப்போல் விடியல் ஆரம்பமாக குளித்துவிட்டு தயாராகி கீழே வந்தவள் பூஜை ரூமுக்கு சென்று விளக்கேற்றி விட்டு கணவனுக்காக சமைக்கும் வேலையை தொடங்கினாள்.
அப்பொழுது மயிலா போன் பண்ணி இருவரையும் நல விசாரித்து விட்டு இன்னும் இரண்டு நாட்கள் சென்று வருகிறோம் என்று சொல்ல சரிங்கத்தை என்று சொல்லி வைத்தவள் சமையல் வேலையை பார்க்கலானாள். . .
மேலும் இரண்டு நாட்களும் மனைவியை விட்டு பிரியாமல் அவளோடவே ஈருடல் ஓர் உயிராய் மருது ஒட்டி இருக்க அவ்வப்போது செல்லாதான் இது நிஜமா இல்லை கனவாய் என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இரவு உணவை சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்து படுத்திருக்கும் போது நாளையிலிருந்து வேலைக்கு போறேன் மாமா என்று சொல்ல,சரி டி என்றவன் நானும் கோயம்புத்தூர்ல பழைய மில்லில் நாளைக்கு ஜாயின் பண்ண வேண்டும் என்று சொன்னான்.
ம்ம் என்றவள் லஞ்ச் எடுத்துட்டு போறீங்களா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம். அங்கே கேண்டில் இருக்குடி சாப்பாடு எல்லாம் நல்லா இருக்கும் பிரச்சனை இல்லை.
ஏற்கனவே அங்க வேலை பார்த்துருக்கேன் இல்லையா என்றவன், ரெண்டு வாரம் டே ஷிப்ட் இரண்டு வாரம் நைட் ஷிப்ட் இப்படி மாறி மாறி தான் வரும், ஓஓஓ இவ்ளோ தூரம் டெய்லி போயிட்டு வருவதா மாமா என்றாள்...
அதற்காக என்ன பண்ண முடியும்?
நான் வேண்டுமானால் கோயம்புத்தூர்லயே பழைய போல ரூம் எடுத்து தங்கிக்கவா என்று கேட்க, அதுவும் நல்லது தான் மாமா...
அடி போடி..என் செல்ல பொண்டாட்டி விட்டுட்டு என்னாலெல்லாம் இனிமே தனியா இருக்க முடியாது புரியுதா எவ்ளோ நேரம் இருந்தாலும் நான் வீட்டுக்கு வந்துருவேன் என்க ஐ லவ் யூ மாமா என்று கணவனை அணைத்துக் கொண்டாள்.
சீமக்கரைக்கு போனவர்களும் வந்துவிட அதேபோல் இருவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர். மருது காலையில் எட்டு மணிக்கு எல்லாம் வீட்டில் இருந்து கிளம்பி விடுவான் என்பதால் செல்லாவே அதிகாலையில் எழுந்து வந்து கணவனுக்காக தினமும் விதவிதமாக சமைத்து வைப்பாள்...
ஒரு மாதம் கடந்திருக்க இருவரும் அவர்கள் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர். அத்தை சம்பளம் என்று வேதா மயிலா இருவரிடமும் சொல்ல, அதிலிருந்து பாதியை முருகாயிக்கு அனுப்பு செல்லா என்று வேதா சொல்லவும் அவளோ ஆச்சரியமாக பார்தாள்.
மருமகளின் முகத்தைப் பார்த்த மயிலாகவும் வேதாமா சரியாக சொல்கிறாங்க.ஒரு பிள்ளையை பெற்று வளர்த்து அதுக்கு செலவு பண்ணி படிக்க வைக்கிறது சாதாரண விஷயம் அல்ல முருகாயியும் அண்ணனும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கனு எங்களுக்கு தெரியும்மா என்றார்.
இனி இரண்டு வாரம் முழுவதும் நைட் ஷிப்ட் என்பதால் காலையில் செல்லாவை பள்ளிக்குக் கொண்டு போய் விடுவதாகும் மாலையில் அழைத்து வருவதாகவும் முதல் நாள் இரவே செல்லாவிடம் சொல்ல எதுக்கு மாமா...
நடந்து போற தூரம் தானே நான் போய்க்கிறேன் என்று சொல்ல இருக்கட்டும்டி.ஏண்டி நான் என்ன உன்னை கையிலே தூக்கிட்டு போறேன்னு சொல்றேன் என்றபடி மனைவியை கைகளில் எழுதியவன் 45 50 கிலோ தான் இருக்கிற.
இதெல்லாம் வெய்டா என்று மனைவியை தலைக்கு மேல் தூக்கி தண்டால் எடுப்பது போல் சொல்ல அது சரி என்று சிரித்தாள்....
சமையல் வேலையை முடித்துவிட்டு செல்லாவும் ஸ்கூலிற்கு கிளம்பி கீழே வர மருதுவும் பைக்கில் காத்திருக்க ஒருவித கூச்சத்தோடு பின்னாடி போய் செல்லா உட்கார வண்டியை அங்கிருந்து ஸ்கூலை நோக்கி ஓட்டி போக பிள்ளைளோடு நடந்து போய்க் கொண்டிருந்த பவிக்கு செல்லா வண்டியில் போவதை பார்த்து எரிச்சலாக வந்தது....
சீமக்கரை:
தாமரை என்றவாறு வேலு வீட்டிற்கு வர அண்ணே உள்ளதான் இருக்கிறேன் என்றாள். பாப்பா சாப்பாடு ஆயிடுச்சா டா??
ம்ம் ணா...ரெடியாக தான் இருக்கு எடுத்துட்டு போக வேண்டியதுதான் என்க,இரண்டு பைகளில் அங்கு தயாராக இருந்த சாப்பாடுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் வயலுக்கு சென்றான்.
காலையிலிருந்து தறி ரூமிற்கு போகாததால் இப்பொழுது போகலாமா என்று நினைக்கும் போது ஏதோ அவளுக்கு சோடையாக இருப்பது போல் தோண,அங்கிருந்த திண்ணையிலே தலகாணி எடுத்துப் போட்டவள் டிவி ஆன் பண்ணிவிட்டு தரையிலே படுத்து விட்டாள்.
வழக்கமாய் அவள் எப்போதும் பாடல் தான் விரும்பி கேட்பாள் என்பதால் அந்த சேனலை தேடி வைத்தவள் பார்த்து கொண்டே அப்படியே தூங்கிவிட்டாள்.
நேரமும் கடந்து செல்ல தோட்டத்தில் இருக்கும் பசுக்கள் கத்தும் சத்தத்தில் எழுந்தவள் மணியை பார்க்க மாலை 4.30 என்று காட்டியது.
எழுந்து போய் தோட்டத்தில் பார்க்க அங்கே பசு தண்ணீர் குடிக்கும் குண்டானோ கீழே சாய்ந்து கிடப்பது தெரிந்தது. அதற்கு தண்ணீர் தாகம் என்பதை புரிந்தவள் வாலியில் தண்ணீரை மொண்டு போய் அந்த குண்டானை நிமிர்த்தி அதில் ஊற்ற பசுவும் தனது தாகத்தை தணித்துக் கொண்டது.
பின்னர் வீட்டிற்கு வந்தவள் பிரஷ் ஆகிவிட்டு வயலுக்கு போனவர்களுக்காக காத்திருக்க அவர்களும் வந்து சேர்ந்தனர்.
கதிரோ தனது மனைவி முகத்தைப் பார்த்தவன் ஏன் சோகமா இருக்கிறாள் வழக்கம்போல் இல்லையே என்று யோசனையோடு குளித்து வெளியே வர தாமரையும் டீயோடு ரூமிற்குள் வந்தாள்.
தலையை துவட்டிக் கொண்டே போய் கதவை தாழிட்டவன் என்ன ஆச்சுடி ஒரு மாதிரியா இருக்க என்று கேட்க இல்லையே நல்லா தானே இருக்கிறேன் என்றாள்.
அப்படியா...பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே உடம்பு ஏதாவது சரியில்லையா என்று அவள் கன்னம் நெற்றி கழுத்து என தொட்டு பார்த்தவன் அப்படியே இடுப்பில் கைய வைக்க கணவனை முறைத்து பார்த்தாள்.
எல்லா இடத்திலும் சூடா இருக்கான்னு செக் பண்ணனும் இல்லையாடி என்றபடி மனைவியை தன்னோடு இறுக்கி அணைத்தவன் மதியம் சாப்பிட்டியா என்று கேட்க அப்பொழுது தான் அவள் சாப்பிடாத விஷயம் ஞாபகத்துக்கு வந்தது.
அச்சச்சோ நான் தூங்கிட்டேன் என்க,அடியே அறிவு கெட்டவளே சாப்பிட்டு தூங்க வேண்டியது தானடி என்ன அப்படி உனக்கு ஞாபக மறதி என்று இடுப்பிலே கிள்ளி வைக்க அய்யோஓஓ மாமா கையா இது கத்திரிக்கோலா என்று கத்தினாள்.
நேரத்துக்கு ஏற்ற போல என்றவன் மனைவியை இரண்டு கைகளிலும் தூக்கி சுத்த ஐயோ தலை சுத்துற போல இருக்கு மாமா இறக்கி விடு என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சொல்ல மனைவி பரிசமோ கணவனுக்கு கிளர்ச்சியூட்ட... கண்ட்ரோல்டா கதிர் கண்ட்ரோல் இரவு பார்த்துக் கொள்ளலாம் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்...
ஐயோ விடுங்க டீ எடுத்துட்டு வந்தா நீங்க என்ன என்ன வேலை பண்றீங்க என்று தாமரை சினுங்க ஏண்டி இப்போ என்னடி பண்ணிட்டேன்??
இப்படி கடிச்சு வச்சேனா என்று அவள் கன்னத்தை கடித்தான் இப்படி கிள்ளினேனா என்று அவள் இடுப்பில் கிள்ளினான் இல்லை இப்படி முத்தம் கொடுத்தேனா என்று அவள் உதட்டில் முத்தம் கொடுக்க தாமரையோ கால்களை உதறி இறங்க முயன்றாள்.
சூழ்நிலை உணர்ந்தவன் பின்னர் கையில் இருந்து மனைவியை கீழே இறக்கி விட்டு அவள் புடவையை சரி பண்ணி விட இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்றாள்...
ஏன்டி வேற எதுக்கு குறைச்சல் சொல்லு பாக்கலாம்??
அடிக்கடி இந்த வார்த்தையை சொல்றியே உன் புருஷன் ஆண்மகன் இல்லையா என்று கேட்க யோவ் நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுற என்று தாமரை முறைக்க...
எதேஏஏ யோவாஆஆ???என்னடி இப்படி பேசுற வாங்க போங்க ஆரம்பித்து அப்புறம் வா போ வந்துச்சு அடுத்தது மாமான்னு இருந்துச்சு இப்ப யோவ்ள வந்து நிக்குது அடுத்தது டா தான் போல என்க...