• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834

25


அப்பாவின் உடல்நிலை சரியில்லாதது, அவளின் அவசரக் கல்யாணம் அதிலும் ஸ்ரீனிவாசனை திருமணம் முடித்தது சரியா? தவறா? என வினாத்தாள் போல் விடை தெரியாமல் திணறிக் கொண்டிருந்த தருணங்கள். தன் குழப்பத்தால்தான் திருப்பூரில் இருந்தாள்.

தர்ஷனையும், சிந்துவையும் திருப்பூர் கார்மெண்ட்ஸையும், கோவை டெக்ஸ்டைல்ஸையும் பார்த்துக்கொள்ளச் சொல்லி, ஸ்ரீனிவாசன் சென்னை சென்றிருந்தான்.

அப்பாவைப் பற்றின தவறான அபிப்ராயங்கள் ஒரு முடிவுக்கு வந்ததுமே, கணவனைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டது அவளின் மனது. ‘அன்றொரு நாள் மனம் கேட்டது அவன் வேண்டுமென்று. லூசு பிடிச்சி அலையப்போற என்று. அது இன்று நடக்கிறதோ!’ என தோன்ற வைத்த தருணங்கள். இருந்தாலும் சில விஷயங்கள் முடிவுக்கு வராமல் கணவனிடம் தன் மனம் திறக்க மனமில்லை அவளுக்கு.

திடீரென்று ஒருநாள் இரவில் வந்தவனை எதிர்கொள்ள முடியாமல் திணற, பாரதியின் அறிவுறுத்தலில் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் அவளின் நலம் விசாரித்து தெரிந்த பின், நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“இண்டர்நேஷனல் ஸ்கூல் யூனிபார்ம் மாறுது. அதுக்கான ரெடிமேட் ட்ரஸ் பள்ளியிலேயே டிஸ்ட்ரிப்யூட் பண்றாங்க. சைஸ் வாரியா, பிஃப்த் ஸ்டாண்டர்ட் வரை ஸ்கர்ட் அன்ட் டாப் மேல கோட். கோட்கு பதிலா வேற எதாவது டிபரண்டா இருந்தாலும் ஓகே. சிக்ஸ்த்லயிருந்து சுடிதார் செட். அப்புறம் ஸ்போர்ட்ஸ் ப்ளேயர்ஸ்க்குன்னு எப்பவும் ஆர்டர் வந்துகிட்டேதான் இருக்கும். நெருங்கின ரொம்ப பாபுலரான கார்மெண்ட்ஸ்கு மட்டும் தெரியுற மாதிரி சீக்ரெட்டா அனோன்ஸ் பண்ணியிருக்காங்க. சோ, இந்த ஆர்டர் நமக்கு கிடைச்சா கோடிக்கணக்குல வருமானம்ன்றது ஒருபுறம்னா, நம்ம கார்மெண்ட்ஸ் அடுத்த லெவல்கு போகும். இதுக்கான எஸ்டிமேட் போடணும். அதான் உன்னைத்தேடி வந்தேன். ட்ரஸ் மாடல் நீ பண்ணினா சரியாயிருக்கும்னும் தோணிச்சிது. நீ படிச்சதும் அது சம்பந்தமாதான” என்றான் விளக்கமாய்.

அவளுக்குத் தெரிந்தது, தன்னைப் பார்க்க எதோ ஒரு காரணம் தேவை. மற்றபடி இதைப்போல் பல ஆர்டர்களை ஈசியாக தன்னிடம் இழுக்கும் திறமையுள்ளவன் என்பது தெரியாதவளா அவள். ஏற்கனவே அவனைப்பற்றித் தெரிந்திருந்தாலும், இந்த கொஞ்ச நாட்களில் கவனிக்காதது போல் அவன் புராணத்தைத் தானே கேட்டுக் கொண்டிருக்கிறாள். கணவனுக்கான தன்னுள் மறைந்திருந்த காதல் வெளிவருவதை எண்ணித் தன்னாலேயே உதடுகள் புன்னகையைத் தத்தெடுக்க, ஒருவித சுவாரஸ்யத்துடன் அவனைப் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கிற? நான் என்னவோ உன்னைக் கவர் பண்றதுக்காக வந்த மாதிரி பார்க்கிற?” என்றதில் இன்னுமே சிரிப்பு வர, வாய்விட்டு சத்தமாக சிரித்தவளையே மென்மையாக பார்த்திருந்து, “அப்படியே என்னோட வந்திரேன் ரதி. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றான் தன் ஏக்கத்தை வார்த்தையாக வெளியிட்டு.

சட்டென்று சுதாரித்தவள், “இ...இல்ல நான் அப்பா கூடதான் இருக்கப்போறேன்” என்றாள் வேகமாய்.

“ஹ்ம்... உன்னிஷ்டம்” என தோளைக்குலுக்கி, “சரி வா இந்த ஹெல்பாவது பண்ணலாமே” என்றவன் வேலைக்கு இடையில், “ஆமா இந்த விஷயம் அண்ணனுக்கு தெரியுமா?” என்றாள் கேள்வியாய்.

“எனக்கே தெரிஞ்சிருக்குன்னா, என்னோட சீனியர் என் மச்சானுக்கு தெரியாமல் இருக்குமா? அவரும் இன்னைக்கு தீயா வேலை செஞ்சிட்டிருப்பார். டௌட்னா காலையில கேட்டுப்பாரு” என்று முடிக்குமுன் கதவு தட்டப்பட்டது.

சூடான டீயுடன் வெளியே நின்றிருந்தாள் தாரிணி.

“பாரு என் மச்சான் தீயா வேலை செய்யல. டீயால வேலை செய்யிறாரு” என்றான் கேலியாய்.

“அண்ணா, எதோ வேலை செஞ்சா ஓகேதான” என்றுவிட்டு தாரிணி சென்றிருந்தாள்.

இருவருமாக அன்றிரவே அனைத்தையும் செய்து முடித்து மடிக்கணிணியை மூட இரவு மூன்றானது. இருவரும் ஒரே அறையில் எப்படி என்று திணறலுடன் திண்டாடிய நிமிடங்கள், கண்ணுள் வந்து சென்றது அழகாய்.

“என்ன சுருள் முடிஞ்சிருச்சா?” என்ற கணவனின் கேலியில் நினைவு வந்தவள், சந்தோஷத்தில், “அந்த ஆர்டர் நமக்கு கிடைச்சிருக்கா? கங்க்ராட்ஸ்” என்றாள் கணவனின் கண்பார்த்து.

“கங்க்ராட்ஸ் உனக்கும்தான்” என்றவன் ஒரு கையால் அவளை அணைத்தபடி வைத்து, இன்னொரு கையால் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த சாக்லேட் எடுத்து, “ஸ்வீட் எடு கொண்டாடு” என்று அவளுக்கு ஊட்டிவிட்டான்.

“தேங்க்ஸ்” என்றாள்.

“நீயே வச்சிக்கோ.”

“என்னத்த?” என புரியாமல் அவள் விழிக்க,

அவள் கண்களையே பார்த்திருந்தவனின், “என்னைத்தான்” என்ற பதில் வித்தியாசமான சத்தத்தில் வர, “ம்… வச்சிக்கிட்டா போச்சி” என்றவள் குரலிலுள்ள குழைவு அவனைக் குழைக்க, “நிஜமாத்தான?” என்றான் குரல் மாறாமல்.

“அப்ப நான் என்ன பொய்யா சொல்றேன். நிஜமாவே வச்சிக்கிறேன்” என்று வேகமாக பதிலளித்தவள், கணவனின் ஆர்ப்பாட்டமான சிரிப்பில் தான் உளறியிருப்பது தெரிய, சட்டென்று உதடு கடித்தாள்.

“மெய்தான்னு தெரியுது” என்றபடி இன்னுமே தன்னுடன் இறுக்க, “நா...நான் இல்ல. நான் அண்ணாகிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று அவனைத் தள்ளிவிட்டு ஓடப்பார்த்தவளைத் தடுத்து, “எங்க எஸ்கேப்பாகப் பார்க்கிற? ஒழுங்கா சொன்னதைச் செஞ்சிட்டுப் போ” என்றான்.

“ப்ளீஸ் என்னை விடுங்களேன்” என்றவள் கெஞ்சல் அவனைச் சேராதிருக்க, “இப்ப நான் என்ன சொன்னேன்னு இப்படிப் பண்றீங்க? வச்சிக்கிட்டா போச்சின்னு சொல்லவேயில்ல தெரியுமா?” என குரலில் அப்பாவித்தனத்தைக் காட்டி கண்சிமிட்டினாள்.

“நீ எதுவும் சொல்லலை” என்றவன் பார்வை அவள் கண்ணிலிருந்து இறங்கி இதழில் இடம்பிடித்து, “உன் உதடுதான் சொல்லிச்சி” என்றான் பார்வையை நகர்த்தாமல்.

“அ...அதுக்கு நான் பொறுப்பில்ல” என்றவள் பார்வை வெட்கத்தில் தரை பார்க்க, “விடுமா. நான் மட்டுமே பொறுப்பாகிக்கறேன்” என்று தலை சரித்து மென்மையாக முத்தமிட்டு வன்முறையில் இறங்க ஆரம்பித்தான்.

“ஹ்ம் விடுங்க. பாட்டி, அண்ணி இல்லன்னா தர்ணி வந்துரப்போறாங்க” என்று கணவனைத் தள்ளிவிட்டு நகர்ந்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்த,

“அப்ப நாங்க வந்தா பரவாயில்லையா? நாங்க எதையும் பார்க்கலபா? எந்த சத்தமும் எங்களுக்கு கேட்கல” என்றதில் இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர்.

முதலில் திகைத்து பின் மகிழ்ச்சியில், “சிந்து அண்ணி” என்று ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டாள்.

“எப்படியிருக்க பாகீ? ஹேய்! பதில் வேண்டாம் கிச்சன் ரொமான்ஸ் பார்த்தாலே தெரியுது” என்றாள் குறும்பாய்.

“ச்சோ அண்ணி. அதெல்லாம் ஒண்ணுமில்லை. காஃபி கேட்டு வந்தாங்க” என்றாள் தரையைப் பார்த்தவாறு.

“ஓ...ஒண்ணுமில்லையா? அப்ப ஏன் இந்தக் கண்ணு என்னை நேரா பார்க்காம தரையைப் பார்க்குது?”

“சிந்துமா என் முறைப்பொண்ணை ரொம்ப கலாய்க்காத. உனக்கு கலாய்க்கணும்னு தோணினா, இதோ நிற்கிறானே தர்ஷன் ஓ சாரி சு...தர்ஷன் அவனை கலாய்.”

“ஹலோ மிஸ்டர் ப்ரதர். அதுக்கு நான் லைசன்ஸ் வாங்கியாச்சி. நீங்க சொல்லித்தான் செய்யணும்னு இல்ல. ஏனுங்க நான் சொல்றது சரிதானுங்களே சு...தர்ஷன்” என்றாள் கிண்டல் குரலில்.

“அடி பின்னிருவேன். அண்ணன், தங்கச்சி ரெண்டுபேருக்கும் நான்தான் ஊறுகாயா. ஓடிப்போயிருங்க” என்றான் அவன்.

“அண்ணா சைட்டடிச்ச முறைப்பொண்ணையே கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்க. அப்போதிருந்த சூழ்நிலையில வாழ்த்தக் கூட முடியலை. அதுக்கப்புறம் சொல்லணும்னு நினைச்சா, அதுக்கு வேல்யூ இருந்த மாதிரி தெரியலை” என்றாள் அவர்கள் தனித்தனியாக இருந்ததை நினைத்து. “ஆனா, இப்ப இருக்கு” என்று அவளின் சிவந்த முகம் பார்த்து, “அதான் வாழ்த்துறேன்” என்றாள்.

“அதனாலென்ன இதற்கும் சேர்த்தே வாழ்த்திரு” என்று ஆர்டர் கிடைத்ததைச் சொன்னான்.

“வாவ்! கண்டிப்பா வாழ்த்தியே ஆகணும்” என்று மேற்கொண்டு எப்படி செய்யலாம் என நால்வரும் விவாதித்தார்கள். இவர்களின் பேச்சினூடே ஒவ்வொருவராக எழுந்து வர, கிடைத்த ஆர்டருடன், கிச்சன் ரொமான்ஸை யாரிடமும் சொல்லமாட்டேன் என்று சொல்லி அனைவருக்கும் சிந்து ஒளிபரப்ப, அந்த பரபரப்பினூடே குற்றாலம் கிளம்பினார்கள் அனைவரும்.

ஸ்ரீனிவாசன், ப்ரவீண், சுதர்ஷன் மூவரின் கார்களில் கிளம்ப, தனக்கு வேலைய இருப்பதாகச் சொல்லிய சங்கரையும், நீங்க குடும்பத்தோட போறீங்க. இடையில் நாங்கள் எதற்கென்று கேட்ட ஜெகனையும் விடவில்லை அவர்கள்.

வாகனத்தை எல்லாம் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, அவரவர் ஜோடியின் கைகோர்த்து நடக்க ஆரம்பிக்க, ராஜியால் வேகமாக நடக்க முடியாதென்பதால் ஜெகன் அவளின் வேகத்திற்கு கைபிடித்து அணைத்தாற்போல் வர, “வாவ்! எவ்வளவு சூப்பராயிருக்குல்ல. அப்படியே ஜில்லுன்னு காற்றடிக்குது” என்ற கோரஸ் குரல்களில் அருவி அருகில் வந்துவிட்ட குதூகலம் இருந்தது.

“ஆமா சூப்பராத்தான் இருக்கும். எல்லாரும் ஜோடியா வந்திருக்கீங்கள்ல அப்படித்தான் இருக்கும்” என்ற நவீனின் சலிப்பில், “டேய்! அதுக்காக இருபத்தொரு வயசு பையனுக்கு ஜோடி ரெடி பண்ணியா கூட்டிட்டு வர முடியும்?” என்று ப்ரவீண் கேட்டான்.

“ஏன் பாகீ அக்காக்கு என் வயசுதான? அவங்களுக்கு மேரேஜ் பண்ணிட்டீங்க?” என்றான் வேகமாய்.

“நவீ நீ கவலையேபடாத. இங்க இருக்கிறதுல அழகான பொண்ணா பார்த்து தள்ளிட்டுப் போயிரலாம்” என பாகீரதி சொல்ல, அவள் பார்வை சென்ற இடம் பார்த்த தாரிணி வந்த சிரிப்பை அடக்கி, “கண்டிப்பா பாக்கி. எனக்கும் இந்தப்பொண்ணு ஓகே” என்று அந்த அழகுப்பெண்ணைக் காட்டினாள்.

அவள் காண்பித்த இடத்திலிருந்த குரங்கைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க, “அக்கா! அண்ணி கேலி பண்ணலாம். தம்பிய நீங்க பண்ணலாமா?” என்றான் பாவமாய்.

“நான் இப்ப உன்னோட அக்கா இல்ல. உன் அண்ணியோட ப்ரண்ட் மட்டும்தான்” என்றாள் சிரித்தபடி.

“ஹேய் ரதி! ஏன் என்னோட மாப்பிள்ளைய கலாய்க்கிற? அந்த உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு.” ஸ்ரீனிவாசன் ஆதரவாக பேசி கலாட்டா செய்ய, “வேண்டாம் விட்டுருங்க நான் பாவம். டேய் குட்டீஸ்! இந்த ஓல்ட்ஸ் கூட நமக்கென்ன வேலை. வாங்க நாம தனியா என்ஜாய் பண்ணலாம்” என்று குழந்தைகளுடன் நகர்ந்தான்.

“நவீ அந்தப்பக்கம் உன் முறைப்பொண்ணுங்க நிறைய இருக்காங்க. மாட்டின மகனே கொஞ்சியே கொன்னுருவாங்க. ஒழுங்கா எங்க கூடவே வா” என்ற ப்ரவீணின் அன்பான அழைப்பில், “குட்டீஸ் வேற வழியேயில்லை. எல்லா பாதையையும் லாக் பண்ணிட்டாங்க. சோ, இவங்க லூட்டியை சகிச்சிட்டு நாமளும் போவோம்!”

“நீங்க எங்க போனாலும் நாங்களும் வர்றோம் சித்தப்பா” என்று அசராமல் பதிலளித்தார்கள். “நண்பேன்டா” என இருவரையும் சேர்த்தணைத்தான்.

குற்றாலத்தில் ஆடி முடித்து செண்பகா அருவி, தேனருவி, என்று பார்த்து முடித்து புலியருவி செல்வதாக அனைவரும் கிளம்ப, “அது கொஞ்சம் கஷ்டம் சட்டுன்னு ஏற முடியாது. கொஞ்சம் ரிஸ்க் எடுக்கணும்” என்று சிலர் அறிவுரை செய்தனர்.

பெண்களைக் கீழ் நிறுத்தி ஆண்கள் அதை சாதித்தே தீருவது என்று மேல்வரை சென்று வந்தார்கள். பார்க்கப் பார்க்க ஆனந்தமே. இடையில் கொண்டு வந்திருந்த உணவை அனைவரும் சாப்பிட்டு, மறுபடியும் சுற்ற ஆரம்பித்து வீடு வர மாலையானது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
மாலை வீட்டினுள் நுழையும்போதே அங்கு இருந்தவர்களைக் கண்டு அனைவரும் ஆனந்தக் கூச்சலிட, சந்திரா பாகீரதியிடம் மட்டும் பேசவில்லை. முதலில் வித்தியாசமாக உணராதவள் நேரமாக ஆக தாய் தன்னிடம் பேசவில்லை. கோவத்தில் இருக்கிறார் என்பது புரிய, “ம்மா... என்ன கோவமா இருந்தாலும் பேசாம இருக்காதீங்க. என்னைத் திட்டக் கூட, ஏன் ரெண்டு அடி கூட போட்டுருங்கம்மா ப்ளீஸ். நான் உங்ககிட்ட சொல்லாமல் வந்தது தப்புத்தான். அதுக்காக இப்படி ஒரு தண்டனை வேண்டாம்மா” என்று தன் முன் மண்டியிட்ட மகளை சட்டை செய்யாது சந்திரா அமர்ந்திருக்க, பாரதியிடம் சென்று, “பாரதிம்மா அம்மாவைப் பேசச் சொல்லுங்களேன்” என தாயிடம் இழுத்து வந்தாள்.

நாட்டாமை போல் ‘செல்லாது செல்லாது’ என்பதை சந்திரா கண்களில் காட்ட,

“உங்க பாடு. உங்கம்மா பாடுங்கம்ணி” என பாரதி விலகிக்கொள்ள, அதன்பின் சிந்து, தாரணி, சுகந்தி, சங்கர், ப்ரவீண், நவீன், சுதர்ஷன், பாட்டி, தாத்தா என யார் வந்தும் அசராமல் இருந்தார்.

“அப்பா” என்று தந்தையிடம் வந்து நின்றாள்.

“ஏன் சந்திரா?” என்ற ராம கிருஷ்ணனிடம்,

“நீங்க பேசாதீங்க ராம். இவ செஞ்ச தப்புக்கு நீங்க சப்போர்ட் செஞ்சீங்கதான. ரெண்டுபேரும் சேர்ந்து ப்ளான் பண்ணிட்டு, என்ன ஒரு நடிப்பு நடிச்சீங்க. இவ ஊருக்குப் போறான்னதும், என்னமா பிழியப்பிழிய அழுதீங்க ராம். அப்பக் கூட மும்பைக்கு போய்த்தான் ஆகணுமான்னு கேட்க மனசு வரல. சீனு கண்டுபிடிக்கலன்னா அப்படியே மாசக்கணக்குல கண்டினியூ பண்ணியிருப்பீங்கதான?” என்று திட்டினார்.

கையும் களவுமாக பிடிபட்டதில் ராம் முகம் விளக்கெண்ணை குடித்தது போலிருக்க, “சந்திரா அம்முக்கு எல்லாரையும் நேர்ல பார்க்கணும்னு ஒரு ஆசை” என்றார் எச்சில் விழுங்கியபடி.

“அதுக்காக?”

“அதுக்காகத்தான்” என ராம் முடிக்க.

“நீங்க போங்க ராம்” என்று விரட்டி, “பாரதிக்கா உங்க புருஷனை சைலண்ட்டா உட்காரச் சொல்லுங்க” என்றதும் பாரதியின் தலையசைவில் ராம் அமைதியானார்.

“ம்மா... ஏன் இந்தப் பிடிவாதம்? ஐம் சாரிம்மா. ப்ளீஸ் ப்லீவ் மீ. இனி இது மாதிரி நடக்காது” எனும்போது, “வாட் எ சர்ப்ரைஸ்!” என்றபடி இவர்களை இறக்கிவிட்டு அப்படியே யாரையோ பார்க்கச் சென்றிருந்த ஸ்ரீனிவாசன் உள்ளே வந்தான்.

கணவனைக் கண்டவள் முகம் மலர வேகமாக கணவனருகில் சென்று கைபிடித்து, “அம்மாகிட்ட நீங்க சொல்லுங்க” என்றதும் புரியாமல் அவன் சந்திராவைப் பார்த்து, பின் மனைவியிடம் திரும்ப, “அம்மா என்கிட்ட பேசமாட்றாங்க. நான் செஞ்சது தப்புத்தான். உங்களுக்கும் தான இதில் கோவம் இருந்திருக்கும். ஆனா, நீங்க என்னை ஒண்ணும் சொல்லலதான. அம்மாவை பாருங்க. சாரி சொல்லியும் என்கிட்ட பேசமாட்றாங்க” என்றாள் அழுகுரலில்.

மனைவியின் வருத்தம் பிடிக்காமல் அவளின் கைக்கு அழுத்தம் கொடுக்க, அதில் தெம்பு வரப்பெற்றவள் கணவனின் கண்பார்க்க, ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்ற கணவனின் சைகை பாஷையில் தன்னை மறந்து அவனை ரசித்திருக்க, சட்டென்று அவன் சிரிக்கவும், சில வினாடிகள் அதில் அழகாய்ச் சிதறியவள், அவனின் துளைக்கும் பார்வையில் தலைகவிழ்ந்தாள்.

“வா” என்றழைத்து மாமியாரிடம் சென்றவன், “என்ன அத்தை என் பொண்டாட்டிகிட்ட பேசமாட்டேன்றீங்களாம். என்ன விஷயம்?”

“ஏன் உன் பொண்டாட்டிகிட்ட பேசலன்னா, என்ன செய்யுறதா ஐடியா?”

“ஹ்ம்... என் பொண்டாட்டியை கூட்டிட்டு ஓடிரலாம்னு இருக்கேன்” என்றான் சீரியஸாக முகத்தை வைத்து.

“இப்பக் கூட அவ ஓடிதான் வந்திருக்கா. உன்னை நினைச்சாளா? இல்லை என்னை நினைச்சாளா சொல்லு?” என ஆதங்கமாய்க் கேட்டார்.

“அ..அது” என தடுமாறியவன் அருகில் குனிந்து, “இங்க பார் சீனு முறைப்பையா. ஒழுங்கா பேசி எங்கம்மா கூட சேர்த்து வைக்கிற வழியைப் பாருங்க. இல்ல பழைய கேஸை தூசு தட்டி...” என முடிக்குமுன், ‘என்ன பழைய கேஸ்’ என்பதுபோல் அவன் பார்க்க.. “அதான்பா! பலம் பலவீனம்” என எடுத்துக்கொடுத்தாள். அவனோ அதைக்கேட்டு சிரிக்க,

“சிரிக்காதீங்க. அதை தூசுதட்டி உங்களை டைவர்ஸ் பண்ணிருவேன். ஜாக்கிரதை” என்றாள்.

“ஏய் லூசு அறிவிருக்கா?” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல,

‘விளையாட்டுக்குத்தான பேசினோம். அவனுக்கு கோவம் வந்துவிட்டதோ’ என்று சற்று பயத்துடன் கணவனைப் பார்க்க,

அவனோ அவளை உச்சிமுதல் பாதம்வரை, கண்களால் வலம் வந்து கண்ணடித்தவன், “செம ஃபிகர் ரதி நீ. நான் இதுவரை உன்னை எதுவும் பண்ணலதான? எதுவும் முழுசா பார்க்கல! கொடுக்கல! எடுக்கல! அதெல்லாம் முடிஞ்சபிறகு...” என்று நிறுத்தினான்.

‘ஹான்!’ என திறந்தவாய் மூடாதிருக்க, “ஸ்... வாயை மூடு ரதி. எல்லாம் முடிஞ்ச பிறகு வேணும்னா என்னை வச்சிக்கோ. இல்லைன்னா டைவர்ஸ் பண்ணிரு. ஏதோ உன் மூலமா என்னோட பிரம்மச்சர்யத்துக்கு ஒரு விடிவு வரட்டுமே!” என்று அசராமல் பதிலடித்து சடுதியில் இடத்தைக் காலி செய்தான்.

“ஏய்! என்ன சொன்ன? சீனு ஓடாத சொல்றேன்ல” என அவனை விரட்ட, “ஹேய்! உண்மையைத்தான்டி சொன்னேன். இதுல யாராவது பொய் சொல்வாங்களா?” என்றபடி மாடியேற, மற்றவர்களுக்கு உள் விவகாரம் தெரியாவிட்டாலும் ஒருவித நிம்மதியுடனும், சிரிப்புடனும் அவர்களைக் கண்டார்கள்.

“எஸ்கேப்பாகாத நில்லு சீனு. கையில மாட்டின கொன்னுருவேன். பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணிருவேன் சொல்றாளேன்ற ஃபீல் கொஞ்சம் கூட இல்லாம, அனுபவிச்சிட்டு கழட்டி விடலாம்னு பார்க்கறியா? விட்டுருவேனா உன்னை. இரு உன்னை முழுசா காயப்போடுறேன்.”

“ஹ்க்கும்... இப்பனாப்ல என்ன வாழுதாம். ஒரு டச் இல்ல. ஒரு ஹக் இல்ல. ஒரு கிஸ் இல்ல. ஒரே போர் பேபி நீ” என்றான் அவளை திரும்பவும் வம்பிழுத்து.

“உங்களுக்கு நான் போரடிக்கிறேனா. போ புருஷனாச்சே இன்னும் ஒன் வீக்ல இந்த ப்ராப்ளம் சால்வ் பண்ணிட்டு, உங்ககிட்ட வரலாம்னு நினைச்சேன். ஆனா, நீங்க என்னைக் கழட்டிவிடப் பார்க்குறீங்க” என பொய்யாகக் கண்ணைக் கசக்கினாள்.

“அச்சச்சோ! ரதிமா! உன் கண்ணுல தண்ணீர் ஊத்துதே. தமிழ்நாட்டுல தண்ணிக்கு பஞ்சமான நேரத்துல இந்த ரதி பால்ஸ்ல ஓயாத தண்ணியா வருது. உப்புத் தண்ணீரா இருந்தாலும் எதுக்காவது உதவும். இரு முறைப்பொண்ணு ட்ரம் எடுத்துட்டு வர்றேன்” என பரபரத்ததில்,

அவளுக்கு சிரிப்பு வர அதை அடக்கி அவனை முறைத்தவள், “ட்ரம்மா எடுத்துட்டு வர்றீங்க? பொண்டாட்டி அழறாளே சமாதானப்படுத்துவோமேன்னு தோணுதா? உங்களைப் போயி நல்லவன்னு சொல்றாங்க எல்லாரும்” என்றாள் சடைப்பாக.

“ஏன் நான் நல்லவனில்லையா?” என்றவன் குரலின் பதம் மாறியிருந்தது.

“ம்ம்... கெட்டபையன்னு சொல்லத்தான் ஆசை. எங்க நீங்கதான் ரொம்ப நல்லவனா இருக்கீங்களே. பக்கத்துல பொண்டாட்டி இருந்தும் கண்ணியம் காக்கிற கன்னிப்பையனாச்சே. உங்களை எப்படி கெட்டவன்னு சொல்றது?”

“பார்றா!” என்றவன் பார்வையின் மாற்றத்தை கண்டவள், வாய்க்கு வாய் பேசிய வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்க, “இப்...படிலாம் பார்க்காதீங்க?” என குரல் தடுமாறியது.

“ஹ்ம்... புருஷன், பொண்டாட்டிக்குள்ள கண்ணியம் பார்த்தா கடைசிவரை நான் பிரம்மச்சாரியாத்தான் இருக்கணும்னு நீதான சொன்ன. அதனால...”

“அதனால?”

“என் பிரம்மச்சர்யத்தைக் கைவிட்டுரலாம்னு இருக்கேன்.”

அவன் எங்கு வருகிறான் என்பதை உணர்ந்தவள் மனமோ, ‘அச்சோ! சும்மாயிருந்தவனை உசுப்பேத்தி ரணகளமாக்கிட்டியே பாக்ஸ்’ என்று இடிக்க, “வேண்டாம் கீழ எல்லாரும் இருக்...” முடிப்பதற்கு முன் கணவனின் கைவளைவிற்குள் வந்திருந்தாள் பாகீரதி.

திமிறியவளை ஒற்றைக்கையால் அடக்கி, முகமெங்கும் விரல்களால் கோலமிட்டு, “உன்னோட கன்னம் வெரி ஷாஃப்ட் ரதி” என்று மென்மையாக முத்தமிட, “சீ...சீனு வேண்டாம்” என்ற முனகல் சத்தம் மட்டுமே வந்தது.

“ப்ச்... இது பேசுறதுக்கான டைம் இல்ல. ஒன்லி ஆக்ஷன் மட்டும்தான்.”

“ஹையையோ! இப்பவும் நான் ஒண்ணும் பார்க்கல” என்று சுதர்ஷன் திரும்பி நின்றான். அவனின் ஹையையோவிலேயே இருவரும் விலகி நிற்க, “அடப்பாவி நண்பா! கீழ எல்லாரும் துரத்திட்டு வந்த ஸ்பீடுக்கு, ஆம்புலன்ஸ் வரவைக்கிற நிலை வந்திருமோன்னு புலம்பிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா இங்கத் தனி சினிமா ஓட்டிட்டிருக்க.”

“சரியான கரடி” என பாகீரதி முணுமுணுத்ததை ஸ்ரீனிவாசன் கேட்டு சிரித்தான்.

“புரியுது சிஸ்டர் என்னைக் கரடின்னு சொல்றது. ஐ அக்ரீ” என்றவன் “சிந்துமா இந்த கொடுமையைக் கேளேன்” என மனைவியை அழைத்தான்.

“டேய்! இந்த கண்ணியமா நடந்துக்கிறதுன்னு ஒண்ணு இருக்கே. அது தெரியுமா? தெரியாதா?”

“ஹா... நண்பர்களுக்குள்ள கண்ணியமாவது ஒண்ணாவது. யூ ஆர் மை பிரண்டுடா” என அவன் அசால்ட்டாக நக்கலடிக்க, அவன் சொன்னதைக் கேட்டு இருவரும் சிரித்தார்கள்.

“என்ன சிரிப்பு? என்னைக் கலாய்க்கிற ஐடியா இருந்தா என் ஒய்ஃப் வருவா. அவகிட்டப் பேசுங்க” என்றான் கெத்தாய்.

“டேய்! உன் உளறல் இருக்கே அதை நிறுத்தவே மாட்டியா? ஹையோ நீ எப்பவும் என்னோட ஃப்ரண்ட்தான்டா. புருஷன் பொண்டாட்டிக்குள்ள கண்ணியம் பார்க்கக்கூடாதுன்னு பேசிட்டிருந்தோம். ஆனா, நட்புக்குள்ளயும் பார்க்கக்கூடாதுன்னு சொல்லிட்ட” என்றான் சந்தோஷமாய்.

“ஆனா, சிஸ்டர், ப்ரதர்குள்ள நிறையவே பார்க்கணும்டா. அப்புறம் இதையெல்லாம் மத்தவங்க பார்க்கிற அளவிற்கு இல்லாம ரூம்குள்ள வச்சிக்கோங்க” என்று கிளம்பினான்.

“டேய் நான் கட்டிக்கிட்டவளை வச்சிக்கன்ற?” நண்பனின் வேகக்குரலில், “எப்பா சாமிகளா இந்த ஆட்டத்துக்கு நான் தயாராயில்ல. நீ எங்க வேணும்னாலும் என்ஜாய் பண்ணு. இப்ப ஆளை விடு” என புலம்பியபடி கீழிறங்கினான்.


அவனைத் தொடர்ந்து அனைவரும் கிழே செல்ல, அதற்குள் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக ஜெகனும், ராஜியும் இடம் பிடித்திருந்தார்கள்.
 
Member
Joined
May 9, 2025
Messages
71
Courtrallam very good place, after the shower, having a bajji and hot tea,yummy.missed those days, expected you will describe that place more.Romance alludhu in a nicer way
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
Courtrallam very good place, after the shower, having a bajji and hot tea,yummy.missed those days, expected you will describe that place more.Romance alludhu in a nicer way
நானுமே சின்ன வயசுல போனது. முடிந்தால் சீக்கிரமே ஒருமுறை போயிட்டு வரணும்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top