Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 658
- Thread Author
- #1
கனியூத்:
இந்தாங்க மாமா டீ யென்று சந்திரிகா டம்ளரை நீட்ட, மனைவியிடம் இருந்து வாங்கி குடித்தவர், பேரப்பிள்ளை எடுத்துட்ட வயசாகிட்ட டி என்று சந்திரன் சிரிக்க, ஆமா நான் கிழவி ஆகிட்டேன். இந்த ஐயா இன்னும் குமரனாகவே இருக்கார் பாருங்களேன் யென்று சந்திரிகா முறைக்க, மாமன் எவ்வளவு இளமை னு காட்டட்டுமா டி?.
இப்போதும் ஒன்னும் கெட்டுப் போகலை. ரஞ்சித்- ரேகாவிற்கு தம்பி இல்லை தங்கை ஏன் சேர்த்தே டுவின்ஸ் ரெடி பண்ண நான் தயார் தானென்று தனது மிலிட்டரிகார மீசையை முறுக்கி விட..
கணவர் சொன்னதை கேட்டவர் அய்யோ மாமா... என்ன பேசுறீங்க?
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையா?.. பேரப்பிள்ளை எடுத்தாச்சு இப்போது தான் ஐயாவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறதோ என்று கணவரை முறைக்க, ஹா ஹா என்று சந்திரன் சிரித்தார்.
அப்பொழுது அவரது போனிற்கு கால் வரும் சத்தம் கேட்கவும், டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்து பார்த்தவர் உன் அண்ணன் தான் என்றவாறு அட்டெண்ட் பண்ணியவர் சொல்லு சுரேன்?. அங்கு எல்லாரும் நல்லாருக்கீங்களா? என்றார்
நாங்கள் நல்லாருக்கோம் மாமா. ஃப்ரி யா இருக்கீங்களானு சுரேந்தர் கேட்க, ஆமா டா. வீட்டில் தான் இருக்கேன். இனி தான் மில்லுக்கு போகணும்.
சரி மாமா.
ஒரு முக்கியமான விஷயம் பேச தான் போன் பண்ணினேன். வர புதன்கிழமை என் தங்கச்சிமகளை பொண்ணு கேட்டு வரலானு இருக்கோம் மாமா. மித்து 3 மாத லீவில் வந்திருக்கான். அதான் கையோடு அவன் கல்யாணத்தை முடித்து விடலாம்னு இருக்கோம்.
நீங்கள் என்ன மாமா சொல்றீங்க?.
தனது தங்கை புருஷனும் அத்தை மகனுமாகிய சுரேந்தர் சொல்லியதை கேட்டவர், சரி சுரேன் நல்லபடியாக பண்ணலாம் என்க, ஹம் மாமா. நாம் தான் ஏற்கெனவே ஜாதக பொருத்தம் பார்த்து விட்டோமே, அதனால் கையோடு தட்டை மாத்திக்கலாம்னு அப்பா அம்மா சொல்றாங்க.
அப்படியா என்றவர் சரி சுரேன் என்றவாறு அழைப்பை கட் பண்ணி விட்டு தனது மனைவியிடம் விஷயத்தை சொல்ல சந்திரிகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.
என்ன தான் தனது உடன்பிறந்தவரின் பிள்ளைக்கு தான் மகளை கொடுக்க போகிறோம் என்பது தெரிந்தாலும் தானாக போய் எப்படி இந்த விஷயத்தை பேசுவதென சந்திரன்- சந்திரிகா இருவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தான் இருந்தனர்.
ஏன் இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலை என்று பேச்சு ஊர்கார்களோடு தெரிந்தவர் களும் கேட்கும் போது மித்ரன் மிலிட்ரியில் இருப்பதை சொல்லி சமாளித்து வந்தனர்.
இருந்தும் வயசு பொண்ணுக்கு இன்னும் கல்யாண பேச்சு ஆரம்பிக்கவில்லையே என்ற கவலையும் இருவரை வாட்டாமலில்லை.
நாட்களும் ஓட புதன்கிழமையும் வந்தது.
நீலாங்கரையிலிருந்து இரண்டு பஸ்ஸில் புறப்பட்டவர்கள் கனியூத்திற்கு வந்து சேர காலை 11 மணியானது. பின்னர் ஊர் வழக்கப்படி தட்டு மாற்றும் வைபோகம் ஆரம்பமானது.
வீட்டில் நடப்பதென்றாலும் சந்திரனும் மகளுக்கான பங்ஷனை நிச்சயதார்த்தம் போல அமர்களமாகவே செய்திருந்தார். மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கள் என்கவும் தனது நண்பர்களோடு மித்ரன் மேடைக்கு வர அவனுக்கான டிரஸ் மற்ற பொருட்கள் இருந்த தாம்பாளத்தை சந்திரன் தம்பதியினர் கொடுத்தனர்.
அதேபோல் ரேகாவிற்கும் கொடுத்து சீக்கிரம் தயாராகி வரச்சொல்லி விட்டு முகூர்த்த ஓலையை இரண்டு ஊர் கார்கள் முன்னிலையில் எழுத, மித்ரனும் தயாராகி வந்தான்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க,
பட்டு வேட்டி சட்டையில் இருந்தாலும், மித்ரனின் உடல்மொழியோ இன்னும் அந்த எல்லையில் நிற்கும் வீரனைப் போலவே எச்சரிக்கையாகவும் கம்பீரமாகவும் இருக்க,ஆனால், அவனது உள்ளம் மட்டும் ஒரு குழந்தையைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, அறையின் மூலையில் இருந்து மெதுவாக வெளியே வந்தாள் ரேகா.
நான்கு வருடங்களாக அவனது பதுங்கு குழியில் ஒட்டி வைத்திருந்த அந்தச் சிறிய புகைப்படத்தில் இருந்த பெண், இப்போது ஆறடி தூரத்தில் உயிருடன் நிற்கிறாள். புகைப்படத்தில் அவளது கண்கள் அசையாது, ஆனால் இப்போது அவள் இமைப்பதைக் கண்டதும் அவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்கிறது. "நாலு வருஷம்... 1,460 நாட்கள்... இதற்காகத்தான் உயிர் பிழைத்திருந்தேனா?" என்ற எண்ணம் அவனது கம்பீரத்தையும் மீறி கண்களில் லேசாக ஈரத்தை கசிய முயற்சித்தது.
தலைகுனிந்துதான் வந்தாலும் மித்ரனின் ஆழமான பார்வையின் அதிர்வை அவள் உணர்ந்தவளோ மெதுவாகத் தலைதூக்கி அவனைப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்தன.
சுற்றியிருந்த உறவினர்களின் சத்தம், மேளதாளம், குழந்தைகளின் கூச்சல் என அனைத்தும் அப்படியே 'அமைதி' ஆனது போல் ஒரு நிசப்தம் நிலவுகிறது.
ரேகாவுக்கு அவன் முகம் முன்பை விடக் கொஞ்சம் ஒடுங்கினாலும் அதே கம்பீரத்தோடு இருப்பது தெரிந்தது.
மித்ரனுக்கோ தன்னவள் முகத்தில் ஒரு முதிர்ச்சியும், தன்னைப் பிரிந்திருந்த ஒரு நீண்ட கால வலியும் தெரியாமலில்லை.
ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை. அந்த முதல் பார்வையில் "நீ வந்துட்டியா?" என்ற கேள்வியும், "உனக்காக வந்துட்டேன்" என்ற பதிலும் மௌனமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பொறுமையாக வந்தவளோ அவன் அருகே அமரும்போது, அவளின் சேலைத் தலைப்பை மெல்லத் தொட்டவனுக்கு "இது நிஜம்தான், நான் கனவு காணவில்லை."என்பது.
சுற்றியிருந்த பெரியவர்கள், "என்ன பொண்ணும் மாப்பிள்ளையும் மௌன விரதம் இருக்காங்களா?" என்று கிண்டல் செய்ய, இருவரும் தர்மசங்கடத்துடன், ஆனால் மனதுக்குள் மிகுந்த ஆத்மார்த்தமாக ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் புன்னகைத்துக் கொண்டனர்.
நான்கு வருடங்களாகத் தினமும் ஒரு முறையாவது அவன் பாதுகாப்பு குறித்து இறைவனிடம் வேண்டாத நாளில்லை. செய்தித்தாளில் 'எல்லைப்பகுதி' என்ற வார்த்தையைப் பார்த்தாலே துடித்துப்போன அவளது மனது, இப்போது அவன் கம்பீரமாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே கரைந்து போனது.
தனது அண்ணனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மிருதுளாவின் பார்வையோ அவ்வப்போது விக்ரமை தீண்டாமலில்லை.
ஆனால் கடிவாளம் கட்டிய குதிரை போல அவள் ஒருத்தி பார்ப்பதை கூட உணராமல் தனது நண்பன் பரத்தோடு பேசியபடி மித்ரனையும் ரேகாவையும் தான் கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் பெரியவர்கள் மோதிரத்தை எடுத்து நீட்ட, மித்ரனோ ரேகாவின் வலது கையைப் பிடிக்க, அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவளது விழி ஓரத்தில் ஒரு துளி நீர் திரண்டு நினாறது.
தன்னவன் கைகள் முரடாக, தழும்புகளுடன் இருப்பதை உணரும்போது அவளுக்குள் ஒரு வலி பிறக்காமலில்லை.
"இந்தத் தழும்பெல்லாம் எனக்காகத்தானே.... உங்களைப் பார்க்கவே பயமா இருந்தது. வருவீங்களா மாட்டீங்களான்னு..."
மித்ரனோ அவளது விரலை லேசாக அழுத்திப் பிடிக்க,அந்த அழுத்தம், "நான் வந்துட்டேன்... இனி உனக்காகவே இருப்பேன்" என்ற ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமாக இருந்தது.
"உன்னைத் தனியா தவிக்க விட்டுட்டேன். இனி இந்தத் தழும்புல உன் கை மட்டும் தான் இருக்கும்."
என்கவும் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
நான்கு வருடக் கோபம், ஏக்கம், காதல் எல்லாம் அந்த ஒரு நொடிப் பார்வையில் வெளிப்பட, அவள் கண்கள் "இனிமேல் உன்னை அனுப்ப மாட்டேன்" என்று அவனிடம் மௌனமாகச் சண்டையிட்டன.
ரஞ்சித்தால் வெளிநாட்டிலிருந்து வரமுடியாத சூழல் என்பதால் மச்சான் முறையாக விக்ரம் தான் மித்ரனுக்கு எல்லாம் செய்தான். பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு நிச்சயமும் நல்லபடியாக முடிந்தது.
அப்போது தனது மேனேஜரிடமிருந்து கால் வர உள்ளே சத்தமாக இருக்கவும் சற்று தள்ளி வந்து வெளியே உள்ள தோட்டத்தில் விக்ரம் பேசிக்கொண்டிருந்து விட்டு உள்ளே வரும் போது சொந்தக்கார குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மிருதுளாவோ அவர்கள் துரத்தி வருவதை கண்டு ஓடி வந்தவளோ விக்ரம் மேலே இடித்து கீழே விழப் போக, எட்டி அவளை பிடித்தவனுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு...
ஏனென்றால் விக்ரமின் வலிமையான கைகளோ மிருதுளா கட்டியிருந்த புடவையின் இடைவெளியில் இருக்கும் வெறுமையான இடையை இறுக்கி பற்றியிருந்தது.
வழவழப்பான இடிப்பிலிருக்கும் சூட்டை உணர்ந்தவனுக்கு முதன் முதலான அவனுக்குள் ஓர் ஆண் மகனாய் உணர்ச்சிகள் தூண்டுவதை அறிந்ததும் ஒன்னும் சொல்ல முடியவில்லை.
பட்டென கையை எடுத்தவன் அங்கிருந்து வேகமாக சென்று விட,பிடிமானம் இல்லாததால் பின் வாக்கில் கீழே விழுந்தவளுக்கு நன்கு அடிபடவும் அப்பா என்று கத்தி விட்டாள்.
அவளின் கத்தல்கள் காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்காமல் எதிலிருந்தோ தப்பி ஓடி வருவது போல படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு வந்தவனோ, கதவை தாழிட்டு ரெஸ்ட் ரூமிற்குள் போய் ஷவரை திறந்து கீழே நின்றவனின் சிந்தனையோ அகல்மதியை எத்தனையோ முறை தொட்டிருக்கும் போதெல்லாம் ஏன் நமக்கு இப்படி ஒரு உணர்வு வரவில்லை என்ற கேள்விகளே பூதாகரமாக அவனுக்கு முன்பு நின்றது.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றானென்று தெரியவில்லை. கதவு தட்டும் சத்தம் வேகமாக கேட்கவும் அதில் நிகழ்விற்கு வந்தவன் ஷவரை நிறுத்தி விட்டு ஈர துணிகளை மாற்றிக் கொண்டு யாரென கதவின் அருகில் போய் கேட்க, ஏய் லூசு பயலே என்ன டா பண்ணி தொலையிர?.
எவ்வளவு நேரம் உன்னை தேடுரதென பரத் திட்டுவது கேட்டு கதவை திறக்கவும், உள்ளே வந்தவனோ அங்கு டவலை கட்டிக் கொண்டிருக்கும் விக்ரமை ஒரு மார்க்கமாக பார்க்க, லூசு பயலே சின்ன பசங்க விளையாடி கிட்டு இருந்ததுங்க கூல்டிரிங்ஸ் மேல ஊத்திடுச்சுங்கடா.
அதான் என்று சமாளித்து வேற டிரஸ் எடுத்து மாற்றிக் கொண்டவன் நீ எதுக்கு இப்படி உயிர் போன போல கத்திட்டு இருந்த என்கவும் ஃபேமிலி போட்டோஸ் எடுப்பதற்கு உன்னை தேடிட்டு இருக்காங்க நாயே வந்து தொலைடா என்றான்
இந்தாங்க மாமா டீ யென்று சந்திரிகா டம்ளரை நீட்ட, மனைவியிடம் இருந்து வாங்கி குடித்தவர், பேரப்பிள்ளை எடுத்துட்ட வயசாகிட்ட டி என்று சந்திரன் சிரிக்க, ஆமா நான் கிழவி ஆகிட்டேன். இந்த ஐயா இன்னும் குமரனாகவே இருக்கார் பாருங்களேன் யென்று சந்திரிகா முறைக்க, மாமன் எவ்வளவு இளமை னு காட்டட்டுமா டி?.
இப்போதும் ஒன்னும் கெட்டுப் போகலை. ரஞ்சித்- ரேகாவிற்கு தம்பி இல்லை தங்கை ஏன் சேர்த்தே டுவின்ஸ் ரெடி பண்ண நான் தயார் தானென்று தனது மிலிட்டரிகார மீசையை முறுக்கி விட..
கணவர் சொன்னதை கேட்டவர் அய்யோ மாமா... என்ன பேசுறீங்க?
பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையா?.. பேரப்பிள்ளை எடுத்தாச்சு இப்போது தான் ஐயாவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறதோ என்று கணவரை முறைக்க, ஹா ஹா என்று சந்திரன் சிரித்தார்.
அப்பொழுது அவரது போனிற்கு கால் வரும் சத்தம் கேட்கவும், டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்து பார்த்தவர் உன் அண்ணன் தான் என்றவாறு அட்டெண்ட் பண்ணியவர் சொல்லு சுரேன்?. அங்கு எல்லாரும் நல்லாருக்கீங்களா? என்றார்
நாங்கள் நல்லாருக்கோம் மாமா. ஃப்ரி யா இருக்கீங்களானு சுரேந்தர் கேட்க, ஆமா டா. வீட்டில் தான் இருக்கேன். இனி தான் மில்லுக்கு போகணும்.
சரி மாமா.
ஒரு முக்கியமான விஷயம் பேச தான் போன் பண்ணினேன். வர புதன்கிழமை என் தங்கச்சிமகளை பொண்ணு கேட்டு வரலானு இருக்கோம் மாமா. மித்து 3 மாத லீவில் வந்திருக்கான். அதான் கையோடு அவன் கல்யாணத்தை முடித்து விடலாம்னு இருக்கோம்.
நீங்கள் என்ன மாமா சொல்றீங்க?.
தனது தங்கை புருஷனும் அத்தை மகனுமாகிய சுரேந்தர் சொல்லியதை கேட்டவர், சரி சுரேன் நல்லபடியாக பண்ணலாம் என்க, ஹம் மாமா. நாம் தான் ஏற்கெனவே ஜாதக பொருத்தம் பார்த்து விட்டோமே, அதனால் கையோடு தட்டை மாத்திக்கலாம்னு அப்பா அம்மா சொல்றாங்க.
அப்படியா என்றவர் சரி சுரேன் என்றவாறு அழைப்பை கட் பண்ணி விட்டு தனது மனைவியிடம் விஷயத்தை சொல்ல சந்திரிகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.
என்ன தான் தனது உடன்பிறந்தவரின் பிள்ளைக்கு தான் மகளை கொடுக்க போகிறோம் என்பது தெரிந்தாலும் தானாக போய் எப்படி இந்த விஷயத்தை பேசுவதென சந்திரன்- சந்திரிகா இருவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டு தான் இருந்தனர்.
ஏன் இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலை என்று பேச்சு ஊர்கார்களோடு தெரிந்தவர் களும் கேட்கும் போது மித்ரன் மிலிட்ரியில் இருப்பதை சொல்லி சமாளித்து வந்தனர்.
இருந்தும் வயசு பொண்ணுக்கு இன்னும் கல்யாண பேச்சு ஆரம்பிக்கவில்லையே என்ற கவலையும் இருவரை வாட்டாமலில்லை.
நாட்களும் ஓட புதன்கிழமையும் வந்தது.
நீலாங்கரையிலிருந்து இரண்டு பஸ்ஸில் புறப்பட்டவர்கள் கனியூத்திற்கு வந்து சேர காலை 11 மணியானது. பின்னர் ஊர் வழக்கப்படி தட்டு மாற்றும் வைபோகம் ஆரம்பமானது.
வீட்டில் நடப்பதென்றாலும் சந்திரனும் மகளுக்கான பங்ஷனை நிச்சயதார்த்தம் போல அமர்களமாகவே செய்திருந்தார். மாப்பிள்ளையை வரச் சொல்லுங்கள் என்கவும் தனது நண்பர்களோடு மித்ரன் மேடைக்கு வர அவனுக்கான டிரஸ் மற்ற பொருட்கள் இருந்த தாம்பாளத்தை சந்திரன் தம்பதியினர் கொடுத்தனர்.
அதேபோல் ரேகாவிற்கும் கொடுத்து சீக்கிரம் தயாராகி வரச்சொல்லி விட்டு முகூர்த்த ஓலையை இரண்டு ஊர் கார்கள் முன்னிலையில் எழுத, மித்ரனும் தயாராகி வந்தான்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க,
பட்டு வேட்டி சட்டையில் இருந்தாலும், மித்ரனின் உடல்மொழியோ இன்னும் அந்த எல்லையில் நிற்கும் வீரனைப் போலவே எச்சரிக்கையாகவும் கம்பீரமாகவும் இருக்க,ஆனால், அவனது உள்ளம் மட்டும் ஒரு குழந்தையைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது.
அப்போது, அறையின் மூலையில் இருந்து மெதுவாக வெளியே வந்தாள் ரேகா.
நான்கு வருடங்களாக அவனது பதுங்கு குழியில் ஒட்டி வைத்திருந்த அந்தச் சிறிய புகைப்படத்தில் இருந்த பெண், இப்போது ஆறடி தூரத்தில் உயிருடன் நிற்கிறாள். புகைப்படத்தில் அவளது கண்கள் அசையாது, ஆனால் இப்போது அவள் இமைப்பதைக் கண்டதும் அவனுக்குள் ஒரு மின்சாரம் பாய்கிறது. "நாலு வருஷம்... 1,460 நாட்கள்... இதற்காகத்தான் உயிர் பிழைத்திருந்தேனா?" என்ற எண்ணம் அவனது கம்பீரத்தையும் மீறி கண்களில் லேசாக ஈரத்தை கசிய முயற்சித்தது.
தலைகுனிந்துதான் வந்தாலும் மித்ரனின் ஆழமான பார்வையின் அதிர்வை அவள் உணர்ந்தவளோ மெதுவாகத் தலைதூக்கி அவனைப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்தன.
சுற்றியிருந்த உறவினர்களின் சத்தம், மேளதாளம், குழந்தைகளின் கூச்சல் என அனைத்தும் அப்படியே 'அமைதி' ஆனது போல் ஒரு நிசப்தம் நிலவுகிறது.
ரேகாவுக்கு அவன் முகம் முன்பை விடக் கொஞ்சம் ஒடுங்கினாலும் அதே கம்பீரத்தோடு இருப்பது தெரிந்தது.
மித்ரனுக்கோ தன்னவள் முகத்தில் ஒரு முதிர்ச்சியும், தன்னைப் பிரிந்திருந்த ஒரு நீண்ட கால வலியும் தெரியாமலில்லை.
ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ளவில்லை, பேசிக்கொள்ளவில்லை. அந்த முதல் பார்வையில் "நீ வந்துட்டியா?" என்ற கேள்வியும், "உனக்காக வந்துட்டேன்" என்ற பதிலும் மௌனமாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பொறுமையாக வந்தவளோ அவன் அருகே அமரும்போது, அவளின் சேலைத் தலைப்பை மெல்லத் தொட்டவனுக்கு "இது நிஜம்தான், நான் கனவு காணவில்லை."என்பது.
சுற்றியிருந்த பெரியவர்கள், "என்ன பொண்ணும் மாப்பிள்ளையும் மௌன விரதம் இருக்காங்களா?" என்று கிண்டல் செய்ய, இருவரும் தர்மசங்கடத்துடன், ஆனால் மனதுக்குள் மிகுந்த ஆத்மார்த்தமாக ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் புன்னகைத்துக் கொண்டனர்.
நான்கு வருடங்களாகத் தினமும் ஒரு முறையாவது அவன் பாதுகாப்பு குறித்து இறைவனிடம் வேண்டாத நாளில்லை. செய்தித்தாளில் 'எல்லைப்பகுதி' என்ற வார்த்தையைப் பார்த்தாலே துடித்துப்போன அவளது மனது, இப்போது அவன் கம்பீரமாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே கரைந்து போனது.
தனது அண்ணனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மிருதுளாவின் பார்வையோ அவ்வப்போது விக்ரமை தீண்டாமலில்லை.
ஆனால் கடிவாளம் கட்டிய குதிரை போல அவள் ஒருத்தி பார்ப்பதை கூட உணராமல் தனது நண்பன் பரத்தோடு பேசியபடி மித்ரனையும் ரேகாவையும் தான் கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
பின் பெரியவர்கள் மோதிரத்தை எடுத்து நீட்ட, மித்ரனோ ரேகாவின் வலது கையைப் பிடிக்க, அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவளது விழி ஓரத்தில் ஒரு துளி நீர் திரண்டு நினாறது.
தன்னவன் கைகள் முரடாக, தழும்புகளுடன் இருப்பதை உணரும்போது அவளுக்குள் ஒரு வலி பிறக்காமலில்லை.
"இந்தத் தழும்பெல்லாம் எனக்காகத்தானே.... உங்களைப் பார்க்கவே பயமா இருந்தது. வருவீங்களா மாட்டீங்களான்னு..."
மித்ரனோ அவளது விரலை லேசாக அழுத்திப் பிடிக்க,அந்த அழுத்தம், "நான் வந்துட்டேன்... இனி உனக்காகவே இருப்பேன்" என்ற ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமாக இருந்தது.
"உன்னைத் தனியா தவிக்க விட்டுட்டேன். இனி இந்தத் தழும்புல உன் கை மட்டும் தான் இருக்கும்."
என்கவும் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
நான்கு வருடக் கோபம், ஏக்கம், காதல் எல்லாம் அந்த ஒரு நொடிப் பார்வையில் வெளிப்பட, அவள் கண்கள் "இனிமேல் உன்னை அனுப்ப மாட்டேன்" என்று அவனிடம் மௌனமாகச் சண்டையிட்டன.
ரஞ்சித்தால் வெளிநாட்டிலிருந்து வரமுடியாத சூழல் என்பதால் மச்சான் முறையாக விக்ரம் தான் மித்ரனுக்கு எல்லாம் செய்தான். பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு நிச்சயமும் நல்லபடியாக முடிந்தது.
அப்போது தனது மேனேஜரிடமிருந்து கால் வர உள்ளே சத்தமாக இருக்கவும் சற்று தள்ளி வந்து வெளியே உள்ள தோட்டத்தில் விக்ரம் பேசிக்கொண்டிருந்து விட்டு உள்ளே வரும் போது சொந்தக்கார குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த மிருதுளாவோ அவர்கள் துரத்தி வருவதை கண்டு ஓடி வந்தவளோ விக்ரம் மேலே இடித்து கீழே விழப் போக, எட்டி அவளை பிடித்தவனுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு...
ஏனென்றால் விக்ரமின் வலிமையான கைகளோ மிருதுளா கட்டியிருந்த புடவையின் இடைவெளியில் இருக்கும் வெறுமையான இடையை இறுக்கி பற்றியிருந்தது.
வழவழப்பான இடிப்பிலிருக்கும் சூட்டை உணர்ந்தவனுக்கு முதன் முதலான அவனுக்குள் ஓர் ஆண் மகனாய் உணர்ச்சிகள் தூண்டுவதை அறிந்ததும் ஒன்னும் சொல்ல முடியவில்லை.
பட்டென கையை எடுத்தவன் அங்கிருந்து வேகமாக சென்று விட,பிடிமானம் இல்லாததால் பின் வாக்கில் கீழே விழுந்தவளுக்கு நன்கு அடிபடவும் அப்பா என்று கத்தி விட்டாள்.
அவளின் கத்தல்கள் காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்காமல் எதிலிருந்தோ தப்பி ஓடி வருவது போல படியில் ஏறி மேலே இருக்கும் ரூமிற்கு வந்தவனோ, கதவை தாழிட்டு ரெஸ்ட் ரூமிற்குள் போய் ஷவரை திறந்து கீழே நின்றவனின் சிந்தனையோ அகல்மதியை எத்தனையோ முறை தொட்டிருக்கும் போதெல்லாம் ஏன் நமக்கு இப்படி ஒரு உணர்வு வரவில்லை என்ற கேள்விகளே பூதாகரமாக அவனுக்கு முன்பு நின்றது.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றானென்று தெரியவில்லை. கதவு தட்டும் சத்தம் வேகமாக கேட்கவும் அதில் நிகழ்விற்கு வந்தவன் ஷவரை நிறுத்தி விட்டு ஈர துணிகளை மாற்றிக் கொண்டு யாரென கதவின் அருகில் போய் கேட்க, ஏய் லூசு பயலே என்ன டா பண்ணி தொலையிர?.
எவ்வளவு நேரம் உன்னை தேடுரதென பரத் திட்டுவது கேட்டு கதவை திறக்கவும், உள்ளே வந்தவனோ அங்கு டவலை கட்டிக் கொண்டிருக்கும் விக்ரமை ஒரு மார்க்கமாக பார்க்க, லூசு பயலே சின்ன பசங்க விளையாடி கிட்டு இருந்ததுங்க கூல்டிரிங்ஸ் மேல ஊத்திடுச்சுங்கடா.
அதான் என்று சமாளித்து வேற டிரஸ் எடுத்து மாற்றிக் கொண்டவன் நீ எதுக்கு இப்படி உயிர் போன போல கத்திட்டு இருந்த என்கவும் ஃபேமிலி போட்டோஸ் எடுப்பதற்கு உன்னை தேடிட்டு இருக்காங்க நாயே வந்து தொலைடா என்றான்