Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 685
- Thread Author
- #1
சென்னை முதல்வர் அலுவலகம்:
அழுத்தமான ஷூ சத்தம் அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது. யாரையும் கண்டு கொள்ளாமல் முதல்வரின் அறைக்குப் போன அந்த உருவம் சல்யூட் வைக்க தலையை அசைத்தவர் நாம் எதிர்பார்த்தது தானே என்க ஆமாம் சார்.
நான் கிளம்புறேன் சார் என்றவாறு வெளியே வந்தவனின் முகத்தில் எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை.
படியில் இறங்கி வந்தவனின் முன்பு கார் வந்து நிற்க அதில் ஏறியவன் ம்ம் என்கவும் காரின் பின் சீட்டில் இருந்தவர்கள் எல்லாம் ரெடிங்க சார் என்றனர். பின்னர் சென்னையில் இருந்து புறப்பட்ட தனி விமானம் அடுத்த ஒன்னரை மணி நேரத்தில் மீஞ்சூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்தவர்கள் இறங்கி வர போலிஸ் வாகனம் தயாராக இருக்கவும் அதில் ஏறிச் சென்றனர்.
மீஞ்சூர்:
மிருதுளா அங்கு கடத்தப்பட்ட நேரத்தில் கமிஷனர் மற்றும் அவளது அலுவலகம் இரண்டிற்கும் ஒரு லெட்டர் வந்திருந்தது.
அதை எடுத்து படித்து பார்க்க...மீஞ்சூர் மாவட்டத்தின் கலெக்டர் மிருதுளா சுரேந்தர் அவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம்..காரணம் விரைவில்...என்பதோடு கடிதம் முடிந்திருக்க இரண்டு இடத்திலும் அதிர்ந்து போனார்கள்.
விக்ரமோ தனது கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் அடுத்த பில்டிங்கிற்கான வரைபடத்தை வரைந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் ஏனோ ஒருவிதமான சஞ்சலத்தோடே இருந்தது.
அதனால் வேலையில் கவனம் சிதற ஷிட் என்று எழுந்தவனோ சற்று நிமிடங்கள் நடந்துவிட்டு சரி நம்ப ஆளுக்கு கால் பண்ணலாம் என்று முணுமுணுத்துக் கொண்டே அவளுக்கு கால் பண்ண நாட் ரீச்சபுள் என்று வரவும், அட...
விக்ரம் இன்றைக்கு தான் அங்கு கீழையூருக்கு போறேன்னு சொன்னாளே மறந்துட்டியா அங்க தான் நெட் ஒர்க் கிடைக்காதே என்று மனசாட்சி சொல்லிக் கொண்டதும் அட ஆமாம் என்று தனது தலையில் தட்டிக்கொண்டவன் பின்னர் பரத்துக்கு கால் பண்ண, சொல்லுடா என்ன பண்ற என்றான்.
சும்மா டா என்றவனோ சிறிது நிமிடங்கள் பேசி விட்டு போனை வைத்தவனோ மீண்டும் வேலையை பார்க்க உள்ளம் மட்டும் சஞ்சலமாகவே இருந்தது.
அது மட்டும் இல்லாமல் மிருதுளா கடத்தப்பட்ட செய்தியை அவர்களின் கையால் மூலமாக நியூஸ் சேனலுக்கும் போக, காட்டுத்தீயாகப் பரவியது. ஒரு மாவட்டத்தின் கலெக்டரே கடத்தப்பட்டார் என்ற செய்தி, ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸாக ஓடத் தொடங்கியது.
இதைக் கேள்விப்பட்ட பரத் உடனே விக்ரமுக்கு சொல்ல என்ன என்று அதிர்ந்தான்.
அப்போதுதான் சுந்தரி பாட்டி டிவியை ஆன் பண்ணி உட்கார தொலைக்காட்சியில் அந்தச் செய்தி மின்னல் போலத் தோன்றியது:
"பிரேக்கிங் நியூஸ்: மலைவாழ் மக்களுக்குச் சாலை அமைக்க முயன்ற மாவட்ட ஆட்சியர் மிருதுளா மர்மக் கும்பலால் கடத்தல்!
இதைக் கேட்ட உமாவின் கையில் இருந்த கோப்பை நழுவித் தரையில் விழுந்து சிதறியது. "ஐயோ... என் புள்ளைக்கு என்னாச்சோ? என்னங்க,... நம்ம மிருதுளாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களாம்!" என்று அலறினாள்.
ஐயோ என் பேத்தி என்று சுந்தரி பாட்டி கதறினார். மகளின் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்பட்ட அதே கண்கள், இப்போது பயத்தில் கலங்கின.
இங்கு எல்லாரும் மிருதுளாவை நினைத்து அழுது கொண்டிருந்தனர்.
மிருதுளா வீட்டினர் உடனே மீஞ்சூருக்குப் புறப்பட்டவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தபோது, கலெக்டர் அலுவலகமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. போலீஸ் வாகனங்கள், மீடியாக்கள், அழுதுகொண்டிருந்த மக்கள் என கூட்டமாக இருந்தது.
" சார் என் பொண்ணு எங்க? அவளைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?" என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் சுரேந்தர் கேட்க, பிளீஸ் சார் கொஞ்சம் அமைதியா இருங்க"
காட்டுக்குள் வர விடமால் மிரட்டல் இருக்கிறது.மேடம் பத்திரமாக திரும்ப வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியம் கண்டிப்பா நல்ல செய்தி வரும்," என்று அதிகாரி சமாதானப்படுத்த முயன்றார்.
குகைக்குள் கட்டப்பட்டிருந்த மிருதுளாவிடம் மாஸ்க் போட்டுக்கொண்டிந்த அந்தக் கும்பல் மிரட்டிக் கொண்டிருந்தது. "ரோடு போடுற பிளானை கேன்சல் பண்ணு, இல்லைன்னா நீ உயிரோட போக மாட்டே," என்று கத்தினான் அதன் தலைவன்.
"என் உயிர் போனாலும் பரவாயில்லை, அந்த மக்களுக்குப் பாதை வந்தே தீரும்," என்று மிருதுளா சிங்கப்பெண்ணாகப் கர்ஜித்தாள்".
ஓஓஓஓ...
உன் உயிரை எடுப்பது எனக்கு முக்கியம் கிடையாது. ஆனால் இதற்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் எத்தனை வருஷம் ஆனாலும் இதே குகையில் தான் நீ கிடக்கணும்.
இந்த இடத்தை எந்த கொம்பனாலும் கண்டு பிடிக்க முடியாது என்றவன் பொம்பளை பிள்ளை பார்த்து. எந்த அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது. அதை மீறி நடந்தது என்பனின் குரலில் அங்கிருந்தவர்களுக்கு உயிர் பயம் வராமலில்லை.
பத்தே நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்த பரத் அதிர்ந்து நிற்கும் நண்பனை ஓங்கி தட்ட அதில் சுதாரித்த விக்ரம் மிருது என்று கத்தினான்.
பின்னர் இருவரும் அவளைத் தேடி மலைப்பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கே போலிஸார் நிற்க கீழே இறங்கிய இருவரும் அவர்களிடம் போக, அங்கே கவிழ்ந்து கிடந்த ஜீப்பையும், சிதறிக் கிடந்த அவளது காகிதங்களையும் கண்டதும் விக்ரம் நிலைகுலைந்து போனான்.
"மிருதுளா... உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்!" என்று கத்திய அவனது குரல் அந்தப் பள்ளத்தாக்கில் எதிரொலித்தது.
விக்ரம்... உங்கள் சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற கமிஷனர் அவரிடம் இருந்த லெட்டரை விக்ரமிடம் நீட்ட அதை வாங்கி படித்தவனுக்கு அவ்வளவு கொலைவெறி வந்தது.
எங்கு இருந்து கண்காணிக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு நொடியும் நம்மள அவங்க வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்காங்க இதற்கு அப்புறம் முன்னேறி போகவே முடியலை என்றார்.
நேரமும் கடந்து செல்ல வேகமாக ஒரு கார் வந்து அங்கு நிற்க, அதிலிருந்து இறங்கி வந்தவனோ விக்ரம் பரத் இருவரையும் பார்த்துக்கொண்டே கமிஷனரிடம் வந்தவன் தனது அடையாள அட்டையை காமிக்க வெல்கம் சார் என்று அவர் கை குலுக்க, மற்றவர்கள் சல்யூட் அடித்தனர்.
என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தவன் பார்வையோ அங்கே சுற்றம் மறந்து நிற்கும் விக்ரமின் மேல் தான் இருந்தது. பரத் எதுவும் சொல்லாமல் தனது நெற்றியை தடவிக் கொண்டு புதிதாக வந்திருக்கும் ஆபீஸரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன ரீசன் என்பது தெரியவில்லைங்க சார் அது பற்றி அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதிலிருந்து உள்ள போக நாங்க முயற்சி பண்ணினோம் ஆனால் எங்க போலீஸ்காரர் இரண்டு பேரை அவர்கள் தாக்கி விட்டார்கள்.
அதனால் தான் மாற்றுத் திட்டத்தை யோசித்துக் கொண்டே இருக்கிறோம் என்க, காய்ஸ் என்கவும் அவனுடன் இருந்து மற்ற ஐந்து அதிகாரிகளோ எஸ் சார் என்றனர்.
ஓகே என்றவனோ சற்று தள்ளி இருக்கும் விக்ரம் முன்னால் வந்து நிற்க, அவனோ மிருதுவின் நினைவில் இருப்பதால் இதை உணரவில்லை.
அடேய் மச்சான் என்று பரத் விக்ரமின் தோளை தட்டினான்... அதில் சுதாரித்தவன் மித்து பற்றி தெரிஞ்சுடுச்சா என்கவும் ,கொஞ்சம் முன்னாடி பாருடா என்று பல்லை கடித்தான்.
மிருதுளாவின் சிந்தனையில் இருந்தவனோ ஒருவேளை அவளை தான் காப்பாற்றி விட்டார்கள் என்று நினைத்து வேகமாக திரும்பியவன், அங்கிருந்தவனை பார்த்து மச்சான் என்று அவனின் தோளில் சாய, தன் மேல் இருந்தவனை நிமிர்த்தியவன் ஓங்கி இரண்டு அரை விக்ரமின் கன்னத்தில் விட்டான்.
மற்ற போலீஸ்காரர்களோ அதிர்ந்து போய் இதை பார்க்க, வாங்கிய அறையில் விக்ரம் பாவமாக பார்க்கவும் அறிவு கெட்ட முட்டாள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அறிவா யோசிப்பாங்களா? இல்லை மனசாட்சிப்படி யோசிப்பாங்களா என்று பல்லை கடிக்கவும் அந்த கேள்வி விக்ரமின் சிந்தனையை தட்டி எழுப்ப, தனது வேஷ்டியை மடித்து கட்டியவனோ நேராக போய் காரைத் திறந்து அதில் இருந்த பேகை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போனவன் சிறிது நிமிடத்தில் ரெடியாகி வர, இவ்வளவு நடந்திருக்கு ஒரு போன் பண்ணி சொல்லணும்னு உன்னால முடியல...அப்படி என்ன ஆயிரத்தெட்டு ஆபரேஷன் பண்ணி கிழிக்கிறதில் தொரை பிஸியென்று பல்லை கடித்துக் கொண்டே மித்ரன் கேட்டான்.
தற்பொழுது நண்பனாக இல்லாமல் ஒரு சிபிஐ ஆபீசராக மித்ரன் இருப்பதை பார்த்த பரத், மெசேஜ் பண்ணி இருந்தேன் நல்லா பாரு என்று பொறுமையாக சொன்னவன், எப்பா சாமி...நல்லவேளை நமக்கு அந்த அறை விழவில்லை. இந்த நாதாரிப்பயல் அடி ஒவ்வொன்றும் இடி போல இருக்குமே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
தற்பொழுது விக்ரம் பேண்ட் சர்ட்டில் வருவதை பார்த்து மித்ரனோடு வந்த ஆபிஸர்கள் அவனுக்கு சல்யூட் வைக்க தலையை அசைத்து விட்டு அதிர்ந்து நிற்கும் கமிஷனரிடம் வந்தவன், தனது ஐடி கார்டை காட்ட...மேலும் அவர் அதிர்ந்து போனார்.
சார் இந்த கேஸ் நாங்கள் பார்த்துகிறோம். எங்களுக்கு அசைன் பண்ணிய கேஸ் தான். நிச்சயமா உங்களுடைய உதவி தேவைப்பட்டால் நாங்கள் கேட்போம் என்று விக்ரம் சொல்ல, ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேடா நான் உன் அங்கிள் டா என்றார்.
ம்ம்...யாருக்கும் இந்த விஷயம் தெரியாது அங்கிள். எங்க மூணு பேருக்கு தான் தெரியும். உங்க பிரண்டுக்கு தெரிஞ்சா எப்படி குதிக்க போறாருன்னு தெரியல என்க..ஹா ஹா என்று சிரித்தார்.
பின்னர் அங்கிருந்து எல்லாரும் கிளம்புவது போல கிளம்பி வந்தவர்கள் பாதி வழியில் காரை நிறுத்தி விக்ரம் பரத் மித்ரனோடு மற்ற அந்த ஆபீஸர்களும் இறங்கிக் கொள்ள, டாக்டர் சார் எதற்கு என்கவும் வைத்தியம் பண்றதுக்கு ஆள் வேண்டுமே அதற்காகத்தான் என்று சிரிக்காமல் மித்ரன் சொல்ல, அவன் சொன்ன அந்த தோரணையில் அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது.
சார் எந்த காரணம் கொண்டும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று மித்ரன் சொல்ல, கண்டிப்பாக... நான் பார்த்துக் கொள்கிறேன். மற்றவர்கள் இங்கு தான் இருப்போம் ஆல் த பெஸ்ட் என்றார்.
விக்ரம், ஒரு சாதாரண மனிதனாகப் போயிருந்தால் என்றோ சோர்ந்து போயிருப்பான். ஆனால், அங்கே தவித்துக் கொண்டிருப்பது அவனது தேவதை, இந்த மாவட்டத்தின் நம்பிக்கை - மிருதுளா. அதனால் அவனது கால்களுக்குப் பின்னால் காதலின் வேகம் இருந்தது.
சூரியன் மெல்ல மலைகளுக்குப் பின்னால் மறையத் தொடங்கியிருந்தது. காடு இருளத் தொடங்கியது. திட்டமிட்டபடி மின்மினி பூச்சிகளை பிடித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்துக் கொண்டு இரண்டு இரண்டு பேராகா ஆளுக்கொரு திசையில் போனார்கள்.
"மிருதுளா... மிருதுளா!" என்று அவன் மனம் கதறிக் கொண்டிருந்தது. காட்டின் சலசலப்பும், தூரத்தில் கேட்ட நரியின் ஊளையும் அவர்களுக்கு பயத்தை தரவில்லை.
அழுத்தமான ஷூ சத்தம் அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது. யாரையும் கண்டு கொள்ளாமல் முதல்வரின் அறைக்குப் போன அந்த உருவம் சல்யூட் வைக்க தலையை அசைத்தவர் நாம் எதிர்பார்த்தது தானே என்க ஆமாம் சார்.
நான் கிளம்புறேன் சார் என்றவாறு வெளியே வந்தவனின் முகத்தில் எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை.
படியில் இறங்கி வந்தவனின் முன்பு கார் வந்து நிற்க அதில் ஏறியவன் ம்ம் என்கவும் காரின் பின் சீட்டில் இருந்தவர்கள் எல்லாம் ரெடிங்க சார் என்றனர். பின்னர் சென்னையில் இருந்து புறப்பட்ட தனி விமானம் அடுத்த ஒன்னரை மணி நேரத்தில் மீஞ்சூர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்தவர்கள் இறங்கி வர போலிஸ் வாகனம் தயாராக இருக்கவும் அதில் ஏறிச் சென்றனர்.
மீஞ்சூர்:
மிருதுளா அங்கு கடத்தப்பட்ட நேரத்தில் கமிஷனர் மற்றும் அவளது அலுவலகம் இரண்டிற்கும் ஒரு லெட்டர் வந்திருந்தது.
அதை எடுத்து படித்து பார்க்க...மீஞ்சூர் மாவட்டத்தின் கலெக்டர் மிருதுளா சுரேந்தர் அவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம்..காரணம் விரைவில்...என்பதோடு கடிதம் முடிந்திருக்க இரண்டு இடத்திலும் அதிர்ந்து போனார்கள்.
விக்ரமோ தனது கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்தில் அடுத்த பில்டிங்கிற்கான வரைபடத்தை வரைந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் மனம் ஏனோ ஒருவிதமான சஞ்சலத்தோடே இருந்தது.
அதனால் வேலையில் கவனம் சிதற ஷிட் என்று எழுந்தவனோ சற்று நிமிடங்கள் நடந்துவிட்டு சரி நம்ப ஆளுக்கு கால் பண்ணலாம் என்று முணுமுணுத்துக் கொண்டே அவளுக்கு கால் பண்ண நாட் ரீச்சபுள் என்று வரவும், அட...
விக்ரம் இன்றைக்கு தான் அங்கு கீழையூருக்கு போறேன்னு சொன்னாளே மறந்துட்டியா அங்க தான் நெட் ஒர்க் கிடைக்காதே என்று மனசாட்சி சொல்லிக் கொண்டதும் அட ஆமாம் என்று தனது தலையில் தட்டிக்கொண்டவன் பின்னர் பரத்துக்கு கால் பண்ண, சொல்லுடா என்ன பண்ற என்றான்.
சும்மா டா என்றவனோ சிறிது நிமிடங்கள் பேசி விட்டு போனை வைத்தவனோ மீண்டும் வேலையை பார்க்க உள்ளம் மட்டும் சஞ்சலமாகவே இருந்தது.
அது மட்டும் இல்லாமல் மிருதுளா கடத்தப்பட்ட செய்தியை அவர்களின் கையால் மூலமாக நியூஸ் சேனலுக்கும் போக, காட்டுத்தீயாகப் பரவியது. ஒரு மாவட்டத்தின் கலெக்டரே கடத்தப்பட்டார் என்ற செய்தி, ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸாக ஓடத் தொடங்கியது.
இதைக் கேள்விப்பட்ட பரத் உடனே விக்ரமுக்கு சொல்ல என்ன என்று அதிர்ந்தான்.
அப்போதுதான் சுந்தரி பாட்டி டிவியை ஆன் பண்ணி உட்கார தொலைக்காட்சியில் அந்தச் செய்தி மின்னல் போலத் தோன்றியது:
"பிரேக்கிங் நியூஸ்: மலைவாழ் மக்களுக்குச் சாலை அமைக்க முயன்ற மாவட்ட ஆட்சியர் மிருதுளா மர்மக் கும்பலால் கடத்தல்!
இதைக் கேட்ட உமாவின் கையில் இருந்த கோப்பை நழுவித் தரையில் விழுந்து சிதறியது. "ஐயோ... என் புள்ளைக்கு என்னாச்சோ? என்னங்க,... நம்ம மிருதுளாவை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களாம்!" என்று அலறினாள்.
ஐயோ என் பேத்தி என்று சுந்தரி பாட்டி கதறினார். மகளின் தைரியத்தைப் பார்த்துப் பெருமைப்பட்ட அதே கண்கள், இப்போது பயத்தில் கலங்கின.
இங்கு எல்லாரும் மிருதுளாவை நினைத்து அழுது கொண்டிருந்தனர்.
மிருதுளா வீட்டினர் உடனே மீஞ்சூருக்குப் புறப்பட்டவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தபோது, கலெக்டர் அலுவலகமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. போலீஸ் வாகனங்கள், மீடியாக்கள், அழுதுகொண்டிருந்த மக்கள் என கூட்டமாக இருந்தது.
" சார் என் பொண்ணு எங்க? அவளைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?" என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் சுரேந்தர் கேட்க, பிளீஸ் சார் கொஞ்சம் அமைதியா இருங்க"
காட்டுக்குள் வர விடமால் மிரட்டல் இருக்கிறது.மேடம் பத்திரமாக திரும்ப வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியம் கண்டிப்பா நல்ல செய்தி வரும்," என்று அதிகாரி சமாதானப்படுத்த முயன்றார்.
குகைக்குள் கட்டப்பட்டிருந்த மிருதுளாவிடம் மாஸ்க் போட்டுக்கொண்டிந்த அந்தக் கும்பல் மிரட்டிக் கொண்டிருந்தது. "ரோடு போடுற பிளானை கேன்சல் பண்ணு, இல்லைன்னா நீ உயிரோட போக மாட்டே," என்று கத்தினான் அதன் தலைவன்.
"என் உயிர் போனாலும் பரவாயில்லை, அந்த மக்களுக்குப் பாதை வந்தே தீரும்," என்று மிருதுளா சிங்கப்பெண்ணாகப் கர்ஜித்தாள்".
ஓஓஓஓ...
உன் உயிரை எடுப்பது எனக்கு முக்கியம் கிடையாது. ஆனால் இதற்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் எத்தனை வருஷம் ஆனாலும் இதே குகையில் தான் நீ கிடக்கணும்.
இந்த இடத்தை எந்த கொம்பனாலும் கண்டு பிடிக்க முடியாது என்றவன் பொம்பளை பிள்ளை பார்த்து. எந்த அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது. அதை மீறி நடந்தது என்பனின் குரலில் அங்கிருந்தவர்களுக்கு உயிர் பயம் வராமலில்லை.
பத்தே நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்த பரத் அதிர்ந்து நிற்கும் நண்பனை ஓங்கி தட்ட அதில் சுதாரித்த விக்ரம் மிருது என்று கத்தினான்.
பின்னர் இருவரும் அவளைத் தேடி மலைப்பகுதியை நோக்கிச் சென்றனர். அங்கே போலிஸார் நிற்க கீழே இறங்கிய இருவரும் அவர்களிடம் போக, அங்கே கவிழ்ந்து கிடந்த ஜீப்பையும், சிதறிக் கிடந்த அவளது காகிதங்களையும் கண்டதும் விக்ரம் நிலைகுலைந்து போனான்.
"மிருதுளா... உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்!" என்று கத்திய அவனது குரல் அந்தப் பள்ளத்தாக்கில் எதிரொலித்தது.
விக்ரம்... உங்கள் சூழலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற கமிஷனர் அவரிடம் இருந்த லெட்டரை விக்ரமிடம் நீட்ட அதை வாங்கி படித்தவனுக்கு அவ்வளவு கொலைவெறி வந்தது.
எங்கு இருந்து கண்காணிக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு நொடியும் நம்மள அவங்க வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்காங்க இதற்கு அப்புறம் முன்னேறி போகவே முடியலை என்றார்.
நேரமும் கடந்து செல்ல வேகமாக ஒரு கார் வந்து அங்கு நிற்க, அதிலிருந்து இறங்கி வந்தவனோ விக்ரம் பரத் இருவரையும் பார்த்துக்கொண்டே கமிஷனரிடம் வந்தவன் தனது அடையாள அட்டையை காமிக்க வெல்கம் சார் என்று அவர் கை குலுக்க, மற்றவர்கள் சல்யூட் அடித்தனர்.
என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தவன் பார்வையோ அங்கே சுற்றம் மறந்து நிற்கும் விக்ரமின் மேல் தான் இருந்தது. பரத் எதுவும் சொல்லாமல் தனது நெற்றியை தடவிக் கொண்டு புதிதாக வந்திருக்கும் ஆபீஸரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன ரீசன் என்பது தெரியவில்லைங்க சார் அது பற்றி அவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. இதிலிருந்து உள்ள போக நாங்க முயற்சி பண்ணினோம் ஆனால் எங்க போலீஸ்காரர் இரண்டு பேரை அவர்கள் தாக்கி விட்டார்கள்.
அதனால் தான் மாற்றுத் திட்டத்தை யோசித்துக் கொண்டே இருக்கிறோம் என்க, காய்ஸ் என்கவும் அவனுடன் இருந்து மற்ற ஐந்து அதிகாரிகளோ எஸ் சார் என்றனர்.
ஓகே என்றவனோ சற்று தள்ளி இருக்கும் விக்ரம் முன்னால் வந்து நிற்க, அவனோ மிருதுவின் நினைவில் இருப்பதால் இதை உணரவில்லை.
அடேய் மச்சான் என்று பரத் விக்ரமின் தோளை தட்டினான்... அதில் சுதாரித்தவன் மித்து பற்றி தெரிஞ்சுடுச்சா என்கவும் ,கொஞ்சம் முன்னாடி பாருடா என்று பல்லை கடித்தான்.
மிருதுளாவின் சிந்தனையில் இருந்தவனோ ஒருவேளை அவளை தான் காப்பாற்றி விட்டார்கள் என்று நினைத்து வேகமாக திரும்பியவன், அங்கிருந்தவனை பார்த்து மச்சான் என்று அவனின் தோளில் சாய, தன் மேல் இருந்தவனை நிமிர்த்தியவன் ஓங்கி இரண்டு அரை விக்ரமின் கன்னத்தில் விட்டான்.
மற்ற போலீஸ்காரர்களோ அதிர்ந்து போய் இதை பார்க்க, வாங்கிய அறையில் விக்ரம் பாவமாக பார்க்கவும் அறிவு கெட்ட முட்டாள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அறிவா யோசிப்பாங்களா? இல்லை மனசாட்சிப்படி யோசிப்பாங்களா என்று பல்லை கடிக்கவும் அந்த கேள்வி விக்ரமின் சிந்தனையை தட்டி எழுப்ப, தனது வேஷ்டியை மடித்து கட்டியவனோ நேராக போய் காரைத் திறந்து அதில் இருந்த பேகை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போனவன் சிறிது நிமிடத்தில் ரெடியாகி வர, இவ்வளவு நடந்திருக்கு ஒரு போன் பண்ணி சொல்லணும்னு உன்னால முடியல...அப்படி என்ன ஆயிரத்தெட்டு ஆபரேஷன் பண்ணி கிழிக்கிறதில் தொரை பிஸியென்று பல்லை கடித்துக் கொண்டே மித்ரன் கேட்டான்.
தற்பொழுது நண்பனாக இல்லாமல் ஒரு சிபிஐ ஆபீசராக மித்ரன் இருப்பதை பார்த்த பரத், மெசேஜ் பண்ணி இருந்தேன் நல்லா பாரு என்று பொறுமையாக சொன்னவன், எப்பா சாமி...நல்லவேளை நமக்கு அந்த அறை விழவில்லை. இந்த நாதாரிப்பயல் அடி ஒவ்வொன்றும் இடி போல இருக்குமே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
தற்பொழுது விக்ரம் பேண்ட் சர்ட்டில் வருவதை பார்த்து மித்ரனோடு வந்த ஆபிஸர்கள் அவனுக்கு சல்யூட் வைக்க தலையை அசைத்து விட்டு அதிர்ந்து நிற்கும் கமிஷனரிடம் வந்தவன், தனது ஐடி கார்டை காட்ட...மேலும் அவர் அதிர்ந்து போனார்.
சார் இந்த கேஸ் நாங்கள் பார்த்துகிறோம். எங்களுக்கு அசைன் பண்ணிய கேஸ் தான். நிச்சயமா உங்களுடைய உதவி தேவைப்பட்டால் நாங்கள் கேட்போம் என்று விக்ரம் சொல்ல, ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேடா நான் உன் அங்கிள் டா என்றார்.
ம்ம்...யாருக்கும் இந்த விஷயம் தெரியாது அங்கிள். எங்க மூணு பேருக்கு தான் தெரியும். உங்க பிரண்டுக்கு தெரிஞ்சா எப்படி குதிக்க போறாருன்னு தெரியல என்க..ஹா ஹா என்று சிரித்தார்.
பின்னர் அங்கிருந்து எல்லாரும் கிளம்புவது போல கிளம்பி வந்தவர்கள் பாதி வழியில் காரை நிறுத்தி விக்ரம் பரத் மித்ரனோடு மற்ற அந்த ஆபீஸர்களும் இறங்கிக் கொள்ள, டாக்டர் சார் எதற்கு என்கவும் வைத்தியம் பண்றதுக்கு ஆள் வேண்டுமே அதற்காகத்தான் என்று சிரிக்காமல் மித்ரன் சொல்ல, அவன் சொன்ன அந்த தோரணையில் அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது.
சார் எந்த காரணம் கொண்டும் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று மித்ரன் சொல்ல, கண்டிப்பாக... நான் பார்த்துக் கொள்கிறேன். மற்றவர்கள் இங்கு தான் இருப்போம் ஆல் த பெஸ்ட் என்றார்.
விக்ரம், ஒரு சாதாரண மனிதனாகப் போயிருந்தால் என்றோ சோர்ந்து போயிருப்பான். ஆனால், அங்கே தவித்துக் கொண்டிருப்பது அவனது தேவதை, இந்த மாவட்டத்தின் நம்பிக்கை - மிருதுளா. அதனால் அவனது கால்களுக்குப் பின்னால் காதலின் வேகம் இருந்தது.
சூரியன் மெல்ல மலைகளுக்குப் பின்னால் மறையத் தொடங்கியிருந்தது. காடு இருளத் தொடங்கியது. திட்டமிட்டபடி மின்மினி பூச்சிகளை பிடித்து கண்ணாடி பாட்டிலில் அடைத்துக் கொண்டு இரண்டு இரண்டு பேராகா ஆளுக்கொரு திசையில் போனார்கள்.
"மிருதுளா... மிருதுளா!" என்று அவன் மனம் கதறிக் கொண்டிருந்தது. காட்டின் சலசலப்பும், தூரத்தில் கேட்ட நரியின் ஊளையும் அவர்களுக்கு பயத்தை தரவில்லை.