Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 663
- Thread Author
- #1
வழக்கம்போல் வேலை முடித்து வீட்டிற்கு வந்த மிருதுளா,வசுவோடு பேசிக்கொண்டே இரவு டிபனை செய்தாள்.
நீ உட்காரு..சாந்தா செய்யும் என்று சொன்னாலும் இருக்கட்டும் பாட்டி எனக்கும் போர் அடிக்குது.நல்லா தான் சமைப்பேன் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்றாள்.
பின்னர் எல்லாரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டு சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது பாட்டி எனக்கு போர் அடிக்குது புக் ஏதாச்சும் இருக்கா?.
நம்ம வீட்டுல ஏது புக்கு?.
யாரு படிக்கிறு?...ஆனா எல்லாமே பிசினஸ் சம்பந்தமாக தானே இருக்கும் அதுதான் விக்கி வச்சிருப்பான் என்று யோசித்தவர், அட ஆமாம்..மதியோட ரூம்ல இருக்கும் போய் பாரு டா.
ஆமாம்...இந்த விஷயம் எனக்கு ஞாபகம் இல்லையே பாட்டி. மதி அக்கா தான் கதை புக் படிப்பாங்களே என்று சிரித்தவள் ஓகே ஓகே குட்நைட் என்று சொல்லிக்கொண்டு மாடியில் இருக்கும் இரண்டாவது அறையின் கதவை திறந்து உள்ளே போனவள் லைட்டை ஆன் பண்ணி பார்க்க யாரோ யூஸ் பண்ணுவது போல இன்னும் சுத்தமாகவே இருந்தது.
அப்பொழுது தான் தினமும் அந்த அறையையும் கிளீன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று மிருதுளாவுக்கு புரிந்தது.
மதியை நினைத்து கவலைப்பட்டவள் பின்னர் அங்கிருந்த அலமாரியை திறந்து பார்க்க அதோ முழுவதுமாக துடைக்கப்பட்டது போல இருக்கவும் எங்க இதுல அக்கா நிறைய புக்ஸ் வச்சிருப்பாங்களே ஒன்னு கூட காணோமே என்று யோசனையோடு மற்ற வால்ட்ரோபை திறந்து பார்க்க அதில் ஒரு ஒரே சூட்கேஸ் மட்டும் தான் இருந்தது. வேற எதுவும் இல்லை.
ஒருவேளை இதுல எடுத்து வச்சிருக்காங்க போல என்று யோசனையோடு அந்த சூட்கேஸை எடுத்து அங்கிருந்த பெட்டில் மேல் வைத்தவள் அதை திறந்து பார்க்க உள்ளே மதி வாங்கிய கோப்பைகளும் மெடல்களும், அதன் கீழே வெல்வெட்டால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் இருப்பது போல் இருக்கவும் என்ன இது என்ற யோசனையோடு அதை எடுத்தவள் துணியை பிரித்து பார்க்க உள்ளே ஒரு டைரி இருந்தது.
ஆஹா மதியக்க ஒரு வேலை கதை எழுதலாம்னு முடிவு பண்ணி இருப்பாங்களோ இல்ல வேற யாருடையதாக இருக்குமா என்ற யோசனையோடு உள்பக்கம் திரும்ப அதில் "யாருக்கு மாலை? "ஆசிரியர் அகல்மதி என்று இருக்கவும்... என்னாது அக்கா நாவலாசிரியராக என்று ஆச்சரியப்பட்டவள் டைரியை மட்டும் எடுத்துக் கொண்டு சூட்கேஸை பழையபடி அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவளது ரூமிற்கு வந்தவளோ டைரியை திறந்து படிக்கலானாள்.
டைரி:
மீஞ்சூர்,அழகான மலைக் கிராமம். இந்த ஊரில் வசிக்கும் வேலாயுதம், சுந்தரமூர்த்தி, முருகன் ஆகிய மூவரும் இணைபிரியாத நண்பர்கள்.
வேலாயுதம்: எதற்கும் அஞ்சாதவன், சிறு வயதாக இருந்தாலும் ஊர் நியாயங்களுக்குத் துணிந்து நிற்பவன்.
சுந்தரமூர்த்தி: ரொம்ப அமைதியானவன், மண்ணின் ஈரத்தையும் பயிரின் மொழியையும் அறிந்த விவசாயி.
முருகன்: நகைச்சுவை உணர்வு மிக்கவன், எப்பேர்ப்பட்ட கவலையையும் தன் பேச்சால் போக்கிவிடும் ஆற்றலைக் கொண்டவன்.
அன்று பங்குனி உத்திரத் திருவிழா
திருவிழா ஏற்பாடுகள்
ஊரே களைகட்டியிருந்தது.
வேலாயுதமோ தோரணங்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தான். சுந்தரமூர்த்தி தன் தோட்டத்தில் விளைந்த பூக்களைக் கோயிலுக்குக் கொண்டு வந்து குவித்திருந்தான். முருகன்? அவன் வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய் கடையருகே நின்று கொண்டு ஊர் வம்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.
நேரமும் கடந்து செல்ல
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி ஊர்வலம் கிளம்பும் நேரம். திடீரென மேளக்காரர்களுக்கும், பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் இடையே சின்னதாக ஒரு வாக்குவாதம் வெடித்தது.
அப்போது வேலாயுதம் முன்னே வந்து நின்றான். "இது எங்க ஊர் திருவிழா, இங்கே சண்டைக்கு இடமில்லை!" எனத் தன் கம்பீரக் குரலில் கர்ஜித்தான்.
சுந்தரமூர்த்தியோ சண்டையை வளர்க்காமல், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றான். "சாமி கும்பிட வந்த இடத்துல எதுக்குங்க கோபம்?" என அமைதியாகப் பேசினான்.
முருகனோ லாவகமாகப் புகுந்து, ஒரு நகைச்சுவையைப் போட்டு, அங்கிருந்த பதற்றத்தைத் தணித்து அனைவரையும் சிரிக்க வைத்துவிட, பின்னர் அன்று இரவு, திருவிழா முடிந்து அனைவரும் கலைந்த பின், அந்த மூவரும் மட்டும் குளக்கரையில் அமர்ந்திருந்தனர்.
"ஏண்டா சுந்தரம், நான் கோபப்பட்டப்போ நீ ஏன் தடுத்த?" என்று
சுந்தரமூர்த்தி கேட்க, "நீ அடிக்கப் போயிருந்தா, திருவிழா நின்னு போயிருக்கும் வேலா. நமக்குத் தேவை ஒற்றுமைதான்."
ஆமா டா... இந்த பேச்சை விடுங்கள் நான் மட்டும் அந்த ஜோக்கை சொல்லல நம்ம மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல 'ஸ்பெஷல்' சோறு சாப்பிட்டு இருப்போம்!" என்று முருகன் சொல்ல, மூவரும் பலமாகச் சிரித்தனர். அந்தச் சிரிப்பு அந்தக் குளத்து நீரில் அலைகளாய் பரவியது.
"கிராமத்துத் திருவிழாக்கள் தெய்வத்திற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை; சிதறிப்போகும் உறவுகளையும், தடம் மாறும் நண்பர்களையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைப்பதற்காகவும்தான்." என்று உணராதவர் யாருமில்லை.
காலச்சக்கரம் சுழன்றது. படிப்பு, வேலை என மூவரும் வெவ்வேறு திசைகளுக்குச் சென்றனர். சுந்தரமூர்த்தியோ கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு அவர்களின் குலத்தொழிலான விவசாயத்தை பார்க்கலானான்.
முருகன் தனது டாக்டர் படிப்பை முடித்து விட்டு மீஞ்சூரில் வேலை பார்க்க வந்துவிட, வேலாயுதம் சென்னையில் வக்கீலாக இருக்கிறான்.
வருடங்கள் மட்டுமே போனது ஆனால், அவர்களின் நட்பு மட்டும் மாறவில்லை. நகரத்து நெரிசலில் சிக்கியபோதும், வேலாயுதத்தின் கம்பீரமும், முருகனின் சிரிப்பும், சுந்தரமூர்த்தியின் நிதானமும் அவர்களைத் தாங்கிப் பிடித்தன.
சில வருடங்கள் கழித்து, அதே ஊர் மந்தையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர்.
"என்னடா வேலா, ரொம்ப இளைச்சிட்ட போல?" என முருகன் கிண்டல் செய்ய, சுந்தரமூர்த்தி தன் நிலத்திலிருந்து கொண்டு வந்த இளநீரை வெட்டி நண்பர்கள் இருவருக்கும் நீட்டினான்.
ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்டா என்று வேலாயுதம் சிரிக்க சொல்லுடா என்றனர். பின்னர் அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கும் விஷயத்தை சொல்ல, அடி சக்கை என்று நண்பர்கள் கிண்டல் செய்தனர்.
ஆமா டா. பேர் சுந்தரி... ஆனால் நான் வீட்ல சொல்லிட்டேன்டா கல்யாணம் நடந்தா எங்க மூணு பேருக்கும் கோவில்ல ஒண்ணா தான் நடக்கணும் அதுக்கு தகுந்த போல ஏற்பாடு பண்ணுங்கனு...
நண்பனின் வார்த்தையை கேட்ட இருவரும் வேலா என்று அணைத்து கொள்ள, நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா என்று சுந்தரமூர்த்தி சிரிக்கவும் சொல்லு சொல்லு காதலும் ஒர்க்அவுட் ஆயிடுச்சா கலெக்டர் அம்மா ஒத்துக்கிட்டாங்களா என்று கேட்க ஆமாண்டா ஏதோ மனசு இறங்கி வந்து கல்யாணம் பண்ணிக்க சம்மதித்து விட்டாள் என்கவும் சரிங்க கலெக்டர் புருஷன் என்று கிண்டல் பண்ணினார்கள்.
முருகனுக்கு அவனது அத்தை பெண்ணான வள்ளியை தான் திருமணம் செய்வதாக சிறுவயதில் இருந்து பேச்சு இருந்தது.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நண்பர்களும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நாட்களும் ஓட நண்பர்கள் ஆசைப்பட்ட போல அவர்கள் ஊரில் இருக்கும் பேச்சியம்மன் கோயிலில் நண்பர்கள் மூவருக்கும் ஒரே மேடையில் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் சிறப்பாக திருமணம் நடந்த முடிந்தது.
மற்ற சடங்குகள் முடிந்து நண்பர்களும் அவரவர் மனைவிகளோடு வாழ்க்கையை தொடங்கினர். இவனுங்களை போல இவர்கள் மனைவிகளும் நல்ல தோழிகளாகிவிட்டனர்.
ஒரு வருடம் கடந்திருக்க, சொல்லி வைத்தப் போல மூவருக்கும் முதல் வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. இதிலையுமா டா ஒற்றுமை என்று தெரிந்தவர்களும் ஊர்காரர்களும் கிண்டல் பண்ணினார்கள்.
பிள்ளைகளும் வளரத் தொடங்கினார்.
மேலும் ஐந்து வருடங்கள் கடந்திருக்க, வசு- சுந்தரி இருவரும் மீண்டும் கர்பமாகி ஆளுக்கொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாளுங்கள்.
வேலப்பன்- சுந்தரி தம்பதி தங்களது மகனுக்கு சுரேந்தர், மகளுக்கு சுரேகா என்று பெயர் வைத்தனர்.
சுந்தரமூர்த்தி- வசுந்தரா தம்பதியினர் மகனுக்கு பிரகாஷ் என்றும், மகளுக்கு பவானி என்று பெயர் சூட்டினார்.
முருகன்- வள்ளி தம்பதிக்கு தினேஷ் மற்றும் கீதா என்ற மகள்.
இவர்களைப் போல மூவரின் மகன்களும் நண்பர்களாகினர். பின்னர் ஊட்டியில் இருக்கும் கான்வெண்ட் ல சேர்த்து விட, வருடங்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.
சுரேந்தர்- பிரகாஷ் இருவரும் இன்ஜினியரிங் முடித்து விட்டு அவர்கள் பெற்றோர் ஆரம்பித்த தொழிலோடு புதிய தொழிலையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்த, முருகன் போலவே தினேஷும் டாக்டருக்கு படித்து முடித்தான்.
வேலை நிமித்தமாக பிஸியாக இருந்தாலும் மூவரும் நட்பை விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை வளர்த்துக் கொண்டானுங்கள்.
பிள்ளைகளுக்கு திருமண வயது வரவும், முதலில் பவானி க்கு தெரிந்த இடத்தில் இருந்து மாப்பிள்ளை வர அவளுக்கு சீர்வரிசை பொருட்களோடு திருமணம் செய்து பூனேவிற்கு அனுப்பி வைத்தனர்.
கீதாவோ தற்போது தான் டீச்சர் டிரைனிங் முடித்திருக்க, அவளை பிரகாஷ் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தான். இனியும் இதை மறைக்க வேண்டாம் என்று தயங்கியவாறு நண்பர்களிடம் சொல்லிவிட, தினேஷ் நண்பனை ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டான்.
இதை எதிர்பார்க்காத பிரகாஷும் சுரேந்தரும் என்னடா பண்ற என்று கத்த, பின்ன வேற என்னடா பண்றது.போன வாரமே அத்தை மாமாவும் கீதாவை பொண்ணு கேட்டுட்டு போய்ட்டாங்கள்.
அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் இருக்கு இன்னும் இந்த பரதேசி பயலுக்கு தெரியலையே என்று தினேஷ் சிரிக்க என்னடா சொல்ற என்று இப்பொழுது அவர்கள் இருவரும் அதிர ஆமாண்டா விளக்கெண்ணெய், நீ பிசினஸ் கட்டிக்கிட்டு மாரடி
நீ உட்காரு..சாந்தா செய்யும் என்று சொன்னாலும் இருக்கட்டும் பாட்டி எனக்கும் போர் அடிக்குது.நல்லா தான் சமைப்பேன் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்றாள்.
பின்னர் எல்லாரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டு சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது பாட்டி எனக்கு போர் அடிக்குது புக் ஏதாச்சும் இருக்கா?.
நம்ம வீட்டுல ஏது புக்கு?.
யாரு படிக்கிறு?...ஆனா எல்லாமே பிசினஸ் சம்பந்தமாக தானே இருக்கும் அதுதான் விக்கி வச்சிருப்பான் என்று யோசித்தவர், அட ஆமாம்..மதியோட ரூம்ல இருக்கும் போய் பாரு டா.
ஆமாம்...இந்த விஷயம் எனக்கு ஞாபகம் இல்லையே பாட்டி. மதி அக்கா தான் கதை புக் படிப்பாங்களே என்று சிரித்தவள் ஓகே ஓகே குட்நைட் என்று சொல்லிக்கொண்டு மாடியில் இருக்கும் இரண்டாவது அறையின் கதவை திறந்து உள்ளே போனவள் லைட்டை ஆன் பண்ணி பார்க்க யாரோ யூஸ் பண்ணுவது போல இன்னும் சுத்தமாகவே இருந்தது.
அப்பொழுது தான் தினமும் அந்த அறையையும் கிளீன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று மிருதுளாவுக்கு புரிந்தது.
மதியை நினைத்து கவலைப்பட்டவள் பின்னர் அங்கிருந்த அலமாரியை திறந்து பார்க்க அதோ முழுவதுமாக துடைக்கப்பட்டது போல இருக்கவும் எங்க இதுல அக்கா நிறைய புக்ஸ் வச்சிருப்பாங்களே ஒன்னு கூட காணோமே என்று யோசனையோடு மற்ற வால்ட்ரோபை திறந்து பார்க்க அதில் ஒரு ஒரே சூட்கேஸ் மட்டும் தான் இருந்தது. வேற எதுவும் இல்லை.
ஒருவேளை இதுல எடுத்து வச்சிருக்காங்க போல என்று யோசனையோடு அந்த சூட்கேஸை எடுத்து அங்கிருந்த பெட்டில் மேல் வைத்தவள் அதை திறந்து பார்க்க உள்ளே மதி வாங்கிய கோப்பைகளும் மெடல்களும், அதன் கீழே வெல்வெட்டால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் இருப்பது போல் இருக்கவும் என்ன இது என்ற யோசனையோடு அதை எடுத்தவள் துணியை பிரித்து பார்க்க உள்ளே ஒரு டைரி இருந்தது.
ஆஹா மதியக்க ஒரு வேலை கதை எழுதலாம்னு முடிவு பண்ணி இருப்பாங்களோ இல்ல வேற யாருடையதாக இருக்குமா என்ற யோசனையோடு உள்பக்கம் திரும்ப அதில் "யாருக்கு மாலை? "ஆசிரியர் அகல்மதி என்று இருக்கவும்... என்னாது அக்கா நாவலாசிரியராக என்று ஆச்சரியப்பட்டவள் டைரியை மட்டும் எடுத்துக் கொண்டு சூட்கேஸை பழையபடி அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு அவளது ரூமிற்கு வந்தவளோ டைரியை திறந்து படிக்கலானாள்.
டைரி:
மீஞ்சூர்,அழகான மலைக் கிராமம். இந்த ஊரில் வசிக்கும் வேலாயுதம், சுந்தரமூர்த்தி, முருகன் ஆகிய மூவரும் இணைபிரியாத நண்பர்கள்.
வேலாயுதம்: எதற்கும் அஞ்சாதவன், சிறு வயதாக இருந்தாலும் ஊர் நியாயங்களுக்குத் துணிந்து நிற்பவன்.
சுந்தரமூர்த்தி: ரொம்ப அமைதியானவன், மண்ணின் ஈரத்தையும் பயிரின் மொழியையும் அறிந்த விவசாயி.
முருகன்: நகைச்சுவை உணர்வு மிக்கவன், எப்பேர்ப்பட்ட கவலையையும் தன் பேச்சால் போக்கிவிடும் ஆற்றலைக் கொண்டவன்.
அன்று பங்குனி உத்திரத் திருவிழா
திருவிழா ஏற்பாடுகள்
ஊரே களைகட்டியிருந்தது.
வேலாயுதமோ தோரணங்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தான். சுந்தரமூர்த்தி தன் தோட்டத்தில் விளைந்த பூக்களைக் கோயிலுக்குக் கொண்டு வந்து குவித்திருந்தான். முருகன்? அவன் வழக்கம் போலப் பஞ்சு மிட்டாய் கடையருகே நின்று கொண்டு ஊர் வம்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.
நேரமும் கடந்து செல்ல
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சாமி ஊர்வலம் கிளம்பும் நேரம். திடீரென மேளக்காரர்களுக்கும், பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் இடையே சின்னதாக ஒரு வாக்குவாதம் வெடித்தது.
அப்போது வேலாயுதம் முன்னே வந்து நின்றான். "இது எங்க ஊர் திருவிழா, இங்கே சண்டைக்கு இடமில்லை!" எனத் தன் கம்பீரக் குரலில் கர்ஜித்தான்.
சுந்தரமூர்த்தியோ சண்டையை வளர்க்காமல், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றான். "சாமி கும்பிட வந்த இடத்துல எதுக்குங்க கோபம்?" என அமைதியாகப் பேசினான்.
முருகனோ லாவகமாகப் புகுந்து, ஒரு நகைச்சுவையைப் போட்டு, அங்கிருந்த பதற்றத்தைத் தணித்து அனைவரையும் சிரிக்க வைத்துவிட, பின்னர் அன்று இரவு, திருவிழா முடிந்து அனைவரும் கலைந்த பின், அந்த மூவரும் மட்டும் குளக்கரையில் அமர்ந்திருந்தனர்.
"ஏண்டா சுந்தரம், நான் கோபப்பட்டப்போ நீ ஏன் தடுத்த?" என்று
சுந்தரமூர்த்தி கேட்க, "நீ அடிக்கப் போயிருந்தா, திருவிழா நின்னு போயிருக்கும் வேலா. நமக்குத் தேவை ஒற்றுமைதான்."
ஆமா டா... இந்த பேச்சை விடுங்கள் நான் மட்டும் அந்த ஜோக்கை சொல்லல நம்ம மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷன்ல 'ஸ்பெஷல்' சோறு சாப்பிட்டு இருப்போம்!" என்று முருகன் சொல்ல, மூவரும் பலமாகச் சிரித்தனர். அந்தச் சிரிப்பு அந்தக் குளத்து நீரில் அலைகளாய் பரவியது.
"கிராமத்துத் திருவிழாக்கள் தெய்வத்திற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை; சிதறிப்போகும் உறவுகளையும், தடம் மாறும் நண்பர்களையும் மீண்டும் ஒரு புள்ளியில் இணைப்பதற்காகவும்தான்." என்று உணராதவர் யாருமில்லை.
காலச்சக்கரம் சுழன்றது. படிப்பு, வேலை என மூவரும் வெவ்வேறு திசைகளுக்குச் சென்றனர். சுந்தரமூர்த்தியோ கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு அவர்களின் குலத்தொழிலான விவசாயத்தை பார்க்கலானான்.
முருகன் தனது டாக்டர் படிப்பை முடித்து விட்டு மீஞ்சூரில் வேலை பார்க்க வந்துவிட, வேலாயுதம் சென்னையில் வக்கீலாக இருக்கிறான்.
வருடங்கள் மட்டுமே போனது ஆனால், அவர்களின் நட்பு மட்டும் மாறவில்லை. நகரத்து நெரிசலில் சிக்கியபோதும், வேலாயுதத்தின் கம்பீரமும், முருகனின் சிரிப்பும், சுந்தரமூர்த்தியின் நிதானமும் அவர்களைத் தாங்கிப் பிடித்தன.
சில வருடங்கள் கழித்து, அதே ஊர் மந்தையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர்.
"என்னடா வேலா, ரொம்ப இளைச்சிட்ட போல?" என முருகன் கிண்டல் செய்ய, சுந்தரமூர்த்தி தன் நிலத்திலிருந்து கொண்டு வந்த இளநீரை வெட்டி நண்பர்கள் இருவருக்கும் நீட்டினான்.
ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்டா என்று வேலாயுதம் சிரிக்க சொல்லுடா என்றனர். பின்னர் அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கும் விஷயத்தை சொல்ல, அடி சக்கை என்று நண்பர்கள் கிண்டல் செய்தனர்.
ஆமா டா. பேர் சுந்தரி... ஆனால் நான் வீட்ல சொல்லிட்டேன்டா கல்யாணம் நடந்தா எங்க மூணு பேருக்கும் கோவில்ல ஒண்ணா தான் நடக்கணும் அதுக்கு தகுந்த போல ஏற்பாடு பண்ணுங்கனு...
நண்பனின் வார்த்தையை கேட்ட இருவரும் வேலா என்று அணைத்து கொள்ள, நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா என்று சுந்தரமூர்த்தி சிரிக்கவும் சொல்லு சொல்லு காதலும் ஒர்க்அவுட் ஆயிடுச்சா கலெக்டர் அம்மா ஒத்துக்கிட்டாங்களா என்று கேட்க ஆமாண்டா ஏதோ மனசு இறங்கி வந்து கல்யாணம் பண்ணிக்க சம்மதித்து விட்டாள் என்கவும் சரிங்க கலெக்டர் புருஷன் என்று கிண்டல் பண்ணினார்கள்.
முருகனுக்கு அவனது அத்தை பெண்ணான வள்ளியை தான் திருமணம் செய்வதாக சிறுவயதில் இருந்து பேச்சு இருந்தது.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு நண்பர்களும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
நாட்களும் ஓட நண்பர்கள் ஆசைப்பட்ட போல அவர்கள் ஊரில் இருக்கும் பேச்சியம்மன் கோயிலில் நண்பர்கள் மூவருக்கும் ஒரே மேடையில் அடுத்தடுத்த முகூர்த்தத்தில் சிறப்பாக திருமணம் நடந்த முடிந்தது.
மற்ற சடங்குகள் முடிந்து நண்பர்களும் அவரவர் மனைவிகளோடு வாழ்க்கையை தொடங்கினர். இவனுங்களை போல இவர்கள் மனைவிகளும் நல்ல தோழிகளாகிவிட்டனர்.
ஒரு வருடம் கடந்திருக்க, சொல்லி வைத்தப் போல மூவருக்கும் முதல் வாரிசாக ஆண் குழந்தை பிறந்தது. இதிலையுமா டா ஒற்றுமை என்று தெரிந்தவர்களும் ஊர்காரர்களும் கிண்டல் பண்ணினார்கள்.
பிள்ளைகளும் வளரத் தொடங்கினார்.
மேலும் ஐந்து வருடங்கள் கடந்திருக்க, வசு- சுந்தரி இருவரும் மீண்டும் கர்பமாகி ஆளுக்கொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாளுங்கள்.
வேலப்பன்- சுந்தரி தம்பதி தங்களது மகனுக்கு சுரேந்தர், மகளுக்கு சுரேகா என்று பெயர் வைத்தனர்.
சுந்தரமூர்த்தி- வசுந்தரா தம்பதியினர் மகனுக்கு பிரகாஷ் என்றும், மகளுக்கு பவானி என்று பெயர் சூட்டினார்.
முருகன்- வள்ளி தம்பதிக்கு தினேஷ் மற்றும் கீதா என்ற மகள்.
இவர்களைப் போல மூவரின் மகன்களும் நண்பர்களாகினர். பின்னர் ஊட்டியில் இருக்கும் கான்வெண்ட் ல சேர்த்து விட, வருடங்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது.
சுரேந்தர்- பிரகாஷ் இருவரும் இன்ஜினியரிங் முடித்து விட்டு அவர்கள் பெற்றோர் ஆரம்பித்த தொழிலோடு புதிய தொழிலையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்த, முருகன் போலவே தினேஷும் டாக்டருக்கு படித்து முடித்தான்.
வேலை நிமித்தமாக பிஸியாக இருந்தாலும் மூவரும் நட்பை விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை வளர்த்துக் கொண்டானுங்கள்.
பிள்ளைகளுக்கு திருமண வயது வரவும், முதலில் பவானி க்கு தெரிந்த இடத்தில் இருந்து மாப்பிள்ளை வர அவளுக்கு சீர்வரிசை பொருட்களோடு திருமணம் செய்து பூனேவிற்கு அனுப்பி வைத்தனர்.
கீதாவோ தற்போது தான் டீச்சர் டிரைனிங் முடித்திருக்க, அவளை பிரகாஷ் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தான். இனியும் இதை மறைக்க வேண்டாம் என்று தயங்கியவாறு நண்பர்களிடம் சொல்லிவிட, தினேஷ் நண்பனை ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டான்.
இதை எதிர்பார்க்காத பிரகாஷும் சுரேந்தரும் என்னடா பண்ற என்று கத்த, பின்ன வேற என்னடா பண்றது.போன வாரமே அத்தை மாமாவும் கீதாவை பொண்ணு கேட்டுட்டு போய்ட்டாங்கள்.
அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் இருக்கு இன்னும் இந்த பரதேசி பயலுக்கு தெரியலையே என்று தினேஷ் சிரிக்க என்னடா சொல்ற என்று இப்பொழுது அவர்கள் இருவரும் அதிர ஆமாண்டா விளக்கெண்ணெய், நீ பிசினஸ் கட்டிக்கிட்டு மாரடி