Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 663
- Thread Author
- #1
மீஞ்சூர்:
மேலும் இரண்டு நாட்கள் தினேஷ் குமாரி சென்னையில் இருந்து விட்டு மீஞ்சூருக்கு வந்து விட்டனர்.
ஆபீஸ் போகும் போது வரும் போதும் எப்படியாவது விக்ரம் மிருதுளாவின் கண்ணில் பட்டு விடுவான் ஆனால்,கடந்த நான்கு நாட்களாகவே இதுவரை அவனை பார்க்கவில்லையே..
துரை அவ்வளவு பிசியோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது மாலாவோ போனில் அழுது கொண்டே பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்ன ஆச்சுங்க அம்மா என்று வீட்டுக்குள் போக அம்மா இறந்துட்டாங்க டா என்று சொல்லவும் அப்படியா..பாட்டி நல்லா தானே இருந்தாங்க அம்மா? .
ம்ம்.. பாத்ரூம் போனாங்களாம் வழுக்கி விழுந்ததில் பின்னாடி தலை அடிபட்டு ஸ்பாட்ல இறந்துட்டாங்களா என்று அழுது கொண்டே மாலா சொல்ல அச்சச்சோ நாளைக்கு வேற எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குமா இல்ல நான் உன்கூட வந்துருவேன் என்கவும் இருக்கட்டும் டா.
எனக்கு தெரியாதா..நான் போயிட்டு வரேன் நீ வந்து என்ன பண்றேன்னா வசு அம்மா கூட இரு. தனியாக இருக்க வேண்டாம் என்றார்.
பரவாயில்லங்க மா நான் இருந்துகிறேன் என்றாள்.
இல்லை உன்னை தனியா விட்டுட்டு என்னால நிம்மதியா போக முடியாது என்றவர் கையோடு அவளையை அழைத்துக் கொண்டு உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் இதுல பேக் பண்ணி வச்சிருக்கேன் என்கவும் அம்மா என்றவளுக்கு விக்ரம் கூட அந்த வீட்டில் எப்படி இருப்பது என்று யோசனையாகவே இருந்தது
எப்படியாவது ஒரு ரெண்டு வாரம் இங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருடா நான் வந்துடுறேன் என்று கண்ணீரோடு மாலா சொல்லவும் ஐயோ அம்மா நான் பாத்துக்கிறேன். நீங்க தான் சொல்றதை கேட்க மாட்டேங்கிறீங்க இப்ப எதுக்கு தேவை இல்லாம பாட்டிக்கு சிரமத்தை கொடுக்கணும்? .
அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் பேசிட்டேன் என்றார். .ரொம்ப அட்வான்ஸா இருக்கீங்க என்றவள் மாலாவுக்கு டிக்கெட்டையும் புக் பண்ணினாள்.
கால் மணி நேர பயணத்தில் வசந்தரா வீட்டிற்கு வந்தவர்கள் அவரிடம் சொல்லிக் கொண்டு மாலாவும் டிரைவரும் கிளம்பி விட்டனர்.
வாங்க கலெக்டர் அம்மா இன்னைக்கு தான் உங்களுக்கு வர வழி தெரிஞ்சுதா என்று இருவரும் கிண்டல் பண்ண என்னோட வேலை பத்தி தெரிஞ்சு நீங்களே கேக்குறீங்களே பாட்டி இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியலையா என்றவள் முதல்ல நான் ஒரு காபி குடிக்கிறேன்.
இந்த அம்மா புடிச்சு இப்படி இழுத்துட்டு வந்துட்டாங்களே என்க...போய் பிரஷ் ஆகிட்டு வாடா நான் போட்டு வைக்க சொல்கிறேன் என்றார்.
சரி சரி என்றவள் எப்போதும் அவள் லீவுக்கு வந்தால் தங்கும் அறைக்கு போனவள் ப்ரஷாகி வர சூடான காபியும் கூட சாப்பிட ஸ்நாக்சும் வசந்தரா கொடுக்க நீங்க மறக்கவே இல்லை பாட்டி...காபி கூட ஏதாச்சு சாப்பிடுவேன் என்பதை என்கவும் எப்படி ராஜாத்தி மறக்க முடியும் என்றார்.
பின்னர் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது நேரமும் கடந்து சென்றதே தவிர விக்ரம் வந்தபாடில்லை .இரவு உணவையும் சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவளுக்கு போரடித்தது.
சரி ஹாலில் போய் டிவி பார்க்கலாம் என்றால் பாட்டியும் தாத்தாவும் நிச்சயமாக தூங்காமல் அவளுக்கு துணைக்காக வந்து உட்கார்ந்து இருப்பார்கள் என்று தெரிந்ததால் போனை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு படம் கண்ணில் படவும் அது பார்த்துக் கொண்டே இருந்தவள் அவளை மறந்து தூங்கிவிட்டாள்.
மறுநாள் விடியலும் தொடங்கியது.பிரஷ் ஆகி கீழே வரவும் அங்கே ஹாலில் சுந்தரபாண்டியன் தாத்தாவும் வசுவும் இருப்பதை பார்த்துக் கொண்டே வந்தவள் இந்த கடுவன்பூனை எங்க தான் போச்சு ஆளையே காணுமே?.
ஒருவேளை ஜிம்முல சுத்திட்டு கிடக்கும் என்று முணவிக்கொண்டவள் குட் மார்னிங் தாத்தா குட் மார்னிங் பாட்டி என்க...குட் மார்னிங் குட்டிமா என்றவர்கள் ,சாந்தி குட்டிமா வந்துட்டா பாரு என்று குரல் கொடுக்கும் போது வீட்டில் இருந்த சமையல் ஆளும் அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துட்டு போனார்.
பின்னர் அவர்களிடம் பேசிக்கொண்டே காபி குடித்தவள் நியூஸ் பேப்பரை படித்துவிட்டு ஆபீசுக்கு தயாராகவும் அதுவரை விக்ரம் அங்கு இல்லாமல் இருப்பதை பார்த்தவள் எங்கு தான் போனார் அந்த மனுஷன் என்று நினைத்தவள் எப்படி கேட்பது என்று யோசனையாகும் போது விக்ரம் கிட்ட இருந்து போன் வர தாத்தா பேசிக்கொண்டிருப்பதை வைத்து அவன் ஊரில் இல்லாத விஷயம் தெரிந்தது.
அதனால்தான் அந்த கடுவன்பூனை நம்ம கண்ணிலே படவில்லையா என்று யோசனையானவள் பின்னர் சாப்பிட்டு ஆபீசுக்கு சென்று விட்டாள்.
அங்கிருந்து மாலாவிற்கு ஃபோன் பண்ணி நல்லபடியா போய்ட்டீங்களா என்று விசாரிக்க ஆச்சுடானு அந்த நேரத்தில் அட்டென்ட் பண்ணி அவளுக்கு பதில் சொல்லியவர் நான் ப்ரீயா கிட்ட பேசுறேன் டா என்றார்
நீலாங்கரை:
சென்னையின் அந்த மாலை நேரத்து மிதமான காற்றில், தினேஷின் மனது மட்டும் சற்று படபடப்பாக இருந்தது. பல வருடங்களாக பழகிய வீட்டிற்குப் போவதற்கு இன்று ஏன் இவ்வளவு யோசனை? கார் ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த தினேஷின் கைகள் லேசாக நடுங்கின. பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி குமாரி, "என்னங்க... ரொம்ப யோசிக்கிறீங்களா?" என்று மெல்லக் கேட்டாள்.
"இல்லம்மா...என் உயிர் நண்பன். ஆனா இன்னைக்கு நான் போறது விக்ரமோட மாமாவா. ஒருவேளை அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நம்ம நட்பு பாதிக்குமோன்னு ஒரு சின்ன பயம்," என்றார் தினேஷ்.
அமைதியாக புன்னகைத்த குமாரி "உங்க மேல அவங்களுக்கு இருக்கிற அன்பு அளவில்லாதது. விக்ரம்க்கு உங்களை விட ஒரு நல்ல மாமா இருக்க முடியாது. நீங்க கேக்குறதை அவங்க தட்டவே மாட்டாங்க." வாங்க யென்றார்.
பின்னர் நீலாங்கரையில் இருக்கும் சுரேந்திரனின் வீட்டு வாசலில் கார் நின்றது. அவர்களுக்காக வாசலிலேயே சுரேந்தர் காத்துக்கொண்டிருந்தார். "வாடா தினேஷ்! என்ன இன்னைக்கு ரொம்ப நேரமாச்சு? குமாரி, வாம்மா... உள்ள வாங்க," என உற்சாகமாக வரவேற்றார்.
உள்ளே சென்றதும் காபி, பலகாரங்கள் என உபசரிப்புகள் முடிந்தன. எங்கடா சித்தப்பா சித்தி காணும் என்று தினேஷ் கேட்க உன் பேரனோடு ஷாப்பிங் என்று சிரித்தார்.
அரை மணி நேரங்கள் கடந்து இருக்க வெளியே போயிருந்த அவர்களும் வீட்டிற்கு வந்த பிறகு பரஸ்பரம் நலம் விசாரித்து பொதுவான விஷயங்களைப் பேசி முடித்ததும், தினேஷ் மெல்லத் தொண்டையை கணைத்துக்கொண்டு நண்பனின் கண்களை நேராகப் பார்த்தார்.
குட்டிமா மேல எனக்கு உரிமை இருக்கா என்க...அடிச்சு பல்லெல்லாம் உடைக்க போறேன் பாரு எதுக்கு இப்ப தேவையில்லாம பேசிட்டு இருக்க என்று சுரேந்தர் முறைக்க, மனசுல பட்டுச்சுடா அதை வச்சுக்கிட்டே இருக்க முடியாது
மேலும் இரண்டு நாட்கள் தினேஷ் குமாரி சென்னையில் இருந்து விட்டு மீஞ்சூருக்கு வந்து விட்டனர்.
ஆபீஸ் போகும் போது வரும் போதும் எப்படியாவது விக்ரம் மிருதுளாவின் கண்ணில் பட்டு விடுவான் ஆனால்,கடந்த நான்கு நாட்களாகவே இதுவரை அவனை பார்க்கவில்லையே..
துரை அவ்வளவு பிசியோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேலை முடித்து வீட்டிற்கு வரும்போது மாலாவோ போனில் அழுது கொண்டே பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்ன ஆச்சுங்க அம்மா என்று வீட்டுக்குள் போக அம்மா இறந்துட்டாங்க டா என்று சொல்லவும் அப்படியா..பாட்டி நல்லா தானே இருந்தாங்க அம்மா? .
ம்ம்.. பாத்ரூம் போனாங்களாம் வழுக்கி விழுந்ததில் பின்னாடி தலை அடிபட்டு ஸ்பாட்ல இறந்துட்டாங்களா என்று அழுது கொண்டே மாலா சொல்ல அச்சச்சோ நாளைக்கு வேற எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குமா இல்ல நான் உன்கூட வந்துருவேன் என்கவும் இருக்கட்டும் டா.
எனக்கு தெரியாதா..நான் போயிட்டு வரேன் நீ வந்து என்ன பண்றேன்னா வசு அம்மா கூட இரு. தனியாக இருக்க வேண்டாம் என்றார்.
பரவாயில்லங்க மா நான் இருந்துகிறேன் என்றாள்.
இல்லை உன்னை தனியா விட்டுட்டு என்னால நிம்மதியா போக முடியாது என்றவர் கையோடு அவளையை அழைத்துக் கொண்டு உனக்கு தேவையான டிரஸ் எல்லாம் இதுல பேக் பண்ணி வச்சிருக்கேன் என்கவும் அம்மா என்றவளுக்கு விக்ரம் கூட அந்த வீட்டில் எப்படி இருப்பது என்று யோசனையாகவே இருந்தது
எப்படியாவது ஒரு ரெண்டு வாரம் இங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருடா நான் வந்துடுறேன் என்று கண்ணீரோடு மாலா சொல்லவும் ஐயோ அம்மா நான் பாத்துக்கிறேன். நீங்க தான் சொல்றதை கேட்க மாட்டேங்கிறீங்க இப்ப எதுக்கு தேவை இல்லாம பாட்டிக்கு சிரமத்தை கொடுக்கணும்? .
அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் பேசிட்டேன் என்றார். .ரொம்ப அட்வான்ஸா இருக்கீங்க என்றவள் மாலாவுக்கு டிக்கெட்டையும் புக் பண்ணினாள்.
கால் மணி நேர பயணத்தில் வசந்தரா வீட்டிற்கு வந்தவர்கள் அவரிடம் சொல்லிக் கொண்டு மாலாவும் டிரைவரும் கிளம்பி விட்டனர்.
வாங்க கலெக்டர் அம்மா இன்னைக்கு தான் உங்களுக்கு வர வழி தெரிஞ்சுதா என்று இருவரும் கிண்டல் பண்ண என்னோட வேலை பத்தி தெரிஞ்சு நீங்களே கேக்குறீங்களே பாட்டி இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கு ஓவரா தெரியலையா என்றவள் முதல்ல நான் ஒரு காபி குடிக்கிறேன்.
இந்த அம்மா புடிச்சு இப்படி இழுத்துட்டு வந்துட்டாங்களே என்க...போய் பிரஷ் ஆகிட்டு வாடா நான் போட்டு வைக்க சொல்கிறேன் என்றார்.
சரி சரி என்றவள் எப்போதும் அவள் லீவுக்கு வந்தால் தங்கும் அறைக்கு போனவள் ப்ரஷாகி வர சூடான காபியும் கூட சாப்பிட ஸ்நாக்சும் வசந்தரா கொடுக்க நீங்க மறக்கவே இல்லை பாட்டி...காபி கூட ஏதாச்சு சாப்பிடுவேன் என்பதை என்கவும் எப்படி ராஜாத்தி மறக்க முடியும் என்றார்.
பின்னர் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது நேரமும் கடந்து சென்றதே தவிர விக்ரம் வந்தபாடில்லை .இரவு உணவையும் சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தவளுக்கு போரடித்தது.
சரி ஹாலில் போய் டிவி பார்க்கலாம் என்றால் பாட்டியும் தாத்தாவும் நிச்சயமாக தூங்காமல் அவளுக்கு துணைக்காக வந்து உட்கார்ந்து இருப்பார்கள் என்று தெரிந்ததால் போனை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒரு படம் கண்ணில் படவும் அது பார்த்துக் கொண்டே இருந்தவள் அவளை மறந்து தூங்கிவிட்டாள்.
மறுநாள் விடியலும் தொடங்கியது.பிரஷ் ஆகி கீழே வரவும் அங்கே ஹாலில் சுந்தரபாண்டியன் தாத்தாவும் வசுவும் இருப்பதை பார்த்துக் கொண்டே வந்தவள் இந்த கடுவன்பூனை எங்க தான் போச்சு ஆளையே காணுமே?.
ஒருவேளை ஜிம்முல சுத்திட்டு கிடக்கும் என்று முணவிக்கொண்டவள் குட் மார்னிங் தாத்தா குட் மார்னிங் பாட்டி என்க...குட் மார்னிங் குட்டிமா என்றவர்கள் ,சாந்தி குட்டிமா வந்துட்டா பாரு என்று குரல் கொடுக்கும் போது வீட்டில் இருந்த சமையல் ஆளும் அவளுக்கு காபி கொண்டு வந்து கொடுத்துட்டு போனார்.
பின்னர் அவர்களிடம் பேசிக்கொண்டே காபி குடித்தவள் நியூஸ் பேப்பரை படித்துவிட்டு ஆபீசுக்கு தயாராகவும் அதுவரை விக்ரம் அங்கு இல்லாமல் இருப்பதை பார்த்தவள் எங்கு தான் போனார் அந்த மனுஷன் என்று நினைத்தவள் எப்படி கேட்பது என்று யோசனையாகும் போது விக்ரம் கிட்ட இருந்து போன் வர தாத்தா பேசிக்கொண்டிருப்பதை வைத்து அவன் ஊரில் இல்லாத விஷயம் தெரிந்தது.
அதனால்தான் அந்த கடுவன்பூனை நம்ம கண்ணிலே படவில்லையா என்று யோசனையானவள் பின்னர் சாப்பிட்டு ஆபீசுக்கு சென்று விட்டாள்.
அங்கிருந்து மாலாவிற்கு ஃபோன் பண்ணி நல்லபடியா போய்ட்டீங்களா என்று விசாரிக்க ஆச்சுடானு அந்த நேரத்தில் அட்டென்ட் பண்ணி அவளுக்கு பதில் சொல்லியவர் நான் ப்ரீயா கிட்ட பேசுறேன் டா என்றார்
நீலாங்கரை:
சென்னையின் அந்த மாலை நேரத்து மிதமான காற்றில், தினேஷின் மனது மட்டும் சற்று படபடப்பாக இருந்தது. பல வருடங்களாக பழகிய வீட்டிற்குப் போவதற்கு இன்று ஏன் இவ்வளவு யோசனை? கார் ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த தினேஷின் கைகள் லேசாக நடுங்கின. பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவி குமாரி, "என்னங்க... ரொம்ப யோசிக்கிறீங்களா?" என்று மெல்லக் கேட்டாள்.
"இல்லம்மா...என் உயிர் நண்பன். ஆனா இன்னைக்கு நான் போறது விக்ரமோட மாமாவா. ஒருவேளை அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நம்ம நட்பு பாதிக்குமோன்னு ஒரு சின்ன பயம்," என்றார் தினேஷ்.
அமைதியாக புன்னகைத்த குமாரி "உங்க மேல அவங்களுக்கு இருக்கிற அன்பு அளவில்லாதது. விக்ரம்க்கு உங்களை விட ஒரு நல்ல மாமா இருக்க முடியாது. நீங்க கேக்குறதை அவங்க தட்டவே மாட்டாங்க." வாங்க யென்றார்.
பின்னர் நீலாங்கரையில் இருக்கும் சுரேந்திரனின் வீட்டு வாசலில் கார் நின்றது. அவர்களுக்காக வாசலிலேயே சுரேந்தர் காத்துக்கொண்டிருந்தார். "வாடா தினேஷ்! என்ன இன்னைக்கு ரொம்ப நேரமாச்சு? குமாரி, வாம்மா... உள்ள வாங்க," என உற்சாகமாக வரவேற்றார்.
உள்ளே சென்றதும் காபி, பலகாரங்கள் என உபசரிப்புகள் முடிந்தன. எங்கடா சித்தப்பா சித்தி காணும் என்று தினேஷ் கேட்க உன் பேரனோடு ஷாப்பிங் என்று சிரித்தார்.
அரை மணி நேரங்கள் கடந்து இருக்க வெளியே போயிருந்த அவர்களும் வீட்டிற்கு வந்த பிறகு பரஸ்பரம் நலம் விசாரித்து பொதுவான விஷயங்களைப் பேசி முடித்ததும், தினேஷ் மெல்லத் தொண்டையை கணைத்துக்கொண்டு நண்பனின் கண்களை நேராகப் பார்த்தார்.
குட்டிமா மேல எனக்கு உரிமை இருக்கா என்க...அடிச்சு பல்லெல்லாம் உடைக்க போறேன் பாரு எதுக்கு இப்ப தேவையில்லாம பேசிட்டு இருக்க என்று சுரேந்தர் முறைக்க, மனசுல பட்டுச்சுடா அதை வச்சுக்கிட்டே இருக்க முடியாது