Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 650
- Thread Author
- #1
நீலாங்கரை:
இரவு மணி பத்து. ஜன்னல் வழியாக நுழைந்த குளிர்ந்த காற்று அறையின் அமைதியைத் தழுவிக் கொண்டிருந்தது. ரேகா, தன் மூன்று வயது மகன் ருத்ரனின் தலையை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள். அவன் தூக்கத்தில் முணுமுணுத்தபடி அவள் நைட்டியைப் பற்றிக்கொண்டிருந்தான்.
"இந்த ஒரு பிடிமானம் தான் கடந்த ரெண்டு வருஷமா என்னைத் தாங்கிப் பிடிக்குது..." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளுக்கு, லேசாகக் கண்கள் கசிந்தன. எல்லையில் பனிச்சரிவு என்று செய்தித் தாள்களில் படிக்கும் போதெல்லாம், மித்ரனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று அவள் செய்த பிரார்த்தனைகள் ஏராளம்.
திடீரென்று அவளது ரூம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
"இந்த நேரத்துல அத்தை எதுக்குக் கூப்பிடுறாங்க? ஒருவேளை தாத்தா பாட்டிக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ?" என்று பதறியபடி மெதுவாக எழுந்தாள். மகனின் பிடியை மென்மையாக விடுவித்துவிட்டு, போர்வையைப் போர்த்திவிட்டு போய் கதவை திறக்க வெளியே அவள் எதிர்பார்த்த போல அவளது அத்தை இல்லை.
கருகருவென வெட்டப்பட்ட தலைமுடி, அடர்த்தியான மீசை, தோளில் ஒரு பெரிய பேக், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ராணுவச் சீருடை. ரேகாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டது போன்ற ஒரு பிரமை.
எதிரே அவளது காதல் கணவன் மித்ரன் தான் நின்று கொண்டிருந்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவன் கிளம்பும்போது பார்த்த அதே கம்பீரம். ஆனால் அவன் கண்களில் இருந்த அந்த ஏக்கம் இப்போது அவளை ஊடுருவியது. ரேகாவுக்குக் கைகள் நடுங்கத் தொடங்கின. பேச நினைத்தாள், ஆனால் குரல் வரவில்லை. தொண்டை அடைக்க, கண்கள் தானாகக் குளம் கட்டின.
"ரேகா..." என்று அவன் அழைத்த அந்த ஒரு வார்த்தை, அவள் சுமந்திருந்த காத்திருப்பு எனும் பாரத்தை அப்படியே இறக்கி வைத்தது.
"நீங்க... நீங்க எப்படி? போன் கூட பண்ணல..." என்று விக்கித்து நின்றவளை நோக்கி ஒரு படி முன்னே வந்தவன், "உனக்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா நீ இவ்வளவு அதிர்ச்சியாவேன்னு நினைக்கல" என்று புன்னகைத்தபடி அவளது கண்ணீரைத் துடைக்கக் கையை நீட்டினான்.
சட்டென்று தன்னவனின் கைகளைப் பற்றிக்கொண்டவள் இது வெறும் கனவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது போல அவனது விரல்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவள் மார்பு விம்மித் தணிய, அவன் தோளில் தலைசாய்த்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். அந்த இரண்டு வருடத் தனிமை, பயம், ஏக்கம் எல்லாம் அந்தத் தழுவலில் கரைந்து போயின.
"சரி சரி... அழாதே. நான் வந்துட்டேன்ல... நம்ம பையன் எங்க?" என்று மித்ரன் கேட்கவும், ரேகா அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "அவன் உள்ளே தூங்குறான்... வாங்க" என்றாள்.
தங்களது ரூமிற்குள் நுழைந்த மித்ரன், மெத்தையில் சுருண்டு படுத்திருந்த மகனை ஒரு நீண்ட பெருமூச்சோடு பார்த்தான். அவன் கிளம்பும்போது தத்தித் தத்தி நடந்த குழந்தை, இப்போது வளர்ந்து சிறுவனாக மாறியிருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. குனிந்து மகனின் நெற்றியில் ஒரு மென்மையான முத்தமிட்டான். அவனது கரடுமுரடான மீசை பட்டதும், தூக்கத்தில் ருத்ரனும் லேசாகச் சிரித்துவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
"இவனுக்கு உங்களை மாதிரியே தான் சிரிப்பு மாமா..." என்று மெல்லிய குரலில் சொன்ன ரேகாவின் குரலில் அத்தனை பெருமிதம்.
அதைக் கேட்டு மனைவியை நிமிர்ந்து பார்த்தவன். " எப்படித்தான் சமாளிச்சியோ? ரொம்ப இளைச்சுட்ட ரேகா" என்றான் அக்கறையுடன்.
"நீங்க வந்தாச்சுல்ல, இனி எல்லாம் சரியாயிடும். இருங்க, முதல்ல டிரஸ் மாத்திட்டு வாங்க, நான் போய் உங்களுக்குப் பிடிச்சதைச் சமைக்கிறேன்" என்று உற்சாகமாகச் கதவை திறந்து வெளியே போக முயன்ற மனைவியின் கையை எட்டி பிடித்தான்.
அந்த கையின் இறுக்கம் ரேகாவிற்கு உள்ளுக்குள் ரத்தத்தை சூடாக்க, வேகமாக இழுக்கவும் கணவனின் நெஞ்சில் மேல் பின்வாக்கிலே வந்த மோதி நின்றாள்.
ஏன் டி...இரண்டு வருஷம் கழித்து வந்திருக்கேன்...இந்த சோறு அங்கு கிடைக்காதா யென்று மனைவியை இறுக்கமாக பிடித்து அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்தான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அதே அணைப்பை கண்களை மூடி ரசித்தவள்,பின்னர் தன்னை நிதானம் பண்ணிக்கொண்டு வீட்டுக்கு வருவதால் கண்டிப்பாக நீங்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லைனு எனக்கு நல்லா தெரியும் மாமா.
ம்ம் என்றவன் சரி போ யென கைகளை விலக்க, உதட்டோரம் சிந்தும் சிரிப்போடு கீழே வரும் மருமகளை பார்த்த உமா சரிமா நீ பார்த்துக் கொள் என்று அவரது அறைக்குள் சென்று விட்டாள்.
மணி பத்தைத் தாண்டினாலும், ரேகாவுக்குள் ஒரு புதிய ஆற்றல் பிறந்தது போல இருந்தது. வேகமாக அடுப்பைப் பற்றவைத்தாள்.
தனது கணவன் மிகவும் விரும்பி உண்ணும் மிளகு ரசம். சூடாக ஒரு உருளைக்கிழங்கு வறுவல்.
மணக்க மணக்க நெய் ஊற்றிய சாதம். எப்போதும் மித்ரன் சாய்ஸ் இது தான்.
அரை மணி நேரம் கடந்திருந்தது. மகனுக்கு அரணாக கட்டிலின் இரண்டு பக்கம் இருக்கும் இரண்டடி உயரத்தில் இருக்கும் சட்டங்களை இணைத்து லாக் பண்ணி விட்டு கதவை லேசாக திறந்து வைத்து கீழே வரும் போது சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.
தனது அம்மா பாட்டி இருக்கிறார்களா என்று ஒருமுறை ஹாலை சுற்றி பார்த்தவன் ஓய் என்றபடி சமையலறை வாசலில் வந்து நின்றான்.
கணவனின் சத்தம் கேட்கவும் மாமா யென திரும்ப, ராணுவ உடையில் இருந்து மாறி, ஒரு சாதாரண கைலிக்கும் சட்டையுக்கும் மாறியிருந்த தன்னவனைப் பார்க்கும்போதுதான், 'தன் கணவனாக' வீட்டிற்குள் வந்துவிட்டான் என்ற நிஜம் அவளுக்குள் முழுமையாக உறைத்தது.
"இவ்வளவு லேட் ஆகுதே இன்னும் காணுமேனு வந்தேன் டி, என்றவாறு உள்ளே வந்தவன் அங்கிருந்த கிச்சன் மேடையில் உட்கார, சமைத்ததை தட்டில் போட்டு கணவனின் முன்பு நீட்டினாள்".
அதுக்குள்ள இத்தனை ஐட்டமா?"
"உங்களுக்கு பிடிச்சது எதுவுமே இல்லாம நான் எப்படிச் சாப்பிட்டேன்னு எனக்குத்தான் தெரியும். இப்போ அமைதியா சாப்பிடுங்க" என்றாள்.
சரிங்க பொண்டாட்டி...
உங்க வார்த்தைக்கு அப்பில் ஏது என்றபடி முதல் கைப் பிடி சாதத்தை வாயில் வைத்ததும் கண்களை மூடியவன், ஆஹா... ஆஹா...."எல்லையில என்னதான் விதவிதமா சாப்பாடு கொடுத்தாலும், என் பொண்டாட்டி கை மணத்துக்கு எதுவும் ஈடாகாது " என்றான்.
மாமாஆஆஆ யென்றாலும் ரேகாவோ தன்னவன் சாப்பிடுவதையே வைத்த கண் வாங்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்
மீஞ்சூர்:
சில நாட்கள் கடந்திருக்க...
அரசு நிலத்தில் அமையவிருக்கும் அந்தப் புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று தான் என்பதால், ஊர் மக்களின் கூட்டத்தாலும் மேளதாளங்களாலும் களைகட்டியிருந்தது.
இத்தனை வருடத்தில் இந்த நாளுக்காக தானே காத்திருந்தனர் அங்குள்ள மக்கள்.அதனால் அந்த இடமே ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கமாகத் தெரிந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் சைரன் ஒலியுடன் போலீஸ் பாதுகாப்போடு காரும் வந்தது.
மாவட்ட ஆட்சியர் மிருதுளா, காரிலிருந்து இறங்கியதுமே ஒரு கம்பீரமான அமைதி அவளுடன் சேர்ந்தே வந்தது. கதர் புடவையில், நெற்றியில் சிறு திலகத்துடன், அதிகாரத்திற்கே உரிய நிதானத்தோடு மேடையை நோக்கி நடந்தவளை பார்த்தவர்கள் கையெடுத்து கும்பிட்டனர்.
இரவு மணி பத்து. ஜன்னல் வழியாக நுழைந்த குளிர்ந்த காற்று அறையின் அமைதியைத் தழுவிக் கொண்டிருந்தது. ரேகா, தன் மூன்று வயது மகன் ருத்ரனின் தலையை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள். அவன் தூக்கத்தில் முணுமுணுத்தபடி அவள் நைட்டியைப் பற்றிக்கொண்டிருந்தான்.
"இந்த ஒரு பிடிமானம் தான் கடந்த ரெண்டு வருஷமா என்னைத் தாங்கிப் பிடிக்குது..." என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளுக்கு, லேசாகக் கண்கள் கசிந்தன. எல்லையில் பனிச்சரிவு என்று செய்தித் தாள்களில் படிக்கும் போதெல்லாம், மித்ரனுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்று அவள் செய்த பிரார்த்தனைகள் ஏராளம்.
திடீரென்று அவளது ரூம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
"இந்த நேரத்துல அத்தை எதுக்குக் கூப்பிடுறாங்க? ஒருவேளை தாத்தா பாட்டிக்கு உடம்பு எதுவும் சரியில்லையோ?" என்று பதறியபடி மெதுவாக எழுந்தாள். மகனின் பிடியை மென்மையாக விடுவித்துவிட்டு, போர்வையைப் போர்த்திவிட்டு போய் கதவை திறக்க வெளியே அவள் எதிர்பார்த்த போல அவளது அத்தை இல்லை.
கருகருவென வெட்டப்பட்ட தலைமுடி, அடர்த்தியான மீசை, தோளில் ஒரு பெரிய பேக், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த ராணுவச் சீருடை. ரேகாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டது போன்ற ஒரு பிரமை.
எதிரே அவளது காதல் கணவன் மித்ரன் தான் நின்று கொண்டிருந்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவன் கிளம்பும்போது பார்த்த அதே கம்பீரம். ஆனால் அவன் கண்களில் இருந்த அந்த ஏக்கம் இப்போது அவளை ஊடுருவியது. ரேகாவுக்குக் கைகள் நடுங்கத் தொடங்கின. பேச நினைத்தாள், ஆனால் குரல் வரவில்லை. தொண்டை அடைக்க, கண்கள் தானாகக் குளம் கட்டின.
"ரேகா..." என்று அவன் அழைத்த அந்த ஒரு வார்த்தை, அவள் சுமந்திருந்த காத்திருப்பு எனும் பாரத்தை அப்படியே இறக்கி வைத்தது.
"நீங்க... நீங்க எப்படி? போன் கூட பண்ணல..." என்று விக்கித்து நின்றவளை நோக்கி ஒரு படி முன்னே வந்தவன், "உனக்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா நீ இவ்வளவு அதிர்ச்சியாவேன்னு நினைக்கல" என்று புன்னகைத்தபடி அவளது கண்ணீரைத் துடைக்கக் கையை நீட்டினான்.
சட்டென்று தன்னவனின் கைகளைப் பற்றிக்கொண்டவள் இது வெறும் கனவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது போல அவனது விரல்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவள் மார்பு விம்மித் தணிய, அவன் தோளில் தலைசாய்த்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். அந்த இரண்டு வருடத் தனிமை, பயம், ஏக்கம் எல்லாம் அந்தத் தழுவலில் கரைந்து போயின.
"சரி சரி... அழாதே. நான் வந்துட்டேன்ல... நம்ம பையன் எங்க?" என்று மித்ரன் கேட்கவும், ரேகா அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "அவன் உள்ளே தூங்குறான்... வாங்க" என்றாள்.
தங்களது ரூமிற்குள் நுழைந்த மித்ரன், மெத்தையில் சுருண்டு படுத்திருந்த மகனை ஒரு நீண்ட பெருமூச்சோடு பார்த்தான். அவன் கிளம்பும்போது தத்தித் தத்தி நடந்த குழந்தை, இப்போது வளர்ந்து சிறுவனாக மாறியிருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. குனிந்து மகனின் நெற்றியில் ஒரு மென்மையான முத்தமிட்டான். அவனது கரடுமுரடான மீசை பட்டதும், தூக்கத்தில் ருத்ரனும் லேசாகச் சிரித்துவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
"இவனுக்கு உங்களை மாதிரியே தான் சிரிப்பு மாமா..." என்று மெல்லிய குரலில் சொன்ன ரேகாவின் குரலில் அத்தனை பெருமிதம்.
அதைக் கேட்டு மனைவியை நிமிர்ந்து பார்த்தவன். " எப்படித்தான் சமாளிச்சியோ? ரொம்ப இளைச்சுட்ட ரேகா" என்றான் அக்கறையுடன்.
"நீங்க வந்தாச்சுல்ல, இனி எல்லாம் சரியாயிடும். இருங்க, முதல்ல டிரஸ் மாத்திட்டு வாங்க, நான் போய் உங்களுக்குப் பிடிச்சதைச் சமைக்கிறேன்" என்று உற்சாகமாகச் கதவை திறந்து வெளியே போக முயன்ற மனைவியின் கையை எட்டி பிடித்தான்.
அந்த கையின் இறுக்கம் ரேகாவிற்கு உள்ளுக்குள் ரத்தத்தை சூடாக்க, வேகமாக இழுக்கவும் கணவனின் நெஞ்சில் மேல் பின்வாக்கிலே வந்த மோதி நின்றாள்.
ஏன் டி...இரண்டு வருஷம் கழித்து வந்திருக்கேன்...இந்த சோறு அங்கு கிடைக்காதா யென்று மனைவியை இறுக்கமாக பிடித்து அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்தான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த அதே அணைப்பை கண்களை மூடி ரசித்தவள்,பின்னர் தன்னை நிதானம் பண்ணிக்கொண்டு வீட்டுக்கு வருவதால் கண்டிப்பாக நீங்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லைனு எனக்கு நல்லா தெரியும் மாமா.
ம்ம் என்றவன் சரி போ யென கைகளை விலக்க, உதட்டோரம் சிந்தும் சிரிப்போடு கீழே வரும் மருமகளை பார்த்த உமா சரிமா நீ பார்த்துக் கொள் என்று அவரது அறைக்குள் சென்று விட்டாள்.
மணி பத்தைத் தாண்டினாலும், ரேகாவுக்குள் ஒரு புதிய ஆற்றல் பிறந்தது போல இருந்தது. வேகமாக அடுப்பைப் பற்றவைத்தாள்.
தனது கணவன் மிகவும் விரும்பி உண்ணும் மிளகு ரசம். சூடாக ஒரு உருளைக்கிழங்கு வறுவல்.
மணக்க மணக்க நெய் ஊற்றிய சாதம். எப்போதும் மித்ரன் சாய்ஸ் இது தான்.
அரை மணி நேரம் கடந்திருந்தது. மகனுக்கு அரணாக கட்டிலின் இரண்டு பக்கம் இருக்கும் இரண்டடி உயரத்தில் இருக்கும் சட்டங்களை இணைத்து லாக் பண்ணி விட்டு கதவை லேசாக திறந்து வைத்து கீழே வரும் போது சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.
தனது அம்மா பாட்டி இருக்கிறார்களா என்று ஒருமுறை ஹாலை சுற்றி பார்த்தவன் ஓய் என்றபடி சமையலறை வாசலில் வந்து நின்றான்.
கணவனின் சத்தம் கேட்கவும் மாமா யென திரும்ப, ராணுவ உடையில் இருந்து மாறி, ஒரு சாதாரண கைலிக்கும் சட்டையுக்கும் மாறியிருந்த தன்னவனைப் பார்க்கும்போதுதான், 'தன் கணவனாக' வீட்டிற்குள் வந்துவிட்டான் என்ற நிஜம் அவளுக்குள் முழுமையாக உறைத்தது.
"இவ்வளவு லேட் ஆகுதே இன்னும் காணுமேனு வந்தேன் டி, என்றவாறு உள்ளே வந்தவன் அங்கிருந்த கிச்சன் மேடையில் உட்கார, சமைத்ததை தட்டில் போட்டு கணவனின் முன்பு நீட்டினாள்".
அதுக்குள்ள இத்தனை ஐட்டமா?"
"உங்களுக்கு பிடிச்சது எதுவுமே இல்லாம நான் எப்படிச் சாப்பிட்டேன்னு எனக்குத்தான் தெரியும். இப்போ அமைதியா சாப்பிடுங்க" என்றாள்.
சரிங்க பொண்டாட்டி...
உங்க வார்த்தைக்கு அப்பில் ஏது என்றபடி முதல் கைப் பிடி சாதத்தை வாயில் வைத்ததும் கண்களை மூடியவன், ஆஹா... ஆஹா...."எல்லையில என்னதான் விதவிதமா சாப்பாடு கொடுத்தாலும், என் பொண்டாட்டி கை மணத்துக்கு எதுவும் ஈடாகாது " என்றான்.
மாமாஆஆஆ யென்றாலும் ரேகாவோ தன்னவன் சாப்பிடுவதையே வைத்த கண் வாங்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்
மீஞ்சூர்:
சில நாட்கள் கடந்திருக்க...
அரசு நிலத்தில் அமையவிருக்கும் அந்தப் புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று தான் என்பதால், ஊர் மக்களின் கூட்டத்தாலும் மேளதாளங்களாலும் களைகட்டியிருந்தது.
இத்தனை வருடத்தில் இந்த நாளுக்காக தானே காத்திருந்தனர் அங்குள்ள மக்கள்.அதனால் அந்த இடமே ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கமாகத் தெரிந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் சைரன் ஒலியுடன் போலீஸ் பாதுகாப்போடு காரும் வந்தது.
மாவட்ட ஆட்சியர் மிருதுளா, காரிலிருந்து இறங்கியதுமே ஒரு கம்பீரமான அமைதி அவளுடன் சேர்ந்தே வந்தது. கதர் புடவையில், நெற்றியில் சிறு திலகத்துடன், அதிகாரத்திற்கே உரிய நிதானத்தோடு மேடையை நோக்கி நடந்தவளை பார்த்தவர்கள் கையெடுத்து கும்பிட்டனர்.