Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 121
- Thread Author
- #1
தீமையே
வெ[கொ]ல்லும்.
படலம் - 6
ஆறு வயதுகூட
முழுதாக நிரம்பிடாத குழந்தை அவள், 'மேடம் மேடம் என் அப்பா அம்மா இருக்குற இடத்தை நீங்க தான் வாங்க போறிங்களா!?' என்று கேட்டாள் சிறுமி.
அவள் என்னமோ பேச வருகிறாள் என்று சித்ரா உன்னிப்பாக அவள் வார்த்தையை கவனிக்கும் வேளையில் , ' தேனு இங்க என்ன பண்ணுற வ.. எத்தனை முறை நீ இங்க தனியா வரவே கூடாதுனு சொல்லி இருக்கேன்' என்ற ஆணின் குரல் கேட்டு சித்ரா திரும்பி பார்த்தாள்.
பார்க்க ஆறடி உயரத்தில், வைரம் பாஞ்ச தேகம் என்று சொல்லும் அளவுக்கு கட்டு மஸ்த்தான ஆள் ஒருவன் சித்ராவின் கண் எதிரே வந்து நிற்க்க,'கருப்பா' என்று ஓடிப்போய் சிறுமி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள... யார் இவர்கள் என்ற கேள்வி சித்ராவின் மனதில் தோன்றியது.
தன் எதிரே நிற்கும் ஆடவனை பார்த்த சித்ரா,'இந்த நேரத்துல உங்க குழந்தையை தனியா விட்டுட்டு நீங்க என்ன ஆழ்ந்த தூக்கத்துல இருந்திங்களா!?' என்று கேட்டாள்.
சித்ராவின் கேள்விக்கு பதில் தராத ஆடவன்,'தேனு... இங்கன எல்லாம் வர கூடாதுன்னு சொல்லிருக்கேனே!! ஏன் புள்ள இங்க வந்த!?' என்று கேட்டான்.
'கருப்பா... இவங்க தான் நம்ம தோப்பை வாங்க போறதா செல்வம் மாமா சொன்னாரு கருப்பா..அதான் இவங்ககிட்ட பேசி. என் அம்மா அப்பா கல்லறையை ஒன்னும் பண்ணாதீங்கன்னு சொல்ல வந்தேன் கருப்பா' என்றாள் சிறுமி தேன்மொழி @ தேன்.
இந்த பங்களாவை X Mla சம்பத்திடம் சித்ரா வாங்கியதை அறிந்திடாத சிறுமி சித்ராவை தவறுதலாக எண்ணி இருக்க. கருப்பன் என்கிற கருப்பசாமியும் கூட சித்ராவை சம்பத்தின் குடும்பம் தான் என்று நம்பினான்.
சித்ராவை அழுத்தமாக முறைத்த கருப்பன், 'தேனு... இவங்க எல்லாம் பணத்துலயே ஊறுன உயர் ரக ஊறுக்காய்ங்க. இவங்கள நம்ம சட்டப்படி தான் சமாளிக்கணும்' என்றவன் சிறுமி தேனை தூக்கிக்கொண்டு அங்கிருந்து அவன் தோப்பை நோக்கி நடந்தான்.
கருப்பன் தன்னை தவறுதலாக எண்ணி இருக்கின்றான் என்று அறிந்துக்கொண்ட சித்ரா அவர்கள் செல்லும் பாதையை உறுத்து பார்க்க,'மேடம்... அந்த குழந்தை தினமும் என்கிட்ட வந்து இதயே தான் மேடம் கேட்கும்'என்றான்.
'புரியல... என்ன கேப்பாங்க' என்று சித்ரா வினாவும் நேரம் அங்கே ஈஷாவும் வந்தவள்,'என்ன மேடம்!! என்ன பிரச்சனை!?' என்று கேட்டாள்.
'Nothing' என்ற சித்ரா...'நீங்க சொல்லுங்க. அந்த குழந்தைக்கு என்ன வேணுமாம்' என்று கேட்க,
'அதோ அந்த தோப்புல தான் மேடம் அந்த குழந்தையோட அப்பா அம்மா சமாதி இருக்கு' என்றான் வாட்ச் மேன் செல்வம்.
'என்ன அப்பா அம்மாவா... அப்போ அந்த Guy யாரு!?' என்று சித்ரா கருப்பனை பற்றி விசாரிக்க,
'அவரு பேர் கருப்பசாமி மேடம்' என்றவன் அவர்களின் குடும்ப கதையை சொல்ல ஆரம்பித்தான்.
கருப்பசாமிக்கு மூணு தம்பிங்க மேடம். இவரு அவங்கள நல்லா படிக்க வச்சாரு. ஆனா இரண்டாவது தம்பி பழனி சாமி பக்கத்து ஊருல வேற ஜாதி பொண்ண காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டாரு மேடம்.
ரெண்டு ஊரும் ரத்த கலவரமா மாறிப்போச்சி மேடம். கருப்பசாமி ஆளு முறுக்கமானவரா இருந்தாலும்,சட்டத்துக்கு கட்டுப்பட்டவறு.
அதனால கோர்ட்க்கு போய் அவங்க தம்பி கல்யாணத்தை சட்டபடி ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு மேடம்.
அவங்க தம்பிக்கு இதே தோப்புல சின்ன மாடி வீடு கட்டிக்கொடுத்து நல்லா வாழ வச்சாரு மேடம்.
மீதம் இருக்குற இரண்டு தம்பிங்களுக்கும் பிஸ்னஸ் பண்ண எல்லா உதவியும் பண்ணாரு மேடம்.
ஆனா பாருங்க. காதலிச்சி கல்யாணம் பண்ண அந்த பையனை பக்கத்து ஊர்க்காரங்க கண்டம் துண்டாம வெட்டிப் போட்டுட்டாங்க மேடம்.
அந்த பையன் பழனி சாமி சாகும் போது அவன் பொஞ்சாதி நிற மாச கர்பிணி மேடம்.
அந்த பொண்ணும் அதோட புருஷன் செத்த சோகத்துல இந்த தேன்மொழி குழந்தையை பெத்து போட்டுட்டு செத்து போச்சு மேடம்.
அந்த புள்ள இறந்த நாளுல இருந்து இந்த கருப்பசாமி தான் அந்த தேனு பாப்பாவை அம்மாவுக்கு அம்மாவா, அப்பாவுக்கு அப்பாவா வளர்த்துக்கிட்டு இருக்காரு மேடம்.
அதோ அந்த தோப்புல தான் தேன்னோட அம்மா அப்பா சமாதி கூட இருக்கு மேடம்.
ஆனா பாருங்க. அந்த கருப்பசாமியோட மீதம் இருக்குற ரெண்டு தம்பிங்க இந்த தோப்பை X. Mla சம்பத்க்கு விற்க முன் பணம் வாங்கிட்டாங்க மேடம்.
இந்த வார கடைசியில அந்த தோப்புல இருக்குற பனை மரத்தை எல்லாம் வெட்டிட்டு அங்க அந்த சம்பத் ஐயா UD Complex கட்ட போறாரு மேடம்' என்று தனக்கு தெரிந்த கதையை வாட்ச் மேன் செல்வம் சொல்லி முடித்தார்.
மொத்த கதையையும் கேட்டு தெரிந்துகொண்ட சித்ரா,'ம்... நாளையில இருந்து நீங்க பகல் டூட்டி வந்தா போதும்' என்று செல்வத்திடம் சொல்ல.
'மேடம் அப்போ நைட்டுக்கு!?' என்று இழுத்தான் செல்வம்.
செல்வாவின் கேள்விக்கு சித்ரா பதில் தராமல் ஈஷாவை பார்த்தப்படி பங்களாக்குள் சென்று இருக்க,'அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் செல்வம். நீங்க பகல் டூட்டி பார்த்தா போதும். ஆனா உங்களுக்கு முழு சம்பளம் வந்துடும்' என்றவள் அவளும் சித்ராவை தொடர்ந்து உள்ளே சென்றாள்.
'நைட்ல தான் ஒரு வீட்டுக்கு வாட்ச் மேன் தேவை. இவங்க என்ன நைட்ல நம்ம வேலை பார்க்க வேணான்னு சொல்லுறாங்க.' என்று தனக்குள் புலம்பியவனுக்கு சித்ராவின் செயல்கள் புரியாத புதிராக தான் இருந்தது.
சித்ரா அவள் அறையில் உள்ள பால்கனியில் நின்று இருந்தவளின் கண்கள் எதிரே இருக்கும் தோப்பின் மீது பதிந்து இருக்க, 'பாவம் தான் மேடம் அந்த குழந்தை' என்றாள் ஈஷா.
'ம்... பாவம் தான். ஒரு பக்கம் பணம். இன்னோரு பக்கம் ஜாதி வெறி. இன்னோரு பக்கம் கூட பிறந்த ரத்தமே சொத்துக்காக அடுத்தவரின் உயிரை வாங்கும் அவலம்ன்னு இங்க எல்லாமே பாவமான செயல் தான் நடக்குது' என்று சித்ரா சொல்ல. அவளின் வார்த்தையில் உள்ள வலியை ஈஷா புரிந்து இருந்தாலும் அதன் விவரம் அவளும் அறிந்துகிருக்க வாய்ப்பில்லாமல் போனது.
சித்ரா மீண்டும் அமைதியாக அதே இடத்தில் நின்று இருக்க,
'மேடம் நாளைக்கு நைட் அந்த கலா கதையை முடிக்கணும்னு அவளுக்கு time Fix பண்ணி இருந்திங்க' என்றாள் ஈஷா.
ஈஷாவின் வார்த்தையைக் கேட்டு,'ம்...' என்ற சித்ரா அவள் கையில் இருந்த கடிகாரத்தை இணைய தளத்தில் இணைத்து அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்தவள்,'டெலீட்' என்ற பட்டனை அழுத்த. அந்த படம் அவள் கைக் கடிகாரத்தில் இருந்து மறைந்து போனது.
'ஆனா மேடம்... நம்ம இந்த ஊருல இருக்கோம். கலா இப்போ இருக்குறது துபாய்ல... அவள அங்க வச்சி நம்மனால ஒன்னுமே பண்ண முடியாது மேடம்' என்றாள் ஈஷா.
அவள் சொல்லை கேட்டு,' கலா இந்தியால லேண்ட் ஆகி two hrs ஆச்சு' என்று சிறு நகைப்புடன் சித்ரா சொல்ல, ஈஷாவின் கண்களில் ஆச்சிரியம் மிளிர்ந்தது.
'மேடம்... அப்போ நாளைக்கு நைட்'என்று... ஈஷா கேட்க,'எந்த மாற்றமும் இல்ல. சம்பவம் உறுதி தான். நீ போய் படு' என்று சித்ரா சொன்னதும்,'GOOD NIGHT மேடம்' என்ற ஈஷா சித்ராவின் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.
ஆறு வயதுகூட
முழுதாக நிரம்பிடாத குழந்தை அவள், 'மேடம் மேடம் என் அப்பா அம்மா இருக்குற இடத்தை நீங்க தான் வாங்க போறிங்களா!?' என்று கேட்டாள் சிறுமி.
அவள் என்னமோ பேச வருகிறாள் என்று சித்ரா உன்னிப்பாக அவள் வார்த்தையை கவனிக்கும் வேளையில் , ' தேனு இங்க என்ன பண்ணுற வ.. எத்தனை முறை நீ இங்க தனியா வரவே கூடாதுனு சொல்லி இருக்கேன்' என்ற ஆணின் குரல் கேட்டு சித்ரா திரும்பி பார்த்தாள்.
பார்க்க ஆறடி உயரத்தில், வைரம் பாஞ்ச தேகம் என்று சொல்லும் அளவுக்கு கட்டு மஸ்த்தான ஆள் ஒருவன் சித்ராவின் கண் எதிரே வந்து நிற்க்க,'கருப்பா' என்று ஓடிப்போய் சிறுமி அவன் கழுத்தை கட்டிக்கொள்ள... யார் இவர்கள் என்ற கேள்வி சித்ராவின் மனதில் தோன்றியது.
தன் எதிரே நிற்கும் ஆடவனை பார்த்த சித்ரா,'இந்த நேரத்துல உங்க குழந்தையை தனியா விட்டுட்டு நீங்க என்ன ஆழ்ந்த தூக்கத்துல இருந்திங்களா!?' என்று கேட்டாள்.
சித்ராவின் கேள்விக்கு பதில் தராத ஆடவன்,'தேனு... இங்கன எல்லாம் வர கூடாதுன்னு சொல்லிருக்கேனே!! ஏன் புள்ள இங்க வந்த!?' என்று கேட்டான்.
'கருப்பா... இவங்க தான் நம்ம தோப்பை வாங்க போறதா செல்வம் மாமா சொன்னாரு கருப்பா..அதான் இவங்ககிட்ட பேசி. என் அம்மா அப்பா கல்லறையை ஒன்னும் பண்ணாதீங்கன்னு சொல்ல வந்தேன் கருப்பா' என்றாள் சிறுமி தேன்மொழி @ தேன்.
இந்த பங்களாவை X Mla சம்பத்திடம் சித்ரா வாங்கியதை அறிந்திடாத சிறுமி சித்ராவை தவறுதலாக எண்ணி இருக்க. கருப்பன் என்கிற கருப்பசாமியும் கூட சித்ராவை சம்பத்தின் குடும்பம் தான் என்று நம்பினான்.
சித்ராவை அழுத்தமாக முறைத்த கருப்பன், 'தேனு... இவங்க எல்லாம் பணத்துலயே ஊறுன உயர் ரக ஊறுக்காய்ங்க. இவங்கள நம்ம சட்டப்படி தான் சமாளிக்கணும்' என்றவன் சிறுமி தேனை தூக்கிக்கொண்டு அங்கிருந்து அவன் தோப்பை நோக்கி நடந்தான்.
கருப்பன் தன்னை தவறுதலாக எண்ணி இருக்கின்றான் என்று அறிந்துக்கொண்ட சித்ரா அவர்கள் செல்லும் பாதையை உறுத்து பார்க்க,'மேடம்... அந்த குழந்தை தினமும் என்கிட்ட வந்து இதயே தான் மேடம் கேட்கும்'என்றான்.
'புரியல... என்ன கேப்பாங்க' என்று சித்ரா வினாவும் நேரம் அங்கே ஈஷாவும் வந்தவள்,'என்ன மேடம்!! என்ன பிரச்சனை!?' என்று கேட்டாள்.
'Nothing' என்ற சித்ரா...'நீங்க சொல்லுங்க. அந்த குழந்தைக்கு என்ன வேணுமாம்' என்று கேட்க,
'அதோ அந்த தோப்புல தான் மேடம் அந்த குழந்தையோட அப்பா அம்மா சமாதி இருக்கு' என்றான் வாட்ச் மேன் செல்வம்.
'என்ன அப்பா அம்மாவா... அப்போ அந்த Guy யாரு!?' என்று சித்ரா கருப்பனை பற்றி விசாரிக்க,
'அவரு பேர் கருப்பசாமி மேடம்' என்றவன் அவர்களின் குடும்ப கதையை சொல்ல ஆரம்பித்தான்.
கருப்பசாமிக்கு மூணு தம்பிங்க மேடம். இவரு அவங்கள நல்லா படிக்க வச்சாரு. ஆனா இரண்டாவது தம்பி பழனி சாமி பக்கத்து ஊருல வேற ஜாதி பொண்ண காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டாரு மேடம்.
ரெண்டு ஊரும் ரத்த கலவரமா மாறிப்போச்சி மேடம். கருப்பசாமி ஆளு முறுக்கமானவரா இருந்தாலும்,சட்டத்துக்கு கட்டுப்பட்டவறு.
அதனால கோர்ட்க்கு போய் அவங்க தம்பி கல்யாணத்தை சட்டபடி ரெஜிஸ்டர் பண்ணிட்டாரு மேடம்.
அவங்க தம்பிக்கு இதே தோப்புல சின்ன மாடி வீடு கட்டிக்கொடுத்து நல்லா வாழ வச்சாரு மேடம்.
மீதம் இருக்குற இரண்டு தம்பிங்களுக்கும் பிஸ்னஸ் பண்ண எல்லா உதவியும் பண்ணாரு மேடம்.
ஆனா பாருங்க. காதலிச்சி கல்யாணம் பண்ண அந்த பையனை பக்கத்து ஊர்க்காரங்க கண்டம் துண்டாம வெட்டிப் போட்டுட்டாங்க மேடம்.
அந்த பையன் பழனி சாமி சாகும் போது அவன் பொஞ்சாதி நிற மாச கர்பிணி மேடம்.
அந்த பொண்ணும் அதோட புருஷன் செத்த சோகத்துல இந்த தேன்மொழி குழந்தையை பெத்து போட்டுட்டு செத்து போச்சு மேடம்.
அந்த புள்ள இறந்த நாளுல இருந்து இந்த கருப்பசாமி தான் அந்த தேனு பாப்பாவை அம்மாவுக்கு அம்மாவா, அப்பாவுக்கு அப்பாவா வளர்த்துக்கிட்டு இருக்காரு மேடம்.
அதோ அந்த தோப்புல தான் தேன்னோட அம்மா அப்பா சமாதி கூட இருக்கு மேடம்.
ஆனா பாருங்க. அந்த கருப்பசாமியோட மீதம் இருக்குற ரெண்டு தம்பிங்க இந்த தோப்பை X. Mla சம்பத்க்கு விற்க முன் பணம் வாங்கிட்டாங்க மேடம்.
இந்த வார கடைசியில அந்த தோப்புல இருக்குற பனை மரத்தை எல்லாம் வெட்டிட்டு அங்க அந்த சம்பத் ஐயா UD Complex கட்ட போறாரு மேடம்' என்று தனக்கு தெரிந்த கதையை வாட்ச் மேன் செல்வம் சொல்லி முடித்தார்.
மொத்த கதையையும் கேட்டு தெரிந்துகொண்ட சித்ரா,'ம்... நாளையில இருந்து நீங்க பகல் டூட்டி வந்தா போதும்' என்று செல்வத்திடம் சொல்ல.
'மேடம் அப்போ நைட்டுக்கு!?' என்று இழுத்தான் செல்வம்.
செல்வாவின் கேள்விக்கு சித்ரா பதில் தராமல் ஈஷாவை பார்த்தப்படி பங்களாக்குள் சென்று இருக்க,'அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் செல்வம். நீங்க பகல் டூட்டி பார்த்தா போதும். ஆனா உங்களுக்கு முழு சம்பளம் வந்துடும்' என்றவள் அவளும் சித்ராவை தொடர்ந்து உள்ளே சென்றாள்.
'நைட்ல தான் ஒரு வீட்டுக்கு வாட்ச் மேன் தேவை. இவங்க என்ன நைட்ல நம்ம வேலை பார்க்க வேணான்னு சொல்லுறாங்க.' என்று தனக்குள் புலம்பியவனுக்கு சித்ராவின் செயல்கள் புரியாத புதிராக தான் இருந்தது.
சித்ரா அவள் அறையில் உள்ள பால்கனியில் நின்று இருந்தவளின் கண்கள் எதிரே இருக்கும் தோப்பின் மீது பதிந்து இருக்க, 'பாவம் தான் மேடம் அந்த குழந்தை' என்றாள் ஈஷா.
'ம்... பாவம் தான். ஒரு பக்கம் பணம். இன்னோரு பக்கம் ஜாதி வெறி. இன்னோரு பக்கம் கூட பிறந்த ரத்தமே சொத்துக்காக அடுத்தவரின் உயிரை வாங்கும் அவலம்ன்னு இங்க எல்லாமே பாவமான செயல் தான் நடக்குது' என்று சித்ரா சொல்ல. அவளின் வார்த்தையில் உள்ள வலியை ஈஷா புரிந்து இருந்தாலும் அதன் விவரம் அவளும் அறிந்துகிருக்க வாய்ப்பில்லாமல் போனது.
சித்ரா மீண்டும் அமைதியாக அதே இடத்தில் நின்று இருக்க,
'மேடம் நாளைக்கு நைட் அந்த கலா கதையை முடிக்கணும்னு அவளுக்கு time Fix பண்ணி இருந்திங்க' என்றாள் ஈஷா.
ஈஷாவின் வார்த்தையைக் கேட்டு,'ம்...' என்ற சித்ரா அவள் கையில் இருந்த கடிகாரத்தை இணைய தளத்தில் இணைத்து அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்தவள்,'டெலீட்' என்ற பட்டனை அழுத்த. அந்த படம் அவள் கைக் கடிகாரத்தில் இருந்து மறைந்து போனது.
'ஆனா மேடம்... நம்ம இந்த ஊருல இருக்கோம். கலா இப்போ இருக்குறது துபாய்ல... அவள அங்க வச்சி நம்மனால ஒன்னுமே பண்ண முடியாது மேடம்' என்றாள் ஈஷா.
அவள் சொல்லை கேட்டு,' கலா இந்தியால லேண்ட் ஆகி two hrs ஆச்சு' என்று சிறு நகைப்புடன் சித்ரா சொல்ல, ஈஷாவின் கண்களில் ஆச்சிரியம் மிளிர்ந்தது.
'மேடம்... அப்போ நாளைக்கு நைட்'என்று... ஈஷா கேட்க,'எந்த மாற்றமும் இல்ல. சம்பவம் உறுதி தான். நீ போய் படு' என்று சித்ரா சொன்னதும்,'GOOD NIGHT மேடம்' என்ற ஈஷா சித்ராவின் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.