New member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 21
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி-4
பகுதி-4
“ஹலோ! சொல்லு அண்ணா?” என தயக்கத்துடன் ஜீவானந்தத்திடம் பேசும் கதிர்வேலனை அஞ்சன விழிகளால் பார்த்துக்கொண்டு இருந்தாள் முல்லை.
'தேங்க்ஸ்டா கதிரு, ரெண்டு வருஷம் கடந்து என் முல்லையை நான் இன்னைக்கு தான் பார்த்தேன். ஆனா பாரு அவகிட்ட சேர்ந்த மாதிரி பத்து நிமிஷம் கூட பேச முடியல. ஆனா பரவாயில்லடா, நான் தந்ததா சொல்லி அவளுக்கு நீ எதாவது வாங்கி கொடுத்தப்பாரு அதுக்கே அவ சந்தோசமா இருப்பாள்' என ஜீவானந்தம் சொன்னதும்,
“ஆமா... நீ கொடுத்ததா சொன்ன...தால தான் நான் கொடுத்த பூவை வாங்கிக்....கிட்டா” என்ற கதிர்வேலனின் வார்த்தைகள் அவர் வாயிலிருந்து கோர்வையாக வர மறுத்தது.
'நல்ல வேலை பண்ண டா! சரி நீ முல்லையை பஸ் ஏத்திவிட்டுட்டு நேராக எம்ஸ் காலேஜ்க்கு வந்துடு' என ஜீவானந்தம் சொன்னதும்,
'ம்...' என்றப்படி அலைபேசியை துண்டித்த கதிர்வேலன் அதை முல்லையிடம் கொடுத்தார்.
கைபேசியை தன்வசம் வாங்கிக்கொண்ட முல்லை,'மாமா சார்... நான் கிளம்புறேங்க'என்றவள் பேருந்தை நோக்கி நடந்து சென்றாள்.
அன்னம்போல் நிலத்தோடு இசைவாய் சென்ற அவளின் நடையின் அழகு, கதிர்வேலனின் மனதை மயங்கச் செய்ய,
'ஹேய் ரவா லட்டு...'என்று தன்னையும் மீறி முல்லையை அழைத்தார்.
'ஹையையோ கூப்பிடுறாரே! பயத்தை முகத்துல காட்டாத முல்லை'என தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்ட முல்லை,
'என்னங்க மாமா சார்' என பேருந்து படிக்கட்டில் நின்றப்படி தலையை மட்டும் திருப்பி கேட்டாள்.
'ஏன்? கிட்ட வந்து என்னனு கேட்டா இவளோட மெல்லிடை மேலும் மெலிஞ்சிடுமா' என அவளின் கொடியிடையை தன்னை மீறி ரசித்ததவறாக,
'கம் ஹேர்!' என்று முல்லையை
மீண்டும் தன் அருகே அழைத்தார் கதிர்வேலன்.
பேருந்தில் இருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தவள்,
'என்னங்க மாமா சார்… ஜீவானந்தம் மாமா எதாவது கொடுக்கச் சொல்லியிருந்தாரா!? நீங்க மறந்துட்டீகளா?' என்று மெதுவாகச் சிரித்தபடி கேட்டாள் முல்லை.
அவளின் சிரிப்பை பொய்யாக்கும் விதமாக தலை ஆட்டியபடியே,
'ஆமாம்… உன் தலையில ஒரு குட்டு கொடுக்கச் சொல்லிருந்தாரு…
அதைத்தான் மறந்துட்டேன்'என்றார் கதிர்வேலன்.
'மாமா அப்படியெல்லாம் சொல்ல மாட்டாக..." என்ற முல்லையின் குரல் தொய்ந்து அவள் கண்களில் நிறைந்திருந்த தண்ணீர்க் கண்ணாடி, மெதுவாக உடைந்து கண்ணீர் குன்றாத உணர்வுகளோடு கசிந்தது.
முல்லையின் கண்ணீரை பார்த்து, 'இந்தா... இப்போ ஏன் கண்ண கசக்குறவ, அண்ணா அதெல்லாம் ஏதும் சொல்லல' என கதிர் வேலன் உண்மை சொன்னதோடு மட்டும் இல்லாமல் முல்லையின் கண்ணீரை துடைக்க தன் கைக்குட்டையை அவளிடம் நீட்டினார்.
கதிர்வேலனின் கையில் இருந்த வெள்ளை நிற கைகுட்டையை பெற்றுக்கொண்ட முல்லை,'அப்போ பொய் சொன்னிகளா!' என கேட்டவளின் நுனி மூக்கு ரத்த சிவப்பாக மாறி இருந்தது.
முல்லையின் கேள்விக்கு,'ம்...' என கதிர்வேலன் கண்களை மூடி திறக்க,
'ஏன் பொய் சொன்னிக!?' என கேட்ட முல்லை கைக்குட்டையில் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் கதிர்வேலனிடமே அதை கொடுத்தாள்.
'ம்... உண்மையை சொன்னால் மட்டும் நீ என்ன பண்ண போற!' என எதிர் கேள்வியை கேட்டுக்கொண்டே, முல்லையின் கண்ணீரை உள்வாங்கிகொண்ட பருத்தி துணியை மடித்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் கதிர்வேலன்.
'என்ன உண்மை, ஆமா நீங்க ஏன் என்னை கூப்பிட்டீக!?' என முல்லை கேக்க,
'ம்... உன்னை ட்ராப் பண்ணதுக்கு காசு கேக்க தான்' என்றார் கதிர்வேலன்.
'என்ன காசா!' என அவள் மிருண்டு விழிக்க,
'பின்ன... சும்மாவா உன்னை இவ்ளோ தூரம் அழைச்சிட்டு வருவாங்க!?'என்ற கதிர்வேலன்,
முல்லையின் முன்னே கையை நீட்டிக்கொண்டு,
'சீக்கிரமா காசை கொடு' என்றார்.
'ஏன் மாமா சார்... நான் உங்க அத்தை பொண்ணு தானே! என்கிட்ட கூட காசு தான் கேப்பிகளா?' என முல்லை தைரியமாக கதிர்வேலனின் முகத்தை பார்த்து கேள்வி கேட்டாள்.
'என் அத்தையா! இருந்தாலும் கூட காசு கேப்பேன்'என கதிர்வேலன் மீண்டும் முல்லையிடம் கையை நீட்ட,
தன் பையில் இருந்து பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள் முல்லை.
பணத்தை வாங்காமல் முல்லையை கேள்வியாக பார்த்து,'எவ்ளோ இருக்கு?' என கதிர்வேலன் கேக்க,
'நூறு ரூபாய்' என்றாள் முல்லை.
'அது உன்னை அழைச்சிட்டு வந்து விட்டதுக்கு, இப்போ நான் திரும்பி போக யாரு பணம் தருவாங்க'என கதிர்வேலன் கேக்க,
'ஓ... அப்போ உங்களுக்கு 200rs. வேணுமா, இப்போ தான் எனக்கு நீங்க ஏன் பணம் கேக்குறீகனு புரியுது' என்றவளின் முகத்தில் ஒரு அருவருப்பு தெரிந்தது.
முல்லையின் முக மாற்றத்தை பார்த்து,'என்ன புரியுது!?' என கதிர்வேலன் கேக்க,
'மாமா சார்...நீங்க இப்படியே குடிச்சிகிட்டு இருந்தால் மீனாவை கஸ்தூரி சித்தி உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாக' என்றவள், கதிர்வேலன் தன்னிடம் பணம் கேப்பதே குடிக்க தான் என்று தவறாக எண்ணிக்கொண்டாள்.
'என் கல்யாணத்தை பற்றிய கவலை உனக்கு வேண்டாம்,நீ முதல்ல பணத்தை எடு' என்று கதிர்வேலன் கேக்க,
ரூபாய் 200யை எடுத்து கதிர்வேலனிடம் கொடுத்தாள் முல்லை.
'ம்... இப்போ கிளம்பு, போனதும் அண்ணனுக்கு போன் பண்ணி பேசு' என்ற கதிர்வேலனிடம் சம்மதமாக தலையாட்டியவள் வேகமாக பேருந்தில் ஏறி ஜன்னல் அருகே அமர்ந்து கதிர்வேலனை பார்த்து கையெசைத்து விடைபெற்றாள் முல்லை.
தன்னை கடந்து செல்லும் முல்லை பயணிக்கும் பேருந்தை பார்த்த கதிர்வேலன் பெருமுச்சுடன் தன் புல்லட்டில் ஜீவானந்தம் வர சொன்ன காலேஜை நோக்கி பயணித்தார்.
********************
முல்லையை சிவகங்கை பேருந்தில் கதிர்வேலன் ஏற்றி விட்டதை பார்த்த பார்வதியின் தம்பி கேசவனுக்கு, குன்னக்குடி பேருந்து நிலையத்தில் பழ கடை வைத்து இருக்கும் வியாபாரி ஒருவர்,முல்லையை குன்னக்குடியில் பார்த்த காட்சியை தகவலாக தெரிவித்து இருந்தார்.
முல்லையின் தந்தை முருகனின் கட்டளைக்கு அடிப்பணிந்து பாண்டியன் குடும்பத்தோடு தன் மகளும் ஒட்டுதல் இல்லாமல் தான் இருக்கிறாள் என்று எண்ணிய முருகனுக்கு கேசவனின் மூலம் கிடைத்த தகவல் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'என்ன மாப்புள சொல்றிங்க,என் மவ முல்லையை குன்னக்குடி பார்த்தாங்களா?' என சிவகங்கையில் வசிக்கும் முருகன் கோபத்துடன் கேட்டார்.
'இதுக்கு தான் பொட்ட பிள்ளைக்கு படிப்பு எல்லாம் வேண்டாம், அவ பெரிய மனுஷி ஆனதுமே என் தம்பிக்கு கட்டிக்கொடுங்கன்னு நான் தலைபாடா அடிச்சிகிட்டேன்' என்றார் முல்லையின் சித்தி பார்வதி.
தன்னையும் தன் மகளையும் பிரிக்க பாண்டியன் தான் ஏதோ சதீத்திட்டம் தீட்டுகிறார் என்று எண்ணிய முருகனுக்கு ஆத்திரம் புத்தியை இழக்க செய்தது.
'இன்னைக்கு அவ வரட்டும், நீங்க சொல்றது மட்டும் உண்மையா இருந்தால் என் மகள் காலை உடைத்து நானே அவளை பூமிக்குள்ள புதைச்சுடுறேன்' என முருகன் கோவத்தோடு கொந்தளித்தவருக்கு தெரியவில்லை முருகனின் கோவம் தான் அவரை தன் மகளிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க போகிறது என்று.
'இந்தாங்க... அவசரப்பட்டு முல்லைகிட்ட கோவப்படாதிங்க, ஏன்னா உங்க பொண்ணு மேஜர், முல்லையை நீங்க கண்டிக்க போய்! கடைசியா அவ சொல்லாம அந்த பாண்டியன் வீட்டுல போய் தங்கிட போகிறாள்'என பார்வதி சொல்ல,
முருகனும் எப்போதும் போலவே இயல்பாக இருந்துகொண்டவர் மனதில் மட்டும், பாண்டியன் மீது கொண்டுள்ள பகையிணர்வு அதிகமாகி இருக்க, அந்த சூட்டோடு முருகன் சில அவசர முடிவுகளை எடுத்தார்.
****************
புல்லட்டில் இருந்து இறங்கிய கதிர்வேலன் காலேஜ் வளாகத்திற்குள் நுழைய, அவரை தூரத்தில் இருந்து பார்த்த அவரின் அண்ணன் ஜீவானந்தம்,'என்னடா என்ன காரியம் பண்ணி வச்சிருக்க!?'என கேட்டுக்கொண்டே தன் தம்பியை நோக்கி கேள்வியை எழுப்பினார்.
'என்னாச்சு! உயிரோட தானே இருக்கான்!' என கேக்கும் கதிர்வேலனுக்கு தன் அண்ணனின் கோவம் எதனால் என்று தெரிந்து தான் இருந்தது.
'உயிர் மட்டும் தான் கதிரு இருக்கு, உனக்கு ஏன் இந்த வேலை! அவனை போலீஸ்ல சொன்னால் அவங்க பார்த்துக்க போறாங்க' என்ற ஜீவானந்தத்தின் முகத்தில் பதற்றம் நிறைந்து இருந்தது.
'போலீஸ் எல்லாம் சரியா வராது அண்ணா... காரணம்! அவன் அப்பா பெரிய ஆளு. அதான் நானே என்ன பண்ணணுமோ அதை பண்ணிட்டேன்' என்ற கதிர்வேலன் தன் சட்டை காலரை ஒரு கையால் தூக்கி விட்டப்படி ஜீவானந்தத்தை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்தப்படி பதில் அளித்தார்.
'நீ பண்ண வேலையின்னால அப்பா தான் நாளைக்கு பஞ்சாயத்துல கைகட்டி நிக்கணும் கதிர்' என ஜீவானந்தம் சொல்ல,
'அவசியம் இல்லை அண்ணா... யாரும் என் மேல புகார் தர மாட்டாங்க' என்று நம்பிக்கையோடு சொன்னார் கதிர்வேலன்.
அண்ணனும் தம்பியும் என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இவர்களை பெற்ற தந்தை பாண்டியன் நேரே கதிரின் அருகே கோவத்தோடு வந்து நின்றார்.
தன் தந்தையின் கோவம் மொத்தமும் கதிர்வேலன் மீது தான் என்று அறிந்துருந்த ஜீவானந்தம்,'அப்பா... நான் பேசிட்டேன். நீங்க தம்பியை திட்டாதீங்க' என்று தன் உடன் பிறப்புக்கு தோள் கொடுத்தார்.