Member
- Joined
- Jan 29, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
அத்தியாயம் 24.
'ஒரு வேளை இவன் நம்மள சந்தேகப்படரானோ?'என்று மனதில் நினைத்தபடி வெளியில் ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு சரியென்பது போல தலையை அசைத்திருந்தாள் அரசி.
"என்ன அரசி ரொம்ப சீக்கிரமாவே என் ஆபிஸ் அறையை கூட்டி துடைத்து விட்டாயா?"என்றபடி தன் அலுவலக அறையை எட்டிப் பார்த்தார் ராஜேந்திரன்.
"ம்.. அறை சுத்தமா இருக்கு."என்றபடி அவர் திரும்பும் சமயத்தில்,
"என்னங்க ப்ளாக் டீ வேனும்னு கேட்டிருந்திங்களே, இந்தாங்க"என்றபடி தேநீர் அடங்கிய குவளையை அவர் முன்பு நீட்டியிருந்தார் நாச்சியார்.
பிறகு, ராஜேந்திரன் தன் மனைவியிடமிருந்து தேநீர் குவளையை வாங்கியவர்,அரசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிப்சிப்பாக தேநீரை அருந்த ஆரம்பித்தவரின் விழிகளில் இதழருவி தென்பட்டிருந்தாள்.
"என்ன உன் பொண்ணு உலக அதிசயமா இன்னைக்கு அவளோட அறையிலிருந்து வெளிய வந்திருக்கா போல?"என்று நக்கலாக தன் மனைவியிடம் கேட்டிருந்தார் ராஜேந்திரன்.
நாச்சியார் திரும்பி தோட்டத்திற்கு செல்லும் வாயிலின் கதவு திறந்திருந்ததும் புரிந்து கொண்டார்.
இதழருவியை தவிர்த்து அந்த கதவை யாரும் திறக்க மாட்டார்கள் என்பது நாச்சியார்க்கு நன்கு தெரிந்த ஒன்று.
எப்படியோ தன் மகள் இன்றாவது அறையிலிருந்து வெளிவந்திருக்கிறாளே என்று மகிழ்ச்சியுடன் திரும்பி தன் கணவரை பார்த்து உதடு பிரியாது புன்னகைத்து விட்டு சமையலறையை நோக்கி நடை போட்டிருந்தார் நாச்சியார்.
அவர் கையோடு அரசியலையும் தன்னோடு சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.
தனது அறையில் சாதனா தன் கைபேசியில் சாகித்தியனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டு "ஹலோ"என்று சாகித்தியன் சொல்லியிருக்க,
"நான் சாதனா பேசுரேன்."மெல்லிய குரலில் கூறியிருந்தாள்.
"ம்.. சொல்லுங்க.என்ன விசயம்?"என்று இயல்பாக கேட்டிருந்தான் சாகித்தியன்.
"அது வந்து நீங்க எழுதி தந்த ப்ரிஸ்க்ரிப்ஷன தொலைச்சுட்டேன்.அதுனால எப்படி மாத்திரை சாப்டனும்னு எனக்கு தெரியல?
எது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடர மாத்திரைன்னு கொஞ்சம் சொல்ரிங்களா?"சற்று பணிவாக அவனிடம் கேட்டிருந்தாள் சாதனா.
சாகித்தியனும் பொறுமையாக மூன்று வேளைக்கு என்னென்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை
கூறியவன் பின்பு,"மறக்காம காயத்தில் தண்ணீர் மட்டும் படாம பார்த்துக்குங்க."என்று கூறிவிட்டு அழைப்பை கட் செய்திருந்தான்.
சாதனா அவனிடம் பணிவாக பேசியதற்கு காரணம் உண்டு.கேரளாவில் நடந்ததை நினைத்து இதுதான் சமயம் என்று தன்னை பழி வாங்காது தனக்கு வலிக்காதபடி சாகித்தியன் வைத்தியம் பார்த்தது அவளின் மனதை சற்று அசைத்துப் பார்த்தது.
அந்த நொடியில் இருந்து சாதனாவிற்கு சாகித்தியனை பிடிக்க ஆரம்பித்தது.தற்பொழுது அவனிடம் ப்ரிஸ்க்ரிப்ஷன் காணோம் என்று பொய் கூறியிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியாது.
சாகித்தினிடம் பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பு அவளுக்கு.எப்படியாவது அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் மூளையில் சற்றென்று உதித்தது இந்த ஐடியா.
தற்பொழுது அதை செயல் படுத்தியும் இருந்தாள் பாவை.சாகித்தியன் உடன் கைபேசியில் பேசி முடித்ததும் அவளின் இதழ்களில் மெல்லிய கீற்றுப் புன்னகை தோன்றி மறைந்தது.
'ஒரு வேளை இவன் நம்மள சந்தேகப்படரானோ?'என்று மனதில் நினைத்தபடி வெளியில் ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு சரியென்பது போல தலையை அசைத்திருந்தாள் அரசி.
"என்ன அரசி ரொம்ப சீக்கிரமாவே என் ஆபிஸ் அறையை கூட்டி துடைத்து விட்டாயா?"என்றபடி தன் அலுவலக அறையை எட்டிப் பார்த்தார் ராஜேந்திரன்.
"ம்.. அறை சுத்தமா இருக்கு."என்றபடி அவர் திரும்பும் சமயத்தில்,
"என்னங்க ப்ளாக் டீ வேனும்னு கேட்டிருந்திங்களே, இந்தாங்க"என்றபடி தேநீர் அடங்கிய குவளையை அவர் முன்பு நீட்டியிருந்தார் நாச்சியார்.
பிறகு, ராஜேந்திரன் தன் மனைவியிடமிருந்து தேநீர் குவளையை வாங்கியவர்,அரசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சிப்சிப்பாக தேநீரை அருந்த ஆரம்பித்தவரின் விழிகளில் இதழருவி தென்பட்டிருந்தாள்.
"என்ன உன் பொண்ணு உலக அதிசயமா இன்னைக்கு அவளோட அறையிலிருந்து வெளிய வந்திருக்கா போல?"என்று நக்கலாக தன் மனைவியிடம் கேட்டிருந்தார் ராஜேந்திரன்.
நாச்சியார் திரும்பி தோட்டத்திற்கு செல்லும் வாயிலின் கதவு திறந்திருந்ததும் புரிந்து கொண்டார்.
இதழருவியை தவிர்த்து அந்த கதவை யாரும் திறக்க மாட்டார்கள் என்பது நாச்சியார்க்கு நன்கு தெரிந்த ஒன்று.
எப்படியோ தன் மகள் இன்றாவது அறையிலிருந்து வெளிவந்திருக்கிறாளே என்று மகிழ்ச்சியுடன் திரும்பி தன் கணவரை பார்த்து உதடு பிரியாது புன்னகைத்து விட்டு சமையலறையை நோக்கி நடை போட்டிருந்தார் நாச்சியார்.
அவர் கையோடு அரசியலையும் தன்னோடு சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.
தனது அறையில் சாதனா தன் கைபேசியில் சாகித்தியனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டு "ஹலோ"என்று சாகித்தியன் சொல்லியிருக்க,
"நான் சாதனா பேசுரேன்."மெல்லிய குரலில் கூறியிருந்தாள்.
"ம்.. சொல்லுங்க.என்ன விசயம்?"என்று இயல்பாக கேட்டிருந்தான் சாகித்தியன்.
"அது வந்து நீங்க எழுதி தந்த ப்ரிஸ்க்ரிப்ஷன தொலைச்சுட்டேன்.அதுனால எப்படி மாத்திரை சாப்டனும்னு எனக்கு தெரியல?
எது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடர மாத்திரைன்னு கொஞ்சம் சொல்ரிங்களா?"சற்று பணிவாக அவனிடம் கேட்டிருந்தாள் சாதனா.
சாகித்தியனும் பொறுமையாக மூன்று வேளைக்கு என்னென்ன மாத்திரை சாப்பிட வேண்டும் என்பதை
கூறியவன் பின்பு,"மறக்காம காயத்தில் தண்ணீர் மட்டும் படாம பார்த்துக்குங்க."என்று கூறிவிட்டு அழைப்பை கட் செய்திருந்தான்.
சாதனா அவனிடம் பணிவாக பேசியதற்கு காரணம் உண்டு.கேரளாவில் நடந்ததை நினைத்து இதுதான் சமயம் என்று தன்னை பழி வாங்காது தனக்கு வலிக்காதபடி சாகித்தியன் வைத்தியம் பார்த்தது அவளின் மனதை சற்று அசைத்துப் பார்த்தது.
அந்த நொடியில் இருந்து சாதனாவிற்கு சாகித்தியனை பிடிக்க ஆரம்பித்தது.தற்பொழுது அவனிடம் ப்ரிஸ்க்ரிப்ஷன் காணோம் என்று பொய் கூறியிருக்கிறாள் என்று அவனுக்கு தெரியாது.
சாகித்தினிடம் பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பு அவளுக்கு.எப்படியாவது அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் மூளையில் சற்றென்று உதித்தது இந்த ஐடியா.
தற்பொழுது அதை செயல் படுத்தியும் இருந்தாள் பாவை.சாகித்தியன் உடன் கைபேசியில் பேசி முடித்ததும் அவளின் இதழ்களில் மெல்லிய கீற்றுப் புன்னகை தோன்றி மறைந்தது.