Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
அத்தியாயம்- 15
அருணை மயக்க நிலையில் பார்த்த வர்மனின் கோவம் பல மடங்காக அதிகரித்தது.
சைத்ராவின் துப்பாக்கியில் இருந்த தொட்டா இறங்கி, ரம்யா அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள்.
"வர்மா...குழந்தையைத் தூக்கிகிட்டு நீங்க இங்க இருந்து போங்க, நான் இவங்கள பார்த்துக்குறேன்"என்ற சைத்ரா, ரம்யாவுடன் இருந்த சரணையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.
மயக்கத்தில் இருந்த சிறுவனைத் தன் கரங்களால் ஏந்திக்கொண்ட வர்மன், சற்றும் தாமதிக்காமல் காரை நோக்கி விரைந்தான்.
"வர்மா... அருணை என்கிட்ட கொடு டா. உன் கையிலையும் ரத்தம் வருது வர்மா" என்ற மாயனின் வார்த்தையைக் காதில் வாங்காத வர்மன் சிறுவனைத் தூக்கிக்கொண்டு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கியவனின் இதயம் துடிக்க மறுத்தது.
வர்மனையும் சிறுவனையும் பின் தொடர்ந்த மகதிக்கு அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று யூகிக்க கூட நேரம் இல்லாமல் அவள் வாழ்வில் அடுத்தடுத்து அசம்பாவீதங்கள் நடந்த வண்ணமாகவே இருந்தது.
மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை வர்மன் காரில் படுக்க வைக்க,
"பாப்பா நீ முன்னாடி உக்காந்துக்கோ, வர்மா... நீ அருண் பக்கத்துல இரு, நான் காரை எடுக்குறேன்" என்ற மாயன் காரை மருத்துவ மனையை நோக்கி விரட்டினான்.
வழியெல்லாம் சிறுவனைக் கட்டிக்கொண்டு தனக்குள்ளே அழும் வர்மனை பார்த்து மகதிக்கு ரம்யா மீது எல்லை இல்லாத கோவம் எழுந்தது.
"அருண்... அருண் அப்பாவைப் பாருடா" என்று வர்மன் சிறுவனின் கன்னத்தில் தட்ட, அருணோ கண்களைத் திறவாமல் பொம்மையைப் போல இருந்தான்.
"மாயா... சீக்கிரம் போ மாயா" என்ற வர்மனின் தோள் பட்டையில் ரத்தம் கசிந்த வண்ணமாகவே இருக்க,
"அண்ணா... வர்மா கையில பிளட் அதிகமா வருது" என்று மாயனிடம் சொல்லும் மகதி, சிறுவனின் நிலையைக் கண்டு உள்ளுக்குள் கலங்கி போனாள்.
"இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போயிடலாம்" என்ற மாயன், அடுத்த பத்தே நிமிடத்தில் தன் காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்த, ரத்த வெள்ளத்தில் வர்மன் காரிலிருந்து கீழே இறங்கியவன் அதித ரத்த போக்கினால் அப்படியே மயங்கிக் கீழே விழப் போனாவனை தாங்கிப் பிடித்தாள் மகதி.
"சிஸ்டர்..."என்று மாயன் கத்தும் சத்தம் கேட்டு மருத்துவமனையின் பணியாளர் ஸ்ட்ரெச்சருடன் வந்தவர்கள், வர்மன் மற்றும் அருணை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றார்கள்.
சிறுவனுக்கு ஒரு பக்கமும், வர்மனுக்கு மறுபக்கமும் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க,
"பாப்பா நீ இங்கேயே உக்காரு, நான் ராஜன் சாருக்கு விஷயத்தைச் சொல்லிட்டு வரேன்" என்ற மாயன் தன் கைபேசியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
அருண் மற்றும் வர்மனின் நிலையை எண்ணி மகதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
"கடவுளே! அருண் சின்னக் குழந்தை, அவன் பாவம், அந்தப் பிஞ்சு மனசை ஏன் இப்படி கஷ்ட்டப்படுத்தி பாக்குறிங்க, அருணை எப்படியாவது காப்பாத்துங்க கடவுளே" என்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள மூலக்கடவுள் விநாயகரிடம் கண்ணீர் மல்க வணங்கினாள் மகதி.
சிறுவனுக்காகத் தெய்வத்திடம் மன்றாடும் மகதியின் மனதில், வர்மனின் நிலையை எண்ணியும் கவலை அதிகரிக்க,
அவளின் கட்டுப்பாட்டை மீறி மகதியின் கண்கள் ஈரமானது.
கடவுளின் முன்னே கண்ணீருடன் நின்று இருந்த மகதியை "பாப்பா..."என்று அழைத்த மாயனின் குரலில் மகதி கண்கள் திறந்தாள்.
"பாப்பா... இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜன் சார் வந்துடுவாரு" என்று மாயன் சொல்ல,
"அண்ணா...இங்க என்ன தான் நடக்குது!?" என்ற மகதியின் கேள்வியில் மாயன் அமைதியாக நின்று இருந்தான்.
"ரம்யா யார்? அவள் தான் அருணின் அம்மா என்றால்! அவளே ஏன் தன் குழந்தைக்கு இப்படியொரு பாவத்தைச் செய்யத் துணிய வேண்டும்? அப்போ! அப்போ அருணின் அப்பா என் வர்மன் இல்லையா?" என்ற மகதியின் கேள்விக்கு 'இல்லை' என்ற ரீதியில் தலையசைத்தான் மாயன்.
மாயனின் பதிலில் மகதிக்கு சின்னதொரு மகிழ்ச்சி துளிர்த்தது, ஆனால் சிறுவனின் நிலையை எண்ணியவள், "அப்போ அருணோட அப்பா யாரு?" என்று கேட்டாள் மகதி.
"பாப்பா... ராஜன் சார் ஒரு காலத்துல சினிமாவில் நடன துறையில் பெரிய ஆளாக இருந்தாரு.
அவருக்கு அப்போ திருமணம் முடிந்து அருள்மொழி வர்மன், மயில் வர்மன்னு இரட்டை பிள்ளைகள் பிறந்து இருந்தாங்க.
நடனத்து மேல இருந்த பக்தியில் அவர் குடும்பத்தை மறந்துட்டாரு.
ராஜன் சாரோட வேலை பழுவில் அவரு வருஷத்துக்கு ஒரு மாதம் கூடக் குடும்பத்தோடு செலவழிக்க முடியாமல் போச்சு.
ராஜன் சாரோட இரட்டை பிள்ளைகளை அவரு வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வச்சாரு.
ராஜன் சாரோட பொஞ்சாதிக்கு அவங்க பக்கத்துல கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லைனு தனிமையா இருக்க பிடிக்காம அவங்க பல நண்பர்களோட பேசத் தொடங்கினாங்க.
நம்மகிட்ட நல்லா பேசுற எல்லோரும் நல்லவுங்க இல்லையே! அப்படி தான் ராஜன் சாரோட மனைவிகிட்ட பேசிப் பழகிய ஒரு தயாரிப்பாளர் ராஜன் சார் மனைவிக்கு ஆசைக்காட்டி, அவங்கள அவரோட அழைச்சிட்டு போயிட்டாரு.
தன் மனைவியின் இந்தச் செயலுக்குத் தானும் ஒரு காரணமுன்னு நினைத்த ராஜன் சார் மேற்கொண்டு சினிமா பக்கமே போகாமல் வீட்டோட இருக்க ஆரம்பிச்சாரு.
விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜன் சாரோட இரட்டை பிள்ளைகளான நம்ம அருள்மொழி வர்மனும்,மயில் வர்மனும் இந்த ஊருக்கு வந்தாங்க.
தன் அம்மாவின் இந்த முடிவுக்கு முழுக்க முழுக்க தன்னோட அப்பா மட்டுமே காரணம் என்று எண்ணிய மயில்வர்மன் அவரோட அப்பாகிட்ட சண்டை போட்டுக்கிட்டு மறுபடியும் வெளியிறுக்கு போயிட்டாரு.
ஆனா இந்த நிலைமையில தன் அப்பாவைத் தனியா விடக்கூடாதுன்னு நம்ம வர்மன் மட்டும் அவங்க அப்பாகூடவே இருந்தான்.
நடன துறையில் ராஜன் சார் உருவாக்கி இருந்த அவர் அடையாளத்தை நம்ம வர்மன் காப்பாத்த எண்ணினான்.
அதற்காக வர்மன் எல்லா வகையான நடந்ததையும் கத்துக்கிட்டான்.
அப்படி தான் வர்மன் சென்னைக்கு வந்து உங்க வீட்டுல தங்கினான்.
வர்மன் தன்னை முழுதாக நடனத்துக்கு அர்ப்பணித்து இருக்க, வெளியூரில் வசிக்கும் வர்மனோட சகோதரன் மயில் வர்மனோ ரம்யாவின் காதல் வலையில் சிக்கி இருந்தான்.
ரம்யா அனாதையாக வளர்ந்த பொண்ணு.
ரம்யா வளர்ந்த ஆஸ்ரமத்தில் தான் போலீஸ் கமிஷனர் சைத்ராவும் வளர்ந்து இருக்காங்க.
தன் அப்பாவை வெறுத்துட்டு போன வர்மனோட அண்ணன் ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தான் ரம்யாவும் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறாள்.
ரம்யாவும் மயிலவர்மனும் பேசிப் பழகிய குறுகிய காலகட்டத்தில் மயில்வர்மன் ரம்யாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு ராஜன் சார்கிட்ட வந்து சம்மதம் கேட்டாரு.
அப்போ தான் நானும் சென்னையில இருந்து மும்பை வந்த சமயம்.
பல வருடம் ஒன்றாக வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான ராஜன் சாரோட பொஞ்சாதியே அவரை விட்டுட்டு வேறொருவருடன் போனதால, ராஜன் சாருக்கு சில பெண்கள் மீது உள்ள மரியாதை குறைந்து போனது.
"வேண்டாம் மயிலு...பெண்களை நம்பாத, உன் அம்மா பண்ண கேவலத்தை பார்த்தும் நீ எப்படிடா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற" என்று ராஜன் சார் ஆதங்கத்தில் தன் மகன் மயில்வர்மனை கண்டித்தார்.
"என் அம்மா இந்த வீட்டை விட்டுப் போக நீங்கத் தான் காரணம். எங்களுக்காக உழைக்கிறேன், எங்களுக்காக உழைக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே நீங்க எங்களை மறந்துட்டு உழைக்க ஆரம்பிச்சீங்க. உங்களுக்கு எங்க நினைப்பே இல்லை. அதான் என் அம்மா நீங்களும் வேண்டாம் நாங்களும் வேண்டாமுன்னு அவங்க வாழ்க்கையை தேடி போய்ட்டாங்க.
எனக்கு என் அம்மா மேல எந்தக் கோவமும் இல்லை. அவங்கள பற்றி இப்போ நான் உங்ககிட்ட பேச வரல. நான் ரம்யான்னு ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். எங்க கல்யாணத்துக்கு உங்களை அழைக்கத் தான் வந்தேன்" என்று மயில்வர்மன் சொன்னதும்,ராஜன் சாருக்கு அதித கோவம் எழுந்தது.
"நான் இவ்வளவு சொல்லியும் நீ மறுபடியும் கல்யாணம் காட்சின்னு, பேசுனதையே பேசிக்கிட்டு இருக்கியா!
இங்க பாரு டா மயிலு! கல்யாணம் பண்ணிக்காத. எந்தப் பொண்ணையும் நம்பாத. மீறி என் பேச்சைக் கேக்காம கல்யாணம் பண்ணா உனக்கு அப்பான்னு ஒருவன் இருக்குறதையே நீ மறந்துடு" என்று ராஜன் சார் கண்டிப்புடன் சொல்லிட்டாரு.
"ராஜன் சார் பேச்சை மீறி அன்னைக்கு வீட்டை விட்டுப் போன
மயில்வர்மன் மறுபடியும் அவங்க அப்பாவைப் பார்க்க வரவே இல்லை"
என்று மாயன் வர்மனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மகதியிடம் சொல்லிக்கொண்டு இருக்க,
குழப்பத்தில் இருந்த மகதியின் உள்ளம் சற்று தெளிய ஆரம்பித்து இருந்தது.
"இப்போ மயில்வர்மன் எங்க இருக்காரு?" என்ற மகதியின் கேள்விக்கு மாயனின் பதில் மீண்டும் மௌனமாக மட்டுமே இருந்தது.
"சொல்லுங்க அண்ணா... வர்மனோட அண்ணன் எங்கே?" என்று மீண்டும் மகதி கேட்க,
"ராஜன் சார் கல்யாணத்துக்கு சம்மதம் தரலைனு மயில்வர்மன் கொச்சுகிட்டு வெளியூர்ல போய்ச் செட்டில் ஆகிட்டான்.
அந்த ஊருல இருந்தப்படியே ரம்யாவை கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.
நம்ம வர்மனுக்கு மட்டும் அடிக்கடி போன் செய்து மயில்வர்மன் பேசிக்கிட்டு தான் இருந்தான்.
ஆனால் ஒரு வருஷமா மயில்வர்மன்கிட்ட இருந்து எந்த ஒரு தகவலும் நம்ம வர்மனுக்கு வரவே இல்லை.
தன் சகோதரனுக்கு என்ன ஆனதுன்னு வர்மன் கவலைப்பட்டதால ராஜன் சாருக்கு தெரியாம நானும் வர்மனும் மயிலைப் பார்க்க அவன் ஊருக்குப் போனோம்.
ஆனா நாங்க போன இடத்துல எங்களுக்குப் பேர் அதிர்ச்சி காத்து இருந்தது" என்று மாயன் சொல்ல,
"என்ன அண்ணா...ஏன்? மயில்வர்மனுக்கு என்னாச்சு?"என்ற மகதியின் கேள்விக்கு ஒன்பது வருடத்திற்கு முன்பு நடந்த கதையை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான் மாயன்.
மயில்வர்மன் வேலை செய்த இடத்தில் அவனின் முகவரியை வாங்கிக்கொண்டு வர்மனும் மாயனும் மயிலைப் பார்க்க அவன் வீட்டுக்குச் சென்று இருந்தார்கள்.
"மாயா... இந்த வீடு தானே?" என்ற வர்மன், தன் சகோதரனைக் காணும் ஆவளில் மயில்வர்மனின் வீட்டுக்குள் நுழைய, அங்கே நிறைமாத கர்ப்பிணியாக நடு வீட்டில் அமர்ந்து இருந்தாள் ரம்யா.
அருணை மயக்க நிலையில் பார்த்த வர்மனின் கோவம் பல மடங்காக அதிகரித்தது.
சைத்ராவின் துப்பாக்கியில் இருந்த தொட்டா இறங்கி, ரம்யா அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள்.
"வர்மா...குழந்தையைத் தூக்கிகிட்டு நீங்க இங்க இருந்து போங்க, நான் இவங்கள பார்த்துக்குறேன்"என்ற சைத்ரா, ரம்யாவுடன் இருந்த சரணையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள்.
மயக்கத்தில் இருந்த சிறுவனைத் தன் கரங்களால் ஏந்திக்கொண்ட வர்மன், சற்றும் தாமதிக்காமல் காரை நோக்கி விரைந்தான்.
"வர்மா... அருணை என்கிட்ட கொடு டா. உன் கையிலையும் ரத்தம் வருது வர்மா" என்ற மாயனின் வார்த்தையைக் காதில் வாங்காத வர்மன் சிறுவனைத் தூக்கிக்கொண்டு படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கியவனின் இதயம் துடிக்க மறுத்தது.
வர்மனையும் சிறுவனையும் பின் தொடர்ந்த மகதிக்கு அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று யூகிக்க கூட நேரம் இல்லாமல் அவள் வாழ்வில் அடுத்தடுத்து அசம்பாவீதங்கள் நடந்த வண்ணமாகவே இருந்தது.
மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை வர்மன் காரில் படுக்க வைக்க,
"பாப்பா நீ முன்னாடி உக்காந்துக்கோ, வர்மா... நீ அருண் பக்கத்துல இரு, நான் காரை எடுக்குறேன்" என்ற மாயன் காரை மருத்துவ மனையை நோக்கி விரட்டினான்.
வழியெல்லாம் சிறுவனைக் கட்டிக்கொண்டு தனக்குள்ளே அழும் வர்மனை பார்த்து மகதிக்கு ரம்யா மீது எல்லை இல்லாத கோவம் எழுந்தது.
"அருண்... அருண் அப்பாவைப் பாருடா" என்று வர்மன் சிறுவனின் கன்னத்தில் தட்ட, அருணோ கண்களைத் திறவாமல் பொம்மையைப் போல இருந்தான்.
"மாயா... சீக்கிரம் போ மாயா" என்ற வர்மனின் தோள் பட்டையில் ரத்தம் கசிந்த வண்ணமாகவே இருக்க,
"அண்ணா... வர்மா கையில பிளட் அதிகமா வருது" என்று மாயனிடம் சொல்லும் மகதி, சிறுவனின் நிலையைக் கண்டு உள்ளுக்குள் கலங்கி போனாள்.
"இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போயிடலாம்" என்ற மாயன், அடுத்த பத்தே நிமிடத்தில் தன் காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்த, ரத்த வெள்ளத்தில் வர்மன் காரிலிருந்து கீழே இறங்கியவன் அதித ரத்த போக்கினால் அப்படியே மயங்கிக் கீழே விழப் போனாவனை தாங்கிப் பிடித்தாள் மகதி.
"சிஸ்டர்..."என்று மாயன் கத்தும் சத்தம் கேட்டு மருத்துவமனையின் பணியாளர் ஸ்ட்ரெச்சருடன் வந்தவர்கள், வர்மன் மற்றும் அருணை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றார்கள்.
சிறுவனுக்கு ஒரு பக்கமும், வர்மனுக்கு மறுபக்கமும் மருத்துவர்கள் சிகிச்சை கொடுக்க,
"பாப்பா நீ இங்கேயே உக்காரு, நான் ராஜன் சாருக்கு விஷயத்தைச் சொல்லிட்டு வரேன்" என்ற மாயன் தன் கைபேசியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
அருண் மற்றும் வர்மனின் நிலையை எண்ணி மகதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
"கடவுளே! அருண் சின்னக் குழந்தை, அவன் பாவம், அந்தப் பிஞ்சு மனசை ஏன் இப்படி கஷ்ட்டப்படுத்தி பாக்குறிங்க, அருணை எப்படியாவது காப்பாத்துங்க கடவுளே" என்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள மூலக்கடவுள் விநாயகரிடம் கண்ணீர் மல்க வணங்கினாள் மகதி.
சிறுவனுக்காகத் தெய்வத்திடம் மன்றாடும் மகதியின் மனதில், வர்மனின் நிலையை எண்ணியும் கவலை அதிகரிக்க,
அவளின் கட்டுப்பாட்டை மீறி மகதியின் கண்கள் ஈரமானது.
கடவுளின் முன்னே கண்ணீருடன் நின்று இருந்த மகதியை "பாப்பா..."என்று அழைத்த மாயனின் குரலில் மகதி கண்கள் திறந்தாள்.
"பாப்பா... இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜன் சார் வந்துடுவாரு" என்று மாயன் சொல்ல,
"அண்ணா...இங்க என்ன தான் நடக்குது!?" என்ற மகதியின் கேள்வியில் மாயன் அமைதியாக நின்று இருந்தான்.
"ரம்யா யார்? அவள் தான் அருணின் அம்மா என்றால்! அவளே ஏன் தன் குழந்தைக்கு இப்படியொரு பாவத்தைச் செய்யத் துணிய வேண்டும்? அப்போ! அப்போ அருணின் அப்பா என் வர்மன் இல்லையா?" என்ற மகதியின் கேள்விக்கு 'இல்லை' என்ற ரீதியில் தலையசைத்தான் மாயன்.
மாயனின் பதிலில் மகதிக்கு சின்னதொரு மகிழ்ச்சி துளிர்த்தது, ஆனால் சிறுவனின் நிலையை எண்ணியவள், "அப்போ அருணோட அப்பா யாரு?" என்று கேட்டாள் மகதி.
"பாப்பா... ராஜன் சார் ஒரு காலத்துல சினிமாவில் நடன துறையில் பெரிய ஆளாக இருந்தாரு.
அவருக்கு அப்போ திருமணம் முடிந்து அருள்மொழி வர்மன், மயில் வர்மன்னு இரட்டை பிள்ளைகள் பிறந்து இருந்தாங்க.
நடனத்து மேல இருந்த பக்தியில் அவர் குடும்பத்தை மறந்துட்டாரு.
ராஜன் சாரோட வேலை பழுவில் அவரு வருஷத்துக்கு ஒரு மாதம் கூடக் குடும்பத்தோடு செலவழிக்க முடியாமல் போச்சு.
ராஜன் சாரோட இரட்டை பிள்ளைகளை அவரு வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வச்சாரு.
ராஜன் சாரோட பொஞ்சாதிக்கு அவங்க பக்கத்துல கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லைனு தனிமையா இருக்க பிடிக்காம அவங்க பல நண்பர்களோட பேசத் தொடங்கினாங்க.
நம்மகிட்ட நல்லா பேசுற எல்லோரும் நல்லவுங்க இல்லையே! அப்படி தான் ராஜன் சாரோட மனைவிகிட்ட பேசிப் பழகிய ஒரு தயாரிப்பாளர் ராஜன் சார் மனைவிக்கு ஆசைக்காட்டி, அவங்கள அவரோட அழைச்சிட்டு போயிட்டாரு.
தன் மனைவியின் இந்தச் செயலுக்குத் தானும் ஒரு காரணமுன்னு நினைத்த ராஜன் சார் மேற்கொண்டு சினிமா பக்கமே போகாமல் வீட்டோட இருக்க ஆரம்பிச்சாரு.
விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜன் சாரோட இரட்டை பிள்ளைகளான நம்ம அருள்மொழி வர்மனும்,மயில் வர்மனும் இந்த ஊருக்கு வந்தாங்க.
தன் அம்மாவின் இந்த முடிவுக்கு முழுக்க முழுக்க தன்னோட அப்பா மட்டுமே காரணம் என்று எண்ணிய மயில்வர்மன் அவரோட அப்பாகிட்ட சண்டை போட்டுக்கிட்டு மறுபடியும் வெளியிறுக்கு போயிட்டாரு.
ஆனா இந்த நிலைமையில தன் அப்பாவைத் தனியா விடக்கூடாதுன்னு நம்ம வர்மன் மட்டும் அவங்க அப்பாகூடவே இருந்தான்.
நடன துறையில் ராஜன் சார் உருவாக்கி இருந்த அவர் அடையாளத்தை நம்ம வர்மன் காப்பாத்த எண்ணினான்.
அதற்காக வர்மன் எல்லா வகையான நடந்ததையும் கத்துக்கிட்டான்.
அப்படி தான் வர்மன் சென்னைக்கு வந்து உங்க வீட்டுல தங்கினான்.
வர்மன் தன்னை முழுதாக நடனத்துக்கு அர்ப்பணித்து இருக்க, வெளியூரில் வசிக்கும் வர்மனோட சகோதரன் மயில் வர்மனோ ரம்யாவின் காதல் வலையில் சிக்கி இருந்தான்.
ரம்யா அனாதையாக வளர்ந்த பொண்ணு.
ரம்யா வளர்ந்த ஆஸ்ரமத்தில் தான் போலீஸ் கமிஷனர் சைத்ராவும் வளர்ந்து இருக்காங்க.
தன் அப்பாவை வெறுத்துட்டு போன வர்மனோட அண்ணன் ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்த இடத்தில் தான் ரம்யாவும் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறாள்.
ரம்யாவும் மயிலவர்மனும் பேசிப் பழகிய குறுகிய காலகட்டத்தில் மயில்வர்மன் ரம்யாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு ராஜன் சார்கிட்ட வந்து சம்மதம் கேட்டாரு.
அப்போ தான் நானும் சென்னையில இருந்து மும்பை வந்த சமயம்.
பல வருடம் ஒன்றாக வாழ்ந்து, இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான ராஜன் சாரோட பொஞ்சாதியே அவரை விட்டுட்டு வேறொருவருடன் போனதால, ராஜன் சாருக்கு சில பெண்கள் மீது உள்ள மரியாதை குறைந்து போனது.
"வேண்டாம் மயிலு...பெண்களை நம்பாத, உன் அம்மா பண்ண கேவலத்தை பார்த்தும் நீ எப்படிடா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற" என்று ராஜன் சார் ஆதங்கத்தில் தன் மகன் மயில்வர்மனை கண்டித்தார்.
"என் அம்மா இந்த வீட்டை விட்டுப் போக நீங்கத் தான் காரணம். எங்களுக்காக உழைக்கிறேன், எங்களுக்காக உழைக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே நீங்க எங்களை மறந்துட்டு உழைக்க ஆரம்பிச்சீங்க. உங்களுக்கு எங்க நினைப்பே இல்லை. அதான் என் அம்மா நீங்களும் வேண்டாம் நாங்களும் வேண்டாமுன்னு அவங்க வாழ்க்கையை தேடி போய்ட்டாங்க.
எனக்கு என் அம்மா மேல எந்தக் கோவமும் இல்லை. அவங்கள பற்றி இப்போ நான் உங்ககிட்ட பேச வரல. நான் ரம்யான்னு ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். எங்க கல்யாணத்துக்கு உங்களை அழைக்கத் தான் வந்தேன்" என்று மயில்வர்மன் சொன்னதும்,ராஜன் சாருக்கு அதித கோவம் எழுந்தது.
"நான் இவ்வளவு சொல்லியும் நீ மறுபடியும் கல்யாணம் காட்சின்னு, பேசுனதையே பேசிக்கிட்டு இருக்கியா!
இங்க பாரு டா மயிலு! கல்யாணம் பண்ணிக்காத. எந்தப் பொண்ணையும் நம்பாத. மீறி என் பேச்சைக் கேக்காம கல்யாணம் பண்ணா உனக்கு அப்பான்னு ஒருவன் இருக்குறதையே நீ மறந்துடு" என்று ராஜன் சார் கண்டிப்புடன் சொல்லிட்டாரு.
"ராஜன் சார் பேச்சை மீறி அன்னைக்கு வீட்டை விட்டுப் போன
மயில்வர்மன் மறுபடியும் அவங்க அப்பாவைப் பார்க்க வரவே இல்லை"
என்று மாயன் வர்மனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மகதியிடம் சொல்லிக்கொண்டு இருக்க,
குழப்பத்தில் இருந்த மகதியின் உள்ளம் சற்று தெளிய ஆரம்பித்து இருந்தது.
"இப்போ மயில்வர்மன் எங்க இருக்காரு?" என்ற மகதியின் கேள்விக்கு மாயனின் பதில் மீண்டும் மௌனமாக மட்டுமே இருந்தது.
"சொல்லுங்க அண்ணா... வர்மனோட அண்ணன் எங்கே?" என்று மீண்டும் மகதி கேட்க,
"ராஜன் சார் கல்யாணத்துக்கு சம்மதம் தரலைனு மயில்வர்மன் கொச்சுகிட்டு வெளியூர்ல போய்ச் செட்டில் ஆகிட்டான்.
அந்த ஊருல இருந்தப்படியே ரம்யாவை கல்யாணமும் பண்ணிக்கிட்டான்.
நம்ம வர்மனுக்கு மட்டும் அடிக்கடி போன் செய்து மயில்வர்மன் பேசிக்கிட்டு தான் இருந்தான்.
ஆனால் ஒரு வருஷமா மயில்வர்மன்கிட்ட இருந்து எந்த ஒரு தகவலும் நம்ம வர்மனுக்கு வரவே இல்லை.
தன் சகோதரனுக்கு என்ன ஆனதுன்னு வர்மன் கவலைப்பட்டதால ராஜன் சாருக்கு தெரியாம நானும் வர்மனும் மயிலைப் பார்க்க அவன் ஊருக்குப் போனோம்.
ஆனா நாங்க போன இடத்துல எங்களுக்குப் பேர் அதிர்ச்சி காத்து இருந்தது" என்று மாயன் சொல்ல,
"என்ன அண்ணா...ஏன்? மயில்வர்மனுக்கு என்னாச்சு?"என்ற மகதியின் கேள்விக்கு ஒன்பது வருடத்திற்கு முன்பு நடந்த கதையை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான் மாயன்.
மயில்வர்மன் வேலை செய்த இடத்தில் அவனின் முகவரியை வாங்கிக்கொண்டு வர்மனும் மாயனும் மயிலைப் பார்க்க அவன் வீட்டுக்குச் சென்று இருந்தார்கள்.
"மாயா... இந்த வீடு தானே?" என்ற வர்மன், தன் சகோதரனைக் காணும் ஆவளில் மயில்வர்மனின் வீட்டுக்குள் நுழைய, அங்கே நிறைமாத கர்ப்பிணியாக நடு வீட்டில் அமர்ந்து இருந்தாள் ரம்யா.