Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 36
- Thread Author
- #1
அத்தியாயம் - 14
கீழே விழுந்த புகைப்படங்களை மகதி கையில் எடுக்க,"என்னை விடுங்க, நான் அம்மாகிட்ட போகணும்"என்று சிறுவன் கதறினான்.
"அருண்... ஏய் என் பேரனை விடுடி கொலைகார பாவி"என்ற ராஜன் கையில் இருந்த தடியைக்கொண்டு ரம்யாவை அடிக்கப் போக, அவளோ ஆத்திரத்துடன் ராஜனை கீழே தள்ளிவிட்டாள்.
"ஐயோ..." என்று ராஜன் வலியால் அலறியதும்,"பொண்ணா நீ?" என்று கோவத்தில் மகதி ரம்யாவின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
"என் மேலையா கை வச்ச!" என்ற ரம்யா, பதிலுக்கு மகதியை அடிக்கக் கை ஒங்க,
"ரம்மு... இந்தப் பொண்ணு தான் அருணுக்கு ரத்தம் கொடுத்தது" என்று ரம்யா வந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் நடுத்தர வயதுடைய ஆடவன் ஒருவன் ரம்யாவிடம் கூறினான்.
"ஓ! இவ தானா அந்தத் தங்க முட்டையிடும் வாத்து..."என்று விஷமமாகச் சிரித்த ரம்யாவோ,
தன் அருகே இருந்த காவலரிடம் கண் அசைக்க, அவனோ கண் இமைக்கும் வேகத்தில் மகதியை காரில் இழுத்து வீசினான்.
"ஏய் விடுங்க என்னை" என்று மகதி கத்தியதும், "அம்மா... அம்மா என்னாச்சு உங்களுக்கு?"என்ற சிறுவன் பயத்தில் அலறினான்.
"சரண் வண்டியை எடு" என்று ரம்யா கட்டளையிட,"ஏய் கொலைகாரி என் பேரனையும் என் மருமகளையும் விடுடி பாவி" என்று கதறிய ராஜனின் குரல் காற்றோடு கரைந்து போக, கார் புழுதியை கிளப்பிக்கொண்டு அந்தத் தெருவிலிருந்து மறைந்து இருந்தது.
கண் இமைக்கும் நொடியில் தன் பேரனைத் தொலைத்து இருந்த ராஜன், சற்றும் தாமதிக்காமல் தன் மகன் வர்மனின் கைபேசிக்கு அழைக்க,
வர்மன் விமான நிலையத்தினுள் காத்து இருப்பு இருக்கையில் அமர்ந்து
இருந்தான்.
"வர்மா... இன்னும் பத்து நிமிஷத்துல போடிங் ஓபன் ஆகிடும்" என்று மாயன் சொல்ல, மீண்டும் ராஜனிடமிருந்து வர்மனுக்கு அழைப்பு வந்தது.
"வர்மா போன் ரிங் ஆகுது பாரு" என்று மாயன் சொல்ல,
"ப்ச் என் காதுல கேக்கவே இல்லடா" என்ற வர்மன்,
"ஹலோ அப்பா..." என்று தன் கைபேசியை உயிர்ப்பித்து பதில் அளித்தான்.
"வர்மா... வர்மா நம்ம அருணை...நம்ம அருணையும் மகதியையும்"என்று பதற்றத்தில் ராஜனின் வாயில் இருந்து வார்த்தை வராமல் தர்க்கம் செய்தது.
"அப்பா என்னாச்சு!? ஏன் பதட்டமா பேசுறீங்க, என்னப்பா ஆச்சு" என்று தன் தந்தையின் குரலைகேட்டு இடம் மறந்து பதறினான் வர்மன்.
"என்ன வர்மா யாருக்கு என்னாச்சு?" என்ற மாயன் கைபேசியை தன் வசம் வாங்கியவன்,
"சார் அருணுக்கு எதாவது பிரச்சனையா?" என்று சரியாகக் கேட்டான்.
மாயனின் கேள்வியில்"நம்ம அருணை அந்த ரம்யா வந்து தூக்கிட்டு போயிட்டா மாயா" என்று கதறி அழுதார் ராஜன்.
"என்ன? ரம்யாவா?" என்ற மாயனின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போக, "மாயா... நீங்கச் சீக்கிரமா வாங்க மாயா, என் பேரனை அவ தூக்கிட்டு போயிட்டா, வர்மா... வர்மாவை அழைச்சிட்டு சீக்கிரம் வா மாயா" என்ற ராஜனின் வார்த்தை முடியும் முன்னே, மாயனும் வர்மனும் விமான நிலையத்திலிருந்து மாயனின் காரில் வர்மனின் வீட்டை நோக்கி விரைந்து இருந்தார்கள்.
இதே தருணம் காவலர் ஒருவரின் உதவியோடு, ரம்யா அருணை காரில் வலுகட்டாயமாகக் கடத்தி செல்ல,
தன் அருகே அமர்ந்து இருந்த ரம்யாவை,
"ஏய் எங்கள விடு" என்று அடித்துக்கொண்டு இருந்தாள் மகதி.
"அம்மா... அம்மா யாரு இவங்கயெல்லாம்?" என்று அருண் ஒரு பக்கம் அலற,
"அருண்! நீ பயப்புடாத. இவளைக் கொன்னாவது அம்மா உன்னைக் காப்பாத்துறேன்" என்ற மகதி, இந்த முறை ரம்யாவின் கையை அழுத்தமாகக் கடித்து இருந்தாள்.
மகதி தன்னை கடித்ததும்,"ஆ..." என்று வலியால் கத்திய ரம்யா,
காரினுள் இருந்த கனமான பொருளைக்கொண்டு மகதியின் தலையில் ஓங்கி அடிக்க,"அப்பா..." என்று அலறிய மகதி அப்படியே இருக்கையில் மயங்கிச் சரிந்தாள்.
இதுநாள் வரை மகதியை அம்மா என்று அழைத்த சிறுவனுக்கு இன்று வேறொருவள் 'நான் தான் அருணின் அம்மா' என்று அறிமுகமாகி இருக்க,
சிறுவனுக்கோ தலை பகுதியில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ரத்தம் கசிந்துகொண்டு இருந்தது.
"சரண்... அந்தக் கிஷோருக்கு போன் பண்ணு, இந்த வாண்டுக்கூட இதோ இவளையும் டீல் பேசிக் கப்பல்ல ஏத்த சொல்லிடு" என்று ரம்யா காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த சரணிடம் கட்டளையிட்டாள்.
சரண் தன் அலைபேசியிலிருந்து கிஷோர் என்ற நபரை அழைக்க, எதிர்முனையிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போனது.
"ரம்மி... அந்தக் கிஷோர் போனை எடுக்கல, இப்போ என்ன பண்ணுறது?"என்று சரண் கேட்க, ரம்யா ஒரு நொடி யோசித்தாள்.
"சரண்...நீ நேரா ரிசார்ட்க்கே போய்டு" என்று ரம்யா சொன்னதும், சரண் கே.கே. ரிசார்ட்டுக்கு காரை விரட்டினான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மாயனும் வர்மனும் தங்கள் வீட்டுக்குள் நுழைய, அங்கே ராஜன் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்.
"அப்பா..." என்ற வர்மனின் குரலில் ராஜன் தன் மகனைக் கட்டி அணைத்து அழத் தொடங்கியவர்,
"வர்மா... வர்மா நம்ம அருணை ரம்யா தூக்கிட்டு போயிட்டா வர்மா. அருண் கூடவே மகதி! மகதியையும் காருல வளச்சுகிட்டு போயிட்டா வர்மா" என்று கதறி அழுதார் ராஜன்.
"என்ன அப்பா சொல்றிங்க ரம்யாவா!? ஆனா அவ! அவ இப்போ மலேசியால இருக்கான்னு தானே கேள்வி பட்டேன்" என்று வர்மன் சொல்ல,
"ஐயோ இல்ல வர்மா... அந்தப் பொண்ணு தான் அவளை ரம்யான்னு சொன்னாள்" என்ற ராஜன், நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அழுது புலம்பினார்.
"வர்மா...நம்ம சிசிடிவியை செக் பண்ணலாம்" என்ற மாயன் சற்று தாமதிக்காமல் அங்கிருந்த லேப்டாப்பில் சற்று முன் நடந்த நிகழ்வுகளைப் பார்க்க, "ஆமா வர்மா... ரம்யா தான்" என்றான் மாயன்.
"இங்க வாட்ச் மேன் இருந்தும் இவ எப்படி உள்ள வந்தா?" என்ற வர்மனின் முகம் கோவத்தில் சிவந்து இருக்க,
"அந்தப் பொண்ணுக்கூட போலீஸ் வந்ததும் எங்களுக்கு ஒண்ணுமே புரியல வர்மா...ஐயோ என் பேரனை அவ என்ன பண்ண போறாளோ!?" என்று ராஜன் புலம்பினார்.
சிசிடிவி வீடியோவில் ரம்யா என்ற பெண்மணியைப் பார்த்த வர்மனுக்கு சொல்ல முடியாத அளவுக்குக் கோவம் எழுந்த நிலையில், சற்றும் தாமதிக்காமல் வர்மன் அவனின் நம்பிக்கைக்குறிய காவல்துறை அதிகாரி சைத்ராவை கைபேசி வாயிலாக அழைத்தான்.
சைத்ராவை வர்மன் தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட அடிப்படையில், அடுத்த சில நிமிடங்களில் கமிஷனர் சைத்ரா வர்மனின் வீட்டுக்கு வருகை தந்து இருந்தார்.
"என்னாச்சு வர்மா! அருணை பற்றி ரம்யாவுக்கு எப்படி தெரியும்?" என்று விசாரித்த சைத்ராவிற்கு, வர்மனின் வாழ்க்கையில் புதைந்து இருக்கும் எல்லா ரகசியமும் தெரிந்து தான் இருந்தது.
"எனக்கு ஒண்ணுமே புரியல சைத்ரா. அருணை மட்டுமில்லாமல், மாயன் சிஸ்டர் மகதியையும் அவ வலுகட்டாயமாக இழுத்துட்டு போய் இருக்கிறாள்" என்று வர்மன் சொன்னதும், CCTV கேமராவில் பதிவாகி இருந்த வீடியோவை உற்று கவனித்தாள் சைத்ரா.
ராஜன் தன் பேரனை நினைத்துக் கண்கள் கலங்க, வர்மன் தன் தந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்து இருந்தான்.
சூழ்நிலையைப் புரிந்து இருந்த சைத்ரா, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தகவல்களைச் சேகரிக்க,
"வர்மா... ரம்யா கூட உங்க வீட்டுக்கு வந்த போலீஸ்க்காரன் சஸ்பென்ஷன்ல இருக்குற ஆளு" என்று சைத்ரா சொன்னதும், ராஜன் மேலும் பயந்து போனார்.
"என்ன சொல்லுறிங்க சைத்ரா!?அப்போ ரம்யா சட்டப்படி அருணை அழைச்சிட்டு போகலையா?" என்று வர்மன் கேட்க,
"மலேசியாவில் ரம்யா மேல நிறைய கேஸ் இருக்கு வர்மா. அவ எப்படி இந்தியா வந்தானே எனக்குச் சந்தேகமா இருக்கு" என்ற சைத்ரா மீண்டும் தன் அலைபேசியில் சிலரை தொடர்புக் கொண்டாள்.
சிறுவனுக்கும் மகதிக்கும் என்னானது என்று அனைவரும் தவித்துப் போக,"வர்மா...ரம்யா வந்த கார் நம்பரை வச்சி சில டிட்டியல்ஸ் கிடைத்து இருக்கு. நீங்கக் கவலைப்படாதீங்க.
மறுபடியும் நானே அந்த ரம்யா கதையை முடிச்சு வைக்கிறேன்" என்ற சைத்ராவிற்கு ரம்யாவை பற்றிய எல்லா உண்மையும் தெரிந்து இருந்தது.
"சைத்ரா... நானும் உங்ககூட வரேன்.
அருண் ரொம்பவே பயந்து இருப்பான். அதுவும் இல்லாம மகதிக்கு எதாவதுனா அவங்க அப்பா உயிரோடவே இருக்க மாட்டாரு" என்ற வர்மன் வேகமாகத் தன் அறைக்குச் சென்றவன், அவனுடைய லைசென்ஸ் இருக்கும் துப்பாக்கியைத் தன்னுடன் எடுத்துக் கொண்டான்.
"வர்மா... நானும் வரேன் டா" என்ற மாயனும் இவர்களுடன் செல்ல முடிவு செய்ய. ராஜனுக்கு தைரியம் சொன்னபிறகு, கமிஷனர் சைத்ராவுடன் வர்மனும் மாயனும் மகதி அருணை தேடி விரைந்தார்கள்.
இதே சமயம் மயக்கத்தில் இருந்த மகதி கண்கள் விழித்துப் பார்க்க, அவள் ஒரு அறையில் இருப்பதை உணர்ந்தவளின் எதிரே ரம்யா அலைபேசியில் யாரிடமோ காரசாரமாகப் பேசிக்கொண்டு இருந்தாள்.
மயங்கிய விழிகளால் மகதி அருணை தேடி அலைய, "அப்பா...அப்பா" என்று பக்கத்து அறையிலிருந்து அருண் அழும் சத்தம் மகதியின் செவியில் ஒலித்தது.
சிறுவனின் அழகுரலை கேட்டு,"அருண்..." என்று அவனை அழைத்தபடி இந்த அறையிலிருந்து பக்கத்து அறைக்கு மகதி ஓட, அவளைக் கோவமாகப் பின் தொடர்ந்தாள் ரம்யா.
"அருண்..." என்ற அழைப்போடு மகதி சிறுவனைக் கட்டிக்கொள்ள,
"அம்மா... அம்மா நம்ம எங்க இருக்கோம்? எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு. அப்பா...அப்பா எங்க அம்மா?" என்று பதறிய சிறுவனை ஆறுதலாகக் கட்டிக்கொண்டாள் மகதி.
அருண் மகதியின் பாசபிணைப்பை பார்த்து,"அட!அடடா...இந்தப் பொடியணை பெற்ற எனக்குக்கூட இந்தப் பாசம் இல்லையே!" என்று உச்சு கொட்டும் ரம்யாவை அருவருப்பாகப் பார்த்தாள் மகதி.
"என்னடி அப்படி பாக்குற!? ஆமா நீ தான் வர்மனை கல்யாணம் பண்ணி இருக்கியா? ஆனா அந்தக் கிழவன் என்னவோ என் ரெண்டு பசங்களுக்கு நான் கல்யாணமே பண்ணி வைக்க மாட்டேன்னு! அந்தக் கதை பேசினான். இப்போ உன்னை மட்டும் எப்படி அருள் மொழி வர்மனுக்கு கல்யாணம் பண்ணி வச்சான்?" என்று திமிராகக் கேட்டாள் ரம்யா.
"ஏய்... மாமாவை மரியாதையா பேசு" என்று மகதி ரம்யாவை கண்டிக்க, "அந்தக் கிழவனுக்கு ஏன் நான் மரியாதை தரணும்!?" என்ற ரம்யாவின் கைபேசிக்கு கிஷோர் என்கிற நபரிடமிருந்து அழைப்பு வந்தது.
கீழே விழுந்த புகைப்படங்களை மகதி கையில் எடுக்க,"என்னை விடுங்க, நான் அம்மாகிட்ட போகணும்"என்று சிறுவன் கதறினான்.
"அருண்... ஏய் என் பேரனை விடுடி கொலைகார பாவி"என்ற ராஜன் கையில் இருந்த தடியைக்கொண்டு ரம்யாவை அடிக்கப் போக, அவளோ ஆத்திரத்துடன் ராஜனை கீழே தள்ளிவிட்டாள்.
"ஐயோ..." என்று ராஜன் வலியால் அலறியதும்,"பொண்ணா நீ?" என்று கோவத்தில் மகதி ரம்யாவின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
"என் மேலையா கை வச்ச!" என்ற ரம்யா, பதிலுக்கு மகதியை அடிக்கக் கை ஒங்க,
"ரம்மு... இந்தப் பொண்ணு தான் அருணுக்கு ரத்தம் கொடுத்தது" என்று ரம்யா வந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் நடுத்தர வயதுடைய ஆடவன் ஒருவன் ரம்யாவிடம் கூறினான்.
"ஓ! இவ தானா அந்தத் தங்க முட்டையிடும் வாத்து..."என்று விஷமமாகச் சிரித்த ரம்யாவோ,
தன் அருகே இருந்த காவலரிடம் கண் அசைக்க, அவனோ கண் இமைக்கும் வேகத்தில் மகதியை காரில் இழுத்து வீசினான்.
"ஏய் விடுங்க என்னை" என்று மகதி கத்தியதும், "அம்மா... அம்மா என்னாச்சு உங்களுக்கு?"என்ற சிறுவன் பயத்தில் அலறினான்.
"சரண் வண்டியை எடு" என்று ரம்யா கட்டளையிட,"ஏய் கொலைகாரி என் பேரனையும் என் மருமகளையும் விடுடி பாவி" என்று கதறிய ராஜனின் குரல் காற்றோடு கரைந்து போக, கார் புழுதியை கிளப்பிக்கொண்டு அந்தத் தெருவிலிருந்து மறைந்து இருந்தது.
கண் இமைக்கும் நொடியில் தன் பேரனைத் தொலைத்து இருந்த ராஜன், சற்றும் தாமதிக்காமல் தன் மகன் வர்மனின் கைபேசிக்கு அழைக்க,
வர்மன் விமான நிலையத்தினுள் காத்து இருப்பு இருக்கையில் அமர்ந்து
இருந்தான்.
"வர்மா... இன்னும் பத்து நிமிஷத்துல போடிங் ஓபன் ஆகிடும்" என்று மாயன் சொல்ல, மீண்டும் ராஜனிடமிருந்து வர்மனுக்கு அழைப்பு வந்தது.
"வர்மா போன் ரிங் ஆகுது பாரு" என்று மாயன் சொல்ல,
"ப்ச் என் காதுல கேக்கவே இல்லடா" என்ற வர்மன்,
"ஹலோ அப்பா..." என்று தன் கைபேசியை உயிர்ப்பித்து பதில் அளித்தான்.
"வர்மா... வர்மா நம்ம அருணை...நம்ம அருணையும் மகதியையும்"என்று பதற்றத்தில் ராஜனின் வாயில் இருந்து வார்த்தை வராமல் தர்க்கம் செய்தது.
"அப்பா என்னாச்சு!? ஏன் பதட்டமா பேசுறீங்க, என்னப்பா ஆச்சு" என்று தன் தந்தையின் குரலைகேட்டு இடம் மறந்து பதறினான் வர்மன்.
"என்ன வர்மா யாருக்கு என்னாச்சு?" என்ற மாயன் கைபேசியை தன் வசம் வாங்கியவன்,
"சார் அருணுக்கு எதாவது பிரச்சனையா?" என்று சரியாகக் கேட்டான்.
மாயனின் கேள்வியில்"நம்ம அருணை அந்த ரம்யா வந்து தூக்கிட்டு போயிட்டா மாயா" என்று கதறி அழுதார் ராஜன்.
"என்ன? ரம்யாவா?" என்ற மாயனின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போக, "மாயா... நீங்கச் சீக்கிரமா வாங்க மாயா, என் பேரனை அவ தூக்கிட்டு போயிட்டா, வர்மா... வர்மாவை அழைச்சிட்டு சீக்கிரம் வா மாயா" என்ற ராஜனின் வார்த்தை முடியும் முன்னே, மாயனும் வர்மனும் விமான நிலையத்திலிருந்து மாயனின் காரில் வர்மனின் வீட்டை நோக்கி விரைந்து இருந்தார்கள்.
இதே தருணம் காவலர் ஒருவரின் உதவியோடு, ரம்யா அருணை காரில் வலுகட்டாயமாகக் கடத்தி செல்ல,
தன் அருகே அமர்ந்து இருந்த ரம்யாவை,
"ஏய் எங்கள விடு" என்று அடித்துக்கொண்டு இருந்தாள் மகதி.
"அம்மா... அம்மா யாரு இவங்கயெல்லாம்?" என்று அருண் ஒரு பக்கம் அலற,
"அருண்! நீ பயப்புடாத. இவளைக் கொன்னாவது அம்மா உன்னைக் காப்பாத்துறேன்" என்ற மகதி, இந்த முறை ரம்யாவின் கையை அழுத்தமாகக் கடித்து இருந்தாள்.
மகதி தன்னை கடித்ததும்,"ஆ..." என்று வலியால் கத்திய ரம்யா,
காரினுள் இருந்த கனமான பொருளைக்கொண்டு மகதியின் தலையில் ஓங்கி அடிக்க,"அப்பா..." என்று அலறிய மகதி அப்படியே இருக்கையில் மயங்கிச் சரிந்தாள்.
இதுநாள் வரை மகதியை அம்மா என்று அழைத்த சிறுவனுக்கு இன்று வேறொருவள் 'நான் தான் அருணின் அம்மா' என்று அறிமுகமாகி இருக்க,
சிறுவனுக்கோ தலை பகுதியில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ரத்தம் கசிந்துகொண்டு இருந்தது.
"சரண்... அந்தக் கிஷோருக்கு போன் பண்ணு, இந்த வாண்டுக்கூட இதோ இவளையும் டீல் பேசிக் கப்பல்ல ஏத்த சொல்லிடு" என்று ரம்யா காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த சரணிடம் கட்டளையிட்டாள்.
சரண் தன் அலைபேசியிலிருந்து கிஷோர் என்ற நபரை அழைக்க, எதிர்முனையிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போனது.
"ரம்மி... அந்தக் கிஷோர் போனை எடுக்கல, இப்போ என்ன பண்ணுறது?"என்று சரண் கேட்க, ரம்யா ஒரு நொடி யோசித்தாள்.
"சரண்...நீ நேரா ரிசார்ட்க்கே போய்டு" என்று ரம்யா சொன்னதும், சரண் கே.கே. ரிசார்ட்டுக்கு காரை விரட்டினான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மாயனும் வர்மனும் தங்கள் வீட்டுக்குள் நுழைய, அங்கே ராஜன் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தார்.
"அப்பா..." என்ற வர்மனின் குரலில் ராஜன் தன் மகனைக் கட்டி அணைத்து அழத் தொடங்கியவர்,
"வர்மா... வர்மா நம்ம அருணை ரம்யா தூக்கிட்டு போயிட்டா வர்மா. அருண் கூடவே மகதி! மகதியையும் காருல வளச்சுகிட்டு போயிட்டா வர்மா" என்று கதறி அழுதார் ராஜன்.
"என்ன அப்பா சொல்றிங்க ரம்யாவா!? ஆனா அவ! அவ இப்போ மலேசியால இருக்கான்னு தானே கேள்வி பட்டேன்" என்று வர்மன் சொல்ல,
"ஐயோ இல்ல வர்மா... அந்தப் பொண்ணு தான் அவளை ரம்யான்னு சொன்னாள்" என்ற ராஜன், நெஞ்சில் கை வைத்துக்கொண்டு அழுது புலம்பினார்.
"வர்மா...நம்ம சிசிடிவியை செக் பண்ணலாம்" என்ற மாயன் சற்று தாமதிக்காமல் அங்கிருந்த லேப்டாப்பில் சற்று முன் நடந்த நிகழ்வுகளைப் பார்க்க, "ஆமா வர்மா... ரம்யா தான்" என்றான் மாயன்.
"இங்க வாட்ச் மேன் இருந்தும் இவ எப்படி உள்ள வந்தா?" என்ற வர்மனின் முகம் கோவத்தில் சிவந்து இருக்க,
"அந்தப் பொண்ணுக்கூட போலீஸ் வந்ததும் எங்களுக்கு ஒண்ணுமே புரியல வர்மா...ஐயோ என் பேரனை அவ என்ன பண்ண போறாளோ!?" என்று ராஜன் புலம்பினார்.
சிசிடிவி வீடியோவில் ரம்யா என்ற பெண்மணியைப் பார்த்த வர்மனுக்கு சொல்ல முடியாத அளவுக்குக் கோவம் எழுந்த நிலையில், சற்றும் தாமதிக்காமல் வர்மன் அவனின் நம்பிக்கைக்குறிய காவல்துறை அதிகாரி சைத்ராவை கைபேசி வாயிலாக அழைத்தான்.
சைத்ராவை வர்மன் தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட அடிப்படையில், அடுத்த சில நிமிடங்களில் கமிஷனர் சைத்ரா வர்மனின் வீட்டுக்கு வருகை தந்து இருந்தார்.
"என்னாச்சு வர்மா! அருணை பற்றி ரம்யாவுக்கு எப்படி தெரியும்?" என்று விசாரித்த சைத்ராவிற்கு, வர்மனின் வாழ்க்கையில் புதைந்து இருக்கும் எல்லா ரகசியமும் தெரிந்து தான் இருந்தது.
"எனக்கு ஒண்ணுமே புரியல சைத்ரா. அருணை மட்டுமில்லாமல், மாயன் சிஸ்டர் மகதியையும் அவ வலுகட்டாயமாக இழுத்துட்டு போய் இருக்கிறாள்" என்று வர்மன் சொன்னதும், CCTV கேமராவில் பதிவாகி இருந்த வீடியோவை உற்று கவனித்தாள் சைத்ரா.
ராஜன் தன் பேரனை நினைத்துக் கண்கள் கலங்க, வர்மன் தன் தந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்து இருந்தான்.
சூழ்நிலையைப் புரிந்து இருந்த சைத்ரா, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சில தகவல்களைச் சேகரிக்க,
"வர்மா... ரம்யா கூட உங்க வீட்டுக்கு வந்த போலீஸ்க்காரன் சஸ்பென்ஷன்ல இருக்குற ஆளு" என்று சைத்ரா சொன்னதும், ராஜன் மேலும் பயந்து போனார்.
"என்ன சொல்லுறிங்க சைத்ரா!?அப்போ ரம்யா சட்டப்படி அருணை அழைச்சிட்டு போகலையா?" என்று வர்மன் கேட்க,
"மலேசியாவில் ரம்யா மேல நிறைய கேஸ் இருக்கு வர்மா. அவ எப்படி இந்தியா வந்தானே எனக்குச் சந்தேகமா இருக்கு" என்ற சைத்ரா மீண்டும் தன் அலைபேசியில் சிலரை தொடர்புக் கொண்டாள்.
சிறுவனுக்கும் மகதிக்கும் என்னானது என்று அனைவரும் தவித்துப் போக,"வர்மா...ரம்யா வந்த கார் நம்பரை வச்சி சில டிட்டியல்ஸ் கிடைத்து இருக்கு. நீங்கக் கவலைப்படாதீங்க.
மறுபடியும் நானே அந்த ரம்யா கதையை முடிச்சு வைக்கிறேன்" என்ற சைத்ராவிற்கு ரம்யாவை பற்றிய எல்லா உண்மையும் தெரிந்து இருந்தது.
"சைத்ரா... நானும் உங்ககூட வரேன்.
அருண் ரொம்பவே பயந்து இருப்பான். அதுவும் இல்லாம மகதிக்கு எதாவதுனா அவங்க அப்பா உயிரோடவே இருக்க மாட்டாரு" என்ற வர்மன் வேகமாகத் தன் அறைக்குச் சென்றவன், அவனுடைய லைசென்ஸ் இருக்கும் துப்பாக்கியைத் தன்னுடன் எடுத்துக் கொண்டான்.
"வர்மா... நானும் வரேன் டா" என்ற மாயனும் இவர்களுடன் செல்ல முடிவு செய்ய. ராஜனுக்கு தைரியம் சொன்னபிறகு, கமிஷனர் சைத்ராவுடன் வர்மனும் மாயனும் மகதி அருணை தேடி விரைந்தார்கள்.
இதே சமயம் மயக்கத்தில் இருந்த மகதி கண்கள் விழித்துப் பார்க்க, அவள் ஒரு அறையில் இருப்பதை உணர்ந்தவளின் எதிரே ரம்யா அலைபேசியில் யாரிடமோ காரசாரமாகப் பேசிக்கொண்டு இருந்தாள்.
மயங்கிய விழிகளால் மகதி அருணை தேடி அலைய, "அப்பா...அப்பா" என்று பக்கத்து அறையிலிருந்து அருண் அழும் சத்தம் மகதியின் செவியில் ஒலித்தது.
சிறுவனின் அழகுரலை கேட்டு,"அருண்..." என்று அவனை அழைத்தபடி இந்த அறையிலிருந்து பக்கத்து அறைக்கு மகதி ஓட, அவளைக் கோவமாகப் பின் தொடர்ந்தாள் ரம்யா.
"அருண்..." என்ற அழைப்போடு மகதி சிறுவனைக் கட்டிக்கொள்ள,
"அம்மா... அம்மா நம்ம எங்க இருக்கோம்? எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு. அப்பா...அப்பா எங்க அம்மா?" என்று பதறிய சிறுவனை ஆறுதலாகக் கட்டிக்கொண்டாள் மகதி.
அருண் மகதியின் பாசபிணைப்பை பார்த்து,"அட!அடடா...இந்தப் பொடியணை பெற்ற எனக்குக்கூட இந்தப் பாசம் இல்லையே!" என்று உச்சு கொட்டும் ரம்யாவை அருவருப்பாகப் பார்த்தாள் மகதி.
"என்னடி அப்படி பாக்குற!? ஆமா நீ தான் வர்மனை கல்யாணம் பண்ணி இருக்கியா? ஆனா அந்தக் கிழவன் என்னவோ என் ரெண்டு பசங்களுக்கு நான் கல்யாணமே பண்ணி வைக்க மாட்டேன்னு! அந்தக் கதை பேசினான். இப்போ உன்னை மட்டும் எப்படி அருள் மொழி வர்மனுக்கு கல்யாணம் பண்ணி வச்சான்?" என்று திமிராகக் கேட்டாள் ரம்யா.
"ஏய்... மாமாவை மரியாதையா பேசு" என்று மகதி ரம்யாவை கண்டிக்க, "அந்தக் கிழவனுக்கு ஏன் நான் மரியாதை தரணும்!?" என்ற ரம்யாவின் கைபேசிக்கு கிஷோர் என்கிற நபரிடமிருந்து அழைப்பு வந்தது.