Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதாரா!
இந்த வளந்து கெட்டவனுக்கு என்னாச்சு?, இப்படி நிற்குறானென்று நினைத்தவள்,மாறனை தாண்டி உள்ளே சென்றாள்.
அம்மா என்று பூஜையறையிலிருப்பவரை கூப்பிட, வந்துட்டியாமா என்றபடியே திரும்பியவர், புடவையில் கண்ணுக்கு அழகாய்,அச்சில் வார்த்த சிலை போல், இயல்பான ஒப்பனையோடு இருப்பவளை கண்டு, மாறனோடு அவளை ஜோடியாக நிற்க வைத்து கற்பனையில் பார்த்தவருக்கு, திருப்தியாக இருந்தது.
அழகா இருக்கம்மா.ஃப்ரிஜில் பூ இருக்கு வச்சிட்டு வாயென மீண்டும் தனது வேலையை தொடர்ந்தார்.
ஃப்ரிஜை திறந்தவள் வாவ் மல்லிப்பூ என்று கையிலிருந்த பூவில் வாசம் பிடித்தவளின் செயல்களை இரண்டு கண்கள் ரசித்தது.
ஓஓஓ இவளுக்கு மல்லிப்பூ ரொம்ப புடிக்கும் போல. நல்லவேளை டா மாறா. இந்த பூவை வர வச்சியேனு தன்னைத்தானே பாராட்டிக்கொண்டான்.
பூஜைக்கு அழைத்தவர்களும் வந்தும் பூஜையும் ஆரம்பமானது.அவரவருக்கு தெரிந்த அம்மன் பாடல்களை பாடினர்.
தாமரையையும் விஸ்வம் பாடச்சொல்ல, பாடியவளின் குரலில் அனைவரும் மெய்மறந்து போனார்கள்.
பின்னர் அம்மனுக்கு ஆரத்தி காட்டி, பிரசாதத்தை கொடுத்து, விரதத்தை நல்ல முறையில் முடித்தனர்.
வந்திருந்தவர்களுக்கு, வீட்டில் செய்த பிரசாதத்தோடு,கிப்ட் பாக்ஸை கொடுக்க,அவர்களும் அங்கிருந்து கிளம்பினர்.
சிறப்பா பூஜை முடிஞ்சிட்டு இல்லையா பூரணியென விஸ்வம் கேட்க,ஆமாங்க.
இந்த முறை தாமரை இருப்பதால் தான், அவர்களுக்கும் கொடுத்தனுப்ப பிரசாதம் அதிகமா செய்ய முடிஞ்சிது.
இல்லையென்றால், வழக்கம் போல சாமிக்கு மட்டும் கொஞ்சம் செய்து விட்டு, கடையில் வாங்கி தான் கொடுத்திருக்கனும்.
எல்லா பிரசாதமும்,நல்லா இருந்துச்சிமா என்றவனிடம் உளுந்து வடை மட்டும் தான் நான் செய்தேன் பா.மற்றது,மாங்காய் சாதம், பருப்பு வடை பாயசமெல்லாம் தாமரை தான் பண்ணுச்சிப்பா.
ஓஓஓ மேடம் சமையல்ல டாப் போல.
அப்படி இல்லைங்க சார். ஓரளவிற்கு தெரியுமென்றாள்.
இவ ஒருத்தி, என்றைக்கு தான் இந்த சாரை விட்டு தொலைவாளென்று தெரியவில்லையேனு புலம்பினான்.
சரிங்கம்மா நான் ரூமிற்கு போறேனென்று சொல்ல, ஒரு நிமிஷம்மா என்ற பூரணி, பூஜையறையில் இருந்த தாம்பூலத்தை எடுத்து வந்தவர், வாங்கோ என்று விஸ்வத்தை கூப்பிட்டார்.
இந்தாமானு இருவரும் இணைந்து தாம்பூலத்தை நீட்ட,ஒரு நொடி அதிர்ந்தவள், பின்னர் இருவரின் காலில் விழ, தீர்க சுமங்கலியாக வாழுமா என்று ஆசீர்வதித்தனர்.
எழுந்தவள் தாம்பூலத்தை வாங்கும் போது அவள் கண்கள் கலங்கியது.
ஏன்மா, என்னாச்சென பூரணி பதற, வேதாம்மைவை தவிர, வேறு யாரும் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து, டிரஸ் வாங்கி தந்தது இல்லைங்கம்மா.
அட.... இவ்வளவு தானா, ம்னு சொல்லு, வாரம்,வாரம் பூரணி உனக்கு வாங்கி தருவாளென்றார் விஸ்வம்.
அதுக்கென்னங்க வாங்கி தந்து விட்டால் போச்சென்று சிரித்தார்.
பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு,தனது அறைக்கு வந்து கதவை தாழிட்டவள், அதன் மேலே சாய்ந்து உட்கார,இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் வழிந்து ஓடியது.
சற்று முன்னர் நடந்த விஷயத்தை நினைக்க,இன்னும் அவளுக்கு அழுகை வந்தது.
அதாவது பூஜையில் அனைவரும் அவரவர்களுக்கு தெரிந்த பாடல்கள் பாடியும், சுலோகங்களையும் சொல்லி முடித்த பின்னர், ஆரத்தி காட்டும் போது, எல்லாரும் கண்ணை மூடி வேண்டிக்கொண்டனர்.
அப்பொழுது தமிழ் தெரிந்த பெண்மணி ஒருவர் தனது கணவர் பரிபூரண நலனோடு இருக்கனும், அவர் செய்யும் தொழில் சிறக்கனுமென்று சொல்வது அவள் காதில் விழும்போது, தாமரையின் மூடியிருந்த கண்களுக்குள் கதிர் வந்து போனான்.
காலையிலிருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்தது, தனக்கு விருப்பமில்லாமல் தாலி கட்டியவனுக்காக தான் என்பது, அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
என்னதான் படித்த பெண்ணாகவும், வழக்கமான பெண்களை போல தாலி சென்டிமென்டில் அடங்கி போகமாட்டேனென்று வி. வி. கிட்ட சொன்னாலும், அவளுக்குள் இருந்த நம் பாராம்பர்ய கலாச்சார உணர்வு விழிப்போடு இருப்பதே உண்மை.
கதிர் மேல் கோவமாக இருந்தாலும், அவனுடனான அந்த முகம் தெரியாத சந்திப்புகளை, நினைக்கும் போதெல்லாம் அவளுக்குள் ஓர் சிலிர்ப்பு வருவதை அவளால் தடுக்க முடியவில்லை.
நேற்று விரதம் பற்றி பூரணி சொல்லும் போது நமக்கு எதுக்கென்று இருந்தவள், காலை எழும்போது, கதிருக்காய் விரதமிருக்க மனம் சொல்லியது.
மனதில் குழப்பம் வரும் போதெல்லாம்,கண்ணை மூடி கடவுளிடம் வேண்டுவதை போல, விரதம் இருக்கலாமானு கடவுளிடம் வேண்ட,அவள் மனம் அமைதியாக இருப்பதை அவளால் உணர முடிந்தது.
பிறகே அந்த விஷயத்தில் இறங்கினாள்.
அதையெல்லாம் நினைத்து சத்தமின்றி அழுதவள், அடேய் உன்னை புருஷனா ஏத்துக்கவும் முடியலை, வேண்டானு விலக்கவும் முடியலை, எதுக்குடா என் வாழ்க்கையில் வந்தாயென்று கதறினாள்.
சீமக்கரை...
சிந்து என்று திலகா கதவை திறந்து இறங்க,அவரின் சத்தம் கேட்டு மற்றவர்களும் சிந்துவின் அருகில் வந்தனர்.
தனது அம்மாவின் தலையை தூக்கி மடியில் வைத்தவன், அம்மா அம்மா என்று தட்டி எழுப்ப, கண்ணா இந்த தண்ணியை முகத்தில் தெளியென்று திலகா கொடுக்க, அதை வாங்கி சிந்துவின் முகத்தில் தெளித்தான்.
கண்ணை விழித்து, பின் பதறி எழுந்தவர், தனது அப்பாவிடம் சென்று கையை கூப்ப,அவரோ அங்கிருந்து வீட்டினுள்ளே சென்று விட்டார்.
தோட்டத்தில் கடலை உடைத்துக்கொண்டிருந்ததால் வாசலில் நடக்கும் விஷயம், வீட்டு பெண்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
அம்மாடி சிந்துனு கூப்பிட்ட வெற்றிவேல் வாங்க உள்ளே போகலாமென்றார்.
அடேய் வந்தவங்களை வாங்கனு கூப்பிடாமல், இப்படி புள்ளையாரு போல நாம நிக்கிறோமென்ற வேலுவோ வாங்க வாங்கனு வீட்டிற்குள் அழைத்தான்.
அப்பொழுது,வாசலுக்கு ஓடி வந்த வள்ளி அப்பாயி, நான் பெத்த மவளே வந்துட்டியாடினு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதற, அதைக்கண்ட சிந்துவோ அம்மா என்று ஓடிப்போய் வள்ளி அப்பாயின் காலில் விழுந்து கதறி அழுதார்.
சீதாவும், ராதாவும் வாசலுக்கு வந்து அங்கிருந்தவர்களை உள்ளே அழைத்துப்போய் ஷோஃபாவில் உட்கார சொல்லி, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர்.
வள்ளி அப்பாயியும், சிந்துவும் வாசலிலே அழுவது தெரிந்து, பிரகாசம் தாத்தா வெளியே போனவர், வள்ளி உம் மவளை உள்ள கூப்பிட்டு போ என்றார்.
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த பார்வதி, அக்கா என்க, பாரு என்று எழுந்து போய் தங்கையை கட்டிக்கொண்டு சிந்து அழ, பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வந்தது.
அவர்களிடம் வந்த சீதா, ரெண்டு பேரும் உள்ளே வாங்கண்ணி என்கும் போது வெளியே சென்றிருந்த பெருமாளும் வந்து விட்டார்.
டவுனுக்கு போயிருந்த முத்துக்கும், செல்வத்திற்கும் ஃபோனில் விஷயத்தை சொல்ல, அவர்களும் அதிர்ந்து போய் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு, அவ்வளவு அமைதியாக வீடு இருந்தது.
பள்ளிக்கூடம் சென்றிருந்த நிலவனும், செல்வியும் வீட்டிற்கு வந்தவர்கள், அங்கிருப்பவர்கள் யாரென்று தெரியாததால், அமைதியாக அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர்.
இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தமென்று வெற்றிவேல் பேச ஆரம்பித்தார்.
அங்கிருப்பவர்களை பார்த்தவர் அனைவருக்கும் வணக்கம், நான் வெற்றிவேல். அவங்க என்னோட மனைவி திலகா.இது என் தங்கச்சி சிந்து, அது என் மருமவன் நவீன். நாங்க அசாமிலிருந்து வரோம்.உங்க எல்லாருக்கும் கோவமிருக்கும், இல்லையென்று சொல்ல முடியாது.
இத்தனை வருஷத்திற்கு பிறகு இன்றைக்கு தான் இங்க வரனுமென்று கடவுள் எழுதி வைத்திருக்கிறார் போலனு அவர் பேசும் போது, எஸ்கியூஸ்மி சாரென்று அவருடைய எஸ்கார்ட் வர, திரும்பி பார்த்தவர், என்வென்று கேட்க,தமிழ்நாடு சி. எம். ஆபீஸ்ல இருந்து கால் வந்திருக்கென்றார்.
ஓ என்றவர், கொடுங்க என்று வாங்கியவர், வணக்கம் நான் அமைச்சர் வெற்றிவேல் பேசுறேன்..
என்னாஆஆஆ அமைச்சராஆஆஆஆ என்று கதிர் வீட்டினர் அதிர்ந்தனர்.
சார்.. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. நான் என்னோட குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயமாக வரும் போது, அரசாங்கத்திடம் எந்த பாதுகாப்பும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.பொது மக்களுக்கு உங்க பாதுகாப்பை கொடுங்கள்.எனக்கு அரசியல் வேறு, குடும்பம் வேறு. அதை என்றும் நான் ஒன்றாய் பார்ப்பது இல்லை.
அங்கு அசாமிலே நான் சொல்லியதை சி. எம். கேட்காமல் என்னோட பாதுகாப்புக்கு இரண்டு எஸ்கார்ட் அனுப்பியிருக்காங்க.அது போதாதுனு இங்க ஸ்டேஷனில் இருந்தும் எஸ். ஐ, இரண்டு கான்ஸ்டபிளை விட்டு போயிருக்காங்க.அதுவே அதிகம்னு நினைக்கிறேன்.
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க சாரென்று கட் பண்ணியவர் ஃபோனை கொடுக்க, எஸ்கார்ட் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.
எல்லாரையும் பார்த்து தப்பா எடுத்துக்க வேண்டாம், திடீர்னு தவிர்க முடியாத கால் வந்து விட்டது என்கவும், சார் நீங்க அமைச்சரா என்றனர்.
ஹாஹாஹா என்று சிரித்த வெற்றிவேல், சிந்துவை என் கூட பொறந்தவளாக நான் ஏற்றுக்கொண்டு முப்பத்தைந்து வருஷமாகிட்டு.அதனால் அனேகமா உங்களுக்கு நான் அண்ணனாக தான் இருப்பேனென்றார்.
அவரின் பேச்சும், பழகும் எளிமையையும் பார்த்தவர்கள் என்னா மனுஷனென்று உள்ளுக்குள்ளே பாராட்டினர்.
சிந்து என்று வெற்றிவேல் கூப்பிட, கீழே குனிந்து அழுது கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்க, என்ன நடந்துச்சினு அவங்களுக்கு சொல்லுமா.
அவங்களுக்கும் உண்மை தெரியனும் மா.இன்னும் எத்தனை வருஷம், மனசுக்குள்ளே நீ அழுது கொண்டிருப்ப?.
இனி மறைக்க என்ன இருக்கென்ற உண்மையை சிந்துவின் மனசாட்சி உணர்த்த,வீட்டினர் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார்.
அவர் என்ன சொல்லப்போறாரோயென்ற கேள்வி, அனைவரின் முகத்திலும் தெரிந்தது
நடப்பது நடக்கட்டுமென தனது மனதை தேற்றிக்கொண்டு,என்ன நடந்தது என்பதை சிந்துவும் சொல்ல தொடங்கினார்.
திலகாவும் என் கூட ஒன்னா படித்தவள் தான்.ஆனால் பாரு, கவிதாவுக்கு இது தெரியாது.திலகா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் பரதநாட்டியம் சொல்லி தருகிறார்களென்று தெரிஞ்சிது.
எனக்கும் அதை கத்துக்க ஆசை.உங்க கிட்ட சொன்னால் விட மாட்டீங்கனு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு பொய் சொல்லி விட்டு, நான் மட்டும் காலையிலே சீக்கிரம் போவேன்.
அங்க போய்ட்டு வரும் போது தான் வீர் கூட பழக்கமாச்சு.இது திலகாவுக்கும் தெரியாது.வீட்டை நினைச்சி பயம் இருந்தாலும், வீர் பேச்சில் எனக்கு தைரியம் வந்ததுச்சு.
அப்பொழுது தான் பேச்சு போட்டியில் கலந்துக்க மதுரைக்கு போயிருந்தேன்.
நான் பேசி முடித்து கீழே வந்து தண்ணி குடிக்க போனேன், அங்கு வீரோட கூட இருக்கவன் வந்து சிந்துனு கூப்பிட்டான்.யார்னு நான் திரும்பி பார்த்து சொல்லுங்கணானு கேட்க, வீர் சாகப்போறேனு சொல்லுறான்மா.
எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டுறான். உனக்காக தான் என்னையும் கூப்பிட்டுக்கிட்டு மதுரைக்கு வந்துருக்கான்னு சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு நானும் பதர, தங்கச்சி ஸ்கூல் டிரஸோட பேசிக்கிட்டு இருப்பதை, யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.இதை போட்டு கிட்டு வா என்று,என் கையில் ஒரு கவரை கொடுக்க,அதை வாங்கி பார்த்தேன்.
இந்த வளந்து கெட்டவனுக்கு என்னாச்சு?, இப்படி நிற்குறானென்று நினைத்தவள்,மாறனை தாண்டி உள்ளே சென்றாள்.
அம்மா என்று பூஜையறையிலிருப்பவரை கூப்பிட, வந்துட்டியாமா என்றபடியே திரும்பியவர், புடவையில் கண்ணுக்கு அழகாய்,அச்சில் வார்த்த சிலை போல், இயல்பான ஒப்பனையோடு இருப்பவளை கண்டு, மாறனோடு அவளை ஜோடியாக நிற்க வைத்து கற்பனையில் பார்த்தவருக்கு, திருப்தியாக இருந்தது.
அழகா இருக்கம்மா.ஃப்ரிஜில் பூ இருக்கு வச்சிட்டு வாயென மீண்டும் தனது வேலையை தொடர்ந்தார்.
ஃப்ரிஜை திறந்தவள் வாவ் மல்லிப்பூ என்று கையிலிருந்த பூவில் வாசம் பிடித்தவளின் செயல்களை இரண்டு கண்கள் ரசித்தது.
ஓஓஓ இவளுக்கு மல்லிப்பூ ரொம்ப புடிக்கும் போல. நல்லவேளை டா மாறா. இந்த பூவை வர வச்சியேனு தன்னைத்தானே பாராட்டிக்கொண்டான்.
பூஜைக்கு அழைத்தவர்களும் வந்தும் பூஜையும் ஆரம்பமானது.அவரவருக்கு தெரிந்த அம்மன் பாடல்களை பாடினர்.
தாமரையையும் விஸ்வம் பாடச்சொல்ல, பாடியவளின் குரலில் அனைவரும் மெய்மறந்து போனார்கள்.
பின்னர் அம்மனுக்கு ஆரத்தி காட்டி, பிரசாதத்தை கொடுத்து, விரதத்தை நல்ல முறையில் முடித்தனர்.
வந்திருந்தவர்களுக்கு, வீட்டில் செய்த பிரசாதத்தோடு,கிப்ட் பாக்ஸை கொடுக்க,அவர்களும் அங்கிருந்து கிளம்பினர்.
சிறப்பா பூஜை முடிஞ்சிட்டு இல்லையா பூரணியென விஸ்வம் கேட்க,ஆமாங்க.
இந்த முறை தாமரை இருப்பதால் தான், அவர்களுக்கும் கொடுத்தனுப்ப பிரசாதம் அதிகமா செய்ய முடிஞ்சிது.
இல்லையென்றால், வழக்கம் போல சாமிக்கு மட்டும் கொஞ்சம் செய்து விட்டு, கடையில் வாங்கி தான் கொடுத்திருக்கனும்.
எல்லா பிரசாதமும்,நல்லா இருந்துச்சிமா என்றவனிடம் உளுந்து வடை மட்டும் தான் நான் செய்தேன் பா.மற்றது,மாங்காய் சாதம், பருப்பு வடை பாயசமெல்லாம் தாமரை தான் பண்ணுச்சிப்பா.
ஓஓஓ மேடம் சமையல்ல டாப் போல.
அப்படி இல்லைங்க சார். ஓரளவிற்கு தெரியுமென்றாள்.
இவ ஒருத்தி, என்றைக்கு தான் இந்த சாரை விட்டு தொலைவாளென்று தெரியவில்லையேனு புலம்பினான்.
சரிங்கம்மா நான் ரூமிற்கு போறேனென்று சொல்ல, ஒரு நிமிஷம்மா என்ற பூரணி, பூஜையறையில் இருந்த தாம்பூலத்தை எடுத்து வந்தவர், வாங்கோ என்று விஸ்வத்தை கூப்பிட்டார்.
இந்தாமானு இருவரும் இணைந்து தாம்பூலத்தை நீட்ட,ஒரு நொடி அதிர்ந்தவள், பின்னர் இருவரின் காலில் விழ, தீர்க சுமங்கலியாக வாழுமா என்று ஆசீர்வதித்தனர்.
எழுந்தவள் தாம்பூலத்தை வாங்கும் போது அவள் கண்கள் கலங்கியது.
ஏன்மா, என்னாச்சென பூரணி பதற, வேதாம்மைவை தவிர, வேறு யாரும் எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து, டிரஸ் வாங்கி தந்தது இல்லைங்கம்மா.
அட.... இவ்வளவு தானா, ம்னு சொல்லு, வாரம்,வாரம் பூரணி உனக்கு வாங்கி தருவாளென்றார் விஸ்வம்.
அதுக்கென்னங்க வாங்கி தந்து விட்டால் போச்சென்று சிரித்தார்.
பின்னர் அவர்களிடம் சொல்லிக்கொண்டு,தனது அறைக்கு வந்து கதவை தாழிட்டவள், அதன் மேலே சாய்ந்து உட்கார,இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் வழிந்து ஓடியது.
சற்று முன்னர் நடந்த விஷயத்தை நினைக்க,இன்னும் அவளுக்கு அழுகை வந்தது.
அதாவது பூஜையில் அனைவரும் அவரவர்களுக்கு தெரிந்த பாடல்கள் பாடியும், சுலோகங்களையும் சொல்லி முடித்த பின்னர், ஆரத்தி காட்டும் போது, எல்லாரும் கண்ணை மூடி வேண்டிக்கொண்டனர்.
அப்பொழுது தமிழ் தெரிந்த பெண்மணி ஒருவர் தனது கணவர் பரிபூரண நலனோடு இருக்கனும், அவர் செய்யும் தொழில் சிறக்கனுமென்று சொல்வது அவள் காதில் விழும்போது, தாமரையின் மூடியிருந்த கண்களுக்குள் கதிர் வந்து போனான்.
காலையிலிருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்தது, தனக்கு விருப்பமில்லாமல் தாலி கட்டியவனுக்காக தான் என்பது, அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
என்னதான் படித்த பெண்ணாகவும், வழக்கமான பெண்களை போல தாலி சென்டிமென்டில் அடங்கி போகமாட்டேனென்று வி. வி. கிட்ட சொன்னாலும், அவளுக்குள் இருந்த நம் பாராம்பர்ய கலாச்சார உணர்வு விழிப்போடு இருப்பதே உண்மை.
கதிர் மேல் கோவமாக இருந்தாலும், அவனுடனான அந்த முகம் தெரியாத சந்திப்புகளை, நினைக்கும் போதெல்லாம் அவளுக்குள் ஓர் சிலிர்ப்பு வருவதை அவளால் தடுக்க முடியவில்லை.
நேற்று விரதம் பற்றி பூரணி சொல்லும் போது நமக்கு எதுக்கென்று இருந்தவள், காலை எழும்போது, கதிருக்காய் விரதமிருக்க மனம் சொல்லியது.
மனதில் குழப்பம் வரும் போதெல்லாம்,கண்ணை மூடி கடவுளிடம் வேண்டுவதை போல, விரதம் இருக்கலாமானு கடவுளிடம் வேண்ட,அவள் மனம் அமைதியாக இருப்பதை அவளால் உணர முடிந்தது.
பிறகே அந்த விஷயத்தில் இறங்கினாள்.
அதையெல்லாம் நினைத்து சத்தமின்றி அழுதவள், அடேய் உன்னை புருஷனா ஏத்துக்கவும் முடியலை, வேண்டானு விலக்கவும் முடியலை, எதுக்குடா என் வாழ்க்கையில் வந்தாயென்று கதறினாள்.
சீமக்கரை...
சிந்து என்று திலகா கதவை திறந்து இறங்க,அவரின் சத்தம் கேட்டு மற்றவர்களும் சிந்துவின் அருகில் வந்தனர்.
தனது அம்மாவின் தலையை தூக்கி மடியில் வைத்தவன், அம்மா அம்மா என்று தட்டி எழுப்ப, கண்ணா இந்த தண்ணியை முகத்தில் தெளியென்று திலகா கொடுக்க, அதை வாங்கி சிந்துவின் முகத்தில் தெளித்தான்.
கண்ணை விழித்து, பின் பதறி எழுந்தவர், தனது அப்பாவிடம் சென்று கையை கூப்ப,அவரோ அங்கிருந்து வீட்டினுள்ளே சென்று விட்டார்.
தோட்டத்தில் கடலை உடைத்துக்கொண்டிருந்ததால் வாசலில் நடக்கும் விஷயம், வீட்டு பெண்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
அம்மாடி சிந்துனு கூப்பிட்ட வெற்றிவேல் வாங்க உள்ளே போகலாமென்றார்.
அடேய் வந்தவங்களை வாங்கனு கூப்பிடாமல், இப்படி புள்ளையாரு போல நாம நிக்கிறோமென்ற வேலுவோ வாங்க வாங்கனு வீட்டிற்குள் அழைத்தான்.
அப்பொழுது,வாசலுக்கு ஓடி வந்த வள்ளி அப்பாயி, நான் பெத்த மவளே வந்துட்டியாடினு நெஞ்சில் அடித்துக்கொண்டு கதற, அதைக்கண்ட சிந்துவோ அம்மா என்று ஓடிப்போய் வள்ளி அப்பாயின் காலில் விழுந்து கதறி அழுதார்.
சீதாவும், ராதாவும் வாசலுக்கு வந்து அங்கிருந்தவர்களை உள்ளே அழைத்துப்போய் ஷோஃபாவில் உட்கார சொல்லி, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர்.
வள்ளி அப்பாயியும், சிந்துவும் வாசலிலே அழுவது தெரிந்து, பிரகாசம் தாத்தா வெளியே போனவர், வள்ளி உம் மவளை உள்ள கூப்பிட்டு போ என்றார்.
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த பார்வதி, அக்கா என்க, பாரு என்று எழுந்து போய் தங்கையை கட்டிக்கொண்டு சிந்து அழ, பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வந்தது.
அவர்களிடம் வந்த சீதா, ரெண்டு பேரும் உள்ளே வாங்கண்ணி என்கும் போது வெளியே சென்றிருந்த பெருமாளும் வந்து விட்டார்.
டவுனுக்கு போயிருந்த முத்துக்கும், செல்வத்திற்கும் ஃபோனில் விஷயத்தை சொல்ல, அவர்களும் அதிர்ந்து போய் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு, அவ்வளவு அமைதியாக வீடு இருந்தது.
பள்ளிக்கூடம் சென்றிருந்த நிலவனும், செல்வியும் வீட்டிற்கு வந்தவர்கள், அங்கிருப்பவர்கள் யாரென்று தெரியாததால், அமைதியாக அறைக்குள் சென்று அடைந்து கொண்டனர்.
இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தமென்று வெற்றிவேல் பேச ஆரம்பித்தார்.
அங்கிருப்பவர்களை பார்த்தவர் அனைவருக்கும் வணக்கம், நான் வெற்றிவேல். அவங்க என்னோட மனைவி திலகா.இது என் தங்கச்சி சிந்து, அது என் மருமவன் நவீன். நாங்க அசாமிலிருந்து வரோம்.உங்க எல்லாருக்கும் கோவமிருக்கும், இல்லையென்று சொல்ல முடியாது.
இத்தனை வருஷத்திற்கு பிறகு இன்றைக்கு தான் இங்க வரனுமென்று கடவுள் எழுதி வைத்திருக்கிறார் போலனு அவர் பேசும் போது, எஸ்கியூஸ்மி சாரென்று அவருடைய எஸ்கார்ட் வர, திரும்பி பார்த்தவர், என்வென்று கேட்க,தமிழ்நாடு சி. எம். ஆபீஸ்ல இருந்து கால் வந்திருக்கென்றார்.
ஓ என்றவர், கொடுங்க என்று வாங்கியவர், வணக்கம் நான் அமைச்சர் வெற்றிவேல் பேசுறேன்..
என்னாஆஆஆ அமைச்சராஆஆஆஆ என்று கதிர் வீட்டினர் அதிர்ந்தனர்.
சார்.. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை. நான் என்னோட குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயமாக வரும் போது, அரசாங்கத்திடம் எந்த பாதுகாப்பும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.பொது மக்களுக்கு உங்க பாதுகாப்பை கொடுங்கள்.எனக்கு அரசியல் வேறு, குடும்பம் வேறு. அதை என்றும் நான் ஒன்றாய் பார்ப்பது இல்லை.
அங்கு அசாமிலே நான் சொல்லியதை சி. எம். கேட்காமல் என்னோட பாதுகாப்புக்கு இரண்டு எஸ்கார்ட் அனுப்பியிருக்காங்க.அது போதாதுனு இங்க ஸ்டேஷனில் இருந்தும் எஸ். ஐ, இரண்டு கான்ஸ்டபிளை விட்டு போயிருக்காங்க.அதுவே அதிகம்னு நினைக்கிறேன்.
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க சாரென்று கட் பண்ணியவர் ஃபோனை கொடுக்க, எஸ்கார்ட் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.
எல்லாரையும் பார்த்து தப்பா எடுத்துக்க வேண்டாம், திடீர்னு தவிர்க முடியாத கால் வந்து விட்டது என்கவும், சார் நீங்க அமைச்சரா என்றனர்.
ஹாஹாஹா என்று சிரித்த வெற்றிவேல், சிந்துவை என் கூட பொறந்தவளாக நான் ஏற்றுக்கொண்டு முப்பத்தைந்து வருஷமாகிட்டு.அதனால் அனேகமா உங்களுக்கு நான் அண்ணனாக தான் இருப்பேனென்றார்.
அவரின் பேச்சும், பழகும் எளிமையையும் பார்த்தவர்கள் என்னா மனுஷனென்று உள்ளுக்குள்ளே பாராட்டினர்.
சிந்து என்று வெற்றிவேல் கூப்பிட, கீழே குனிந்து அழுது கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்க்க, என்ன நடந்துச்சினு அவங்களுக்கு சொல்லுமா.
அவங்களுக்கும் உண்மை தெரியனும் மா.இன்னும் எத்தனை வருஷம், மனசுக்குள்ளே நீ அழுது கொண்டிருப்ப?.
இனி மறைக்க என்ன இருக்கென்ற உண்மையை சிந்துவின் மனசாட்சி உணர்த்த,வீட்டினர் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார்.
அவர் என்ன சொல்லப்போறாரோயென்ற கேள்வி, அனைவரின் முகத்திலும் தெரிந்தது
நடப்பது நடக்கட்டுமென தனது மனதை தேற்றிக்கொண்டு,என்ன நடந்தது என்பதை சிந்துவும் சொல்ல தொடங்கினார்.
திலகாவும் என் கூட ஒன்னா படித்தவள் தான்.ஆனால் பாரு, கவிதாவுக்கு இது தெரியாது.திலகா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் பரதநாட்டியம் சொல்லி தருகிறார்களென்று தெரிஞ்சிது.
எனக்கும் அதை கத்துக்க ஆசை.உங்க கிட்ட சொன்னால் விட மாட்டீங்கனு, ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு பொய் சொல்லி விட்டு, நான் மட்டும் காலையிலே சீக்கிரம் போவேன்.
அங்க போய்ட்டு வரும் போது தான் வீர் கூட பழக்கமாச்சு.இது திலகாவுக்கும் தெரியாது.வீட்டை நினைச்சி பயம் இருந்தாலும், வீர் பேச்சில் எனக்கு தைரியம் வந்ததுச்சு.
அப்பொழுது தான் பேச்சு போட்டியில் கலந்துக்க மதுரைக்கு போயிருந்தேன்.
நான் பேசி முடித்து கீழே வந்து தண்ணி குடிக்க போனேன், அங்கு வீரோட கூட இருக்கவன் வந்து சிந்துனு கூப்பிட்டான்.யார்னு நான் திரும்பி பார்த்து சொல்லுங்கணானு கேட்க, வீர் சாகப்போறேனு சொல்லுறான்மா.
எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டுறான். உனக்காக தான் என்னையும் கூப்பிட்டுக்கிட்டு மதுரைக்கு வந்துருக்கான்னு சொன்னான்.
அவன் சொன்னதை கேட்டு நானும் பதர, தங்கச்சி ஸ்கூல் டிரஸோட பேசிக்கிட்டு இருப்பதை, யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.இதை போட்டு கிட்டு வா என்று,என் கையில் ஒரு கவரை கொடுக்க,அதை வாங்கி பார்த்தேன்.