Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சதாரா!
தாமரையிடமிருந்து ஃபைலை வாங்கிய மாறன், சில நொடிகளில் படித்து விட்டு, பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தான்.
அவர்களும் படித்து முடித்த பின் கேள்விக்கணையை தொடுக்க, அணைத்து கேள்விக்கும் அசராமலும் சாதூர்யமாக பதில் சொல்லிய விதத்தை பார்த்து மாறனுக்கு வியப்பாக தான் இருந்தது.
ஐவரின் கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை சொன்னாள்.
ஓகே தாமரை,நம்ப டெக்ஸ்டைல்ஸ் ஸ்பெஷலே பிகரை தத்ரூபமாக பிரதிபலிக்குறது தான்.நம்ப பிராண்ட் சேரிஸ் எல்லாம் பார்த்தீங்கள் என்றால் உங்களுக்கு அது புரியும்.
இப்போ நாங்கள் ஒரு சிச்சிவேஷனை சொல்லுறோம்.அதுக்கு டிராயிங் பண்ணுங்க என்றார் ஹச். ஆர் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ்.
கண்டிப்பாக சார், என்ன கான்செப்ட் சொல்லுங்க என்று ஆங்கிலத்தில் தாமரையும் கேட்டாள்.ஓகே என்றவர், மாறனை பார்க்க, நீங்களே சொல்லுங்க அங்கிள் என்றான்.
எதிர்பாராத சூழலில் ஒரு பொண்ணு கழுத்தில் ஒருவன் தாலி கட்டுறான், அதை பார்த்து அவள் அதிர்ச்சியாகுறாள். இது தான் கான்செப்ட் என்கவும் அவர் சொன்னதைக்கேட்டவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
அடக்கொடுமையே, என் வாழ்க்கையையே நான் வரையனுமா?என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவர்கள், வாட் ஹேப்பன் தாமரை? என்க, சாரி சார் என்றவள், கொஞ்சம் டைம் குடுங்க தாராளமா வரைஞ்சி காட்டுறேன் என்கவும், ஓகே.அங்கு நோட் பேட்,பென்சில் இருக்கு ஆல் தி பெஸ்ட்.
தேங்க்யூ சார் என்றவள், அவர் சொன்ன இடத்திற்கு எழுந்து போய், அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவள், கண்ணை மூடி தன் இஷ்ட தெய்வத்தை வணங்கியவள், நோட் பேடை எடுத்து பென்சிலால் வரையத்தொடங்கினாள்.
பதினைந்து நிமிடம் கடந்து சென்றது.
ஒரு முறை வரைந்த ஓவியத்தை செக் பண்ணியவள், அதை எடுத்து போய் அங்கிருந்தவர்களின் முன்பு நீட்டினாள்.
ஹச். ஆர், அதை வாங்கி பார்த்து எக்ஸலண்ட் என்று பாராட்டி விட்டு, மற்றவர்களிடமும் காட்ட, மாறனை தவிர மற்றவர்கள் அவள் வரைந்த ஓவியத்தை வெகுவாக பாராட்டினர்.
அந்த ஓவியத்தில் சீமக்கரையில் கதிர் தனது கழுத்தில் தாலி கட்டியதையும், ஊர் மக்கள் அதிர்ந்து பார்த்ததையும் அப்படியே வரைந்திருந்தாள்.
ஓகே தாமரை, வெளியே வெய்ட் பண்ணுங்களென்று அவளை அனுப்பி வைத்து விட்டு, மீதம் இருந்தவர்களை இன்டர்வியூ பண்ணினர்.
மதியம் உணவு வேளையும் வந்தது.
அங்கிருந்தவர்களை நான்காவது தளத்தில் இருக்கும் கேன்டீனில் சாப்பிட்டு வருமாறு,ஆபிஸ் பாய் சொல்லிச்சென்றார்.
எல்லாரும் எழுந்து கேன்டீனுக்கு செல்ல, தாமரை மட்டும் போகாமல், கையில் எடுத்து வந்திருந்த ஓவிய நோட்டில் வரைந்து கொண்டிருந்தாள்.இதையெல்லாம் உள்ளே இருந்த சிசிடீவியின் மூலயமாய் மாறன் பார்த்துக்கொண்டிருந்தான்.
லஞ்சுக்கு போகாமல் இவள் என்ன அப்படி வரைந்து கொண்டிருக்கிறாள்? என்று முணுமுணுத்தவன், கேட்டீனுக்கு கால் பண்ணி, அவளுக்கு மாதுளை ஜூஸும், வெஜ் சான்ட்விச்சும் சொல்லி விட்டு, தனக்கு தேவையானதை ஆர்டர் செய்தான்.
சிறிது நிமிடம் சென்று, மேடம் என்ற குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்த தாமரையின் முன்பு, கையில் இருந்த டிரேவை நீட்டினார் சர்வர் ஒருவர்.
நான் எதுவும் ஆர்டர் பண்ணவில்லையே? என்று அவள் ஆங்கிலத்தில் சொல்ல,மாறன் தம்பி தான் கொடுக்க சொன்னாங்கம்மா என்று அவர் தமிழில் பதில் சொன்னார்.
நீங்க தமிழானு ஆச்சர்யமாக கேட்டாள்.
நம்ப ஊரு கோயம்புத்தூரு தானுங் அம்மணி.
அப்படியாணா என்று சிரித்தவள், நான் நீலகிரி என்றாள்.
அப்படிங்களா அம்மிணி சந்தோஷம் என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
சரி அம்மணி இதை குடிச்சிட்டு, அப்படியே சான்ட்விட்சையும் சாப்புடு, பொறவு நேரம் கிடைக்கும் போது பேசலாம் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து சர்வர் சென்று விட்டார்.
சர்வரிடம் தாமரை சிரித்து பேசிக் கொண்டிருப்பதையும் சிசிடீவியின் மூலயமாய் பார்த்துக் கொண்டிருந்தவன், சிரித்தால் இவள் முகம் நல்லா தான் இருக்கு.
அப்புறம் எதுக்கு இஞ்சி தின்ன குரங்கு போலயே மூஞ்சி வைத்திருக்கிறாள்? என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டான்.
பின்னர் தனக்கு ஆர்டர் பண்ணிய உணவு வந்ததும், மாறன் சாப்பிட்டு முடிக்கவும் மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.
தாமரையும் சர்வர் கொடுத்துச்சென்றதை சாப்பிட்டு முடித்தவள், அதை கொண்டு போய் அங்கிருந்த டஸ்ட்பின்னில் போட்டு விட்டு, அவள் இருக்கைக்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்.
அதைப்போல் வெயிட் பண்ண சொல்லியிருந்த கேன்டிடேஸும் அங்கு வந்து சேர்ந்தனர்.பின்னர் ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கான வேலை நியமன லட்டரை கொடுத்தனர்.
தாமரையும் உள்ளேப்போக, அவளை டிசைனிங் பிரிவிற்கு செலக்ட் பண்ணியிருந்தனர்.
மாதச் சம்பளம் மற்றும் வேலையின் டீட்டைல்ஸெல்லாம் இந்த லட்டரில் இருக்கின்றது படித்து பாருங்க என்றார் ஹச். ஆர்.
எஸ் சார் என்றவள், கடிதத்தை படித்து முடிக்க,ஆல் த பெஸ்ட் தாமரை. நாளைக்கு வந்து ஜாயின்ட் பண்ணிக்குங்க.
நிச்சயமாக என்னோட பெஸ்டை கொடுப்பேன் என்றவள்,தேங்க்யூனு சொல்லிக் கொண்டு, கதவை திறந்து வெளியே வந்தாள்.
வீட்டுக்கு எப்படி போக?, நமக்கு வழி வேறு தெரியாதேனு யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஆபீஸ் அட்டெண்டர் அவளருகில் வந்து,மேடம், சார் உங்களை அஞ்சாவது மாடியில் இருக்கும், டிசைனிங் ஃப்ளோரை சுற்றி பார்க்க சொன்னாங்க என்றார்.
ஓகே என்றவள், அங்கிருந்து லிப்டில் ஏறி அஞ்சாவது மாடிக்கு செல்ல,டிசைனிங் செக்க்ஷன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்த ரிசப்ஷனுக்கு சென்றவள் உள்ளே போக கேட்க வர, ஆர் யு தாமரை என்று கேட்க?, எஸ், ஆம் தாமரை என்றாள்.
ஓகே மேம் என்றவர்,உள்ளே போங்க என்க, தேங்க்யூ என்று அங்கிருந்த கதவை திறந்து உள்ளேப்போனாள்.
ஏற்கெனவே அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது.அவரவர் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது தாமரை என்ற குரல் கேட்டு வலது பக்கம் திரும்பி பார்க்க, அங்கே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி நின்று கொண்டிருந்தார்.
அந்த பெண்மணியின் அருகில் சென்றவள் மரியாதை நிமித்தமாக விஷ் பண்ண, சிரிப்போடு ஏற்றுக்கொண்டவர், அவளை அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் இன்னொரு அறைக்குள் சென்றவர், கபோர்டில் இருக்கும் ஃபைல்ஸை காட்டி இதையெல்லாம் படித்து பாருங்கள்.
உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.
தாமரையும் அங்கிருந்த ஃபைலை எடுக்காமல், டிசைனிங் பற்றிய புக்ஸ் இருந்த ரேக்கில் இருந்து ஒரு புக்கை எடுத்தவள்,உள்ளே இருந்த சேரில் உட்கார்ந்து படிக்க ஆரம்பிக்க, அதற்குள் மூழ்கினாள்.
கிளம்பலாமா என்ற கணீர் குரலில்,திடுக்கிட்டு எழும் போது இவ்வளவு நேரம் அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகம், கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
நீலகிரி....
மிலன் ஸ்கூலுக்கு கிளம்பிக்கொண்டிருக்க,அவனுக்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்து மூடியவர், சின்னவனே எம்புட்டு நேரம்ல தலைய சீவுவ.வந்து நாலு சோத்தை வயிற்றில போட்டுக்க சாமி என்றார் மூக்கையன்.
சீவிய தலையை கண்ணாடியில் பார்த்து,சீப்பை எட்டி பனை ஓலை வேய்ந்திருக்கும் கூரையில் சொருவியவன், கையை கழுவி விட்டு திரும்பும் போது, மருது வருவதை பார்த்தான்.
அப்பாஆஆஆ, அண்ணன் வரான்ப்பா என்று குரல் கொடுக்க, மிலனின் வார்த்தையைக்கேட்ட மூக்கையன் வெளியே வந்து பார்க்க, பெரிய மகன் வருவது தெரிந்தது.
எலே நேரமாவுது கிளம்புடானு சின்ன மகனை சத்தம் போட்டவர்,வாப்பா என்றார்.
ம்ம் என்றபடியே உள்ளே வந்தவன், மூலையில் இருந்த பனை ஓலைப்பாயை எடுத்து தரையில் விரித்தவன், எரவானத்தில் இருந்த தலகாணியை எடுத்துப்போட்டு, அதன் மேல் படுக்க,எய்யா ஒரு வாய் சாப்பிட்டு படுப்பா.
வேண்டாம்பா, இப்போ தான் அம்மா டீ குடுத்துச்சி. நைட் ஷிப்ட் பார்த்துட்டு உடனே கிளம்பிட்டேன்.கொஞ்ச நேரம் படுக்குறேன்பானு கண்ணை மூட,எட்டி ஃபேன் சுவிட்சை ஆன் பண்ணியவர், சின்ன மகன் சாப்பிட்ட தட்டை வெளியே எடுத்து போய் கழுவி விட்டு, அங்கிருந்த மரப்பரணில் மேல் கவிழ்த்து வைத்தார்.
பின்னர் மர நிழலில் கட்டியிருந்த ஆடுகளுக்கு புல்லு கட்டை எடுத்து போட்டு விட்டு, இன்னொரு குண்டானில் வடி தண்ணியை வைக்க,ஆடுகளும் அந்த நீரை குடித்து, தனது தாகத்தை தீர்த்துக்கொண்டது.உள்ளே வந்து மகனை பார்க்க,மருதுவும் தூங்கியிருந்தான்.
கதவை இழுத்து சாத்தியவர், மயிலா பாதியில் விட்டுருந்த மூங்கில் கூடையை பிண்ணிக்கொண்டிருக்க, அய்யோஓஓ என் குடி மூழ்கிட்டே என்ற குரல் தூரத்தில் கேட்டது.
என்ன நம்ப தங்கச்சி குரல் போல இருக்கேனு வழியை பார்க்க, மூக்கையனின் தங்கை தான் வந்து கொண்டிருந்தார்.
சத்தம் போட்டுக்கொண்டே வந்தவர் அண்ணனை பார்த்ததும், என் தலையில மண்ணள்ளி போட உனக்கு எப்படிணா மனசு வந்துச்சி?.பொறந்ததுல இருந்து எம் மவ செல்லத்துக்கிட்ட மருது தான் உன் புருசன்னு சொல்லி வளர்த்தேனே?.
அதையெல்லாம் மண்ணா போய்ட்டே.
என் ஆத்தா அப்பன் உசுரோட இருந்திருந்தால் இப்படி என் மவ தலையெழுத்து அந்தராசியில நிக்குமானு? ஒப்பாரி வைத்தார்.
தங்கையின் அழுகையை கண்டவர்,எம்மா முருகாயி, அழாதத்தா. கடவுள் போட்ட முடிச்சி நாம என்ன செய்ய?.ஆமாம் உனக்கு எப்படி விசயம் தெரியும்?.
பக்கத்து மலையில் தான் முருகாயி கணவன் ஊர்.இங்கிருந்து போனவர்கள் யாராவது சொல்லி இருந்தால் தான் விஷயம் தெரிந்திருக்குமென்று மூக்கையனும் புரிந்து கொண்டார்.
அண்ணனின் கேள்விக்கு காத்துல வந்து சேர்ந்தது.நடந்தது ஆமாவா, இல்லையா?
இங்க பாரு முருகாயி, எப்ப வேணா வா எத்தன நாள் வேண்டுமானாலும் தங்கு. உனக்கு என்ன வேணுமோ கேளு,அண்ணன் உசுரோட இருக்கிற வரைக்கும் உனக்கு செய்வேன்.எனக்கு அப்புறம் என் மகனுங்க செய்வானுங்க.ஆனால் என் புள்ளைங்க கல்யாண விஷயத்துல மட்டும் தலையிடாதே.
நீயும் நானும் ஆசைப்பட்டால் மட்டும் போதாது.அவன் தலையில மலையம்மா என்ன எழுதி வச்சிருக்காளோ அதுப்படித்தான் நடக்கும்.மருமகளா பவி தலைல தான் எழுதியிருக்கு.அப்படியே நடந்துடிச்சி.உன் மகளுக்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்து நானே முடிச்சு வைக்கிறேன்.
மாமன்காரனா என்ன செய்யணுமோ அதை உன் வீடு தேடி வந்து செய்வேன். இதோட நிறுத்திக்கிறது தான் மரியாதை என்றார்.
அண்ணனின் கோப குணம் தெரிந்து, இனியும் இதைப்பற்றி பேசி ஒன்னும் புண்ணியமில்லைனு முருகாயிக்கு புரிந்துவிட்டது.
அண்ணா,என் கூடப்பிறந்தவன் நீ செய்யாம வேற யார் செய்யப் போறானு அப்படி பேச்சை மாத்தியவர், எங்க மைனிய காணும் என்க, பவி வீட்டுக்கு போயிருக்கிறாள்.உள்ள சோறு இருக்கு போட்டு சாப்பிடு, போத்தா என்றார்.
தாமரையிடமிருந்து ஃபைலை வாங்கிய மாறன், சில நொடிகளில் படித்து விட்டு, பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தான்.
அவர்களும் படித்து முடித்த பின் கேள்விக்கணையை தொடுக்க, அணைத்து கேள்விக்கும் அசராமலும் சாதூர்யமாக பதில் சொல்லிய விதத்தை பார்த்து மாறனுக்கு வியப்பாக தான் இருந்தது.
ஐவரின் கேள்விகளுக்கும் திருப்திகரமான பதிலை சொன்னாள்.
ஓகே தாமரை,நம்ப டெக்ஸ்டைல்ஸ் ஸ்பெஷலே பிகரை தத்ரூபமாக பிரதிபலிக்குறது தான்.நம்ப பிராண்ட் சேரிஸ் எல்லாம் பார்த்தீங்கள் என்றால் உங்களுக்கு அது புரியும்.
இப்போ நாங்கள் ஒரு சிச்சிவேஷனை சொல்லுறோம்.அதுக்கு டிராயிங் பண்ணுங்க என்றார் ஹச். ஆர் டிபார்ட்மெண்ட் இன்சார்ஜ்.
கண்டிப்பாக சார், என்ன கான்செப்ட் சொல்லுங்க என்று ஆங்கிலத்தில் தாமரையும் கேட்டாள்.ஓகே என்றவர், மாறனை பார்க்க, நீங்களே சொல்லுங்க அங்கிள் என்றான்.
எதிர்பாராத சூழலில் ஒரு பொண்ணு கழுத்தில் ஒருவன் தாலி கட்டுறான், அதை பார்த்து அவள் அதிர்ச்சியாகுறாள். இது தான் கான்செப்ட் என்கவும் அவர் சொன்னதைக்கேட்டவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.
அடக்கொடுமையே, என் வாழ்க்கையையே நான் வரையனுமா?என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவர்கள், வாட் ஹேப்பன் தாமரை? என்க, சாரி சார் என்றவள், கொஞ்சம் டைம் குடுங்க தாராளமா வரைஞ்சி காட்டுறேன் என்கவும், ஓகே.அங்கு நோட் பேட்,பென்சில் இருக்கு ஆல் தி பெஸ்ட்.
தேங்க்யூ சார் என்றவள், அவர் சொன்ன இடத்திற்கு எழுந்து போய், அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவள், கண்ணை மூடி தன் இஷ்ட தெய்வத்தை வணங்கியவள், நோட் பேடை எடுத்து பென்சிலால் வரையத்தொடங்கினாள்.
பதினைந்து நிமிடம் கடந்து சென்றது.
ஒரு முறை வரைந்த ஓவியத்தை செக் பண்ணியவள், அதை எடுத்து போய் அங்கிருந்தவர்களின் முன்பு நீட்டினாள்.
ஹச். ஆர், அதை வாங்கி பார்த்து எக்ஸலண்ட் என்று பாராட்டி விட்டு, மற்றவர்களிடமும் காட்ட, மாறனை தவிர மற்றவர்கள் அவள் வரைந்த ஓவியத்தை வெகுவாக பாராட்டினர்.
அந்த ஓவியத்தில் சீமக்கரையில் கதிர் தனது கழுத்தில் தாலி கட்டியதையும், ஊர் மக்கள் அதிர்ந்து பார்த்ததையும் அப்படியே வரைந்திருந்தாள்.
ஓகே தாமரை, வெளியே வெய்ட் பண்ணுங்களென்று அவளை அனுப்பி வைத்து விட்டு, மீதம் இருந்தவர்களை இன்டர்வியூ பண்ணினர்.
மதியம் உணவு வேளையும் வந்தது.
அங்கிருந்தவர்களை நான்காவது தளத்தில் இருக்கும் கேன்டீனில் சாப்பிட்டு வருமாறு,ஆபிஸ் பாய் சொல்லிச்சென்றார்.
எல்லாரும் எழுந்து கேன்டீனுக்கு செல்ல, தாமரை மட்டும் போகாமல், கையில் எடுத்து வந்திருந்த ஓவிய நோட்டில் வரைந்து கொண்டிருந்தாள்.இதையெல்லாம் உள்ளே இருந்த சிசிடீவியின் மூலயமாய் மாறன் பார்த்துக்கொண்டிருந்தான்.
லஞ்சுக்கு போகாமல் இவள் என்ன அப்படி வரைந்து கொண்டிருக்கிறாள்? என்று முணுமுணுத்தவன், கேட்டீனுக்கு கால் பண்ணி, அவளுக்கு மாதுளை ஜூஸும், வெஜ் சான்ட்விச்சும் சொல்லி விட்டு, தனக்கு தேவையானதை ஆர்டர் செய்தான்.
சிறிது நிமிடம் சென்று, மேடம் என்ற குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்த தாமரையின் முன்பு, கையில் இருந்த டிரேவை நீட்டினார் சர்வர் ஒருவர்.
நான் எதுவும் ஆர்டர் பண்ணவில்லையே? என்று அவள் ஆங்கிலத்தில் சொல்ல,மாறன் தம்பி தான் கொடுக்க சொன்னாங்கம்மா என்று அவர் தமிழில் பதில் சொன்னார்.
நீங்க தமிழானு ஆச்சர்யமாக கேட்டாள்.
நம்ப ஊரு கோயம்புத்தூரு தானுங் அம்மணி.
அப்படியாணா என்று சிரித்தவள், நான் நீலகிரி என்றாள்.
அப்படிங்களா அம்மிணி சந்தோஷம் என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
சரி அம்மணி இதை குடிச்சிட்டு, அப்படியே சான்ட்விட்சையும் சாப்புடு, பொறவு நேரம் கிடைக்கும் போது பேசலாம் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து சர்வர் சென்று விட்டார்.
சர்வரிடம் தாமரை சிரித்து பேசிக் கொண்டிருப்பதையும் சிசிடீவியின் மூலயமாய் பார்த்துக் கொண்டிருந்தவன், சிரித்தால் இவள் முகம் நல்லா தான் இருக்கு.
அப்புறம் எதுக்கு இஞ்சி தின்ன குரங்கு போலயே மூஞ்சி வைத்திருக்கிறாள்? என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டான்.
பின்னர் தனக்கு ஆர்டர் பண்ணிய உணவு வந்ததும், மாறன் சாப்பிட்டு முடிக்கவும் மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.
தாமரையும் சர்வர் கொடுத்துச்சென்றதை சாப்பிட்டு முடித்தவள், அதை கொண்டு போய் அங்கிருந்த டஸ்ட்பின்னில் போட்டு விட்டு, அவள் இருக்கைக்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்.
அதைப்போல் வெயிட் பண்ண சொல்லியிருந்த கேன்டிடேஸும் அங்கு வந்து சேர்ந்தனர்.பின்னர் ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கான வேலை நியமன லட்டரை கொடுத்தனர்.
தாமரையும் உள்ளேப்போக, அவளை டிசைனிங் பிரிவிற்கு செலக்ட் பண்ணியிருந்தனர்.
மாதச் சம்பளம் மற்றும் வேலையின் டீட்டைல்ஸெல்லாம் இந்த லட்டரில் இருக்கின்றது படித்து பாருங்க என்றார் ஹச். ஆர்.
எஸ் சார் என்றவள், கடிதத்தை படித்து முடிக்க,ஆல் த பெஸ்ட் தாமரை. நாளைக்கு வந்து ஜாயின்ட் பண்ணிக்குங்க.
நிச்சயமாக என்னோட பெஸ்டை கொடுப்பேன் என்றவள்,தேங்க்யூனு சொல்லிக் கொண்டு, கதவை திறந்து வெளியே வந்தாள்.
வீட்டுக்கு எப்படி போக?, நமக்கு வழி வேறு தெரியாதேனு யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஆபீஸ் அட்டெண்டர் அவளருகில் வந்து,மேடம், சார் உங்களை அஞ்சாவது மாடியில் இருக்கும், டிசைனிங் ஃப்ளோரை சுற்றி பார்க்க சொன்னாங்க என்றார்.
ஓகே என்றவள், அங்கிருந்து லிப்டில் ஏறி அஞ்சாவது மாடிக்கு செல்ல,டிசைனிங் செக்க்ஷன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்த ரிசப்ஷனுக்கு சென்றவள் உள்ளே போக கேட்க வர, ஆர் யு தாமரை என்று கேட்க?, எஸ், ஆம் தாமரை என்றாள்.
ஓகே மேம் என்றவர்,உள்ளே போங்க என்க, தேங்க்யூ என்று அங்கிருந்த கதவை திறந்து உள்ளேப்போனாள்.
ஏற்கெனவே அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது.அவரவர் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது தாமரை என்ற குரல் கேட்டு வலது பக்கம் திரும்பி பார்க்க, அங்கே 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி நின்று கொண்டிருந்தார்.
அந்த பெண்மணியின் அருகில் சென்றவள் மரியாதை நிமித்தமாக விஷ் பண்ண, சிரிப்போடு ஏற்றுக்கொண்டவர், அவளை அழைத்துக்கொண்டு அங்கிருக்கும் இன்னொரு அறைக்குள் சென்றவர், கபோர்டில் இருக்கும் ஃபைல்ஸை காட்டி இதையெல்லாம் படித்து பாருங்கள்.
உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் என்று சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.
தாமரையும் அங்கிருந்த ஃபைலை எடுக்காமல், டிசைனிங் பற்றிய புக்ஸ் இருந்த ரேக்கில் இருந்து ஒரு புக்கை எடுத்தவள்,உள்ளே இருந்த சேரில் உட்கார்ந்து படிக்க ஆரம்பிக்க, அதற்குள் மூழ்கினாள்.
கிளம்பலாமா என்ற கணீர் குரலில்,திடுக்கிட்டு எழும் போது இவ்வளவு நேரம் அவள் படித்துக்கொண்டிருந்த புத்தகம், கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
நீலகிரி....
மிலன் ஸ்கூலுக்கு கிளம்பிக்கொண்டிருக்க,அவனுக்கான சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்து மூடியவர், சின்னவனே எம்புட்டு நேரம்ல தலைய சீவுவ.வந்து நாலு சோத்தை வயிற்றில போட்டுக்க சாமி என்றார் மூக்கையன்.
சீவிய தலையை கண்ணாடியில் பார்த்து,சீப்பை எட்டி பனை ஓலை வேய்ந்திருக்கும் கூரையில் சொருவியவன், கையை கழுவி விட்டு திரும்பும் போது, மருது வருவதை பார்த்தான்.
அப்பாஆஆஆ, அண்ணன் வரான்ப்பா என்று குரல் கொடுக்க, மிலனின் வார்த்தையைக்கேட்ட மூக்கையன் வெளியே வந்து பார்க்க, பெரிய மகன் வருவது தெரிந்தது.
எலே நேரமாவுது கிளம்புடானு சின்ன மகனை சத்தம் போட்டவர்,வாப்பா என்றார்.
ம்ம் என்றபடியே உள்ளே வந்தவன், மூலையில் இருந்த பனை ஓலைப்பாயை எடுத்து தரையில் விரித்தவன், எரவானத்தில் இருந்த தலகாணியை எடுத்துப்போட்டு, அதன் மேல் படுக்க,எய்யா ஒரு வாய் சாப்பிட்டு படுப்பா.
வேண்டாம்பா, இப்போ தான் அம்மா டீ குடுத்துச்சி. நைட் ஷிப்ட் பார்த்துட்டு உடனே கிளம்பிட்டேன்.கொஞ்ச நேரம் படுக்குறேன்பானு கண்ணை மூட,எட்டி ஃபேன் சுவிட்சை ஆன் பண்ணியவர், சின்ன மகன் சாப்பிட்ட தட்டை வெளியே எடுத்து போய் கழுவி விட்டு, அங்கிருந்த மரப்பரணில் மேல் கவிழ்த்து வைத்தார்.
பின்னர் மர நிழலில் கட்டியிருந்த ஆடுகளுக்கு புல்லு கட்டை எடுத்து போட்டு விட்டு, இன்னொரு குண்டானில் வடி தண்ணியை வைக்க,ஆடுகளும் அந்த நீரை குடித்து, தனது தாகத்தை தீர்த்துக்கொண்டது.உள்ளே வந்து மகனை பார்க்க,மருதுவும் தூங்கியிருந்தான்.
கதவை இழுத்து சாத்தியவர், மயிலா பாதியில் விட்டுருந்த மூங்கில் கூடையை பிண்ணிக்கொண்டிருக்க, அய்யோஓஓ என் குடி மூழ்கிட்டே என்ற குரல் தூரத்தில் கேட்டது.
என்ன நம்ப தங்கச்சி குரல் போல இருக்கேனு வழியை பார்க்க, மூக்கையனின் தங்கை தான் வந்து கொண்டிருந்தார்.
சத்தம் போட்டுக்கொண்டே வந்தவர் அண்ணனை பார்த்ததும், என் தலையில மண்ணள்ளி போட உனக்கு எப்படிணா மனசு வந்துச்சி?.பொறந்ததுல இருந்து எம் மவ செல்லத்துக்கிட்ட மருது தான் உன் புருசன்னு சொல்லி வளர்த்தேனே?.
அதையெல்லாம் மண்ணா போய்ட்டே.
என் ஆத்தா அப்பன் உசுரோட இருந்திருந்தால் இப்படி என் மவ தலையெழுத்து அந்தராசியில நிக்குமானு? ஒப்பாரி வைத்தார்.
தங்கையின் அழுகையை கண்டவர்,எம்மா முருகாயி, அழாதத்தா. கடவுள் போட்ட முடிச்சி நாம என்ன செய்ய?.ஆமாம் உனக்கு எப்படி விசயம் தெரியும்?.
பக்கத்து மலையில் தான் முருகாயி கணவன் ஊர்.இங்கிருந்து போனவர்கள் யாராவது சொல்லி இருந்தால் தான் விஷயம் தெரிந்திருக்குமென்று மூக்கையனும் புரிந்து கொண்டார்.
அண்ணனின் கேள்விக்கு காத்துல வந்து சேர்ந்தது.நடந்தது ஆமாவா, இல்லையா?
இங்க பாரு முருகாயி, எப்ப வேணா வா எத்தன நாள் வேண்டுமானாலும் தங்கு. உனக்கு என்ன வேணுமோ கேளு,அண்ணன் உசுரோட இருக்கிற வரைக்கும் உனக்கு செய்வேன்.எனக்கு அப்புறம் என் மகனுங்க செய்வானுங்க.ஆனால் என் புள்ளைங்க கல்யாண விஷயத்துல மட்டும் தலையிடாதே.
நீயும் நானும் ஆசைப்பட்டால் மட்டும் போதாது.அவன் தலையில மலையம்மா என்ன எழுதி வச்சிருக்காளோ அதுப்படித்தான் நடக்கும்.மருமகளா பவி தலைல தான் எழுதியிருக்கு.அப்படியே நடந்துடிச்சி.உன் மகளுக்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்து நானே முடிச்சு வைக்கிறேன்.
மாமன்காரனா என்ன செய்யணுமோ அதை உன் வீடு தேடி வந்து செய்வேன். இதோட நிறுத்திக்கிறது தான் மரியாதை என்றார்.
அண்ணனின் கோப குணம் தெரிந்து, இனியும் இதைப்பற்றி பேசி ஒன்னும் புண்ணியமில்லைனு முருகாயிக்கு புரிந்துவிட்டது.
அண்ணா,என் கூடப்பிறந்தவன் நீ செய்யாம வேற யார் செய்யப் போறானு அப்படி பேச்சை மாத்தியவர், எங்க மைனிய காணும் என்க, பவி வீட்டுக்கு போயிருக்கிறாள்.உள்ள சோறு இருக்கு போட்டு சாப்பிடு, போத்தா என்றார்.