• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
"சொல்லு... நீயெல்லாம் ஒரு தாயா?".

உன் மவன் அத்தனை பேருக்கு முன்னாடி கேட்ட கேள்விக்கு,நீ நல்ல மனுஷியா இருந்தால் என்ன பண்ணிருக்கனும்?.

"அன்றைக்கு, இந்த வாயால் எதையாவது கேட்டியா?".யார் வீட்டு எழவோனு தானே ஒப்பாரி வச்சிக்கிட்டு நின்ன?,இப்போ என்ன மகள், மண்ணாங்கட்டினு."உங்களையெல்லாம் பார்த்தால், எனக்கு கொலை வெறி வருது".

அதான்,உன் பேரன் பண்ணிய காரியத்தால என் மவளை வீட்ட விட்டு போக வச்சிட்டிங்களே, இன்னும் என்ன மீதி இருக்கென்று அழுது கொண்டே கவிதா கேட்டார்.

என்ன...,தாமரை வீட்டை விட்டு போய்ட்டாளானு கதிர் வீட்டினரும் அதிர்ந்தனர்

அப்பொழுது, அத்தை என வளவன் கூப்பிட,அவன் குரலைக்கேட்டு திரும்பியவர்,அய்யா வளவாஆஆஆ...
உன் அத்த மவ லட்டர் எழுதி வச்சிட்டு எங்கையோ போய்டாள் சாமி என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

என்னத்தை சொல்லுற?,என்ன நடந்துச்சினு சொல்லு?? என்றபடி கவிதாவிடம் வந்தவன்,முதல்ல அழாதே.
எங்கே போயிருக்க போகுது,வேதா அம்மாகிட்ட தான் போயிருக்கும் என்றவன்,சிவா... அடேய் சிவா...

எதுவும் சொல்லாமல் அங்கு வந்து நிற்பவனை பார்த்தவன் ஏன் இதையெல்லாம் சொல்ல மாட்டியாடா என்று முறைத்தவன்,சாதாரணமா ஃபோன் பண்ற போல,வேதாம்மாக்கு கால் பண்ணு.

வளவன் சொன்னதைக்கேட்டவன், சரி மாமானு ஃப்ரிஜ் மேல் இருந்த ஃபோனை எடுத்தவன், வேதாவின் நம்பருக்கு கால் பண்ண,சுவிட்ச் ஃஆப் என்ற கணினி குரல் கேட்டது.

மாமா ஃஆப்ல இருக்கு என்றவன், மருது அண்ணன் வீட்டுக்கு ஃபோன் பண்ணுறேன் என்றவாறு, மூக்கையன் நம்பருக்கு கால் பண்ணினான்.

நீலகிரி...

இனி மகன் வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ என்ற யோசனையோடே, அந்த மலையடிப்பாதையில் நடந்து கொண்டிருந்த மூக்கையன் செல்லிற்கு, கால் வரும் சத்தம் கேட்டது.

தனது பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்த பார்க்க, சிவா என்று வர, என்னவா இருக்கும், சிவா புள்ள ஃபோன போடுதே என்று யோசனையாக, கால் கட் ஆனது.

பின்னர், மீண்டும் அழைப்பு வர, அட்டென் பண்ணியவர், சொல்லுப்பா, நல்லா இருக்கியா சிவா?, ஊட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?.

எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா, அங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?, அத்தை ஃபோனுக்கு கால் போட்டேன் ஃஆப்ல இருக்குனு வருது."அதான் உங்களுக்கு பண்ணுனேன்".

ஆமா பா, சார்ஜ் இல்லைனு வேதா சொல்லுச்சி என்றவர், இரு போய் கொடுக்குறேன் என்றவரிடம், சரிங்கப்பா,அத்தை வீட்டுக்கு போனதும், ஒரு மிஸ்டு கால் விடுங்கப்பா.நான் கால் பண்ணுறேன் என்றவாறு கட் பண்ணினான்".

ஃபோனை எடுத்துக்கொண்டு வேக எட்டுக்களோடு நடந்தவர், வேதா, வேதா என்று கூப்பிட, வரேண்ணானு சொல்லிக்கொண்டே வெளியே வந்தவர், சொல்லுங்கண்ணா?.

அம்மாடி... சிவா புள்ளை ஃபோன் பண்ணுச்சி.உன் ஃபோனுக்கு போகலைனு சொல்லுச்சி.இந்தா முதல்ல பேசுமா என்று தனது ஃபோனை நீட்டினார்.

மூக்கையினிடமிருந்து ஃபோனை வாங்கியவர், அண்ணா.., அண்ணாகிட்ட விஷயத்தை சொல்லிடட்டுமா?,ஹம் சொல்லுடுமா,எதுக்கு இதை மறைச்சிக்கிட்டு இருக்கனும்?. "என்றைக்கு இருந்தாலும் தெரியத்தானே போகின்றது".
எப்போ தெரிந்தாலும் விஷயம் ஒன்னு தான்.அதுக்கு எதுக்கு நாளை வளர்த்தி கிட்டு...

நீங்கள் சொல்வதும் சரிதான்ணா என்றவர் சிவா நம்பருக்கு கால் பண்ணினார்.இரண்டு ரிங் போனதும், கட் ஆகியது.மீண்டும் கால் பண்ண போகும் போது, சிவா நம்பரிலிருந்தே கால் வந்தது.

அட்டென் பண்ணியவர், சிவா என்க, நான் தான் அத்தை என்றவனிடம், எப்படி இருக்கீங்க எல்லாரும்?.பொங்கல் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிதா?.
தாமரைக்கு இது தான் புது அனுபவமாச்சே.நல்லா என்ஜாய் பண்ணுனாளா? என்று கேள்விகளை அடுக்கினார் வேதா.

அத்தை.... என்று சிவா தயங்க, என்னடா?, நான் பாட்டுக்கு கேள்வி கேட்டு கிட்டு இருக்கேன்.நீ எதுவும் சொல்லாமல் தயங்கிட்டு இருக்குற?. யாருக்காவது உடம்பு சரியில்லையா? என்று பதற,அத்தை என்று மீண்டும் தயங்கியவன்,அக்கா...அக்காவை காணும் என்று,ஒரு வழியாக, விஷயத்தை சொல்லிவிட்டான்.

அதைக்கேட்டு என்னாஆஆஆஆ என்று அதிர்ந்தவர், என்னடா சொல்லுற?.
என் பொண்ணுக்கு என்ன நடந்துச்சி? என்று பதறி கத்தியவர், ஃபோனை அப்பாக்கிட்ட கொடு என்றார் கோவக்குரலில்.

ம்ம் என்றவன், அன்புவிடம் ஃபோனை நீட்ட, அம்மாடி... உம் பொண்ணை தொலைச்சிட்டேன்மானு அன்புவும் அழுதார்.

அண்ணா..என்ன நடந்துச்சிணா?, என்னாச்சி என் பொண்ணுக்கு?என்க,லட்டர் எழுதி வச்சிட்டு வீட்டை விட்டு போயிடுச்சிமானு சொல்லிக் கொண்டிருக்கும் போதத,அம்மா என்ற அல்லியின் சத்தம் கேட்கவும், ஃபோன் கால் கட்டானது.மீண்டும் சிவாவின் நம்பருக்கு கால் பண்ண, அழைப்பு போகவில்லை.

அங்கிருந்த மூக்கையனிடம், அண்ணா நான் உடனே ஊருக்கு போயாகணும்.

என்ன விஷயம்னு வந்து சொல்லுறேன்.

இப்போ எதுவும் என்னால் சொல்ல முடியாது என்றவர், ஃபோனை அவரிடம் கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு வந்தவர், தேவையான துணிகளை ஃபேகில் எடுத்து வைத்தவரின் கண்ணில் இருந்து கண்ணீரோ அருவியாக ஓடியது .

அய்யோ என் பொண்ணுக்கு என்ன ஆச்சுனு தெரியலையே?.

எங்கே போனாள்னு எப்படி தேடுவேன்னு அழுதுக்கொண்டே தேவையானதை எடுத்து வைத்துவிட்டு வீட்டை பூட்டி வெளியே வந்தவர், தனக்கு ஒரு வாரம் லீவ் வேண்டும் என மேல் அதிகாரியிடம் மூக்கையன் ஃபோனில் இருந்து பர்மிஷன் வாங்கிக்கொண்டு, மயிலாவிடம் சொல்லச்சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.

வேதாவின் நல்ல நேரம், அப்பொழுது தான் கோவைக்கு செல்லும் கடைசி பஸ்ஸும் அங்கிருந்து புறப்பட தயாராக இருந்தது.வேகமாக சென்று ஏறியவர், காலியாக இருந்த இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டார்.

சிறிது நிமிடத்தில் பஸ் அங்கிருந்து புறப்பட, டிக்கெட், டிக்கெட் என்று சொல்லிக்கொண்டே நடத்துனரும் வந்தார் .

கோவை என்று வேதா சொல்ல, டிக்கெட்டை கிழித்து கொடுத்தவர், வேதா கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, மீதம் சில்லரையை திருப்பி கொடுத்துச்சென்றார்.

கதிர் வீடு...

தூங்கி எழுந்தவன் மணியை பார்க்க, காலை பத்து மணி என்று காட்டியது. என்ன இவ்வளவு நேரம் தூங்கிட்டோம் என்று சொல்லிக்கொண்டே எழுந்தவனுக்கு, தலை பாரமாக இருப்பது போலிருந்தது.

என்னாச்சி?, தலை பாரமாக இருக்கிற போல தோனுதே என்றவாறு, பாத்ரும் உள்ளே சென்றவன், காலை கடனை முடித்து, குளித்து வெளியே வந்தான்.

பின்னர் கபோர்டில் இருந்து வேஸ்டி, சட்டையை போட்டுக்கொண்டவன், ஈர துண்டை பால்கனியில் இருக்கும் கொடியில் காய வைத்து விட்டு, கீழே வந்தான்.

வீடே அமைதியாக இருப்பதை பார்த்து, எல்லாரும் எங்கே போனாங்க?, என்று சொல்லிக்கொண்டே வந்தவன் வாசலுக்கு வர, அங்கே திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வேலுவும், ஜானும் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

ஏன் டா வெளியே உட்கார்ந்து இருக்கீங்க? என்றபடியே அவர்களிடம் வந்தான்.கதிரின் குரலைக்கேட்டு இருவரும் திரும்பி பார்த்து விட்டு, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

அடேய்...உங்களை தான்டானு சொல்லிக்கொண்டே அருகில் வந்தவன், எங்கேடா வீட்ல யாரையுமே காணும்?.

ம்ம் என அவனை ஒரு பார்வை பார்த்த வேலு, மருமகளை கூப்பிட்டு வர தான் போயிருக்காங்க என்றான்.

மருமகளா?

எந்த மருமகளை என்று கதிர் கேட்க, இப்பொழுது ஜானும் அவனை முறைத்து பார்த்தான்.

என்னடா பங்காளி என்க,வேகமாக எழுந்தவன் தன் பங்கிற்கு இரண்டு அறையை விட்டு, பண்றதையெல்லாம் பண்ணிட்டு கேள்வி வேறயாட உனக்கு?.
கோவத்தை மூட்டாத, செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு, சாவகாசமா வந்து கேள்வி?.மரியாதையா வாய மூடிகிட்டு கொஞ்ச நேரம் இரு.

நண்பனின் கோபம் கண்ட கதிரோ, அமைதியாக போய், வேலுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.

"வழக்கத்திற்கு மாறாக மூவரும் அமைதியாக இருந்தனர்".

சிறிது நிமிடங்கள் இப்படியே மௌனமாக கடந்து சென்றது.

அப்பொழுது காலடி சத்தம் கேட்டு மூவரும் நிமிர்ந்து பார்க்க, தாமரை வீட்டிற்கு சென்றவர்கள் சோக முகத்தோடு திரும்பி வந்தனர்.

யாரும் எதுவும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றதை பார்த்த வேலுவோ,எழுந்து அவர்கள் பின்னாடியே சென்றான்.

வாடா என்று கதிரையும் கூப்பிட்டுக்கொண்டே ஜானும் எழுந்து வீட்டின் உள்ளே செல்ல, அவர்களோ ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்.

உள்ளே வந்த வேலுவோ,வள்ளி அப்பாயின் அருகில் சென்றவன்,செல்லம்... போன விஷயம் என்னாச்சி?.சித்தியும், சித்தப்பாவும் என்ன சொன்னாங்க?.

அவர் எதுவும் பதில் சொல்லாமால் இருக்க, அத்தை நீங்களாவது சொல்லுங்க என்ன நடந்துச்சி என்கவும், அக்கா,தங்கை இருவரும் வாயை திறக்கவில்லை.

அப்பொழுது உள்ளே வந்த வளவனையும், செல்வியையும் பார்த்தவன், டேய் அங்க என்னடா நடந்துச்சி?.

சித்தப்பா எதாவது சண்டை போட்டாறா என்க,வளவனும் அமைதியாக இருக்க, உன்னை தான்டா கேட்குறேன் என்று சத்தமாக கேட்டதும்,அதற்கு வளவனோ தாமரை வீட்டை விட்டு போயிட்டாள் மாமா.

அவன் சொன்னதைக்கேட்டு கதிர், ஜான், மற்றும் வேலு மூவரும் அதிர்ந்தனர்.

என்னடா சொல்லுற?என்ற கதிருக்கு, லட்டர் எழுதி வச்சிட்டு தாமரை அண்ணி, வீட்டை விட்டு போய் விட்டாங்கள் என்றாள் செல்வி.

அப்பாகாரர்,அத்தைகாரிய ஊரை விட்டு அனுப்புனாரு.இப்போ மகன்காரன்,அவளோட அண்ணன் மகளை அதையே பண்ண வச்சிட்டான்.
வழி வழியா,இப்படி அற்புதமான செயலை செய்யும், நல்ல குடும்பம் நம்பளோடது இல்லையா? என்று சீதா கேட்க,அம்மாடி சீதானு வள்ளி அப்பாயி சொல்ல, நான் வாய மூடி என்ன புண்ணியம்?.நடந்தது இல்லைனு மாறிடுமா?, இல்லை நடக்கவேயில்லைனு மாத்திக்காட்ட முடியுமா?.இன்றைக்கு கவிதா கேட்ட கேள்வியையெல்லாம், அன்றைக்கே உங்களை கேட்டுருக்கனும் என்றார்.

அம்மா... தலையும் புரியாம, வாலும் புரியாமல், நேற்றிலிருந்தே நீ பேசிக்கிட்டு இருக்க.என்ன தான் அப்படி நடந்துச்சினு, யாராவது முதல்ல சொல்லி தொலைங்க?.சும்மா ஆளாளுக்கு, அது இதுனு சொல்லிக்கிட்டு.

யார்?,யாரை? ஊரை விட்டு தொறத்தி விட்டது?.

"அப்படி யார், தாமரைக்கு முன்னாடி போனது?".

அப்பாயி... "உன் மருமவளுங்க நான் கேட்ட கேள்விங்களுக்கு வாய தொறக்க வழியில்லை".நீயாவது சொல்ல முடியுமா? என்று வளவன் முறைத்தான்

உங்க எல்லாருக்கும் என்ன நடந்தது என்ற உண்மை தானே தெரியனும்?
நானே அதை சொல்லுறேன்டா நல்லவனே என்ற குரலை கேட்டு, அங்கிருந்த அனைவரும் பெருமாளை பார்த்தனர்.

கணவரின் வார்த்தையைக் கேட்ட சீதாவோ, மீண்டும் அவைகளை கேட்க மனமில்லாமல், அங்கிருந்து எழுந்தவர் அறைக்குள் சென்று விட்டார்.

கதிரோ போகும் தனது அம்மாவையே, பார்த்துக்கொண்டிருந்தான் .

நீலகிரி...

இரண்டரை மணி நேரம் பயணம் செய்த பேருந்தோ,இரவு ஒன்பது மணிக்கு, கோவை பேருந்து நிலையத்தை வந்து சேர்ந்தது.கோயம்புத்தூர் வந்துருச்சி இறங்குங்க என்று நடத்துனரும் குரல் கொடுத்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
346
பஸ்ஸிலிருந்து இறங்கிய வேதா, தங்கள் ஊருக்கு செல்லும் பஸ் நிற்கும் இடத்தை நோக்கி சென்றவர், அங்கிருந்த டீ கடைக்காரரிடம், தேனூருக்கு போக வேண்டிய பஸ் வந்து விட்டதா? என்க,இன்னும் இல்லைங்கம்மா.வரும் நேரம் தான்னு சொல்லும் போதே,பேருந்தும் அங்கு வந்து நின்றது".

அதோ வந்துருச்சிமானு கடைக்காரர் சொல்ல,திரும்பி பார்த்தவர்,நன்றிப்பா என்று சொல்லி விட்டு,பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் போய் உட்கார்ந்து கொண்டார்.

அப்பொழுது, டிரைவர் தனது ஃபோனிற்கு சார்ஜ் போடுவதை பார்த்து, ஃபேகை சீட்டில் வைத்து விட்டு, அவரிடம் சென்றவர், தனது ஃபோனிற்கு கொஞ்சம் சார்ஜ் போட்டுக்கட்டுமா? என்கவும்,போட்டுக்கங்கமா என்றார்.

நன்றிங்க தம்பி என்று சொல்லி விட்டு, ஃபேகில் இருந்த ஃபோனையும், சார்ஜரையும் எடுத்து வந்து, அங்கிருந்த பிளக் பாயின்டில் சார்ஜரை பொருத்தி, ஆன் பண்ணி விட்டு, தனது சீட்டிற்கு வந்து விட்டார்.

முக்கால் மணி நேரம் சென்ற பிறகே, பஸ் இங்கிருந்து கிளம்பும் என்பதால், கீழே இறங்கிப்போய், தண்ணி பாட்டிலோடு இரண்டு வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு, சீட்டிற்கு வந்து உட்கார்ந்து கொண்டார்.

"மதியம் சாப்பிட்டதோட சரி, இது வரை ஒரு வாய் டீ கூட குடிக்க வில்லை".

ஒரு வாழைப்பழத்தை உறித்து சாப்பிட்டவர், மற்றொன்றை ஃபேகில் வைத்து விட்டு, ஜன்னல் கதவை லேசாக திறந்து வைக்க, டிக்கெட், டிக்கெட்டென்று நடத்துனர் குரல் கேட்டது.பர்ஸிசிலிருந்து பணத்தை எடுத்தவர், தன்னருகில் வந்தவரிடம் தேனூருக்கு எவ்வளவு?என்றார்.

நடத்துனரும் எவ்வளவுனு சொல்ல,பணத்தை அவரிடம் நீட்டி, தேனூருக்கு ஒன்னு குடுங்க என்றார். டிக்கெட்டையும், மீதி பணத்தையும் குடுத்துச்சென்றார்.

இரண்டையும் தனது ஃபேகில் வைத்து கண்ணை மூடிய வேதா, எந்த ஊருக்கு தன் வாழ்நாள் முழுவதும் போகக்கூடாதுனு இருந்தேனோ, அதே ஊருக்கு இப்பொழுது போக வேண்டி சூழ்நிலை வந்து விட்டதே, என்பதை நினைத்து வேதனை பட்டார்.

இதுவரை தன் வாழ்க்கையில் மீண்டும் திரும்பி பார்க்க விரும்பாமல், மனதிற்குள் ஒளித்து வைத்திருந்த ரகசிய பக்கத்தை, அந்த இரவு நேர பயணத்தில் கடந்து சென்றதை பற்றி அசை போட தொடங்கியது வேதாவின் மனம்.

பூனே...

பூனேவின் இன்டர்நேஷனல் ஏர்போர்டில் இருந்து வெளியே வந்தவள், தாமரை என்ற பெயர் ஃபோர்டை கையில் பிடித்து நின்று கொண்டிருந்த ஆளிடம் சென்றாள்.

"ஹலோ..ஆம் தாமரை என்று ஆங்கிலத்தில் சொல்ல,அவனோ ரொம்ப சந்தோஷம் என்றான்".

அவன் தமிழில் பதில் சொல்லியதைக்கேட்டு, நீங்கள் தமிழா? என்று அதிர்ந்து கேட்டாள்.

"இப்பொழுது நான் தமிழில் பேசியதாக தான் நினைவு ".

"ஹிந்தி பட ஹீரோ போல கலரும், தோற்றமும் கொண்டவனோ,நான் மாறன்... லீனாவேட அண்ணன் என்றான்.

பூனே உங்களை வரவேற்கிறது மிஸ். தாமரை என்று மாறன் சொல்ல, அந்த மிஸ் என்ற வார்த்தையை கேட்டவளுக்கு, முதல் நாள் நடந்த நிகழ்வுகள் படமாய் விரிந்தது.

ஹலோ... மிஸ். தாமரை, என்ன டிரீம்கு போய்ட்டீங்களா?? என்றவன், வீட்டுக்கு கிளம்பலாமா? என்க, ஹம் போலாம் என்றாள்.பின்னர் இருவரும் ஏர்போர்டில் இருந்து வெளியே வர,அவர்களுக்கு முன்பு வந்து நின்றது சாம்பல் நிற சுவிப்ட் டிசையர் கார்.

"காரின் முன் பக்கமாக ஏறியவன், அவளை பார்த்து உள்ளே வாங்க என்றான்".

ம்ம் என்றவள், தனது லக்கேஜை டிக்கியில் வைத்து விட்டு, பின் பக்க கதவை திறந்து உட்கார்ந்ததும், அங்கிருந்து சதாரா என்ற ஊரை நோக்கி சென்றது.

பின் சீட்டில் இருந்தவளின் நினைவுகளோ, நேற்று தந்தை சொன்ன விஷயத்தை நினைத்து பார்த்தது...

சீமக்கரை...

பெருமாள் விஷயத்தை சொல்ல வர, பெரியவனே, நானே நடந்ததை சொல்லுறேன் என்று கடந்த காலத்தை சொல்ல தொடங்கினார் வள்ளி அப்பாயி...

வாங்க நாமும் அவர்களோடு கடந்த காலத்திற்கு செல்லலாம்..

கதையின் ஆரம்பத்திலே ஊரின் சிறப்பையும், அங்கிருக்கும் மனிதர்களை பற்றி சொல்லியிருந்தாலும், மீண்டும் ஒரு முறை அதை காணலாம்...

பிளாஷ்பேக்..

வேலவன், தெய்வநாயகி தம்பதியருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும்.

அதில் முதல் பையன் வாசன், இரண்டாவது பையன் பிரகாசம், மூன்றாவது மகள் கலா.

ஊரின் வழக்கம் போல, காலம் காலமாய் சொந்தத்திற்குள்ளே பெண் கொடுத்து, எடுப்பதே தொடர்ந்தது.

"வேலவனின் ஒரே தங்கையான சாலாவை, உள்ளூரில் இருக்கும் அத்தை மகனாகிய தம்புசாமிக்கு கட்டி வைத்தனர்.தம்புசாமி, சாலா தம்பதியருக்கு ஒரே மகன் சிவசாமி மட்டும் தான்".

தெய்வநாயகியின் கூட பிறந்த அண்ணன் பொன்னுரங்கன்.அவரின் மனைவி காமாட்சி.இந்த தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள்.

முதல் மகன் பொன்னுசாமி, இரண்டாவது மகள் பொன்னி, மூன்றாவது மகள் வள்ளி.

ஒன்னுக்குள் ஒன்னு என்று,பொண்ணு எடுப்பதும், கொடுப்பதுமாக இருக்க,சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், அதை பெரிது படுத்தாமல், எல்லாரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர்.

"வருடங்கள் ஓட, பிள்ளைகளுக்கும் கல்யாண வயது வந்தது".

முதல் மகன் வாசனுக்கு, பொன்னுரங்கத்தின் மூத்த பொண்ணான, பொன்னியை கட்டி வைத்தனர்.

திருமணம் ஆகி சில வருடங்கள் கடந்தும், வாசன் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் மட்டும் குறையாக இருந்தது.

நல்லது கெட்டதுக்கு போகும் போதெல்லாம்,குழந்தை இல்லாததை சொல்லிக்காட்டி, பொன்னியின் மனதை சொந்தங்கள் வேதனை படுத்தும் போதெல்லாம், வாசன் தான் மனைவியை தேற்றுவார்.

பின்னர் அடுத்த மகனான பிரகாசத்திற்கு, பொன்னியின் தங்கையான வள்ளியையும், சிவசாமிக்கு, கலாவையும், கல்யாணம் பண்ணி வைத்தனர்.

அதைப்போல பொன்னுசாமிக்கு, தூரத்து சொந்தமான மாலாவையும் மணம் முடித்தனர்.

நாட்கள் செல்ல, வள்ளி, கலா,மாலா மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக கருவுற்றிருப்பது தெரிந்து, மூன்று குடும்பத்திற்கும் எல்லை இல்லாத மகிழ்ச்சியானது.மாதங்களும் காற்றாய் ஓட, மூவருக்கும், மாதங்கள் இடைவெளியில் முதல் குழந்தை ஆண் குழந்தையாகவே பிறந்தது.

குழைந்தைகளுக்கு ஒரு வயது வந்ததும் சொந்த பந்தங்களை கூட்டி, கிடா வெட்டி காது குத்தியை விமர்சையாக கொண்டாடினார்கள்.

ஊரில் உள்ளவர்களோ மூன்று குடும்பத்தின் ஒற்றுமையை தான் பலருக்கு உதாரணமாக காட்டுவார்கள், .
பொன்னுசாமி மாலா தம்பதியரின் ஒரே மகனுக்கு, செல்வம் என்று பெயரை வைத்தனர்.

பெருமாளுக்கு மூன்று வயது இருக்கும் போது, மீண்டும் வள்ளி கருவுற, மறுபடியும் ஆண் குழந்தை தான் பிறந்தது.பிரகாசம் தன் பிள்ளைகளுக்கு பெருமாள், முத்து என்றும், சிவசாமி தன் மகனுக்கு அன்பழகன் என்றும், அடுத்ததாக பிறந்த பெண் குழந்தைக்கு,வேதவள்ளி என்றும் பெயர் வைத்தனர்.

அதே ஊரில் இருந்த வேலுச்சாமி, சரோஜா தம்பதிகளுக்கு கண்ணன் என்று ஒரு மகன்.

பெருமாள், செல்வம், மற்றும் அன்பழகனை தேனூரில் இருக்கும் பள்ளியில் சேர்க்க, அதே பள்ளியில் வந்து சேர்ந்தனர்,லாரன்ஸ், மற்றும் கண்ணன் இருவரும்.

இதில் லாரன்ஸின் தந்தை மிலிட்ரியில் இருப்பதால், தாயோடு தேனூரிலே இருந்தனர்.

ஐவரும் ஒரே வகுப்பு என்பதால் அருகருகில் அமர்ந்து கொண்டனர்.
நாட்கள் செல்ல,கண்ணனை தவிர நால்வரும் நண்பர்கள் ஆகினர்
பெருமாளும் அவர் நண்பர்களும் மூன்றாம் வகுப்பு வந்து விட்டார்கள்.

பின்னர் மீண்டும் கருவுற்ற வள்ளி, இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

மூத்தவள் சிந்து, அவளை விட இரண்டு வயது சின்னவள் கவிதா.
அந்த நேரத்தில் வள்ளியின் அக்கா பொன்னியோ, சில வருடங்களுக்கு பிறகு கருவுற்றார்.

வள்ளியும், வாசனும் கண்ணும் கருத்துமாக பொன்னியை பார்த்துக்கொள்ள, பத்து மாத முடிவில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.தங்கள் மகளுக்கு பார்வதி என்று பெயர் சூட்டினர்.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் பிறந்த பெண் குழந்தையான பார்வதியை, வீட்டில் உள்ளோர் கொஞ்சி மகிழ்ந்தார்கள்.பெண் பிள்ளைகளும் வளர்ந்தனர், அவர்களையும் பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.

தொடக்கப்பள்ளியை முடித்து ஆண் பிள்ளைகளும் நடுநிலை போய்விட்டனர்.எல்லாரையும் விட சிந்துவோ, சிறு வயதில் இருந்து நன்றாக படிப்பாள்.நான் டாக்டர் ஆகனும்பா என்று தனது அப்பா பிரகாசத்திடம் சொல்லிக்கொண்டே இருப்பாள்.அவரும் மகளின் படிக்கும் ஆர்வம் தெரிந்து, நீ ஆசைப்படுவதை படித்தா.

அப்பன் எதுக்கு இருக்கேன், தலைய அடமானம் வச்சாவது நீ ஆசைப்பட்டதை படிக்க வைக்குறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

அந்த நேரத்தில் ஊருக்குள் காலரா பரவ,அதில் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல பேர் உயிரிழந்தனர்.அதில் பார்வதியின் பெற்றோர்,மற்றும் செல்வத்தின் அம்மா மாலா, இன்னும் சிலரும் சீமக்கரையில் இறந்து போனார்கள்.

கூட்டுக்குடும்பமாக இருப்பதால், பிள்ளைகளும் வேற்றுமை இல்லாமல் வளர்ந்தனர்.

பெருமாளும், அன்பழகனும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், மேற்கொண்டு படிப்பு வேண்டாம் என்று, தந்தைகளோடு விவசாயத்தில் இறங்கி விட்டனர்.லாரன்ஸும், முத்துவும் கல்லூரிக்கு சென்றார்கள்.

சிந்து பதினொன்றாம் வகுப்பும், பார்வதி ஒன்பதாம் வகுப்பும், கவிதா எட்டாம் வகுப்பும், வேதவள்ளி ஆறாம் வகுப்பும் படித்துக்கொண்டிருக்கும் போது, பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக,இரண்டு ஆசிரியர் துணையோடு, இன்னும் சில மாணவர்களுடன், சிந்துவும் மதுரைக்கு சென்றிருந்தாள் .

பேச்சு போட்டி முடிந்தது.

"வழக்கம் போல சிந்துவே முதல் பரிசு வாங்கினாள்".

அழைத்துச்சென்ற மாணவர்கள் எல்லாரையும்,பரிசுகள் பெற்ற பின்னர், மீண்டும் ஊருக்குள் கூட்டிச்செல்ல தயாராகினர்.எல்லாரும் வந்து விட்டனரா?என்று அவர்களை அழைத்து வந்த ஆசிரியர் தன்னிடம் இருந்த லிஸ்டை படிக்க, சிந்து மட்டும் அங்கு இல்லை.

எங்கே போனாள் இந்த பொண்ணு??என்றவர், போய் ரெஸ்ட் ரூம்ல பார்த்துட்டு வாங்க என்று சொல்லி,இரண்டு மாணவிகளை அனுப்பி வைத்தார்.நிமிடங்கள் கழிய, அங்கு வந்த இருவரும் சிந்து அங்கே இல்லை டீச்சர் என்றனர்.

என்ன என்றவர், சரி போய் ஆளுக்கு ஒரு பக்கம் தேடுங்க என்றவாறே,அவரும் ஒரு பக்கம் சென்றார்."பள்ளி முழுவதும் தேடியும் எங்கும் சிந்து இல்லை"."பதற்றமும், பயமும் ஆசிரியைகளுக்கு போட்டி போட்டுக்கொண்டு வந்தது".

பிள்ளையை காணும் என்று போய் சொன்னால், பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் என்ன சொல்லுவாங்களோ?, என்று பட படப்பானது..

ஒரு ஆசிரியர் மட்டும் அந்த பள்ளியின் அலுவலகத்திற்கு சென்றவர், அங்கிருந்தவரிடம் கேட்டுக்கொண்டு, பின்னர் அங்கிருந்த தொலைபேசியில் இருந்து, தனது பள்ளிக்கூடத்திற்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல,அதைக்கேட்ட தலமையாசிரியருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால், பள்ளியின் பெயர் கெட்டுப் போகும்.

அதுவுமில்லாமல், மாணவியின் பெற்றோர்களுக்கு தெரிந்த பின்னால், இந்த விஷயம் எவ்வளவு பெரிய பிரச்சினையாகப் போகிறதோ? என்று கவலை வந்தது.சரி,நீங்கள் மற்றவர்களுடன் பத்திரமாக வந்து சேருங்க.போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிக்கலாமென்றார்.

பெருமாளோ சிந்துவை பள்ளியில் இருந்து அழைத்து போவதற்காக, வாசலிலே காத்திருந்தார்.மதுரைக்குச் சென்ற பஸ்ஸும் பள்ளிக்கு வந்து சேர்ந்தது.

பஸ்ஸிலிருந்து எல்லாரும் இறங்கினர்.பின்னர் அவர்களை அழைத்துச்செல்ல வந்தவர்களோடு மாணவர்களும் சென்றனர்.

இவர்களுக்காக காத்திருந்த தலைமையாசிரியரோ அவர்களிடம் என்ன நடந்துச்சி?என்றார்.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top