Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
"வள்ளி அப்பாயி கேட்கும் கேள்விக்கு,கதிரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை".
மனைவி பேசிய பேச்சுகள்,தலைக்கு மேல் வளர்ந்த மகனின் கேள்விகளெல்லாம் ஒன்று கூடி,பெருமாளின் நெஞ்சத்தை குத்தி கிழித்தது.
சட்டென்று வீட்டிலிருந்து வெளியே வந்தவருக்கு,கோயிலில் போய் சிறிது நேரம் இருக்கலாமென்று தோன்ற,அதன்படியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
"ஐயனார் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தவரின் காதில் விழுந்த வார்த்தைகளில், அப்படியே ஆணி அடித்தார் போல நின்றார்".
"அங்கு வலது பக்கம் மரத்தின் கீழே,குடி போதையில் இருந்த குப்பன்,கதிருக்கு தென்னக்கள்ளில் போதையை கலந்து கொடுத்ததையும்,அதை செய்ய சொல்லி முதலாளி மகள் தேவி தான் தனக்கு பணம் கொடுத்ததையும் பெருமையாக, தனது கூட்டாளியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
"பின்னர்,கையில் இருந்த பணத்தை காட்டியவன், இந்தாடா உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ".
நீ என் உசுரு,என் நண்பன்டானு வாய்க்கு வந்தபடி போதையில் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்ட பெருமாளிற்கு,தேவியின் மேல் கோபம் வந்தது.
"முதலில் இதை பற்றி கேட்டே ஆகனுமென்று வந்த வழியே திரும்பி கண்ணன் வீட்டை நோக்கி வந்தவரோ உள்ளே கண்ணன் பேசிய அனைத்தையும் கேட்டு,மேலும் அதிர்ந்து போய் நின்றார்.
கதிர் வீட்டிலோ ஏதோ அசம்பாவிதம் நடந்த வீடு போல,ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்.
தேனூரில் இருக்கும் நெல்லு மண்டிக்கு பணம் வாங்க சென்ற ஜானும், வேலுவும் வீட்டிற்கு வர,அங்கே வீடு பூட்டியிருந்தது.
எங்கே போயிட்டு இந்த அம்மா?என்றவன்,சரி வாடா பனைமரம்.
"வள்ளி செல்லத்து கிட்ட பணத்தை குடுத்து வைக்கலாம்".அம்மாகிட்ட அது குடுத்துடும் என்று சொல்லிக்கொண்டே இருவரும் கதிர் வீட்டை நோக்கி வரும் போது, அங்கே தெரிந்தவர் ஒருவர், அடேய் வேலு எங்கடா போயிருந்த?.
என்னென்னமோ நடந்து போய்ட்டுடா என்றார்.
அவர் சொன்னதைக்கேட்டவன்,என்ன மாமா சொல்லுற?.நம்ப நெல்லு பணம் வாங்குறதுக்காக,அப்பா தான் குமார் கடை வரைக்கும் போய்ட்டு வரச்சொல்லுச்சினு, நானும் இவனும் காலையிலே போய்ட்டோம்.யாருக்கு என்னாச்சி மாமானு பதறிக்கொண்டே வேலு கேட்க,நம்ப கதிரு பயல் இப்படி பண்ணிட்டானேனு புலம்பினார்.
யோவ் மாமா...முதல்ல விஷயத்தை சொல்லி தொலையா.தலையும் புரியலை, வாலும் புரியலை என்றபடியே அவரிடம் சத்தம் போட்டான்.
பின்னர்,சற்று முன்பு நடந்ததையெல்லாம் அவர் சொல்ல,கேட்ட இருவருக்கும், பேரதிர்ச்சிலாம் ஒன்னும் ஏற்படவில்லை.ஆமாம்... நண்பன் ஏதோ ஒரு முடிவு எடுத்து தான் அமைதியாக இருக்கிறான் என்பது,முன்பே தெரிந்த ஒன்று தான்.
"கதிர் இப்படி ஒரு காரணத்தை சொல்வான் என்று,கொஞ்சம் கூட அவர்கள் எதிர்பார்க்க வில்லை".
நடந்ததற்கு அவன் சொல்லிய காரணத்தை கேட்ட பிறகு தான், நண்பனின் மேல் இருவருக்கும் கோபம் வந்தது.
வாடா முதல்ல அங்க போகலாமென்று வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன்,கதிர் வீட்டை நோக்கிச்சென்றான்.
சிறிது நிமிடத்தில் வாசலில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு,இருவரும் உள்ளே வர,அவர்கள் கண்ணில் பட்டதோ, ஆளுக்கொரு மூலையில் அழுது கொண்டிருக்கும் வீட்டினர்.
எங்க அவன்? என்று நிலவனிடம் கேட்க, அண்ணன் என்று,தோட்டத்து பக்கம் கையைக்காட்டினான்.
பல்லை கடித்துக்கொண்டே கோவத்தோடு தோட்டத்து கதவு வழியாக சென்று பார்க்க,கதிரோ அங்கே கிணற்றடியின் ஓரத்தில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.
அதைப்பார்த்த இருவரும், என்னடா ஆச்சு?? என்றபடியே அவனிடம் ஓடிப்போனவர்கள், ஒருவன் கதிரின் தலையை பிடிக்க,இன்னொருத்தன் கிணற்றிலிருந்து நீரை இறைத்து எடுத்தவன்,இந்தா வாய் கொப்பளிடா பங்காளி.
நண்பர்களின் குரலைக்கேட்டவன், தெரியலைடா தலை சுத்துது என்றவாறு வாளியில் இருந்த தண்ணீரை அள்ளி, வாயை கொப்பளித்து துப்பி விட்டு, முகத்தை கழுவிக்கொண்டு எழுந்தான்.
சீதாவோ நடக்கும் கூத்துகளை ஓரமாக உட்கார்ந்துக்கொண்டு,கண்ணில் நீர் வழிய, பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.இப்போ எப்படிடா இருக்கென ஜான் கேட்க, தலை தான் சுத்துர போல இருக்குடா.
நல்லா தானேடா இருந்த. அதுக்குள்ள உனக்கு என்னாச்சு என்று ஜான் கேட்டு முடிப்பதற்குள், நண்பனின் கன்னத்தில் மாறி, மாறி தன் பங்கு வேலுவும் அறைந்தான்.
என்னடா பண்ணி வச்சிருக்க?, எங்க இருந்து உனக்கு இப்படி பழிவாங்குற எண்ணம் வந்துச்சி??என்று கேட்டுக்கொண்டே மேலும் அறைந்தான்.
அடேய் மாப்பு நிறுத்துடா என்ற ஜானோ, ஒரு வழியாய் அவனை மேலும் அடிக்க விடாமல் தடுத்தவன்,டேய் என்னமோ இவனுக்கு நடந்துருக்குடா.ஆளை பாருடா, வித்யாசமா இருக்கான்.
அப்பொழுது தான் வேலுவும் கதிரை கவனித்து பார்த்தான்.
"தலையில் கை வைத்து கீழே குனிந்து நின்றான்".
டேய் என்னடா பண்ணுது என்று கேட்கும் பொழுதே, கீழே விழப்போன கதிரை தாங்கி பிடித்தவன், பங்காளி, பங்காளி, டேய் பங்காளி என்று கதிர் கன்னத்தை ஜானும் தட்டி எழுப்பினான்.
செல்வி...செல்வி என்கும் வேலுவின் குரலில் ஓடி வந்தவள்,அங்கே மயங்கி இருந்த அண்ணனை பார்த்து, அய்யோஓஓஓ அண்ணா என்று அருகில் வந்தவள், அண்ணாக்கு என்னாச்சிணானு பதறினாள்.
செல்வியின் சத்தத்தில், வீட்டின் உள்ளே இருந்தவர்களும் தோட்டத்திற்கு ஓடி வந்தனர்.
அண்ணா ...அண்ணா...என கத்திக்கொண்டிருந்தவளின் தலையில் தட்டிய வேலுவோ,ஏய்... எதுக்குடி இப்படி கத்தி ஊர கூப்புடுற?."போய் ஒரு சொம்பு மோர் எடுத்து வா".
"அண்ணாஆஆஆ..மாமா என்று அவள் இழுக்க, உன் அண்ணன் தான் போடி என்றவன், அடேய் பனைமரம் என்க, ஜான் நிமிர்ந்து பார்த்தான்".
கீழே குனிந்த வேலு, தனது தோளின் மேல் கதிரை தூக்கிப்போட்டவன், வீட்டின் உள்ளே தூக்கிச்சென்று, முற்றத்திலிருந்த சோபாவின் மேல் படுக்க வைத்து விட்டு,அந்த ஃபேனை போடுடா பனைமரமென்றான்.
உள்ளே வந்தவர்கள் எல்லாரும், என்னாச்சோ ஏதாச்சோ என்று அழ, அதைப்பார்த்த வேலு, கொஞ்சம் வாய மூடுறீங்களா?.
"எதுக்கு எடுத்தாலும் ஒப்பாரி வைக்குறதை தவிர,ஒரு மண்ணும் தெரியாதானு சத்தம் போட்டான்".
பனைமரம் இவன் தலையை புடிச்சி உட்காரு என்றவன்,செல்வி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க என்று சத்தம் போட,இதோ மாமா என்று சொல்லிக்கொண்டே வந்தவள், அவனிடம் சொம்பை கொடுத்தாள்.
"அதை வாங்கியவன், கதிரின் வாயை திறந்து உள்ளே ஊற்றினான்".
ஒரு சொம்பு முழுவதையும் ஊற்றியவன், சாய்ச்சி உட்கார வை டா என்று சொல்லி,சொம்பை செல்வி கையில் குடுத்து விட்டு, மாப்பு, மாப்பு என்று கதிரின் கன்னத்தை தட்டி எழுப்பினான்.
கதிரும் சிறிது நொடிகளில்,சிரமப்பட்டு கண்ணை திறந்தவன் தன்னை சுற்றி எல்லாரும் கவலையாக நிற்பதை பார்த்தவன், ஒன்னும் இல்லை, ஏதோ மயக்கம் தான்.
அப்பொழுது,முத்து... பெரியவன் போய் ரொம்ப நேரம் ஆகுதுப்பா.போய் என்னனு பார்த்துட்டு வா என்றார் பிரகாசம் தாத்தா.
சரிப்பா என்று அவர் வெளியே போனார்.
இவ்வளவு நடந்தும் சீதாவோ மகன் இருக்கும் திசையில் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.
முத்துவோ ஏரிக்கரை,கோயில்,பெருமாளின் நண்பர்கள் வீடு என்று,அங்கெல்லாம் தேடி பார்க்க,பெருமாள் எங்கையுமே இல்லை.அண்ணன் எங்கே போயிருக்குமென்று யோசித்துக்கொண்டே வந்தார்.
அப்பொழுது,மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த பூசாரி,முத்துவை பார்த்து கையை அசைத்தார்.
வண்டியை நிறுத்தியவர், சொல்லுணா என்க, கதிர் பற்றி கேட்டார்.
நடந்தது இனி மாற்ற முடியாது. ஆக வேண்டியதை பாக்கலாம்டா தம்பி என்றார் பூசாரி.
சரிணா என்ற முத்துவிடம், அண்ணா என்னடா சொல்லுது? அதற்கு முத்துவோ, வீட்டில் நடந்ததை சொல்லி விட்டு, பெருமாளை தேடி வந்ததை சொல்ல, அண்ணன் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான், கண்ணன் மச்சான் வீட்டு பக்கம் போனார்டா என்றார்.
அட... நான் இதை யோசிக்கவே இல்லை.சரிணா, நான் போய்
அங்க மாமா வீட்டில் பார்க்குறேன்னு சொல்லிக்கொண்டு, வண்டியை கண்ணன் வீட்டு பக்கம் ஓட்டினார்.
தேவி வீடு...
சொல்லுங்கப்பா?,எதுக்கு இப்படி ஒரு புத்தி உங்களுக்கு?.அப்படி இரண்டு குடும்பத்தையும் பிரிச்சு வைக்கிறதில் உங்களுக்கு என்ன ஆனந்தம்?.
உங்க கிட்ட கொஞ்சம் கூட இத நான் எதிர்பார்க்கல என்று தேவ் சத்தம் போட, உனக்கு என்னடா தெரியும் என்றார் கண்ணன்?.
எனக்கு எதுவும் தெரியாது தான்.
அதும் உங்களை போல,அடுத்த குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்தலாம் எனக்கு தெரியாது தானென்று தேவும் கோபமாக சொன்னான்
என்னடா வாய் நீளுது? என்று கண்ணன் கேட்க, இப்போ நீங்க சொல்ல போறீங்களா?, இல்லையா என்று அங்கிருந்த பூ ஜாடியை தட்டி விட, அந்த பீங்கான் ஜாடியோ தரையில் விழுந்து,தூள் தூளாக சிதறியது.
மகனின் கோவ முகத்தை பார்த்து கண்ணனுக்கே, ஒரு நொடி பகீரென்று இருந்தது.
அதான் உங்க லட்சணம் தெரிஞ்சிட்டே இன்னும் மறைக்க என்ன இருக்கு என்றார், தன் பங்கிற்கு வசந்தி.
இப்போ உங்களுக்கு என்ன நடந்ததுனு உண்மை தெரியனும் அப்படி தானே. சரி சொல்றேன் கேட்டுக்குங்க.
மூன்று தலைமுறையா அன்பழகனோட குடும்பம் தான், பஞ்சாயத்து தலைவராக ஊர் மக்கள் தேர்ந்தெடுத்துட்டு வந்தாங்க.எங்க தாத்தா காலத்திலிருந்து போராடுனோம் அந்த பதவிக்கு.ஆனால் மக்களுக்கு அவங்க குடும்பத்தின் மீது தான் நம்பிக்கை இருந்துச்சி.
சரி, தனித்து நிற்குறப்போ தான பதவி தான் இல்லை.அந்த குடும்பத்தில் பொண்ணை கட்டி மருமகனா உள்ளே போய் விட்டால், பிறகு பதவி கிடைச்சிடும்னு, நானும் எங்க அப்பாவும் முடிவு பண்ணுனோம்.
பெருமாளோட பெரிய தங்கச்சி, சிந்துவ கட்டிக்க சொன்னார் எங்க அப்பா.ஆனால் எனக்கு பெருமாளோட பெரியம்மா பொண்ணு, பார்வதிய தான் புடிச்சிருந்தது.அதும் இல்லாமல் பார்வதி பெயரில் இருக்கும் சொத்துக்கு, யாரும் பங்குக்கு வர மாட்டாங்கனு இருந்தேன்.
ஒரு வழியா எங்க அப்பாவ சரிகட்டி,வீடு தேடி போய் பொண்ணு கேட்டதுக்கு,அந்த வள்ளியும்,அவங்க வீட்டுக்காரு பிரகாசமும் பார்வதியை தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
பிறகு,பார்வதிய தன்னோட அண்ணன் பையனுக்கே அந்த பெருமாளோட அம்மா கட்டி வச்சிட்டாங்க.
ஆசைப்பட்ட பொண்ணும் கிடைக்கல. அதே போல பதவியும் கிடைக்கலை.
"இதற்கு நடுவுல, எங்கப்பா இந்த விளங்காதவளை புடிச்சி என் தலையில கட்டி வச்சுட்டாரு".
என் கண்ணு முன்னாடியே, நான் ஆசைப்பட்ட இரண்டும் அவங்க கையில இருக்குறதை பார்த்து, எவ்வளவு வலினு சொல்ல முடியாது.அதும்,அந்த ரெண்டு குடும்பமும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.
எங்க அப்பாவும்,எதுக்கும் லாயக்கு இல்லைனு சொல்லிக்காட்டி கிட்டே இருந்தாரு.
எல்லாம் சேர்ந்து எனக்கு வெறி ஏறிட்டு. எப்படியாவது அந்த குடும்பத்தை பிரிக்கணும்னு இருக்கும் போது தான், பெருமாள் கூட பழக்கம் வச்சிக்கிட்டேன்.
அந்த கூறுகெட்டவன்.நான் சொல்றதுக்கெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டுவான்.அந்த நம்பிக்கைய வச்சி தான்,ரெண்டு குடும்பத்தையும் பிரிச்சேன்.
நல்லா போய்கிட்டு இருந்ததை,உன் கூட பொறந்தவளால் திரும்ப ஒன்னு சேருற போல ஆகிட்டேனு அனைத்தையும் சொல்லி முடித்தார்.
அண்ணனை தேடி வந்த முத்துவும் இவைகளையெல்லாம் கேட்டு விட்டு,ஆத்திரம் பொங்க, அடேய்,நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாடானு வாசலிலே நின்று கோவமாக கேட்டார்.
மனைவி பேசிய பேச்சுகள்,தலைக்கு மேல் வளர்ந்த மகனின் கேள்விகளெல்லாம் ஒன்று கூடி,பெருமாளின் நெஞ்சத்தை குத்தி கிழித்தது.
சட்டென்று வீட்டிலிருந்து வெளியே வந்தவருக்கு,கோயிலில் போய் சிறிது நேரம் இருக்கலாமென்று தோன்ற,அதன்படியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
"ஐயனார் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தவரின் காதில் விழுந்த வார்த்தைகளில், அப்படியே ஆணி அடித்தார் போல நின்றார்".
"அங்கு வலது பக்கம் மரத்தின் கீழே,குடி போதையில் இருந்த குப்பன்,கதிருக்கு தென்னக்கள்ளில் போதையை கலந்து கொடுத்ததையும்,அதை செய்ய சொல்லி முதலாளி மகள் தேவி தான் தனக்கு பணம் கொடுத்ததையும் பெருமையாக, தனது கூட்டாளியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
"பின்னர்,கையில் இருந்த பணத்தை காட்டியவன், இந்தாடா உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ".
நீ என் உசுரு,என் நண்பன்டானு வாய்க்கு வந்தபடி போதையில் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்ட பெருமாளிற்கு,தேவியின் மேல் கோபம் வந்தது.
"முதலில் இதை பற்றி கேட்டே ஆகனுமென்று வந்த வழியே திரும்பி கண்ணன் வீட்டை நோக்கி வந்தவரோ உள்ளே கண்ணன் பேசிய அனைத்தையும் கேட்டு,மேலும் அதிர்ந்து போய் நின்றார்.
கதிர் வீட்டிலோ ஏதோ அசம்பாவிதம் நடந்த வீடு போல,ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தனர்.
தேனூரில் இருக்கும் நெல்லு மண்டிக்கு பணம் வாங்க சென்ற ஜானும், வேலுவும் வீட்டிற்கு வர,அங்கே வீடு பூட்டியிருந்தது.
எங்கே போயிட்டு இந்த அம்மா?என்றவன்,சரி வாடா பனைமரம்.
"வள்ளி செல்லத்து கிட்ட பணத்தை குடுத்து வைக்கலாம்".அம்மாகிட்ட அது குடுத்துடும் என்று சொல்லிக்கொண்டே இருவரும் கதிர் வீட்டை நோக்கி வரும் போது, அங்கே தெரிந்தவர் ஒருவர், அடேய் வேலு எங்கடா போயிருந்த?.
என்னென்னமோ நடந்து போய்ட்டுடா என்றார்.
அவர் சொன்னதைக்கேட்டவன்,என்ன மாமா சொல்லுற?.நம்ப நெல்லு பணம் வாங்குறதுக்காக,அப்பா தான் குமார் கடை வரைக்கும் போய்ட்டு வரச்சொல்லுச்சினு, நானும் இவனும் காலையிலே போய்ட்டோம்.யாருக்கு என்னாச்சி மாமானு பதறிக்கொண்டே வேலு கேட்க,நம்ப கதிரு பயல் இப்படி பண்ணிட்டானேனு புலம்பினார்.
யோவ் மாமா...முதல்ல விஷயத்தை சொல்லி தொலையா.தலையும் புரியலை, வாலும் புரியலை என்றபடியே அவரிடம் சத்தம் போட்டான்.
பின்னர்,சற்று முன்பு நடந்ததையெல்லாம் அவர் சொல்ல,கேட்ட இருவருக்கும், பேரதிர்ச்சிலாம் ஒன்னும் ஏற்படவில்லை.ஆமாம்... நண்பன் ஏதோ ஒரு முடிவு எடுத்து தான் அமைதியாக இருக்கிறான் என்பது,முன்பே தெரிந்த ஒன்று தான்.
"கதிர் இப்படி ஒரு காரணத்தை சொல்வான் என்று,கொஞ்சம் கூட அவர்கள் எதிர்பார்க்க வில்லை".
நடந்ததற்கு அவன் சொல்லிய காரணத்தை கேட்ட பிறகு தான், நண்பனின் மேல் இருவருக்கும் கோபம் வந்தது.
வாடா முதல்ல அங்க போகலாமென்று வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன்,கதிர் வீட்டை நோக்கிச்சென்றான்.
சிறிது நிமிடத்தில் வாசலில் வந்து வண்டியை நிறுத்தி விட்டு,இருவரும் உள்ளே வர,அவர்கள் கண்ணில் பட்டதோ, ஆளுக்கொரு மூலையில் அழுது கொண்டிருக்கும் வீட்டினர்.
எங்க அவன்? என்று நிலவனிடம் கேட்க, அண்ணன் என்று,தோட்டத்து பக்கம் கையைக்காட்டினான்.
பல்லை கடித்துக்கொண்டே கோவத்தோடு தோட்டத்து கதவு வழியாக சென்று பார்க்க,கதிரோ அங்கே கிணற்றடியின் ஓரத்தில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான்.
அதைப்பார்த்த இருவரும், என்னடா ஆச்சு?? என்றபடியே அவனிடம் ஓடிப்போனவர்கள், ஒருவன் கதிரின் தலையை பிடிக்க,இன்னொருத்தன் கிணற்றிலிருந்து நீரை இறைத்து எடுத்தவன்,இந்தா வாய் கொப்பளிடா பங்காளி.
நண்பர்களின் குரலைக்கேட்டவன், தெரியலைடா தலை சுத்துது என்றவாறு வாளியில் இருந்த தண்ணீரை அள்ளி, வாயை கொப்பளித்து துப்பி விட்டு, முகத்தை கழுவிக்கொண்டு எழுந்தான்.
சீதாவோ நடக்கும் கூத்துகளை ஓரமாக உட்கார்ந்துக்கொண்டு,கண்ணில் நீர் வழிய, பார்த்துக்கொண்டு தான் இருந்தார்.இப்போ எப்படிடா இருக்கென ஜான் கேட்க, தலை தான் சுத்துர போல இருக்குடா.
நல்லா தானேடா இருந்த. அதுக்குள்ள உனக்கு என்னாச்சு என்று ஜான் கேட்டு முடிப்பதற்குள், நண்பனின் கன்னத்தில் மாறி, மாறி தன் பங்கு வேலுவும் அறைந்தான்.
என்னடா பண்ணி வச்சிருக்க?, எங்க இருந்து உனக்கு இப்படி பழிவாங்குற எண்ணம் வந்துச்சி??என்று கேட்டுக்கொண்டே மேலும் அறைந்தான்.
அடேய் மாப்பு நிறுத்துடா என்ற ஜானோ, ஒரு வழியாய் அவனை மேலும் அடிக்க விடாமல் தடுத்தவன்,டேய் என்னமோ இவனுக்கு நடந்துருக்குடா.ஆளை பாருடா, வித்யாசமா இருக்கான்.
அப்பொழுது தான் வேலுவும் கதிரை கவனித்து பார்த்தான்.
"தலையில் கை வைத்து கீழே குனிந்து நின்றான்".
டேய் என்னடா பண்ணுது என்று கேட்கும் பொழுதே, கீழே விழப்போன கதிரை தாங்கி பிடித்தவன், பங்காளி, பங்காளி, டேய் பங்காளி என்று கதிர் கன்னத்தை ஜானும் தட்டி எழுப்பினான்.
செல்வி...செல்வி என்கும் வேலுவின் குரலில் ஓடி வந்தவள்,அங்கே மயங்கி இருந்த அண்ணனை பார்த்து, அய்யோஓஓஓ அண்ணா என்று அருகில் வந்தவள், அண்ணாக்கு என்னாச்சிணானு பதறினாள்.
செல்வியின் சத்தத்தில், வீட்டின் உள்ளே இருந்தவர்களும் தோட்டத்திற்கு ஓடி வந்தனர்.
அண்ணா ...அண்ணா...என கத்திக்கொண்டிருந்தவளின் தலையில் தட்டிய வேலுவோ,ஏய்... எதுக்குடி இப்படி கத்தி ஊர கூப்புடுற?."போய் ஒரு சொம்பு மோர் எடுத்து வா".
"அண்ணாஆஆஆ..மாமா என்று அவள் இழுக்க, உன் அண்ணன் தான் போடி என்றவன், அடேய் பனைமரம் என்க, ஜான் நிமிர்ந்து பார்த்தான்".
கீழே குனிந்த வேலு, தனது தோளின் மேல் கதிரை தூக்கிப்போட்டவன், வீட்டின் உள்ளே தூக்கிச்சென்று, முற்றத்திலிருந்த சோபாவின் மேல் படுக்க வைத்து விட்டு,அந்த ஃபேனை போடுடா பனைமரமென்றான்.
உள்ளே வந்தவர்கள் எல்லாரும், என்னாச்சோ ஏதாச்சோ என்று அழ, அதைப்பார்த்த வேலு, கொஞ்சம் வாய மூடுறீங்களா?.
"எதுக்கு எடுத்தாலும் ஒப்பாரி வைக்குறதை தவிர,ஒரு மண்ணும் தெரியாதானு சத்தம் போட்டான்".
பனைமரம் இவன் தலையை புடிச்சி உட்காரு என்றவன்,செல்வி இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க என்று சத்தம் போட,இதோ மாமா என்று சொல்லிக்கொண்டே வந்தவள், அவனிடம் சொம்பை கொடுத்தாள்.
"அதை வாங்கியவன், கதிரின் வாயை திறந்து உள்ளே ஊற்றினான்".
ஒரு சொம்பு முழுவதையும் ஊற்றியவன், சாய்ச்சி உட்கார வை டா என்று சொல்லி,சொம்பை செல்வி கையில் குடுத்து விட்டு, மாப்பு, மாப்பு என்று கதிரின் கன்னத்தை தட்டி எழுப்பினான்.
கதிரும் சிறிது நொடிகளில்,சிரமப்பட்டு கண்ணை திறந்தவன் தன்னை சுற்றி எல்லாரும் கவலையாக நிற்பதை பார்த்தவன், ஒன்னும் இல்லை, ஏதோ மயக்கம் தான்.
அப்பொழுது,முத்து... பெரியவன் போய் ரொம்ப நேரம் ஆகுதுப்பா.போய் என்னனு பார்த்துட்டு வா என்றார் பிரகாசம் தாத்தா.
சரிப்பா என்று அவர் வெளியே போனார்.
இவ்வளவு நடந்தும் சீதாவோ மகன் இருக்கும் திசையில் வந்து எட்டி கூட பார்க்கவில்லை.
முத்துவோ ஏரிக்கரை,கோயில்,பெருமாளின் நண்பர்கள் வீடு என்று,அங்கெல்லாம் தேடி பார்க்க,பெருமாள் எங்கையுமே இல்லை.அண்ணன் எங்கே போயிருக்குமென்று யோசித்துக்கொண்டே வந்தார்.
அப்பொழுது,மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வந்த பூசாரி,முத்துவை பார்த்து கையை அசைத்தார்.
வண்டியை நிறுத்தியவர், சொல்லுணா என்க, கதிர் பற்றி கேட்டார்.
நடந்தது இனி மாற்ற முடியாது. ஆக வேண்டியதை பாக்கலாம்டா தம்பி என்றார் பூசாரி.
சரிணா என்ற முத்துவிடம், அண்ணா என்னடா சொல்லுது? அதற்கு முத்துவோ, வீட்டில் நடந்ததை சொல்லி விட்டு, பெருமாளை தேடி வந்ததை சொல்ல, அண்ணன் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான், கண்ணன் மச்சான் வீட்டு பக்கம் போனார்டா என்றார்.
அட... நான் இதை யோசிக்கவே இல்லை.சரிணா, நான் போய்
அங்க மாமா வீட்டில் பார்க்குறேன்னு சொல்லிக்கொண்டு, வண்டியை கண்ணன் வீட்டு பக்கம் ஓட்டினார்.
தேவி வீடு...
சொல்லுங்கப்பா?,எதுக்கு இப்படி ஒரு புத்தி உங்களுக்கு?.அப்படி இரண்டு குடும்பத்தையும் பிரிச்சு வைக்கிறதில் உங்களுக்கு என்ன ஆனந்தம்?.
உங்க கிட்ட கொஞ்சம் கூட இத நான் எதிர்பார்க்கல என்று தேவ் சத்தம் போட, உனக்கு என்னடா தெரியும் என்றார் கண்ணன்?.
எனக்கு எதுவும் தெரியாது தான்.
அதும் உங்களை போல,அடுத்த குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்தலாம் எனக்கு தெரியாது தானென்று தேவும் கோபமாக சொன்னான்
என்னடா வாய் நீளுது? என்று கண்ணன் கேட்க, இப்போ நீங்க சொல்ல போறீங்களா?, இல்லையா என்று அங்கிருந்த பூ ஜாடியை தட்டி விட, அந்த பீங்கான் ஜாடியோ தரையில் விழுந்து,தூள் தூளாக சிதறியது.
மகனின் கோவ முகத்தை பார்த்து கண்ணனுக்கே, ஒரு நொடி பகீரென்று இருந்தது.
அதான் உங்க லட்சணம் தெரிஞ்சிட்டே இன்னும் மறைக்க என்ன இருக்கு என்றார், தன் பங்கிற்கு வசந்தி.
இப்போ உங்களுக்கு என்ன நடந்ததுனு உண்மை தெரியனும் அப்படி தானே. சரி சொல்றேன் கேட்டுக்குங்க.
மூன்று தலைமுறையா அன்பழகனோட குடும்பம் தான், பஞ்சாயத்து தலைவராக ஊர் மக்கள் தேர்ந்தெடுத்துட்டு வந்தாங்க.எங்க தாத்தா காலத்திலிருந்து போராடுனோம் அந்த பதவிக்கு.ஆனால் மக்களுக்கு அவங்க குடும்பத்தின் மீது தான் நம்பிக்கை இருந்துச்சி.
சரி, தனித்து நிற்குறப்போ தான பதவி தான் இல்லை.அந்த குடும்பத்தில் பொண்ணை கட்டி மருமகனா உள்ளே போய் விட்டால், பிறகு பதவி கிடைச்சிடும்னு, நானும் எங்க அப்பாவும் முடிவு பண்ணுனோம்.
பெருமாளோட பெரிய தங்கச்சி, சிந்துவ கட்டிக்க சொன்னார் எங்க அப்பா.ஆனால் எனக்கு பெருமாளோட பெரியம்மா பொண்ணு, பார்வதிய தான் புடிச்சிருந்தது.அதும் இல்லாமல் பார்வதி பெயரில் இருக்கும் சொத்துக்கு, யாரும் பங்குக்கு வர மாட்டாங்கனு இருந்தேன்.
ஒரு வழியா எங்க அப்பாவ சரிகட்டி,வீடு தேடி போய் பொண்ணு கேட்டதுக்கு,அந்த வள்ளியும்,அவங்க வீட்டுக்காரு பிரகாசமும் பார்வதியை தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
பிறகு,பார்வதிய தன்னோட அண்ணன் பையனுக்கே அந்த பெருமாளோட அம்மா கட்டி வச்சிட்டாங்க.
ஆசைப்பட்ட பொண்ணும் கிடைக்கல. அதே போல பதவியும் கிடைக்கலை.
"இதற்கு நடுவுல, எங்கப்பா இந்த விளங்காதவளை புடிச்சி என் தலையில கட்டி வச்சுட்டாரு".
என் கண்ணு முன்னாடியே, நான் ஆசைப்பட்ட இரண்டும் அவங்க கையில இருக்குறதை பார்த்து, எவ்வளவு வலினு சொல்ல முடியாது.அதும்,அந்த ரெண்டு குடும்பமும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.
எங்க அப்பாவும்,எதுக்கும் லாயக்கு இல்லைனு சொல்லிக்காட்டி கிட்டே இருந்தாரு.
எல்லாம் சேர்ந்து எனக்கு வெறி ஏறிட்டு. எப்படியாவது அந்த குடும்பத்தை பிரிக்கணும்னு இருக்கும் போது தான், பெருமாள் கூட பழக்கம் வச்சிக்கிட்டேன்.
அந்த கூறுகெட்டவன்.நான் சொல்றதுக்கெல்லாம் மண்டைய மண்டைய ஆட்டுவான்.அந்த நம்பிக்கைய வச்சி தான்,ரெண்டு குடும்பத்தையும் பிரிச்சேன்.
நல்லா போய்கிட்டு இருந்ததை,உன் கூட பொறந்தவளால் திரும்ப ஒன்னு சேருற போல ஆகிட்டேனு அனைத்தையும் சொல்லி முடித்தார்.
அண்ணனை தேடி வந்த முத்துவும் இவைகளையெல்லாம் கேட்டு விட்டு,ஆத்திரம் பொங்க, அடேய்,நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாடானு வாசலிலே நின்று கோவமாக கேட்டார்.