Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீடு...
கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கதிர்,குட்டி போட்ட பூனை போல பால்கனியில் நடந்து கொண்டிருந்தவனோ அவ்வப்போது வராத அழைப்பை போனில் பார்கவும் மறக்கவில்லை.
"எங்கே போய் தொலைஞ்சான் இவன்?"
சித்தி வீட்டுக்கு போனானா?இல்லை செவ்வா கிரகத்துக்கு போயிருக்கானானு தெரியலையே? என்று நண்பனை திட்டிக்கொண்டிருக்க, ரொம்ப புகழாதடா மாப்பு என்றவாறு வேலுவும் அங்கு வந்தான்.
நண்பனின் குரலைக்கேட்டவன் ஒருவித பரபரப்போடு வாடா வாடா...எங்கடா போய் தொலைஞ்சே? எவ்வளவு நேரம் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது?
அப்படியா?என்ன விஷயம் சொல்லு மாப்பு என்றபடி அங்கிருந்து சிமெண்ட் கட்டையின் மேலே உட்கார்ந்து கொண்டு வேலு பார்க்க,கதிர் அவனை முறைதக்கவும் எதுக்கு மாப்பு இவ்வளவு பாசமா பாக்குற?என்க,செருப்பு பிஞ்சிடும் டா.உன் தங்கச்சிகாரி கிட்ட கேட்டியா?,இல்லையானு? சொல்லி தொலைடா.
சரி... மாப்ளை ரொம்ப சூடா இருக்கான், இனியும் விளையாட்டு வேண்டாம் என்று உள்ளுக்குள் நினைத்தவன்,ம்ம் அல்லி கிட்ட கேட்டேன் டா என்க, சொல்லுடா மச்சான் யாரவள்? என்று ஆர்வமாக அவனருகில் வந்து கதிர் கேட்க,தாமரை என்றான்.
"அவன் சொன்ன பெயரை கேட்டவன், தாமரையா!,இந்த ஊர்ல நமக்கு தெரியாத பேரா இருக்கே?என்று யோசனையாக,கவிதா சித்தியோட பெரிய பொண்ணு தாமரை.
வேலு சொன்னதைக்கேட்டு அதிர்சியானவன்,நிஜமாவாடா?என்க, ம்ம்...தாமரை ஊருக்குள்ள வந்த இரண்டு நாள் ஆகுதுடா.
ஓஓஓ என்ற கதிர்,அதற்கு பிறகு அதைப் பற்றி எதுவும் பேசாமல் உள்ளே சென்றவன்,தனது பீரோவில் இருந்த செயினை எடுத்து வந்து இதை உன் தங்கச்சி கிட்ட கொடுத்துடா மாப்பு என்றபடி வேலுவின் முன்பு நீட்டினான்.
என்னடா இது என்றவனுக்கு, அன்றைக்கு மோதுனதில் என் சட்டை பட்டன்ல மாட்டிகிச்சி,அந்த புள்ளையோடது தான் என்க,ஓஓஓ என்றவன்,அப்போ அவ்வளவு தானா?
ஹம்யென எங்கையோ பார்த்துக்கொண்டு கதிர் சொன்னான்.
சரி குடுடா என்று செயினை வாங்கி கொண்ட வேலு,நேரம் ஆகிட்டு சாப்பிட்டு படு காலையில் பார்க்கலாமென்று நண்பனின் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.
தன் மேல் மோதியவள் தனது அத்தை மகள் தானா?,அவ இப்போ எப்படி இருப்பாள் என்று யோசித்தவனுக்கு, அவன் மேல் அவள் விழுந்த தருணம் நினைவுக்கு வந்தது.
பஞ்சு மூட்டை போல எவ்வளவு மென்மையா இருக்கானு தலையை உதறியவன் இது சரி வராதுடா கதிர் என தன் இதயத்தின் மேல் கை வைத்து சொல்லிக்கொண்டான்.
அப்பொழுது,அண்ணா சாப்ட வா என்று கதவிற்கு பின்னாலிருந்து செல்வி கூப்பிடுவது கேட்கவும்,தற்பொழுது இருக்கும் மனநிலைக்கு சாப்பிடவே தோன்றவில்லை.கதவை திறந்தவன், கொஞ்ச நேரம் கழித்து வரேன் செல்வி என்க,சரிணா என்று அங்கிருந்து சென்றாள்.
கதவை மூடிவிட்டு கட்டில் மேல் வந்து படுத்தவனுக்கு டாலர் நினைவு வர, அவசரப்பட்டு கொடுத்துட்டோமோ என்றவன்,இனி அவளை நினைக்க கூடாதுடானு சொல்லி விட்டு கட்டிலிருந்து எழுந்தவன் கீழே சென்றான்.
அவன் கீழே வர அங்கு டீவியில் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும்"... என்ற பாடல் ஓட அதைக்கேட்டவனுக்கு மீண்டும் தாமரை நினைவு வந்தது. வாப்பா என வள்ளி அப்பாயி பேரனை கூப்பிட,அவள் நினைவிலிருந்து வெளியே வந்தவன்,சாப்டியா அப்பாயி என்றவாறு அவரின் அருகில் உட்கார,நீ வருவனு தான் உட்கார்ந்திருக்கேன்.
"உன்னை யாரு இப்படி இருக்க சொன்னா என்றவன்,அம்மா சாப்பாடு எடுத்து வா என்க,ராதாவும்,சீதாவும் சாப்பாட்டு பாத்திரங்களோடு அங்கு வந்தனர்.பின்னர் மாமியாருக்கும் பிள்ளைகளுக்கும் பரிமாற,நீங்களும் உட்காருங்களேம்மா என்றார் வள்ளி அப்பாயி.
இருக்கட்டுங்கத்தை...அவங்க மூன்று பேரும் இன்னும் வரலையேனு ராதா சொல்ல,இந்த நேரத்தில் எங்கே போயிருக்காங்க என்றான் கதிர்.
பொங்கல் வருதேப்பா,கோயில் பூஜை, மஞ்சுவிரட்டு பற்றி பேசணும்னு ஊர் கூட்டம் போட்டுருக்காங்க.ஓஓஓ... என்றவன்,அம்மா நாளைக்கு நிலவன் வந்துருவான் காலையிலே சீக்கிரமா நான் போகனும்.
"சரிப்பா என்றனர்"
சாப்பிட்டு முடித்தவன் டீவியின் முன்பு அமர,அடுத்த பாடல் ஓடியது." அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே..பருவம் சுமந்து வந்த பாவாடை தாவணியே" என்று.அந்த பாடலை கேட்டவனோ,என்னடா கதிர் உனக்கு வந்த சோதனை?என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், சேனலை மாற்ற,ஏன்ணா நல்ல பாட்டு தானே?,உனக்கும் ரொம்ப புடிச்ச பாட்டு என்றாள்.
ஆமா செல்வி.வேற என்ன ஓடுதுனு பாக்குறேன் என சமாளித்து விட்டு சில சேனல்களை மாற்றியவனுக்கு அந்த சேனலே பரவாயில்லை என்று தோன்ற மீண்டும் அதே சேனலை வைத்தான்.
பாட்டியும் அவர்களோடு வந்து டீவி பார்க்க,அப்பாயி வெற்றிலை குடு என்று கதிர் தனது கையை நீட்ட,இதோப்பு என்றவர்,தனது சுருக்கு பையிலிருந்து ஒரு கொட்டப்பாக்கை எடுத்து அவனிடம் கொடுக்கவும் அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டான்.
பின்னர்..கொழுந்து வெற்றிலையை தேடி எடுத்தவர்,அதன் மேல் அளவாக சுண்ணாம்பை தடவி அதை நான்காக மடித்து இந்தாப்பு என பேரனிடம் நீட்ட, டீவியை பார்த்துக்கொண்டே வாங்கி வாயில் போட்டு மெல்ல தொடங்கினான்.
சிறிது நிமிடம் சென்று, அவன் முன்பு எச்சில் துப்பும் குவளையை நீட்டியவர் இதுல துப்பிக்கப்பு என்க,அதை வாங்கியவன் வாயில் இருந்த வெற்றிலையின் சாற்றை துப்ப,அப்பு உன் நாக்கை காட்டு?.
பாட்டியிடம் தனது நாக்கை நீட்ட, வெற்றிலையின் கறையோ நன்கு கோவை பழம் போல் சிவந்திருந்தது. என் அப்புவ கட்டிக்க போறவள் ரொம்ப கொடுத்து வச்சவ என்று அப்பாயி சொல்ல,அவனுக்கு உடனே தாமரையின் நினைவுதான் வந்தது
ஐயோ என்ன இவ நினைவு வந்து இப்படி நம்மள பாடா படுத்துதேனு முணவியவன்,என்ன அப்பாயி விளையாடுறியா?, சுண்ணாம்பு அதிகமா தடவி குடுத்துட்டு இல்லாத கதைய சொல்லிட்டு இருக்கியே?
" அப்பு....அனுபவஸ்தி சொல்லுறேன்.நீ பாக்க தான போற என்றவர்,ஏன் அப்பு, அந்த தேவிக்கு உன்னை தான் புடிச்சிருக்காமே கட்டிக்க வேண்டியதானே என பேரனை நோட்டம் விட்டு பார்த்தார்.
எதேஏஏஏ...!
என்ன கிண்டலா இருக்கா உனக்கு?.
எனக்கு பொண்டாட்டினா அது தாமரை தான் என சொல்ல வந்தவன் பின்னர் வார்தையை அடக்கி கொண்டு, எங்கேயாவது பொறந்துருப்பாள்.அது சத்தியமா தேவி இல்லை.இப்போ எனக்கு கல்யாணம் கில்யாணம் பண்ற எண்ணமெல்லாம் இல்லை.
அப்படி உங்களுக்கு கல்யாண சோறு சாப்பிட ஆசையா இருந்தால் வளவனுக்கு பண்ணி வச்சி வாய்க்கு வக்கனையா சாப்டுங்கனு சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான்.
தாமரை வீடு.....
என்ன தாமரை உன் பெரியம்மாவ பார்த்திட்டியா என கலா அப்பாயி கேட்க, பார்த்துட்டேன் அப்பாயி,அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம் என்றவள் போனில் பேசிய விஷயத்தை அங்கிருந்த தனது தந்தை,தாத்தா மற்றும் அப்பாயிடம் சொல்ல, அதைக்கேட்டவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
எல்லாம் அந்த மாரியாத்தா கருணை தான் என்றவருக்கு,ஆமா கிழவி. கஷ்டபட்டு படிச்சி திறமையை வளர்த்துகிட்டது என் அக்கா.நீ ஈசியா ஆத்தா தான் காரணம்னு சொல்லுற என்றாள் அல்லி.
நல்லா சொல்லு அல்லி என சிவாவும் சொல்ல,அட போங்கடா போக்கத்தை பயலுங்களா,அவ கருணை இல்லாமல் எதுவும் நடக்காது.
சரி அப்பாயி,நீங்க சொல்ற போலவே இருக்கட்டும் என்றவள்,முதல் ஓவியம் நம்ப குலதெய்வத்தை தான் வரையலானு இருக்கேன்.அதோடு நாளைக்கே வேலைய ஆரம்பிக்கலானு இருக்கேன் அப்பாயி என்றவளுக்கு, அப்படியா என்றவர்,எலே அல்லி அந்த காலண்டர்ல நாளைக்கு நல்ல நேரம் பாரு என்க,ம்ம் என்றவள் எழுந்து போய் பார்த்து விட்டு,காலையில் எட்டு மணியிலிருந்து ஒன்பதரை வரை நல்ல நேரம் இருக்கு அப்பாயி.
ஏம்மா கவிதா...காலையில சாமிக்கு கொஞ்சம் பொங்கல் வைத்து பிள்ளைகளோடு நீயும் கூட போயிட்டு சூடத்தை ஏத்தி ஆத்தாவ வேண்டிகிட்டு வா என கலா அப்பாயி சொல்ல, சரிங்கத்தை.நேரமாகிட்டு, வாங்க சாப்பிடலாமென கவிதா கூப்பிட,நாங்க அம்மா வீட்டிலே சாப்பிட்டோம் என்ற மூவரும் அவரவர் அறைக்கு சென்று படுத்தனர்.
நடந்த நிகழ்வுகளை நினைத்து தாமரைக்கு தான் தூக்கமே வரவில்லை .
இவ்வளவு பெரிய வாய்ப்பு தனக்கு கிடைக்குமென்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.அவள் ஆசைப்பட்டது எல்லாம் வி.வி..யிடம் அசிஸ்டெண்டாக சேரணும்.
இன்று அவரே இப்படி ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருப்பது தன் மேல் உள்ள நம்பிக்கையால் என்பது புரிய,கடவுள் புண்ணியத்தில் இதை நல்லபடியா முடித்து அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் கண்ணை மூடி தூங்கலானாள்.
அதிகாலையில் எழுந்தவளோ தலை குளித்து வேறு உடையை மாற்றிக்கொண்டு முன்பக்க வாசல் கதவை திறந்து,முன் தினம் இரவே எடுத்து வைத்த சாணியை வாலியில் கரைத்தவள் வாசல் முழுவதும் தெளித்து விட்டு,தென்னை விளக்கமாறால் கூட்டி முடிக்க,அல்லியும் எழுந்து வந்தவள், இந்த நள்ளிரவில் என்ன பண்ணுறக்கா என்றபடி அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்தாள்.
தங்கைக்கு ஒரு சிரிப்பை பதிலளித்து விட்டு கூட்டிய விளக்கமாரை ஓரமாக வைத்து விட்டு,கோலமாவு டப்பாவை எடுத்து,வாசலில் புள்ளி வைத்து கோலமிட தொடங்கினாள்.
நிலவனை அழைக்க செல்லனும் என முன்தினம் இரவே அம்மாவிடம் சொல்லியிருந்ததால்,மகனின் அறைக்கு வந்து எழுப்பி விட்டவர்,தம்பி சுடு தண்ணி காய வச்சிருக்கேன் கீழயே குளிச்சிக்கப்பா என சீதா சொல்ல, சரிம்மா என்றவன் காலை கடனை முடித்து விட்டு கீழே செல்ல,அங்கு சீதாவோ குளிப்பதற்கு பதமாக நீரை கலந்து வைத்திருந்தார்.
சிறிது நிமிடத்தில் குளித்து முடித்து வந்தவனுக்கு சூடாக டீயை கொடுக்க, வாங்கி குடித்துவிட்டு மேலே சென்றவன் தயாராகி அம்மாவிடம் சொல்லி விட்டு வண்டியில் ஏறிச்சென்றான்.
கவிதா வீட்டின் வழியாகத்தான் மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டும்.
இத்தனை வருடங்களாக அந்த பக்கம் பார்காமல் சென்றவனுக்கு இன்று ஏதோ உள்ளுணர்வு தூண்ட, வண்டியின் வேகத்தை குறைத்து அத்தை வீட்டு பக்கம் திரும்பி பார்க்க,அங்கே தலையில் துண்டை கட்டிக்கொண்டு வாசலில் பெண்ணொருத்தி கோலம் போடுவதும், அவளின் பின்புற வரி வடிவமும் தெரிந்தது.
" ஓஓஓ...இவ்வளவு சீக்கிரம் எழும் பழக்கம்லாம் இவளுக்கு இருக்கோ என நினைத்துக்கொண்டே வண்டியின் வேகத்தை அதிகரித்து சென்றவனின் சிந்தனை,அவள் முகம் எப்படி இருக்கும் என்கும் யோசனையானது.
தேவி வீடு....
வெளியே வந்த வசந்தியோ,கணவர் இன்னும் யோசனையோடே திண்ணையில் இருப்பதை கண்டவர், அப்படி என்ன சிந்தனை இந்த மனுஷனுக்கு?சரி கூப்பிட்டு பார்ப்போமென்று தேவ் அப்பா,தேவ் அப்பா என்க,மனைவியின் அழைப்பில் கண்ணனும் தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தார்..
"சாப்ட வாங்க என்க,ம்ம் என்றவர், எழுந்து உள்ளே போய் கையை கழுவிட்டு வந்து உட்கார கணவனுக்கு உணவை பரிமாறிக்கொண்டே,மகள் சொன்ன விஷயத்தை காதில் போட்டு வைத்தார்.
சாப்பிட்டுக்கொண்டே அதைக் கேட்ட கண்ணன்,சரி வசந்தி தாராளமா நேரம் எடுத்துக்கட்டும்,ஆனால் நான் பாக்குற மாப்பிள்ளையை தான் கட்டிக்கனும்னு சொல்லிடு என்றபடி எழுந்து சென்றார்.
கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்த கதிர்,குட்டி போட்ட பூனை போல பால்கனியில் நடந்து கொண்டிருந்தவனோ அவ்வப்போது வராத அழைப்பை போனில் பார்கவும் மறக்கவில்லை.
"எங்கே போய் தொலைஞ்சான் இவன்?"
சித்தி வீட்டுக்கு போனானா?இல்லை செவ்வா கிரகத்துக்கு போயிருக்கானானு தெரியலையே? என்று நண்பனை திட்டிக்கொண்டிருக்க, ரொம்ப புகழாதடா மாப்பு என்றவாறு வேலுவும் அங்கு வந்தான்.
நண்பனின் குரலைக்கேட்டவன் ஒருவித பரபரப்போடு வாடா வாடா...எங்கடா போய் தொலைஞ்சே? எவ்வளவு நேரம் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது?
அப்படியா?என்ன விஷயம் சொல்லு மாப்பு என்றபடி அங்கிருந்து சிமெண்ட் கட்டையின் மேலே உட்கார்ந்து கொண்டு வேலு பார்க்க,கதிர் அவனை முறைதக்கவும் எதுக்கு மாப்பு இவ்வளவு பாசமா பாக்குற?என்க,செருப்பு பிஞ்சிடும் டா.உன் தங்கச்சிகாரி கிட்ட கேட்டியா?,இல்லையானு? சொல்லி தொலைடா.
சரி... மாப்ளை ரொம்ப சூடா இருக்கான், இனியும் விளையாட்டு வேண்டாம் என்று உள்ளுக்குள் நினைத்தவன்,ம்ம் அல்லி கிட்ட கேட்டேன் டா என்க, சொல்லுடா மச்சான் யாரவள்? என்று ஆர்வமாக அவனருகில் வந்து கதிர் கேட்க,தாமரை என்றான்.
"அவன் சொன்ன பெயரை கேட்டவன், தாமரையா!,இந்த ஊர்ல நமக்கு தெரியாத பேரா இருக்கே?என்று யோசனையாக,கவிதா சித்தியோட பெரிய பொண்ணு தாமரை.
வேலு சொன்னதைக்கேட்டு அதிர்சியானவன்,நிஜமாவாடா?என்க, ம்ம்...தாமரை ஊருக்குள்ள வந்த இரண்டு நாள் ஆகுதுடா.
ஓஓஓ என்ற கதிர்,அதற்கு பிறகு அதைப் பற்றி எதுவும் பேசாமல் உள்ளே சென்றவன்,தனது பீரோவில் இருந்த செயினை எடுத்து வந்து இதை உன் தங்கச்சி கிட்ட கொடுத்துடா மாப்பு என்றபடி வேலுவின் முன்பு நீட்டினான்.
என்னடா இது என்றவனுக்கு, அன்றைக்கு மோதுனதில் என் சட்டை பட்டன்ல மாட்டிகிச்சி,அந்த புள்ளையோடது தான் என்க,ஓஓஓ என்றவன்,அப்போ அவ்வளவு தானா?
ஹம்யென எங்கையோ பார்த்துக்கொண்டு கதிர் சொன்னான்.
சரி குடுடா என்று செயினை வாங்கி கொண்ட வேலு,நேரம் ஆகிட்டு சாப்பிட்டு படு காலையில் பார்க்கலாமென்று நண்பனின் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.
தன் மேல் மோதியவள் தனது அத்தை மகள் தானா?,அவ இப்போ எப்படி இருப்பாள் என்று யோசித்தவனுக்கு, அவன் மேல் அவள் விழுந்த தருணம் நினைவுக்கு வந்தது.
பஞ்சு மூட்டை போல எவ்வளவு மென்மையா இருக்கானு தலையை உதறியவன் இது சரி வராதுடா கதிர் என தன் இதயத்தின் மேல் கை வைத்து சொல்லிக்கொண்டான்.
அப்பொழுது,அண்ணா சாப்ட வா என்று கதவிற்கு பின்னாலிருந்து செல்வி கூப்பிடுவது கேட்கவும்,தற்பொழுது இருக்கும் மனநிலைக்கு சாப்பிடவே தோன்றவில்லை.கதவை திறந்தவன், கொஞ்ச நேரம் கழித்து வரேன் செல்வி என்க,சரிணா என்று அங்கிருந்து சென்றாள்.
கதவை மூடிவிட்டு கட்டில் மேல் வந்து படுத்தவனுக்கு டாலர் நினைவு வர, அவசரப்பட்டு கொடுத்துட்டோமோ என்றவன்,இனி அவளை நினைக்க கூடாதுடானு சொல்லி விட்டு கட்டிலிருந்து எழுந்தவன் கீழே சென்றான்.
அவன் கீழே வர அங்கு டீவியில் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும்"... என்ற பாடல் ஓட அதைக்கேட்டவனுக்கு மீண்டும் தாமரை நினைவு வந்தது. வாப்பா என வள்ளி அப்பாயி பேரனை கூப்பிட,அவள் நினைவிலிருந்து வெளியே வந்தவன்,சாப்டியா அப்பாயி என்றவாறு அவரின் அருகில் உட்கார,நீ வருவனு தான் உட்கார்ந்திருக்கேன்.
"உன்னை யாரு இப்படி இருக்க சொன்னா என்றவன்,அம்மா சாப்பாடு எடுத்து வா என்க,ராதாவும்,சீதாவும் சாப்பாட்டு பாத்திரங்களோடு அங்கு வந்தனர்.பின்னர் மாமியாருக்கும் பிள்ளைகளுக்கும் பரிமாற,நீங்களும் உட்காருங்களேம்மா என்றார் வள்ளி அப்பாயி.
இருக்கட்டுங்கத்தை...அவங்க மூன்று பேரும் இன்னும் வரலையேனு ராதா சொல்ல,இந்த நேரத்தில் எங்கே போயிருக்காங்க என்றான் கதிர்.
பொங்கல் வருதேப்பா,கோயில் பூஜை, மஞ்சுவிரட்டு பற்றி பேசணும்னு ஊர் கூட்டம் போட்டுருக்காங்க.ஓஓஓ... என்றவன்,அம்மா நாளைக்கு நிலவன் வந்துருவான் காலையிலே சீக்கிரமா நான் போகனும்.
"சரிப்பா என்றனர்"
சாப்பிட்டு முடித்தவன் டீவியின் முன்பு அமர,அடுத்த பாடல் ஓடியது." அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே..பருவம் சுமந்து வந்த பாவாடை தாவணியே" என்று.அந்த பாடலை கேட்டவனோ,என்னடா கதிர் உனக்கு வந்த சோதனை?என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன், சேனலை மாற்ற,ஏன்ணா நல்ல பாட்டு தானே?,உனக்கும் ரொம்ப புடிச்ச பாட்டு என்றாள்.
ஆமா செல்வி.வேற என்ன ஓடுதுனு பாக்குறேன் என சமாளித்து விட்டு சில சேனல்களை மாற்றியவனுக்கு அந்த சேனலே பரவாயில்லை என்று தோன்ற மீண்டும் அதே சேனலை வைத்தான்.
பாட்டியும் அவர்களோடு வந்து டீவி பார்க்க,அப்பாயி வெற்றிலை குடு என்று கதிர் தனது கையை நீட்ட,இதோப்பு என்றவர்,தனது சுருக்கு பையிலிருந்து ஒரு கொட்டப்பாக்கை எடுத்து அவனிடம் கொடுக்கவும் அதை வாங்கி வாயில் போட்டுக்கொண்டான்.
பின்னர்..கொழுந்து வெற்றிலையை தேடி எடுத்தவர்,அதன் மேல் அளவாக சுண்ணாம்பை தடவி அதை நான்காக மடித்து இந்தாப்பு என பேரனிடம் நீட்ட, டீவியை பார்த்துக்கொண்டே வாங்கி வாயில் போட்டு மெல்ல தொடங்கினான்.
சிறிது நிமிடம் சென்று, அவன் முன்பு எச்சில் துப்பும் குவளையை நீட்டியவர் இதுல துப்பிக்கப்பு என்க,அதை வாங்கியவன் வாயில் இருந்த வெற்றிலையின் சாற்றை துப்ப,அப்பு உன் நாக்கை காட்டு?.
பாட்டியிடம் தனது நாக்கை நீட்ட, வெற்றிலையின் கறையோ நன்கு கோவை பழம் போல் சிவந்திருந்தது. என் அப்புவ கட்டிக்க போறவள் ரொம்ப கொடுத்து வச்சவ என்று அப்பாயி சொல்ல,அவனுக்கு உடனே தாமரையின் நினைவுதான் வந்தது
ஐயோ என்ன இவ நினைவு வந்து இப்படி நம்மள பாடா படுத்துதேனு முணவியவன்,என்ன அப்பாயி விளையாடுறியா?, சுண்ணாம்பு அதிகமா தடவி குடுத்துட்டு இல்லாத கதைய சொல்லிட்டு இருக்கியே?
" அப்பு....அனுபவஸ்தி சொல்லுறேன்.நீ பாக்க தான போற என்றவர்,ஏன் அப்பு, அந்த தேவிக்கு உன்னை தான் புடிச்சிருக்காமே கட்டிக்க வேண்டியதானே என பேரனை நோட்டம் விட்டு பார்த்தார்.
எதேஏஏஏ...!
என்ன கிண்டலா இருக்கா உனக்கு?.
எனக்கு பொண்டாட்டினா அது தாமரை தான் என சொல்ல வந்தவன் பின்னர் வார்தையை அடக்கி கொண்டு, எங்கேயாவது பொறந்துருப்பாள்.அது சத்தியமா தேவி இல்லை.இப்போ எனக்கு கல்யாணம் கில்யாணம் பண்ற எண்ணமெல்லாம் இல்லை.
அப்படி உங்களுக்கு கல்யாண சோறு சாப்பிட ஆசையா இருந்தால் வளவனுக்கு பண்ணி வச்சி வாய்க்கு வக்கனையா சாப்டுங்கனு சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான்.
தாமரை வீடு.....
என்ன தாமரை உன் பெரியம்மாவ பார்த்திட்டியா என கலா அப்பாயி கேட்க, பார்த்துட்டேன் அப்பாயி,அப்புறம் ஒரு சந்தோஷமான விஷயம் என்றவள் போனில் பேசிய விஷயத்தை அங்கிருந்த தனது தந்தை,தாத்தா மற்றும் அப்பாயிடம் சொல்ல, அதைக்கேட்டவர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.
எல்லாம் அந்த மாரியாத்தா கருணை தான் என்றவருக்கு,ஆமா கிழவி. கஷ்டபட்டு படிச்சி திறமையை வளர்த்துகிட்டது என் அக்கா.நீ ஈசியா ஆத்தா தான் காரணம்னு சொல்லுற என்றாள் அல்லி.
நல்லா சொல்லு அல்லி என சிவாவும் சொல்ல,அட போங்கடா போக்கத்தை பயலுங்களா,அவ கருணை இல்லாமல் எதுவும் நடக்காது.
சரி அப்பாயி,நீங்க சொல்ற போலவே இருக்கட்டும் என்றவள்,முதல் ஓவியம் நம்ப குலதெய்வத்தை தான் வரையலானு இருக்கேன்.அதோடு நாளைக்கே வேலைய ஆரம்பிக்கலானு இருக்கேன் அப்பாயி என்றவளுக்கு, அப்படியா என்றவர்,எலே அல்லி அந்த காலண்டர்ல நாளைக்கு நல்ல நேரம் பாரு என்க,ம்ம் என்றவள் எழுந்து போய் பார்த்து விட்டு,காலையில் எட்டு மணியிலிருந்து ஒன்பதரை வரை நல்ல நேரம் இருக்கு அப்பாயி.
ஏம்மா கவிதா...காலையில சாமிக்கு கொஞ்சம் பொங்கல் வைத்து பிள்ளைகளோடு நீயும் கூட போயிட்டு சூடத்தை ஏத்தி ஆத்தாவ வேண்டிகிட்டு வா என கலா அப்பாயி சொல்ல, சரிங்கத்தை.நேரமாகிட்டு, வாங்க சாப்பிடலாமென கவிதா கூப்பிட,நாங்க அம்மா வீட்டிலே சாப்பிட்டோம் என்ற மூவரும் அவரவர் அறைக்கு சென்று படுத்தனர்.
நடந்த நிகழ்வுகளை நினைத்து தாமரைக்கு தான் தூக்கமே வரவில்லை .
இவ்வளவு பெரிய வாய்ப்பு தனக்கு கிடைக்குமென்று அவள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.அவள் ஆசைப்பட்டது எல்லாம் வி.வி..யிடம் அசிஸ்டெண்டாக சேரணும்.
இன்று அவரே இப்படி ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருப்பது தன் மேல் உள்ள நம்பிக்கையால் என்பது புரிய,கடவுள் புண்ணியத்தில் இதை நல்லபடியா முடித்து அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் கண்ணை மூடி தூங்கலானாள்.
அதிகாலையில் எழுந்தவளோ தலை குளித்து வேறு உடையை மாற்றிக்கொண்டு முன்பக்க வாசல் கதவை திறந்து,முன் தினம் இரவே எடுத்து வைத்த சாணியை வாலியில் கரைத்தவள் வாசல் முழுவதும் தெளித்து விட்டு,தென்னை விளக்கமாறால் கூட்டி முடிக்க,அல்லியும் எழுந்து வந்தவள், இந்த நள்ளிரவில் என்ன பண்ணுறக்கா என்றபடி அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்தாள்.
தங்கைக்கு ஒரு சிரிப்பை பதிலளித்து விட்டு கூட்டிய விளக்கமாரை ஓரமாக வைத்து விட்டு,கோலமாவு டப்பாவை எடுத்து,வாசலில் புள்ளி வைத்து கோலமிட தொடங்கினாள்.
நிலவனை அழைக்க செல்லனும் என முன்தினம் இரவே அம்மாவிடம் சொல்லியிருந்ததால்,மகனின் அறைக்கு வந்து எழுப்பி விட்டவர்,தம்பி சுடு தண்ணி காய வச்சிருக்கேன் கீழயே குளிச்சிக்கப்பா என சீதா சொல்ல, சரிம்மா என்றவன் காலை கடனை முடித்து விட்டு கீழே செல்ல,அங்கு சீதாவோ குளிப்பதற்கு பதமாக நீரை கலந்து வைத்திருந்தார்.
சிறிது நிமிடத்தில் குளித்து முடித்து வந்தவனுக்கு சூடாக டீயை கொடுக்க, வாங்கி குடித்துவிட்டு மேலே சென்றவன் தயாராகி அம்மாவிடம் சொல்லி விட்டு வண்டியில் ஏறிச்சென்றான்.
கவிதா வீட்டின் வழியாகத்தான் மெயின் ரோட்டிற்கு செல்ல வேண்டும்.
இத்தனை வருடங்களாக அந்த பக்கம் பார்காமல் சென்றவனுக்கு இன்று ஏதோ உள்ளுணர்வு தூண்ட, வண்டியின் வேகத்தை குறைத்து அத்தை வீட்டு பக்கம் திரும்பி பார்க்க,அங்கே தலையில் துண்டை கட்டிக்கொண்டு வாசலில் பெண்ணொருத்தி கோலம் போடுவதும், அவளின் பின்புற வரி வடிவமும் தெரிந்தது.
" ஓஓஓ...இவ்வளவு சீக்கிரம் எழும் பழக்கம்லாம் இவளுக்கு இருக்கோ என நினைத்துக்கொண்டே வண்டியின் வேகத்தை அதிகரித்து சென்றவனின் சிந்தனை,அவள் முகம் எப்படி இருக்கும் என்கும் யோசனையானது.
தேவி வீடு....
வெளியே வந்த வசந்தியோ,கணவர் இன்னும் யோசனையோடே திண்ணையில் இருப்பதை கண்டவர், அப்படி என்ன சிந்தனை இந்த மனுஷனுக்கு?சரி கூப்பிட்டு பார்ப்போமென்று தேவ் அப்பா,தேவ் அப்பா என்க,மனைவியின் அழைப்பில் கண்ணனும் தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தார்..
"சாப்ட வாங்க என்க,ம்ம் என்றவர், எழுந்து உள்ளே போய் கையை கழுவிட்டு வந்து உட்கார கணவனுக்கு உணவை பரிமாறிக்கொண்டே,மகள் சொன்ன விஷயத்தை காதில் போட்டு வைத்தார்.
சாப்பிட்டுக்கொண்டே அதைக் கேட்ட கண்ணன்,சரி வசந்தி தாராளமா நேரம் எடுத்துக்கட்டும்,ஆனால் நான் பாக்குற மாப்பிள்ளையை தான் கட்டிக்கனும்னு சொல்லிடு என்றபடி எழுந்து சென்றார்.