Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 721
- Thread Author
- #1
எதுக்கு வாத்தி நீயும் உன் பொண்டாட்டி இப்படி பதறிங்க?உங்களை வர சொன்ன நான் இங்க இருக்கிறேன் அம்மாச்சி கிட்ட கேட்டு என்ன புண்ணியம் என்று டைனிங் டேபிளில் இருந்து மாறன் குரல் கொடுக்க மகனின் நக்கலை கேட்டு இருவரும் அவனை முறைத்து பார்த்தனர்.
ஒரு விஷயம் சொல்றேன் தெம்பா கேளுங்க என்கவும் என்னப்பா என்று வேகமாக வந்து கேட்க,சொல்லாம எங்க போயிட போறேன் என்று மாறன் கேட்க, ஏன்டா நாங்க உன்ன பெத்தோமா இல்ல நீ எங்கள பெத்தாயா என்று வேதவள்ளி மகனை முறைத்தார்.
அப்பொழுது படியில் இறங்கி வந்த நிலவனும் வெரோனிகாவும் அவர்களை பார்த்து தயங்கி நிற்க, காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர் சின்ன மகன் பக்கத்தில் யாரோ ஒரு பொண்ணு இருப்பதை பார்த்து யோசனையாக...
அது உன்னோட மருமகள்,போய் ஆசீர்வாதம் பண்ணுங்க என்றான்.
என்ன என்று மதியும் வேதவள்ளியும் அதிர்ந்தனர்...
ரெண்டு பேரும் காதலிச்சாங்க மூணு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டாங்க இப்போதைக்கு உங்க குடும்ப வாரிசு அந்த பொண்ணு வயித்துல வளருது என்றவன்,அக்கா சூடா இன்னும் ஒரு சப்பாத்தி எடுத்துட்டு வாங்க என்று கிச்சனிலிருந்த வேலையாளுக்கு மாறன் குரல் கொடுக்க வேகமாக போன மதி சின்ன மகனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவர் பெரியவன் இருக்கும்போது உனக்கு என்னடா அவசரம்?.
ஏன் இப்படி பண்ணனு என்று கேட்டு வேதவள்ளியும் அவர் பங்குக்கு மகனை அடிக்க,அம்மா உங்களை அடிக்கிறதுக்கா வர சொன்னேன்?ரெண்டு பேரையும் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு முறைப்படி ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணுங்க பொண்ணு ஒன்னும் உன் மவன் பின்னாடி காதலிக்கிறேனு சுத்தலை.
பேர் வெரோனிகா விக்டர் நோ நோ வெரோனிகா நிலமாறன்.ஜெர்மனி சிட்டிசன் அவங்க அப்பா அம்மா இங்கதான் இருக்காங்க,நான் கூப்பிட்டு வரேனென்று மாறன் சொல்ல, நான் போய் வர சொல்கிறேன் அண்ணா நீங்கள் இருங்கள் என்று வெரோனிகா சொன்னாள்..
வேண்டாம் மா...நீலு போய் உன் மாமனாரையும் மாமியாரையும் கூப்பிட்டு வாடா என்கவும்,இதோ ணா என்று மாடிக்கு போனவன் விக்டரையும் பியூலாவையும் அழைத்துக் கொண்டு கீழே வர அங்கிருந்த மதிவாணனை பார்த்து விட்டு மதி என்று கூப்பிட திரும்பிப் பார்த்தவர் விக்டர் என்றார்.
படியிலிறங்கி வேகமாக வர இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்ள என்னடா நடக்குது என்று மற்றவர்கள் பார்த்தனர்.
டேய் இத்தன வருஷம் எங்கடா இருந்த என்று மதி கேட்க,அதெல்லாம் பெரிய கதை அப்புறம் சொல்றேன் நீ எப்படி டா இங்கு என்றார்.
இது என்னுடைய மாமியார் வீடு டா என் அப்பாவுடைய கூட பொறந்த தங்கச்சி தான் அத்தை என்று சாலா பாட்டியை காட்டியவர்,என்னடா சொல்ற என்று விக்டர் அதிர...ஆமாம் டா, கோத்தகிரியில் எங்க அப்பாவோட தங்கச்சி இருக்காங்கன்னு நாம ஸ்கூல் படிக்கும்போது சொல்லி இருக்கேன்னு அவங்க தான் என்றவர்,சொன்ன போல பியூலாவை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?.
அப்போ இந்த பொண்ணு உன்னோட பொண்ணாடா என்கவும் ஆமாடா என்றார்.
ரொம்ப நல்லா தான் போயிடுச்சு என்று எழுந்து போய் கையை கழுவிட்டு வந்த மாறன் அப்பா உங்க பிரண்டோட பொண்ணை தான் நீலு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான் இதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்க,இல்லையே என்றார்.
அது இருக்கட்டும் ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம் நானும் மெடிசன் படிப்பதற்காக சென்னை போயிட்டேன்.நீயும் திருச்சியில் உள்ள காலேஜிலையே ஜாயின் பண்ணிட்ட..சந்தர் எங்கே இருக்கிறான் டா?
எதாவது அவனை பற்றி தெரிந்ததா என்க, அதெல்லாம் பெரிய கதை டா அப்புறம் உனக்கு சொல்றேன் என்று பால்ய நண்பர்கள் இருவரும் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டவர்கள் பழைய கதை எல்லாம் பேச ஆரம்பித்தனர். .
வேதவள்ளியோ மருமகளை பார்த்து சிரித்தவர் வேற என்ன பண்ணுவது என்று மனதிற்குள் சொல்ல நிலமாறனோ தனது மனைவியை அழைத்துக் கொண்டு போய் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.
இப்ப எத்தனை மாசம் ஆகுது என்க, நாலு மாசம் ஆன்ட்டி என்றாள்.
மாறனோ தனது தாய் தகப்பனை பார்த்தவன் நாளை காலை எட்டு மணிக்கு எங்களுக்கு சென்னைக்கு பிளைட் அங்கிருந்து நான் டெல்லி போய்டுவேன் வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு அவன் ரூமிற்கு சென்று விட்டான்.
மறுநாள் வேலனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியவர்கள் கவிக்கு உடல்நிலை சரியில்லாத இருப்பதால் அவள் கொஞ்சம் குணமான பிறகு கோர்ட்டில் ஒப்படைப்பதாக சொல்ல பின்னர் மற்ற ஆதாரங்களையும் கொடுக்க கவிக்கும் வேலனுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கணும் என்று ஜட்ஜ் தீர்ப்பளித்தார்.
ஹாலில் பேசிக் கொண்டிருக்கும் போது விக்டர் மதி என்ற குரல் கேட்டு திரும்பியவர்கள் அங்கிருந்தவன் யாரென்ற அடையாளம் தெரியாமல் பார்க்க, சந்தர் டா என்க...
நண்பன் கிடைத்த சந்தோஷத்தில் இருவரும் வேகமாக போய் சந்தரை அணைத்துக் கொண்டு எங்க போன என்ன ஆச்சு என்று நண்பர்கள் பேசலானார்கள்.
பின்னர் அன்று இரவே மாறன், நிலவன், அவன் மனைவி மகனோடு டெல்லிக்கு வந்து விட்டனர்.அதன் பிறகு வழக்கம் போல் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
மறுநாள் தனது மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு மதிவாணனும் வேதவள்ளியும் ஊருக்கு வந்தவர்கள் நெருங்கிய சொந்த பந்தங்களை மட்டும் அழைத்து சில மாதங்களுக்கு முன்பு காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்று சொல்ல அவர்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.
விக்டரும் பியூலாவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு ஜெர்மனிக்கு கிளம்ப,வெரோனி தனது தாய் தந்தையை கண்ணீரோடு பார்க்க இவங்களும் உனக்கு அப்பா அம்மாதான் நீ மகள் போல நடந்து கொள்ளனும் மருமகளா நடந்துக்க கூடாது என்று மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு சென்றனர்.
மூன்று மாதங்கள் கடந்து ஓடியது மாதத்தில் ஒரு நாள் ஆர்த்தியின் கல்லறைக்கு போய் நிலமாறன் மட்டும் பூச்செண்டு வைத்துவிட்டு சிறிது நிமிடம் கண்ணை மூடி அவள் ஆத்மாவிற்கு பிரார்த்தனை பண்ணிக்கொண்டு வருவான்.
தற்போது வெரோனிக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருக்கு சொந்த பந்தங்களை கூட்டி விமர்சையாக வளைகாப்பு விட்டனர்.அதற்காக ஜெர்மனியில் இருந்து கலாவோடு வந்து வாழ்த்தி விட்டு இன்னும் ஐந்து வருடம் தான் வேலை என்பதால் அதன் பிறகு இந்தியாவில் வந்து செட்டில் ஆயிடுவதாக மகளிடம் வாக்கு கொடுத்துவிட்டு விக்டரும் பியூலாவும் சென்றார்கள்.
நிலவனோ இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து மனைவியை பார்த்துவிட்டு கோத்தகிரிக்கு செல்வான்.அப்படி ஒரு நாள் வந்திருந்த போது வெரோனி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் என்றதும் சொல்லுங்க நீலு என்றாள்.
நீ எதுக்காக வந்தியோ இதுவரைக்கும் அதை பண்ணவே இல்லையே என்கவும் என்னமோ என் மனசுக்கு அந்த சதாசிவத்தை மீட் பண்ணி பேசணும்னு தோணவே இல்லை.
அந்த ஆளுக்கு நான் யாரென்று தெரிய வேணாம் எனக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்று கணவனின் நெஞ்சில் மேல் சாய்ந்து கொண்டாள்.பின்னர் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹாலிங் பெல் சத்தம் கேட்டது.
யார் என்று போய் வேதவள்ளி கதவை திறக்க அங்கே புகழேந்தியும் ராஜகுமாரியும் நின்று கொண்டிருந்தனர்.இருவரையும் பார்த்தவர் கோபம் வந்தாலும் வீடு தேடி வந்தவர்களை அவமானப்படுத்தக் கூடாது என்பதால் வாங்க என்றார்.
உள்ளே வந்தவர்கள் அங்கே மதிவாணன் நிலமாறன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து தயங்கி நிற்க வாங்க சாப்பாட்டு நேரத்தில் வந்திருக்கீங்க என்கவும் அதெல்லாம் ஒன்னும் வேணாங்க சம்பந்தி.
நாங்கள் சாப்பிட்டு தான் வந்தோம் நீங்க முடிச்சிட்டு வாங்க என்று அங்கிருந்து சோபாவில் உட்கார் வேலை ஆட்களிடம் ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லி கொடுத்துவிட்டு வேதவள்ளியும் சாப்பிட்டு வரேனென்று போனார்.
கையை கழுவிட்டு வந்து உட்கார்ந்த மதியிடம் எங்களை மன்னித்து விடனும் சம்மந்தி என்று புகழேந்தி அவர் கையை பிடிக்க நான் மன்னிக்கிறதுக்கு என்ன இருக்குங்க என்றார்.
பொண்ணு அத்தனை பேருக்கு முன்னாடி பண்ணது தப்புதான் எத்தனையோ முறை உங்களை நேரில் வந்து பார்த்து பேசணும்னு இருந்தோம். ஆனா எங்களுக்கும் ஒரு வித குற்ற உணர்ச்சி தான்.
என் பொண்ணு மாப்பிள்ளையை தான் நினைச்சுட்டு இருக்குறா அது இல்லாம அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை தெரிஞ்சிருக்கு என்றவர் அன்று மகள் சொல்லியதெல்லாம் அவரிடம் சொல்ல தொடங்கினார். .
வேலன் பேலஸ்:
கணவர் இத்தனை மாதமும் தன்னிடம் நடித்திருக்கிறார் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து சரோஜா சதாசிவத்திடம் பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டார்.
அதேபோல் வேலனை அரெஸ்ட் பண்ணிய விஷயமும் அவர்கள் ஆர்த்தியை கொலை பண்ணியது எல்லாம் செய்திகள் வழியாக கேள்விப்பட்ட சரோஜா மகளையும் பார்ப்பதை நிறுத்தி விட்டார்.
நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லையே எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என்று தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு ஒரு தவ வாழ்க்கையை மேற்கொள்வது போல மாறிப் போனார்.
சதாசிவமும் மனைவியிடமும் தாயிடமும் எவ்வளவோ கெஞ்ச உன்னோட அப்பா புத்தி தான் உனக்கு இருக்கு அவர் எப்படி திருட்டுத்தனம் பண்ணுவாரோ நீயும் அப்படித்தானே பண்ணுவ என்க...
அய்யோ அம்மா அப்படி சொல்லாதீங்க என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்.எனக்கு தெரிஞ்சு நான் செய்த மிகப்பெரிய பாவம் அதுதான் அதை இத்தனை வருஷம் உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன் என்று சதாசிவம் அழ...உன் அப்பா பண்ணியதை விடவா பெரிய தப்பு பண்ணிருக்க போற என்ன சொல்லு என்றார்.
அதாவது நான் உண்மையிலேயே காதலிச்சது சந்திரிகாவை தான் மா என்க, என்ன சொல்ற என்று சரளா அதிர ஆமாம் மா. இந்த விஷயம் தெரிஞ்ச பிறகுதான் அப்பா எனக்கு சரோஜாவோட கல்யாணம் ஏற்பாடு பண்ணினார். மனசுல அவள நினைச்சுக்கிட்டு சரோஜாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை.
அதனாலதான் நைட்டு யாருக்கு தெரியாம சந்திரிகாவை கூப்பிட்டு நான் ஊரை விட்டு போலாம் நினைக்கும்போது அவதான் சொன்னா முதல்ல நீ ஒரு வேலைக்கு போயிட்டு நாலு காசூ சம்பாரி அதன் பிறகு வந்து என்னை கூப்பிட்டு போன்னு..
அதேபோல எனக்கும் ஒரு காலேஜ்ல வேலை கிடைத்தது அங்கே வீடு எல்லாம் பார்த்து வச்சுக்கிட்டு இங்க வந்து யாருக்கும் தெரியாம சந்திரிகாவையும் அவங்க பாட்டியையும் கூட்டிட்டு போனேன்.
அங்கே அந்த ஊர்க்காரங்க முன்னாடி கல்யாணம் பண்ணி வாழும் போது அவர் கன்சிவா இருந்தா அப்பொழுதுதான் அப்பா விளம்பரத்துல நீங்க ரொம்ப சீரியஸா இருக்கீங்க உடனே வர சொல்லி செய்தி கொடுத்திருந்தார்.
எனக்கு ஏதோ அப்பா பொய் சொல்றாருன்னு நினைச்சுக்கிட்டு வர இஷ்டம் இல்லை.சந்திரிகா தான் நீங்க போயி பாத்துட்டு வாங்கன்னு அனுப்புனா நானும் அங்க இருந்து கோயம்புத்தூருக்கு வந்தேன் எப்படி நான் வர விஷயம் அப்பாவுக்கு தெரிந்ததுன்னே தெரியல அங்க கார்ல எனக்காக காத்திருந்தார்.
கார்ல ஏறி உக்காந்துட்டு என் அம்மாவுக்கு என்ன ஆச்சு கேட்க அம்மா ரொம்ப சீரியஸா இருக்கானு போயிட்டு இருக்கும்போது பின்னாடி இருந்து ஏதோ ஒரு துணியை வைத்து அழுத்தினாங்க நான் மயக்கம் ஆயிட்டேன்.
எனக்கு மயக்கம் தெரிஞ்சி கண்ணு முழிச்சு பார்க்கும்போது அது ஏதோ ஒரு இருட்டறை போல இருந்தது.மூணு மாசமா அந்த ரூம்குள் தான் அடைச்சு வச்சிருந்தாங்க வாரத்துல ஒரு நாள் அப்பா வந்து சரோஜாவை கல்யாணம் பண்ணிக்கலனா உன் அம்மாவ கொன்னுடுவேன்னு மிரட்டிக்கொண்டே இருந்தார்.
நான் அதுக்கு சம்மதிக்கவில்லை என்றால் ஒரு நாள் நீங்க தூங்கிட்டு இருக்கும் போது உங்க நெத்தியில துப்பாக்கி வச்சி இருக்க போல போட்டோ எடுத்து எடுத்து காட்டினார். அதை பார்த்ததும் கண்டிப்பா செய்வார்னு சரோஜாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன் மா.
ஆனால் மறந்தும் சந்திரிகாவையும் அவங்க பாட்டியும் எந்த ஊர்ல இருக்காங்கன்னு நான் சொல்லவே இல்ல அப்போ அப்பா என்ன சொன்னாருனா சரோஜா கூட நீ வாழலனா கண்டிப்பா அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சு உன் கண்ணு முன்னாடி கொல்லுவேன்னு சொன்னாரு.
ஒரு விஷயம் சொல்றேன் தெம்பா கேளுங்க என்கவும் என்னப்பா என்று வேகமாக வந்து கேட்க,சொல்லாம எங்க போயிட போறேன் என்று மாறன் கேட்க, ஏன்டா நாங்க உன்ன பெத்தோமா இல்ல நீ எங்கள பெத்தாயா என்று வேதவள்ளி மகனை முறைத்தார்.
அப்பொழுது படியில் இறங்கி வந்த நிலவனும் வெரோனிகாவும் அவர்களை பார்த்து தயங்கி நிற்க, காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர் சின்ன மகன் பக்கத்தில் யாரோ ஒரு பொண்ணு இருப்பதை பார்த்து யோசனையாக...
அது உன்னோட மருமகள்,போய் ஆசீர்வாதம் பண்ணுங்க என்றான்.
என்ன என்று மதியும் வேதவள்ளியும் அதிர்ந்தனர்...
ரெண்டு பேரும் காதலிச்சாங்க மூணு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிட்டாங்க இப்போதைக்கு உங்க குடும்ப வாரிசு அந்த பொண்ணு வயித்துல வளருது என்றவன்,அக்கா சூடா இன்னும் ஒரு சப்பாத்தி எடுத்துட்டு வாங்க என்று கிச்சனிலிருந்த வேலையாளுக்கு மாறன் குரல் கொடுக்க வேகமாக போன மதி சின்ன மகனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தவர் பெரியவன் இருக்கும்போது உனக்கு என்னடா அவசரம்?.
ஏன் இப்படி பண்ணனு என்று கேட்டு வேதவள்ளியும் அவர் பங்குக்கு மகனை அடிக்க,அம்மா உங்களை அடிக்கிறதுக்கா வர சொன்னேன்?ரெண்டு பேரையும் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு முறைப்படி ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணுங்க பொண்ணு ஒன்னும் உன் மவன் பின்னாடி காதலிக்கிறேனு சுத்தலை.
பேர் வெரோனிகா விக்டர் நோ நோ வெரோனிகா நிலமாறன்.ஜெர்மனி சிட்டிசன் அவங்க அப்பா அம்மா இங்கதான் இருக்காங்க,நான் கூப்பிட்டு வரேனென்று மாறன் சொல்ல, நான் போய் வர சொல்கிறேன் அண்ணா நீங்கள் இருங்கள் என்று வெரோனிகா சொன்னாள்..
வேண்டாம் மா...நீலு போய் உன் மாமனாரையும் மாமியாரையும் கூப்பிட்டு வாடா என்கவும்,இதோ ணா என்று மாடிக்கு போனவன் விக்டரையும் பியூலாவையும் அழைத்துக் கொண்டு கீழே வர அங்கிருந்த மதிவாணனை பார்த்து விட்டு மதி என்று கூப்பிட திரும்பிப் பார்த்தவர் விக்டர் என்றார்.
படியிலிறங்கி வேகமாக வர இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்ள என்னடா நடக்குது என்று மற்றவர்கள் பார்த்தனர்.
டேய் இத்தன வருஷம் எங்கடா இருந்த என்று மதி கேட்க,அதெல்லாம் பெரிய கதை அப்புறம் சொல்றேன் நீ எப்படி டா இங்கு என்றார்.
இது என்னுடைய மாமியார் வீடு டா என் அப்பாவுடைய கூட பொறந்த தங்கச்சி தான் அத்தை என்று சாலா பாட்டியை காட்டியவர்,என்னடா சொல்ற என்று விக்டர் அதிர...ஆமாம் டா, கோத்தகிரியில் எங்க அப்பாவோட தங்கச்சி இருக்காங்கன்னு நாம ஸ்கூல் படிக்கும்போது சொல்லி இருக்கேன்னு அவங்க தான் என்றவர்,சொன்ன போல பியூலாவை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?.
அப்போ இந்த பொண்ணு உன்னோட பொண்ணாடா என்கவும் ஆமாடா என்றார்.
ரொம்ப நல்லா தான் போயிடுச்சு என்று எழுந்து போய் கையை கழுவிட்டு வந்த மாறன் அப்பா உங்க பிரண்டோட பொண்ணை தான் நீலு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான் இதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்க,இல்லையே என்றார்.
அது இருக்கட்டும் ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம் நானும் மெடிசன் படிப்பதற்காக சென்னை போயிட்டேன்.நீயும் திருச்சியில் உள்ள காலேஜிலையே ஜாயின் பண்ணிட்ட..சந்தர் எங்கே இருக்கிறான் டா?
எதாவது அவனை பற்றி தெரிந்ததா என்க, அதெல்லாம் பெரிய கதை டா அப்புறம் உனக்கு சொல்றேன் என்று பால்ய நண்பர்கள் இருவரும் தோள் மேல் கையை போட்டுக்கொண்டு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டவர்கள் பழைய கதை எல்லாம் பேச ஆரம்பித்தனர். .
வேதவள்ளியோ மருமகளை பார்த்து சிரித்தவர் வேற என்ன பண்ணுவது என்று மனதிற்குள் சொல்ல நிலமாறனோ தனது மனைவியை அழைத்துக் கொண்டு போய் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான்.
இப்ப எத்தனை மாசம் ஆகுது என்க, நாலு மாசம் ஆன்ட்டி என்றாள்.
மாறனோ தனது தாய் தகப்பனை பார்த்தவன் நாளை காலை எட்டு மணிக்கு எங்களுக்கு சென்னைக்கு பிளைட் அங்கிருந்து நான் டெல்லி போய்டுவேன் வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு அவன் ரூமிற்கு சென்று விட்டான்.
மறுநாள் வேலனை கோர்ட்டில் ஆஜர் படுத்தியவர்கள் கவிக்கு உடல்நிலை சரியில்லாத இருப்பதால் அவள் கொஞ்சம் குணமான பிறகு கோர்ட்டில் ஒப்படைப்பதாக சொல்ல பின்னர் மற்ற ஆதாரங்களையும் கொடுக்க கவிக்கும் வேலனுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்கணும் என்று ஜட்ஜ் தீர்ப்பளித்தார்.
ஹாலில் பேசிக் கொண்டிருக்கும் போது விக்டர் மதி என்ற குரல் கேட்டு திரும்பியவர்கள் அங்கிருந்தவன் யாரென்ற அடையாளம் தெரியாமல் பார்க்க, சந்தர் டா என்க...
நண்பன் கிடைத்த சந்தோஷத்தில் இருவரும் வேகமாக போய் சந்தரை அணைத்துக் கொண்டு எங்க போன என்ன ஆச்சு என்று நண்பர்கள் பேசலானார்கள்.
பின்னர் அன்று இரவே மாறன், நிலவன், அவன் மனைவி மகனோடு டெல்லிக்கு வந்து விட்டனர்.அதன் பிறகு வழக்கம் போல் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
மறுநாள் தனது மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு மதிவாணனும் வேதவள்ளியும் ஊருக்கு வந்தவர்கள் நெருங்கிய சொந்த பந்தங்களை மட்டும் அழைத்து சில மாதங்களுக்கு முன்பு காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டான் என்று சொல்ல அவர்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.
விக்டரும் பியூலாவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு ஜெர்மனிக்கு கிளம்ப,வெரோனி தனது தாய் தந்தையை கண்ணீரோடு பார்க்க இவங்களும் உனக்கு அப்பா அம்மாதான் நீ மகள் போல நடந்து கொள்ளனும் மருமகளா நடந்துக்க கூடாது என்று மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு சென்றனர்.
மூன்று மாதங்கள் கடந்து ஓடியது மாதத்தில் ஒரு நாள் ஆர்த்தியின் கல்லறைக்கு போய் நிலமாறன் மட்டும் பூச்செண்டு வைத்துவிட்டு சிறிது நிமிடம் கண்ணை மூடி அவள் ஆத்மாவிற்கு பிரார்த்தனை பண்ணிக்கொண்டு வருவான்.
தற்போது வெரோனிக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருக்கு சொந்த பந்தங்களை கூட்டி விமர்சையாக வளைகாப்பு விட்டனர்.அதற்காக ஜெர்மனியில் இருந்து கலாவோடு வந்து வாழ்த்தி விட்டு இன்னும் ஐந்து வருடம் தான் வேலை என்பதால் அதன் பிறகு இந்தியாவில் வந்து செட்டில் ஆயிடுவதாக மகளிடம் வாக்கு கொடுத்துவிட்டு விக்டரும் பியூலாவும் சென்றார்கள்.
நிலவனோ இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து மனைவியை பார்த்துவிட்டு கோத்தகிரிக்கு செல்வான்.அப்படி ஒரு நாள் வந்திருந்த போது வெரோனி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் என்றதும் சொல்லுங்க நீலு என்றாள்.
நீ எதுக்காக வந்தியோ இதுவரைக்கும் அதை பண்ணவே இல்லையே என்கவும் என்னமோ என் மனசுக்கு அந்த சதாசிவத்தை மீட் பண்ணி பேசணும்னு தோணவே இல்லை.
அந்த ஆளுக்கு நான் யாரென்று தெரிய வேணாம் எனக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்று கணவனின் நெஞ்சில் மேல் சாய்ந்து கொண்டாள்.பின்னர் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஹாலிங் பெல் சத்தம் கேட்டது.
யார் என்று போய் வேதவள்ளி கதவை திறக்க அங்கே புகழேந்தியும் ராஜகுமாரியும் நின்று கொண்டிருந்தனர்.இருவரையும் பார்த்தவர் கோபம் வந்தாலும் வீடு தேடி வந்தவர்களை அவமானப்படுத்தக் கூடாது என்பதால் வாங்க என்றார்.
உள்ளே வந்தவர்கள் அங்கே மதிவாணன் நிலமாறன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து தயங்கி நிற்க வாங்க சாப்பாட்டு நேரத்தில் வந்திருக்கீங்க என்கவும் அதெல்லாம் ஒன்னும் வேணாங்க சம்பந்தி.
நாங்கள் சாப்பிட்டு தான் வந்தோம் நீங்க முடிச்சிட்டு வாங்க என்று அங்கிருந்து சோபாவில் உட்கார் வேலை ஆட்களிடம் ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லி கொடுத்துவிட்டு வேதவள்ளியும் சாப்பிட்டு வரேனென்று போனார்.
கையை கழுவிட்டு வந்து உட்கார்ந்த மதியிடம் எங்களை மன்னித்து விடனும் சம்மந்தி என்று புகழேந்தி அவர் கையை பிடிக்க நான் மன்னிக்கிறதுக்கு என்ன இருக்குங்க என்றார்.
பொண்ணு அத்தனை பேருக்கு முன்னாடி பண்ணது தப்புதான் எத்தனையோ முறை உங்களை நேரில் வந்து பார்த்து பேசணும்னு இருந்தோம். ஆனா எங்களுக்கும் ஒரு வித குற்ற உணர்ச்சி தான்.
என் பொண்ணு மாப்பிள்ளையை தான் நினைச்சுட்டு இருக்குறா அது இல்லாம அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை தெரிஞ்சிருக்கு என்றவர் அன்று மகள் சொல்லியதெல்லாம் அவரிடம் சொல்ல தொடங்கினார். .
வேலன் பேலஸ்:
கணவர் இத்தனை மாதமும் தன்னிடம் நடித்திருக்கிறார் என்று தெரிந்ததோ அன்றிலிருந்து சரோஜா சதாசிவத்திடம் பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டார்.
அதேபோல் வேலனை அரெஸ்ட் பண்ணிய விஷயமும் அவர்கள் ஆர்த்தியை கொலை பண்ணியது எல்லாம் செய்திகள் வழியாக கேள்விப்பட்ட சரோஜா மகளையும் பார்ப்பதை நிறுத்தி விட்டார்.
நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லையே எனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை என்று தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக் கொண்டு ஒரு தவ வாழ்க்கையை மேற்கொள்வது போல மாறிப் போனார்.
சதாசிவமும் மனைவியிடமும் தாயிடமும் எவ்வளவோ கெஞ்ச உன்னோட அப்பா புத்தி தான் உனக்கு இருக்கு அவர் எப்படி திருட்டுத்தனம் பண்ணுவாரோ நீயும் அப்படித்தானே பண்ணுவ என்க...
அய்யோ அம்மா அப்படி சொல்லாதீங்க என் வாழ்க்கையில் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்.எனக்கு தெரிஞ்சு நான் செய்த மிகப்பெரிய பாவம் அதுதான் அதை இத்தனை வருஷம் உங்ககிட்ட சொல்லாம இருந்துட்டேன் என்று சதாசிவம் அழ...உன் அப்பா பண்ணியதை விடவா பெரிய தப்பு பண்ணிருக்க போற என்ன சொல்லு என்றார்.
அதாவது நான் உண்மையிலேயே காதலிச்சது சந்திரிகாவை தான் மா என்க, என்ன சொல்ற என்று சரளா அதிர ஆமாம் மா. இந்த விஷயம் தெரிஞ்ச பிறகுதான் அப்பா எனக்கு சரோஜாவோட கல்யாணம் ஏற்பாடு பண்ணினார். மனசுல அவள நினைச்சுக்கிட்டு சரோஜாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை.
அதனாலதான் நைட்டு யாருக்கு தெரியாம சந்திரிகாவை கூப்பிட்டு நான் ஊரை விட்டு போலாம் நினைக்கும்போது அவதான் சொன்னா முதல்ல நீ ஒரு வேலைக்கு போயிட்டு நாலு காசூ சம்பாரி அதன் பிறகு வந்து என்னை கூப்பிட்டு போன்னு..
அதேபோல எனக்கும் ஒரு காலேஜ்ல வேலை கிடைத்தது அங்கே வீடு எல்லாம் பார்த்து வச்சுக்கிட்டு இங்க வந்து யாருக்கும் தெரியாம சந்திரிகாவையும் அவங்க பாட்டியையும் கூட்டிட்டு போனேன்.
அங்கே அந்த ஊர்க்காரங்க முன்னாடி கல்யாணம் பண்ணி வாழும் போது அவர் கன்சிவா இருந்தா அப்பொழுதுதான் அப்பா விளம்பரத்துல நீங்க ரொம்ப சீரியஸா இருக்கீங்க உடனே வர சொல்லி செய்தி கொடுத்திருந்தார்.
எனக்கு ஏதோ அப்பா பொய் சொல்றாருன்னு நினைச்சுக்கிட்டு வர இஷ்டம் இல்லை.சந்திரிகா தான் நீங்க போயி பாத்துட்டு வாங்கன்னு அனுப்புனா நானும் அங்க இருந்து கோயம்புத்தூருக்கு வந்தேன் எப்படி நான் வர விஷயம் அப்பாவுக்கு தெரிந்ததுன்னே தெரியல அங்க கார்ல எனக்காக காத்திருந்தார்.
கார்ல ஏறி உக்காந்துட்டு என் அம்மாவுக்கு என்ன ஆச்சு கேட்க அம்மா ரொம்ப சீரியஸா இருக்கானு போயிட்டு இருக்கும்போது பின்னாடி இருந்து ஏதோ ஒரு துணியை வைத்து அழுத்தினாங்க நான் மயக்கம் ஆயிட்டேன்.
எனக்கு மயக்கம் தெரிஞ்சி கண்ணு முழிச்சு பார்க்கும்போது அது ஏதோ ஒரு இருட்டறை போல இருந்தது.மூணு மாசமா அந்த ரூம்குள் தான் அடைச்சு வச்சிருந்தாங்க வாரத்துல ஒரு நாள் அப்பா வந்து சரோஜாவை கல்யாணம் பண்ணிக்கலனா உன் அம்மாவ கொன்னுடுவேன்னு மிரட்டிக்கொண்டே இருந்தார்.
நான் அதுக்கு சம்மதிக்கவில்லை என்றால் ஒரு நாள் நீங்க தூங்கிட்டு இருக்கும் போது உங்க நெத்தியில துப்பாக்கி வச்சி இருக்க போல போட்டோ எடுத்து எடுத்து காட்டினார். அதை பார்த்ததும் கண்டிப்பா செய்வார்னு சரோஜாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன் மா.
ஆனால் மறந்தும் சந்திரிகாவையும் அவங்க பாட்டியும் எந்த ஊர்ல இருக்காங்கன்னு நான் சொல்லவே இல்ல அப்போ அப்பா என்ன சொன்னாருனா சரோஜா கூட நீ வாழலனா கண்டிப்பா அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சு உன் கண்ணு முன்னாடி கொல்லுவேன்னு சொன்னாரு.