New member
- Joined
- Apr 1, 2025
- Messages
- 4
- Thread Author
- #1
'இராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போனால் நீ என்னைக் காதலிக்கிறதா அர்த்தம்' அந்த பேப்பரில் எழுதியிருந்ததை கண்டு அனுராதாவிற்கு பயத்தில் படபடத்தது நெஞ்சம். அவள் ஓரளவுக்குத் தைரியசாலிதான். ஆனாலும் இந்த டாஸ்க் அவளை வெகுவாக அச்சுறுத்தியது.
இரண்டு நாளுக்கு முன் அவள் பாலாவிடம் தனது காதலைச் சொல்லியபோது அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவளது விளையாட்டுத் தனம் எல்லாம் அவனும் அறிவான் தானே. பக்கத்து பக்கத்தில் இருந்ததால் அனுவின் சேட்டைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவன் அவன்தான். மொத்தத்தில் அவளுக்கு வால் மட்டும்தான் இல்லை.
பாலாவை விடாமல் வம்பிழுத்து மாட்டி விடுபவளுக்கு அவன்மீது காதல் உணர்வு வந்திருக்க அன்றிலிருந்து வால்தனத்தினை அவனிடம் காட்டாமல் சற்று ஒதுங்கிப் போனாள். அதுவே அவனுக்கு வித்தியாசமாகப் பட ஒரு நாள் அவனிடம் கடிதத்தினை நீட்டியிருந்தாள். வாங்கியவன் படித்ததுமே அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். அவளது உடல்மொழி அனைத்தும் வித்தியாசமாகப் பட்டது.
உஷாரா இருடா பாலா. இல்லை இதை வச்சு பெருசா நம்மளைப் போட்டுத் தள்ளிடுவா என தனக்குள்ளேயே நினைத்தவன் "சாரி அனு. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை" என்று முடித்துக் கொண்டான்.
"ஏன் பாலா?" அவனது மறுப்பில் அவளுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. அவன் முன்னால் அழ வேண்டாம் என்று அமைதியாய் கேட்டாள்.
"எனக்குப் பிடிக்கலை அனு. நம்ம இரண்டு பேருக்கும் ஒத்து வராது. எனக்கு அந்த மாதிரி ப்லீங் எதுவும் உன் மேல வரலை. என்னை விட்டுடு" தன்மையாகவே பேசினான்.
"நான் விளையாடுறேன்னு நினைச்சுட்டயா பாலா. இல்லை. நான் உண்மையாத்தான் சொல்லுறேன்? ஐ லவ் யூ"
"நீ லவ் பண்ணாலும் என்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியல அனு"
"பாலா என்னால நீ இல்லாமல் இருக்க முடியாது. இனி நான் சண்டையெல்லாம் போட மாட்டேன். நீ என்னை ஏத்துக்கோ" வீம்பாய் ஒலித்தது அவள் குரல்.
எரிச்சல் வந்துவிட்டது பாலாவிற்கு.
அப்படியே திட்ட வாய் திறந்தவனை அவளது பேச்சு வாய் மூட வைத்தது.
"பாலா! நீ என் காதலை ஏத்துக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். என்ன செய்யணும்னு சொல்லு" என்று சொல்ல எத்தனை நாள் நம்மளை போட்டு டார்ச்சர் பண்ணா.. இன்னைக்கு இவளை நாம வச்சு செய்யலாம் என்றெண்ணி அந்த பேப்பரிலேயே எதையோ அவன் எழுதிவிட்டு அவளிடம் நீட்டியிருந்தான்.
அவளும் ஆசையுடன் அதை வாங்கிப் படிக்க முகம் வெளிறிப் போனது.
"என்ன பாலா இது" குரல் கூட லேசாய் பயத்தின் சாயம் ஒட்டி வந்தது.
"நீதான் லவ் பண்ணுறதா சொன்ன. அது உண்மையா என்னென்னு நான் செக் பண்ண வேண்டாமா? ஏன்னா நீ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்"
"அதுக்குன்னு இப்படியா? ப்ளீஸ் பாலா வேற ஏதாவது சொல்லேன் நான் செய்றேன்"
"நீ லவ் பண்ணுறது உண்மையாய் இருந்தால் இதைப் பண்ணு. இல்லை இடத்தைக் காலி பண்ணு
"சரி நான் இந்த டாஸ்க்கை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். நான் இதைச் செஞ்சு முடிச்சுட்டால் என்னோட காதலை நீ ஏத்துக்குவயா?"
"கண்டிப்பா ஏத்துக்குவேன்" என்று சொல்ல பாலாவிடம் "நான் யாருன்னு உனக்குத் தெரியாது.. நான் இதை செஞ்சு முடிக்குறேன் பாரு" என சவால் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.
மணி இப்போது 11.30 ஆகியிருந்தது
மீண்டுமொரு முறை அந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.
மனம் வடிவேல் டோனில் அதைப் படித்துப் பார்த்து ஒப்பாரி வைத்தது.
"பாவி. எனக்கு ஏத்த மாதிரி ஏதாவது டாஸ்க் குடுக்கலாம்ல அதைவிட்டுட்டு சுடுகாட்டுக் போகச் சொல்லுறான். நிறைய தடவை பேய் பேய்ன்னு நம்மளைத் திட்டுவானே. அங்க போனாலும் இவளுக்கு எதுவும் ஆகாதுன்னு நினைச்சுட்டான் போல. இப்போ என்ன 12 மணிக்கு நாம சுடுகாட்டுக்குப் போக முடியாதா? போய் காட்டுறேன். இந்த அனுவை அவன் சாதாரணமா நினைச்சுட்டான்ல. அவனை விடவே மாட்டேன். போயிட்டு வந்துட்டு அவனுக்கு இருக்கு. அனு நீ ரொம்ப ஸ்ட்ராங். சுடுகாடுக்குப் போறோம். அவன் மூக்கை உடைக்குறோம். அடுத்து அவனை போட்டு டார்ச்சர் பண்ணுறோம் என்றபடி மணியைப் பார்த்தாள்.
நேரம் இரவு 11. 40 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மொபைலை எடுத்துக் கொண்டாள். பக்கத்தில் இருந்த இரும்பு துண்டு ஒன்றை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். அம்மணிக்கு பாதுகாப்புக்காம். ரொம்ப பலமான ஏற்பாடுதான்..
சாமி அறைக்குள் நுழைந்தவள் "ஆத்தா! உன் புள்ளையை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.. பொறுப்புல இருந்து பின்வாங்கிடாத ஆத்தா.. நான் திரும்பி வந்த உடனே உனக்கு பொங்கல் வச்சுடுறேன் சரியா?" என வேண்டிக் கொண்டவள் விபூதி பட்டையையும் போட்டுக் கொண்டு மையவெளிக்குள் வந்தாள். வீடே இருளில் மூழ்கியிருக்க மொபைலை காட்டிக் காட்டி வாசற்கதவு வரைக்கும் வந்துவிட்டாள்.
யாரும் எழுந்துடக் கூடாது என சத்தமே கேட்காத வண்ணம் கதவினைத் திறந்தாள். மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தாள் தாய், தந்தை இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க கூடப் பிறந்தவனும் குப்புற படுத்து அவன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான்.
'போகாதடி. உசுருக்கு உத்தரவாதம் இல்லை' மனம் அலறத் தொடங்க அடக்கிக் கொண்டு வாசல் தாண்டி கால் எடுத்து வைத்தாள்.
அதுவரை பளீரென்று எரிந்துக் கொண்டிருந்த விளக்குகள் அணைந்துவிட "அம்மாடி" நெஞ்சில் கைவைத்து அப்படியே நின்று விட்டாள்.
தூரமாய் நாயின் ஊளைச்சத்தம்..
கிடுகிடுவென உடல் நடுங்கத் தொடங்கியது.
'உள்ள போயிருடி அனு' இதயம் பதற "ஷ்ஷ் ரிலாக்ஸ்! முன் வச்ச காலை பின் வைக்கக் கூடாது" என்றெண்ணி பாலாவுக்கு started என வாட்சப்பில் மெசேஜ் தட்டிவிட்டு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு புறப்பட்டாள்.
அப்போதுதான் வேலையை முடித்துவிட்டு ரெஸ்ட்ரூம் சென்று வந்தவன் மொபைலைப் பார்க்க பக்கென்று ஆனது.
'பையித்தியக்காரி நிஜமாவே சுடுகாட்டுக்குப் போறாளா! இவளை' என பல்லைக் கடித்தபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
"பாலா" அவள் குரல் வித்தியாசமாய் ஒலிக்க இருந்த பதட்டத்தில் அவன் அதைக் கவனிக்கவில்லை.
"அனு வீட்டுக்குப் போ. இந்த நேரத்துல வெளிய இருக்குறது சேஃப் கிடையாது" கடிந்தான்.
"நீதானே பாலா சுடுகாட்டுக்குப் போக சொன்ன. நான் உன்னைக் காதலிக்கிறேன் பாலா. அங்க போகத்தான் செய்வேன்"
"அடியே அறிவில்லையா.. எது சொன்னாலும் செஞ்சுடுவயா?" திட்டியபடி இருந்தவன்
"பாலா" என்ற அவளது அலறலில் சட்டென்று மொபைலைத் தவறவிட்டு விட்டான். கேட்ட அவனுக்கே நடுக்கம் பிறந்தது.
மீண்டும் மொபைலை உயிர்ப்பித்து அவளுக்கு அழைக்க தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற குரல் வரவும் அவனுக்கு ஏதோ விபரீதம் என புரிந்தது.
"அச்சோ போச்சு.. இந்த பையித்தியம் பத்தி தெரிஞ்சும் நான் இவகிட்ட போய் இப்படி விளையாண்டிருக்கக் கூடாது" சட்டையை மாட்டியவன் மொபைலை எடுத்துக் கொண்டு நிமிடத்தில் வெளியே வந்திருந்தான்.
பயத்தோடு அவர்களின் தெருவினை அப்போதுதான் தாண்டி நடந்தாள் அனு. விளக்குகள் பளீரென்று எரிந்துவிட அப்படியே அந்த வெளிச்சத்தில் சுடுகாட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். போன் கையில் அப்படியே பத்திரமாக இருந்தது.
சுடுகாட்டை நோக்கி நடக்கும் போதே குழந்தை அழுவது போல் சத்தம் கேட்க முதுகுத்தண்டு அப்படியே சிலீரென்று உணர்வில் உறைந்துப் போய்விட்டது.
குழந்தை அழற சத்தம் கேட்டது.. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். இடமே அமானுஷ்யத்தின் பிடியில் இருப்பதைப் போலிருக்க அய்யய்யோ என அவள் வேகமாக எட்டு வைத்தாள்.
காலில் எதுவோ இடறியது.
"ஆத்தா! காப்பாத்து" என முணங்கியபடி பார்த்தாள். கண்கள் மின்னியபடி ஒரு பூனை அவளைத் தாண்டி நகர்ந்துவிட அப்படியே நிம்மதியுற்றவள் முன்னே நகர்ந்தாள்.
பெரிய ஆலமரம் இப்போது பார்வைக்குத் தெரிந்தது. அதைக் கடந்தால் ஒற்றையடிப்பாதை வரும். அதுதான் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி..
சகல தெய்வங்களையும் அவள் அழைத்தபடி நகர்ந்தாள். ஆலமரத்தினை நெருங்கியும் விட்டிருந்தாள்.
அந்த இடமே அவளை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.
"கருப்பா காப்பாத்து.. காளியாத்தா காப்பாத்து.." உருப்போட்டுக் கொண்டே அவள் நடக்க, "அனு" என்ற குரல் அவளுக்குக் கேட்டது.
"இது பாலாவோட சத்தமாச்சே.. பாலா வந்துட்டானா.." என்றவாறு விழிகளைச் சுழலவிட்டாள்.
சத்தம் தான் கேட்டதே ஒழிய பாலா அவள் கண்ணுக்குத் தென்படவில்லை..
"அதானே அவனாவது வர்றதாவது? மெசேஜ் போட்டோமே.. வேண்டாம்டி வீட்டுக்குப் போடி.. நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்னு போன் பண்ணி தடுத்தானா.. எருமை மாடு ஹாயா தூங்கிட்டு இருக்கும். இருக்கட்டும்" என கருவிக் கொண்டு நடக்க, "அனு" மீண்டும் குரல் கேட்டது.
இம்முறை அந்த குரல் அவளுக்குள் அச்சத்தின் அளவினை அதிகப்படுத்தியது. அது பாலாவின் குரல் அல்ல.. அந்த குரலில் அவளுக்குள் அச்சம் பிறந்தது.
"வா அனு நீ போக வேண்டிய இடத்துக்கு நான் கூட்டிட்டு போறேன்" குரல் கரகரவென்று கேட்க அவள் தொண்டை அடைத்தது.
அப்படியே பின்னால் நகரப் போனவள் கல் தடுக்கி விழுந்துவிட, நச்சென்று அவள் தலை எதன்மீதோ மோதியது.
"அம்மா.. ஆ" லேசாக தலை உயர்த்திப் பார்க்க மண்பாண்டத்தின் உடைந்த துண்டில் தான் அவள் தலை மோதியிருந்தது. உடைந்தது மோதி அவள் தோலினை கீறியிருக்க இரத்தம் கசிந்து ஒரு துளி மண்ணில் விழுந்துவிட்டது.
விர்ரென்று சப்தம். காற்று பலமாய் அடிக்க ஆரம்பித்துவிட ஆலமரம் அப்படியே பேயாட்டம் ஆடத் தொடங்கியது. விழுதுகள் எல்லாம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப இப்படியும் அப்படியாக போய் வர அதுவும் அவள் மேலேயே போய் மோதி அவளை வலிக்கச் செய்தது.
குழந்தையின் அழுகுரல் வேறு விட்டு விட்டு கேட்க ஆரம்பித்ததும் வலியைத் தாங்கிக் கொண்டு எழ முற்பட்டாள். தரையைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு விழுது மட்டும் அவளது காலில் சுற்றி இழுத்துவிட மீண்டும் நிலைகுலைந்து விழுந்து விட்டாள்.
தலை பயங்கரமா வலித்தது. இரத்தம் வழிந்து அவளது கண்களுக்குள் கலந்தது. பார்வை லேசாக மங்க பளீச்சென்று மின்னல் வேறு வெட்டி அந்த இடத்தினை இன்னும் பயங்கரமாக காட்ட நிமிர்ந்து பார்த்தவளின் கண்களுக்கு அந்த ஆலமரத்தின் கிளை மேல அமர்ந்தபடி அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் உருவம் தட்டுப்பட்டது.
இரண்டு நாளுக்கு முன் அவள் பாலாவிடம் தனது காதலைச் சொல்லியபோது அவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் அவளது விளையாட்டுத் தனம் எல்லாம் அவனும் அறிவான் தானே. பக்கத்து பக்கத்தில் இருந்ததால் அனுவின் சேட்டைகளில் அதிகம் பாதிக்கப்பட்டவன் அவன்தான். மொத்தத்தில் அவளுக்கு வால் மட்டும்தான் இல்லை.
பாலாவை விடாமல் வம்பிழுத்து மாட்டி விடுபவளுக்கு அவன்மீது காதல் உணர்வு வந்திருக்க அன்றிலிருந்து வால்தனத்தினை அவனிடம் காட்டாமல் சற்று ஒதுங்கிப் போனாள். அதுவே அவனுக்கு வித்தியாசமாகப் பட ஒரு நாள் அவனிடம் கடிதத்தினை நீட்டியிருந்தாள். வாங்கியவன் படித்ததுமே அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான். அவளது உடல்மொழி அனைத்தும் வித்தியாசமாகப் பட்டது.
உஷாரா இருடா பாலா. இல்லை இதை வச்சு பெருசா நம்மளைப் போட்டுத் தள்ளிடுவா என தனக்குள்ளேயே நினைத்தவன் "சாரி அனு. எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை" என்று முடித்துக் கொண்டான்.
"ஏன் பாலா?" அவனது மறுப்பில் அவளுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. அவன் முன்னால் அழ வேண்டாம் என்று அமைதியாய் கேட்டாள்.
"எனக்குப் பிடிக்கலை அனு. நம்ம இரண்டு பேருக்கும் ஒத்து வராது. எனக்கு அந்த மாதிரி ப்லீங் எதுவும் உன் மேல வரலை. என்னை விட்டுடு" தன்மையாகவே பேசினான்.
"நான் விளையாடுறேன்னு நினைச்சுட்டயா பாலா. இல்லை. நான் உண்மையாத்தான் சொல்லுறேன்? ஐ லவ் யூ"
"நீ லவ் பண்ணாலும் என்னால அதை அக்செப்ட் பண்ணிக்க முடியல அனு"
"பாலா என்னால நீ இல்லாமல் இருக்க முடியாது. இனி நான் சண்டையெல்லாம் போட மாட்டேன். நீ என்னை ஏத்துக்கோ" வீம்பாய் ஒலித்தது அவள் குரல்.
எரிச்சல் வந்துவிட்டது பாலாவிற்கு.
அப்படியே திட்ட வாய் திறந்தவனை அவளது பேச்சு வாய் மூட வைத்தது.
"பாலா! நீ என் காதலை ஏத்துக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன். என்ன செய்யணும்னு சொல்லு" என்று சொல்ல எத்தனை நாள் நம்மளை போட்டு டார்ச்சர் பண்ணா.. இன்னைக்கு இவளை நாம வச்சு செய்யலாம் என்றெண்ணி அந்த பேப்பரிலேயே எதையோ அவன் எழுதிவிட்டு அவளிடம் நீட்டியிருந்தான்.
அவளும் ஆசையுடன் அதை வாங்கிப் படிக்க முகம் வெளிறிப் போனது.
"என்ன பாலா இது" குரல் கூட லேசாய் பயத்தின் சாயம் ஒட்டி வந்தது.
"நீதான் லவ் பண்ணுறதா சொன்ன. அது உண்மையா என்னென்னு நான் செக் பண்ண வேண்டாமா? ஏன்னா நீ யாருன்னு எனக்கு நல்லாவே தெரியும்"
"அதுக்குன்னு இப்படியா? ப்ளீஸ் பாலா வேற ஏதாவது சொல்லேன் நான் செய்றேன்"
"நீ லவ் பண்ணுறது உண்மையாய் இருந்தால் இதைப் பண்ணு. இல்லை இடத்தைக் காலி பண்ணு
"சரி நான் இந்த டாஸ்க்கை நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். நான் இதைச் செஞ்சு முடிச்சுட்டால் என்னோட காதலை நீ ஏத்துக்குவயா?"
"கண்டிப்பா ஏத்துக்குவேன்" என்று சொல்ல பாலாவிடம் "நான் யாருன்னு உனக்குத் தெரியாது.. நான் இதை செஞ்சு முடிக்குறேன் பாரு" என சவால் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.
மணி இப்போது 11.30 ஆகியிருந்தது
மீண்டுமொரு முறை அந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.
மனம் வடிவேல் டோனில் அதைப் படித்துப் பார்த்து ஒப்பாரி வைத்தது.
"பாவி. எனக்கு ஏத்த மாதிரி ஏதாவது டாஸ்க் குடுக்கலாம்ல அதைவிட்டுட்டு சுடுகாட்டுக் போகச் சொல்லுறான். நிறைய தடவை பேய் பேய்ன்னு நம்மளைத் திட்டுவானே. அங்க போனாலும் இவளுக்கு எதுவும் ஆகாதுன்னு நினைச்சுட்டான் போல. இப்போ என்ன 12 மணிக்கு நாம சுடுகாட்டுக்குப் போக முடியாதா? போய் காட்டுறேன். இந்த அனுவை அவன் சாதாரணமா நினைச்சுட்டான்ல. அவனை விடவே மாட்டேன். போயிட்டு வந்துட்டு அவனுக்கு இருக்கு. அனு நீ ரொம்ப ஸ்ட்ராங். சுடுகாடுக்குப் போறோம். அவன் மூக்கை உடைக்குறோம். அடுத்து அவனை போட்டு டார்ச்சர் பண்ணுறோம் என்றபடி மணியைப் பார்த்தாள்.
நேரம் இரவு 11. 40 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. மொபைலை எடுத்துக் கொண்டாள். பக்கத்தில் இருந்த இரும்பு துண்டு ஒன்றை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். அம்மணிக்கு பாதுகாப்புக்காம். ரொம்ப பலமான ஏற்பாடுதான்..
சாமி அறைக்குள் நுழைந்தவள் "ஆத்தா! உன் புள்ளையை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.. பொறுப்புல இருந்து பின்வாங்கிடாத ஆத்தா.. நான் திரும்பி வந்த உடனே உனக்கு பொங்கல் வச்சுடுறேன் சரியா?" என வேண்டிக் கொண்டவள் விபூதி பட்டையையும் போட்டுக் கொண்டு மையவெளிக்குள் வந்தாள். வீடே இருளில் மூழ்கியிருக்க மொபைலை காட்டிக் காட்டி வாசற்கதவு வரைக்கும் வந்துவிட்டாள்.
யாரும் எழுந்துடக் கூடாது என சத்தமே கேட்காத வண்ணம் கதவினைத் திறந்தாள். மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தாள் தாய், தந்தை இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க கூடப் பிறந்தவனும் குப்புற படுத்து அவன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான்.
'போகாதடி. உசுருக்கு உத்தரவாதம் இல்லை' மனம் அலறத் தொடங்க அடக்கிக் கொண்டு வாசல் தாண்டி கால் எடுத்து வைத்தாள்.
அதுவரை பளீரென்று எரிந்துக் கொண்டிருந்த விளக்குகள் அணைந்துவிட "அம்மாடி" நெஞ்சில் கைவைத்து அப்படியே நின்று விட்டாள்.
தூரமாய் நாயின் ஊளைச்சத்தம்..
கிடுகிடுவென உடல் நடுங்கத் தொடங்கியது.
'உள்ள போயிருடி அனு' இதயம் பதற "ஷ்ஷ் ரிலாக்ஸ்! முன் வச்ச காலை பின் வைக்கக் கூடாது" என்றெண்ணி பாலாவுக்கு started என வாட்சப்பில் மெசேஜ் தட்டிவிட்டு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு புறப்பட்டாள்.
அப்போதுதான் வேலையை முடித்துவிட்டு ரெஸ்ட்ரூம் சென்று வந்தவன் மொபைலைப் பார்க்க பக்கென்று ஆனது.
'பையித்தியக்காரி நிஜமாவே சுடுகாட்டுக்குப் போறாளா! இவளை' என பல்லைக் கடித்தபடி அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
"பாலா" அவள் குரல் வித்தியாசமாய் ஒலிக்க இருந்த பதட்டத்தில் அவன் அதைக் கவனிக்கவில்லை.
"அனு வீட்டுக்குப் போ. இந்த நேரத்துல வெளிய இருக்குறது சேஃப் கிடையாது" கடிந்தான்.
"நீதானே பாலா சுடுகாட்டுக்குப் போக சொன்ன. நான் உன்னைக் காதலிக்கிறேன் பாலா. அங்க போகத்தான் செய்வேன்"
"அடியே அறிவில்லையா.. எது சொன்னாலும் செஞ்சுடுவயா?" திட்டியபடி இருந்தவன்
"பாலா" என்ற அவளது அலறலில் சட்டென்று மொபைலைத் தவறவிட்டு விட்டான். கேட்ட அவனுக்கே நடுக்கம் பிறந்தது.
மீண்டும் மொபைலை உயிர்ப்பித்து அவளுக்கு அழைக்க தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற குரல் வரவும் அவனுக்கு ஏதோ விபரீதம் என புரிந்தது.
"அச்சோ போச்சு.. இந்த பையித்தியம் பத்தி தெரிஞ்சும் நான் இவகிட்ட போய் இப்படி விளையாண்டிருக்கக் கூடாது" சட்டையை மாட்டியவன் மொபைலை எடுத்துக் கொண்டு நிமிடத்தில் வெளியே வந்திருந்தான்.
பயத்தோடு அவர்களின் தெருவினை அப்போதுதான் தாண்டி நடந்தாள் அனு. விளக்குகள் பளீரென்று எரிந்துவிட அப்படியே அந்த வெளிச்சத்தில் சுடுகாட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். போன் கையில் அப்படியே பத்திரமாக இருந்தது.
சுடுகாட்டை நோக்கி நடக்கும் போதே குழந்தை அழுவது போல் சத்தம் கேட்க முதுகுத்தண்டு அப்படியே சிலீரென்று உணர்வில் உறைந்துப் போய்விட்டது.
குழந்தை அழற சத்தம் கேட்டது.. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். இடமே அமானுஷ்யத்தின் பிடியில் இருப்பதைப் போலிருக்க அய்யய்யோ என அவள் வேகமாக எட்டு வைத்தாள்.
காலில் எதுவோ இடறியது.
"ஆத்தா! காப்பாத்து" என முணங்கியபடி பார்த்தாள். கண்கள் மின்னியபடி ஒரு பூனை அவளைத் தாண்டி நகர்ந்துவிட அப்படியே நிம்மதியுற்றவள் முன்னே நகர்ந்தாள்.
பெரிய ஆலமரம் இப்போது பார்வைக்குத் தெரிந்தது. அதைக் கடந்தால் ஒற்றையடிப்பாதை வரும். அதுதான் சுடுகாட்டுக்குச் செல்லும் வழி..
சகல தெய்வங்களையும் அவள் அழைத்தபடி நகர்ந்தாள். ஆலமரத்தினை நெருங்கியும் விட்டிருந்தாள்.
அந்த இடமே அவளை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.
"கருப்பா காப்பாத்து.. காளியாத்தா காப்பாத்து.." உருப்போட்டுக் கொண்டே அவள் நடக்க, "அனு" என்ற குரல் அவளுக்குக் கேட்டது.
"இது பாலாவோட சத்தமாச்சே.. பாலா வந்துட்டானா.." என்றவாறு விழிகளைச் சுழலவிட்டாள்.
சத்தம் தான் கேட்டதே ஒழிய பாலா அவள் கண்ணுக்குத் தென்படவில்லை..
"அதானே அவனாவது வர்றதாவது? மெசேஜ் போட்டோமே.. வேண்டாம்டி வீட்டுக்குப் போடி.. நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்னு போன் பண்ணி தடுத்தானா.. எருமை மாடு ஹாயா தூங்கிட்டு இருக்கும். இருக்கட்டும்" என கருவிக் கொண்டு நடக்க, "அனு" மீண்டும் குரல் கேட்டது.
இம்முறை அந்த குரல் அவளுக்குள் அச்சத்தின் அளவினை அதிகப்படுத்தியது. அது பாலாவின் குரல் அல்ல.. அந்த குரலில் அவளுக்குள் அச்சம் பிறந்தது.
"வா அனு நீ போக வேண்டிய இடத்துக்கு நான் கூட்டிட்டு போறேன்" குரல் கரகரவென்று கேட்க அவள் தொண்டை அடைத்தது.
அப்படியே பின்னால் நகரப் போனவள் கல் தடுக்கி விழுந்துவிட, நச்சென்று அவள் தலை எதன்மீதோ மோதியது.
"அம்மா.. ஆ" லேசாக தலை உயர்த்திப் பார்க்க மண்பாண்டத்தின் உடைந்த துண்டில் தான் அவள் தலை மோதியிருந்தது. உடைந்தது மோதி அவள் தோலினை கீறியிருக்க இரத்தம் கசிந்து ஒரு துளி மண்ணில் விழுந்துவிட்டது.
விர்ரென்று சப்தம். காற்று பலமாய் அடிக்க ஆரம்பித்துவிட ஆலமரம் அப்படியே பேயாட்டம் ஆடத் தொடங்கியது. விழுதுகள் எல்லாம் காற்றின் வேகத்திற்கு ஏற்ப இப்படியும் அப்படியாக போய் வர அதுவும் அவள் மேலேயே போய் மோதி அவளை வலிக்கச் செய்தது.
குழந்தையின் அழுகுரல் வேறு விட்டு விட்டு கேட்க ஆரம்பித்ததும் வலியைத் தாங்கிக் கொண்டு எழ முற்பட்டாள். தரையைத் தொட்டுக் கொண்டிருந்த ஒரு விழுது மட்டும் அவளது காலில் சுற்றி இழுத்துவிட மீண்டும் நிலைகுலைந்து விழுந்து விட்டாள்.
தலை பயங்கரமா வலித்தது. இரத்தம் வழிந்து அவளது கண்களுக்குள் கலந்தது. பார்வை லேசாக மங்க பளீச்சென்று மின்னல் வேறு வெட்டி அந்த இடத்தினை இன்னும் பயங்கரமாக காட்ட நிமிர்ந்து பார்த்தவளின் கண்களுக்கு அந்த ஆலமரத்தின் கிளை மேல அமர்ந்தபடி அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் உருவம் தட்டுப்பட்டது.