Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 737
- Thread Author
- #1
பூவளூர்:
பூவளூரின் கே.ஜி. எஸ்டேட் மலைச்சரிவுகளில், சுந்தர் மற்றும் மீனாட்சியின் வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடையைப் போல எவ்வித சலனமுமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.
தினமும் அதிகாலையில் பனிமூட்டத்திற்கு நடுவே வேலைக்குச் செல்வதும், மாலையில் கைகோர்த்து வீடு திரும்புவதுமாக அந்தத் தம்பதிகளின் அன்பு அந்த ஊருக்கே முன்னுதாரணமாக இருந்தது.
எஸ்டேட்டில் ஒரு மதிய வேளை....
அன்று வெயில் சற்று கூடுதலாகவே இருந்தது. தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து கூடையில் நிரப்பிக் கொண்டிருந்த மீனாட்சிக்கு, திடீரென தலைச் சுற்றுவது போல இருந்தது.
சுற்றியுள்ள பச்சை நிறத் தேயிலை புதர்கள் எல்லாம் அவளுக்குச் சுழல்வது போலத் தோன்ற, கையில் இருந்த கூடையை மெல்லக் கீழே வைத்துவிட்டு, ஒரு மரத்தடி நிழலில் சோர்ந்து போய் உட்கார்ந்தாள்.
அவளது முகம் வெளிறிப் போயிருப்பதைப் பார்த்த காமாட்சி அக்கா, பதறிப்போய் ஓடி வந்தாள். "என்னடி மீனாட்சி... என்னாச்சு? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?" என்று கேட்டபடி அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
மீனாட்சி மெல்லிய குரலில், "ஒண்ணுமில்லைக்கா... ஏதோ மயக்கம் வர்ற மாதிரி இருக்கு, மதிய வெயில் ஒத்துக்கலை போல," என்றாள்.
காமாட்சி அக்கா அவளை உற்றுப் பார்த்தாள். ஒரு அனுபவப்பட்டப் பெண்ணின் கண்கள் அவளது முகமாற்றத்தைக் கவனித்தன. "ஏன் புள்ள... நாள் தள்ளிப் போயிருக்கா? விசேஷம் ஏதும் உண்டோ?" என்று ரகசியக் குரலில் காமாட்சி கேட்க, மீனாட்சி வெட்கத்தில் தலை குனிந்தாள். அவளது மௌனமே பதிலைச் சொல்லியது.
விஷயம் உடனே சுந்தருக்கு எட்டியது. பதற்றத்துடன் ஓடி வந்த அவன், மீனாட்சியை மெல்ல அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். தகவல் தெரிந்து அந்த ஊரின் கைராசி மிக்க மருத்துவச்சி பாட்டி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார்.
அன்னம்மாளும் பெருமாளும் ஆவலோடு வாசலில் காத்திருக்க, பாட்டி உள்ளே சென்று மீனாட்சியின் அருகே அமர்ந்தாள். அவளது மெலிதான மணிக்கட்டைப் பிடித்து, கண்களை மூடி நாடிப் பிடித்துப் பார்த்தாள்.
சில நொடிகள் அறையில் நிசப்தம் நிலவியது. பின்னர், பாட்டியின் சுருக்கங்கள் விழுந்த முகத்தில் ஒரு பெரிய புன்னகை அரும்பியது.
"அன்னம்மா... உன் வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வரப்போறா! மீனாட்சி மாசமா இருக்கா. இனி அவளைக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும்," என்று பாட்டி கட்டியம் கூறினாள்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் சுந்தருக்கு நிலத்தில் கால் பாவாதது போன்ற ஒரு உணர்வு. ஆனந்தக் கண்ணீருடன் அவன் மீனாட்சியைப் பார்க்க, அவள் தன் வயிற்றை மெல்லத் தடவியபடி பூரிப்பில் ஆழ்ந்தாள்.
அன்னம்மாளோ அந்த "மலையம்மன் என் வேண்டுதலைக் கேட்டுட்டா!" என்று சொல்லி சர்க்கரைப் பொங்கல் வைக்க ஆயத்தமானாள்.
பெருமாள் தன் மகனின் தோளைத் தட்டி, "இனி நீ ஒரு அப்பாவாகப் போற சுந்தர்... பொறுப்பு அதிகமாயிடுச்சு," என்று பெருமிதத்துடன் சொன்னார்.
விஷயத்தை கேள்வி பட்டதும் சாமி- ஆச்சி இருவரும் மகனை டவுனுக்கு அனுப்பி சில தீனிகளை வாங்கி வரச் சொல்லிவிட்டு மூவரும் சுந்தர் வீட்டிற்கு வந்தனர்.
மகளின் நெற்றியை வழித்து நெட்டி முறித்தவர் என் ராசாத்தி என்று மகளுடன் சம்மந்தி அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு இரவு சாப்பாடு அங்கேயே ஒன்றாக சாப்பிட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.
அதன் பின்னர் வந்த நாட்களில் மீனாட்சியை தாங்கு தாங்கென தாங்கினாலும் அவள் வேலைக்கு போவதை மட்டும் விடவில்லை.
சுந்தரோ மாதம் தவறாமல் அரசாங்க ஆஸ்பத்தரிக்கு செக்கப்பிற்கு கூப்பிட்டு போகவும் மறக்கவில்லை.மாதங்களும் வேகமாக ஓட இதோ ஒன்பதாம் மாதமும் தொடங்கியது.
மீனாட்சியின் வயிறோ பானை போல பெரிதாக இருக்கவும், பொட்ட பிள்ளை போலனு பார்கிறவர்கள் சொல்லிக் கொண்டனர்.
வளைகாப்பு வைபவம் கோலாகலமாகத் தொடங்கியது. பெருமாள் - அன்னம்மாள் வீடே பூக்களாலும், மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கே.ஜி. எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தோழிகள், உறவினர்கள் என ஊரே திரண்டு வந்திருந்தது.
மீனாட்சிக்கு அழகான பட்டுப்புடவை உடுத்தி, தலையில் மல்லிகைப் பூச்சூடி, சந்தனத் திலகமிட்டு மேடையில் அமர வைத்தார்கள். அவளது முகம் தாய்மையின் பூரிப்பில் நிலவாகப் பிரகாசித்தது.
மருத்துவச்சி பாட்டி முதலில் ஒரு ஜோடி வளையல்களை அணிவிக்க, பின் அன்னம்மாளும், மீனாட்சியின் தாயார் ஆச்சியும் வரிசையாகக் கண்ணாடி வளையல்களை அவளது கைகளில் அடுக்கினர்.
"கிளிங் கிளிங்" என்று எழுந்த அந்த வளையல் சத்தம், வயிற்றுக்குள் இருக்கும் உயிருக்குத் தாயின் அன்பைச் சொல்லும் தாலாட்டாக அமைந்தது. காமாட்சி அக்கா கிண்டலாக, "பாருடி மீனாட்சி, இந்தச் சத்தம் கேட்டு உன் புள்ளை உள்ளேயே குதிக்கிறான்!" என்று சொல்ல, கூட்டம் சிரிப்பொலியில் நிறைந்தது.
வளைகாப்பு என்றாலே உணவுக்குப் பஞ்சமிருக்காது. ஆச்சி தன் மகளுக்காகப் பார்த்துப் பார்த்து ஒன்பது வகையான சாதங்களைத் தயாரித்திருந்தார்: உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து மீனாட்சியின் கன்னத்தில் சந்தனம் தடவி, அட்சதை தூவி வாழ்த்தினர்.
சுந்தர் வாசலில் நின்றபடி, உள்ளே தன் மனைவிக்கு நடக்கும் சடங்குகளைப் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் மீனாட்சியின் கைகளில் நிறைந்திருந்த அந்த வண்ணமயமான வளையல்களையே மொய்த்தன.
மாலையில் கூட்டம் கலைந்த பிறகு, மெல்ல மீனாட்சியின் அருகில் வந்த சுந்தர், "மீனாட்சி... இந்த வளையல் சத்தம் நம்ம வீட்ல எப்பவும் கேட்டுட்டே இருக்கணும். நீயும் நம்ம குழந்தையும் தான் எனக்கு எல்லாமே," என்று உணர்ச்சிவசப்பட்டு அவளது கைகளைப் பற்றிக்கொண்டான்.
வளைகாப்பு முடிந்து மீனாட்சி தன் தந்தை சாமி மற்றும் தாய் ஆச்சியின் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. தாய்வீட்டுப் பராமரிப்பும், ஆச்சியின் கைப்பக்குவ உணவுகளும் மீனாட்சியின் முகத்தில் ஒரு தனித் தேஜஸைக் கொடுத்திருந்தது.
சரியாக இரண்டு வாரங்கள் முடிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, மீனாட்சிக்கு மெல்லிய வலி எடுக்கத் தொடங்கியது. "அம்மா..." என்ற அவளது முனகல் சத்தம் கேட்டு ஆச்சி பதறித் துடித்து எழுந்தாள்.
"எனங்க... சீக்கிரம் சுந்தருக்குத் தகவல் சொல்லுங்க. நம்ம பிள்ளை துடிக்குது!" என்று ஆச்சி பதற, தகவலறிந்த அடுத்த பத்தே நிமிடத்தில் சுந்தர் அங்கே வந்து நின்றான்.
அங்கிருந்து அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீனாட்சியை அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, "வலி அதிகமா இருக்கு, ஆனா பயப்பட ஒண்ணுமில்லை. சுகப்பிரசவம் ஆக வாய்ப்பிருக்கு," என்றனர்.
வெளியே சுந்தர், பெருமாள், சாமி மூவரும் அங்கும் இங்கும் நடந்தபடி மலையம்மனை வேண்டிக் கொண்டிருந்தனர். உள்ளே மீனாட்சியின் வலி நிறைந்த முனகல் சத்தம் அவ்வப்போது கேட்டது. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு...
முதலில் ஒரு மெல்லிய மழலைச் சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் ஒரு அழுகைச் சத்தம்!
நர்ஸ் புன்னகையோடு வெளியே வந்து, "வாழ்த்துகள் சுந்தர்! உங்களுக்கு இரட்டைப் பிள்ளைங்க. முதல்ல பிறந்தது ஒரு அழகான ஆண் குழந்தை, அடுத்தது ஒரு தேவதை... பெண் குழந்தை!" என்று சொன்னார்.
சுந்தரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
“ரெண்டு பேரா! மலையம்மன் எங்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்துட்டா!" என்று நெகிழ்ந்தான்.
ஆச்சியோ "என் மகள் ரெண்டு ரத்தினங்களைக் கொடுத்துட்டா," என்று பெருமிதத்துடன் மீனாட்சியின் கையை பிடித்துக் கொண்டாள்.
மயக்கம் தெளிந்து படுக்கையில் இருந்த மீனாட்சியின் இருபுறமும் அந்த இரண்டு பிஞ்சு உயிர்கள் கிடத்தப்பட்டிருந்தன.
பெண் குழந்தை, மீனாட்சியைப் போலவே மென்மையாக இருந்தது.
ஆண் குழந்தை, சுந்தரின் சாயலில் துடிப்பாக இருந்தது.
சுந்தர் உள்ளே வந்து தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, "மீனாட்சி... நம்ம வாழ்க்கையையே அழகாக்கிட்ட. இந்த ரெண்டு குழந்தைகளும் நம்ம மலைக்கே ராஜா, ராணி மாதிரி வளர்வாங்க," என்றான்.
மீனாட்சிக்கு சுகப்பிரசவம் என்பதால், மருத்துவமனையில் இருந்து மூன்றாம் நாளே இரட்டை குழந்தைகளுடன் தாய் வீடு வந்துவிட்டாள். அவள் முகம் களைத்திருந்தாலும், கைகளில் தவழ்ந்த இரு ஜீவன்களைப் பார்க்கையில் அந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.
நாட்கள் நொடிகளைப் போல பறந்தன. இன்று பதினாறாம் நாள்—குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் முக்கிய விசேஷம்.
வழக்கப்படி, விடியற்காலையிலேயே வீட்டின் பெரியவர்கள் குலதெய்வமான மலையம்மனுக்கு படையலிடத் தயாராகினர். சர்க்கரைப் பொங்கல் மணம் ஊரைக் கூட்டியது. வேப்பிலை தோரணங்கள் வாசலில் அசைந்தாட, மீனாட்சியின் அம்மா ஆட்சியும் அவளது மாமியார் அன்னம்மாளும் பூரிப்போடு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
ஆச்சியோ மனதிற்குள் வேண்டிக்கொண்டார், "தாயே மலையம்மா, என் மகளையும் பேரப்பிள்ளைகளையும் நீதான் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்."
மதிய வேளையில், உறவினர்கள் சூழ மீனாட்சி தன் இரு குழந்தைகளையும் மடியில் கிடத்தி அமர்ந்திருந்தாள். குழந்தைகளின் காதுகளில் பெயரை மும்முறை சொல்லும் நேரம் வந்தது.
மூத்த ஆண் குழந்தைக்கு 'சமரன்' என்று பெயர் சூட்டப்பட்டது.இளைய பெண் குழந்தைக்கு 'ஷமிரா' என்று பெயரிட்டனர். பெரியவர்கள் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, ஊர் மக்கள் அனைவரும் குழந்தைகளுக்குச் சீர் கொடுத்து வாழ்த்தினர். கிராமத்து முறைப்படி, பச்சரிசிப் பொங்கல் இலையில் வைத்து குழந்தைகளுக்குக் காப்பு கட்டப்பட்டது.
பூவளூரின் கே.ஜி. எஸ்டேட் மலைச்சரிவுகளில், சுந்தர் மற்றும் மீனாட்சியின் வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடையைப் போல எவ்வித சலனமுமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது.
தினமும் அதிகாலையில் பனிமூட்டத்திற்கு நடுவே வேலைக்குச் செல்வதும், மாலையில் கைகோர்த்து வீடு திரும்புவதுமாக அந்தத் தம்பதிகளின் அன்பு அந்த ஊருக்கே முன்னுதாரணமாக இருந்தது.
எஸ்டேட்டில் ஒரு மதிய வேளை....
அன்று வெயில் சற்று கூடுதலாகவே இருந்தது. தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து கூடையில் நிரப்பிக் கொண்டிருந்த மீனாட்சிக்கு, திடீரென தலைச் சுற்றுவது போல இருந்தது.
சுற்றியுள்ள பச்சை நிறத் தேயிலை புதர்கள் எல்லாம் அவளுக்குச் சுழல்வது போலத் தோன்ற, கையில் இருந்த கூடையை மெல்லக் கீழே வைத்துவிட்டு, ஒரு மரத்தடி நிழலில் சோர்ந்து போய் உட்கார்ந்தாள்.
அவளது முகம் வெளிறிப் போயிருப்பதைப் பார்த்த காமாட்சி அக்கா, பதறிப்போய் ஓடி வந்தாள். "என்னடி மீனாட்சி... என்னாச்சு? உடம்புக்கு ஏதும் பண்ணுதா?" என்று கேட்டபடி அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
மீனாட்சி மெல்லிய குரலில், "ஒண்ணுமில்லைக்கா... ஏதோ மயக்கம் வர்ற மாதிரி இருக்கு, மதிய வெயில் ஒத்துக்கலை போல," என்றாள்.
காமாட்சி அக்கா அவளை உற்றுப் பார்த்தாள். ஒரு அனுபவப்பட்டப் பெண்ணின் கண்கள் அவளது முகமாற்றத்தைக் கவனித்தன. "ஏன் புள்ள... நாள் தள்ளிப் போயிருக்கா? விசேஷம் ஏதும் உண்டோ?" என்று ரகசியக் குரலில் காமாட்சி கேட்க, மீனாட்சி வெட்கத்தில் தலை குனிந்தாள். அவளது மௌனமே பதிலைச் சொல்லியது.
விஷயம் உடனே சுந்தருக்கு எட்டியது. பதற்றத்துடன் ஓடி வந்த அவன், மீனாட்சியை மெல்ல அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். தகவல் தெரிந்து அந்த ஊரின் கைராசி மிக்க மருத்துவச்சி பாட்டி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார்.
அன்னம்மாளும் பெருமாளும் ஆவலோடு வாசலில் காத்திருக்க, பாட்டி உள்ளே சென்று மீனாட்சியின் அருகே அமர்ந்தாள். அவளது மெலிதான மணிக்கட்டைப் பிடித்து, கண்களை மூடி நாடிப் பிடித்துப் பார்த்தாள்.
சில நொடிகள் அறையில் நிசப்தம் நிலவியது. பின்னர், பாட்டியின் சுருக்கங்கள் விழுந்த முகத்தில் ஒரு பெரிய புன்னகை அரும்பியது.
"அன்னம்மா... உன் வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வரப்போறா! மீனாட்சி மாசமா இருக்கா. இனி அவளைக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும்," என்று பாட்டி கட்டியம் கூறினாள்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் சுந்தருக்கு நிலத்தில் கால் பாவாதது போன்ற ஒரு உணர்வு. ஆனந்தக் கண்ணீருடன் அவன் மீனாட்சியைப் பார்க்க, அவள் தன் வயிற்றை மெல்லத் தடவியபடி பூரிப்பில் ஆழ்ந்தாள்.
அன்னம்மாளோ அந்த "மலையம்மன் என் வேண்டுதலைக் கேட்டுட்டா!" என்று சொல்லி சர்க்கரைப் பொங்கல் வைக்க ஆயத்தமானாள்.
பெருமாள் தன் மகனின் தோளைத் தட்டி, "இனி நீ ஒரு அப்பாவாகப் போற சுந்தர்... பொறுப்பு அதிகமாயிடுச்சு," என்று பெருமிதத்துடன் சொன்னார்.
விஷயத்தை கேள்வி பட்டதும் சாமி- ஆச்சி இருவரும் மகனை டவுனுக்கு அனுப்பி சில தீனிகளை வாங்கி வரச் சொல்லிவிட்டு மூவரும் சுந்தர் வீட்டிற்கு வந்தனர்.
மகளின் நெற்றியை வழித்து நெட்டி முறித்தவர் என் ராசாத்தி என்று மகளுடன் சம்மந்தி அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு இரவு சாப்பாடு அங்கேயே ஒன்றாக சாப்பிட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.
அதன் பின்னர் வந்த நாட்களில் மீனாட்சியை தாங்கு தாங்கென தாங்கினாலும் அவள் வேலைக்கு போவதை மட்டும் விடவில்லை.
சுந்தரோ மாதம் தவறாமல் அரசாங்க ஆஸ்பத்தரிக்கு செக்கப்பிற்கு கூப்பிட்டு போகவும் மறக்கவில்லை.மாதங்களும் வேகமாக ஓட இதோ ஒன்பதாம் மாதமும் தொடங்கியது.
மீனாட்சியின் வயிறோ பானை போல பெரிதாக இருக்கவும், பொட்ட பிள்ளை போலனு பார்கிறவர்கள் சொல்லிக் கொண்டனர்.
வளைகாப்பு வைபவம் கோலாகலமாகத் தொடங்கியது. பெருமாள் - அன்னம்மாள் வீடே பூக்களாலும், மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கே.ஜி. எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தோழிகள், உறவினர்கள் என ஊரே திரண்டு வந்திருந்தது.
மீனாட்சிக்கு அழகான பட்டுப்புடவை உடுத்தி, தலையில் மல்லிகைப் பூச்சூடி, சந்தனத் திலகமிட்டு மேடையில் அமர வைத்தார்கள். அவளது முகம் தாய்மையின் பூரிப்பில் நிலவாகப் பிரகாசித்தது.
மருத்துவச்சி பாட்டி முதலில் ஒரு ஜோடி வளையல்களை அணிவிக்க, பின் அன்னம்மாளும், மீனாட்சியின் தாயார் ஆச்சியும் வரிசையாகக் கண்ணாடி வளையல்களை அவளது கைகளில் அடுக்கினர்.
"கிளிங் கிளிங்" என்று எழுந்த அந்த வளையல் சத்தம், வயிற்றுக்குள் இருக்கும் உயிருக்குத் தாயின் அன்பைச் சொல்லும் தாலாட்டாக அமைந்தது. காமாட்சி அக்கா கிண்டலாக, "பாருடி மீனாட்சி, இந்தச் சத்தம் கேட்டு உன் புள்ளை உள்ளேயே குதிக்கிறான்!" என்று சொல்ல, கூட்டம் சிரிப்பொலியில் நிறைந்தது.
வளைகாப்பு என்றாலே உணவுக்குப் பஞ்சமிருக்காது. ஆச்சி தன் மகளுக்காகப் பார்த்துப் பார்த்து ஒன்பது வகையான சாதங்களைத் தயாரித்திருந்தார்: உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து மீனாட்சியின் கன்னத்தில் சந்தனம் தடவி, அட்சதை தூவி வாழ்த்தினர்.
சுந்தர் வாசலில் நின்றபடி, உள்ளே தன் மனைவிக்கு நடக்கும் சடங்குகளைப் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்கள் மீனாட்சியின் கைகளில் நிறைந்திருந்த அந்த வண்ணமயமான வளையல்களையே மொய்த்தன.
மாலையில் கூட்டம் கலைந்த பிறகு, மெல்ல மீனாட்சியின் அருகில் வந்த சுந்தர், "மீனாட்சி... இந்த வளையல் சத்தம் நம்ம வீட்ல எப்பவும் கேட்டுட்டே இருக்கணும். நீயும் நம்ம குழந்தையும் தான் எனக்கு எல்லாமே," என்று உணர்ச்சிவசப்பட்டு அவளது கைகளைப் பற்றிக்கொண்டான்.
வளைகாப்பு முடிந்து மீனாட்சி தன் தந்தை சாமி மற்றும் தாய் ஆச்சியின் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. தாய்வீட்டுப் பராமரிப்பும், ஆச்சியின் கைப்பக்குவ உணவுகளும் மீனாட்சியின் முகத்தில் ஒரு தனித் தேஜஸைக் கொடுத்திருந்தது.
சரியாக இரண்டு வாரங்கள் முடிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, மீனாட்சிக்கு மெல்லிய வலி எடுக்கத் தொடங்கியது. "அம்மா..." என்ற அவளது முனகல் சத்தம் கேட்டு ஆச்சி பதறித் துடித்து எழுந்தாள்.
"எனங்க... சீக்கிரம் சுந்தருக்குத் தகவல் சொல்லுங்க. நம்ம பிள்ளை துடிக்குது!" என்று ஆச்சி பதற, தகவலறிந்த அடுத்த பத்தே நிமிடத்தில் சுந்தர் அங்கே வந்து நின்றான்.
அங்கிருந்து அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீனாட்சியை அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, "வலி அதிகமா இருக்கு, ஆனா பயப்பட ஒண்ணுமில்லை. சுகப்பிரசவம் ஆக வாய்ப்பிருக்கு," என்றனர்.
வெளியே சுந்தர், பெருமாள், சாமி மூவரும் அங்கும் இங்கும் நடந்தபடி மலையம்மனை வேண்டிக் கொண்டிருந்தனர். உள்ளே மீனாட்சியின் வலி நிறைந்த முனகல் சத்தம் அவ்வப்போது கேட்டது. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு...
முதலில் ஒரு மெல்லிய மழலைச் சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் ஒரு அழுகைச் சத்தம்!
நர்ஸ் புன்னகையோடு வெளியே வந்து, "வாழ்த்துகள் சுந்தர்! உங்களுக்கு இரட்டைப் பிள்ளைங்க. முதல்ல பிறந்தது ஒரு அழகான ஆண் குழந்தை, அடுத்தது ஒரு தேவதை... பெண் குழந்தை!" என்று சொன்னார்.
சுந்தரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
“ரெண்டு பேரா! மலையம்மன் எங்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுத்துட்டா!" என்று நெகிழ்ந்தான்.
ஆச்சியோ "என் மகள் ரெண்டு ரத்தினங்களைக் கொடுத்துட்டா," என்று பெருமிதத்துடன் மீனாட்சியின் கையை பிடித்துக் கொண்டாள்.
மயக்கம் தெளிந்து படுக்கையில் இருந்த மீனாட்சியின் இருபுறமும் அந்த இரண்டு பிஞ்சு உயிர்கள் கிடத்தப்பட்டிருந்தன.
பெண் குழந்தை, மீனாட்சியைப் போலவே மென்மையாக இருந்தது.
ஆண் குழந்தை, சுந்தரின் சாயலில் துடிப்பாக இருந்தது.
சுந்தர் உள்ளே வந்து தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு, "மீனாட்சி... நம்ம வாழ்க்கையையே அழகாக்கிட்ட. இந்த ரெண்டு குழந்தைகளும் நம்ம மலைக்கே ராஜா, ராணி மாதிரி வளர்வாங்க," என்றான்.
மீனாட்சிக்கு சுகப்பிரசவம் என்பதால், மருத்துவமனையில் இருந்து மூன்றாம் நாளே இரட்டை குழந்தைகளுடன் தாய் வீடு வந்துவிட்டாள். அவள் முகம் களைத்திருந்தாலும், கைகளில் தவழ்ந்த இரு ஜீவன்களைப் பார்க்கையில் அந்த களைப்பெல்லாம் காணாமல் போனது.
நாட்கள் நொடிகளைப் போல பறந்தன. இன்று பதினாறாம் நாள்—குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் முக்கிய விசேஷம்.
வழக்கப்படி, விடியற்காலையிலேயே வீட்டின் பெரியவர்கள் குலதெய்வமான மலையம்மனுக்கு படையலிடத் தயாராகினர். சர்க்கரைப் பொங்கல் மணம் ஊரைக் கூட்டியது. வேப்பிலை தோரணங்கள் வாசலில் அசைந்தாட, மீனாட்சியின் அம்மா ஆட்சியும் அவளது மாமியார் அன்னம்மாளும் பூரிப்போடு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
ஆச்சியோ மனதிற்குள் வேண்டிக்கொண்டார், "தாயே மலையம்மா, என் மகளையும் பேரப்பிள்ளைகளையும் நீதான் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்."
மதிய வேளையில், உறவினர்கள் சூழ மீனாட்சி தன் இரு குழந்தைகளையும் மடியில் கிடத்தி அமர்ந்திருந்தாள். குழந்தைகளின் காதுகளில் பெயரை மும்முறை சொல்லும் நேரம் வந்தது.
மூத்த ஆண் குழந்தைக்கு 'சமரன்' என்று பெயர் சூட்டப்பட்டது.இளைய பெண் குழந்தைக்கு 'ஷமிரா' என்று பெயரிட்டனர். பெரியவர்கள் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, ஊர் மக்கள் அனைவரும் குழந்தைகளுக்குச் சீர் கொடுத்து வாழ்த்தினர். கிராமத்து முறைப்படி, பச்சரிசிப் பொங்கல் இலையில் வைத்து குழந்தைகளுக்குக் காப்பு கட்டப்பட்டது.