Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
இலங்கை-களுத்துறை:
பாட்டி என்று ருத்ரன் கூப்பிட, இதோ வீரா என்றவர், தனது அருகில் உள்ள பையிலிருந்த வெள்ளி தட்டை எடுத்தவர், அதில் வாங்கி வந்த பழங்களையும், இன்விடேஷனையும் வைத்து கணவரை பார்த்தார்.
பின்னர் சிம்ஹன் தாத்தா தனது மனைவியோடு எழுந்து நிற்க,இங்கு என்னடா நடக்குது என்ற தொணியில் மேகலாவும், சுந்தரும் பார்த்தனர்.
"மாப்பிள்ளை, அம்மாடி மேகலா இதை வாங்கிக்குங்க என்றனர்".
"என்ன மேகுனு மனைவியிடம் சுந்தர் கேட்க, எனக்கு எதுவும் தெரியாதுங்க".
தட்டை இருவரும் வாங்கிக்கொண்டு, ஏதோ நல்ல விஷயமாக தான் தெரியுதென்ற சுந்தர், மேகு இதை பூஜையறையில் வைத்து எடுத்துவா என்க, சரிங்க என்றவாறு மேகலா அங்கிருந்து சென்றார்.
"பூஜையறைக்கு வந்த மேகலா, கையில் இருந்த தட்டை சாமிக்கு முன்பு வைத்தவர், அம்மா துர்கா தேவி, உன் கருணையால் எல்லாம் நல்லதா நடக்கட்டும்மானு வேண்டிக் கொண்டார்".
"பின்னர் தட்டின் மேலிருந்த இன்விடேஷனை மட்டும் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தவரோ,கணவர் முன்பு நீட்டினார்".
"அதை வாங்கிய சுந்தர், கவரை திறந்து,உள்ளே இருந்த கார்டை பார்த்து அதிர்ந்து போனார்".
"பிறகு அதிர்விலிருந்து வெளியே வந்தவர், படித்து முடித்து விட்டு, மனைவியிடம் கார்டை கொடுத்து, கண்ணா என்று மருமகனை நோக்கி தனது கையை நீட்ட,அவரின் கைக்குள் தனது வலது கையை வைத்தான்".
"மேன்மேலும் வெற்றியும் புகழும் உன்னை வந்து சேரணும் கண்ணானு தனது மருமகனை ஆசீர்வதித்தார்".
"மேகலாவும் படித்து விட்டு மருமகனின் அருகில் வந்தவர், வாழ்த்துக்கள்பா என்க, ருத்ரனோ தனது அத்தையை பார்த்து அவ்வளவு தானா என்றான்".
" சிரித்துக்கொண்டே,நான் தான் முதல் கஷ்டமர்".
"ஹாஹாஹா என்று சிரித்தவன், கடைக்கு ஓனரம்மாவே கஷ்டமரா என்க, அண்ணன் மகனின் பரந்த மனதை கேட்டு மேகலாவிற்கு கண் கலங்கியது".
"பின்னர் மதிய உணவை சாப்பிட்டு முடித்தவர்கள், கண்டிப்பாக வரவேண்டுமென்று மூவரும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்".
"மேகு, வீராவிற்கு அப்படியே என் மாமனார் போல குணமென்று சுந்தர் சொல்ல,ஆமாங்க.எங்கே,உங்க தங்கச்சி குணம் போல இருந்து, அப்பா வீடே எனக்கு இல்லாமல் போகிடுமோயென்ற கவலை இருந்துச்சி".ஆனால், கண்ணா என் அப்பா ரத்தம்னு நிருபிச்சிட்டான்".
"பாப்புக்கும் இந்த வருஷம் படிப்பு முடியுது".கையோடு இருவருக்கும் கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டால், மனசு திருப்தியாகிடுமென்று மேகலா சொல்ல,யார் தலையில் என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும் மேகு".வீண் ஆசைகளை மனதிற்குள் வளர்த்துக்காதே என்றவர்,கொஞ்ச நேரம் நான் படுக்குறேன்".
"ஈவ்னிங் லோடு அனுப்ப போகணும், அஞ்சு மணிக்கு எழுப்பிவிடுமா என்றவாறு, சுந்தர் தனது அறைக்குள் சென்று விட்டார்".
சுந்தருடன் திருமணமாகும் வரை, ருத்ரனை பார்த்துக்கொண்டது மேகலா தான்.ஐந்து வயது பாலகனாக இங்கு வந்தவன், இன்று தனித்து தொழிலை தொடங்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதை கண்டு, மேகலாவிற்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது.
"தனக்கு மகள் பிறந்தால்,அண்ணன் மகனுக்கு தான் கட்டி வைக்க வேண்டுமென்று மேகலாவிற்கு மனதிற்குள் ஆசை".ஆனால், தனது அண்ணியின் பேராசை குணம் தெரிந்த பின்னர்,மேகலாவின் மனதிற்குள் பெரும் தடுமாற்றம் வந்தது".
"இருந்தும்,நிச்சயமாக தனது பெற்றோரும் அண்ணன் மகனும் தன் மன ஆசைக்கு தடை சொல்லமாட்டாங்களென்று,பெரும் நம்பிக்கை இருக்கிறது".
"இந்த யோசனையோடு இருந்த மேகலாவிற்கு, அவரது செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
"டீப்பாயின் மேல் இருந்த போனை எடுத்து பார்க்க, அதில் பாப்பு என்ற பெயர் வந்தது".அட்டென் பண்ணியவர், பாப்புமா, நல்லா இருக்கியாடா பட்டு?
மாம்...
"டெய்லி உங்க கிட்ட பேசிட்டு தானே இருக்கேன்".அதற்குள் என்ன ஆகிடப் போகுதென்று கேட்டாள் சுந்தர்- மேகலா தம்பதியரின் ஒரே செல்ல மகள் ஆதிரா".
"பாப்புமா", தினமும் பேசினால் என்ன?.
"என் மகளை நான் விசாரிக்க கூடாதா?".
"இதற்கு யார் தடை சொல்ல முடியுமென்று மேகலா கேட்க,அய்யோ மாம்"."போதும்... போதும்".
"உங்களுக்கு மட்டுமில்லை, இந்த உலகத்தில் இருக்கும் எந்த தாய்க்கும் தடை போட முடியாதென்று ஆதிராவும் சிரித்தாள்".
"செல்ல மகளின் சிரிப்பை கேட்டவர்,சாப்டியா பாப்பு என்க, ஆச்சுமா".
"பாப்பு, நம்ப வீட்டுக்கு இன்றைக்கு யார் வந்தாங்க சொல்லு பார்க்கலாமென்று மகளை கேட்க, மிசஸ்.மேகலா சுந்தர், நீங்க என்ன லூசா?".
"மகளின் கேள்வியில், என்னடி திடீர்னு லூசுனு சொல்லுற என்க, பின்ன என்னம்மா".
"அங்க யார் வந்துருப்பாங்களென்று நான் என்ன ஞானக்கண்ணிலா பார்த்து சொல்ல முடியும்?.நான் இருப்பது இந்தியாவில்".
"நீ இருப்பது இலங்கையின் களுத்துறையில்".
"இப்படி இருக்க,அங்கு வந்த ஆளை பற்றி என்னிடம் கேட்கிறாயே?, உன்னை வேறு என்ன சொல்ல".
"ஹிஹிஹி.... ஆமாம் இல்லையானு சிரித்தவர், தாத்தா, பாட்டியோட, கண்ணாவும் வந்தான் பாப்பு".
"என் கண்ணா, நாளைக்கு ஷோரூம் ஓப்பன் பண்ண போறான் தெரியுமா?".
"என்ன மாம் சொல்லுறன அதிர்ந்து போய் கேட்டாள்! ".
"ஆமா பாப்பு".
"இரு உனக்கு வாட்சப்பில் இன்விடேஷனை அனுப்பி வைக்கிறேன் என்றவர், நீ தான் படித்து முடித்து, உனக்கான பேர் சம்பாதிக்கும் வரை, அவனுங்க ரெண்டு பேர்கிட்டையும் பேச மாட்டேனு சத்தியம் பண்ணிட்டியே".
"ஆமா மாம், அந்த ரெண்டு வளர்ந்த மாடுங்களை நான் மீண்டும் பார்க்கும் போது, இந்த ஆதிரா நல்ல பொசிஷன்ல இருக்கணும்".அந்த எண்ணத்தில் தானே மாம், உங்களை எல்லாம் விட்டு இங்கே நான் தனியா இருக்கேன்".
இன்னும் கொஞ்ச நாள் தான் மாம்.இந்த ஆதிரா யாருனு நிரூபித்து விட்டு, உன்னை தேடி வரேன்.அதுவரை, நீ அமைதியா இருந்து தான் ஆகணுமென்றாள்".
"மகளின் உறுதியான குரலை கேட்ட மேகலாவிற்கு, கண்கள் கலங்கியது". மகளை பார்த்து,மூன்று வருடங்களாகின்றது".எத்தனையோ முறை இங்கு அழைத்தும், தன் எண்ணம் நிறைவேறாமல் வரமாட்டேன் என்று சொல்லி விட்டாள்".
"சரி பாப்பு".
"உன் ஆசைப்படியே நடக்கட்டும் டா".
" உடம்பை பார்த்துக்கோ, அம்மா வைக்குறேன் என்று சொல்ல ஓகே மாம்".
" நீயும், அப்பாவும் உடம்பை பார்த்துக்கோங்க என்றபடியே ஆதிராவும் அழைப்பை துண்டித்தாள்".
சென்னை மகாபலிபுரம் :
தேவியும்,வசந்தியும் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டு, தூரத்து அலையை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.வந்து அரைமணி நேரம் ஆகியும், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை".
"தேவி, தனா எப்போ வராங்கள்னு கேட்க, இன்னும் ரெண்டு நாள் ஆகும் வசந்தி".
"ம்ம் என்றவர், இந்த கடற்கரை அலையை பாரேன், எப்படியாவது தனக்கு முன்னே செல்லும் அலையை தொட்டுவிடனுமென்று ஓயாமல் ஓடி வருது".அதனால் தொட முடியாதென்று தெரிந்தும், அலை தன் வேலையை நிறுத்துறதில்லை".
"ஆனால், நம்ப மனுஷ பிறவி இருக்கே, சின்ன விஷயத்தில் தோல்வி ஏற்பட்டாலும் குடி மூழ்கியது போல ஆகிடுறோம்".
"போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை இல்லையா என்க, புரிஞ்சிட்டு வசந்தினு தனது தோழியின் கையை பிடித்துக்கொண்டு சொல்லியவர், டெண்டர் நம்ம கை விட்டு போனதும் அப்சட் ஆகிட்டேன்".
"இப்போ நிதர்சனம் புரிஞ்சிட்டுடி".
"தேங்க்யூடி வசந்தி.நீ கூட இருக்கும் போது எந்த கவலையும் எனக்கு தொடராது".
"இல்லை தேவி".
" உனக்கு நான் தான் நன்றி சொல்லணும்டி".
" நீ மட்டும் இல்லையென்றால், இந்த கடல்ல என்றோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்.இந்த உசுரும் வாழ்க்கையும் நீ போட்ட பிச்சைடி வசந்தி கண்கலங்கினார்".
"வாய்லே அடி விழும்டி".
"என்னடி பிச்சை கிச்சைனு சொல்லிட்டு இருக்க?நம்முடையது என்ன,இன்னைக்கு நேற்று பழக்கமா?.
நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க.
"இடையில் ஏதோ நடந்துட்டுடி".அதற்காக உன்னை அப்படியே விட்டுறுவேனாடி?.
இன்னொரு முறை இப்படிலாம் பேசுன, நான் உங்கிட்ட பேச மாட்டேனென்று தேவி சொல்ல,அதற்கு வசந்தியோ என்னை மன்னிச்சிடுடி".
"இந்த உலகத்தில் எனக்கு சொந்தம்னு இருப்பது, நீயும் தனாவும் தான் தேவி".
நீயும் பேசவில்லை என்றால் நிச்சயமா நான் உசுரோட இருக்கமாட்டேன்டி என்கவும்,அடியேய் என்னடி பேச்சு இது?.
"உங்கிட்ட மட்டும் பேசாமல் என்னால் இருக்க முடியுமா?".
சரி வா அப்படியே காலார கொஞ்சம் நடந்து வரலாமென்று தேவி எழுந்திருக்க, வசந்தியும் எழ, இருவரும் மண்ணில் கால் புதைய நடந்தனர்.
"அங்கங்கே சிலர் ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருப்பதை பார்த்த தேவிக்கு, தனது காதல் கணவரின் நினைவு வந்தது".
"முதல் முறை தனது கணவர் தன வீர சிம்ஹனை சந்தித்ததும் இதே மகாபலிபுர கடற்கரையில் தான் என்பதால், தேவிக்கு இந்த கடற்கரை மிகவும் பிடித்தமானது".
"அன்று சந்தித்ததை நினைத்து தேவிக்கு சிரிப்பு வர,என்ன தேவி மலரும் நினைவுகளாடினு வசந்தி கேட்கவும்,அந்நாளை நினைத்து சிரிப்பு வந்தது".
"ஹாஹாஹா என்று இருவரும் சத்தமிட்டு சிரித்து விட்டு, அதுலாம் அழியா பொக்கிஷங்கள் என்று பேசிக்கொண்டே ரிசார்டிற்கு வந்தனர்".
"பின்னர் வழக்கமாக சாப்பிடும் உணவு வகைகளை இருவரும் ரூமில் இருந்தே ஆர்டர் பண்ணியவர்கள், ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஃப்ரஷ் ஆகவும், ஆர்டர் பண்ணிய உணவுகளை எடுத்துக்கொண்டு வேலையாளும் அங்கு வந்து கதவை தட்ட சரியாக இருந்தது".
"இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்கவும், தேவியின் செல்ஃபோனிற்கு தனாவிடமிருந்து கால் வந்தது".
"அவர் தாண்டி என்றபடியே அட்டென் பண்ணியவர், வசந்தியோடு மகாபலிபுரம் வந்திருப்பதை சொல்ல,அடிப்பாவி...புருஷனோடு செல்ல வேண்டிய இடத்துக்கு, தோழியை கூப்பிட்டு போய் தெய்வ குத்தமாக்கிட்டியே டார்லிங்னு தனா சொல்ல,அதற்கு தேவியோ பரவாயில்லைங்க என்றார்".
"நீயும் கூட வந்திருக்கலாம் டார்லிங்".
"நாளைக்கே நான் கிளம்பிடுவேன் பாரென்றார்".
அச்சோ!!
ஏன் தனா இப்படி?.
என்னமோ, இப்போ தான் புதுசா கல்யாணம் ஆன போல பண்ணுறீங்களே என்க, அந்தளவுக்கு என்னை மயக்கி வச்சிருக்கிறியே டார்லிங்.
உள்ளே இருக்கும் கண்ணாடி சுவற்றின் வழியாக, கடற்கரையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வசந்திக்கு, சற்று தள்ளி போய் பால்கனியில் நின்று ஃபோன் பேசும் தேவி கண்ணில் பட, பெரு மூச்சு வந்தது.
இந்த ஆண்டவன், எனக்கு மட்டும் ஏன், குடும்பம் என்ற ஒன்றை எழுதவில்லை என்பதை எண்ணி,மனதிற்குள் வருத்தப்பட்டார்.
பாட்டி என்று ருத்ரன் கூப்பிட, இதோ வீரா என்றவர், தனது அருகில் உள்ள பையிலிருந்த வெள்ளி தட்டை எடுத்தவர், அதில் வாங்கி வந்த பழங்களையும், இன்விடேஷனையும் வைத்து கணவரை பார்த்தார்.
பின்னர் சிம்ஹன் தாத்தா தனது மனைவியோடு எழுந்து நிற்க,இங்கு என்னடா நடக்குது என்ற தொணியில் மேகலாவும், சுந்தரும் பார்த்தனர்.
"மாப்பிள்ளை, அம்மாடி மேகலா இதை வாங்கிக்குங்க என்றனர்".
"என்ன மேகுனு மனைவியிடம் சுந்தர் கேட்க, எனக்கு எதுவும் தெரியாதுங்க".
தட்டை இருவரும் வாங்கிக்கொண்டு, ஏதோ நல்ல விஷயமாக தான் தெரியுதென்ற சுந்தர், மேகு இதை பூஜையறையில் வைத்து எடுத்துவா என்க, சரிங்க என்றவாறு மேகலா அங்கிருந்து சென்றார்.
"பூஜையறைக்கு வந்த மேகலா, கையில் இருந்த தட்டை சாமிக்கு முன்பு வைத்தவர், அம்மா துர்கா தேவி, உன் கருணையால் எல்லாம் நல்லதா நடக்கட்டும்மானு வேண்டிக் கொண்டார்".
"பின்னர் தட்டின் மேலிருந்த இன்விடேஷனை மட்டும் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தவரோ,கணவர் முன்பு நீட்டினார்".
"அதை வாங்கிய சுந்தர், கவரை திறந்து,உள்ளே இருந்த கார்டை பார்த்து அதிர்ந்து போனார்".
"பிறகு அதிர்விலிருந்து வெளியே வந்தவர், படித்து முடித்து விட்டு, மனைவியிடம் கார்டை கொடுத்து, கண்ணா என்று மருமகனை நோக்கி தனது கையை நீட்ட,அவரின் கைக்குள் தனது வலது கையை வைத்தான்".
"மேன்மேலும் வெற்றியும் புகழும் உன்னை வந்து சேரணும் கண்ணானு தனது மருமகனை ஆசீர்வதித்தார்".
"மேகலாவும் படித்து விட்டு மருமகனின் அருகில் வந்தவர், வாழ்த்துக்கள்பா என்க, ருத்ரனோ தனது அத்தையை பார்த்து அவ்வளவு தானா என்றான்".
" சிரித்துக்கொண்டே,நான் தான் முதல் கஷ்டமர்".
"ஹாஹாஹா என்று சிரித்தவன், கடைக்கு ஓனரம்மாவே கஷ்டமரா என்க, அண்ணன் மகனின் பரந்த மனதை கேட்டு மேகலாவிற்கு கண் கலங்கியது".
"பின்னர் மதிய உணவை சாப்பிட்டு முடித்தவர்கள், கண்டிப்பாக வரவேண்டுமென்று மூவரும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்".
"மேகு, வீராவிற்கு அப்படியே என் மாமனார் போல குணமென்று சுந்தர் சொல்ல,ஆமாங்க.எங்கே,உங்க தங்கச்சி குணம் போல இருந்து, அப்பா வீடே எனக்கு இல்லாமல் போகிடுமோயென்ற கவலை இருந்துச்சி".ஆனால், கண்ணா என் அப்பா ரத்தம்னு நிருபிச்சிட்டான்".
"பாப்புக்கும் இந்த வருஷம் படிப்பு முடியுது".கையோடு இருவருக்கும் கல்யாணத்தை முடிச்சி வச்சிட்டால், மனசு திருப்தியாகிடுமென்று மேகலா சொல்ல,யார் தலையில் என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும் மேகு".வீண் ஆசைகளை மனதிற்குள் வளர்த்துக்காதே என்றவர்,கொஞ்ச நேரம் நான் படுக்குறேன்".
"ஈவ்னிங் லோடு அனுப்ப போகணும், அஞ்சு மணிக்கு எழுப்பிவிடுமா என்றவாறு, சுந்தர் தனது அறைக்குள் சென்று விட்டார்".
சுந்தருடன் திருமணமாகும் வரை, ருத்ரனை பார்த்துக்கொண்டது மேகலா தான்.ஐந்து வயது பாலகனாக இங்கு வந்தவன், இன்று தனித்து தொழிலை தொடங்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதை கண்டு, மேகலாவிற்கு ஆனந்த கண்ணீர் தான் வந்தது.
"தனக்கு மகள் பிறந்தால்,அண்ணன் மகனுக்கு தான் கட்டி வைக்க வேண்டுமென்று மேகலாவிற்கு மனதிற்குள் ஆசை".ஆனால், தனது அண்ணியின் பேராசை குணம் தெரிந்த பின்னர்,மேகலாவின் மனதிற்குள் பெரும் தடுமாற்றம் வந்தது".
"இருந்தும்,நிச்சயமாக தனது பெற்றோரும் அண்ணன் மகனும் தன் மன ஆசைக்கு தடை சொல்லமாட்டாங்களென்று,பெரும் நம்பிக்கை இருக்கிறது".
"இந்த யோசனையோடு இருந்த மேகலாவிற்கு, அவரது செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
"டீப்பாயின் மேல் இருந்த போனை எடுத்து பார்க்க, அதில் பாப்பு என்ற பெயர் வந்தது".அட்டென் பண்ணியவர், பாப்புமா, நல்லா இருக்கியாடா பட்டு?
மாம்...
"டெய்லி உங்க கிட்ட பேசிட்டு தானே இருக்கேன்".அதற்குள் என்ன ஆகிடப் போகுதென்று கேட்டாள் சுந்தர்- மேகலா தம்பதியரின் ஒரே செல்ல மகள் ஆதிரா".
"பாப்புமா", தினமும் பேசினால் என்ன?.
"என் மகளை நான் விசாரிக்க கூடாதா?".
"இதற்கு யார் தடை சொல்ல முடியுமென்று மேகலா கேட்க,அய்யோ மாம்"."போதும்... போதும்".
"உங்களுக்கு மட்டுமில்லை, இந்த உலகத்தில் இருக்கும் எந்த தாய்க்கும் தடை போட முடியாதென்று ஆதிராவும் சிரித்தாள்".
"செல்ல மகளின் சிரிப்பை கேட்டவர்,சாப்டியா பாப்பு என்க, ஆச்சுமா".
"பாப்பு, நம்ப வீட்டுக்கு இன்றைக்கு யார் வந்தாங்க சொல்லு பார்க்கலாமென்று மகளை கேட்க, மிசஸ்.மேகலா சுந்தர், நீங்க என்ன லூசா?".
"மகளின் கேள்வியில், என்னடி திடீர்னு லூசுனு சொல்லுற என்க, பின்ன என்னம்மா".
"அங்க யார் வந்துருப்பாங்களென்று நான் என்ன ஞானக்கண்ணிலா பார்த்து சொல்ல முடியும்?.நான் இருப்பது இந்தியாவில்".
"நீ இருப்பது இலங்கையின் களுத்துறையில்".
"இப்படி இருக்க,அங்கு வந்த ஆளை பற்றி என்னிடம் கேட்கிறாயே?, உன்னை வேறு என்ன சொல்ல".
"ஹிஹிஹி.... ஆமாம் இல்லையானு சிரித்தவர், தாத்தா, பாட்டியோட, கண்ணாவும் வந்தான் பாப்பு".
"என் கண்ணா, நாளைக்கு ஷோரூம் ஓப்பன் பண்ண போறான் தெரியுமா?".
"என்ன மாம் சொல்லுறன அதிர்ந்து போய் கேட்டாள்! ".
"ஆமா பாப்பு".
"இரு உனக்கு வாட்சப்பில் இன்விடேஷனை அனுப்பி வைக்கிறேன் என்றவர், நீ தான் படித்து முடித்து, உனக்கான பேர் சம்பாதிக்கும் வரை, அவனுங்க ரெண்டு பேர்கிட்டையும் பேச மாட்டேனு சத்தியம் பண்ணிட்டியே".
"ஆமா மாம், அந்த ரெண்டு வளர்ந்த மாடுங்களை நான் மீண்டும் பார்க்கும் போது, இந்த ஆதிரா நல்ல பொசிஷன்ல இருக்கணும்".அந்த எண்ணத்தில் தானே மாம், உங்களை எல்லாம் விட்டு இங்கே நான் தனியா இருக்கேன்".
இன்னும் கொஞ்ச நாள் தான் மாம்.இந்த ஆதிரா யாருனு நிரூபித்து விட்டு, உன்னை தேடி வரேன்.அதுவரை, நீ அமைதியா இருந்து தான் ஆகணுமென்றாள்".
"மகளின் உறுதியான குரலை கேட்ட மேகலாவிற்கு, கண்கள் கலங்கியது". மகளை பார்த்து,மூன்று வருடங்களாகின்றது".எத்தனையோ முறை இங்கு அழைத்தும், தன் எண்ணம் நிறைவேறாமல் வரமாட்டேன் என்று சொல்லி விட்டாள்".
"சரி பாப்பு".
"உன் ஆசைப்படியே நடக்கட்டும் டா".
" உடம்பை பார்த்துக்கோ, அம்மா வைக்குறேன் என்று சொல்ல ஓகே மாம்".
" நீயும், அப்பாவும் உடம்பை பார்த்துக்கோங்க என்றபடியே ஆதிராவும் அழைப்பை துண்டித்தாள்".
சென்னை மகாபலிபுரம் :
தேவியும்,வசந்தியும் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டு, தூரத்து அலையை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.வந்து அரைமணி நேரம் ஆகியும், இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை".
"தேவி, தனா எப்போ வராங்கள்னு கேட்க, இன்னும் ரெண்டு நாள் ஆகும் வசந்தி".
"ம்ம் என்றவர், இந்த கடற்கரை அலையை பாரேன், எப்படியாவது தனக்கு முன்னே செல்லும் அலையை தொட்டுவிடனுமென்று ஓயாமல் ஓடி வருது".அதனால் தொட முடியாதென்று தெரிந்தும், அலை தன் வேலையை நிறுத்துறதில்லை".
"ஆனால், நம்ப மனுஷ பிறவி இருக்கே, சின்ன விஷயத்தில் தோல்வி ஏற்பட்டாலும் குடி மூழ்கியது போல ஆகிடுறோம்".
"போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை இல்லையா என்க, புரிஞ்சிட்டு வசந்தினு தனது தோழியின் கையை பிடித்துக்கொண்டு சொல்லியவர், டெண்டர் நம்ம கை விட்டு போனதும் அப்சட் ஆகிட்டேன்".
"இப்போ நிதர்சனம் புரிஞ்சிட்டுடி".
"தேங்க்யூடி வசந்தி.நீ கூட இருக்கும் போது எந்த கவலையும் எனக்கு தொடராது".
"இல்லை தேவி".
" உனக்கு நான் தான் நன்றி சொல்லணும்டி".
" நீ மட்டும் இல்லையென்றால், இந்த கடல்ல என்றோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்.இந்த உசுரும் வாழ்க்கையும் நீ போட்ட பிச்சைடி வசந்தி கண்கலங்கினார்".
"வாய்லே அடி விழும்டி".
"என்னடி பிச்சை கிச்சைனு சொல்லிட்டு இருக்க?நம்முடையது என்ன,இன்னைக்கு நேற்று பழக்கமா?.
நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க.
"இடையில் ஏதோ நடந்துட்டுடி".அதற்காக உன்னை அப்படியே விட்டுறுவேனாடி?.
இன்னொரு முறை இப்படிலாம் பேசுன, நான் உங்கிட்ட பேச மாட்டேனென்று தேவி சொல்ல,அதற்கு வசந்தியோ என்னை மன்னிச்சிடுடி".
"இந்த உலகத்தில் எனக்கு சொந்தம்னு இருப்பது, நீயும் தனாவும் தான் தேவி".
நீயும் பேசவில்லை என்றால் நிச்சயமா நான் உசுரோட இருக்கமாட்டேன்டி என்கவும்,அடியேய் என்னடி பேச்சு இது?.
"உங்கிட்ட மட்டும் பேசாமல் என்னால் இருக்க முடியுமா?".
சரி வா அப்படியே காலார கொஞ்சம் நடந்து வரலாமென்று தேவி எழுந்திருக்க, வசந்தியும் எழ, இருவரும் மண்ணில் கால் புதைய நடந்தனர்.
"அங்கங்கே சிலர் ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருப்பதை பார்த்த தேவிக்கு, தனது காதல் கணவரின் நினைவு வந்தது".
"முதல் முறை தனது கணவர் தன வீர சிம்ஹனை சந்தித்ததும் இதே மகாபலிபுர கடற்கரையில் தான் என்பதால், தேவிக்கு இந்த கடற்கரை மிகவும் பிடித்தமானது".
"அன்று சந்தித்ததை நினைத்து தேவிக்கு சிரிப்பு வர,என்ன தேவி மலரும் நினைவுகளாடினு வசந்தி கேட்கவும்,அந்நாளை நினைத்து சிரிப்பு வந்தது".
"ஹாஹாஹா என்று இருவரும் சத்தமிட்டு சிரித்து விட்டு, அதுலாம் அழியா பொக்கிஷங்கள் என்று பேசிக்கொண்டே ரிசார்டிற்கு வந்தனர்".
"பின்னர் வழக்கமாக சாப்பிடும் உணவு வகைகளை இருவரும் ரூமில் இருந்தே ஆர்டர் பண்ணியவர்கள், ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஃப்ரஷ் ஆகவும், ஆர்டர் பண்ணிய உணவுகளை எடுத்துக்கொண்டு வேலையாளும் அங்கு வந்து கதவை தட்ட சரியாக இருந்தது".
"இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்கவும், தேவியின் செல்ஃபோனிற்கு தனாவிடமிருந்து கால் வந்தது".
"அவர் தாண்டி என்றபடியே அட்டென் பண்ணியவர், வசந்தியோடு மகாபலிபுரம் வந்திருப்பதை சொல்ல,அடிப்பாவி...புருஷனோடு செல்ல வேண்டிய இடத்துக்கு, தோழியை கூப்பிட்டு போய் தெய்வ குத்தமாக்கிட்டியே டார்லிங்னு தனா சொல்ல,அதற்கு தேவியோ பரவாயில்லைங்க என்றார்".
"நீயும் கூட வந்திருக்கலாம் டார்லிங்".
"நாளைக்கே நான் கிளம்பிடுவேன் பாரென்றார்".
அச்சோ!!
ஏன் தனா இப்படி?.
என்னமோ, இப்போ தான் புதுசா கல்யாணம் ஆன போல பண்ணுறீங்களே என்க, அந்தளவுக்கு என்னை மயக்கி வச்சிருக்கிறியே டார்லிங்.
உள்ளே இருக்கும் கண்ணாடி சுவற்றின் வழியாக, கடற்கரையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வசந்திக்கு, சற்று தள்ளி போய் பால்கனியில் நின்று ஃபோன் பேசும் தேவி கண்ணில் பட, பெரு மூச்சு வந்தது.
இந்த ஆண்டவன், எனக்கு மட்டும் ஏன், குடும்பம் என்ற ஒன்றை எழுதவில்லை என்பதை எண்ணி,மனதிற்குள் வருத்தப்பட்டார்.