Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 537
- Thread Author
- #1
பொள்ளாச்சி:
தனது அண்ணன் மகள்,ஜமீனின் அடுத்த வாரிசுகளோடு தம்பதியராய் வாசலில் நிற்க எல்லையில்லாத மகிழ்ச்சியோடு ஆலம் சுற்றி உள்ளே அழைத்து போன வள்ளியம்மைக்கு தலை கால் புரியவில்லை.
இரட்டை குழந்தைகளின் வருகையால் வீடே கலகலப்பாக மாறியது..
சத்தியமூர்த்தி-வசுந்தரா இருவருக்கும் பேரப்பிள்ளையே உலகமானார்கள்
நாட்களும் வேகமாக ஓடியது..
பதினாறாம் நாள் பூஜை முடிந்து அன்றே குழந்தைகளுக்கு பெயர்சூட்டு விழாவை கோலகலமாக கொண்டாடினர்.
வெகு விமர்சையாக நடந்த விழாவை விஷாலாதேவி ஒரு ஓரமாய் நின்று கொண்டு கவனித்தார்.
வசுந்தரா தான் தனது அண்ணனின் மனைவி என்ற உரிமையில் அவரை வரவழைத்தது.
குழந்தைகளுக்கு இஷான் வீர சிம்ஹன்-இஷானி வீர சிம்ஹனென்று பெயர் சூட்டினர்.
இரண்டு வழி தாத்தா-பாட்டிகளும் தங்கள் பேரப்பிள்ளைங்களுக்கு விலைமதிப்பில்லா பரிசுகளை வாரி வழங்கினர்.
குழந்தைகள் பெயர் சூட்டு விழா முடிந்ததும் ருத்ரன் தனது தாத்தா பாட்டியோடு இரத்தினபுரிக்கு வந்து விட்டான்.
வாரம் வாரம் தனது பிள்ளைகளை பார்க்க செல்ல மட்டும் அவன் மறக்கவில்லை.ஏன் கிரி உன் பேரன் இப்படி பிளைட்காரனுக்கு பணத்தை அள்ளி குடுக்குறதுக்கு,அங்கு மாமியார் வீட்டிலே இருக்க வேண்டியது தானே என்க,ருத்ரனோ முறைத்துக்கொண்டு ஷோரூமிற்கு சென்றான்.
நல்ல நாளில் ஆதுக்கும் ராகினிக்கும் திருமணத்தை முடித்து வைத்தனர்.அவர்களும் தங்கள் வாழ்க்கை தொடங்கினர்.
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதெல்லாம் இந்த முறையாவது என்னை கூப்பிட்டு போவியாயென மனைவி கேட்பாளென்று ருத்ரனும் ஆர்வமாய் பார்ப்பான்.அவளோ கிணற்றில் விழுந்த கல்லு போல அதை கண்டுக்காமல் இருப்பாள்.
பொள்ளாச்சிக்கு வந்து இதோ மூன்று மாதங்கள் சென்று விட,மதிய சாப்பாடை சாப்பிடும் போது அப்பா என்று ஆர்கலி கூப்பிட்டாள்.
சொல்லு கண்ணுயென்க..
ஃபிளைட்ல டிக்கெட் போடுங்கப்பா என்க,மறுநாளே இரத்தினபுரிக்கு மனைவி மகள் பேரப்பிள்ளைங்களோடு வந்து சேர்ந்தார்.
ருத்ரன் பிசினஸ் விஷயமாக அதிகாலையிலே சென்றிட ஆர்கலியும் குழந்தைகளும் வந்தது தெரியாமல் போய்விட்டது.
போன விஷயத்தை முடித்து விட்டு வீடு திரும்பவே ருத்ரனுக்கு இரவு பத்து மணிக்கு மேலானது.
வீட்டிலிருக்கும் மற்றவர்கள் சாப்பிட்டு படுத்துவிட,கிரிஜா பாட்டி மட்டும் பேரனுக்காய் காத்திருந்தார்.
ரொம்ப டயர்டாக உள்ளே வந்தவன் ஹாலில் இருந்த பாட்டியை பார்த்து என்ன பாட்டி இன்னும் தூங்காமல் என்ன பண்ணுறீங்களென்று கோவப்பட்டான்.
தூக்கம் வரலை கண்ணா.அதான் உனக்காக வெயிட் பண்ணினேன் என்றார்.
நீங்க இருக்கீங்களே என்றவாறு சோபாவில் ஹப்பாடா என்று சாய்ந்து உட்கார்ந்தவனை பார்த்தவர்,டின்னர் எடுத்து வைக்கட்டுமா என்க,சாப்பிட்டு தான் கிளம்பினேன்.
நீ சாப்டியா?உன் டார்லிங் சாப்டாச்சா என கேட்க,ம்ம் என்றவர் போன விஷயம் என்ன ஆச்சு கண்ணா என்க,சக்சஸ் தான் பாட்டி.
என்ன மொத்தமா ஆர்டர் கொடுத்துருக்கிறார்கள்.மினிஸ்டர் வீட்டோடது என்பதால் நமக்கு நல்ல பேர் கிடைக்கும்.
ரஞ்சன் வேற அங்க இருக்கிறதால நானும் இவனும் தான் டிசைன் பண்ணுறோமா,அது தான் கொஞ்சம் சிரமமாக இருக்கு என்றான்.
ஏன் கண்ணா இதற்கா இந்த சோகம்.எனக்கு தெரிந்த டிசைனர் இருக்காங்கள்.அவங்களை வேண்டுமானால் அனுப்பட்டுமா என்க...
பாட்டி நிஜமாவா என்று கேட்க,ஆமா கண்ணா என்றவரிடம் யாரு அந்த நாலாவது தெருவில் இருக்கும் மேல் வீட்டு ஆன்டியா?
இல்லை உன் வாக்கிங் தோழி சீதா பாட்டியோட பேத்தி ஜானுவா என்று ருத்ரன் கேட்க,கண்ணா என்று முறைத்தவர் ஏன் என்னை பார்த்தால் டிசைனரா தெரியவில்லையா என்றார்.
பாட்டி சொன்னதைக் கேட்டவன் அட ஆமா.ஒரு பெரிய டிசைனரையே பக்கத்துல வச்சுக்கிட்டு நான் ஏன் கவலைப்படணும் என்றவாறு தனது பாட்டியை அணைத்துக் கொண்டான்.
ரஞ்சன் இல்லாதது ரொம்ப சிரமமா தான் இருக்கென்று தாத்தாவும் சொன்னாங்க கண்ணா.நானே நாளையில் இருந்து ஷோரூமிற்கு வரலாம்னு சொல்ல தான் உனக்காக காத்திருந்தேன் என்க,உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே பாட்டி என்கும் பேரனை பார்த்தவர் இல்லை வீரா.
போய் ரெஸ்ட் எடுப்பா.
எல்லாம் அந்த கண்ணன் பார்த்துப்பான் என்றவாறு வாசல் கதவை பூட்டியவர் இரவு விளக்கை ஆன் பண்ணி விட்டு மற்ற விளக்கங்களை ஆஃப் பண்ணியவர் அவர் அறையை நோக்கி செல்ல ருத்ரனும் தனது சூட்கேஸோடு முதல் மாடியில் இருக்கும் அவன் அறையை நோக்கி சென்றவன் உள்ளே போய் ரெப்ரஷாகி வந்து பெட்டில் படுக்க மனைவி,பிள்ளைகளின் நினைவு வந்தது.
கடந்த இரண்டு வாரமாக கல்யாண ஆர்டர்களுக்கு நகைகள் ரெடி பண்ணுவதால் ருத்ரனால் பொள்ளாச்சிக்கு போக முடியவில்லை.
இந்த வாரமாவது போக வேண்டுமென்று நினைத்து கண்ணை மூடியவன்,அசதியின் காரணமாய் உறங்கிவிட்டான்.
செம்மஞ்சளை குழைத்து பூசியது போல ஆதவனும் கிழக்கே உதிக்க தயாராகினான்.
வழக்கமாய் எழும் நேரம் தாண்டி தூங்கியவனின் முகத்தில் எதோ பஞ்சு பொதிகள் தீண்ட இன்னைக்கும் கனவில் வந்தாச்சா.
உங்களுக்கு இதே வேலை சாம்(இஷான்)என்று தனது மகனை சொன்னவன் எங்கே உங்க அம்மாகாரி...
எப்போ பாரு தலை முடியை காய வைக்கிறேன் என்ற பெயரில் என் முகத்திலேயே ஈரத்தை உதறி தள்ளுவாள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அதே போல் நடந்தது.
அடியேய் ராங்கி..இன்னைக்கும் வந்துட்டியாடி.ஒரு நாளைக்கு உன்னை என்ன பண்ண போறேன் பாரென்று ருத்ரன் புலம்பிக் கொண்டிருந்தான்.
சிறிது நொடிகள் சென்று இன்னொரு பிஞ்சு கால்கள் அவன் வலது பக்க இடுப்பில் உதைக்க,இஷிமா அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாதிங்க என்றவாறு திரும்பி படுத்தவன் கன்னத்தில் வலிக்க கடித்து வைத்தாள்.
அந்த வலியில் ஆஆஆஆ என்றவாறு எழுந்தவன் அங்கிருந்தவளை பார்த்து அதிர்ந்து போனான்.
என்ன மேன் இப்படி கனவிலே வாழ்க்கையை ஓட்டிடலானு முடிவு பண்ணிட்டியாயென்று ஆர்கலி கேட்க,தனது இரண்டு கண்களையும் நல்லா தேய்த்து விட்டு மீண்டும் ருத்ரன் பார்க்க சீப்பு ஒன்று அவன் தலையில் வந்து விழுந்தது.
பார்பியென்று வேகமாய் எழுந்து மனைவியிடம் போனவன் வந்துட்டியாடி என்றவாறு அவளை கைகளில் தூக்கி சுற்ற ஏய் என்ன பண்ணுற லாம்ம் போஸ்ட் என கத்தியவள் தலை சுத்துவது போல இருக்க கண்களை மூடி ருத்ரனின் தலையில் சாய்ந்தாள்.
பின்னர் கீழே இறக்கியவன் எங்கேடி லட்டூஸ்ங்களென்க,பெட்டை காட்டினாள்.
கையிலியுந்தவளை அம்போயென்று விட்டு விட்டு குழந்தைகளை நோக்கி போனவன் செல்ல குட்டிங்களா அப்பாவை தேடி வந்துட்டீங்களா?
உங்களுக்காவது அப்பா மீது பாசம் இருக்கேயென்று இருவரையும் ஒரு சேர அணைத்து முத்தமிட்டவன்,ஏண்டி வந்ததை சொல்லவில்லையென்று மனைவியை பார்த்து கேட்க அவளோ கணவனை முறைத்தவாறு நிற்பது தெரிந்தது.
ஏய் என்னடி லுக்?
வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கென்றவன் இருங்க அப்பா ப்ரஷாகிட்டு வரேனென்று டவளோடு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவன் குளித்து முடித்து வெளியே வர,அங்கே ஆர்கலி கபொர்டில் டிரஸ்களை அடுக்குவது தெரிந்தது.
பொறுமையாக போய் பின்னிருந்து மனைவியை அணைத்தவன் ரெண்டு வாரமா வொர்க் பிரஷர் அதிகம் பார்பி டால்.
அதனால் தான் பார்க்க வரமுடியலைடி என்றான்.
நேற்று வந்த போதே பாட்டியும் இரண்டு வாரமாக பேரன் வீட்டிற்கு வருவது இரவு 12 மணிக்கு மேலென்று சொல்லி வருத்தப்பட்டார்.
குளித்து முடித்துட்டு வந்த ஈர உடம்பு என்பதால் ஆர்கலியின் முதுகில் பட்டு சிலிர்த்தது.
சொல்லுடி?
கோவமாயென்று மீண்டும் கேட்க கணவனின் கையணைப்பில் இருந்தவள் வாய் திறந்து எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் இல்லை என்று அசைத்தாள்.
ஓஓஓ என்றவன் அவள் கழுத்தோரம் லேசாக கடித்து வைக்க வேம்பயரென்றவாறு திரும்பியவளின் இதழோடு தன் முரட்டு இதழை உறவாடவிட்டான்.
நிமிடங்களும் கடந்து செல்ல ருத்ரனின் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் தொடர்ந்து கேட்க இப்போ தான் ஒரு முத்தம் ஆரம்பிச்சேன் அதுக்குள்ள எந்த கிராஸ் டாக் என்று தெரியலையே என்றவன்,ஒரு கையால் தன்னவளை நெஞ்சோடு அணைத்தவாறு போய் போனை எடுத்து பார்த்தவன் காண்டு ஆனான்.
மீண்டும் கால் வர அட்டென் பண்ணியவன் சொல்லு கரடி என்க,ஏன் தடிமாடு என் மருமக குட்டிங்க வந்ததை சொல்ல முடியாமல் என்ன வெட்டி மாய்க்குறடாயென்று ஆது திட்ட கீழ வந்தேன் குருத்தெலும்பு காணா போய்டுமென்றே சொல்லி கட் பண்ணியவன் உன் அண்ணன் நாரதர் பயலை வச்சிக்கிட்டு ஒரு முத்தம் கூட குடுக்க முடியலையேடி என்றவன் மனைவியோடு பெட்டில் சரிய அய்யோஓஓ என்று பதறினாள்.
பதறியவளை கொஞ்சி கெஞ்சி தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் கணவனாய் அவளை ஆள தொடங்க ஆர்கலியும் விரும்பியே தன்னவனிடம் தொலைத்தாள்.
ராகினிக்கு தனது அண்ணன் பிள்ளைகளை கீழ விட மனமே வரவில்லை.
பின்னர் பேசிக்கொண்டே மதிய உணவை செய்யும் போது ராகினிக்கு வாமிட் வந்தது.
சிறிது நிமிடங்கள் செல்ல,முகத்தை கழுவியவளிடம் என்னடா ராகினி ஆச்சு என்றவரிடம் தெரியலங்கத்தை.
திடீர்னு இப்படி இருக்கென்றவளின் முகத்தை பார்த்தவர் அம்மாடி நாள் எதாவது தள்ளி போயிருக்கானு வசு கேட்க,யோசித்து பார்த்தவள் ஆமாங்கத்தை என்றாள்.
உடனே பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வர,அங்கே ஆர்கலி குழந்தைகளோடு ஹாலில் உட்கார்ந்திருந்தாள்.
காலடி சத்தம் கேட்டு வாசலை பார்த்தவள் அம்மா ராகினிக்கு என்னாச்சி?புட் பாய்சன் எதாவது ஆகிடுச்சா என்க,எல்லாம் நல்ல விஷயம் தான் அம்மு.
இரு இரு ஆது வரட்டும் பிறகு சொல்லுறேனென்க,அம்மா பிளீஸ் என்ன விஷயமென்று சொல்லுங்களென்றாள்.
அந்நேரம் ஆதுவும் வேகமாக வீட்டிற்கு வந்தவன் அம்மா என்னாச்சி?ஏன் உடனே வர சொன்னிங்க? யாருக்கும் எந்த பிச்சினையும் இல்லையே என்க,பிரச்சினை தான் கண்ணா.
நீயே ராகினிகிட்ட தெரிஞ்சிக்கோயென்றவாறு கிச்சனிற்குள் சென்று விட ஏய் என்னடி பிரச்சினையென்றான்.
ராகினி எதுவும் சொல்லாமல் கீழே இருக்கும் ரூமிற்கு செல்ல பின்னாடியே போய் கதவை சாத்தியவன் அடியேய் அங்க வேலை எவ்வளவு இருக்கு.
அதை போட்டு பதறியடித்து வந்தால் நீ முகத்தை திருப்பிட்டு போறியோ என்க,ஆதுவின் அருகில் வந்தவள் அவனின் வலது கையை எடுத்து தனது வயிற்றில் வைத்தவள் நீங்க அப்பா ஆகிட்டீங்களென்று வெட்கபட்டு சொல்ல,சந்தோஷத்தில் ஆதுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
தனது அண்ணன் மகள்,ஜமீனின் அடுத்த வாரிசுகளோடு தம்பதியராய் வாசலில் நிற்க எல்லையில்லாத மகிழ்ச்சியோடு ஆலம் சுற்றி உள்ளே அழைத்து போன வள்ளியம்மைக்கு தலை கால் புரியவில்லை.
இரட்டை குழந்தைகளின் வருகையால் வீடே கலகலப்பாக மாறியது..
சத்தியமூர்த்தி-வசுந்தரா இருவருக்கும் பேரப்பிள்ளையே உலகமானார்கள்
நாட்களும் வேகமாக ஓடியது..
பதினாறாம் நாள் பூஜை முடிந்து அன்றே குழந்தைகளுக்கு பெயர்சூட்டு விழாவை கோலகலமாக கொண்டாடினர்.
வெகு விமர்சையாக நடந்த விழாவை விஷாலாதேவி ஒரு ஓரமாய் நின்று கொண்டு கவனித்தார்.
வசுந்தரா தான் தனது அண்ணனின் மனைவி என்ற உரிமையில் அவரை வரவழைத்தது.
குழந்தைகளுக்கு இஷான் வீர சிம்ஹன்-இஷானி வீர சிம்ஹனென்று பெயர் சூட்டினர்.
இரண்டு வழி தாத்தா-பாட்டிகளும் தங்கள் பேரப்பிள்ளைங்களுக்கு விலைமதிப்பில்லா பரிசுகளை வாரி வழங்கினர்.
குழந்தைகள் பெயர் சூட்டு விழா முடிந்ததும் ருத்ரன் தனது தாத்தா பாட்டியோடு இரத்தினபுரிக்கு வந்து விட்டான்.
வாரம் வாரம் தனது பிள்ளைகளை பார்க்க செல்ல மட்டும் அவன் மறக்கவில்லை.ஏன் கிரி உன் பேரன் இப்படி பிளைட்காரனுக்கு பணத்தை அள்ளி குடுக்குறதுக்கு,அங்கு மாமியார் வீட்டிலே இருக்க வேண்டியது தானே என்க,ருத்ரனோ முறைத்துக்கொண்டு ஷோரூமிற்கு சென்றான்.
நல்ல நாளில் ஆதுக்கும் ராகினிக்கும் திருமணத்தை முடித்து வைத்தனர்.அவர்களும் தங்கள் வாழ்க்கை தொடங்கினர்.
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதெல்லாம் இந்த முறையாவது என்னை கூப்பிட்டு போவியாயென மனைவி கேட்பாளென்று ருத்ரனும் ஆர்வமாய் பார்ப்பான்.அவளோ கிணற்றில் விழுந்த கல்லு போல அதை கண்டுக்காமல் இருப்பாள்.
பொள்ளாச்சிக்கு வந்து இதோ மூன்று மாதங்கள் சென்று விட,மதிய சாப்பாடை சாப்பிடும் போது அப்பா என்று ஆர்கலி கூப்பிட்டாள்.
சொல்லு கண்ணுயென்க..
ஃபிளைட்ல டிக்கெட் போடுங்கப்பா என்க,மறுநாளே இரத்தினபுரிக்கு மனைவி மகள் பேரப்பிள்ளைங்களோடு வந்து சேர்ந்தார்.
ருத்ரன் பிசினஸ் விஷயமாக அதிகாலையிலே சென்றிட ஆர்கலியும் குழந்தைகளும் வந்தது தெரியாமல் போய்விட்டது.
போன விஷயத்தை முடித்து விட்டு வீடு திரும்பவே ருத்ரனுக்கு இரவு பத்து மணிக்கு மேலானது.
வீட்டிலிருக்கும் மற்றவர்கள் சாப்பிட்டு படுத்துவிட,கிரிஜா பாட்டி மட்டும் பேரனுக்காய் காத்திருந்தார்.
ரொம்ப டயர்டாக உள்ளே வந்தவன் ஹாலில் இருந்த பாட்டியை பார்த்து என்ன பாட்டி இன்னும் தூங்காமல் என்ன பண்ணுறீங்களென்று கோவப்பட்டான்.
தூக்கம் வரலை கண்ணா.அதான் உனக்காக வெயிட் பண்ணினேன் என்றார்.
நீங்க இருக்கீங்களே என்றவாறு சோபாவில் ஹப்பாடா என்று சாய்ந்து உட்கார்ந்தவனை பார்த்தவர்,டின்னர் எடுத்து வைக்கட்டுமா என்க,சாப்பிட்டு தான் கிளம்பினேன்.
நீ சாப்டியா?உன் டார்லிங் சாப்டாச்சா என கேட்க,ம்ம் என்றவர் போன விஷயம் என்ன ஆச்சு கண்ணா என்க,சக்சஸ் தான் பாட்டி.
என்ன மொத்தமா ஆர்டர் கொடுத்துருக்கிறார்கள்.மினிஸ்டர் வீட்டோடது என்பதால் நமக்கு நல்ல பேர் கிடைக்கும்.
ரஞ்சன் வேற அங்க இருக்கிறதால நானும் இவனும் தான் டிசைன் பண்ணுறோமா,அது தான் கொஞ்சம் சிரமமாக இருக்கு என்றான்.
ஏன் கண்ணா இதற்கா இந்த சோகம்.எனக்கு தெரிந்த டிசைனர் இருக்காங்கள்.அவங்களை வேண்டுமானால் அனுப்பட்டுமா என்க...
பாட்டி நிஜமாவா என்று கேட்க,ஆமா கண்ணா என்றவரிடம் யாரு அந்த நாலாவது தெருவில் இருக்கும் மேல் வீட்டு ஆன்டியா?
இல்லை உன் வாக்கிங் தோழி சீதா பாட்டியோட பேத்தி ஜானுவா என்று ருத்ரன் கேட்க,கண்ணா என்று முறைத்தவர் ஏன் என்னை பார்த்தால் டிசைனரா தெரியவில்லையா என்றார்.
பாட்டி சொன்னதைக் கேட்டவன் அட ஆமா.ஒரு பெரிய டிசைனரையே பக்கத்துல வச்சுக்கிட்டு நான் ஏன் கவலைப்படணும் என்றவாறு தனது பாட்டியை அணைத்துக் கொண்டான்.
ரஞ்சன் இல்லாதது ரொம்ப சிரமமா தான் இருக்கென்று தாத்தாவும் சொன்னாங்க கண்ணா.நானே நாளையில் இருந்து ஷோரூமிற்கு வரலாம்னு சொல்ல தான் உனக்காக காத்திருந்தேன் என்க,உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே பாட்டி என்கும் பேரனை பார்த்தவர் இல்லை வீரா.
போய் ரெஸ்ட் எடுப்பா.
எல்லாம் அந்த கண்ணன் பார்த்துப்பான் என்றவாறு வாசல் கதவை பூட்டியவர் இரவு விளக்கை ஆன் பண்ணி விட்டு மற்ற விளக்கங்களை ஆஃப் பண்ணியவர் அவர் அறையை நோக்கி செல்ல ருத்ரனும் தனது சூட்கேஸோடு முதல் மாடியில் இருக்கும் அவன் அறையை நோக்கி சென்றவன் உள்ளே போய் ரெப்ரஷாகி வந்து பெட்டில் படுக்க மனைவி,பிள்ளைகளின் நினைவு வந்தது.
கடந்த இரண்டு வாரமாக கல்யாண ஆர்டர்களுக்கு நகைகள் ரெடி பண்ணுவதால் ருத்ரனால் பொள்ளாச்சிக்கு போக முடியவில்லை.
இந்த வாரமாவது போக வேண்டுமென்று நினைத்து கண்ணை மூடியவன்,அசதியின் காரணமாய் உறங்கிவிட்டான்.
செம்மஞ்சளை குழைத்து பூசியது போல ஆதவனும் கிழக்கே உதிக்க தயாராகினான்.
வழக்கமாய் எழும் நேரம் தாண்டி தூங்கியவனின் முகத்தில் எதோ பஞ்சு பொதிகள் தீண்ட இன்னைக்கும் கனவில் வந்தாச்சா.
உங்களுக்கு இதே வேலை சாம்(இஷான்)என்று தனது மகனை சொன்னவன் எங்கே உங்க அம்மாகாரி...
எப்போ பாரு தலை முடியை காய வைக்கிறேன் என்ற பெயரில் என் முகத்திலேயே ஈரத்தை உதறி தள்ளுவாள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அதே போல் நடந்தது.
அடியேய் ராங்கி..இன்னைக்கும் வந்துட்டியாடி.ஒரு நாளைக்கு உன்னை என்ன பண்ண போறேன் பாரென்று ருத்ரன் புலம்பிக் கொண்டிருந்தான்.
சிறிது நொடிகள் சென்று இன்னொரு பிஞ்சு கால்கள் அவன் வலது பக்க இடுப்பில் உதைக்க,இஷிமா அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாதிங்க என்றவாறு திரும்பி படுத்தவன் கன்னத்தில் வலிக்க கடித்து வைத்தாள்.
அந்த வலியில் ஆஆஆஆ என்றவாறு எழுந்தவன் அங்கிருந்தவளை பார்த்து அதிர்ந்து போனான்.
என்ன மேன் இப்படி கனவிலே வாழ்க்கையை ஓட்டிடலானு முடிவு பண்ணிட்டியாயென்று ஆர்கலி கேட்க,தனது இரண்டு கண்களையும் நல்லா தேய்த்து விட்டு மீண்டும் ருத்ரன் பார்க்க சீப்பு ஒன்று அவன் தலையில் வந்து விழுந்தது.
பார்பியென்று வேகமாய் எழுந்து மனைவியிடம் போனவன் வந்துட்டியாடி என்றவாறு அவளை கைகளில் தூக்கி சுற்ற ஏய் என்ன பண்ணுற லாம்ம் போஸ்ட் என கத்தியவள் தலை சுத்துவது போல இருக்க கண்களை மூடி ருத்ரனின் தலையில் சாய்ந்தாள்.
பின்னர் கீழே இறக்கியவன் எங்கேடி லட்டூஸ்ங்களென்க,பெட்டை காட்டினாள்.
கையிலியுந்தவளை அம்போயென்று விட்டு விட்டு குழந்தைகளை நோக்கி போனவன் செல்ல குட்டிங்களா அப்பாவை தேடி வந்துட்டீங்களா?
உங்களுக்காவது அப்பா மீது பாசம் இருக்கேயென்று இருவரையும் ஒரு சேர அணைத்து முத்தமிட்டவன்,ஏண்டி வந்ததை சொல்லவில்லையென்று மனைவியை பார்த்து கேட்க அவளோ கணவனை முறைத்தவாறு நிற்பது தெரிந்தது.
ஏய் என்னடி லுக்?
வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கென்றவன் இருங்க அப்பா ப்ரஷாகிட்டு வரேனென்று டவளோடு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவன் குளித்து முடித்து வெளியே வர,அங்கே ஆர்கலி கபொர்டில் டிரஸ்களை அடுக்குவது தெரிந்தது.
பொறுமையாக போய் பின்னிருந்து மனைவியை அணைத்தவன் ரெண்டு வாரமா வொர்க் பிரஷர் அதிகம் பார்பி டால்.
அதனால் தான் பார்க்க வரமுடியலைடி என்றான்.
நேற்று வந்த போதே பாட்டியும் இரண்டு வாரமாக பேரன் வீட்டிற்கு வருவது இரவு 12 மணிக்கு மேலென்று சொல்லி வருத்தப்பட்டார்.
குளித்து முடித்துட்டு வந்த ஈர உடம்பு என்பதால் ஆர்கலியின் முதுகில் பட்டு சிலிர்த்தது.
சொல்லுடி?
கோவமாயென்று மீண்டும் கேட்க கணவனின் கையணைப்பில் இருந்தவள் வாய் திறந்து எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் இல்லை என்று அசைத்தாள்.
ஓஓஓ என்றவன் அவள் கழுத்தோரம் லேசாக கடித்து வைக்க வேம்பயரென்றவாறு திரும்பியவளின் இதழோடு தன் முரட்டு இதழை உறவாடவிட்டான்.
நிமிடங்களும் கடந்து செல்ல ருத்ரனின் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் தொடர்ந்து கேட்க இப்போ தான் ஒரு முத்தம் ஆரம்பிச்சேன் அதுக்குள்ள எந்த கிராஸ் டாக் என்று தெரியலையே என்றவன்,ஒரு கையால் தன்னவளை நெஞ்சோடு அணைத்தவாறு போய் போனை எடுத்து பார்த்தவன் காண்டு ஆனான்.
மீண்டும் கால் வர அட்டென் பண்ணியவன் சொல்லு கரடி என்க,ஏன் தடிமாடு என் மருமக குட்டிங்க வந்ததை சொல்ல முடியாமல் என்ன வெட்டி மாய்க்குறடாயென்று ஆது திட்ட கீழ வந்தேன் குருத்தெலும்பு காணா போய்டுமென்றே சொல்லி கட் பண்ணியவன் உன் அண்ணன் நாரதர் பயலை வச்சிக்கிட்டு ஒரு முத்தம் கூட குடுக்க முடியலையேடி என்றவன் மனைவியோடு பெட்டில் சரிய அய்யோஓஓ என்று பதறினாள்.
பதறியவளை கொஞ்சி கெஞ்சி தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் கணவனாய் அவளை ஆள தொடங்க ஆர்கலியும் விரும்பியே தன்னவனிடம் தொலைத்தாள்.
ராகினிக்கு தனது அண்ணன் பிள்ளைகளை கீழ விட மனமே வரவில்லை.
பின்னர் பேசிக்கொண்டே மதிய உணவை செய்யும் போது ராகினிக்கு வாமிட் வந்தது.
சிறிது நிமிடங்கள் செல்ல,முகத்தை கழுவியவளிடம் என்னடா ராகினி ஆச்சு என்றவரிடம் தெரியலங்கத்தை.
திடீர்னு இப்படி இருக்கென்றவளின் முகத்தை பார்த்தவர் அம்மாடி நாள் எதாவது தள்ளி போயிருக்கானு வசு கேட்க,யோசித்து பார்த்தவள் ஆமாங்கத்தை என்றாள்.
உடனே பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வர,அங்கே ஆர்கலி குழந்தைகளோடு ஹாலில் உட்கார்ந்திருந்தாள்.
காலடி சத்தம் கேட்டு வாசலை பார்த்தவள் அம்மா ராகினிக்கு என்னாச்சி?புட் பாய்சன் எதாவது ஆகிடுச்சா என்க,எல்லாம் நல்ல விஷயம் தான் அம்மு.
இரு இரு ஆது வரட்டும் பிறகு சொல்லுறேனென்க,அம்மா பிளீஸ் என்ன விஷயமென்று சொல்லுங்களென்றாள்.
அந்நேரம் ஆதுவும் வேகமாக வீட்டிற்கு வந்தவன் அம்மா என்னாச்சி?ஏன் உடனே வர சொன்னிங்க? யாருக்கும் எந்த பிச்சினையும் இல்லையே என்க,பிரச்சினை தான் கண்ணா.
நீயே ராகினிகிட்ட தெரிஞ்சிக்கோயென்றவாறு கிச்சனிற்குள் சென்று விட ஏய் என்னடி பிரச்சினையென்றான்.
ராகினி எதுவும் சொல்லாமல் கீழே இருக்கும் ரூமிற்கு செல்ல பின்னாடியே போய் கதவை சாத்தியவன் அடியேய் அங்க வேலை எவ்வளவு இருக்கு.
அதை போட்டு பதறியடித்து வந்தால் நீ முகத்தை திருப்பிட்டு போறியோ என்க,ஆதுவின் அருகில் வந்தவள் அவனின் வலது கையை எடுத்து தனது வயிற்றில் வைத்தவள் நீங்க அப்பா ஆகிட்டீங்களென்று வெட்கபட்டு சொல்ல,சந்தோஷத்தில் ஆதுக்கு கண்கள் கலங்கிவிட்டது.