Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 527
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
அப்படியே ஒரு வருஷம் போயிடுச்சி.
நானும் பாதர் கிட்ட பிடிவாதம் பிடித்து சென்னைக்கு வேலைக்கு வந்துட்டேன்.
அப்போ ஒரு நாள் பாதர் என்னை கோயம்புத்தூருக்கு வர சொல்ல,நானும் சனி ஞாயிறு லீவ் என்பதால் அங்கு போனேன்.
என்கிட்ட ஒரு கவரை கொடுத்தவர் இதை இங்கு படிக்காதே சென்னையில் போய் படித்து பாருமாயென்று சொன்னார்.நானும் ஒரு நாள் ஆசிரமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன்.
வந்து அலைச்சல்லையும் ஒரு வாரம் துவைக்காத துணியெல்லாம் ரூம்ல இருந்ததை பார்த்த உடனே இந்த கவர் விஷயத்தை நான் மறந்துட்டேன்.
இப்படியே ஒரு வாரம் போனது.
அப்போ ஓர் நாள் நான் வேலை முடிந்து வந்துட்டு இருக்கும் போது நல்ல மழை.
தி.நகர்ல தான் நான் தங்கியிருந்தேன். அங்கு நடேசன் பார்க் ஏரியாவில் இருக்கும் சிக்னலை தாண்டி தான் நான் இருக்கிற வீட்டுக்கு வரணும்.
அப்படி நான் வந்துட்டு இருக்கும் போது தான் அங்கு ஒரு கார் நிற்பதையும் அந்த கார்ல நீ உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.
உன்னை பார்த்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம் தாங்கவில்லை.லாம்ப் போஸ்ட் என்று கத்தி உன்னை கூப்பிட,
நீயும் கதவை திறந்து வந்து பார்பி என்றவாறு என்னை இறுக்கி கட்டி புடிச்சிக்கிட்டாய்.
ஹேய் நடு ரோடுனு நான் சொல்ல இத்தனை நாளா உன்ன தேடி எங்கெல்லாம் பைத்தியக்காரன் போல அலைஞ்சேன் தெரியுமாடி அப்படின்னு சொன்ன.நீ கிட்ட வரும் போதே தெரிஞ்சிடுச்சி போதையில் இருக்கிறேன்னு.அப்போ உன் மேல ரொம்ப கோவம் வந்தது.
நடு ரோட்டில் உன்கிட்ட என்ன சண்டை போடறதுன்னு உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்.
என் கையாலே சமைத்து உனக்கு ஊட்டினேன் தெரியுமா டா.விரும்பி நீ சாப்ட்ட.அதன் பிறகு கணவனா உன் தேடல் தொடங்கியது.
என்னாலும் மறுக்க முடியவில்லை.நீ நல்லா தூங்கிட்டு இருந்த.சரி ஆபிஸ் போய் லீவ் போட்டுட்டு வீட்டிற்கு வரலாமென்று நானும் கிளம்பி போய் லீவ் சொல்லிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் உன்னை காணலை.யார் கிட்ட போய் உன்னை நான் கேட்க முடியும்.இரவு என் புருஷன் வந்தான் நீங்க பாத்தீங்கலாயென்று அக்கம் பக்கத்தில் கேட்டால் என்னை என்ன நினைப்பாங்கடா?.
சரி உனக்கு போதை தெளிஞ்சி தான் போயிருக்க.திரும்ப வருவாயென்று நானும் வழக்கம் போல வேலைக்கு போயிட்டிருந்தேன்.
அப்படி தான் ஒரு நாள் வீடு சுத்தம் பண்ணிட்டு இருக்கும் போது கோவைக்கு எடுத்து போன பேகை திறந்து கிளீன் பண்ண அதில் பாதர் கொடுத்த கவர் இருந்தது.
டிரஸ்ங்களுக்கு கீழே இருந்ததால் இத்தனை நாள் அந்த கவர் கண்ணுக்கு தெரியவில்லை.
பாதர் சென்னை போன பிறகு படித்து பார்க்க சொன்னாங்களே என்பது அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது.
உடனே அந்த கவரை திறந்து உள்ளே பார்த்தேன்.அதில் முதலில் கண்ணுக்கு தெரிந்தது நமக்கு டைவர்ஸ் ஆன பேப்பர்.
எனக்கு ஒன்னுமே புரியலை.படிச்சதும் பயங்கர அதிர்ச்சி.அடுத்து அதில் சில போட்டோஸ்ங்களும்,லெட்டரும் இருந்தது.
லெட்டரை எடுத்து படிக்க படிக்க எனக்கு ஏன் டா உயிரோட இருக்கிறோம் என நினைக்காமல் இருக்க முடியலைடா என்று அழுதவள்,எழுந்து போய் கபோர்டை திறந்து அவள் பேகில் இருந்த கவரை எடுத்து வந்து ருத்ரனின் முகத்தில் விசிறி எறிந்தாள்.
ருத்ரனும் அந்த கவரை திறந்து பார்க்க அதில் பாதர் எழுதிய லெட்டர் இருந்தது.
ஆர்கலிக்கு பாதர் எழுதுவது...
முதலில் என்னை மன்னிச்சிடுமா.
நான் தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்.அதே நான் தான் இன்று உனக்கு விவாகரத்தும் வாங்கி தர காரணமாகிவிட்டேன்.
ருத்ரனின் அம்மா திருமதி விஷாலா தேவி அவர்களுக்கு உன்னை மருமகளாக ஏற்க விருப்பம் இல்லாததால்,டைவர்ஸ் வாங்குவதற்கு என்னை கருவியாக்கிவிட்டார்.
ஆசிரமம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்துவதாக சொல்லிவிடுவேனென்று மிரட்ட எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உன் ஒரு ஆள் வாழ்க்கையை பார்ப்பதா இல்லை இந்த ஆசிரமத்தில் இருக்கும் மற்ற 150 குழந்தைகளின் நலனை பற்றி யோசிப்பதாயென்று தவித்து போனேன்.
நீ படித்திருக்கின்றாய்.நிச்சயமாக ருத்ரன் உன்னை தேடி வந்துவிடுவாரென்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் நானும் அவர்கள் சொன்னதற்கு சம்மதிக்க வேண்டியதாகிவிட்டது.
உன்னிடம் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்க தான் அன்று உன்னை பார்க்க கல்லூரிக்கு வந்தது.
நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக தான் அவர்கள் என்னை மிரட்டிய சில போட்டோக்களை இதில் வைத்துள்ளேன்.இந்த பாவியை மன்னித்துவிடுமா என்று அதில் இருந்தது.
கடிதத்தை படித்தவன்,கைகள் நடுங்க போட்டோவை பார்க்க அதில் அவ்வளவு அசிங்கமாக பாதரோடு ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை இணைத்து மார்பிங் பண்ணிய போட்டோக்கள் இருந்தது.
அதுமட்டுமின்றி விபச்சார கேஸில் ஆர்கலியை போலீஸ் கைது பண்ணிய போல செய்தியும் உள்ள நியூஸ் பேப்பர் துண்டும் அதில் இருந்தது.
ஒரே எட்டில் தேவியின் முன்பு போய் நின்றவன் சிறிதும் யோசிக்காமல் அவர் தொண்டையை பிடித்து நெரித்தான்.மற்றவர்களோ அவனிடமிருந்து போராடி தேவியை பிரித்தனர்.
மிஸ்டர் தன வீர சிம்ஹன் இனி ஒரு நிமிஷம் இவள் என் கண்ணு முன்னாடி நின்றால் இந்த நிமிஷமே இவளை வெட்டி போட்டுருவேன் என்று கர்ஜித்தான்.
அந்த நேரம் இரண்டு பாட்டிகளும் வீட்டிற்குள் வந்தனர்.
அங்கிருந்த சூழலை பார்த்து விட்டு என்னாச்சி என்க,யாரும் எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர்.
பாட்டியிடம் வந்தவன் லெட்டரை மட்டும் கொடுத்து விட்டு போட்டோக்களை கிழித்து தேவியின் முகத்தில் எறிந்தவன்,ஆர்கலி என்று போய் அவளை அணைத்துக்கொண்டு கதறி அழுதான்.
லெட்டரை படித்த கிரிஜா பாட்டியோ அவர் பங்கிற்கு தேவியை அறைந்தவர் நீயெல்லாம் ஒரு பொம்பளையா த்தூ...
போடி வெளியேயென்று தேவியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியவர்,தனா அவள் இனி என் முகத்திலே விழிக்க கூடாது என்கும் போதே அவருக்கும் அழுகை வந்தது.
அம்மா என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு அழுங்கம்மா.அவனும் அவ கழுத்தை புடிச்சுட்டு நெரிக்கிறான்.
நீங்களும் அவளை அடிச்சு வெளியே துரத்திட்டீங்கள் இங்கு என்ன நடக்குதென்று எங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லைமா என தனா கேட்க,அழுது கொண்டிருந்த கிரிஜா பாட்டி உன் பொண்டாட்டியோட கேவலமான செயலை நீயே பார்த்து தெரிஞ்சுக்க என்று இப்பொழுது மகன் முன்பு அந்த கடிதத்தை நீட்டினார்.
என்ன பண்ணி தொலைஞ்சாளென்று தெரியலையே ஆண்டவா என நினைத்துக் கொண்டு அம்மாவிடமிருந்து கடிதத்தை வாங்கிய தனா படித்துப் பார்க்க அவர் கண்கள் கோவத்தில் சிவந்து விஷாலா தேவியென்று கத்தினார்.
தனாஆஆஆ வாய மூடு என்ற சிம்ஹன் தாத்தா.இந்த வீட்டில் இதுவரை நீங்கள் ஓட்டிய படம்லாம் போதும்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்லியவர் தனா உன் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு இங்க இருந்து நீ போ என்றார்.
அப்பா என்னப்பா இப்படி சொல்றீங்க?
அவள் பண்ணிய கேவலமான செயல்களுக்கு நான் என்னப்பா பண்ணுனேன் என்று கேட்கும் போது இத்தனைக்கும் மூலக்காரணமே நீ ஒருவன் தான்.
முப்பது வருஷத்திற்கு முன்னர் இந்த பொண்ணை பற்றி சொல்லும் போது நான் உன்கிட்ட வேண்டாம் என்று சொன்னேன்.நீ எங்க பேச்சைக் கேட்டியா?.மகன் ஆசைப்படுறானென்று விசாரிக்கும் போது தான் உன்னுடைய உண்மையான காதலுக்கு சொந்தக்காரி வசந்தி என்பது தெரிந்தது.
ஏழை பொண்ணு என்பதால் தான் நான் சம்மதிக்கவில்லையென்று உன் அம்மாகிட்ட சொன்ன.
உண்மையை மனதிற்குள் வைத்து,வேறு வழியில்லாமல் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்.
வருஷம் போனது குணம் மாறியிருக்குமென்று இருந்தேன்.ஆனால் என் பேரனை இருட்டறையில் பூட்டி வைத்த கொடூற தாயா நடந்து கொண்டது கூட தெரியாமல் இத்தனை வருஷமா இருக்கியே நீயெல்லாம் ஒரு மனுஷனா?
அந்த கடிகத்தில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது ஆனால் என் பொண்டாட்டி கோபப்பட்டு அடிக்கும் போதே உன் மனைவி தவறான செயல் எதுவோ செஞ்சிருக்காள் என்பது நல்லா புரிஞ்சிருச்சு.
தயவுசெய்து இங்கிருந்து கூப்பிட்டு போயிடு.இருக்கும் கொஞ்ச நஞ்சம் நிம்மதியையும் நீ கொடுத்துடாதேயென்று மகனிடம் சொல்ல,ருத்ரனின் கையணைவில் இருந்த ஆர்கலியிடம் சென்றவர்,அம்மாடி ஆர்கலி என் பையனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகியதும்,டைவர்ஸ் ஆனதையும் என்னுடைய அப்பா அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும்.
உன்னோட வாழ்க்கையில் இவள் இவ்வளவு கேவலமான செயல் செய்திருப்பது எனக்கு தெரியாதுமா.
என் மகனுக்கு கல்யாணம் ஆகிட்டென்று என்னோட அப்பா சொல்லும் போது உன்னை பார்க்க என் மனசு ரொம்ப துடிச்சிது.
அவனுக்கு அவ்வளவு எளிதில் யாரையும் பிடிக்காதென்று எங்கம்மா சொல்லி நான் கேள்விபட்டுருக்கேன்.
நீ எனக்கு மருமகளா இருக்க வேண்டாம்.எனக்கு மகளா இருமாயென்று. ஆர்கலியின் காலில் விழப்போக அதைப்பார்த்து அய்யோ மாமா என்று பதறியவள்,ஏன் இப்படி பண்ணுறீங்கள்? புருஷன் மட்டும் சரியாக இருந்தால் அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தாங்கிப்பாள்.
எனக்கும் அதைப்போல நல்ல மனுஷன் தான் புருஷனாக கிடைத்திருக்கிறார்.
முடிந்து போனதை பற்றி பேசி இருக்கிற நாட்களை வீணடிக்க நான் விரும்பவில்லை மாமா.
அவர்கிட்ட கூட இதுவரைக்கும் என் மனசுல இருக்கும் காதலை நான் வெளிப்படையாக சொன்னது கிடையாது.
வாழ்வும் சாவும் எனக்கு இவர் கூடதான் மாமா.எந்த கோர்ட் சொன்னாலும் என்னுடைய புருஷனென்றால் அது உங்க பையன் மட்டும் தான்.
நிச்சயமாக அவர் என்னை தேடி வருவார் என்னும் நம்பிக்கை மலையளவு எனக்கு இருந்தது.என் நம்பிக்கையும் பொய்த்து போகவில்லை.
இருக்கிற நாட்களை குழந்தைகளோடு அவருக்காக வாழ ஆசைப்படுகிறேன் என்று ஆர்கலி சொல்லியதை கேட்டவர்களுக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ருத்ரனுக்கு மனைவி பேசிய வார்த்தைகளை கேட்டு கண்கள் கலங்கியது.
பேரனையும் பேத்தியையும் பார்த்து விட்டு சரி வாங்க நம்ம வெளியே இருக்களாமென்று சுந்தரபாண்டியன் தாத்தா சொல்ல,தொட்டிலில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் இரண்டு பாட்டிகளும் தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர்.
அப்படியே ஒரு வருஷம் போயிடுச்சி.
நானும் பாதர் கிட்ட பிடிவாதம் பிடித்து சென்னைக்கு வேலைக்கு வந்துட்டேன்.
அப்போ ஒரு நாள் பாதர் என்னை கோயம்புத்தூருக்கு வர சொல்ல,நானும் சனி ஞாயிறு லீவ் என்பதால் அங்கு போனேன்.
என்கிட்ட ஒரு கவரை கொடுத்தவர் இதை இங்கு படிக்காதே சென்னையில் போய் படித்து பாருமாயென்று சொன்னார்.நானும் ஒரு நாள் ஆசிரமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன்.
வந்து அலைச்சல்லையும் ஒரு வாரம் துவைக்காத துணியெல்லாம் ரூம்ல இருந்ததை பார்த்த உடனே இந்த கவர் விஷயத்தை நான் மறந்துட்டேன்.
இப்படியே ஒரு வாரம் போனது.
அப்போ ஓர் நாள் நான் வேலை முடிந்து வந்துட்டு இருக்கும் போது நல்ல மழை.
தி.நகர்ல தான் நான் தங்கியிருந்தேன். அங்கு நடேசன் பார்க் ஏரியாவில் இருக்கும் சிக்னலை தாண்டி தான் நான் இருக்கிற வீட்டுக்கு வரணும்.
அப்படி நான் வந்துட்டு இருக்கும் போது தான் அங்கு ஒரு கார் நிற்பதையும் அந்த கார்ல நீ உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன்.
உன்னை பார்த்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம் தாங்கவில்லை.லாம்ப் போஸ்ட் என்று கத்தி உன்னை கூப்பிட,
நீயும் கதவை திறந்து வந்து பார்பி என்றவாறு என்னை இறுக்கி கட்டி புடிச்சிக்கிட்டாய்.
ஹேய் நடு ரோடுனு நான் சொல்ல இத்தனை நாளா உன்ன தேடி எங்கெல்லாம் பைத்தியக்காரன் போல அலைஞ்சேன் தெரியுமாடி அப்படின்னு சொன்ன.நீ கிட்ட வரும் போதே தெரிஞ்சிடுச்சி போதையில் இருக்கிறேன்னு.அப்போ உன் மேல ரொம்ப கோவம் வந்தது.
நடு ரோட்டில் உன்கிட்ட என்ன சண்டை போடறதுன்னு உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்.
என் கையாலே சமைத்து உனக்கு ஊட்டினேன் தெரியுமா டா.விரும்பி நீ சாப்ட்ட.அதன் பிறகு கணவனா உன் தேடல் தொடங்கியது.
என்னாலும் மறுக்க முடியவில்லை.நீ நல்லா தூங்கிட்டு இருந்த.சரி ஆபிஸ் போய் லீவ் போட்டுட்டு வீட்டிற்கு வரலாமென்று நானும் கிளம்பி போய் லீவ் சொல்லிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் உன்னை காணலை.யார் கிட்ட போய் உன்னை நான் கேட்க முடியும்.இரவு என் புருஷன் வந்தான் நீங்க பாத்தீங்கலாயென்று அக்கம் பக்கத்தில் கேட்டால் என்னை என்ன நினைப்பாங்கடா?.
சரி உனக்கு போதை தெளிஞ்சி தான் போயிருக்க.திரும்ப வருவாயென்று நானும் வழக்கம் போல வேலைக்கு போயிட்டிருந்தேன்.
அப்படி தான் ஒரு நாள் வீடு சுத்தம் பண்ணிட்டு இருக்கும் போது கோவைக்கு எடுத்து போன பேகை திறந்து கிளீன் பண்ண அதில் பாதர் கொடுத்த கவர் இருந்தது.
டிரஸ்ங்களுக்கு கீழே இருந்ததால் இத்தனை நாள் அந்த கவர் கண்ணுக்கு தெரியவில்லை.
பாதர் சென்னை போன பிறகு படித்து பார்க்க சொன்னாங்களே என்பது அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது.
உடனே அந்த கவரை திறந்து உள்ளே பார்த்தேன்.அதில் முதலில் கண்ணுக்கு தெரிந்தது நமக்கு டைவர்ஸ் ஆன பேப்பர்.
எனக்கு ஒன்னுமே புரியலை.படிச்சதும் பயங்கர அதிர்ச்சி.அடுத்து அதில் சில போட்டோஸ்ங்களும்,லெட்டரும் இருந்தது.
லெட்டரை எடுத்து படிக்க படிக்க எனக்கு ஏன் டா உயிரோட இருக்கிறோம் என நினைக்காமல் இருக்க முடியலைடா என்று அழுதவள்,எழுந்து போய் கபோர்டை திறந்து அவள் பேகில் இருந்த கவரை எடுத்து வந்து ருத்ரனின் முகத்தில் விசிறி எறிந்தாள்.
ருத்ரனும் அந்த கவரை திறந்து பார்க்க அதில் பாதர் எழுதிய லெட்டர் இருந்தது.
ஆர்கலிக்கு பாதர் எழுதுவது...
முதலில் என்னை மன்னிச்சிடுமா.
நான் தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்.அதே நான் தான் இன்று உனக்கு விவாகரத்தும் வாங்கி தர காரணமாகிவிட்டேன்.
ருத்ரனின் அம்மா திருமதி விஷாலா தேவி அவர்களுக்கு உன்னை மருமகளாக ஏற்க விருப்பம் இல்லாததால்,டைவர்ஸ் வாங்குவதற்கு என்னை கருவியாக்கிவிட்டார்.
ஆசிரமம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்துவதாக சொல்லிவிடுவேனென்று மிரட்ட எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.உன் ஒரு ஆள் வாழ்க்கையை பார்ப்பதா இல்லை இந்த ஆசிரமத்தில் இருக்கும் மற்ற 150 குழந்தைகளின் நலனை பற்றி யோசிப்பதாயென்று தவித்து போனேன்.
நீ படித்திருக்கின்றாய்.நிச்சயமாக ருத்ரன் உன்னை தேடி வந்துவிடுவாரென்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் நானும் அவர்கள் சொன்னதற்கு சம்மதிக்க வேண்டியதாகிவிட்டது.
உன்னிடம் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து வாங்க தான் அன்று உன்னை பார்க்க கல்லூரிக்கு வந்தது.
நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக தான் அவர்கள் என்னை மிரட்டிய சில போட்டோக்களை இதில் வைத்துள்ளேன்.இந்த பாவியை மன்னித்துவிடுமா என்று அதில் இருந்தது.
கடிதத்தை படித்தவன்,கைகள் நடுங்க போட்டோவை பார்க்க அதில் அவ்வளவு அசிங்கமாக பாதரோடு ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை இணைத்து மார்பிங் பண்ணிய போட்டோக்கள் இருந்தது.
அதுமட்டுமின்றி விபச்சார கேஸில் ஆர்கலியை போலீஸ் கைது பண்ணிய போல செய்தியும் உள்ள நியூஸ் பேப்பர் துண்டும் அதில் இருந்தது.
ஒரே எட்டில் தேவியின் முன்பு போய் நின்றவன் சிறிதும் யோசிக்காமல் அவர் தொண்டையை பிடித்து நெரித்தான்.மற்றவர்களோ அவனிடமிருந்து போராடி தேவியை பிரித்தனர்.
மிஸ்டர் தன வீர சிம்ஹன் இனி ஒரு நிமிஷம் இவள் என் கண்ணு முன்னாடி நின்றால் இந்த நிமிஷமே இவளை வெட்டி போட்டுருவேன் என்று கர்ஜித்தான்.
அந்த நேரம் இரண்டு பாட்டிகளும் வீட்டிற்குள் வந்தனர்.
அங்கிருந்த சூழலை பார்த்து விட்டு என்னாச்சி என்க,யாரும் எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர்.
பாட்டியிடம் வந்தவன் லெட்டரை மட்டும் கொடுத்து விட்டு போட்டோக்களை கிழித்து தேவியின் முகத்தில் எறிந்தவன்,ஆர்கலி என்று போய் அவளை அணைத்துக்கொண்டு கதறி அழுதான்.
லெட்டரை படித்த கிரிஜா பாட்டியோ அவர் பங்கிற்கு தேவியை அறைந்தவர் நீயெல்லாம் ஒரு பொம்பளையா த்தூ...
போடி வெளியேயென்று தேவியின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியவர்,தனா அவள் இனி என் முகத்திலே விழிக்க கூடாது என்கும் போதே அவருக்கும் அழுகை வந்தது.
அம்மா என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டு அழுங்கம்மா.அவனும் அவ கழுத்தை புடிச்சுட்டு நெரிக்கிறான்.
நீங்களும் அவளை அடிச்சு வெளியே துரத்திட்டீங்கள் இங்கு என்ன நடக்குதென்று எங்களுக்கு ஒண்ணுமே புரியவில்லைமா என தனா கேட்க,அழுது கொண்டிருந்த கிரிஜா பாட்டி உன் பொண்டாட்டியோட கேவலமான செயலை நீயே பார்த்து தெரிஞ்சுக்க என்று இப்பொழுது மகன் முன்பு அந்த கடிதத்தை நீட்டினார்.
என்ன பண்ணி தொலைஞ்சாளென்று தெரியலையே ஆண்டவா என நினைத்துக் கொண்டு அம்மாவிடமிருந்து கடிதத்தை வாங்கிய தனா படித்துப் பார்க்க அவர் கண்கள் கோவத்தில் சிவந்து விஷாலா தேவியென்று கத்தினார்.
தனாஆஆஆ வாய மூடு என்ற சிம்ஹன் தாத்தா.இந்த வீட்டில் இதுவரை நீங்கள் ஓட்டிய படம்லாம் போதும்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சொல்லியவர் தனா உன் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு இங்க இருந்து நீ போ என்றார்.
அப்பா என்னப்பா இப்படி சொல்றீங்க?
அவள் பண்ணிய கேவலமான செயல்களுக்கு நான் என்னப்பா பண்ணுனேன் என்று கேட்கும் போது இத்தனைக்கும் மூலக்காரணமே நீ ஒருவன் தான்.
முப்பது வருஷத்திற்கு முன்னர் இந்த பொண்ணை பற்றி சொல்லும் போது நான் உன்கிட்ட வேண்டாம் என்று சொன்னேன்.நீ எங்க பேச்சைக் கேட்டியா?.மகன் ஆசைப்படுறானென்று விசாரிக்கும் போது தான் உன்னுடைய உண்மையான காதலுக்கு சொந்தக்காரி வசந்தி என்பது தெரிந்தது.
ஏழை பொண்ணு என்பதால் தான் நான் சம்மதிக்கவில்லையென்று உன் அம்மாகிட்ட சொன்ன.
உண்மையை மனதிற்குள் வைத்து,வேறு வழியில்லாமல் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன்.
வருஷம் போனது குணம் மாறியிருக்குமென்று இருந்தேன்.ஆனால் என் பேரனை இருட்டறையில் பூட்டி வைத்த கொடூற தாயா நடந்து கொண்டது கூட தெரியாமல் இத்தனை வருஷமா இருக்கியே நீயெல்லாம் ஒரு மனுஷனா?
அந்த கடிகத்தில் என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது ஆனால் என் பொண்டாட்டி கோபப்பட்டு அடிக்கும் போதே உன் மனைவி தவறான செயல் எதுவோ செஞ்சிருக்காள் என்பது நல்லா புரிஞ்சிருச்சு.
தயவுசெய்து இங்கிருந்து கூப்பிட்டு போயிடு.இருக்கும் கொஞ்ச நஞ்சம் நிம்மதியையும் நீ கொடுத்துடாதேயென்று மகனிடம் சொல்ல,ருத்ரனின் கையணைவில் இருந்த ஆர்கலியிடம் சென்றவர்,அம்மாடி ஆர்கலி என் பையனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகியதும்,டைவர்ஸ் ஆனதையும் என்னுடைய அப்பா அம்மா சொல்லி தான் எனக்கு தெரியும்.
உன்னோட வாழ்க்கையில் இவள் இவ்வளவு கேவலமான செயல் செய்திருப்பது எனக்கு தெரியாதுமா.
என் மகனுக்கு கல்யாணம் ஆகிட்டென்று என்னோட அப்பா சொல்லும் போது உன்னை பார்க்க என் மனசு ரொம்ப துடிச்சிது.
அவனுக்கு அவ்வளவு எளிதில் யாரையும் பிடிக்காதென்று எங்கம்மா சொல்லி நான் கேள்விபட்டுருக்கேன்.
நீ எனக்கு மருமகளா இருக்க வேண்டாம்.எனக்கு மகளா இருமாயென்று. ஆர்கலியின் காலில் விழப்போக அதைப்பார்த்து அய்யோ மாமா என்று பதறியவள்,ஏன் இப்படி பண்ணுறீங்கள்? புருஷன் மட்டும் சரியாக இருந்தால் அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தாங்கிப்பாள்.
எனக்கும் அதைப்போல நல்ல மனுஷன் தான் புருஷனாக கிடைத்திருக்கிறார்.
முடிந்து போனதை பற்றி பேசி இருக்கிற நாட்களை வீணடிக்க நான் விரும்பவில்லை மாமா.
அவர்கிட்ட கூட இதுவரைக்கும் என் மனசுல இருக்கும் காதலை நான் வெளிப்படையாக சொன்னது கிடையாது.
வாழ்வும் சாவும் எனக்கு இவர் கூடதான் மாமா.எந்த கோர்ட் சொன்னாலும் என்னுடைய புருஷனென்றால் அது உங்க பையன் மட்டும் தான்.
நிச்சயமாக அவர் என்னை தேடி வருவார் என்னும் நம்பிக்கை மலையளவு எனக்கு இருந்தது.என் நம்பிக்கையும் பொய்த்து போகவில்லை.
இருக்கிற நாட்களை குழந்தைகளோடு அவருக்காக வாழ ஆசைப்படுகிறேன் என்று ஆர்கலி சொல்லியதை கேட்டவர்களுக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ருத்ரனுக்கு மனைவி பேசிய வார்த்தைகளை கேட்டு கண்கள் கலங்கியது.
பேரனையும் பேத்தியையும் பார்த்து விட்டு சரி வாங்க நம்ம வெளியே இருக்களாமென்று சுந்தரபாண்டியன் தாத்தா சொல்ல,தொட்டிலில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் இரண்டு பாட்டிகளும் தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர்.