Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
ஹைதராபாத்:
" மூவரும் இரவு டின்னரை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்தவர்கள், ஆளுக்கு ஒரு பெட்டில் படுத்துக் கொண்டனர்".
"மச்சான், முதல்ல உன்னை பற்றி சொல்லுடா? என்று விஷால் கேட்க,சரிடா என்றவாறு,கபிலன் தன்னை பற்றி சொல்ல தொடங்கினான்".
" என்னோட ஊர் கடலூர் மாவட்டம் சதூர்வேதமங்கலம் டா. அப்பா பேரு கண்ணன், அம்மா பேரு தேவகி. அவங்களுக்கு நான் ஒரே பையன் தான்".
" அப்புறம் காலையில் மாமாவை பார்த்தீங்களே, அவர் தான் அம்மாவுடைய அண்ணன்".
" மாமாக்கு ஒரு பொண்ணு என்க, ஆஹான் என்றனர் நண்பர்கள் இருவரும்".
" அவள் இப்போ தான் மெடிசின் முடித்திருக்கிறாள் டா. அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை தான் எங்க நிச்சயம் முடிந்தது".
" அத்தை இல்லைடா".
" இவளுக்கு இரண்டு வயது இருக்கும் போது, அத்தை இறந்துட்டாங்கடா"
"ஜாயின்ட் பேமிலி.அப்புறம் கொஞ்சம் நிலம் இருக்கு,கண்ணன் மசாலா பொருட்கள் நம்மளுடையது , அவ்வளவு தான் என்றான்".
" மச்சி.....புது மாப்பிள்ளையா என்க, ஹாஹாஹா ஆமாடா".
" சரிடா, உங்களை பற்றி சொல்லுங்களென்க,என்னை பற்றி சொல்ல என்னடா இருக்கு".
" நான் விஷால் விஸ்வநாதன், ஒரு தங்கச்சி, லண்டன்ல செகண்ட் இயர் மெடிசின் படிக்குறாள்".
" அப்பா நம்ப தமிழ்நாட்டோட அக்ரி மினிஷ்டர், அம்மா ஹை கோர்ட் ஜட்ஜ்".
" எதேஏஏஏ மினிஸ்டர் பையனானு கபிலன் அதிர, ஆமாடா.இதுக்கு ஏன் டா எருமை, வாயை காது வரை திறக்குறனு விஷால் சிரித்தான்".
"மச்சி நீ சொல்லுடானு வெற்றியை கேட்க,ஊர் பொள்ளாச்சி.அப்பா பேர் சரவணன், அம்மா பேர் காந்திமதி".
" எனக்கு 2 வயது இருக்கும் போது, ஆக்ஸிடென்ல இறந்துட்டாங்கடா. சித்தப்பாவும், அத்தையும் தான் வளர்த்தது".
" ரெண்டு பேருமே இதுவரை கல்யாணம் பண்ணிக்கலைடா, அப்புறம், எனக்கும் போன வாரம் தான் நிச்சயம் ஆனதென்க, எதேஏஏஏஏ என்று இப்பொழுது விஷாலும், கபிலனோடு அதிர்ந்தான்".
"அடப்பரதேசி ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே என்க, திடீர்னு நடந்ததுடா, அதான் நம்ப ப்ரண்ட்ஸ் யாருக்கும் சொல்ல முடியவில்லை'.
அப்புறம் ஊர்ல சின்னதா தேங்காய் மண்டியும், கொஞ்சம் நிலமும் இருக்குடா.
" நண்பன் சொல்லியதை கேட்ட விஷால், அடச்சண்டாளா, எவ்வளவு பெரிய சொத்துக்கு வாரிசு, இப்படி சொல்லுறானேனு வெற்றியை பார்க்க, அவன் கண்ணடித்தான்".
" சரி சரி...மரியாதையா ரெண்டு பயலும், என் தங்கச்சிங்க ஃபோட்டோவை காமிங்கடா என்க, வெற்றியும்,விஷாலும் அவரவர் இணையின் ஃபோட்டோவை விஷாலிடம் காட்டினர்".
"மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருக்க, அடேய் எனக்கு தூக்கம் வருதுடா.குட் நைட் என்றபடியே குப்புற படுத்து விஷால் தூங்க, கபிலனும், வெற்றியும், தங்கள் இணைகளின் நினைவில் மூழ்கினர்".
" தனது ஃபோனிலஇருந்த நிச்சயதார்த்த ஃபோட்டோவை பார்த்த கபிலனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது நினைவிற்குள் வந்தது".
" அதேப்போலவே,ஆதிராவோடு, ஊட்டிக்கு டிரைனில் போய்க் கொண்டிருந்த ரியாவும்,இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்".
கபி
ரியா நினைவுகள், சதூர்வேதமங்கலம்:
"நால்வரும் காலை டிபனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,ரெடியாகி வாங்க, நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்கப் போகணுமென்று கண்ணன் சொல்ல, ம்ம் என்று தலையசைத்தனர்".
"பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, தயாராகி கீழே வர அரைமணி நேரம் ஆனது".
" ஏண்டி பொம்பள புள்ளைங்களே கிளம்பி வந்துட்டுங்க. உன் மவன் இன்னும் என்ன பண்ணுறானென்று கண்ணன் கேட்க, தேவகியும் மகனின் வருகைக்காக தான் காத்திருந்தார்".
" ரியாவோ, இன்னும் இந்த விருமாண்டி என்ன பண்ணுறாரென்று யோசித்துக்கொண்டே மாடியை பார்க்க, அங்கே மெருன் கலர் டீ-ஷர்ட் வித் நீல கலர் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, தனது மீசையை முறுக்கிக் கொண்டே, கம்பீரமாக படியிலிறங்கி வந்தவனை பார்த்து வாயடைத்து போனாள்".
" வழக்கமாய் அவள் பார்க்கும் நேரமெல்லாம், கபிலன் கலர் சட்டையும், அதற்கு தகுந்த போல பார்டர் வைத்த வெள்ளை வேஷ்டியும் தான் போட்டிருப்பான்".
" அவளுக்கு தெரிந்த வரையில், கபிலனை இதைப்போல உடையில் பார்த்ததேயில்லை".
" கண்ணில் கூலர் இருப்பதால், படியிலிருந்து இறங்கும் போதே ரியாவின் ஆச்சர்யமான பார்வையை கண்டு கொண்டான்".
" அம்மா போகலாமா என்க, வாவ் அண்ணா செம்மையா இருக்கீங்களென்று ஆதிரா சொல்ல, மகிழ்ச்சிடா ஆதி என்று சிரித்தவன், என்ன கடைக்கு வர எண்ணமில்லையா? என்றான்".
" மகனையும், தனது கையில் கட்டி இருந்த வாட்ச்சையும் மாறி மாறி கண்ணன் பார்க்க, ஒரு முக்கியமான போன் வந்தது பா.அதான் பேசிக் கொண்டிருந்தேன்".
வாங்க வாங்க என்றபடியே கபிலன் வெளியே சென்றான்...
மகன் போன திசையை பார்த்தவர், மனைவியின் பக்கம் திரும்பி,உன் மகனை பார்த்தியாடி?.
"என்னமோ நம்ப கிளம்ப நேரம் ஆகிட்ட போல போறானென்க, அதற்கு தேவகியோ முருகாஆஆஆ",இந்த அப்பன் புள்ளை பஞ்சாயத்துக்கு ஒரு முடிவே கிடையாதா??என்க, ரியாவும்,ஆதிராவும் சிரித்து விட்டனர்".
" அந்நேரம் வெளியேயிருந்து கார் ஹாரன் அடிக்க, வாடி. இதுக்கும் உன் மவன் எதையாவது சொல்லுவானென்றவர், சாமி ரூம் பக்கம் திரும்பி , அம்மா ஆனந்தாயி, நல்ல படியா போய்ட்டு வரணுமென்று வேண்டிக்கொண்டு, அங்கிருந்து சென்றார்".
" வாங்கடாமா, பிறகு அப்பனும் மவனும் நம்ப தலைய உருட்டுவாங்கயென்று தேவகி சொல்ல, ஹாஹாஹா என்று மீண்டும் தோழிகள் சிரித்துக் கொண்டே வெளியே செல்ல, தேவகியும் வீட்டை பூட்டிக்கொண்டு காரில் ஏறி போகலாம்பா என்றார்".
" முக்கால் மணி நேர பயணத்தில், பக்கத்து ஊரான சிதம்பரத்தில் இருக்கும் சாலா சில்க்ஸின் பார்க்கிங் ஏரியாவிற்குள் வந்து காரை நிறுத்து உள்ளே போனார்கள்.
" இவர்களை பார்த்த கடை சிப்பந்தி, வாங்க,என்ன பாக்கணும்? என்க, பட்டுப்புடவை செக்க்ஷன்னு கபிலன் சொல்ல, மூன்றாவது ஃப்ளோர் சார் என்றார்".
" பிறகு அங்கிருந்த லிப்டில் ஏறி மூன்றாவது ஃப்ளோருக்கு வந்தவர்கள், வலது பக்கமாய் திரும்பி, பட்டுப்புடவை செக்க்ஷனிற்கு செல்ல, வாங்க எந்த மாதிரி புடவை வெண்டுமென்று கடையாள் கேட்டார்".
"விலை பிரச்சனை இல்லை, நீங்கள் எடுத்து போடுங்களென்று கண்ணன் சொல்ல, சரிங்க சார் என்றவர், உட்காருங்கம்மானு, ரேக்கிலிருந்த புடவைகளை எடுத்து போட்டார்".
" தேவகி புள்ளைங்களுக்கு எது புடிக்குதோ, அதை கேட்டுக்கயென்று கண்ணன் சொன்னார்".
" மலை போல் புடவைகள் குமிந்து இருக்க, எதை எடுப்பதென்று ரியாவிற்கு குழப்பம் வந்தது".
" இந்த விருமாண்டி எதுக்கு வந்தான். ஒரு புடவை செலக்ட் பண்ணி குடுக்க துப்பு இல்லையென்று, ரியா தன் மனதிற்குள் திட்டிக்கொண்டிருக்க, க்கும் என கணைத்துக்கொண்டே அவளருகில் வந்தவன்,புடவையாவது கட்ட தெரியுமா? என்றான்".
" கபிலனின் குரலில் அவன் பக்கம் ரியா திரும்பி முறைக்க, ஒற்றை கண்ணடித்தவன், அந்த புடவை குவியலிலிருந்த புடவையை எடுத்தவன்,இதை பிரித்து காட்டுங்களென்றான்".
"அவரும் புடவையை பிரித்து காட்ட,அது ரியாவிற்கு ரொம்ப பிடித்திருப்பதை, அவள் முகத்திலிருந்த வியப்பே காட்டிக் கொடுத்தது".
" அம்மா இது ஓகே தானே என்க, கட்டப்போறது உன் பொண்டாட்டி. அவகிட்ட கேளுப்பா என்கவும்,இது ஓகேவா?".
"ரொம்ப புடிச்சிருக்கென்று ரியா சொல்ல, புடவையா இல்லை நானாடி என்று அவள் காதில் விழுமாறு கபிலன் கேட்க,விருமாண்டிய தானென்றாள்".
"ஆஹான் என்றவன், ஆதி உனக்கும் அம்மாக்கும் எடுங்களென்க, தேவகி வைலட்டும், ரோஸூம் கலந்த கலரில் புடவையை எடுத்துக்கொண்டார்".
" ஆதிராவிற்கு தான் எந்த கலரை எடுப்பதென்று தெரியவில்லை. அவள் இதுவரை புடவை வாங்கியதில்லை என்பதால், அவளுக்கு அதை பற்றி தெரியவில்லை".
" தங்கை அமைதியாக இருப்பதை வைத்து புரிந்து கொண்ட கபிலன், சிரித்துக் கொண்டே அவளுக்கும் புடவையை செலக்ட் பண்ணி எடுத்தான்".
"இது ஓகேவா பாருடா ஆதி என்க, திக் மெரூன் கலரில், தங்கநிறத்தில் பெரிய பார்டர் வைத்து இருந்த புடவையை பார்த்தவளுக்கு, பிடித்திருந்தது".
" இது ஓகேணா".
" பின்னர் ரியாவையும், ஆதிராவையும் பிளவுஸ் செக்க்ஷனுக்கு அனுப்பி விட்டு, ஐந்தாவது , ஃப்ளோரிலஇருக்கும் ஆண்கள் செக்க்ஷனிற்கு சென்றனர்".
" வாங்க சார் எந்த மாதிரி டிரஸ் வேண்டுமென்று கேட்க, ஷெர்வானி வேண்டுமென்றான்".
" ஓகே சார் என்றவர், வித விதமான ஷெர்வானியை அவரும் எடுத்து காட்டினார்".
"அதில் ரியாவின் புடவைக்கு மேச்சாக தேடி எடுத்துக்கொண்டான்".
" இதை கீழே பில்லுக்கு அனுப்பிடுங்கனு சொல்லி விட்டு, ஆதிராவிற்கு கால் பண்ணியவன், என்னாச்சுடா ஆதி என்க,அண்ணா நாங்க கீழே தான் இருக்கோமென்றாள்".
"ஓகேடா,இதோ நாங்க வரோமென்று கட் பண்ணியவன்,பெற்றோரை அழைத்துக் கொண்டு,லிப்டில் ஏறி கீழே வந்தவன்,வாங்கிய எல்லாவற்றையும் பில் போட சொல்லி பணத்தை கார்டில் பே பண்ணி, டிரஸை வாங்கிக்கொண்டு, போகலாமென்றான்".
"அடுத்து அங்குள்ள நகை கடைக்கு சென்று, ரியாவிற்கு கழுத்துக்கும், விரலுக்கும் தங்கநகைகளை வாங்கிக் கொண்டு வெளியே வர மதியம் மூன்று ஆனது".
" சரி வாங்க லஞ்ச் சாப்பிட்டுக்கலாமென்று அங்கிருந்த சரவணபவனுக்குள் செல்ல, ஏசி ரூம் வேண்டுமா, இல்லை நார்மல் ஓகே வா சார் என்று அங்கிருந்த வேலையாள் கேட்க, எதா இருந்தாலும் ஓகே என்றான்".
" உள்ளே போய் பார்த்து வந்தவர், சார் இப்போதைக்கு ஏசில தான் சீட் இருக்கு என்க, சரியென்று உள்ளே போய் உட்கார, வெய்டரும் மெனு கார்டோடு வந்தார்".
"கண்ணனும், தேவகியும் மீல்ஸ் சொல்லினர், ஆதிராவும், ரியாவும் பரோட்டா சொல்ல, கபிலன் கார்லிக்நான் பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் பண்ணினான்".
" பத்து நிமிடத்தில் அவர்கள் ஆர்டர் பண்ணிய உணவுகள் வந்து சேர,இளையவர்கள் மூவரும் ஷேர் பண்ணிக்கொண்டு சாப்பிட்டு முடித்து, வெளியே வந்தனர்".
"இன்னும் ஏதாவது வாங்கணுமாப்பா? என கபிலன் கேட்க, பூ, பழம், இனிப்பெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம் ராஜா, இனி நாம வீட்டிற்கு போய்விடலாமொன்று கண்ணன் சொல்ல, சரியென்று காரில் ஏறிக்கொண்டு , வீட்டை நோக்கி சென்றனர்".
" காலையில் போனவர்கள் வீட்டிற்கு வந்து சேர மாலை ஐந்து மணியானது".
" தேவகி தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறக்கும் போது, கார் ஒன்று அவர்கள் வீட்டின் பார்க்கிங்கிற்குள் வந்து நின்றது".
" யாரென்று இவர்கள் திரும்பி பார்க்க, அதிலிருந்து இறங்கியவரைக் கண்டு அதிர்ந்து போயினர்".
" மூவரும் இரவு டின்னரை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்தவர்கள், ஆளுக்கு ஒரு பெட்டில் படுத்துக் கொண்டனர்".
"மச்சான், முதல்ல உன்னை பற்றி சொல்லுடா? என்று விஷால் கேட்க,சரிடா என்றவாறு,கபிலன் தன்னை பற்றி சொல்ல தொடங்கினான்".
" என்னோட ஊர் கடலூர் மாவட்டம் சதூர்வேதமங்கலம் டா. அப்பா பேரு கண்ணன், அம்மா பேரு தேவகி. அவங்களுக்கு நான் ஒரே பையன் தான்".
" அப்புறம் காலையில் மாமாவை பார்த்தீங்களே, அவர் தான் அம்மாவுடைய அண்ணன்".
" மாமாக்கு ஒரு பொண்ணு என்க, ஆஹான் என்றனர் நண்பர்கள் இருவரும்".
" அவள் இப்போ தான் மெடிசின் முடித்திருக்கிறாள் டா. அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை தான் எங்க நிச்சயம் முடிந்தது".
" அத்தை இல்லைடா".
" இவளுக்கு இரண்டு வயது இருக்கும் போது, அத்தை இறந்துட்டாங்கடா"
"ஜாயின்ட் பேமிலி.அப்புறம் கொஞ்சம் நிலம் இருக்கு,கண்ணன் மசாலா பொருட்கள் நம்மளுடையது , அவ்வளவு தான் என்றான்".
" மச்சி.....புது மாப்பிள்ளையா என்க, ஹாஹாஹா ஆமாடா".
" சரிடா, உங்களை பற்றி சொல்லுங்களென்க,என்னை பற்றி சொல்ல என்னடா இருக்கு".
" நான் விஷால் விஸ்வநாதன், ஒரு தங்கச்சி, லண்டன்ல செகண்ட் இயர் மெடிசின் படிக்குறாள்".
" அப்பா நம்ப தமிழ்நாட்டோட அக்ரி மினிஷ்டர், அம்மா ஹை கோர்ட் ஜட்ஜ்".
" எதேஏஏஏ மினிஸ்டர் பையனானு கபிலன் அதிர, ஆமாடா.இதுக்கு ஏன் டா எருமை, வாயை காது வரை திறக்குறனு விஷால் சிரித்தான்".
"மச்சி நீ சொல்லுடானு வெற்றியை கேட்க,ஊர் பொள்ளாச்சி.அப்பா பேர் சரவணன், அம்மா பேர் காந்திமதி".
" எனக்கு 2 வயது இருக்கும் போது, ஆக்ஸிடென்ல இறந்துட்டாங்கடா. சித்தப்பாவும், அத்தையும் தான் வளர்த்தது".
" ரெண்டு பேருமே இதுவரை கல்யாணம் பண்ணிக்கலைடா, அப்புறம், எனக்கும் போன வாரம் தான் நிச்சயம் ஆனதென்க, எதேஏஏஏஏ என்று இப்பொழுது விஷாலும், கபிலனோடு அதிர்ந்தான்".
"அடப்பரதேசி ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே என்க, திடீர்னு நடந்ததுடா, அதான் நம்ப ப்ரண்ட்ஸ் யாருக்கும் சொல்ல முடியவில்லை'.
அப்புறம் ஊர்ல சின்னதா தேங்காய் மண்டியும், கொஞ்சம் நிலமும் இருக்குடா.
" நண்பன் சொல்லியதை கேட்ட விஷால், அடச்சண்டாளா, எவ்வளவு பெரிய சொத்துக்கு வாரிசு, இப்படி சொல்லுறானேனு வெற்றியை பார்க்க, அவன் கண்ணடித்தான்".
" சரி சரி...மரியாதையா ரெண்டு பயலும், என் தங்கச்சிங்க ஃபோட்டோவை காமிங்கடா என்க, வெற்றியும்,விஷாலும் அவரவர் இணையின் ஃபோட்டோவை விஷாலிடம் காட்டினர்".
"மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருக்க, அடேய் எனக்கு தூக்கம் வருதுடா.குட் நைட் என்றபடியே குப்புற படுத்து விஷால் தூங்க, கபிலனும், வெற்றியும், தங்கள் இணைகளின் நினைவில் மூழ்கினர்".
" தனது ஃபோனிலஇருந்த நிச்சயதார்த்த ஃபோட்டோவை பார்த்த கபிலனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது நினைவிற்குள் வந்தது".
" அதேப்போலவே,ஆதிராவோடு, ஊட்டிக்கு டிரைனில் போய்க் கொண்டிருந்த ரியாவும்,இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்".
கபி
"நால்வரும் காலை டிபனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,ரெடியாகி வாங்க, நிச்சயதார்த்தத்திற்கு புடவை எடுக்கப் போகணுமென்று கண்ணன் சொல்ல, ம்ம் என்று தலையசைத்தனர்".
"பின்னர் மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, தயாராகி கீழே வர அரைமணி நேரம் ஆனது".
" ஏண்டி பொம்பள புள்ளைங்களே கிளம்பி வந்துட்டுங்க. உன் மவன் இன்னும் என்ன பண்ணுறானென்று கண்ணன் கேட்க, தேவகியும் மகனின் வருகைக்காக தான் காத்திருந்தார்".
" ரியாவோ, இன்னும் இந்த விருமாண்டி என்ன பண்ணுறாரென்று யோசித்துக்கொண்டே மாடியை பார்க்க, அங்கே மெருன் கலர் டீ-ஷர்ட் வித் நீல கலர் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, தனது மீசையை முறுக்கிக் கொண்டே, கம்பீரமாக படியிலிறங்கி வந்தவனை பார்த்து வாயடைத்து போனாள்".
" வழக்கமாய் அவள் பார்க்கும் நேரமெல்லாம், கபிலன் கலர் சட்டையும், அதற்கு தகுந்த போல பார்டர் வைத்த வெள்ளை வேஷ்டியும் தான் போட்டிருப்பான்".
" அவளுக்கு தெரிந்த வரையில், கபிலனை இதைப்போல உடையில் பார்த்ததேயில்லை".
" கண்ணில் கூலர் இருப்பதால், படியிலிருந்து இறங்கும் போதே ரியாவின் ஆச்சர்யமான பார்வையை கண்டு கொண்டான்".
" அம்மா போகலாமா என்க, வாவ் அண்ணா செம்மையா இருக்கீங்களென்று ஆதிரா சொல்ல, மகிழ்ச்சிடா ஆதி என்று சிரித்தவன், என்ன கடைக்கு வர எண்ணமில்லையா? என்றான்".
" மகனையும், தனது கையில் கட்டி இருந்த வாட்ச்சையும் மாறி மாறி கண்ணன் பார்க்க, ஒரு முக்கியமான போன் வந்தது பா.அதான் பேசிக் கொண்டிருந்தேன்".
வாங்க வாங்க என்றபடியே கபிலன் வெளியே சென்றான்...
மகன் போன திசையை பார்த்தவர், மனைவியின் பக்கம் திரும்பி,உன் மகனை பார்த்தியாடி?.
"என்னமோ நம்ப கிளம்ப நேரம் ஆகிட்ட போல போறானென்க, அதற்கு தேவகியோ முருகாஆஆஆ",இந்த அப்பன் புள்ளை பஞ்சாயத்துக்கு ஒரு முடிவே கிடையாதா??என்க, ரியாவும்,ஆதிராவும் சிரித்து விட்டனர்".
" அந்நேரம் வெளியேயிருந்து கார் ஹாரன் அடிக்க, வாடி. இதுக்கும் உன் மவன் எதையாவது சொல்லுவானென்றவர், சாமி ரூம் பக்கம் திரும்பி , அம்மா ஆனந்தாயி, நல்ல படியா போய்ட்டு வரணுமென்று வேண்டிக்கொண்டு, அங்கிருந்து சென்றார்".
" வாங்கடாமா, பிறகு அப்பனும் மவனும் நம்ப தலைய உருட்டுவாங்கயென்று தேவகி சொல்ல, ஹாஹாஹா என்று மீண்டும் தோழிகள் சிரித்துக் கொண்டே வெளியே செல்ல, தேவகியும் வீட்டை பூட்டிக்கொண்டு காரில் ஏறி போகலாம்பா என்றார்".
" முக்கால் மணி நேர பயணத்தில், பக்கத்து ஊரான சிதம்பரத்தில் இருக்கும் சாலா சில்க்ஸின் பார்க்கிங் ஏரியாவிற்குள் வந்து காரை நிறுத்து உள்ளே போனார்கள்.
" இவர்களை பார்த்த கடை சிப்பந்தி, வாங்க,என்ன பாக்கணும்? என்க, பட்டுப்புடவை செக்க்ஷன்னு கபிலன் சொல்ல, மூன்றாவது ஃப்ளோர் சார் என்றார்".
" பிறகு அங்கிருந்த லிப்டில் ஏறி மூன்றாவது ஃப்ளோருக்கு வந்தவர்கள், வலது பக்கமாய் திரும்பி, பட்டுப்புடவை செக்க்ஷனிற்கு செல்ல, வாங்க எந்த மாதிரி புடவை வெண்டுமென்று கடையாள் கேட்டார்".
"விலை பிரச்சனை இல்லை, நீங்கள் எடுத்து போடுங்களென்று கண்ணன் சொல்ல, சரிங்க சார் என்றவர், உட்காருங்கம்மானு, ரேக்கிலிருந்த புடவைகளை எடுத்து போட்டார்".
" தேவகி புள்ளைங்களுக்கு எது புடிக்குதோ, அதை கேட்டுக்கயென்று கண்ணன் சொன்னார்".
" மலை போல் புடவைகள் குமிந்து இருக்க, எதை எடுப்பதென்று ரியாவிற்கு குழப்பம் வந்தது".
" இந்த விருமாண்டி எதுக்கு வந்தான். ஒரு புடவை செலக்ட் பண்ணி குடுக்க துப்பு இல்லையென்று, ரியா தன் மனதிற்குள் திட்டிக்கொண்டிருக்க, க்கும் என கணைத்துக்கொண்டே அவளருகில் வந்தவன்,புடவையாவது கட்ட தெரியுமா? என்றான்".
" கபிலனின் குரலில் அவன் பக்கம் ரியா திரும்பி முறைக்க, ஒற்றை கண்ணடித்தவன், அந்த புடவை குவியலிலிருந்த புடவையை எடுத்தவன்,இதை பிரித்து காட்டுங்களென்றான்".
"அவரும் புடவையை பிரித்து காட்ட,அது ரியாவிற்கு ரொம்ப பிடித்திருப்பதை, அவள் முகத்திலிருந்த வியப்பே காட்டிக் கொடுத்தது".
" அம்மா இது ஓகே தானே என்க, கட்டப்போறது உன் பொண்டாட்டி. அவகிட்ட கேளுப்பா என்கவும்,இது ஓகேவா?".
"ரொம்ப புடிச்சிருக்கென்று ரியா சொல்ல, புடவையா இல்லை நானாடி என்று அவள் காதில் விழுமாறு கபிலன் கேட்க,விருமாண்டிய தானென்றாள்".
"ஆஹான் என்றவன், ஆதி உனக்கும் அம்மாக்கும் எடுங்களென்க, தேவகி வைலட்டும், ரோஸூம் கலந்த கலரில் புடவையை எடுத்துக்கொண்டார்".
" ஆதிராவிற்கு தான் எந்த கலரை எடுப்பதென்று தெரியவில்லை. அவள் இதுவரை புடவை வாங்கியதில்லை என்பதால், அவளுக்கு அதை பற்றி தெரியவில்லை".
" தங்கை அமைதியாக இருப்பதை வைத்து புரிந்து கொண்ட கபிலன், சிரித்துக் கொண்டே அவளுக்கும் புடவையை செலக்ட் பண்ணி எடுத்தான்".
"இது ஓகேவா பாருடா ஆதி என்க, திக் மெரூன் கலரில், தங்கநிறத்தில் பெரிய பார்டர் வைத்து இருந்த புடவையை பார்த்தவளுக்கு, பிடித்திருந்தது".
" இது ஓகேணா".
" பின்னர் ரியாவையும், ஆதிராவையும் பிளவுஸ் செக்க்ஷனுக்கு அனுப்பி விட்டு, ஐந்தாவது , ஃப்ளோரிலஇருக்கும் ஆண்கள் செக்க்ஷனிற்கு சென்றனர்".
" வாங்க சார் எந்த மாதிரி டிரஸ் வேண்டுமென்று கேட்க, ஷெர்வானி வேண்டுமென்றான்".
" ஓகே சார் என்றவர், வித விதமான ஷெர்வானியை அவரும் எடுத்து காட்டினார்".
"அதில் ரியாவின் புடவைக்கு மேச்சாக தேடி எடுத்துக்கொண்டான்".
" இதை கீழே பில்லுக்கு அனுப்பிடுங்கனு சொல்லி விட்டு, ஆதிராவிற்கு கால் பண்ணியவன், என்னாச்சுடா ஆதி என்க,அண்ணா நாங்க கீழே தான் இருக்கோமென்றாள்".
"ஓகேடா,இதோ நாங்க வரோமென்று கட் பண்ணியவன்,பெற்றோரை அழைத்துக் கொண்டு,லிப்டில் ஏறி கீழே வந்தவன்,வாங்கிய எல்லாவற்றையும் பில் போட சொல்லி பணத்தை கார்டில் பே பண்ணி, டிரஸை வாங்கிக்கொண்டு, போகலாமென்றான்".
"அடுத்து அங்குள்ள நகை கடைக்கு சென்று, ரியாவிற்கு கழுத்துக்கும், விரலுக்கும் தங்கநகைகளை வாங்கிக் கொண்டு வெளியே வர மதியம் மூன்று ஆனது".
" சரி வாங்க லஞ்ச் சாப்பிட்டுக்கலாமென்று அங்கிருந்த சரவணபவனுக்குள் செல்ல, ஏசி ரூம் வேண்டுமா, இல்லை நார்மல் ஓகே வா சார் என்று அங்கிருந்த வேலையாள் கேட்க, எதா இருந்தாலும் ஓகே என்றான்".
" உள்ளே போய் பார்த்து வந்தவர், சார் இப்போதைக்கு ஏசில தான் சீட் இருக்கு என்க, சரியென்று உள்ளே போய் உட்கார, வெய்டரும் மெனு கார்டோடு வந்தார்".
"கண்ணனும், தேவகியும் மீல்ஸ் சொல்லினர், ஆதிராவும், ரியாவும் பரோட்டா சொல்ல, கபிலன் கார்லிக்நான் பன்னீர் பட்டர் மசாலாவை ஆர்டர் பண்ணினான்".
" பத்து நிமிடத்தில் அவர்கள் ஆர்டர் பண்ணிய உணவுகள் வந்து சேர,இளையவர்கள் மூவரும் ஷேர் பண்ணிக்கொண்டு சாப்பிட்டு முடித்து, வெளியே வந்தனர்".
"இன்னும் ஏதாவது வாங்கணுமாப்பா? என கபிலன் கேட்க, பூ, பழம், இனிப்பெல்லாம் நாளைக்கு வாங்கிக்கலாம் ராஜா, இனி நாம வீட்டிற்கு போய்விடலாமொன்று கண்ணன் சொல்ல, சரியென்று காரில் ஏறிக்கொண்டு , வீட்டை நோக்கி சென்றனர்".
" காலையில் போனவர்கள் வீட்டிற்கு வந்து சேர மாலை ஐந்து மணியானது".
" தேவகி தன்னிடமிருந்த சாவியால் வீட்டை திறக்கும் போது, கார் ஒன்று அவர்கள் வீட்டின் பார்க்கிங்கிற்குள் வந்து நின்றது".
" யாரென்று இவர்கள் திரும்பி பார்க்க, அதிலிருந்து இறங்கியவரைக் கண்டு அதிர்ந்து போயினர்".